Professional Documents
Culture Documents
ஆய்வு நோக்கம்:
ஆய்வு எல்லை:
துணைமை ஆதாரங்கள்:
ஆய்வேட்டின் அணுகுமுறை:
ஆய்வேட்டின் அமைப்பு:
ஆய்வு அறிமுகம்
1
இயல் 2. உணவுகள்
ஆய்வு நிறைவுரை
துணைநூற்பட்டியல்
ஆய்வு அறிமுகம்
இயல் விளக்கம்
’சமுதாய அமைப்பு’ என்ற முதல் இயல் உயர் சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தங்கள்
அடிமைகளாக வைத்திருப்பதையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்காட்டுகிறது.
2
இயல்-1
சமுதாய அமைப்பு
முன்னுரை:
ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் மக்கள் கூடி வாழும் போது அவர்கள் ‘சமுதாயம் ‘எனச்
சொல்லப்படுகிறார்கள். அந்நிலப் பகுதிக்கு ஏற்றவாறு விவசாயம் உள்ளிட்ட தொழில்கள்
அமையப்பெறுகின்றன. தொழிலின் அடிப்படையில் பல சமூக அமைப்புகள் தோன்றின. அவை
சமுதாய ஏற்றத் தாழ்வுகளுக்கு வழிவகை செய்தன. முதலாளித்துவச் சமூகம், வளர்ச்சி அடைய
அடித்தளமாகப் பல சமூகங்கள் இருந்திருக்கின்றன என்பதை வரலாறு தெளிவு படுத்தியிருக்கிறது.
அவ்வாரலாற்றுக் கண்கொண்டு தான் வண்டல் நிலத்தையும், அந்நிலத்தில் வாழ்ந்த- வாழும்
மக்களின் பண்பாட்டுத் தளத்தையும் அதன் பரிணாமத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
அவ்வகைப் புரிதலுக்கு சோலை சுந்தரபெருமாளின் ‘வண்டல் உணவு’ நூல் துணை செய்கிறது.
நிலப்பாகுபாடு:
நிலவுடைமைச் சமுதாயம்:
3
கொண்டிருந்தது. அவற்றை உழைக்கும் சமூகம் மீறிடும் போது, கொடிய தண்டனைக்கு உள்ளாக்கும்
படியான வழியையும் வகுத்திருந்தது. நிலவுடைமைச் சமூகம் உருவாக்கிய சுரண்டலையும்
அடக்குமுறையையும் கண்டு, உழைக்கும் சமூகமத்தினர் இயற்கை வளங்களைத் தேடி இடம்
பெயர்ந்திருக்கின்றனர் என்பதை, “எல்லாத்தையும் விட்டு வருமானம் எங்கே வருதோ அதன்
போக்கில் தான் போகனும்”2 என நூல் குறிப்பிடுகிறது. நேல்லரிசிச்சோறு உடைமைச் சமூகத்திற்கும்,
உழைக்கும் சமூகத்திற்கும் பொதுவாக இருந்தது. பிரதான உணவான நெல்லரிசிச் சோறு படிப்படியாக
உழைக்கும் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதனால் இயற்கை உணவினையே உட்கொண்டனர்.
உழைப்பில் விளைந்த நெல்லரிசிச் சோற்றைத் தின்ன தங்களுக்கு உரிமை உண்டு என்று கோரி,
போராடத் தயக்கம் காட்டினர். இயற்கை, வளர்த்து வரும் உயிரினங்களைக் கொண்டே
தங்களுக்குரிய உணவில் ஒரு பகுதியைத் தேடிக் கொண்டனர். இதிலும் உடைமைச் சமூகம் “தன்
பங்கு தலைப் பங்கு” என்று தலை நிமிர்ந்து கொண்டது. இதனால், “தலை,வலை நாட்டாமைக்கு”
என்ற வழக்கு நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டது. நிலவுடைமைச் சமூகமே உழைக்கும் மக்களின்
உழைப்பைச் சுரண்டிக் கொண்டு “கூலிப்படியையும் சுருக்கிப் போட்டது. அதனால், வயிற்றுக்கும்
வாய்க்கும் போராட வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுப்போனார்கள். . வாரம் என்பது நிலத்தில்
விளையும் விளைச்சலில் தொடக்க காலத்தில் சரிபாதியாகவும் காலப்போக்கில்
குத்தகைக்காரர்களை மூன்றில் ஒரு பங்கு நிலவுடைமையாளர்களுக்கு அளந்து விடும் முறையை
நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படி சாகுபடிக்கு நிலங்களைப் பெற்றவர்கள் அனைவரும்
நிலத்தில் உழைப்பவர்களாக இருந்ததால் உழுதுண்பவர்களாக அடையாளப்பட்டார்கள் . நிலவுடைமைச்
சமூகம் பயிர் உற்பத்தியல் செய்யப்படும் நெல்லில் இருந்து எடுக்கப்படும் அரிசியின் தராதரம்
கண்டறியப்பட்டவுடன் தங்களுக்கு என்று உயர் ரகமாகக் கருதும் நெல்லை தங்கள் தேவைக்காக
தனியாக உற்பத்தி செய்வதில் ஈடுபாடு செலுத்தி சேமித்துக் கொண்டனர்.
