இன்று பள்ளி முதல் நாள். திவ்யா பள்ளிக்குச் செல்லத்
தயாரானாள். திவ்யாவின் தகப்பனாரும் தாயாரும் அவளுடன் பள்ளிக்குப் புறப்பட்டனர். அங்கே ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் திரளாகக் கூடியிருந்தனர். திவ்யா தன் நண்பர்களைக் கண்டு நலம் விசாரித்தாள். பள்ளி மணி ஒலித்தது. மாணவர்கள் சபைக்கூடலுக்குச் சென்றனர். தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.