Professional Documents
Culture Documents
சாதியின் தோற்றம்-06
சாதியின் தோற்றம்-06
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தாங்கள் நிலைகொண்டு விட்டதையும், தங்கள் பாதுகாப்பு
நிலைநிறுத்தப்பட்டதையும் உறுதி செய்து கொண்ட பார்ப்பனர்கள் புதிய சட்டங்களை
இயற்றியதோடு, பழைய சட்டங்களையும் விரிவு படுத்தினார்கள். சமூக வாழ்வின் எல்லா
நடைமுறைகளிலும் தலையிட்டு தங்கள் விருப்பம் போல் அவற்றை மாற்றி அமைத்தார்கள்
எனக் கூறுகிறார் பசாசு(1). கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தான் மீ மாம்ச சூத்திரம், பிரம்ம
சூத்திரம் போன்ற வேதாந்தக் கருத்துகளுக்கு அடித்தளமாக உள்ள பார்ப்பனிய நூல்கள்
உருவாகின. கி.பி. 1 ஆம் 2 ஆம் நூற்றாண்டுகளில் மனு சுமிருதி எழுதப்பட்டது. கீ தை,
மகாபாரதம், இராமயணம், புராணங்கள் முதலியன எழுதப்பட்டன. இரிக் வேதம் முதல்
அனைத்து வேதங்களும் திருத்தி அமைக்கப்பட்டன. இரிக் வேதத்தில் புருச சூக்தம் போன்ற
இடைச்செருகல்கள் புகுத்தப்பட்டன. பிராமணங்கள் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டன.
தங்கள் சிந்தனைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒத்து வராத நூல்கள் அழிக்கப்பட்டன, திருத்தி
அமைக்கப்பட்டன. இடைச்செருகல்களால் நிறைக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான்
சாதியத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. வருணம் எனப்பட்ட வகுப்பு, சாதியாக
திட்டமிட்டு பார்ப்பனர்களால் மாற்றப்பட்டது.
மீ மாம்ச சூத்திரம்:
அம்பேத்கரின் கருத்துகள்:
மேலும் அந்த இருவரும் ஒருவர் மீ து ஒருவர் கூறும் கருத்துகள் குறித்து அம்பேத்கர், “சைமினி
வேதாந்தங்கள் யாவும் பொய்யுரைக்கும் சாத்திரங்கள் என்று அவற்றைத் தள்ளிவிடுகிறார்.
அவற்றில் கூறப்படும் கருத்துகள் அறிய முடியாதவை, மிகைப்படக் கூறப்பட்டவை, மனிதச்
செயலுக்கு அப்பாற்பட்டவை, மனிதனுக்குத் தேவையற்றவை எனக் கூறுகிறார். சைமினியின்
கர்மகாண்ட கோட்பாடு ஒரு பொய்யான சமயம் என்பதே வாதராயணாரின் கருத்து. ஆனால்
சைமினியின் கர்மகாண்ட கோட்பாடு வேதங்களில் கூறப்பட்டிருப்பதால் வாதராயணார்
வெளிப்படையாக கர்மகாண்ட கோட்பாட்டை எதிர்க்கவில்லை. எனவே அவர் வேதாந்தக்
கோட்பாடுகளும் உண்மையானவையே எனவும் அவை வேதங்களைத் தழுவியே உள்ளன
எனவும் கூறுகிறார்” எனக் குறிப்பிடுகிறார்(12). இந்த மீ மாம்சம், பிரம்மசூத்திரம் ஆகிய இரண்டும்
ஒன்றையொன்று எதிர்ப்பது போன்று தோன்றினாலும் அவை இரண்டுமே வேதங்களைப்
புனிதமாகக் கருதுபவை என்பதும் வைதீக பார்ப்பனியத்தையும் அதன் சாதியத்தையும்
ஆதரிப்பவை என்பதும்தான் இங்கு முக்கியம்.
பகவத்கீ தை:
‘கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் கீ தை இந்துக்களின் புனித நூலாக ஏற்றம் பெற்றது. கி.பி. 4 ஆம்
நூற்றாண்டிற்கு முன்னதாக இல்லாவிடினும் அதே காலகட்டத்தில்தான் இந்தியா இருண்ட
காலத்தில் மூழ்கியது எனக் கூறுகிறார்’ பிரேம்நாத் பசாசு(13). மேலும் அவர், ‘நடுநிலை
மனப்பான்மையோடு தனிப்பட்ட முன்முடிவுகளுக்கு இடமளிக்காமல் கீ தையை படித்தால், அது
ஆன்ம விடுதலைக்கான அல்லது உலகியல் வாழ்வில் முன்னேறுவதற்கான ஒரு வழிகாட்டி
அல்ல என்பது தெரியவரும். உயர்தரமான சில கோட்பாடுகளை அது கூறுகிறது என்பது
உண்மைதான். விழுமிய சிந்தனைகள் சிலவற்றை அது கொண்டுள்ளது என்பதையும்
மறுப்பதற்கில்லை. மன எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான சில
நல்லொழுக்கங்களையும் அது கற்பிக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மனித
முன்னேற்றத்தைப் பாழ்படுத்துவதற்கும் சமூகத்தீமைகளை வளர்ப்பதற்குமே கீ தையின்
போதனைகள் பயன்படும். பயன்பட்டும் வருகிறது. உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,
சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று,
எதிர்த்துக் கேள்வி கேட்காது அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும்
மனப்பான்மையை வளர்த்து விடவும் விரக்தியுற்றுப் போன சமூகத்தை கிளர்ந்தெழவிடாமல்
அடக்கி வைத்துக் கொள்வதற்கும் உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுவதே கீ தையின்
தத்துவம்’ எனக் கூறுகிறார்(14).