சாதிப்பாகுபாடு:
4
உயர் சாதியினர் சிலரே தங்களை “மகாசனங்கள்” என்று நிலைநிறுத்திக் கொண்டனர். இந்த
“உழுதுண்டு வாழ்ந்து வந்த வேளாண் மக்கள் குடிபொருந்திய இடத்திற்கு ‘ ஊர்’ என்று பெயர் .
உழவுத் தொழில் மேற்கொண்டிருந்த வேளாண் குடிகளுடைய குழுக்கள் ‘சித்திரமேழி’என்ற பெயரில்
அழைக்கப்பட்டனர். பிராமணர்களின் குடியிருப்புகள் ‘அகரம்’, ’பிரமதேயம்’, ’சதுர்வேதி’ மங்கலம்
என்று அழைக்கப்பட்டன.”5
எல்லா மக்களும் சமம் என்பதை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனார்
கூறுகிறார்.
“எங்கே ஊர்களில்
ஜாதி இல்லையோ
தீணட
் ாமை:
5
உருவாக்கப்பட்டதன் வடிவக் கூறே தீண்டத்தகாதவர்கள். “சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மக்கள்,
விதியின் மீதும் இறைவன் மீதும் பழியைப் போட்டு விட்டு இதுதான் தமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை
என்று செயலற்றும், சிந்தனையற்றும் முடங்கிக் கிடந்தனர்.”10 அச்சமுகத்தில் தீண்டத்தகாதவர்கள்
என இம்மக்களை ஊருக்குள் ஒதுக்குப்புறத்தில் ஒதுக்கி வைத்தனர். “தின்னதுக்கு திணவு”
“தின்ன மண்ணுக்குச் சோவை”11 என்ற போக்கில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்
கொண்டார்கள். உடைமைச் சமூகம் ஒதுக்கப்பட்ட மக்களைக் கொண்டே கோவில்களைக் கட்டினர்.
ஆனால், அதனுள் வர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பசுவின் பால் ஊட்டச்சத்து நிறைந்தது.
அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. தீண்டாமைக்கு உட்படுத்தியிருந்த
மக்களை நிலவுடைமைச் சமூகம் 19-ம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரையிலும் பசுவின் பாலைப்
பயன்படுத்த அனுமதிக்கவில்லை. தீண்டாமைதக்கு உட்படுத்தியிருந்த பண்ணை அடிமைகள் தான்
மாடுகளின் சாணத்தை அள்ளிக் கொட்டினார்கள் . அம்மாடுகளுக்கு தீவனம் போடுவதில் இருந்து
அனைத்துப் பராமரிப்புப் பணியையும் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
1. ஆண் தெய்வங்கள்
2. பெண் தெய்வங்கள்
3. குல தெய்வங்கள்
4. சாதித் தெய்வங்கள்
5. ஊர்த் தெய்வங்கள்13
6
“சிவன் வழிபாடு தொன்று தொட்டே தமிழகத்தில் வழங்கி வருகின்றது. சிவனையே முழுமுதற்
கடவுகளாப் பண்டைய தமிழர் வழிபட்டு வந்தனர் என்று சங்க இலக்கியச் செய்திகள்
கூறுகின்றன.”14
மலை, காடுகள் அழித்து வேளாண்மை பெருக்கம் அடைந்த போது ’முருக வழிபாடும்’ வேளாண்
மக்களுக்கு உரியதாகியிருக்கிறது. இதனால் தான் இம்மண்ணின் பெருங்கடவுளாக ‘சிவன்’
தோன்றியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வருகிறார்கள். இவ்விரண்டு
கடவுளர்களும் இம்மண்ணின் ஆதிக்கடவுளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழிபாடு
நடத்துவதை இன்றைக்கும் இம்மண்ணின் மக்கள் நடைமுறையில் வைத்திருக்கிறார்கள் .
‘செவ்வாய்ப்பிள்ளையார்’ என்று பெண்கள் மட்டுமே நள்ளிரவில் கூடி நடத்தும் வழிபாடு
இம்மக்களிடம் புகழ்பெற்றது.
