You are on page 1of 12

ஜமதக் கினி

சமதக்கினி (Jamadagni)
சமக்கிருதம்: जमदग्नि), இந்து
தொன்மவியலின் படி சப்த ரிசிகளில்
ஒருவரும், விஷ்ணுவின் ஆறாவது
அவதாரமான பரசுராமரின்
தந்தையும், ரேணுகாவின் கணவரும்
ஆவார்.[1] சமதக்கினி முனிவரின்
ஐந்து மகன்கள் வசு, விசுவா வசு,
பிருகத்யானு, பிருத்வான்கண்வர்
மற்றும் இராமபத்திரன் எனும்
பரசுராமர் ஆவர்.

இளமை
ஜமதக்கினி
பிருகுவின் தகவல்
வழித்தோன்றலா துணைவர்(கள்)
ன சமதக்கினி பிள்ளைகள் வசு,
முனிவர், ரிசிக பிரு
முனிவருக்கும், பிரு
மன்னர் மற்று
காதியின் மகள் இரா
சத்தியவதிக்கும் எனு
பிறந்தவர்.[2]
சமதக்கினி என்பதற்கு நெருப்பு என
பொருள்படும். வேதமனைத்தும் கற்ற
சமதக்கினி, பிரசினசித்து என்ற
சூரிய குல மன்னர் மகளான
ரேணுகாவை மணந்து, வசு, விசுவா
வசு, பிருகத்யானு,
பிருத்வான்கண்வர் மற்றும்
பரசுராமர் ஆகிய ஐந்து
குழந்தைகளின் தந்தையானார்.[2][3][4]

ரேணுகாவை கொல் லுதல்


ரேணுகா தன் பதிபக்தியின்
மேன்மையால், நாள்தோறும் பச்சைக்
களிமண் பானையில் ஆற்று நீரை
எடுத்து வருவாள்.

ஒரு நாள் ஆற்றுக்குச் சென்று


களிமண் பானையில் நீர்
எடுக்கையில், வானத்தில் தேரில் ஏறி
வந்த அழகிய கந்தவர்களைக் கண்டு
சில நொடிப் பொழுது வரை
மயங்கினாள். இதனால் அவளது
கற்புக்குக் களங்கம் ஏற்பட்டதால்,
பச்சைக் களிமண் உடைந்தது.
எனவே வீட்டிற்கு திரும்பாமல்
ஆற்றங்கரையிலே சமதக்கினி
முனிவரின் வருகைக்காகக்
காத்திருந்தாள்.

ஆற்றங்கரையில் நடந்த
நிகழ்வுகளை ஞானக்கண்ணால்
உணர்ந்து, கோபமுற்ற சமதக்கினி
முனிவர், ரேணுகாவை வெட்டிக்
கொல்ல தன் மூத்த மகன்களுக்கு
ஆணையிட்டார். அவர்கள் மறுக்கவே,
அவர்களைக் கல்லாகப் போகும்படி
சபித்தார். தன் கடைசி மகன்
பரசுராமர் முன்வந்து, தந்தையின்
ஆணைக்கிணங்க, தனது தாயைக்
கோடாரியால் வெட்டித் தலையைத்
துண்டித்தார்.

