You are on page 1of 34

FAKULTI PENDIDIKAN DAN BAHASA

___________________________________________________________________________

HBTL 3303

TATABAHASA BAHASA TAMIL III

SEMESTER SEPTEMBER 2020

___________________________________________________________________________

NO.MATRIKULASI : 890103595316001

NO.KAD PENGENALAN : 890103595316

NO.TELEFON : 0146256097

E-MEL : tuulasi6097@gmail.com

PUSAT PEMBELAJARAN : PPNS

BAHAGIAN A
கேள்வி 1 (அ)

வெண்பா தமிழ் யாப்பிலக்கணம் வரையறுக்கும் நான்கு அடிப்படை

பாவகைகளில் ஒன்றாகும். செய்யுளின் அடிப்படை உறுப்புகளாக‌ ஆறு

கூறுகள் விதிக்கப்பட்டுள்ளன: எழுத்து, அசை, சீர், தளை, தொடை,

அடி. பாலில் இவை அமையும் முறையைக்கொண்டே அப்பா

வகைப்படுத்தப்படுகிறது.

வெண்பா அமைப்பு

பொதுவாக வெண்பா நான்கு அடிகளால் அமையும். இரண்டு

அடிகள் முதல் பன்னிரண்டு அடிகள்வரையும் அமையலாம். ஒரு

வெண்பாவில் ஈற்றடி (கடைசி அடி) மட்டும் மூன்று சீர்கள்

கொண்ட சிந்தடியாக இருக்கும். மற்ற அடிகள் அனைத்தும் நான்கு

சீர்கள் கொண்ட  அளவடிகளாக இருக்க வேண்டும். எல்லா சீர்களுக்கு

இடையேயும் வெண்டளை என்ற தளை அமைந்திருக்க வேண்டும்.

வெண்டளை இரண்டு வகையாக அமையும்

இயற்சீர் வெண்டளை & வெண்சீர் வெண்டளை.

இயற்சீர் வெண்டளை:

இத்தளையில் முன்னால் ஒரு இயற்சீர் இருக்கும் (இயற்சீர் இரண்டு

அசைகளால் ஆன சீர் இவை தேமா, புளிமா, கருவிளம், & கூவிளம் என்

நான்கு ஆகும். இந்த இயற்சீரை அடுத்து வரும் சீரின் முதலசை

இவ்வியற்சீரின் கடைசி அசைக்கு மாறாக அமைய வேண்டும். அதாவது

இயற்சீரின் கடைசி அசை நேர் என்றால் வரும் சீரின் முதலசை


நிரையாக இருக்க வேண்டும், இது நிரை என்றால் அது நேர் ஆக

வேண்டும்.

எடுத்துக்காட்டு:

1) அகர முதல

அக/ர முத/ல

புளிமா புளிமா

நிரை/நேர் நிரை/நேர்

(அகர என்ற இயற்சீரின் ஈற்றசை நேரசை, அதனை அடுத்து வரும்

முதல என்ற சீரின் முதலசை நிரையசை. மாறுபட்டு வந்தது!)

2) வேண்டுதல் வேண்டாமை

வேண்/டுதல் வேண்/டா/மை

கூவிளம் தேமாங்காய்

நேர்/நிரை நேர்/நேர்/நேர்

(வேண்டுதல் என்ற இயற்சீரின் ஈற்றசை நிரையாகவும் வேண்டாமை

என்ற அடுத்த சீரின் முதலசை நேராகவும் மாறுபட்டு வந்தது.

‘வேண்டாமை’ என்பது மூன்று அசைகள் கொண்ட உரிச்சீர். தளையில்

முதலில் நிற்கும் சீரின் அளவே கருதப்படும் எனவே இதுவும் இயற்சீர்

வெண்டளைதான்.

வெண்சீர் வெண்டளை
இதில் முன்னால் ஒரு காய்ச்சீர் இருக்கும். (காய்ச்சீர் என்பது மூன்று

அசைகள் கொண்ட, மூன்றாவது அசை நேரசையாக இருக்கும் சீர். இது

உரிச்சீரின் ஒருவகை. மேலே குறிப்பிட்ட நான்கு இயற்சீர்களோடும்

ஈற்றில் நேர் (காய்) சேர்ந்து ‘தேமாங்காய், புளிமாங்காய்,

கருவிளங்காய், & கூவிளங்காய்’ என வரும். இந்தக் காய்ச்சீரை அடுத்து

நேரசையில் தொடங்கும் சீர் (இயற்சீர் / காய்ச்சீர்) வர வேண்டும்.

எடுத்துக்காட்டு:

1) எழுத்தெல்லாம் ஆதி

எழுத்/தெல்/லாம் ஆ/தி

புளிமாங்காய் தேமா

நிரை/நேர்/நேர் நேர்/நேர்

பொறிவாயில் ஐந்தவித்தான்

பொறி/வா/யில் ஐந்/தவித்/தான்

புளிமாங்காய் கூவிளங்காய்

நிரை/நேர்/நேர் நேர்/நிரை/நேர்

(இவ்விதிகளை ‘மாமுன் நிரை’ ‘விளமுன் நேர்’ என்றும் ‘காய்முன் நேர்’

என்றும் சுருக்கமாகக் குறிப்போம்.

