You are on page 1of 22

FAKULTI

FACULTY OF EDUCATION AND LANGUAGES

TAKE HOME EXAMINATION

KOD KURSUS
HBTL 4403

TAJUK KURSUS
KESUSASTERAAN TAMIL IV

NO. MATRIKULASI : 850608065146001

NO. KAD PENGNEALAN : 850608065146

NO. TELEFON : 019-9481074

E-MEL : kaaviakanaga@gmail.com

PUSAT PEMBELAJARAN : Pusat Pembelajaran Temerloh


BAHAGIAN A

கேள்வி 1 (அ)

தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில்


ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980 இல் "நிழல்கள்"
திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன்
முதலில் இயற்றினார். இவருடைய தமிழுக்கு அடிமைகல் தான் இன்று அதிகமானோர்.
தன்னுடைய வசனத்தாலும் உரைவீச்சினாலும் வாளைவிடவும் மிகவும் கூர்மையான
வார்த்தைகளைக் கொண்டு இன்று போரிட்டு வென்றவர் கவிப்பேரரசு வைரமுத்து என்றால்
மிகையாகாது. சிறியோர் முதம் மூப்பினர் வரையிலும் தன்னுடைய பாடல் வரிகளாலும்
கவிதையின் ஆளுமையினாலும் மிகவும் புகழ்ந்து போற்றிப் பேசப்படுபவர் கவிப்பேரரசு
வைரமுத்து. வடுகப்பட்டி ஈன்ற வரலாற்றுக் கவிஞனாக இன்றைக்கு உலா வருகின்றார்
கவிப்பேரரசு. அனைத்து விதமான பாடுபொருளையும் கொண்டு பாடுவதில் கண்ணதாசனுக்கு
அடுத்து வைரமுத்து தான் என்றைய பெயரும் இவருக்குண்டு. மொழித் தொடக்கம் உயிர்
புகுந்து, மானுடம் அறிந்து, அரசியல் பேசி, இயற்கை நுகர்ந்து செல்லும் இவருடைய
கவிதைகள் என்பது யாவரும் அறிந்ததே. இவருடைய 'விலங்கு' என்ற கவிதையின் வாயிலாக
மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான வேற்றுமைகளை இங்கே காணலாம்.
கவிதையின் முதல் கண்ணியிலேயே வணக்கத்தை வைக்கின்றார் கவிஞர். வணக்கத்தை
மனிதருக்கு வைக்காமல் குரங்கிற்கு வைக்கின்றார் கவிஞர். குரங்குதான் நம்முடைய
மூதாதையர்கள் என்றும் அவர்களை வணங்குவதே மேல் என்றும் சொல்கின்றார். மனிதனுக்குக்
குரங்கினைக் காட்டிலும் வேறு நல்ல ஆசான்கள் இருக்கப்போவதுமில்லை; அதனால்
குரங்கினை வணங்குவதே மேல் என்றும் குறிப்பிடுகின்றார் கவிப்பேரரசு.
விலங்குகளுக்கும் மனிதனுக்குமான வேறுபாட்டினை 'மானம்' என்ற நிலையில் கவிஞர்
வேறுபடுத்திக் காட்டுகின்றார். மனிதனைக் காட்டிலும் மிருகங்கள் மானமுள்ளவைகள்.
யானையின் காலில் இன்னொரு யானை வந்து விழுந்ததில்லை; பூனைக்கு எலிகள் பல்லக்குச்
சுமந்ததில்லை; கரடிக்கு மான்கள் கால் பிடித்துவிடுவதில்லை என்று கூறுகின்றார். மனிதனுக்கு
மனிதன் இதனை எல்லாம் செய்கின்றான் என்பதனை வேறுபடுத்திக் காட்டுகின்றார். மேலுமாக,
விலங்குகள் எப்போதும் சுதந்திரமகவே இருக்கத்தான் விரும்புகின்றன. தன்னுடைய சுதந்திரம்
பறிப்போகும் நிலையில் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்கின்றன. மனிதனைப்
போல் அவை இரண்டுங்கெட்டான் வாழ்க்கையை ஒருபோதும் வாழ்வதில்லை என்பதனைக்
குறிப்பிடுகின்றார் கவிஞர்.
மிருகங்களுக்கிடையே மூடப்பழக்கவழக்கங்களோ நம்பிக்கைகளோ
இல்லையென்பதனைக் காட்டுகின்றார் கவிஞர். என்னாதான் நெருப்புக்கோழி என்ற பெயரைக்
கொண்டிருந்தாலும் அவை தீக்குழி இறங்குவதில்லை என்று மனிதர்கள் செய்யும்
முட்டாள்தனமான நம்பிக்கையை முடிச்சவிழ்த்துக் காட்டுகின்றார் கவிஞர்.
மிருகங்களுக்கிடையே சமயப் பேதமேதுமில்லை என்றும் குறிப்பிடுகின்றார்.
மனிதனை மிருகத்தினிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் மிருக இனத்தில்
ஆண் தான் மிகவும் அழகினை உடையதென்பதனைக் குறிப்பிடுகின்றார். இதனை விளக்க
அழகிய கொம்புகளைக் கொண்ட கலைமான், தந்தங்களைக் கொண்ட களிறு, அழகிய
தோகையினையுடைய ஆண் மயில், வளைந்த கொண்டையுடைய சேவல் என்றெல்லாம்
குறிப்பிடுகின்றார் கவிஞர். இவை அனைத்தும் காட்டில் வாழும் ஆண் மிருகங்களிடம் தான்
காண முடியும் என்பதனைக் சுட்டுகின்றார் கவிஞர். மனித இனத்தில் பெண்களை மட்டுமே
அழகென்று சித்தரிக்கும் தன்மையை இங்கே சுட்டுகின்றார். ஆனால், காட்டில்
ஆண்களுக்குத்தான் மரியாதையும் மீட்சியும் என்றும் புகழுகின்றார்.
கலையானது மனிதனுக்குத் தான் சொந்தம் என்றும் கர்வம் கொள்ளுதல் வேண்டாம்
என்றும் கூறுகின்றார் கவிஞர். பூமியின் மூலவேராகத் தோன்றியது காற்றின் பாடல்தான்.
அந்தக் காற்றின் பாடலை அடுத்து அலையின் பாடல். பிறகுதான் குயிலின் பாடலும்
இசையும். குயிலைப் பார்த்துத்தான் மனிதன் பாட ஆரம்பித்தான். அதனால், முதலில்
குயிலுக்குக் குரு வணக்கம் செய்த பிறகுதான் பிற குருவை வணங்க வேண்டுமென்கின்றார்
கவிஞர்.
மனிதனின் இறப்புக்கும் மிருகங்களின் இறப்புக்கும் உள்ள வேறுபாட்டினைக்
காட்டுகின்றார் கவிஞர். மனிதன் இறந்து போனால், கொழுப்பினைக் கொண்டு ஏழு
சோப்புகளையும், கரியைக் கொண்டு ஒன்பதாயிரம் பென்சில்களையும், இரும்பினைக் கொண்டு
ஒரேயொரு ஆணியை மட்டுமே செய்ய முடியும். ஆனால், மிருகங்கள் இறந்து போனால்
என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதனைக் குறிப்பிடுகின்றார். அவை இறந்தாலும் நூறு
கோடி என்கின்றார்; புலியின் நகம், புறாவின் இறகு, பாம்பின் தோல், காண்டாமிருகக்
கொம்பு, மாட்டுத் தோல் என்று அடுக்கிக் கொண்டே போகின்றார் கவிஞர். இம்மிருகங்கள்
இறந்தாலும் விலை மதிப்பற்ற நிலையிலேயே இருக்கும் ஆனால் மனிதனோ அவ்வாறில்லை
என்பதனை இங்கே குறிப்பிடுகின்றார் கவிஞர்.
கடவுளுக்குச் சேவகம் செய்ய உதவும் மிருகங்களை மனிதனோடு வேறுபடுத்தியும்
காட்டுகின்றார் கவிஞர். கடவுள்களைச் சுமந்து செல்வதில் வாகனங்களாகச் செயல்படுவதில்
காளை, மயில், எலி, கருடன் என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால், எந்தவொரு
கடவுளையும் மனிதன் சுமந்து செல்லும் வாகனமாக இல்லாதிருப்பதனைக் காடுட்கின்றார்
கவிஞர். கடவுளை மனிதன் சுமக்கச் சொன்னால் கடவுளையும் மனிதன் களவாடிவிடுவான்
என்கின்றார் கவிஞர். மனிதன் கடவுளை நம்பும் அளவுக்கு எந்தக் கடவுளும் மனிதனை
நம்புவதில்லை என்ற கூற்றினையும் இங்கே தெளிவுப்படுத்துகின்றார் கவிப்பேரரசு வைரமுத்து.
இறுதியாக, சில ஆலோசனைகளை முன்வைத்துக் கவிஞர் இக்கவிதையை நிறைவுக்குக்
கொண்டுவருகின்றார், மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றி மிருகத்தோடு இணைந்து
இருக்கும்படியாகக் கூறுகின்றார். ஐந்தறிவினை மட்டுமே கொண்டுள்ள மிருகமாக இருந்தாலும்
இவை அன்புக்கு ஏங்குகின்றதென்றும் இதனை அன்பாய் ஏற்று நேசிக்கும்படியாகவும் கேட்டுக்
கொள்கின்றார் கவிஞர் அவர்கள். மிருகங்களுக்கென்று சட்டமன்றங்களிலேயும் குரல் கொடுக்க
வேண்டுமாகக் கேட்டுக் கொள்கின்றார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