பின்னர் அமைதியடைந்த
சமதக்கினி, பரசுராமருக்கு வழங்கிய
வரங்களின் படி ரேணுகாவின்
துண்டிக்கப்பட்ட தலை, உடலுடன்
இணைந்து உயிர் பெற்றாள்.
கல்லான மூத்த சகோதர்கள் மீண்டும்
உயிர் பெற்றனர்.
இறப் பு
ஒரு முறை ஆயிரம் கரங்கள்
கொண்ட ஏயேய நாட்டு மன்னர்
கார்த்தவீரிய அருச்சுனன்,
சமதக்கினி முனிவரின்
ஆசிரமத்திற்கு வந்தார். சமதக்கினி
வளர்த்துக் கொண்டிருந்த
காமதேனுவின் மகளான சபலை
எனும் தெய்வீகப் பசுவவை
கார்த்தவீரிய அருச்சுனன் கேட்டார்.
தர மறுக்கவே, சமதக்கினி
முனிவரிடமிருந்து வலுக்கட்டாயமாக
சபலை பசுவை கவர்ந்து சென்றான்.
இச்செய்தியை சமதக்கினி முனிவர்
பரசுராமரிடம் தெரிவித்தார்.
கோபமுற்ற பரசுராமர் கார்த்தவீரிய
அருச்சுனனை தனது கோடாரியால்
தலையைத் துண்டித்தார். பழிக்குப்
பழியாக கார்த்தவீரிய அருச்சனனின்
மூன்று மகன்கள், பரசுராமர்
ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில்,
சமதக்கினி முனிவரைக்
கொன்றனர். இதனால் கோபமுற்ற
பரசுராமர், சத்திரிய மன்னர்களின் 21
தலைமுறையினரின் தலைகளைத்
தனது கோடாரியால் சீவிக்
கொல்வதாக சபதமெடுத்தார்.
மேற் கோள் கள்
1. Avalon, Arthur (Sir John Woodroffe)
(1913, reprint 1972) (tr.) Tantra of the
Great Liberation (Mahāanirvāna
Tantra), New York: Dover Publications,
ISBN 0-486-20150-3, p. xli: The Rishi
are seers who know, and by their
knowledge are the makers of shastra
and "see" all mantras. The word comes
from the root rish Rishati-prāpnoti
sarvvang mantrang jnānena pashyati
sangsārapārangvā, etc. The seven
great Rishi or saptarshi of the first
manvantara are Marichi, Atri, Angiras,
Pulaha, Kratu, Pulastya, and
Vashishtha. In other manvantara there
are other sapta-rshi. In the present
manvantara the seven are Kashyapa,
Atri, Vashishtha, Vishvamitra,
Gautama, Jamdagnini, Bharadvaja. To
the Rishi the Vedas were revealed.
Vyasa taught the Rigveda so revealed
to Paila, the Yajurveda to
Vaishampayana, the Samaveda to
Jaimini, Atharvaveda to Samantu, and
Itihasa and Purana to Suta. The three
chief classes of Rishi are the
Brahmarshi, born of the mind of
Brahma, the Devarshi of lower rank,
and Rajarshi or Kings who became
Rishis through their knowledge and
austerities, such as Janaka, Ritaparna,
etc. Thc Shrutarshi are makers of
Shastras, as Sushruta. The Kandarshi
are of the Karmakanda, such as
Jaimini.

2. Subodh Kapoor (2004). A Dictionary of


Hinduism: Including Its Mythology,
Religion, History, Literature, and
Pantheon (http://books.google.com/b
ooks?id=HJ6O8nwsFWgC&pg=PA18
5) . Cosmo Publications. பக். 185–.
பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:978-81-7755-874-6.
http://books.google.com/books?
id=HJ6O8nwsFWgC&pg=PA185 .

3. George Mason Williams (2003).


Handbook of Hindu Mythology (http://
books.google.com/books?id=SzLTWo
w0EgwC&pg=PA160) . ABC-CLIO.
பக். 160-161. பன்னாட்டுத்
தரப்புத்தக எண்:978-1-57607-106-
9. http://books.google.com/books?
id=SzLTWow0EgwC&pg=PA160 .

4. Yves Bonnefoy; Wendy Doniger (1993).


Asian Mythologies (http://books.googl
e.com/books?id=r4I-FsZCzJEC&pg=PA
83) . University of Chicago Press.
பக். 82-83. பன்னாட்டுத்
தரப்புத்தக எண்:978-0-226-06456-
7. http://books.google.com/books?
id=r4I-FsZCzJEC&pg=PA83 .

"https://ta.wikipedia.org/w/index.php?
title=ஜமதக்கினி&oldid=3723077" இலிருந்து
மீள்விக்கப்பட்டது

இப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2023,


22:27 மணிக்குத் திருத்தினோம். •
வேறுவகையாகக்
குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி
இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ்
கிடைக்கும்.

You might also like