பண்ணை அடிமைகள்:
7
வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்திடும் உற்பத்திக் கருவிகளின் ; திறனை அதிகரிக்கும்
நுட்பத்தைப் பயன்படுத்தி மேன்மைப்பட்டிருந்தது. அதற்கு வேண்டிய கடின உழைப்பைப் பெறவே
அச்சமூகம் பண்ணை அடிமை முறையைக் கட்டமைத்துக் கொண்டிருந்தது. “பண்ணை அடிமை
முறை தான் நிலவுடைமைச் சமூகத்தின் உயிர் நாடியாக அமைந்து போனது. நிலவுடைமையாளர்களின்
மாடுகளையும், ஆடுகளையும் பராமரிக்க என்று பண்ணை ஆட்களாகவோ தினக்
கூலிக்காரர்களாகவோ அமர்வதற்கு முன் இவர்கள் ’அறையாள், அரைப் படி’ என்ற பகுப்பில் “எட்டு
வயது தொடங்கி பதிமூன்று வயது வரையிலும் உள்ள பிள்ளைகள் வேலைக்குப் போக வேண்டும்”
சிறுவர்கள் விடியலில் போனால் அந்தி சாயும் நேரத்தில் தான் உரிமை உடைய மாட்டுக் கொட்டிலுக்குத்
திரும்பி வருவார்கள். அதுவே அவர்களுக்குக் கட்டளையாக இருந்தது. கடந்த நூற்றாண்டில்
முப்பதுகளுக்குப் பிறகு அம்மக்கள் நடத்திய சனநாயகப் போராட்டங்கள் மூலம் பண்ணைகளின்
அதிகாரம் படிப்படியாகச் சுருங்கி வந்தது. “இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டு
அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் நிலவுடைமைக்கு உச்ச வரம்பு ஒன்று விதித்தது. அதன் கீழ்
குடிமக்கள் யாவரும் பதினைந்து ஏக்கர்களுக்கு மேல் உரிமை கொண்டாட முடியாது என்று திட்டம்
வகுக்கப்பட்டது. நிலமின்றி வருந்திக் கொண்டிருந்த குடிமக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யபடபட்டு
வந்தன”19 பண்ணைக் கூலி நடைமுறைக்கு வந்ததிலிருந்து பண்ணை அடிமைத்தனம் முற்றாக
ஒழிந்தது. அதற்காக உழைக்கும் மக்கள் கொடுத்த விலை மிக அதிகம்.
பெண்களின் நிலை:
“தாலிக்கு அரும்பெடுத்த
சேலைக்கு நூலெடுத்த
சேணியனும் கண்குருடோ?
பஞ்சாங்கம் பார்க்கவந்த
பார்ப்பானும் கண்குருடோ?
8
என்று கணவனின் இழப்பிற்கு இவர்களெல்லாம் காரணமாக இருக்கலாம் என்று எண்ணி வேதனைப்
படுகிறாள்.
பெண்களின் வேளாண்பணி:
9
அடங்கிய படியினைப் பெண்களை விட்டுக் கொட்டுகிறார்கள். கூடியிருக்கும் பெண்கள்
பாட்டிசைக்கிறார்கள். ஆடியும், பாடியும் கொண்டாடி மகிழ்கிறார்கள். இச்செயல்பாடு ஆதி வேளாண்
சமூகம் கொண்டிருந்த பண்பாடாகும். “வந்த பிடாரி இருந்த பிடாரியை விரட்டியது போல”24 என்ற
சொலவடை பிறந்த கதையையும் இவ்விடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும் இத்தொன்மம்
நமக்குத் தெரிவிபதாவது, விதையைப் பெண்களே பாதுகாக்கச் செய்திருக்கிறார்கள் என்பதைச்
சுட்டுகிறது. கோட்டை கட்டி விதைகளைப் பாதுகாப்பது வேளாண் மக்களிடம் இன்றைக்கும் இருந்து
வருகிறது. இவ்வழியே விதைகளைச் சிறிதேனும் பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஆணாதிக்கம்:
10
ஆணிடம் தேவை அனைத்திற்கும் எதிர்பார்த்து எதிராட விரும்பாத பெண்ணினம்
தனக்கான பொருளாதாரத்தைப் பெற மாற்றத்தைத் தேடி வைத்துக் கொண்டு தான்
இருந்திருக்கிறது. அது தான் “கோழி வளர்ப்பு” இதனைச் செய்திட பெண்கள் அதிக நேரத்தைச்
செலவிடத் தேவையிருக்கவில்லை. எளிய முறையில் பொருளாதாரத்தை பெற முடிந்திருக்கிறது
என்றால் அது கோழி வளர்ப்பில் இருந்து தான் இதனைச் “சிறுவாடு காசு” என்று
அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நாணயப் பொருளாதாரம் நடைமுறைக்கு வராத
காலத்திலும் பண்டமாற்று முறையிலும் பெண்கள் சேமிப்பை மேற்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
இப்படி அடுக்குப் பானை இடுக்குகளிலும், குதிர் சந்துகளிலும், உண்டிகளிலும், சின்னக்
கலையங்களிலும் கமுக்கமாக சேமித்து வைத்தவை, புதைந்து போனவை ஏராளமுண்டு.
தொகுப்புரை:
11
தெய்வங்கள் இருப்பதை ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. பெண்களின் வேளாண்பணியும்
அவர்களது நிலைமையும் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆணாதிக்க சமூகத்தினால் நடக்கும்
சமுதாய விதிமுறைகள் என்ன என்ன ஆராயப்பட்டுள்ளது. பிராமணர்களின் சமூகச் சட்டம்
எத்தகைய உயர்நிலையில் நின்று மற்றாரை கீழந
் ிலைக்குத் தள்ளியது என்பதும்
தெரிந்துரைக்கப்பட்டுள்ளது.