கேள்வி 1 (ஆ)

இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர்


பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர். இந்தப்
புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும்
இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும்
தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள்.
ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார். பொதுவாக
திரைப்படப் பாடல்கள் காலத்தால் வென்று நிலைத்து நிற்கக் கூடிய ஆற்றல் உள்ளவை
அல்ல. புதிய பாடல்கள் பிறக்கப் பிறக்கப் பழைய பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு
மறக்கப்படும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது
அனுபவமும், கவிதை நயமும் தான் காரணம் ஆகும். கவியரசர் கண்ணதாசன் தான்
வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த சம்பவங்களை, காதல், ஏமாற்றத்தை, வேதனையை,
சோதனையை, பக்தியை அப்படியே பாட்டாக வடித்தார். அது அவரது வாழ்க்கை மட்டுமல்ல.
ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையாகவும் இருந்ததால் தமிழ் மக்களின் மனதில் சட்டென்று
பதிந்து விட்டது. காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல் சொல்ல அவரே மீண்டும்
பிறந்து வந்தால் தான் உண்டு. தனது மொழி ஆளுமையினாலும், கற்பனை நயத்தாலும்,
கருத்துச் செழுமையாலும், எளிய நடையினாலும் தனது இசைப் பாடல்களை காலத்தால்
அழியாத காவியங்களாக்கிவிட்டார் கவியரசர். எந்த ஒரு மனிதனும் தான் வாழ்க்கையில்
செய்துவிட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். கூறவும் மாட்டான். ஆனால் கவியரசரோ
ஒழிவு மறைவின்றி தனது திரையிசைப் பாடல்கள் வாயிலாகவும் பிற படைப்புகளின்
வாயிலாகவும் தனது தவறுகளையும் உண்மைகளையும் தெரிவித்திருக்கின்றார். மேலும் தமிழக
சட்டசபையில் அரசவைக் கவிஞராக இருந்து புகழ் பெற்றவர் கவியரசர் கண்ணதாசன் என்பது
குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, தன்னுடைய மொழி ஆளுமையினாலும் கவித்திறத்தாலும்
இன்று வரையிலும் மக்கலின் மனத்தினில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பவர் கண்ணதாசன்
என்ரால் மிகையாகாது. அன்னாரின் கவிதைகளில் ஒன்றான 'அனவனைத் தூங்க விடுங்கள்'
என்ற கவிதையின் வாயிலாக அவர் உணர்த்த வரும் சமுதாய அவலங்களை இங்கே
காணலாம்.

இக்கவிதையின் முதல் கண்ணியிலே, தூங்கிக் கொண்டிருக்கும் ஆறே மாதங்கள்


நிரம்பிய குழந்தையை எழுப்ப வேண்டாமென்று கூறுகின்றார் கவிஞர். அதற்கான
காரணங்களையும் முன் வைக்கின்றார் அவர். அந்தக் குழந்தையானவன் கண் விழித்து இந்தப்
பூமியைப் பார்க்கும்போது அவனுக்கு எவ்விதத்தில் அடி விழுமோ, யாருடன் சேர்ந்து அல்லல்
படுவானோ, கூடா நட்பு வாய்த்து விடுமோ, காதல் வந்துவிடுமோ, அதனால் தடையும்
மோதலும் ஏற்படுமோ, இத்தகைய சூழலில் பின்னர் அவனால் தூங்க முடியாது; இப்போதே
தூங்க விடுங்கள் என்று கூறுகின்றார் கவிஞர். ஒரு மனிதனின் சமுதாய அவலங்களாகத்
தலைவிரித்தாடும் கூடா நட்பு, காதல் என்னும் சாபம், அதனால் ஏற்படும் தடை மற்றும்
மோதல், மற்றும் முறைகெட்டவரின் துணைகள் என்று அனைத்தையும் குறிப்பிடுகின்றார்
கவிஞர்.

தொடர்ச்சியாக, அந்தக் குழந்தையானவன் கண் விழித்தால் எதிர்படும் சமுதாய


அவலங்களைக் கூறுகின்றார் கவிஞர். அவன் பெரியவனானதும் நன்றியில்லாத
நனண்பர்களோடு நட்பு ஏற்படும், ஒழுக்கங்கெட்ட பெண் துணைவியாக வரலாம், படித்தும்
வேலையில்லாத் திண்டாட்டம், வேலையில்லாததால் உணவுக்காகப் பிச்சையெடுக்கும்படியாக
வெயிலில் அலைந்து திரிதல், என்று அந்தச் சூழலில் ஏற்பட்ட சமுதாய அவலங்களை
அப்படியே தத்ரூபமமாகக் கவிதையின் வாயிலாகக் குறிப்பிட்டார் கவிஞர். அந்தக்
காலக்கட்டத்தில் படித்தும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்
கொண்டேயிருந்தது. அநேகர் ஒருவேளை உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலைக்கும்
தள்ளப்பட்டார்கள். இதனையே இங்கு வலியுறுத்திக் காண்பிக்கின்றார் கவிஞர் அவர்கள்.
இத்தனையும் எதிர்காலத்தில் நடக்குமா நடக்காதா என்று தெரியாத நிலையில் அவனை
இப்போதே நிம்மதியாகத் தூங்க விடுங்கள் என்று கூறுகின்றார் கவிஞர்.

தொடர்ச்சியாக, அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனானதும், என்னத்தான்


சொல்வளத்தையும் பொருள்வளத்தையும் கொண்டிருந்தாலும், ஒரு நாட்டுக்கே தலைவனாக
இருந்தாலும், கேட்டவுடனேயே பொருள்கள் வந்து சேரும் அளவுக்கு வாய்ப்பும் வசதியும்
பெற்றிருந்தாலும், அவன் வீட்டுப் பஞ்சணையிலிருக்கும் மாட்டுக்குக் கூடத் தகுந்த மதிப்பும்
மரியாதையும் இருந்தாலும், பால் பழங்களை உண்டே வாழும் நல்வாய்ப்பும் நிலைமையும்
அமைந்தாலும் அவனுக்கு தூக்கம் பிடிக்காது; அதனால் அவனை இப்போதே தூங்கவிடுங்கள்
என்று கூறுகின்றார் கவிஞர். அரசவையில் நடக்கும் அவலங்களையும் தலைவர்கள்
நிம்மைதியில்லாமையால் இருக்கும் காட்சிகளையும் சமுதாய அவலங்களாகக் காட்டிப்
பேசுகின்றார் கவிஞர். இவ்வகையில் நாட்டின் நிலையையும் தலைவர்களின் நிம்மதியற்ற
அவலத்தையும் குறிக்கின்றார் கவிஞர் கண்ணதாசன்.

அடுத்த நிலையில், இப்பூமியிலே கொடுமைச் செய்யும் பாவிகள் நிறைந்து கிடக்கும்


சமுதாய அவலத்தைக் காட்டுகின்றார். கொடுமைகளை விரும்பிச் செய்யும் பாவிகள்
இருப்பதை அறியாமல் அக்குழந்தையானவன் தூங்குவதகாவும், தெய்வத்தின் காதினிலே
இரகசியங்களைப் பேசுவதாகவும் இனிமையான பாடலையும் அவன் பாடுவதாகவும்
குறிப்பிடுகின்றார் கண்ணதாசன். ஆகவே, தூய்மையான குணம் கொண்டவனும் கறைபடாத
வெள்ளிநிலா போன்ற பண்பானவனை எழுப்பாமல் தூங்க விடுங்கள் என்று கூறுகின்றார்.
அதன் வாயிலாகக் குழந்தையைத் தவிர இப்பூமியில் தூய்மையான குணத்தினையும் கறைபடாத
பண்பையும் கொண்டவர்கள் ஒருவரும் இல்லை என்ற சமுதாய அவலத்தைக்
காண்பிக்கின்றார் கண்ணதாசன்.