வெண்பாவில் இந்த இரண்டு தளைகள் மட்டுமே அமைய வேண்டும்.

வேறு தளைகள் வரக்கூடாது. (மொத்தம் ஏழு தளைகள் உள்ளன) இந்தக்


கட்டுப்பாடு காரணமாகத்தான் இது வெண்பா எனப்படுகிறது (வெண்மை

தூய்மையைக் குறிக்கிறது) இவ்விரு தளைகளும் நான்கு இயற்சீர் &

நான்கு காய்ச்சீர் மட்டுமே கொண்டு அமைவதால் வெண்பாவில் இவை

எட்டு தவிர வேறு சீர்கள் வரக்கூடாது!

வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் (அதாவது பாடலின் ஆகக் கடைசி

சீர்) நாள் / மலர் / காசு / பிறப்பு என்ற நான்கில் ஒரு வாய்ப்பாட்டில்

மட்டுமே அமைய வேண்டும் என்ற கூடுதல் விதியும் உண்டு.

(நாள் - ஒரு நேரசை, மலர் - ஒரு நிரையசை,

கா/சு - நேரசையோடு குற்றியலுகரம் வருவது,

பிறப்/பு - நிரையசையோடு குற்றியலுகரம் வருவது!)

இவையே வெண்பாவின் அடிப்படை இலக்கணம். இதனோடு தொடை

என்ற அமைப்பும் உண்டு. பொதுவாக

வெண்பாவில் மோனை மற்றும் எதுகைத் தொடைகள் அமையும்.

அதிலும்

குறிப்பாக அடியெதுகையும் பொழிப்புமோனையும் அமையும்

.அடிதோறும் எதுகை அமைவது அடியெதுகை, ஒரே அடியின் முதல்

மற்றும் மூன்றாவது சீர்களில் மோனை அமைவது பொழிப்பு மோனை.

எடுத்துக்காட்டு: (வெண்பா என்பா!)

திசைதவறி ஓடின் திரள்வேகம் வணாம்


இசைந்திதனை எண்ணி இயங்கு - நசையுடன்நீ


கொள்ளும் செயலின் குறியுணர்ந்து திட்டமாய்

மெள்ள நகர்ந்தாலும் வெல்!

இதில் முதலடியில் ‘திசை’ - ‘திரள்’ என்றும்,

இரண்டாமடியில் ‘இசை’ - ‘இயங்கு’ என்றும் பொழிப்பு மோனைகள்

அமைந்துள்ளன. மூன்று நான்காமடிகளில் உள்ள ‘கொள்ளும்’ -

‘குறியுணர்ந்து’ & ‘மெள்ள’ - ‘வெல்’ என்பனவும் மோனைகள்தான்.

அவ்வாறே முதலடியிலும் இரண்டாமடியிலும் ‘திசை’ - ‘இசை’ என்றும்

மூன்றாமடியிலும் நான்காமடியிலும் ‘கொள்ளும்’ - ‘மெள்ள’ என்றும்

அடியெதுகைகள் அமைந்துள்ளன என்பதைக் காணலாம்.

இப்பாடலில் இரண்டாமடியின் ஈற்றுச்சீர் தனிச்சொல்லாக ‘நசை’ என்று

முதலிரண்டடிகளின் எதுகையையே பெற்று வந்துள்ளதையும்

கவனிக்க. இவ்வாறு அமையும் வெண்பாவை நேரிசை

வெண்பா என்போம். நேரிசை வெண்பா அல்லாத எல்லாம் இன்னிசை

வெண்பா எனப்படும். வெண்பா அடிகளின் அளவினால்

வகைப்படுத்தபடும்: இரண்டடிமுதல் பன்னிரண்டு அடிவரை வெண்பா

அமையலாம் :

2 அடிகள்: குறள்வெண்பா (திருக்குறள்)

3 அடிகள்: சிந்தியல் வெண்பா (சிலப்பதிகார வாழ்த்து)

4 அடிகள்: அளவியல் வெண்பா

5 அடிகள்முதல் 12 அடிகள் வரை: பஃறொடை வெண்பா


14 அடிகளுக்கு மேல்: கலிவெண்பா (இது கலிப்பாவின் வகையாகக்

கொள்ளப்படும்.

கேள்வி 1 (ஆ)

வஞ்சிப்பாவுக்கு உரிமையுற்ற சீர்கள் நான்கு. அவை, `கனி’யென்னும்

வாய்பாட்டுச் சொல்லை இறுதியில் கொண்ட மூவசைச்சீர்களாம்.

இவற்றின் மூன்றாம் அசைகள் நிரையசையால் இறும் (முடியும்).

அவை:

1) தேமாங்கனி

2) புளிமாங்கனி

3) கருவிளங்கனி

4) கூவிளங்கனி

என்னும் வாய்பாட்டின. வஞ்சி உரிச்சீர் நின்று, வரும் சீர் முதலசை

நேராக (நேரசையாக) அமையுமானால் ஒன்றாத வஞ்சித்தளை

தோன்றும்.

மந்தாநிலம் வந்தசைப்ப

வெண்சாமரை புடைபெயர்தரச்

இவை வஞ்சிப்பா ஒன்றனது அடிகள். இதனுள் வரும் `மந்தாநிலம்’

என்பது நின்ற சீர்; `வந்தசைப்ப’ என்பது வந்த சீர் ஆகும்.