12
குறிப்புகள்:
5. மேலது ப.310.
முதன்மொழி, ப-27.
13
25. ராஜம் கிருஷ்ணன், பெண்விடுதலை, ப-55.
14
இயல் - 2
உணவுகள்
முன்னுரை:
15
எடுத்துப் போய் தெளிப்பதாகும். தெளிக்கப்பட்ட விதை மேல் மண்ணோடு கலந்து கிடக்கும். மழைப்
பொழிவில் அவை முளைத்து ஒரு சாண் அளவுக்கு வளர்ந்த பின் தண்ணீரைத் தேக்கிக் களை
எடுத்து விடுவார்கள். இது “நடவு வெய்யாமல் நெல் பயிரிடும் முறையாகும்.” இதற்கு தெளிநாற்று
என்று பெயருண்டு. வழக்கமாக நாற்றாங்காலில் விதை பாவி, காலத்தில் பறித்து நடவு செய்யும்
விதைகளைத் தவிர்த்து இந்த மாற்று விதைகளையும் கண்டறிந்து அதைப் பாதுகாத்து
இருக்கிறார்கள்.
கால்நடைகளின் பங்கு:
16
நிலவுடைமையாளர்களின் உணவுகள்:
தாழ்த்தப்பட்டோரின் உணவுகள்:
மறைந்துபோன நெல்விதைகள்:
இம்மண்ணில் வேளாண் மக்கள் காலம் காலமாகக் காப்பாற்றிய மரபான நெல் விதைகள் நம்மை
உரசிக் கூட பார்க்காமல் மண் மூடிப் போயிருக்கின்றன. ஆண்டுக் கணக்கில் மழை காணாமல்
வறண்டு போனதும், மாதக் கணக்கில் மழை கொட்டி வாரிக் கொண்டு போனதும் ஏராளம். தாது
வருடப் பஞ்சத்தினால் மட்டும் இருபதுக்கு மேற்பட்ட விதைகள் மருந்துக்குக் கூட வைத்துக் கொள்ள
முடியாமல் மக்கள் பசிக்கு இறையாகியிருக்கின்றன. எக்காலத்தோ வீசச
் த்தோடு பிறந்த “பசி
வந்தால் பத்தும் பறக்கும்”8 என்ற சொலவடை தாதுவருடப் பஞ்ச காலத்தில் உறுதியாகி
இருக்கிறன்றது. “தமிழகத்தில் தொன்று தொட்டு பாராம்பரியமாக விளைவிக்கப்பட்ட 3000-க்கும்
மேற்பட்ட நெல் ரகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. அதற்குப் பதிலாக சத்துக்கள் குறைந்த
குறு ரகங்களுக்கு மவுசு அதிகரித்து விட்டது.”9 முன்னும் பின்னும் தள்ளினாலும் சுமார் முன்னூறு
ஆண்டுக் காலத்தில் வேளாண் மக்களின் வாழ்க்கை வீராப்புடன் நிமிர வைத்த ‘விதை நெல் முதலை’
17
நாம் அறிய வகை தொகை கிடைத்திடவில்லை. அதே நேரம் சங்க இலக்கியம் தொடங்கி பக்தி
இலக்கியங்கள், சிற்றிலங்கியங்கள் வரையிலும் காணக் கிடைக்கும் நெல் விதைகளைப் பற்றி
கேள்விப் படத்தான் முடிகிறது. லாமல் போயிருக்கிறது.
18
ரகங்களை மீண்டும் பயிரிட்டு நெல்லுக்கு உயிர் கொடுத்து வருகிறார். அறுபதாம் குறுவை, புங்கார்,
கருங்குறுவை, வெள்ளக்கார், வெள்ளை சித்ரகார், தூயமல்லி, குழியடிச் சம்பா, சிவப்புக் குறுவை
கார், கல்லுருண்டை சம்பா, வெள்ளை நெல், வரப்பு குடைஞ்சான், கிச்சடி சம்பா, கார், தங்கச்சம்பா,
சிவம்பு சீரகச்சம்பா, சொர்ண மசூரி, சம்பா மோசனம் கண்டசாலா, சிட்டிகார், ஏரி நெல், மாப்பிள்ளை
சம்பா, கட்டுயாணம், நவரா போன்ற நெல் ரகங்களுக்கு மீண்டும் உயிரூட்டியவர் ‘நெல்ஜெயராமன்’11
இம்மண்ணில் வாழ்ந்த மக்கள் பல வகைப் பழங்களை உண்டனர் “நாவல் பழம்” புரட்டாசி, ஐப்பசி
மாதங்களில் மட்டுமே கிடைத்திடும். அடர்த்தியான கருமை நிறம் கொண்டிருக்கும். இந்த நாவற்பழம்
“சர்க்கரை நோயைப் போக்கும் அரிய மருத்துவக் குணம் கொண்டது. “நெல்லி” தை, மாசி
மாதங்களில் அறுவடைக்கு வந்து விடுகிறது. ஊறுகாய் போட்டு உண்ணும் பழக்கமும் உண்டு. இந்த
நெல்லிக்காய் அரிய மருத்துவ குணம் கொண்டது. “மா,பலா, வாழை” இவ்வண்டல் மண்ணின்
மக்களிடம் ‘முக்கனி என்ற சிறப்புப் பெயர் பெற்றிருந்தன. இவை தெங்வீக அருள் பெற்ற பழங்கள்
என்ற பெயரையும் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றன.
