Professional Documents
Culture Documents
சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்
தலைப்பு சுக்கிரன்
பங்களிப்பு ரா.சுந்தர்ராஜன்
மதிப்பெண்
வாழ்க வளமுடன்
1
முன்னுரை
எனது பெயர் சந்தர்ராஜன். நான் இந்த உலகத்தமிழ் ஜோதிடர்கள் மஹா சபை பயிற்சி
மையம் மூலம் ஜோதிடம் கற்றுக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். என் குரு
திரு.பத்மநாபன் அய்யா மூலம் கற்றுக்கொண்டதில் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.
எனக்கு தந்த இந்த பிராஜக்ட் ‘சுக்கிரனை‘ பற்றி என் ஆய்வினை அய்யாவிற்கு
சமர்பிக்கிறேன்.
2
பொருளடக்கம்
1. சுக்கிர பகவான் 1
2. சுக்கிரன் பார்வை 2
4. காரகத்துவங்கள் 4
6. உதாரண ஜாதகம் 9
7. சுக்கிரன் குனசீலங்கள் 10
3
சுக்கிர பகவான்
சுக்கிர பகவான் நவகோள்களின் பொருள் அணி குரு ஆவார். இவர் அசுர குரு என்று
அழைக்க படுபவர். இவர் எப்பொழுதும் சூரியன் மற்றும் புதனோடு சேர்ந்து பயணிப்பதால்
இவர்கள் முக்கூட்டு கிரகங்கள் என்று அழைக்கப்படுவார்கள். சுக்கிரனின் நிறம் பால்
வெள்ளை. ஆகாயத்தில் விடியற் காலையில் இவர் பளிச்சென்று மின்னுவதால் இவரை
விடிவெள்ளி என்று அழைப்பார்கள்.
இவருக்கு ரிஷபம் மற்றும் துலாம் ஆட்சி வீடுகள் ஆகும். துலாம் மூலதிரிகோன வீடாகும்.
மிதுனம், மகரம், கும்பம், கன்னி நட்பு வீடுகள் எனினும் கன்னியில் இவர் நீச்சம்
அடைவதால் பலம் குறைவு. இவர் குருவின் உபய வீடான மீனத்தில் உச்சம் அடைவார்.
இவருக்கு சனி, புதன், ராகு முதல் தர நட்பு கிரகங்களாகும்.
சுக்கிரன் பார்வை
1
இதற்கு காரணம் இவர் மஹாவிஷ்னு வாமனராக அவதாரம் எடுத்து அந்தனர் போல்
வந்து அசுர குல மன்னன் மஹாபலியிடம் மூன்று அடி கேட்டபோது, வந்திருப்பது
பகவான் விஷ்னுவே என்று அறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், மன்னனை
தடுத்தார். வந்திருப்பது சாட்சாத் நாராயணனே என்று கூறினார். மன்னன் இவரின் பேச்சை
கேளாமல் மூன்று அடி தானம் செய்ய ஆயத்தமானான். தானம் தருவதற்கு நீரை வார்க
கமண்டலத்தை எடுத்தான். அப்பொழுது சுக்கிரன் ஒரு வண்டு உருவெடுத்து
கமண்டலத்தின் துவாரத்தை அடைத்தார். இதை அறிந்த மஹா விஷ்னு ஒரு தர்பயை
கொண்டு கமண்டலத்தின் துவாரத்தில் குத்தினார். அதனால் சுக்கிரனுக்கு ஒரு கண்
குருடாயிற்று. இதனால் ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனின் பார்வைக்கு பாதி பலன் என்று
கூறுகிறார்கள்.
2
சுக்கிரன் ஓரு ஜாதகத்தில் நீசம், பகை, மறைவு (3,8) முழு மறைவு பெற்றிருந்தாலோ அந்த
ஜாதகர் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அல்லது
திருமணத்திற்கு பின் மனைவியால் எந்த சந்தோஷமும் அடைய முடியாமல் போகும்.
சுக்கிரனை அசுர குரு என்று வேத ஜோதிடத்தில் அழைப்பார்கள். இவர் பொருள் அணி
தலைவர் எனபதால் இவருக்கு சனி, புதன், ராகு நட்பு கிரகங்கள் ஆகின்றன. அருள் அணி
தலைவரான குரு இவருக்கு பகை கிரகமாக கருதப்படுகிறது. அதனால் குரு, சூரியன்,
சந்திரன், செவ்வாய், கேது இவருக்கு பகை கிரகங்களாகும்.
சுக்கிரனின் ஆட்சி வீடு ரிஷபம் மற்றும் துலாம் ஆகும். ரிஷபம் கால புருஷனுக்கு 2 ஆம்
வீடு என்பதால் அங்கு சந்திரன் உச்சம் ஆவதால் நல்ல குடும்பம், வாக்கு, தனம்
இவைகளில் இந்த ரிஷப வீடு முக்கிய பங்கு வகிக்கிறது. கால புருஷனுக்கு 7 ஆம் வீடு
துலாம் என்பதால் வாழ்க்கை துணை, பொது ஜன தொடர்பு, கூட்டு தொழில் இவைகளில்
முக்கிய பங்கு வகிக்கிறது.