இறுதியாக, மக்களின் கூட்ட நெரிசலையும் எங்கேயும் தனிமையாகவும் நிம்மதியாகவும்


இருக்க முடியாத சூழலையும் சமுதாய அவலமாக முன் வைத்து அவனைத் தூங்க விடுங்கள்
என்று கூறுகின்றார் கவிஞர். நம்பிக்கையற்ற நிலை, ஏமாற்றம், நடுக்கம், பயம், கோபம்,
துன்பத்தால் அழுகை, பயத்தல வியர்த்தல், விறுவிறுத்தல், எரிச்சலடைதல், கொதித்தல்,
துடிதுடித்தல், போன்ற சோகங்கள் ஏற்படும் வாய்ப்புகள் சமுதயத்தில் அதிகமிருப்பதால்
அவனைத் தூங்க விடுங்கள் என்று கூறுகின்றார் கவிஞர். இப்பொழுதே நன்றாகத் தூங்கினால்
தான் இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ளும் மனநிலையை எதிர்காலத்தில் வளர்த்துக்
கொள்ள முடியும் என்றும் கூறி இக்காரியங்கள் நடப்பது உறுதி என்பதனை
நிச்சயப்படுத்துகின்றார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

இவ்வாறாக, 'அவனைத் தூங்கவிடுங்கள்' என்ற வேண்டுகோளை முன்வைத்து


அதற்கான காரணங்களையெல்லாம் சமுதாய அவலங்களாகக் காண்பித்துச் சமுதாயத்தில் ஒரு
குழந்தைக்கு நிகழப்போகும் அனைத்து உண்மைகளையும் போட்டுடைத்து குழந்தைப் பருவம்
மட்டுமே நிம்மதியான தூக்கத்திற்கான மனநிலையைக் கொண்டிருக்கும் பருவம் என்றும்
கோடிக்காட்டுகின்றார் கவிஞர் அவர்கள்.

கேள்வி 2 (அ)

'பொன் விலங்கு' என்ற நாவலில் வரும் துணைக்கதாப்பாத்திரம் தான் குமரப்பன் என்ற


கதாப்பாத்திரம். முக்கியக் கதாப்பாத்திரமான சத்யமூர்த்திக்கு நண்பனாக வரும் இந்தக்
கதாப்பத்திரம் சிறந்த நட்பின் இலக்கணத்தைக் காண்பிக்கும் வகையில் கதையின் நகர்ச்சி
இருக்கின்றது. 'குத்து விளக்கு' என்ற இதழின் கார்ட்டூனிஸ்டாக பணிப் புரியும் குமரப்பன்
தன்னுடைய நண்பன் சத்யமூர்த்திக்கு அனைத்து நிலைகளிலும் உதவும் நல்லுள்ளம்
படைத்தவனாகக் காட்டப்பெறுகின்றான். இயல்பாகவே கண்டித்துத் திருத்தும்
குணைத்தையுடைய குமரப்பன் அதிகமான நகச்சுவை உணர்வினையும் உடையவன் என்பது
வெள்ளிடைமலை.

குமரப்பனின் முக்கியமான குணாதொசயம் என்னவென்றால் உள்ளொன்று


வைத்துப் புறமொன்று பேசமாட்டான். தன்னுடைய மனத்தினில் ஒன்றனை வைத்துக்
கொண்டு போலியாக நடித்துப் பேசுவது குமரப்பனுக்குப் பிடிக்காத ஒரு காரியமாகும்.
யாரையும் பொய்யாகவோ அல்லது பாசாங்குக்காகவோ குமரப்பன் புகழ்வது கிடையாது;
அவனுக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அந்த வரிசையில் வரும் பொய்யான பக்தியின்
வேடத்தைப் போட்டுக் கொள்ளும் ஆசாமிகளையும் அவன் வெறுக்கின்றான்; சாடுகின்றான்.
உண்மைத்தன்மை மிகவும் முக்கியமான ஒன்று குமரப்பனிடம்.

சுயநலமற்ற அன்பைக் காட்டுவதில் குமரப்பன் மிகவும் சிறந்தவன். தன்மீது


தனக்கிருக்கும் அன்பினைப் போன்றே தன்னுடைய நண்பன் சத்யமூர்த்தியின் மீதும்
வைத்திருந்தான் அன்பை. மல்லிகைப் பந்தல் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராக வேலைக்
கிடைத்துப் போகும் தன்னுடைய நண்பன் சத்யமூர்த்தியைக் குறித்துப் பெருமைப்படுகின்றான்.
தன்னுடைய மற்ற நண்பர்களையும் அழைத்து உணவு விடுதியொன்றில் சத்யமூர்த்திக்காக
பிரியாவிடை விருந்து ஒன்றனை ஏற்பாடு செய்கின்றான் குமரப்பன். தன்னுடைய நண்பன்
இன்னும் மேலும் நிறைய படித்துப் பட்டங்கள் பெற்று வாழ்வில் சிறக்க வேண்டுமென்றும்
வாழ்த்துகின்றான். சத்யமூர்த்தியின் தனிப்பட்ட காரியங்கள் மீதும் அக்கறையுள்ளவனாக
இருந்தான் குமரப்பன். ஒரு கட்டத்தில் சத்யமூர்த்தி மோகினின் மீது சந்தேகங்கொள்கின்றான்.
அவ்வாறு சந்தேகங்கொள்ளக் கூடாதென்றும், மோகினி மிகவும் மனத்திடம் உள்ள பெண்
என்றும் கூறிப் புரிய வைத்துத் தன்னுடைய நண்பனைத் தைரியப்படுத்துகிறான் குமரப்பன்.

பிறரின் முகக்குறிப்பையறிந்து உணர்ந்து நடப்பவன் குமரப்பன். இதனைத்


தொடர்ந்து ஒரு நாள் தன்னுடய பத்திரிக்கைக்குப் பேட்டியெடுப்பதற்காகத் தன்னுடைய உதவி
ஆசிரியரோடு மோகினியிடம் செல்கின்றான் குமரப்பன். அங்கு தான் கேட்கும் கேள்விகள்
அனைத்துக்கும் அவளின் தாயார் முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் மட்டுமே பதில்களைக்
கூறி அவளைப் பேசவிடாது செய்வதனையும் காண்கின்றான் குமரப்பன். அவர்களின்
பதில்களுக்கு மாற்றுப் பதில்களையே மோகினி கொண்டிருப்பதனையும் அறிந்து
கொள்கின்றான் குமரப்பன். அதனைத் தெரிவிக்க தன்னுடைய நண்பனுக்குக் கடிதமொன்றினை
எழுதுகின்றான் குமரப்பன். கடிதத்தில் மோகினியின் இரண்டு படங்களையும் இணைத்து
அவளின் நிலையை விளக்குகின்றான். முத்தழகம்மாளிடமும் கண்ணாயிரத்திடமும் அவள்
சிக்கித் தவிக்கின்றாள் எனவும் குறிப்பிடுகின்றான். இருந்தபோதிலும் மிகவும் மனத்திடமான
பெண் என்பதனையும் அவளை நம்பும்படியாகவும் கூறுகின்றான்.

குமரப்பனுக்குத் தன்மானமும் அதிகமான தன்னம்பிக்கையும் உண்டு.


குமரப்பனுக்குத் தன்னம்பிக்கையும் உழைப்பும் முதலீடாக இருந்தது. தான் வேலைப் பார்த்து
வந்த 'குத்து விளக்கு; பத்திரிக்கையில் தன்னுடைய தன்மானத்துக்கு இழுக்கு நேர்ந்தபோது
அந்த வேலையை விட்டு இராஜினாமா செய்து கொண்டான் குமரப்பன். தன் நண்பன்
இருக்கும் இடத்துக்கு வந்தான். மல்லிகைப் பந்தலில் தன்னுடைய முழு உழைப்பையும்
தன்ன்மபிக்கையையும் காட்டி 'குமரப்பன் ஆர்ட்ஸ்' என்ற கடையைத் திறந்து தொழிலை
ஆரம்பிக்கின்றான் குமரப்பன்.

தன்னுடைய குற்றத்தை உணர்ந்து மன்னிப்பைக் கேட்கும் நேர்மையானவ்ன்


குமரப்பன். மோகினியிடமிருந்து தன்னுடைய நண்பன் சத்யமூர்த்திக்கு வந்த கடிதத்தைப்
பிரித்துப் படித்து விடுகின்றான் குமரப்பன். மோகினி சத்யமூர்த்தி இடையிலான அன்பும்
நேசமும் அவனுக்குப் புலப்படுகின்றது. இதனைத் தன்னுடைய நண்பன் சத்யமூர்த்தியிடம்
தெரிவித்துத் தன்னுடைய தவற்றுக்காக மன்னிப்பினைக் கேட்கின்றான் குமரப்பன். இருப்பினும்
சத்யமூர்த்தி நண்பனுடைய அந்தரங்க விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பது தப்பில்லை
என்று உணர்த்துகின்றான்.

