You are on page 1of 2

என் உயிர் நாடியே!

தினம் தேடுகிறேன் உங்கள் அன்பை..

தினம் தேடுகிறேன் உங்கள் கோபத்தை..

தினம் தேடுகிறேன் உங்கள் குரலை..

தினம் தேடுகிறேன் உங்கள் நிழலை..

சன்னலோரம் அமர்கின்றேன்!!

உன்னைப் பற்றின ஓரிரு வரி எழுத..

கண்கள் குளமாக மையுடன் என் கண்ணிரூம் கலக்க..

தேடுகிறேன் வரிகளை..எழுதுகிறேன் நடுக்கத்தில்..

தோள் தேடிய காலத்தில்

தலை சாய இடம் கொடுத்தவள் நீ-


நான் தலை குனிந்து நிற்கையில்

என்னை தலை நிமிரச் செய்தவள் நீ..

சுகங்களைச் சுமக்கையில்
என் சுமைகளைச் சுமந்தவள் நீ

எனக்கோ நீர் சுமைத்தாங்கி..


உமக்கோ நான் வாழ்நாள் விருது

உன்னைக் கட்டியணைக்க பழகியதில்லை- உன்னால்

கற்றுத் தர பழகியுள்ளேன்..

உன்னை முத்தமிட்டுப் பழகியதில்லை - உன்னால்

முத்துச் சிரிப்பைப் பழகியுள்ளேன்...


யாரோ கேட்டார்

அப்பா இல்லையா என்று!!

கத்திச் சிரித்தேன்..

நீ என் சிந்தையில் சட்டென உதித்தபோது...

என் வாழ்வை நினைத்துப் பார்த்தால்..

நித்தமும் சொர்க்கமாய் தெரிகின்றது உன்னால்,


ஏனோ வயதாகின்றது உமக்கு என நினைத்துத்

திரும்பிப் பார்க்கின்றேன்..

அந்தக் குழந்தை சிரிப்பு, கேலி கிண்டல்,

உறுதியான பேச்சு,

உண்மையான பாசத்தைக் - கண்டேன்..

எனக்கு வயதாகின்றது- என மனதைத் தேற்றிக் கொண்டேன்!!!

காலம் கொடுத்த அனுபவங்கள் எண்ணிலடங்கா..

சிலவற்றைப் பார்த்தேன் உன்னுடன் சேர்ந்து..

நடுங்கினேன்..

நீர் அனுபவித்தாய்.. அக்னிச் சிறகானாய்!

இப்பொழுதும் சொல்கின்றேன்!!

என்னுள் உன்னை தேடுகிறேன் தினமும்..


வரம் கேட்கும் பலம் கிடைத்தால்

என்னுள் உன்னை கேட்பேன்..

உன்னால் நான்...

இராஜேஸ்வரி சிவக்குமார்.

You might also like