மகாபாரதம் - அம்பேத்கர்:
இதன் காலம் பொதுவாக கி.பி. 200 இல் இருந்து கி.பி. 400 ஆக இருக்க வேண்டும் என
பேராசிரியர் ஆப்கின்சு கூறுகிறார். மகாபாரதம் மிலேச்சர்கள் அல்லது இசுலாமியர்கள் குறித்துக்
குறிப்பிடுகிறது. 190 ஆவது அத்தியாயம் வனப்பருவம் பாடல் 29 இல் “இந்த உலகம்
முழுவதுமே இசுலாமிய உலகமாகவே மாறிவிடும், இதனால் யாகங்கள், புனிதமான சடங்குகள்,
சமய விழாக்கள் யாவுமே அற்றுப்போகும்” என மகாபாரத ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதன்
மூலம் இசுலாமியப் படையெடுப்பு இந்தியாவின் மீ து நடைபெற்ற பின்னரே மகாபாரதம் இறுதி
செய்யப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறார் அம்பேத்கர். மீ ண்டும் சில ஆய்வுகளுக்குப்
பின்னர், முகம்மது கோரியின் படையெடுப்பு வரை, அதாவது கி.பி. 1200 வரை மகாபாரதம் எழுதி
முடிக்கப்படவில்லை எனக் கூறுகிறார் அம்பேத்கர்(19) ஆகவே மகாபாரதம் தொடர்ந்து
மாற்றப்பட்டு வந்துள்ளது என்பது உறுதியாகிறது. வைதீக பார்ப்பனியத்தை, அதன் நால்
வருணச் சாதியத்தை போற்றிப் பாதுகாக்கும் இதிகாசமாகவே மகாபாரதம் இருந்து வந்துள்ளது.
இன்றும் இருக்கிறது என்பதே இங்கு மிக முக்கியம்.
இராமாயணம் – அம்பேத்கர்:
புராணங்கள் – அம்பேத்கர்:
முதலில் ஆதி புராணம் என்ற புராணம் இருந்தது. இது தனிப்புராணம் அல்ல. இன்றைய 18
புராணங்களின் முதல் பதிப்பு தான் ஆதி புராணம். பழங்காலத்தில் படித்தவர்கள் இருவகையாக
இருந்தனர். ஒருவர் பார்ப்பனர். அடுத்தவர் சூதர்கள். இந்த சூதர்கள்தான் தொடக்க காலப்
புராணங்களை இயற்றியவர்கள். தொடக்க காலத்தில் புராணங்கள் அறிவுக் களஞ்சியங்கள்
எனப்பட்டன. இந்த புராணங்கள் அண்ட கோளங்களின் உருவாக்கம், அதன் அழிவு, குலவழி மரபு,
பதினான்கு மனுக்கள் தோன்றி பூமியை பரிபாலனம் செய்த விடயம், அரசவம்ச பரம்பரை
ஆகிய ஐந்து பொருள்கள் குறித்துப் பேசின. இவை அவற்றின் எல்லைகள்.
பார்வை:
1.இந்திய வரலாற்றில் பகவத்கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல்
பதிப்பகம், சனவரி-2016, பக்: 216.
2, 3, 4, 5. தமிழகத்தில் பார்ப்பனர்கள் (The Brahmin in the Tamil Country), ந.
சுப்ரமணியன்(N.Subrahmanian), தமிழாக்கம்: பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம், பெரியார் சிந்தனை
உயராய்வு மய்யம், 2018, பக்: 75-77.
6. நா. வானமாமலை, இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள்
வெளியீட்டகம், 2009, பக்:68-70; & தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்தியத் தத்துவம் (Indian
Philosophy) - ஓர் அறிமுகம், தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம், 2010. பக்:
118.
7. இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி, காங்கோபாத்தியாயா, தமிழில் – சா. செயராசு,
NCBH, டிசம்பர் – 2011, பக்: 74 – 77.
8. இந்திய வரலாற்றில் பகவத்கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல்
பதிப்பகம், சனவரி-2016, பக்: 95 – 100.
9. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Chhatopadhyay, Debiprasad), இந்தியத் தத்துவம்- ஓர்
அறிமுகம், தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகளின் பதிப்பகம், 2010. பக்: 201-209; &
உலகாயதம் (Ulagayatham, A Study in Ancient Indian Materialism), தேவி பிரசாத் சட்டோபாத்யாயா,
தமிழில் எசு. தோதாத்ரி, NCBH, சூன் 2010, பக்: 486-513.
10. இந்திய வரலாற்றில் பகவத்கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல்
பதிப்பகம், சனவரி-2016, பக்: 101 - 105.
11. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 146.
12. பக்: 146, 152.
13. இந்திய வரலாற்றில் பகவத்கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல்
பதிப்பகம், சனவரி-2016, பக்: 16.
14. பக்: 18, 19.
15. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 127 – 130.
16, 17. இந்திய வரலாற்றில் பகவத் கீ தை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன்,
விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 328, 329.
18, 19, 20. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 135 - 140
21. பக்: 140 – 143.
22. பக்: 144 – 155.