நின்ற சீர் வந்த சீர்


மந்தாநிலம் வந்தசைப்ப
ம ந் தா நி ல ம் வ ந் த சை ப் ப
கு ஒ நெ கு கு ஒ கு ஒ கு கு ஒ கு
தனிக் தனி இணைக் தனிக் இணைக் தனிக் குறில்

குறில் நெடில் குறில் குறில் குறில்

ஒற்று ஒற்று ஒற்று ஒற்று


நேர் நேர் நிரை நேர் நிரை நேர்
தேமாங்கனி (வாய்பாடு) கூவிளங்காய் (வாய்பாடு)
கனி முன் நேர்
ஒன்றாத வஞ்சித்தளை

இங்கு, நின்ற சீர் `மந்தா நிலம்’ என்பதாம். இது, மூவசைச்சீர், அதுவும்

`கனி’ என்னும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியில் உடைய

மூவசைச்சீர். கனி என்னும் வாய்பாட்டில் இறும் சீர்கள் நான்கும்

வஞ்சியுரிச்சீர் என்பதை மேலே பார்த்தோம். இந்த நிரையசையை

இறுதியில் கொண்ட கனி வாய்பாட்டுச் சீர்கள் முன் நிரையசையை

முதலாகக் கொண்ட கனி வாய்பாட்டுச் சீர்கள் வரின் ஒன்றிய

வஞ்சித்தளை தோன்றும் என்பதை முன்னர்ப் பார்த்தோம். அதுபோல

ஒன்றி வராமல் வஞ்சியுரிச்சீர் முன், நேரசையை முதலில் கொண்ட சீர்,

ஒன்றாமல் வந்துள்ளது. ஒன்றாமல் கனிமுன் நேர் (நிரை முன் நேர்)

என்று வருவது ஒன்றாத வஞ்சித் தளையாம்.

மேற்படித்த செய்திகள் எல்லாமும் சொல்லவந்த காரிகையைக்

காண்போம், அது,

தன்சீர் தன(து) ஒன்றின் தன்தளை

யாம்;தண வாதவஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக்(கு)


உரித்து;வல் லோர் வகுத்த வெண்சீர் விகற்பம் கலித்தளை

யாய்விடும்; வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர்

விகற்பமும் ஒண்ணுதலே

என்பதாகும்.

கேள்வி 3 (அ)

உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் இயல்பாக மெய் எழுத்தில்

தொடங்குகின்றன என்பது விளக்கப்பட்டது. இப்போது சொல்லின்

முதலில் வரும் மெய் எழுத்துகள் பற்றிக் காணலாம். மெய் எழுத்துகள்

உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே சொல்லின் முதலில் வரும் என்று

கூறப்பட்டது. மெய்எழுத்துகள் எந்தெந்த உயிர்எழுத்துகளுடன் சேர்ந்து

சொல்லின் முதலில் வரும் என்றும் பின்வரும் பகுதியில்

விளக்கப்படும்.

ஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து

உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை வருக்க எழுத்துகள் என்று

கூறுவர். எடுத்துக்காட்டாக, க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு

உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவான க, கா, கி, கீ , கு, கூ, கெ, கே,

கை, கொ, கோ, கௌ என்னும் பன்னிரண்டு உயிர்மெய்

எழுத்துகளையும் ககர வருக்கம் என்று கூறுவர்.

க் என்னும் மெய்யெழுத்து
ககர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தும்

சொல்லுக்கு முதலில் வரும்.

கல் கரும்பு

கால் காகம்

கிளி கிழமை

கீ ரி கீ ரை

குயில் குரங்கு

கூடு கூத்து

கெடுதி
கெட்ட
(அழிவு)

கேள்வ கேணி
ி (கிணறு)

கை கைத்தடி

கொடி கொம்பு

கோடு கோட்டை

கௌத
ாரி

ங் என்னும் மெய் எழுத்து


ஙகரம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும், யா, எ, ஆகிய

வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும்.

அங்ஙனம் (அப்படி)

இங்ஙனம் (இப்படி)

எங்ஙனம் (எப்படி)

யாங்ஙனம் (எப்படி)

சுட்டு, யா, எகர வினா வழி, அவ்வை

ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே   (106)

என்னும் நன்னூல் நூற்பா, ஙகர எழுத்து மொழிக்கு முதலில் வருவதை

விளக்குகிறது.

ச் என்னும் மெய்யெழுத்து

சகரம் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து மொழிக்கு முதலில்

வரும். ஆனால் பழங்காலத்தில் அ, ஐ, ஒள என்னும் ழூன்று உயிர்

எழுத்துகளுடனும் மொழிக்கு முதலில் வருவதில்லை. அ என்னும்

எழுத்துடன் சேர்ந்து சக்கரம், சங்கு, சங்கம் முதலான சொற்கள்

பழங்காலம் முதலே பயன்படுத்தப் படுகின்றன. ஐ, ஒள ஆகிய உயிர்

எழுத்துகளுடன் சகரம் சேர்ந்துவரும் சொற்கள் தமிழில் இல்லை.

சைகை, சௌக்கியம் முதலான பிறமொழிச் சொற்களே

பயன்படுத்தப்படுகின்றன.