19
இதனைச் சுற்றுப்புற மக்கள் அதியசத்துடன் பார்த்து செல்கின்றனர்.”13 என்ற செய்தி மா
உற்பத்தியை விளக்கம். பலா இம்மக்களிடையே மிகச் சிறந்த உணவாக இருக்கிறது. அத்தோடு
“இராஜ அம்சம் கொண்ட பழம்” என்ற பெயரும் இருக்கிறது. இதனை ஒடுக்கப்பட்ட மக்கள் உண்ண
அனுமதி இல்லை. அதனால் அவர்கள் அதற்கு இணையான சத்துடைய களாக்காயை உண்டனர்.
இந்தக் களாக்காய் வண்டல் மக்களின் பசியைப் போக்கியிருக்கின்றது. “பலாக்காய் இல்லாட்ட
களாக்காய்”14 இப்படியான சொல்லாடலை இவ்வண்டல் மண் மக்களின் வாழ்வில் கேட்க முடியும்.
“மனிதன் தோன்றிய காலம் முதல் உணவுத் தேவையை காட்டில் கிடைக்கும் பழங்கள் மூலம்
நிறைவு செய்தான்”15
20
மரங்களின் வகைகள் பயன்கள்:
21
அடைமழை”21 என்ற வழக்கு இம்மக்களிடையே உண்டு. பெரும்பாலும் சூரியக் கதிரையே உணர
முடியாத காலம் என்று சொன்னால் மிகையில்லை. இக்காலத்தில் அந்தக் கிழங்கை மகசூல்
செய்வது சற்று எளிது. இதனை விளைவிக்கும் சிறுநிலவுடைமையாளர்கள் பண்டமாற்று
முறையிலேயே பெரும்பாலும் விற்பனை செய்து விடுவார்கள். அதாவது ஒரு எடை தூக்கி (சுமார்
பத்துக்கிலோ) கிழங்குக்கு இரண்டு மரக்கால் நெல்லைத் தர வேண்டும். 1980 வரையிலும் இம்முறை
நடைமுறையில் இருந்தது. “பழந்தமிழர்கள் வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு ஆகியவற்றையும் சிறப்பு
உணவாகக் கொண்டனர்.”22 மரவள்ளிக் கிழங்கை அடையாகச் சுட்டு சாப்பிடுவது உண்டு.
“சர்க்கரை வள்ளிக் கிழங்கு” கொடியில் வேர் விடுவது இது இனிப்புச் சுவை கொண்டது. இந்தக்
கிழங்கு உணவை, சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலும் விருப்பத்துடன் உண்பார்கள் .
மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகவும் அமைந்து போய் விடுகின்றன. பாட்டி வைத்திய முறையில் வாயுப்
பொருள் என்று ஒதுக்கச் சொல்லுகிறார்கள். “பெருவள்ளிக்கிழங்கு” சற்று தடிமனான கொடியின்
வேரில் கிழங்கு விட்டு இருக்கும். ஒரு கொடி வேரில் ஒன்று இரண்டு கிழங்குகள் தான் விட்டு
இருக்கும் அதே சமயம் இந்தக் கிழங்கு ஒன்று ஒரு எடை கனத்திற்குப் பெருத்து இருக்கும் .
சர்க்கரை வள்ளிக் கிழங்கு போல் அதிக இனிப்புச் சுவை இருக்காது. மணற்பாங்கான வண்டலில்
நல்ல விளைச்சலைத் தரும். விதைத்து அறுபது நாட்களில் மகசூலைப் பெறலாம். ஆவணி மாதமே
பயிரிடச் சிறந்த பருவமாகும். கார்த்திகை மாதத்தில் மகசூலைப் பெறலாம். “கார்த்திகை கால்
கோடை” என்ற வழக்கைப் பெற்றிருந்தாலும், பெரும்பாலும் வேலை வெட்டி கிடைப்பதில்லை. வேளாண்
தொழிலாளிகளின் கார்த்திகை மாத உணவுப் பஞ்சத்தைப் போக்கிக் கொண்டு இருந்தது.