தனக்குண்டானதைத் தானே பார்த்துக் கொள்ளும் மனநிலையை உடையவன்


குமரப்பன். தன்னுடைய வேலையை இராஜினாமா செய்தவுடன் உடனடியாகத் தன் நண்பன்
சத்யமூர்த்தியைத் தேடி மல்லிகைப் பந்தலுக்குச் சென்று அங்கு அவனோடு தங்கியிருந்தான்
குமரப்பன். அங்கு தஙியிருக்கும் வேளையில் தன்னுடைய நன்பனோடு அறையில்
இருந்தாலும் அதற்கான வாடகைப் பனத்தைக் கொடுத்துவிட்டான் குமரப்பன். சத்யமூர்த்தி
அதனைத் தடுத்த போதிலுனம் தன்னுடைய பங்கினைக் கொடுத்து விட்டு அமைதியானான்
குமரப்பன்.

இவ்வாறாக, குமரப்பன் நல்ல குணங்களையுடையவனாகவும், பிறருக்கு


உதவுபவனாகவும் நட்புக்கு இலக்கணத்தைக் காட்டுபவனாகவும் நாவலாசிரியர் அவனின்
பாத்திரப்படைப்பினை வடித்திருக்கின்றார் என்பதனை இங்கே காணலாம்.

கேள்வி 2 (ஆ)

ந. பார்த்தசாரதியின் 'பொன் விலங்கு' என்ற நாவலின் அடுத்த துணைக்கதாப்பத்திரமாக


வருவது கண்ணாயிரம் என்ற கதாப்பாத்திரம் தான். கதையின் முழுமையான நகர்ச்சிக்கும்
இந்தக் கதாப்பாத்திரம் துணையாக புடன் வருவதனைக் காண முடிகின்றது. ஆரம்பத்திலிருந்து
முடிவு வரையாக இந்தக் கதாபாத்திரத்தின் பாத்திரப் படைப்பை இந்நாவலில் நாம் காண
முடிகின்றது. மிகவும் யதார்த்தமான முறையில் ஒரு கதாப்பாத்திரத்தைச் சூழலுக்கேற்ப
உண்மையாக வடித்துக் காட்டியிருக்கின்றார் நாவலாசிரியர். அவ்வகையில் கண்ணாயிரம் என்ற
கதாப்பாத்திரத்தின் பாத்திரப் படைப்பினை இங்கே காணலாம்.

கண்ணாயிரம் என்ற கதாபாத்திரம் 'மூன் லைட்' என்ற விளம்பரக் கம்பெனியின்


நிர்வாகியாகக் காட்டப்படுகின்ரார். தனக்கென்று ஒரு தொழிலைக் கொண்டிருக்கும்
கண்ணாயிரம் தன் தொழிலை எப்படியாவது செய்து பணத்தை ஈட்டிவிட வேண்டும் என்ற
நோக்கிலேயே செயல்படுபவராகக் காட்டப்படுகின்றார். கண்ணாயிரத்துக்கு கண்கள்
ஆயிரமாமும் பணத்தின் மீதுதான். எப்படியாவது தன்னுடைய சேவையைக் கொடுத்துப்
பனத்தை ஈட்டிவிடுவதுதான் அவருடைய முக்கியக் குறிக்கோளாகும். இதனால் மதுரைச்
சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து முக்கியமான பெரிய நிறுவனத்தாருக்கும் கண்ணாயிரத்தை
நன்கு தெரிந்திருக்கும். அவருடைய விளம்பரப் படங்களும் பதாகைகளும் தான் அனைத்து
இடங்களிலும் காணப்படும். எப்படியாவது அனைவரிடமும் ஆர்டர் பெற்றுக் கொண்டு
வேலையை முடித்துக் கல்லாக் கட்டுவதிலேயே மிகவும் கவனமாக இருப்பவர் கண்ணாயிரம்.
பணத்தை ஈடுவதில் மிகவும் சமார்த்தியமான நபரும் கூட இவர்.

கண்ணாயிரத்தைப் பொறுத்தவரையில் ஈவு, இரக்கம், தயவு, கருணை போன்ற


குணங்களே தேவையில்லை; பணம் என்ற ஒன்று மற்றுமே வாழ்க்கைக்கு முக்கியம் என்ற
குறிக்கோளுடனே வாழ்பவரும் கூட. கண்ணாயிரத்தின் வாழ்க்கைத் தத்துவமே 'காசே தான்
கடவுளப்பா' என்பதுதான். இதனைக் கொண்டே அவர் மிகவும் திறமைசாலியாகப் பணத்தைச்
சம்பாதிக்கின்றார் என்று கண்ணாயிரத்தைப் புகழும் சில கூட்டமும் உண்டு. பணத்தைச்
சேர்ப்பதில் குறியாக இருந்த கண்ணாயிரம் பணத்தை அச்சடிக்கும் ஜமீந்தாரோடு சேர்ந்து
கைதும் செய்யப்பட்டார். பணம் அவரை விட்டபாடில்லை.

பண ஆசை மட்டுமல்ல பெண் ஆசையும் கூடவே ஒட்டிப் பிறந்தவர் தான்


கண்ணாயிரம். தனக்கிருக்கும் பெண் ஆசையைக் கொண்டும் பணத்தை ஈட்டிவிட
வேண்டுமென்பதுதான் அவருடைய எண்ணமும் கூட. தனக்குக் கிடைத்த கூந்தல் தைல
விளம்பரத்துக்காக மோகினியை வரவழைக்கின்ரார் கண்ணாயிரம். மோகினியைக் கொண்டு
கவர்ச்சியாக விளம்பரத்தை மட்டுமல்லாது இதர புகைப்படங்களையும் எடுத்து விற்றுச்
சம்பாதிக்கும் எண்ணமும் அவருக்கு வந்துவிடுகின்றது. அதனால், மோகினியை எதிர்பாத்துக்
காத்திருக்கின்றார் கண்ணாயிரம். அவருடைய வக்கிரப்புத்தியும் சேர்ந்து கொள்கின்றது.
மோகினியையும் அவளுடைய தாயாரான முத்தழகம்மாளையும் மதுரை இரயில்
நிலையத்திலிருந்து தன்னுடைய விளம்பரக் கம்பெனிக்கு அழைத்துச் செல்கின்றார்
கண்ணாயிரம். அங்கு தன்னுடைய ஸ்டூடியோவுக்குள் மோகினியை விடுகின்ரார். அவளை
எப்படியாவது தன்னுடைய வலையில் சிக்க வைத்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில்
அவளிடம் தன்னை நல்லவனாகவும் கரிசனை மற்றும் அக்கறையுடைய நபராகவும் காட்டிக்
கொள்கின்றான் கண்ணாயிரம். பிறகு, தான் வாங்கி வைந்திருந்த கவர்ச்சியான சேலை
ஒன்றினைக் கொடுத்து அணிந்து கொள்ளும்படியாக மோகினியைக் கேட்கின்றார்
கண்ணாயிரம். நிலையைச் சரியாக உனர்ந்து கொண்ட மோகினி கண்ணாயிரத்தின் வலையில்
சிக்கவே இல்லை; அந்தச் சேலையை அணிந்து கொண்டு காட்சிக் கொடுக்கவும் ஒத்துக்
கொள்ளவேயில்லை. அங்கே கண்ணாயிரத்துக்கும் முத்தழகம்மாளுக்கும் தொடர்பு
ஏற்படுகின்றது.

