Professional Documents
Culture Documents
S 33
S 33
***
"என் மனம் பெரிதும் மயங்குகின்றதே. பெருமாள் காடேறப் போனான்.
சக்ரவர்த்தியோ அப்பிரிவைத் தாங்காமல் வானேறப் போனார். இவ்விரு துன்பமே
தாங்க முடியாத போது பழுத்த புண்ணிலே புளி பெய்ததைப் போல அரசனின்றி
நாடு இருக்கக் கூடாது; முடி சூட்டிக் கொள் என்று சொல்கிறீர்களே! இது தகுமா?
முறையா? நீதியா?
***
சங்கரி: சரி தான். இப்போது எங்கள் கண்ணனைப் பற்றி நாங்கள் சொல்ல நீங்கள்
கேளுங்கள்.
இராதை: காலால் ஆடினான் என்பது சரி தான். ஆனால் அந்த காளியன் தன்
உடலாலும் வாலாலும் கண்ணனைப் பிணைத்தும் அடித்தும் கீ ழே விழும்படி
செய்ய முயன்றானே. அப்போது அவன் உடலையும் வாலையும் விலக்கி நின்ற
வரம்
ீ கண்ணனின் தோள் வலிமை தானே?! அதனால் அவன் தோள் வலிமையைப்
பாடுவோம்!
இராகவி: நன்கு சொன்னாய்! தூமணி வண்ணனைப் பாடச் சொன்னதற்கும்
ஏதேனும் காரணம் உண்டா?