‘காய்வள்ளிக் கிழங்கு’ பெருவள்ளிக்கிழங்கினைப் போலவே பயிரிட வேண்டும். இந்தக் கிழங்கு
மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. காரணம் எல்லா வயதினரும் எந்த அச்சப்பாடும்
இல்லாமல் உண்ணமுடியும். ‘அல்லிக்கிழங்கு” கடுங்கோடையின் வெப்பத்தைச் சமாளிக்கத் தக்க
கிழங்கு. நீர் நிலைகளின் அடிச்சேற்றில் இருந்து கொததுக் கொத்தாக வேர் விடும. இந்த அல்லியில்
இரண்டு வகை உண்டு. சிவப்பல்லி, வெள்ளை அல்லி, இவ்விரண்டும் எவ்வளவு உயர் நீர் மட்டமாக
இருந்தாலும் அந்த நீர்மட்டத்திற்கு மேல் இலை விட்டுப் பூத்து நிற்கும். இந்தக் கிழங்கை யாரும்
விதைப்புச் செய்வது இல்லை. பாதுகாப்பதில்லை. குளத்தில் தண்ணீர் தேங்கியதும் துளிர்விட்டு
வளர்ந்து கிழங்கு விடும் தன்மை கொண்டது. சிறுவர்கள் குளத்தில் நீந்தி விளையாடும் போது
இந்தக் கிழங்குகளைத் தோண்டி மேலே கொண்டு வருவார்கள். பெரும்பாலும் சுட்டும், அவித்தும்
தின்கிறார்கள். சில சமங்களில் அடையாகச் செய்தும் சாப்பிடுகிறார்கள். அல்லிப் பூவின் மையத்தில
இருக்கும் சூல் குப்பியைச் சிறுவர்களும் சிறுமியர்களும் விரும்பித் தின்பார்கள் . மிகவும்
குளிர்ச்சியானவை. இந்தச் கிழங்கை மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். “ஏழைகளின்
தங்கப்பஸ்பம்” என்று அழைக்கப்படுகிறது.
22
வகையைச் சார்ந்தது. மற்றவை அனைத்தும் கொடி இனமாகும். பாசிப்பயரிலும், நரிப்பயரிலும்
புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இந்த இரண்டு வகைப்பயிரிலும் “புட்டு” செய்து உண்பது சிறப்பு.
இவைகளைக் கொண்டு “பயறு பணியாரம்” செய்து உண்பர். இதே போன்;று உளுந்தில்”புரதச்சத்தும்,
நுண்ணூட்டச் சத்தும் மிகுதியாக இருக்கின்றன”. இந்த உளுந்து மருத்துவக் குணம் கொண்டது.
பெண்கள் பருவம் எய்திய ஒரு வாரகாலம் இந்த உளுந்தைக் கஞ்சியாக்கியும், களியாக்கியும் செய்து
கொடுக்கிறார்கள். “பழந்தமிழர்கள் பயிர் வகைகளாகிய சோளம், தினை, அவரை, கம்பு, எள்,
உளுந்து, ஆகியனவும் உணவில் சேர்த்தனர்”23 “மொச்சை” முற்றி நெற்றாக ஆனதும் கொட்டையைப்
பிரித்து எடுக்கிறார்கள். இதனை மொச்சைக் கொட்டை என்று அழைக்கிறார்கள். கருவாட்டுக்
கொதியில் சேர்த்திடும் போது இது மேலும் சுவை பெறுகிறது. “மக்காச்சோளம்” இம்மண்ணில்
ஆற்றுப்படுக்கைகளில் அதிகமாக விளைகின்றன. சோளக் கதிர்களை இளமுறுவலாக வறுத்து
மாவாக்கி சோளக்களி, சோளப்புட்டு, சோள அடை என்ற வகைப்பாட்டில் உணவாகக்
சொல்லப்படுகின்றது. “துவரைப் பருப்பைக் கொண்டு குழம்பு செய்கிறார்கள். துவரையிலும்
புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. தனிப் பருப்பாக வேக வைத்து நெய் சேர்த்து உண்பது உண்டு.
அனைத்து வகை தானியங்களும் “குழாய்ப்புட்டாக” வடிவம் கொள்கின்றன. “சத்துமாவு உருண்டை”
பெரும்பாலும் பலவகை தானியங்களையும் ஒன்றாகக் கலந்து ஈடாக அரிசியையும் சேர்த்து
இளவறுவலாக வறுத்து அப்படியே மாவாக்கி விடுவார்கள் . இந்த மாவை நீண்ட தூரம் பயணிக்கும்
காலங்களில் எடுத்துச் சென்று உணவாக்க கொள்வார்கள். உழைக்கும் மக்கள் பயரை வறுத்து
உடைத்து “பயறுக்கஞ்சி” காய்ச்சினர். இந்தப் பயறுக்கஞ்சி இறப்புச் சடங்குகளில் பெரிதும் முன்
வைத்து வழிபடுகிறார்கள். இப்பயர்கள் அனைத்திலும் புரதச்சத்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்
தக்கது.
