Professional Documents
Culture Documents
சாதியின் தோற்றம்-05
சாதியின் தோற்றம்-05
300)
மகதப் பேரரசில் பார்ப்பனர்களின் ஆட்சி:
கி.மு. 187 இல் புசியமித்திரன் மகதப் பேரரசைக் கைப்பற்றிய பின் ஏற்பட்ட மாபெரும் அரசியல்
சமூக மாற்றங்கள் குறித்து நமது வரலாற்றாசிரியர்கள் எதுவும் பேசுவதில்லை. அம்பேத்கர்
மட்டுமே இம்மாற்றம் குறித்துப் பேசியுள்ளார். அவர், பார்ப்பனியம் வெற்றி பெற்றபின் அரசியல்
சமூகக் கட்டமைப்புகளில் அது ஏற்படுத்திய மாற்றங்களை ஆய்வதற்கு முயற்சி
செய்யப்படவில்லை எனக் கூறுகிறார். மேலும் அவர், ‘இந்தியாவின் பண்பாடு, வரலாற்றின்
நெடுகிலும் ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது என்று பொதுவாகவே கருதப்படுகிறது;
பார்ப்பனியம், புத்தமதம், சமணமதம், ஆகியவை எல்லாம் வெவ்வேறுவிதமான கட்டங்களே
என்றும், அவற்றினிடையே அடிப்படையான முரண்பாடுகள் இருந்ததில்லை என்றும்
கருதப்படுகிறது. இரண்டாவதாக, இந்திய அரசியலில் எத்தகைய போராட்டங்கள் நிகழ்ந்துள்ள
போதிலும், அவையெல்லாம் அரசியல் போராட்டங்கள், அதாவது ஆட்சி வம்சங்களிடையே
நடந்த போராட்டங்களே என்றும், அவற்றுக்குச் சமூக ஆன்மீ க முக்கியத்துவம் எதுவும் இல்லை
என்றும் கருதப்படுகிறது’ எனக் கூறுகிறார். மேலும் அவர் இந்தியப் பண்பாடு என்ற ஒன்று ஒரு
போதும் இருந்ததில்லை எனவும் கூறுகிறார்(1).
கி.மு. 187 இல் மௌரிய அரசனின் கடைசி மன்னன் பிருகதிராதன் என்பவனை படை
அணிவகுப்பின் போது படுகொலை செய்துவிட்டு புசுயமித்திரன் என்ற பார்ப்பனப் படைத்தளபதி
மகத அரசைக் கைப்பற்றிக் கொண்டான். அவனது வம்சம் சுங்க வம்சம் எனப்பட்டது. கி.மு.
75 இல் அவ்வம்சம் இல்லாதுபோய் கன்வ வம்சம் ஆட்சிக்கு வந்தது. அதுவும் பார்ப்பன
வம்சமே. கி.மு. 30 இல் அவ்வம்சம் சாதவாகன அரசன் புலுமாயி என்பவனால் அழிக்கப்பட்டது.
அதன்பின் மகத அரசை இனக்குழு அரசுகள் கைப்பற்றிக் கொண்டன. ஆகவே கி.மு. 187 முதல்
கி.மு. 30 வரை 150 வருடங்களுக்கு மேல் பார்ப்பன வம்சங்கள் மகதப் பேரரசை ஆண்டன.
இக்காலகட்டத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்கள் நடைபெற்றன. அசோகன் காலத்தில் பௌத்த
மதம் மிகவும் செல்வாக்கு பெற்ற மதமாக ஆகியிருந்தது. அந்த பௌத்த மதம் முற்றிலும்
அழிக்கப்பட்டு வேதம் சார்ந்த சிந்தனைகளும் சடங்குகளும் மீ ண்டும் அரியணை ஏறவேண்டும்
என்பதே பார்ப்பனர்களின் நோக்கமாக இருந்தது. அதனை நிறைவேற்ற புசுயமித்திரனும்
பார்ப்பனர்களும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
பார்ப்பனர்களின் ஆட்சி கி.மு. 185 முதல் கி.மு. 30 வரை கிட்டத்தட்ட 155 ஆண்டுகள்
நடைபெற்றது. இக்காலகட்டத்தில் பார்ப்பனர்கள் பலவகையிலும் வலிமை மிக்கவர்களாக
ஆனார்கள். மிக அதிக அளவான நிலதானங்களும், வரிச்சலுகைகளும் பெற்ற ஒரு சொத்துடமை
வர்க்கமாகவும், அரசியல் செல்வாக்கு கொண்டவர்களாகவும், சமூகத்தின் அதி உயர்
வகுப்பாகவும் ஆனார்கள். கடவுளுக்கும், கல்வி, அறிவு, நூல் போன்றவைகளுக்கும் ஏகபோக
உரிமை கொண்டவர்களாகவும் ஆகியிருந்தார்கள். இக்கால கட்டத்தில்தான் வைதீக
பார்ப்பனியத்துக்கும், பார்ப்பனர்களின் நால்வருண சாதியமைப்புக்கும் அடித்தளம்
அமைக்கப்பட்டது. சமூகத்தின் மிக வலுவான குழுவாக அவர்கள் தங்களை ஒருங்கிணைப்பு
செய்து கொண்டிருந்தார்கள். அவர்களது எதிர் சித்தாந்தங்களாக இருந்த சமண பௌத்த, ஆசிவக
மதங்களின் அடித்தளங்களை அதன் சுவடே தெரியாத அளவு அடியோடு அழித்து ஒழித்தனர்..