அத்தோடு தன்னுடைய கேவலமான வக்ரப் புத்தியை நிறுத்திக் கொள்வதாக இல்லை


கண்ணாயிரம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தன்னுடைய நண்பரான ஒரு தனவணிகரின்
திருமணத்து நிகழ்வில் மோகினியை நடனம் புரிய வைத்துச் சம்பாதித்துவிட வேண்டுமென்று
எண்ணுகின்றார் கண்ணாயிரம்; காயையும் நகர்த்துகின்றார். தன்னுடைய நண்பனான
தனவணிகரிடம் காரியத்தைக் கனக்கச்சிதமாகச் சொல்லிப் பணத்தையும் வாங்கிவிடுகின்றார்.
பிறகு, முத்தழகம்மாளைக் கொண்டு மோகினியை அசைக்கப் பார்க்கின்றார். நிறைய பணம்
கிடைக்கும் என்பதனை முத்தழகம்மாளிடம் போட்டு வைக்கின்றார் கண்ணாயிரம். பணப்
பேயான முத்தழகம்மாளோ மோகினியை வற்புறுத்தி அந்தத் தனவணிகரின் திருமன
நிகழ்வினில் ஆடும்படியாக உத்தரவிடுகின்றாள். கண்ணாயிரம் மற்றும் முத்தழகம்மாளின்
வற்புறுத்தலுக்கிணங்க மோகினியும் ஆடுகின்றாள்; பணத்தையெல்லாம் கண்ணாயிரமும்
முத்தழகம்மாளும் எடுத்துக் கொள்கின்றார்கள். அத்தோடு விடாமல், மோகினியைக் கொண்டு
நிறைய பணம் சம்பாதித்துவிடும் நோக்கத்தில் தனவணிகர் தயாரிக்கப்போகுக் சினிமாப்
படத்தில் மோகினியைக் கதாநாயகியாக்கும் திட்டத்தில் தனவணிகர் இருப்பதாக
முத்தழகம்மாளிடம் சொல்லி மோகினிக்குப் பண ஆசையை உண்டுபண்ணுகின்றார்
கண்ணாயிரம். கண்ணாயிரத்தின் எண்ணமோ வேறூ; மோகினியை ஆபாசப் படத்தில் நடிக்க
வைத்துப் பணம் பண்ணுவதுதான். எவ்வளவு வற்புறுத்தியும் மோகினி இம்முறை
முத்தழகம்மாளுக்கு வாய்ப்பினையே கொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் 'குத்து விளக்கு' என்ற இதழில் இருந்து மோகினியைப் பேட்டியடுக்க


வந்திருந்த குமரப்பனிடம் மோகினியின் வளர்ச்சிக்கு மஞ்சள்பட்டி ஜமீந்தார் தான் காரணம்
என்றும் அவளுடைய அனைத்துக் கலை உயர்வுக்கும் அவரின் உதவி மிகவும்
பயனளிக்கின்றது என்றும் கூறி வைத்தார் கண்ணாயிரம். மோகினி அதனை மறுத்தும்
முத்தழகம்மாளும் கண்ணாயிரம் இப்பொய்யான கூற்றினையே முன் வைத்தனர். காரணத்தோடு
தான் கண்ணாயிரம் அதனைச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனைவியை இழந்திருந்த
மஞ்சள் பட்டி ஜமீந்தார் மிகவும் பணக்காரரும் கூட. அதக்ச் சொத்துப் பத்துகளை எல்லாம்
வைத்திருந்தவருக்கு மோகினியை முடித்து வைத்தால் நல்ல இலாபம் ஈட்டலாம் என்பதனைக்
கருத்தில் கொண்டே இக்காரியத்தைச் செய்தார் கண்ணாயிரம்; ஜமீந்தார் மனதிலும்
மோகினியின் மீது ஆசையை வளர்க்கும்படியாகவும் செய்துவிட்டார். இவ்வாறாக, பனத்தைச்
சம்பாதிக்கும் நோக்கில் சில கேவலமான காரியங்களையும் செய்தார் கண்ணாயிரம்.

தன்னுடைய பணத்தைக் கொண்டு உலகத்தையும் வாங்கிவிடும் எண்ணம் கொண்டவர்


கண்ணாயிரம். சத்யமூர்த்தியின் தந்தையோடு நேசப்பான்மைய வளர்க்கும் பொருட்டுத்
தன்னுடைய பணத்தை உபயோகிக்கின்றார் கண்ணாயிரம். சத்யமூர்த்தியின் வீடு மாடி
இடிப்பையும் தானே பார்த்துக் கொண்டார். அத்தோடில்லாமல் அவனுடைய சகோதரியின்
திருமணத்துக்கும் ரூபாய் ஐயாயிரத்தையும் முன் வந்து கொடுத்துத் தன்னுடைய கொடைக்
குணத்தைக் காட்டினார் கண்ணாயிரம். காரணமில்லாமற் கண்ணாயிரம் காரியங்களைச்
செய்யவேயில்லை. சத்யமூர்த்தியின் தந்தையாருக்குக் கண்ணாயிரத்தை மிகவும் பிடித்துப்
போய்விட்டது. அவர்களுடைய குடும்பத்தில் தானும் ஓர் ஆளாக மாறிவிட்டார் கண்ணாயிரம்.
இதனால் குடும்ப விவகாரங்களிலும் தன்னுடய மூக்கை நுழைத்துக் கொண்டார் கண்ணாயிரம்.
மெதுவாகச் சத்யமூர்த்தியின் காதலைப் பற்றி அவனின் தந்தையிடம் ஊதினார் கண்ணாயிரம்.
இதனைக் கேட்டவுடன் பொங்கியெழுந்து சத்யமூர்த்தியின் மீது அவர் பாய்ந்தபோது
கண்ணாயிரமும் தன் பங்குக்கு இடித்தார். அதற்குப் பிறகு அடிக்கடி சத்யமூர்த்தியைச் சீண்டிக்
கொண்டே இருந்தார். மோகினியைக் கொண்டு சம்பாதிக்கும் நோக்கத்திலிருக்கும்
கண்ணாயிரத்துக்குச் சத்யமூர்த்தி அவளை விரும்புவது கொஞ்சமும் பிடிக்கவேயில்லை.

பழிவாங்கும் எண்ணத்தில் மிகவும் தேர்ந்தவர் கண்ணாயிரம். மோகினியால் தான்


புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து இதற்குக் காரணம் சத்யமூர்த்தி தான் என்ற முடிவுக்கு
வந்தார் கண்ணாயிரம். பூபதி இறந்த பிறகு மஞ்சள்பட்டி ஜமீந்தார் தான் மல்லிகைப் பந்தல்
கல்லூரியின் நிர்வாகியாகப் பதவிக்கு வந்தார். ஜமீந்தார் கண்ணாயிரத்துக்கு மிகவும் உற்றத்
தோழன். சத்யமூர்த்தியும் அந்தக் கல்லூரிக்குத்தான் மாற்றலாகி வந்திருப்பதனை அறிந்த
கண்ணாயிரம் ஜமீந்தாரைக் கொண்டு சத்யமூர்த்தியைப் பழிவாங்க எண்ணினார். ஜமிந்தாரோடு
சேர்ந்து பல திட்டங்களையும் தீட்டினார். தன்னால் முடிந்த துன்பங்களையெல்லாம்
சத்யமூர்த்திக்குக் கொடுத்தார். ஜமீந்தாருக்கு மோகினியைக் கூட்டிக் கொடுப்பதிலேயே
குறிக்கோளாக இருந்தார் கண்ணாயிரம். அப்படி நடந்துவிட்டால் தனக்குக் கொள்ளை
இலாபம் என்று கனவுக் கண்டு கொண்டிருந்தார் கண்ணாயிரம். ஜமீந்தார் மோகினியோடு
நெருங்கிப் பழக ஆரம்பித்தார்; ஒரு கட்டத்தில் மோகினியிடம் அத்துமீறிப் பழக
ஆரம்பித்தார் ஜமீந்தார். இதனைக் கொஞ்சமும் விரும்பவில்லை மோகினி. ஆனால்,
கண்ணாயிரமோ மோகினியின் சூழ்நிலையை நன்கு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப்
பேசுகின்றார். தாயை இழந்து தனியாக இருக்கும் மோகினியிடம் ஜமீந்தார் செய்தது
தவறில்லை என்று நியாயங்காட்டிப் பேசி அவளின் மனதையும் மாற்ற முயற்சி செய்தார்
கண்ணாயிரம். இவ்வாறாகப் பல அசிங்கமான குணநலன்களையும் கண்ணாயிரம்
கொண்டிருந்ததைக் கதைவோட்டத்தில் காண முடிகின்றது.