விழாக்கால உணவுகள்:
பழையோறு உண்ணுதல்:
23
வேளாண் வாழ்வில் உள்ள மக்கள் விடியல் பொழுதையும், அந்தி சாயும் பொழுதையும் வேளாண்
நிலங்களிலேயே தான் சந்திக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இருட்டு வாழ்க்கையையே
வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். இரவு நேரத்தில் தான் அவர்கள் சூடான உணவைத் தயாரித்து
உண்ண முடிந்ததது. இரவு சாப்பிட்டது போக மீதச் சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துக்
கொள்வார்கள். மறுநாள் காலையில் இச்சோறு “பழைய சோறாக” இருக்கும். வேலைக்குப் புறப்படும்
போது அச்சோற்று நீரை வடித்துச் சிறிது உப்பு கலந்து அருந்திச் செல்வார்கள் அந்தப் பழைய சோற்று
நீர் அவர்களுக்குத் தெம்பைக் கொடுததது. மீதச் சோற்றை பெண்கள் வேலைத் தலைப்புக்கு
எடுத்துச் செல்வார்கள். வயல்வரப்புகளில் அச்சோற்றை கும்பாக்களிலோ, தூக்குகளிலோ வைத்துக்
கொண்டு சாப்பிடுவது எளிதாகியது. இந்தப் பழைய சோறு அவர்களுக்கு மிகச் சிறந்த உணவாக
இருந்தது. பிராமணர்கள் காலையில் செய்து கொள்ளும் சுடு சோற்றில் எஞ்சியதில் நீர் ஊற்றி வைத்து
முன் இரவில் அந்தப் பழைய சோற்றை சிறந்த உணவாகக் கொள்கிறார்கள் என்பது தான்
தனித்தன்மையாக இருக்கிறது. நிலவுடைமையாளர்களும் பழையசோற்று நீருக்கென்று தனித்தே
மண்பானையில் சோறு ஆக்கி இளஞ்சூட்டுப் பக்குவத்தில் நீர் ஊற்றி, மூடி வைத்து விடுவார்கள்.
அப்படித் தனித்து வடித்து வைத்துப் பழைய சோறாகப் பயன்படுத்தும் அச்சோற்றை நான்கைந்து
நாட்கள் வரையிலும் வைத்துக் கொள்கிறார்கள்.
புலால் உணவுகள்:
24
உயிரணுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. “பண்டைய தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம்
பரவியிருந்தது. வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், நண்டு, நத்தை, கோழி, காடை மீன், உடும்பு
முதலியவற்றினைச் சமைத்து உண்டனர். ஊன் என்பது பிறகாலத்தில் புலவு என்று வழங்கப்பட்டது.”26
துணை உணவுகள்:
கள் அருந்துதல்:
25
“கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழக்கத்தில் மிகவும் விரிவாகப் பரவியிருந்தது. இயற்கையாகக்
கிடைக்கும் தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், புளித்த சோற்றுக்கள் முதலியவற்றை
விருப்பத்துடன் குடித்தனர்.”29 கள்ளுக்குப் பணம் கொடுப்பதை விட நெல்லாகவோ, பயறு
வகைகளாகவோ ஈடுகொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த மூன்று மரங்களிலும் இருந்து கள்ளை
வடித்து இறக்கிடுவோர் சாதிப்படிநிலையில் ஒன்றாக இருக்கவில்லை. தென்னை மரக்கள்ளை
வடிப்பவர்கள் இம்மண்ணின் பூர்விக இனத்தவராக இருந்தார்கள். பனை மரத்தில் இருந்தும், ஈச்ச
மரத்தில் இருந்தும் கள்ளை வடிப்பவர்கள் இவ்வண்டல் மண்ணுக்கு குடிபுகுந்தவர்களாக இருக்க
வேண்டும் என்று அறிய முடிகிறது.
தொகுப்புரை:
குறிப்புகள்:
6. மேலது ப-176.
7. மேலது ப-142.
26
12. வள்ளலார், திருவருட்பா, ப-15.
27
இயல் - 3
வேளாண்மையின் இன்றைய நிலை
28
விளைவிக்கும் நெல்லில் மனித நலவாழ்வைப் பறித்திடும் ‘நஞ்சு’ இருப்பதை அவர்கள் உணர்ந்தே
இருக்கிறார்கள். இருந்தாலும், அதைப் போக்கிடும் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. மக்களைச்
சுரண்டிக் கொழுக்கும் மருந்து நிறுவனங்களை வளம் பெறச் செய்வதில் மிகுந்த அக்கறை எடுத்துக்
கொள்பவைதானே இந்தப் பன்னாட்:டு பகாசுர நிறுவனங்கள். நவீனத்துவம் நமது உணவு முறையின்
பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் அழித்து விட்டது என்றே கூற வேண்டும். இன்’றைக்கு
முப்பத்தைந்து வயதைக் கடந்த பெரும்பாலானவர்கள், தின்னும் உணவுக்குச் செலவழிக்கும்
செலவை விட இரண்டு பங்கு மருந்து மாத்திரைகளுக்குச் செல செய்திடுகிறார்கள்.