அரசையும் சமூகத்தையும் தங்கள் விருப்பம்போல் மாற்றும் திறன் கொண்டவர்களாகவும்
ஆகியிருந்தார்கள். தொடர்ந்து வைதீக பார்ப்பனியத்தைக் கட்டமைக்கும் பணிக்குத் தேவையான
நூல்களைப் படைப்பதையும், பண்டைய நூல்களை இடைச்செருகல்கள் மூலமோ திருத்தங்கள்
மூலமோ தங்கள் கருத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதையும், இன்னபிற பணிகளையும்
செய்து வந்தார்கள். சத்திரியர்கள் எனப்படும் ஆளும் வர்க்கம் உட்பட அனைத்துச் சமூகங்களும்
பார்ப்பனர்களை சமூகத்தின் உயர்வகுப்பாக ஏற்று அங்கீ கரிக்குமாறு செய்திருந்தார்கள்.
மனு சுமிருதி என்ற வைதீக பார்ப்பனிய நூல் கி.பி. 100 வாக்கில் எழுதப்பட்டதாக வெண்டி
டோனிகர் கூறுகிறார்(11). ஆனால் மனு சுமிருதி கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனக்
கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(12). மனு சுமிருதியை எழுதிய சுமதி பார்கவா என்பவன், தனது
விதிகளுக்குப் பெருமை சேர்க்கவும் மதிப்பை ஏற்படுத்தவும் பண்டைய காலத்தில் புகழ்பெற்ற
அரசனாக (இனக்குழுத்தலைவனாக, இராணுவத் தளபதியாக, புரோகிதனாக) இருந்த மனுவின்
பெயரை திட்டமிட்டு தனது நூலுக்கு வைத்துள்ளான் எனவும் இதன் காலம் புசுயமித்திரனின்
காலமான கி.மு. 2 ஆம் நூற்றாண்டு எனவும் அம்பேத்கர் கூறுகிறார்(13). புசுயமித்திரன் காலம்
முதலே மனுசுமிருதி கூறும் சட்டவிதிகளை பார்ப்பனர் பலர் உருவாக்கி நடைமுறைப்படுத்தி
வந்தனர் எனவும் அவற்றை கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இறுதியாகத் தொகுத்துத் தந்தவன்தான்
சுமதி பார்கவா என்பவன் எனவும் கூறலாம். புசியமித்திரன் போன்ற பார்ப்பன (சுங்க, கன்வ)
வம்ச அரசர்களின் ஆதரவோடுதான் மனு சுமிருதியின் விதிகள் உருவாக்கப்பட்டு வந்து,
பின்னர் இறுதி செய்யப்பட்டுள்ளது எனலாம்.
11: 261-62. ‘ஒரு பிராமணன் மூன்று உலகங்களின் மக்களையும் கொன்றிருந்தால் கூட இரிக்,
யசூர், சாம வேதங்களை உபநிடதங்களுடன் சேர்த்து மூன்று முறை ஓதினால் எல்லாப்
பாவங்களிலிருந்தும் அவன் முற்றிலுமாக விடுதலை பெறுகிறான்’.
வரம்பு மீ றிய இந்த விதிகள் குறித்து அம்பேத்கர், “மன்னனே ஒரு பிராமணனாகவும், மனுவின்
கருத்துகளுக்கு உடன்பாடு உள்ளவனாகவும் இருந்தாலன்றி, இவ்வாறு பிராமணர்களை
தெய்வமாக்குவதும், அரசனுக்கு மேலான இடத்தில் அவர்களை வைப்பதும் சாத்தியமாகி
இருக்காது. புசுயமித்திரனும், அவனுக்குப் பின்வந்த மன்னர்களும் தாங்களே பார்ப்பனர்களாகவும்
பார்ப்பனியத்தை நிலை நிறுத்துவதில் அக்கறை உள்ளவர்களாகவும் இருந்தாலன்றி,
பார்ப்பனர்கள் இவ்வளவு தூரம் மிகையான உரிமைகள் கோருவதை சகித்துக்
கொண்டிருந்திருக்க முடியாது. உண்மையில் புசுயமித்திரனின் கட்டளையின் பேரிலேயே மனு
சுமிருதி இயற்றப்பட்டிருப்பதும், அது பார்ப்பனியத் தத்துவத்தின் புத்தகமாக அமைந்திருப்பதும்
சாத்தியமே” எனக் கூறுகிறார்(18).
மனுசுமிருதியும் சூத்திரர்களும்:
மனுசுமிருதியும் பெண்களும்:
மனுவின் விதி 11:35, பிராமணனே உலகைப் படைத்தவன் என அறிவிக்கிறது. விதி 1.88 இன்படி,
வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி புரிதல், வேள்வி புரிவித்தல், செல்வராயின் பிறர்க்கு
ஈதல், வறியவராயின் பிறரிடமிருந்து ஏற்றல் ஆகிய ஆறும் பிராமணனின் கடமை. மூன்று
வேதங்களையும், அறநூல்களையும் ஆய்ந்துணர்ந்த பிராமணரை மன்னன் நாள்தோறும்
வணங்கி, அவரது அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். பிராமணன் எத்தகைய பாவத்தைச்
செய்த போதிலும் மன்னன் அவனைக் கொல்லாமலும், அவனது பொருளைக் கவர்ந்து
கொள்ளாமலும் அவனை ஊரை விட்டு துரத்த வேண்டும். பிராமணனைக் கொல்வது
பெரும்பாவம். பிராமணன் புதையலைக் கண்டுபிடித்தால் முழுவதையும் அவனே வைத்துக்
கொள்ளலாம். மன்னன் புதையலை எடுத்தால் பாதியை பிராமணனுக்குத் தர வேண்டும்.
பிராமணனின் சொத்தை ஒருபோதும் மன்னன் எடுத்துக் கொள்ளக்கூடாது(28).