சக்கர
சந்தனம்
ம்
சா
சாறு
லை

சிரிப்
சிலந்தி
பு

சீற்ற
சீப்பு
ம்

சுண்ணா
சுட்டு
ம்பு

சூடாம
சூடு
ணி

செறி
செம்பு
வு

சேறு சேரன்

சை
சைவம்
கை

சொ
சொட்டு
ல்

சோ
சோழன்
று

ஞ் என்னும் எழுத்து

ஞகரம் அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து

சொல்லுக்கு முதலில் வரும்.

ஞமலி (நாய்) ஞலவல் (மின்மினிப் =ஞ்+அ


பூச்சி)

=ஞ்+
ஞாலம் (உலகம்) ஞாயிறு

ஞெலிகோல் (தீக்கடையும்
ஞெகிழி (தீப்பொறி) =ஞ்+எ
கோல்)

ஞொள்குதல்
  =ஞ்+ஒ
(இளைத்தல்)

அ, ஆ, எ, ஒவ்வொடு ஆகும் ஞம் முதல் (பொருள் : ஞகர மெய் எழுத்து

அ, ஆ, எ, ஒ, ஆகிய நான்கு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து

சொல்லுக்கு முதலில் வரும். )

த் என்னும் மெய்யெழுத்து

தகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து

சொல்லுக்கு முதலில் வரும்.

தரை தம்பி

தாமரை தாய்

திசை திணை

தீர்ப்பு தீமை

துன்ப
துடிப்பு
ம்

தூண் தூக்கம்
தென்ற
தென்னைமரம்
ல்

தேங்க
தேன்
ாய்

தைய
தைமாதம்
ல்

தொட்
தொழில்
டி

தோ
தோட்டம்
கை

தௌவை
(அக்காள்)

ந் என்னும் மெய்யெழுத்து

நகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து

சொல்லுக்கு முதலில் வரும்.

நன்றி நகை

நாடு நாள்

நிறம் நிழல்

நீர் நீளம்
நுங்கு நுனி

நூல் நூறு

நெல் நெஞ்சு

நேற்று நேர்மை

நையாண்டி(
நைதல்
கேலி)

நொறுங்
நொடி
குதல்

நோக்கம் நோட்டம்

நௌவி
(மான்)

ப் என்னும் மெய்யெழுத்து

பகரமெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து

சொல்லுக்கு முதலில் வரும்.

பல் பழம்

பால் பாட்டு

பிடி பிரிவு

பீடு
பீலி (தோகை)
(பெருமை)
புகழ் புல்

பூங்கா பூட்டு

பெட்டி பெண்

பேழை
பேச்சு
(பெட்டி)

பை பையன்

பொன் பொங்கல்

போட்டி போர்

பௌத்தர் (புத்த
சமயத்தவர்)

ம் என்னும் மெய்யெழுத்து

மகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து

சொல்லுக்கு முதலில் வரும்.

மண் மக்கள்

மான் மாடு

மின்ன
மிதியடி
ல்

மீ ன் மீ ண்டும்

முரசு முடி
மூங்கி
மூன்று
ல்

மெய் மெழுகு

மேடு மேளம்

மை மையம்

மொழி மொட்டு

மோதி
மோசடி
ரம்

மௌ மௌவல்(முல்
னம் லை மலர்)

ய் என்னும் மெய்யெழுத்து

யகர மெய் எழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஓள ஆகிய ஆறு உயிர்

எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். யகர மெய்

எழுத்து, பழங்காலத்தில் ஆ (ய்+ஆ=யா) என்னும் எழுத்துடன் மட்டுமே

பயன்படுத்தப்பட்டது.

யவை
யவனர்
(நெல்வகை)

யானை யாழ்

யுகம் (கால அளவு)

யூகி (அறிவாளி)
யோகம் (இணைந்து
நிற்றல்)

யௌவனம் (இளமை)

அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள யம் முதல் (பொருள்: அ, ஆ, ஊ, ஓ, ஒள ஆகிய

உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் சொல்லுக்கு முதலில்

வரும். )

வ் என்னும் மெய்யெழுத்து

வகர மெய் எழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள ஆகிய எட்டு உயிர்

எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

வணக்க
வரிசை
ம்

வால் வாய்

வில் விண்

வடு
ீ வண்

வெற்றி வெண்மை

வேல் வேங்கை

வையகம்
வைகை
(உலகம்)

வௌவ
ால்
உ, ஊ, ஒ, ஓ அலவொடு வம் முதல. (பொருள்: வகர மெய் எழுத்து உ,

ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு தவிர மற்ற (அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள) எட்டு உயிர்

எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.)

கேள்வி 3 (ஆ)

சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி

எழுத்துகள் என்று கூறுவர். மெய் எழுத்துகள் இயல்பாகவே

சொல்லுக்கு இறுதியில் வரும். சொல்லுக்கு இறுதியில் வரும்

உயிர்மெய் எழுத்துகளை உயிர் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும்.

சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள்

உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும்.

சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வருவது இல்லை; மெய்

எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகவே சொல்லுக்கு

இடையிலும் இறுதியிலும் வரும். அவ்வாறு வரும் உயிர்

எழுத்துகளில் எவை சொல்லுக்கு இறுதியில் வரும் என்பதைப்

பார்க்கலாம்.