இறுதியாகப் பண ஆசையை அதிகமாகக் கொண்டிருந்த கண்ணாயிரம் அந்தப்


பணத்தினாலேயே கம்பி எண்ணவும் சென்றார். கள்ள நோட்டு விவகாரத்தில் ஜமீந்தாரோசடு
சேர்ந்து அவருக்கும் கூட்டுறவு இருக்கின்றதென்று போலிசில் மாட்டிக்கொண்டார்
கண்ணாயிரம். கூடா நட்பு அவரை முற்றாக அழித்தது.
BAHAGIAN B

கேள்வி 1

கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் முதல் குலோத்துங்க சோழன். இவன்


இராசேந்திர சோழன் மகள் சோழ இளவரசி அம்மங்கைக்கும் சாளுக்கியர் குல இராசராச
நரேந்திரனுக்கும் பிறந்தவன். இவன் மாமன் வீரராசேந்திர சோழன் இறந்த பின்பு அவன்
மகன் அதிராசேந்திரன் பட்டம் ஏற்றான். இவனும் சில திங்களில் இறந்தான். சோழ நாடு
வாரிசு இல்லாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது. குழப்பத்தை நீக்கச் சாளுக்கியர் குலத்தைச் சேர்ந்த
குலோத்துங்கன் பட்டம் ஏற்றான். கலிங்கத்துப் பரணி உருவானதற்கான காரணம் பற்றிக் கதை
ஒன்று உண்டு. குலோத்துங்கன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தான். அப்போது தென்னவர்,
வில்லவர் முதலிய மன்னர்கள் திறை (தோற்ற மன்னர் தன்னை வென்றமன்னர்க்குக் கொடுக்கும்
நிதி) செலுத்திப் பணிந்தனர். வட கலிங்க மன்னன் மட்டும் திறை செலுத்தாமல் இருந்தான்.
இதனை அறிந்த குலோத்துங்கன் சினம் கொண்டான். அவன் சினத்தைக் கண்டு ஏனைய
மன்னர்கள் நடுங்கினார்கள். 'வட கலிங்க மன்னனின் அரண்கள் (மதில்கள்) வலிமை
உடையனவாம்! அவற்றை அழித்து வாருங்கள்; அவனுடைய யானைகளை வென்று
வாருங்கள்' என்று கூறினான். அந்த அளவில் குலோத்துங்கன் தளபதி கருணாகரன் எழுந்து
நானே சென்று கலிங்கனை அடக்குவேன் என்று சபதம் இட்டான். பின்னர்க் கலிங்கப் போர்
மூண்டது. சோழர்கள் வெற்றி வாகை சூடினர் என்று கதை முடிகிறது. குலோத்துங்கனின்
படைத்தலைவர்களுள் சிறந்தவன் கலிங்கத்துப் பரணியின் இன்னொரு கதாநாயகன்
கருணாகரன் ஆவான். குலோத்துங்கன் ஆணையின்படி கலிங்க நாட்டின் மீது படை எடுத்துச்
சென்று அந்நாட்டை அழித்தவன். திருவரங்கன் எனும் இயற்பெயரை உடையவன். 'வேள்'
'தொண்டைமான்' எனும் பட்டங்கள் குலோத்துங்கனால் இவனுக்கு வழங்கப்பட்டன. இவன்
பல்லவர் குலத்தைச் சேர்ந்தவன். கலிங்கப் போரினால் குலோத்துங்கனுக்குப் புகழ் தேடித்
தந்தான் கருணாகரன்; கருணாகரனுக்குப் பரணியின் வாயிலாகப் புகழ் தேடித் தந்தார்
செயங்கொண்டார். கலிங்கத்துப் போர்க் காட்சிகளை கவிஞர் உவமித்துக் கூறுவதை இங்கே
காணாலாம்;

i. பதினெட்டுப் போர்களைக் காட்டிலும் சிறந்த போர் கலிங்கத்துப் போர்

பதினெட்டுப் போர் என்று குறிக்கப்படுவது பதினெட்டு வருடங்களாகத் தேவர்களுக்கும்


அசுரர்களுக்குமிடையே நடந்த போர்களைக் குறிப்பதாகக் காட்டுகின்றது. இந்தப்
பதினெட்டுப் போர்களிலேயும் கலிங்கத்துப் போரே சிறந்தது என்றும் கவிஞர்
உவமிக்கின்றார். பதினெட்டுத் திங்களாக நடந்த இராமயணப் போர், பதினெட்டு
நாள்களாக நடந்த மகாபாரதப் போர், ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.
கைத்தனைப் போர்களையும் முறியடிக்கும் வகையில் நடந்தது கலிங்கத்துப் போர் என்று
காட்டுகின்றார் கவிஞர்.

II. போர்க்களம் எங்கும் இரத்த வெள்ளம்


முதற்காட்சியாகப் போர்க்களம் எங்கும் இரத்த வெள்ளம் என்று உவமிக்கின்ரார்
கவிஞர். உடம்பிலிருந்தும் காயங்களிலிருந்தும் மிருகங்களின் கால்களிலிருந்தும்
இரத்தம் வழிந்தோடுகின்றது. யானையின் பின்னங்கால்களோ ஒன்றன்பின் ஒன்றாக
இரத்தத்தில் மிதந்து செல்கின்றன. இதனைப் பார்ப்பது கடலில் கப்பல்கள் ஒன்றன் பின்
ஒன்றாக அணிவகுத்துச் செல்வதைப் போன்றிருன்க்கின்றது என்று கூறுகின்றார்
கவிஞர்.

III. போர்வீரர்கள் பருந்துக்கும் கழுகுகளுக்கும் இரையாதல்

விருந்தினர்கலையும் ஏழைகளையும் ஒரு சேர வீட்டுக்கு அழைத்து விருந்து


வைக்கும்போது எவ்வாறு அந்த வீட்டினர் களிப்பை அடைவார்களோ அதைப்போன்று
இறந்து கிடக்குக் வீரர்களின் முகங்கள் மலர்ந்து கழுகுக்கும் பருந்துக்கும் தாங்கள்
விருந்தாகப் போவதை எண்ணிக் களித்திருக்கின்றார்கள் என்று கூறுகின்றார் கவிஞர்.

IV. யானைகளோடு கொடிகளும் சரிந்து கிடக்கின்றன

போர்க்களத்தில் இறந்து கிடக்கும் யானைகளோடு அதனோடு சேர்ந்து விழுந்து


கிடக்கும் கொடிகளையும் உவமித்துக் காட்டுகின்றார் கவிஞர். எப்படி இடுகாட்டில்
இறந்து போன கணவனை எரிக்கும்போது தானுனம் உடன்கட்டை ஏறி மரணத்தை
எய்தும் மனைவிகளைப் போன்று யானையோடு சேர்ந்து கொடிகளும் விழுந்து
கிடக்கினறன என்பதனை உவமிக்கின்றார் கவிஞர். அத்தோடில்லாமல், இறந்து போன
கணவர்களைத் தாங்கொண்ணாது தன்னுடைய மார்போடு ளரணைத்துக் கொண்டு
தானும் உயிரை விடும் தேவலோகப் பெண்களைப் போன்று அக்காட்சி இருந்ததாகக்
கூறுகின்றார் கவிஞர்.

இரத்த வெள்ளத்தில் தேர் மொட்டுகளும் வீரர்களின் தலை மயிரும்

இரத்த வெள்ளத்தில் கிடக்கும் தேர்களையும் வீரர்களின் தலை மயிரையும் உவமித்துக்


கூறுகின்றார் கவிஞர். போருக்குப் பின்னால் உழன்றுக் கிடக்கும் தேரின் மொட்டுக்கள்
தாமரை மொட்டுக்கள் போலவும், வழிந்தோடும் இரத்தமானது குளத்து நீரைப்
போலவும், வீரர்களுடய தலைமயிர்கள் பச்சை இலைகளாகிய பாசியைப் போன்றும்
மிதந்து கிடக்கின்றன என்றும் போர்க்களமானது குளத்தைப் போன்றும்
இருக்கின்ரதென்ரும் கூறுகின்றார் கவிஞர் அவர்கள்.

வீரர்களின் குருதி கடற்வாய்களாக

அடுத்ததாக வீரர்களின் வழிந்தோடும் குருதியினை உவமித்துக் கூறுகின்ரார் கவிஞர்.


அவர்களின் இரத்தமானது கடலில் யானைகள் பிழியும் மதநீர், கடற்கால்வாய்களைப்
போலப் புகுந்து ஒன்றாகக் கலக்கவும், அதில் குதிரைகளாகிய அகைகள் வீசவும், சவுரி
என்னும் சாமரமாகிய வெள்ளிய வரிசையாக மிதக்கவும், அக்குருதிக் கடல் எங்கும்
பரவியோடிக் கிடப்பதாகவும் உவமித்துக் காட்டுகின்றார் கவிஞர்.

கருணாகரனின் வில் திறம்

கருணாகரன் விடும் அம்பினையும் போர்வீரர்கள் மடிந்து வீழ்வதனையும் உவமித்துக்


காட்டுகின்றார் கவிஞர். அவன் விடும் அம்புகள் போர்வீரர்களின் கேடகத்தையும்
துளைத்துக் கொண்டு, இதயத்துள் துலாவி, பின்புறத்தில் வெளியேறுவதாக
உவமிக்கின்றார் கவிஞர். இக்காட்சியினைக் காணும் மற்ற போர்வீரர்கள், "கருணாகரன்
வில்வித்தைக் கற்று திறந்தான் என்னே என்னே!" என்று புகழ்ந்து கொண்டே களத்தில்
வந்து மடிகின்றனர். தங்களுடைய படைவீரர்களையும் "போருக்குச் செல்ல வேண்டாம்"
என்று தங்கள் கையாலே நிறுத்தியும் கேட்டுக் கொள்கின்றார்கள் என்றும் உவமித்துக்
கூறுகின்றார் கவிஞர்.

