Professional Documents
Culture Documents
சங்க மருவிய காலத்தை ‘நீதி நூல் காலம்’ என்றும், ‘இருண்ட காலம்’ என்றும்
ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். இக்காலக் கட்டத்தில் நீதி இலக்கியங்கள் தோன்றின. இந்நீதி
இலக்கியங்கள் பெரும்பான்மையும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும்
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் தோன்றின. அவைகளில் இன்றும்
அனைவராலும் பேசப்படும் நூல் சிலப்பதிகாரம். இந்நூல் இளங்கோவடிகளால்
பாடப்பட்டவை. இந்நூலில் மூன்று உண்மைகள் உணர்த்தப் பட்டிருக்கின்றன. அவை,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர், அரசியல் பிழைப்பவருக்கு அறமே
குற்றாகும், மற்றும் உழ்வினை உருந்த வந்து ஊட்டும் என்பதாகும். சமன சமயச்
செய்திகளைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
பல்லவர் காலம் ஒரு பக்தி இலக்கிய காலம் ஆகும். தமிழ்நாட்டில் சைவ சமயப்
பெரியவர்களான நாயன்மார்களும், வைணச் சமயப் பெரியவர்கள் ஆழ்வார்களும் தோன்றி,
பக்தி பாடல்கள் பாடி ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏராளமான இலக்கியங்கள் தோன்றிய காலமும் இதுவேயாகும்.
அந்தவகையில் திருமந்திரம் பெரும் பங்காற்றுகிறது. திருமந்திரம் என்பது திருமூலர்
எழுதிய நூல். இவர் மூவாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். திருமந்திரம் என்ற பெயருக்கு
எற்றப்படி மந்திரம்போல் சுருங்கிய சொற்களில் ஆழ்ந்த பொருள் திட்பமாக அமைந்த
பாடல்களும் மறைந்த நுட்பமான பொருள் உடைய பாடல்களும் இவற்றில் உள்ளன.
தத்துவக் கருத்துகள் முதல், யோகநெறி சித்த வைத்தியக் கருத்துகள் வரையில் பலவும்
செறித்த நூல் அது. மூவாயிரம் பாடல்களும் ஒரே வகையான செய்யுளில் ஒரே நடையில்
அமைந்தவை. ஆனால், பக்தி, யோகம், தவம், ஞானம், மருத்துவம் முதலான பலவகைப்
பொருள்களும் அவற்றில் உணர்த்தப்படுகின்றன.