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

அவற்றில் எகரக் குறில் அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு

இறுதியில் வரும். ஏனைய அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

ஆகிய உயிர் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும்.

எடுத்துக்காட்டு

அ பல சில திற
ஆ நிலா பலா சுறா

இ பனி எலி நரி

ஈ தேன ீ தீ

மிள
உ ஏழு கதவு
கு

தூ
ஊ பூ
(வெண்மை)

எ சேஎ

ஏ எங்கே யானே


ஐ மழை தாமரை
லை

நொ

(துன்பம்)

ஓ நிலவோ மலரோ

ஒ கௌ வௌ
ள (கொள்) (திருடு)

குற்றியலுகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

ஆறு காடு

பட்டு காற்று

பந்து பாம்பு
செய்
மூழ்கு
து

விளைய
பழகு
ாடு

அஃ
எஃகு
து

சொல்லுக்கு இறுதியில் வரும் மெய் எழுத்துகள்

வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மெய் எழுத்துகள் மூன்று

வகைப்படும். இவற்றில் வல்லின மெய் எழுத்துகள் சொல்லுக்கு

இறுதியில் வருவது இல்லை. மெல்லின மெய் எழுத்துகள் ஐந்தும்,

இடையின மெய் எழுத்துகள் ஆறும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

மெல்லின மெய் எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஐந்தும்

சொல்லுக்கு இறுதியில் வரும்.

உரிஞ்(தேய்க்
கும்)

ஆண் பெண்

வெரிந் (முது பொருந் (போரிடும்,
கு) பொருந்தும்)

மரம் வெள்ளம்

மன்னன் பொன்
உரிஞ் என்னும் ஒரு சொல்லில் மட்டும் ‘ஞ்‘ என்னும் மெய்எழுத்து,

இறுதியில் வரும். வெரிந், பொருந் என்னும் இரு சொற்களில் மட்டும்

‘ந்‘ என்னும் மெய்எழுத்து இறுதியில் வரும்.

இடையின மெய் எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) சொல்லுக்கு

இறுதியில் வரும்.

நாய் தாய்

தண்
வேர்
ண ீர்

நடத்த
கால்
ல்

தெவ் (ப
கை)

கீ ழ் ஊழ்

முள் வாள்

அவ், இவ், உவ், தெவ் என்னும் நான்கு சொற்களில் மட்டும் ‘வ்’

என்னும் மெய் எழுத்து இறுதியில் வரும்

ஆவி, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள மெய்

சாயும் உகரம் நால் ஆறும் ஈறே. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ,

ண, ந, ம, ன,ய, ர, ல, வ, ழ, ள ஆகிய பதினொரு மெய் எழுத்துகளும்

குற்றியலுகரமும் ஆக இருபத்து நான்கும் சொல்லுக்கு இறுதியில்


வரும்.

BAHAGIAN B

கேள்வி 1

தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறுபட்ட பாடுப்பொருள்கள்

காலம்தோறும் தோன்றிவந்துள்ளன. சங்ககாலத்தில் காதல், வரம்


ீ என்ற

பாடுப்பொருளையும், நீதியிலக்கியத்தில் அறம் மட்டும்

பாடுப்பொருளாகவும், பக்த்தியிலக்கியத்தில் இறையுணர்;வையும்,

காப்பியக்காலத்தில் அறம்,பொருள், இன்பம்,வடுப்பெறும்,


ீ என்ற

பாடுப்பொருள்களும், சிற்றிலக்கிய காலத்தில் தனிப்பட்ட ஒருவர்

வாழ்வியல் பற்றியும் பாடுப்பொருளாக பாடப்பட்டுள்ளது. இக்காலத்தில்

அனைத்து துறைகளும் பாடுப்பொருளாக வைத்து பாடப்படுகின்றன.

அரசியல்  

ஒவ்வொருவரும் கணவில் ஒரு கோட்டையை கட்ட நினைப்பதும்

உண்மையே சிலர் அதிகார கணவில் இருப்பர், சிலர் வாழ்கையே கணவு

போல முடியும்.  சிலர் பணம் மட்டுமே வாழ்கையாக கொண்டுள்ளனர்.

அரசியலில்  எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்கிற

வேட்கையில்  பலகுழப்பங்களை செய்கின்றனர். மக்கள் பலரையும்

குழப்பி எளிதில் அரசியல்வாதிகள் வெற்றிப்பெறுகின்றனர். இதை

வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்

நிறைய நெளிகின்ற மீ ன்கள்

(காக்கையின் வண்ணப்படம்)

என்ற பாடலில் கவிஞர் ந.க துறைவன் இக்கருத்தை காக்கையின்

வண்ணப்படம் எனும் நூலில் பாடுப்பொருளாக பதிவுசெய்கிறார். அரசன்

படையெடுத்து வென்று நாட்டை கைப்பற்றினான் என்று வரலாற்று

இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இன்றை அரசியல்வாதிகள் எதை

முன்னிறுத்துகின்றனர் என்றால் மற்றவர் செய்த குற்றங்களைதான் 

இதை

    குற்றவாளிகளே

    குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்

    கேட்டு ரசிக்கும் வாக்காளர்கள்.