வீரர்களின் வாயில் ஊதுகொம்புகள்


வீரர்களின் வாய்களில் புகுந்திருக்கும் வேல்களைக் காட்சிப்படுத்துக்கின்றார் கவிஞர்.
தங்களுடைய வாயில் புகுந்திருக்கும் அம்புகளைப் பிடுங்கி எடுத்து உயிரைவிடும்
வீரர்களைப் பார்க்கும்போது ஊதுகொம்புகளைப் ஊதுவது போல் இருக்கின்றது என்று
உவமித்துக் கூறுகின்றார் கவிஞர் அவர்கள்.

கொழுப்பேறிய அம்புகள்

கருணாகரனின் அம்புகள் வீரர்களின் கொழுப்பினையும் மஞ்ஞையினையும் உருவிக்


கொண்டு வெளியேறுவதைக் காட்டுகின்றார் கவிஞர். தன்னையே மறைத்துக் கொண்டு
கொழுப்பினால் முற்றிலும் மூடிய அம்புகள் வீரர்களின் உடலை விட்டு
வெளியேறுகின்றன; அவை இரத்த வெள்ளத்தின் மிதந்து செல்கின்றன. இதனைக்
கண்ட உயரே பறந்த பருந்து ஒன்று விரைந்து வந்து அந்தக் கொழுப்பேறிய
அம்பினைத் தன்னுடைய கோணலான அலகினால் கௌவிக் கொண்டு வானில்
பறக்கின்றது. உள்ளிருக்கும் அம்பைக் காணாத பருந்து, கொழுப்பென்று ஏமார்ந்து
போகின்றது. உயரே பறக்கும் தறுவாயில் பாரத்தைத் தாங்காது கீழே விழுந்து
கழுத்தொடிந்து சாகின்றது அப்பருந்து என்று உவமிக்கின்றார் கவிஞர்.

பூதத்தின் வேட்டை

அடுத்து பூதத்தின் வேட்டையைப் போர்க்களத்தில் காட்சிக்குக் கொண்டு வருகின்றார்


கவிஞர். நால்வகைப் படைகளுக்கும் அதிபதியான ஒருவனின் கொழுத்த உடலைத்
தின்று பெருத்த பூதமானது, பெருவாரியான குதிரைகளை அடுத்த வேளைக்குத்
தன்னுடைய தலையின் மீது தூக்கிக் கொண்டு நடந்து வருகின்றது. இதனைப்
பார்க்கையில் கறுத்து நிறைந்து திடீரென பெய்ய திரண்டிருக்கும் மழை மேகத்துக்கு
ஒப்பாக இருக்கின்றதென்பதனை உவமிக்கின்றார் கவிஞர்.

வீரர்களின் மார்புகள் மலைகள் போல

இறுதியாக, வீரர்களின் மார்புகளை மலைகளுக்கு ஒப்பாகப் பேசுகின்றார் கவிஞர்.


முதுகில் குத்துப்பட்டுச் செத்தால் கோழை என்றாகிவிடும் என்பதால் நெஞ்சத்தை
உயர்த்திக் காட்டிக் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் மார்புகள் புடைத்து
பெரிய் மலைகளைப் போன்று வீங்கியிருப்பதாக உவமிக்கின்றார் கவிஞர்.
இவ்வாறாகப் போர்க் காட்சிகலை உவமித்துக் கூறுகையில் கலிங்கத்துப் போர்
வீரர்களைச் சாய்த்துக் சயங்கொண்டார் கருணாகரன் என்பதனைக் கூறி முடிக்கின்றார்
சயங்கொண்டார்.

கேள்வி 2

பொதுவாகவே படைப்பாளன் என்ற ஒருவன் தான் தன்னுடைய படைப்பினில் சொல்ல வரும்


கருத்துக்களை அப்படியே மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து விடும் நோக்கத்திலே
எதனையும் படைக்கின்றான். தன்னுடைய படைப்பானது வெறுமனே பிறர் சொன்னதையே
மீண்டும் மீண்டுமாகச் சொல்லாதபடிக்குத் தன்னுடைய வழியினில் ஏதாவதொன்றைக் கூறி
அவர்களுடைய மனத்தினில் நீண்ட நாள்களுக்கு இடம் பிடித்துவிட வேண்டுமென்றே
நினைப்பார்கள். இதனைத்தான் பெரும்பாலான கவிஞர்களும் எழுத்தாளர்களும்
செய்கின்றார்கள். படிப்போரின் மனதினில் ஏதாவதொரு மாற்றத்தையோ விளைபயனையோ
கொண்டு வராவிட்டால் நிச்சயமாக அப்படைப்பானது தேர்ந்த ஒரு படைப்பாக இருக்க
முடியாது. காலப்போக்கில் அப்படைப்பாளனின் படைப்புகள் மக்களின் மனிதின்
நில்லாமலேயே போய்விடும். ஒரு படைப்பாளன் தன்னுடைய எழுத்துக்களின் மூலமாக னொரு
தனிக் கோட்பாட்டினை மக்களின் மனத்திலே வைக்க வேண்டும். அக்கோட்பாட்டினைக்
காணும்போது மக்கள் அப்படைப்பின் படைப்பாளனைக் கண்டு கொள்கின்றார்கள். இதுவே
வெற்றியடைந்த கவிஞனின் நிலையாகும். ஒரு படைப்பாளன் தன்னுடைய கவிதைகளின்
மூலமாகவோ எழுத்துக்களின் மூலமாகவோ ஒரு சிறந்த ரீதியில் சமுதாயக் கோட்பாடுகளை
அவர்களிடம் கொண்டு போகின்றான் என்பது உறுதியாகின்றது. கோட்பாடுகளற்ற படைப்புகள்
நீண்டக் காலத்துக்குத் தாக்குப்பிடிக்காது என்பதும் உண்மை. இன்றும் பலராலும் பேசப்பட்டு
வரும் பாரதியின் படைப்புகள் அவருடைய சமுதாயக் கோட்பாடுகளின் பரிணமிப்பின்
காரணமாககவே இன்றும் உயிர்த்திருக்கின்றதென்று தான் சொல்ல வேண்டும். பாரதியின்
கவிதைகளின் வாயிலாகச் சமுதாயக் கோட்பாடுகளையும் மொழிக் கோட்பாடுகளையும்
இலக்கியக் கோட்பாடுகளையும் நாடு குறித்ததான கோட்பாடுகளையும நாம் காண முடிகின்றது.
பாரதியாரின் உள்ளத்தில் எழுந்த கோட்பாடுகளின் முழுமையான வளர்ச்சியினை அவருடைய
எழுத்துக்கள் முழுமையாகக் காண்பிக்கின்றன என்பதை நாம் ஒத்துக்கொண்டுத்தான்
ஆகவேண்டும். இவ்வகையிலேயே பாரதியின் கோட்பாடுகளை அவருடைய கவிதைகள்
முழுமையாக இந்நாள் வரையிலும் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றதென்பதும்
உண்மை. அவ்வகையில் மகாகவி பாரதியார் எவ்வாறு மொழிக் கோட்பாடுகளையும்
இலக்கியக் கோட்பாடுகளையும் அவருடைய கவிதையின் வாயிலாக உணர்த்தியுள்ளார்
என்பதனை நாம் இங்கே காணலாம்.