மான்சாண்ட்டோ ஒப்பந்தம்:
விவசாயிகள் தற்கொலை:
என்று திருவள்ளுவரும்,
29
என்பதை எளிதில் விளக்கிக் கொள்ள முடிn யும். “1980-ல் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்
தொடங்கப்பட்டது. உழவுத் தொழிலின் வளர்ச்சியே இத்திட்டத்தின் சீரிய நோக்கமாகக்
கொள்ளப்பட்டன. இத்திட்டத்தின் பயனாய் தமிழ்நாட்டில் உழவுத் தொழில் பல முனைகளிலும்
வளர்ச்சியுற்று வந்துள்ளது”8 உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கான விலையைத் தீர்மானிப்பது
அரசின் கையில் இருக்கிறது. குண்டூசியைத் தயாரிக்கும் முதலாளிகள் அதன் விலையையும்
தீர்மானிக்கின்றார்கள். ஆனால், முதலீடு செய்து கடும் வறட்சியிலும், வெள்ளப் பெருக்கினாலும்
தங்களை உட்படுத்திக் கொண்டு உற்பத்தி செய்திடும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த
விளைபொருளுக்கு விலையைத் தீர்மானிக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றார்கள் . இப்படியான
நிலைமைகளைச் சமாளிக்க முடியமால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் ”
ஒவ்வொரு பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி இந்தியாவில் தற்கொலை செய்து
கொள்கிறான்”9 இன்றைக்கு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு
இருப்பதை இந்த முதலாளித்துவச் செய்தி நிறுவனங்களே வெளியிட்டு வருவதை நாம் பார்த்தும்
படித்தும் வருகிறோம். ‘ஓர் ஆய்வறிக்கை சொல்லும் தகவலின் படி1997 முதல் 2011 வரை
இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,14,500 பேர்.”10
உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் வாழ்வில் நாளும் எதிர்மறையான விளைவுகளைத் தான்
சந்திக்க வேண்டியிருக்கிறது. விவசாயம் எந்திரமயமாகி வருவதால் மனித உழைப்புச் சுருங்கி
வருகிறது. விவசாயத் தொழிலாளிகள் நிலத்தை விட்டு வெளியேறுவது அதிகரித்துக் கொண்டே
உள்ளது. விளைபொருட்களுக்குச் சரியான விலை கிடைக்கததால் விவசாயிகள் கடன்பட்டு நிலத்தை
விற்று விட்டு வெளியேறும் நிலை அதிகரித்து வருகிறது. “விவசாயி பாவம் தங்கத்துல
தார்க்குச்சியும், வைரத்துல கலப்பையும் வாங்கியா கடன் படுகிறான்? வானமும் பூமியும் எப்பப்போ
ஏய்க்குதோ அப்பப்பக் கடன் படுகிறான்”11
விவசாயிகள் போராட்டம்:
30
“விவசாயிகள் இல்லை என்றால் நம் நாட்டில் வேளாண்மையே இருந்திருக்காது. விவசாயிகள்
பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். விவசாயத்தை நம்பி ஏராளமான
குடும்பங்கள் இருக்கின்றன.”17
தொகுப்புரை:
31
குறிப்புகள்:
ஆய்வு நிறைவுரை
32
இவ்வாய்விற்கு முதன்மை ஆதாரமாக அமைந்த “வண்டல் உணவுகள்” நூலில் அமைந்துள்ள
செய்திகள் இயல்வாரியாகத் தொகுக்கப்பட்டு இங்கு கூறப்பட்டுள்ளது.
துணைநூற்பட்டியல்
முதன்மை ஆதாரம்
பாவை பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.மு.ப.-2014
துணை ஆதாரங்கள்
மு.ப.1974.
சென்னை மு.ப.2007.
33
3. இராமசந்திரன், கோ, - தமிழனமே மூத்த இனம் தமிழே
முதன்மொழி,
பாவை பப்ளிகேஷன்ஸ்,
சென்னை, மு.ப.-2013
சென்னை
மு.ப.2005.
7. சிவசுப்பிரமணியன்,எம்.,(உ.ஆ)- திருக்குறள்,
சிவகாசி.மு.ப.2013.
அகப்பொருள் விளக்கம்,
கதிர் பதிப்பகம்,
திருவையாறு,
மு.ப.-2010
காவ்யா வெளியீடு,
சென்னை.
34
10. பிள்ளை,கே.கே., - தமிழக வரலாறு மக்களும்
பண்பாடும்,
ஸ்ரீவெங்கடேஸ்வரா பிரிண்டர்ஸ்,
சென்னை.மு.ப.-2011.
மு.ப.2003.
குமரன் பதிப்பகம்,
சென்னை,
மு.ப.-2007.
தாகம் பதிப்பகம்,
சென்னை,
இ.ப.-2003.
என்.சி.பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
சென்னை.
35
16. வைரமுத்து - வைரமுத்து கவிதைகள்,
சூர்யா வெளியீடு,
சென்னை.
சென்னை,
மு.ப.2012.
ஆராய்ச்சிக் கட்டுரை:
36