        (காக்கையின் வண்ணப்படம்)

புதுக்கவிதையில் கவிஞர்கள் இவ்வாறாக பதிவு  செய்கின்றனர். மேலும்

நீதி வழங்கவேண்டிய நீதி பதிகளே  குற்றம் இழைக்கும் சமுக அவலத்தை

புதுக்கவிதையின் பாடுப்பொருளாக கொண்டு

    உன் தராசுத் தட்டுகளைக்

    கொஞ்சம் கண்திறந்து பார்

    அங்கே

    புறாவின் மாமிசத்தை

    சிபிகள்  உண்ண ஆரம்பித்து விட்டனர்

            ( அப்துல் ரகுமன்  கவிதை தொகுப்புகள்)

என்றவாறு பதிவு செய்துள்ளனர். எங்கு சென்றாலும் தமக்கு நீதி


மறுக்கப்படுவதை பலரும் அனுபவக்கின்றனர். எல்லாம் தலைவிதி

என்று பலர் கூறுவதை நம்மால் பார்க்கத்தான் முடிகிறது. இதை

    சிலம்பை

    உடைத்து என்ன பயன்

    அரியனையிலும்

    அந்தக் கொல்லன்

        (தமிழன்பன் கவிதைகள்)

என்று முறைக்கேட்டையும், அதை அனுபவிப்பவரின்

மனவோட்டத்தையும் பாடுப்பொருளாக கொண்டு கவிதை

இயற்றியுள்ளனர்.

தண்ணர்ீ பஞ்சம்

மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் அது தண்ண ீருக்காகதான்

இருக்கும் என்பர் அறிஞர்கள். கையால் அள்ளி பருகிய தண்ண ீரை இன்று

பைகளில் அடைத்து வைத்து விற்கும் நிலைதான் நிலவுகிறது. இதை

    சுட்டெரிக்கும் வெயில்

    தாகமாய் நடக்கும் மனிதர்கள்

    பாதையோரம் தர்பூசணிகள்

            (காக்கையின் வண்ணப்படம்)

என்ற பாடலில் ந.க துறைவன் பதிவு செய்கிறார். கூடவே தர்பூசணியும்

விற்கப்படுவதாக மாற்றையும் பதிவுசெய்கிறார்.

தொழில் நூட்ப தோல்வி


இருபதாம் நூற்றாண்டில் நாம் தொழில் நூட்ப யுகத்தில்

வாழ்ந்துக்கொண்டுள்ளோம். தொழிநுட்பத்தின் வளர்ச்சியை மட்டும்

அல்லாமல் அதன் தோல்வியையும் நகையாடுவதாக

    எங்கிருக்கிறது என்று

    மீ ன்கள் அறியுமா

    தேடப்படும் விமானம்

            (காக்கையின் வண்ணப்படம்)

 என்று  கவிதையாக  கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

கலவரம்

மனித மரபணுவிலே சுயநலம், ஆதிக்கப்போட்டிகள் நிறைந்துள்ளன.

இந்திய வரலாற்றிலே தந்தையை சிறைப்படுத்தி அல்லது கொன்றும்,

இரத்த உறவுகளை கொன்றும் அரசாச்சி கைப்பற்றி ஆண்டதையும்

அறிகிறோம். அதுப்போல ஊர் திருவிழாக்களில் வெளிப்படும்

கலவரத்தை

    அம்மன் கொடை விழாவில்

    ஆதிக்கப் போட்டி

    ஊருக்குள் கலவரம்

        (காக்கையின் வண்ணப்படம்)

என்று  கவிதையாக  கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

விலைமகளிர்

சமுகத்தில் உள்ள அனைத்து மக்களின் மன உணர்வுகளும்

புதுக்கவிதையாக மிளிர்வதை நம்மாள் பார்க்க முடிகிறது.


விளைமகளிரின்  வருமையை கவிஞர்

    நாங்கள் நிர்வாணத்தை

     விற்பனை செய்கிறோம்

    ஆடைவாங்குவதற்காக.

        (கருப்பு மலர்கள்)

இவ்வாறாக பதிவு செய்கிறார்.   

தவிப்பு

நிலைத்தை இழந்த ஒருவரின் தவிப்பையம் புதுகவியாளர்கள் பதிவு

செய்ய தவறவில்லை வலியோடு

    தந்தையிடம் நிலமிருந்தது

    மகனிடம் நிலமிருந்தது

    இழந்த நிலத்தில் அடுக்கங்கள்.

        (காக்கையின் வண்ணப்படம்)

இவ்வாறாக பதிவுசெய்துள்ளனர்.

ஏமாற்றம்

தமக்கு கிடைக்கவேண்டிய  உண்மையான உரிமைகள் கிடைக்காமல்

மக்கள் பலர் உள்ளனர். அவர்களின் உள்ளத்தை புரிந்துக்கொண்டு  அவர்

தம் நிலையை

அனைக்கட்டில் இருந்து

    திறக்கபடும் தண்ண ீரானது

    பள்ளங்களை ஏமாற்றி

    மேட்டை நோக்கியே பாய்கின்றன.


            (கண்ணிர் பூக்கள்)

என்று பாடுப்பொருளாக கொண்டு புதுக்கவிதை படைக்கப்பட்டுள்ளது.