i. பாரதியாரின் மொழியைப் பற்றிய கோட்பாடுகள்


பாரதியாரின் மொழிக் கோட்பாட்டினை எடுத்துக் கொண்டால் தமிழ்மொழியைத்
தாய்மொழியாகக் குறிப்பிடுகின்றார் மகாகவி பாரதியார். பெரும்பாலும் நாம் ஒரு
நாட்டைத்தான் தாய் நாடு என்போம் வளர்ந்த வீட்டினைத் தாய் வீடு என்போம்.
ஆனால், பாரதியாரோ தன்னுடைய முழுமையான உள்ளத்தின் வெளிப்பாடுகளைக்
கோட்பாடுகளாகக் காட்டும் வகையினில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்
காட்டினார். மொழியினில் கோட்பாடுகளைக் கொண்டே அவர் தம்முடைய
கவிதைகளைப் பெரும்பாலும் இயற்றியுள்ளார். இதன் வரிசையில் 'தமிழ்மொழி வாழ்த்து'
மற்றும் 'தாய்மொழி வாழ்த்து' என்ற கவிதைகளின் வாயிலாக இந்தக் கோட்பாடுகளை
மக்களிடையே கொண்டு போய்ச் சேர்த்தார் பாரதியார். அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த
மக்களுக்குப் புதுமையாக இக்கோட்பாடு இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை
உணர்ந்து கொண்ட அவர்கள், இக்கோட்பாட்டினை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
தன்னுடைய கவிதைகலில் மொழிக்குத் தனிக் கோட்பாட்டினை வழங்கிப் போற்றுவித்த
பாரதியின் மொழிப்பற்று அங்கிருந்த மக்களிடமும் மிளிரத் தொடங்கிற்று. பரவலாக
அவர்களும் தாய்மொழியான தமிழ்மொழி என்று தமிழ்மொழிக்குத் தாய் என்ற
ஆங்கீகாரத்தை வழங்க ஆரம்பித்தார்கள். 'யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ்மொழியைப் போல் இனிதவாது எங்கும் காணோம்,' என்று கூறித் தமிழின்
இனிமையையும் கோட்பாடாக விளக்கிக் காட்டினார் பாரதியார் தம்முடைய
கவிதைகளின் வாயிலாக. இதனை அறிந்து போற்றிய நமிழ்நாட்டு மக்கள்
காலப்போக்கில் இவருடைய கவிதைகளில் காணப்பட்ட மொழிக் கோட்பாடுகளை
முழுமையாகப் பின்பற்றத் தொடங்கினார்கள். இதன் விளைவாகத்தான் இன்று நாம்
கூட தமிழ்மொழியைத் தாய்மொழியென்றே கூறுகின்றோம். இம்மொழிக்
கோட்பாட்டினைத் தம்முடைய கவிதைகளின் மூலமாக விதைத்தவர் மகாகவி
பாரதியைத் தவிர்ந்து யாருமிலர். தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கூறும் பாங்கினில்
மறைமுகமாக அம்மொழியை அழிக்க நடக்கும் சதித்திட்டங்களையும், நம் தாயை நாம்
பிறர் அழிக்கவிடக் கூடாதென்ற சீரியக் கொள்கையையும் முன்வைத்திருக்கின்றார்
பாரதியார். இதனை அவருடைய கவிதைகளின் மூலமாக நாம் காணலாம். மகாகவி
பாரதியாரின் இந்த மனநிலையே இன்று நம்மிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.
இதன் அடிப்படையிலேயே தாய்மொழிப் பள்ளிகளையும் தாய்மொழிப்
பாடத்திட்டத்தையும் நாம் பிற இனத்தான் அழிக்கக் கூடாதென்று போராடிக்
கொண்டிருக்கின்றோம். மகாகவியின் மொழிக் கோட்பாடு இன்றும் நமக்குள்
இயங்குகின்றதென்பதனை நாம் இங்கே காண முடிகின்றது.

ii. பாரதியாரின் இலக்கியம் பற்றிய கோட்பாடுகள்


இலக்கியம் என்பது ஒரு தனிமனிதனைச் சரியாகச் சிந்திக்க வைத்துச் செயல்பட
வைக்கும் ஓர் அரிய சாதனம் என்றுத்தான் சொல்ல வேண்டும். இலக்கியம் தான்
ஒவ்வொருவரின் ஆளுமையையும் நிர்ணயிக்கின்றதென்றால் மிகையாகாது.
இலக்கியமானது ஒரு சமுதாயத்தின் பண்பாடு விழுமியங்களையும் கூடவே
காலத்துக்கும் கொண்டுவரக்கூடிய ஒன்றாகவும் இருக்கின்றது. இலக்கியங்கள்
காலத்துக்கும் நமக்கு மிகவும் தேவையான ஒன்று என்பதனை நாம் மறந்து
விடக்கூடாது. அவ்வகையில் பாரதியார் தன்னுடைய இலக்கியக் கோட்பாடுகளை
மிகவும் நேர்த்தியான முறையில் தன்னுடைய கவிதைகளின் வாயிலாக மக்களுக்குக்
கொண்டு போய்ச் சேர்த்தார். தெரியாத ஒன்றனையோ அல்லது புதிய கருத்தினையோ
மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தால் அது நிச்சயமாக அவ்வளவு பயனளிக்ககூடிய
ஒன்றாக இருக்காது. இதனைக் கருத்தில் கொண்டு தம்முடைய இலக்கியக்
கோட்பாடுகளை மொழிகளினூடே மிகவும் அழகாகக் காண்பித்தார் பாரதியார்.
மக்களின் மத்தியில் அக்காலத்தே கும்மிப் பாட்டு மற்றும் ஓரங்கம் போன்றவை
அவர்களின் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அம்சமாகவும் அவர்களுக்குத்
தெரிந்தவொன்றாகவும் இருந்தன. இதனைக் கொண்டே கும்மிப் பாடல்களையும் சிந்துப்
பாடல்களையும் பாரதியார் இயற்றினார். இவை மிகவும் எளிமையாக மக்களால் ஏற்றுக்
கொள்ளப்படுபவையாக இருந்தன. கும்மி மற்றும் ஓரங்க ஓசை நயங்கலை அவர்கள்
தெரிந்து வைத்திருப்பதனால் மிக எளிமையாக கவிஞரின் கவிதைகள் அவர்களைச்
சென்றெட்டியதென்றுதான் சொல்ல வேண்டும். மரபுகளை மீறாமல் புதியதைக் கொண்டு
போய்ச் சேர்க்கும் வித்தையைக் கற்றவர் பாரதியார் என்று சொல்வது உண்மையே.
இதனால் தான் மரபில் காலூன்றி புதுமையில் காலெடுத்து வைக்கும் இயல்புக்
கொண்டவர் பாரதியார் என்றும் கூறுவர். மரபுகளைக் கொண்டு புதுமைகளைப்
படைத்து இலக்கியக் கோட்பாட்டினூடே புதுநெறிகளை வகுத்தவர் மகாகவி பாரதியார்.
இவ்வகையில் மக்களுக்குத் தெரிந்த இலக்கியங்களைக் கொண்டே அவர்களுக்குப்
புதியனவற்றைப் படைத்து இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டு போய்ச் சேர்த்தார்
மகாகவி. காட்டாக, மக்களுக்குக் கடவுளாகத் தெரிந்த கண்ணனையே கடவுளாகவும்
சேவகனாகவும் தம்முடைய கவிதைகளில் கோடிக்காட்டினார் பாரதியார். மரபுகளை
மீராது இலக்கியத்தையும் ஏற்றுக் கொண்டே புதியனவற்றைக் கொண்டு போய்
மக்களிடையே கொண்டு போய்ச் சேர்த்தவர் பாரதியார். இவ்வரிசையில் பிறந்தது தான்
புதிய பாஞ்சாலி. பாஞ்சாலி சபதத்தைத் தழுவிய இப்புதிய பாஞ்சாலியானது
அக்காலத்துத் தமிழ்நாட்டு மக்களின் சூழலுக்கு ஏற்புடையதாக இருந்தது. இங்கே
இவருடைய இலக்கியக் கோட்பாடுகளை நாம் காண முடிகின்றது. யாருக்கு எப்படிப்
படைப்புகளைக் கொடுக்க வேண்டுமென்று அறிந்து அதன்படியே இலக்கியக்
கோட்பாடுகளைச் சேர்த்துப் படைப்பவஸ்ரீ பாரதியார் என்றால் மிகையில்லை. 'ஓடி
விளையாடு பாப்பா' என்று குழந்தைகளுக்கும், இளையோருக்கென்று 'அச்சமில்லை
அச்சமில்லை' என்றும் தனித்தனியாகப் பாடியவர் பாரதியார். பாரதியின் பெரும்பாலான
பாடல்கள் தமிழுணர்வை முன்னிறுத்தித் தமிழ் மக்களைச் சார்ந்தே இருந்தன. இதுவே
தமிழ் மக்களுக்குத் தாய்மொழியின் உணர்வினை அதிகமாகக் கொடுத்தது என்றும்
சொல்லலாம். பழைய மரபின்படி கவிஞர்கள் அரசனையும் குறுநில மன்னர்களையும்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடினார்கள். ஆனால், பாரதியோ நாட்டு
மக்களையும் மக்கள் தொண்டர்களையும் பாட்டுடைத் தலைவர்களாக்கிப் பல
பாடல்களைப் பாடிப் புதிய நெறிமுறையை இலக்கியத்தில் கொண்டு வந்திருப்பதனைக்
காண முடிகின்றது. இவ்வாறாக, இலக்கியப் பொதுவினில் மரபினைக் கொண்டு புதிய
நெறிமுறைகளைக் காட்டி இன்றைக்கு நமக்கு அழியாச் சொத்தினை விட்டுச்
சென்றிருக்கின்றார் பாரதியார்.
சுருங்கச் சொன்னால், பாரதியாரின் கவிதைகளே அவருடைய மொழிக்
கோட்பாட்டிற்கும் இலக்கியக் கோட்பாட்டிற்கும் சான்றாக இருக்கின்றன.

You might also like