அழகு

சங்க காலம் முதல் அழகு முக்கியத்துவம் கொடுத்து பாடப்பட்டுள்ளது.

ஆனால் புதுக்கவிதையில் பெண்களின் யாதார்த்த அழகையும் அவர்களை

கானும் ஆணின் மனவோட்டத்தையும் அழகாக

அழகாய் இல்லாததால்

அவள் எனக்கு

தங்கையாகிவிட்டாள்

        (அவளின் பார்வை)

அழகு குறையைக் கூட பாடுப்பொருளாக பதிவு செய்துள்ளனர்.

திருநங்கை

சமுகத்தில் குற்றம் சுமத்தவும், திட்டவுமே ஒரு சிலரை பதிவு செய்து

வைத்த நிலை போக அவர்களின் மன உணர்வுகளையும் பதிசெய்யும்

நிலையில் புதுக்கவிதையின் பாடுப்பொருள்கள் அமைந்துள்ளன.

அருகில் யாரமில்லை

    எடுத்துப் பூசிக்கொண்டான்

    முகம்மெல்லாம் மஞ்சள் சாந்து

    (காக்கையின் வண்ணப்படம்)


என்று புறக்கனித்தவர்களைப் பற்றியும் புதுகவிதையில் அவர்கள்

உணர்வையும் பாடுப்பொருளாக கொண்டு படைக்கப்படுவதை

அறியமுடிகிறது.

புதுக்கவிதைகளில் ஒரு குறிப்பிட்ட பாடுப்பொருள்களை கூறாமல்

பல்வேறுபட்ட பாடுப்பொருள்களை கொண்டு கவிதை

படைக்கப்படுகின்றன. சான்றாக அரசியல், காதல், வரம்,


ீ மற்றும் சமுக

அவலங்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள்,

புறக்கணிக்கபடுவர்களின், நிலை மற்றும் விலைமகளிர் பற்றியும் ஒரு

பரந்துபட்ட பாடுப்பொருளைக்கொண்டே பல்வேறு புதுக்கவிதை

தொகுப்புகள் உருவாகின்றன. இத்தகைய பாடுப்பொருள்கள் தமிழ்

மரபுக்கே புதுமையானது. அரசன், தலைவன், இறைவன்  என்று

பாடியிருந்த பாடுப்பொருள்களும் இக்காலத்தில் புதுமையாக்கம் பெற்று

பல்வேறு பாடுப்பொருளை கொண்டு கவிதைகள் உருவாக்கபடுகின்றன.


கேள்வி 2

சங்கம் என்ற ஓர் அமைப்பு இருந்ததாகப் பல்வேறு ஆதாரங்கள்

கிடைத்தாலும், சங்கத்திலே அமர்ந்து புலவர்கள் பாடிய பாடல்கள்

சிலவாகத் தான் இருக்க முடியும். பெரும்பாலான பாடல்கள், பல்வேறு

இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு புலவர்களால்

பாடப்பட்டவையாகத்தான் இருக்க வேண்டும். அவை கி.மு.500 முதல்

கி.பி.200 முடிய உள்ள காலத்தில் பாடப்பட்டவையாக இருக்கலாம். சங்கப்

பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும், பத்துப்பாட்டு என்றும்

பிரிக்கப்பட்டிருத்தல் காணத்தக்கது. ஏராளமான பாடல்கள் ஓலைச்

சுவடிகளில் இருந்து அழிந்துபோக, எஞ்சியவற்றைத் தொகுக்க வேண்டும்

என்ற எண்ணத்தில் அக்காலத்து அரசர்கள் புலவர்களின் துணையோடு

செயல்பட்டனர்.

அவ்வாறு தொகுக்கப்பட்டவையே எட்டுத்தொகையும்,

பத்துப்பாட்டுமாகும். இக்காலப்பகுதியில் படைக்கப்பட்ட இலக்கண

நூல்களுள் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது. எட்டுத்

தொகுதிகளாகத் தொகுக்கப்பட்ட எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும்,

பத்துப் பெரிய பாடல்கள் பத்துப் பாட்டு என்றும் பெயர் பெற்றன.

சங்க இலக்கியங்களை நாம் அறிந்து கொள்வதற்கு முன்னால் சங்க

இலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் பற்றி

அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும். சங்க இலக்கியங்களை


அகம், புறம் எனப் பிரித்துப் பார்ப்பதற்கும், தமிழ் மொழியின்

முழுமையான இலக்கணத்தை அறிந்து கொள்வதற்கும் தொல்காப்பியம்

துணை நிற்கிறது. சங்க இலக்கியங்களுக்கு முன்னால் பல நூறு

ஆண்டுக்காலத் தமிழிலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். கடல்

பெருக்கெடுத்து ஊர்களை அழித்ததாலும், ஓலைச் சுவடிகள் பல்வேறு

காரணங்களால் அழிந்ததாலும் அவ்விலக்கியங்கள் இன்றைக்குக்

கிடைக்கவில்லை.

அவ்விலக்கியங்களுக்கு அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண

நூல் இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அகத்தியரின் மாணவரான

தொல்காப்பியர் தொல்காப்பியத்தை எழுதியதாகவும் தமிழ்

ஆய்வாளர்கள் இறையனார் களவியல் உரையை அடிப்படையாகக்

கொண்டு கூறுகின்றனர். தொல்காப்பியர் கி.மு. 500 அளவில்

வாழ்ந்ததாக, பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியர்

எழுதிய தொல்காப்பியமே சங்க இலக்கியத்தின் இலக்கணமாகத்

திகழ்ந்தது. தொல்காப்பியம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட

இலக்கண நூலாகும். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்

என்பன அவை. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களாகப்

பிரிக்கப்பட்டிருக்கிறது.

சங்க இலக்கியங்களை அகம், புறம் என்று பிரிப்பர். காதலைப் பற்றிப்

பாடும் பாடல்களை அகம் என்றும், காதல் தவிர, பிற செய்திகளைப்

பாடும் பாடல்களைப் புறம் என்றும் கூறுவர். இதற்கான இலக்கணத்தைத்


தொல்காப்பியம் கூறுகிறது. அகப்பாடல்கள் கற்பனையான தலைவன்,

தலைவியின் காதலைப்பற்றி விளக்கியுரைக்கின்றன. புறப்பாடல்கள்

நாட்டை ஆளும் அரசனின் வரம்,


ீ கொடை, சமூகத்திற்கு அரசன் ஆற்ற

வேண்டிய கடமைகள், கல்வியின் சிறப்பு போன்றவற்றைக் கூறுகின்றன.

பெரும்பாலான புறப்பாடல்கள் அரசனின் புகழைப் பாடுவனவாகவே

உள்ளன. பூம்புகார், உறையூர், மதுரை, வஞ்சி போன்ற நகரங்களைத்

தவிர, பெரும்பாலும் சிற்றூர்களே அக்காலத்தில் இருந்தமையால் மக்கள்

இயற்கையோடு இயைந்த சீரிய வாழ்க்கையை வாழ்ந்ததைச் சங்க

இலக்கியங்கள் கூறுகின்றன.

அகப்பாடல்களில், ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு

காதலிப்பது, காதலைத் தோழி மூலம் செவிலித்தாய், நற்றாய்

ஆகியோருக்கு மெல்லத் தெரியப்படுத்துவதும் அக்காலத்தில்

வழக்கத்தில் இருந்துள்ளன. இவ்வாறு காதலைத் தெரியப்படுத்துவதற்கு

அறத்தொடு நிற்றல் என்ற பெயரும் உண்டு. பெற்றோர் திருமணத்திற்கு

ஒத்துக் கொள்ளாத சூழலில் காதலனும் காதலியும் ஊரை விட்டு

வெளியூர் சென்று விடுதல் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று பெயர்.

அக்காலத்தில் காதலித்த பெண்ணை மணந்து அவளோடு இன்பத்துடன்

வாழ்ந்து வரும் தலைமகன் வேறு பெண்களை நாடிச் செல்வதும்

வழக்கமாக இருந்திருக்கிறது. இதற்குப் பரத்தையிற் பிரிவு என்று பெயர்.

அதனால் தலைவி அவனிடம் சினம் கொண்டு ஊடல் கொள்ளுதலும்

பழக்கமாக இருந்துள்ளது. அகப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனைப்

பாடல்களாக இருந்தாலும், அக்கால மக்களின் காதல் வாழ்க்கையை

முழுமையாகவே வெளிப்படுத்துகின்றன.
சங்க அகப்பாடல்கள் அமைப்பாலும் நடையாலும் உரையாடல்

தன்மையாலும்     கருத்தமைதியாலும் நிகழ்ச்சிப் பின்னலாலும்

உளவியல் அடிப்படையில் ஒத்து நிற்பவை. சங்க

இலக்கிய அகத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு நூறு உளவியல்

பற்றியனவே. ஏதேனும் ஒரு மனநிலையை மட்டுமோ, அம்மனநிலை

விளைவதற்குரிய சூழலை மட்டுமோ அவை பாடுபொருளாய்க்

கொண்டவை. சங்க அக இலக்கியங்கள் திணை, துறைகளுக்குத் தரும்

சிறப்பைக் காட்டிலும் அகமாந்தரின் மனவுணர்வுகளுக்குச் சிறப்பிடம்

தருகின்றன. சங்க அக இலக்கியங்கள் அகமாந்தரின் கூற்று

அடிப்படையில் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.

சங்க அக இலக்கியங்களில் இடம்பெறும் அகமாந்தர்கள் தோழி, தலைவி,

தலைவன், தாய், செவிலி, பரத்தை, வாயில்கள் என்போராவர்.

அகமாந்தரின் மனவுணர்வுகள் கூறுவோரின் இன்ப துன்ப நிலைக்கு

ஏற்பவும், கேட்போரின் மனநிலைக்கு ஏற்பவும் மாறுபட்டு ஒலிக்கின்றன.

கேட்போருக்கமைந்த பின்புலங்களின் தன்மைக்கேற்ப, கூறுவோர்

உள்ளுறை, இறைச்சிகளைப் பயன்படுத்திக் குறிப்பாகவோ,

உவமைகளைப் பயன்படுத்தி விளக்கமாகவோ, நேர்முகச் சொற்களைப்

பயன்படுத்தி வெளிப்படையாகவோ தம் மனவுணர்வுகளை

வெளியிடுகின்றன என்பது வெள்ளிடமலை.

You might also like