காரகத்துவங்கள்
சுக்கிரன் பிரகாசமான கிரகம். இது நடுத்தர கிரகமாகும். இது இடமாகி சுய சுழற்சி
செய்கிறது. சுக்கிரன் கலைக்காரகன். அதனால் இயல், இசை, நாட்டியம், சினிமா இதில்
அவர் முக்கிய பங்கு வகிப்பவர். ஓருவர் கலைகளில் நல்ல பிரபலமாக இருக்கிறார்
என்றால் அவரக்கு ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாகவோ, மூல திரிகோன வீட்டிலோ,
ஆட்சியாகவோ இருக்கலாம். சுக்கிரன் பொன், பொருள், ஆடை, அலங்காரம், வாசனை
திரவியம், ஜொலிக்கும் பொருட்கள்-நகை, ற்றும் உள் அலங்கரிப்பு, இவைகளை குறிக்கும்.
சுக்கிரன் அழகை குறிக்கும்.
3
பரணி நட்சத்திரம் மேஷ ராசியில் சனி நீசம் அடைவதால் வேலை ஆட்கள் குறைந்த
செலவில் கிடைப்பார்கள்.
பூரம்
பில்லி, சூனியம் தோஷம் நீங்க துர்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபட தோஷங்கள் நீங்கும்.
பூராடம்
பூராடம் நட்சத்திரம் குருவின் வீட்டில் இருப்பதால் நீண்ட துர பயணம செல்ல இந்த
நட்சத்திரத்தை பயன்படுத்தலாம்.
பூராடம் நட்சத்திரம் அன்று தன லஷ்மிக்கு பூஜை செய்து வந்தால் கடன் தொல்லை நீங்கி
பண வரவு பெருகும்.
4
சுக்கிரன் நின்ற பாவ பலன்கள்
சுக்கிரன் முதல் பாவத்தில் நின்றால் நல்ல அழகான தோற்றம், கலைகளில் ஆர்வம், நிறைய
நண்பர்கள், அதிக செலவு செய்பவர், ஆடம்பர வாழ்க்கை பிரியர்.
சுக்கிரன் இரண்டில் நின்றால் சாப்பாடு பிரியர் நல்ல வாழ்க்கை துணை அமையும். தன,
பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் எப்பொழுதும் சந்தோஷம் இருக்கும்.
கனிவான, இனிமையான பேச்சு இருக்கும்.
சுக்கிரன் மூன்றில் நின்றால் நல்ல ஓவியம், இசை, பாட்டு, எழுத்து இதில் சிறந்து
விளங்குவார். சிறு தூர பயணம் அடிக்கடி மேற்கொள்வார்.
5
என்பதால் சுகர், செரிமான கோளாரு இருக்க வாய்ப்பு உண்டு. கிட்னி பிரச்சினை ஏற்பட
வாய்ப்பு உண்டு.
சுக்கிரன் ஒன்பதில் நின்றால் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, உயர் படிப்பு, கலை, இசை
இவைகளில் நல்ல தேர்ச்சி பெற வாய்பு உண்டு. கால புருஷனுக்கு ஒன்பதாம் இடம் குரு
வீடு என்பதால் தூர பிரயானங்களின் மூலம் நல்ல ஆதாயம் உண்டு கோவில் திருப்பணி,
ஆன்மீக ஈடுபாடு நல்ல முன்னேற்றம் தரும். தந்தை மூலமாக நல்ல உதவிகள் கிடைக்கும்.
சுக்கிரன் பத்தில் நின்றால் இயல், இசை, நாடகம், ஆடை, ஆபரணம், அழகு பொருள்
சாதனங்கள், வாசனை திரவியங்ள், வீட்டிற்கு உபயோகம் படும் அலங்கார பொருட்கள்,
இனிப்பு, சர்க்கரை ஆலை போன்ற வியாபாரத்தில் நல்ல புகழ் மற்றும் வருமானம்
இருக்கும்.
6
சுக்கிரன் பனிரெண்டில் இருப்பது தவறான செயலில் ஈடுபட வைத்தூ சிக்கலில்
மாட்டிக்கொள்வது, கனவு மற்றும் ஆசைகள் அதிகம் இருக்கும். வெளிநாட்டுக்கு செல்ல
வாய்ப்பு உண்டு. இவருடைய வாழ்கை துணை வெளிநாட்டவர் ஆக இருக்க வாய்ப்பு
உண்டு.
7
உதாரண ஜாதகம்
ராகு ல
ராசி
(பெண்)
சுக், கேது
சனி
சுக்கிரன் குனசீலங்கள்
8
மூல திரிகோன வீடு துலாம்
நீச வீடு கன்னி
நட்பு வீடு மிதுனம், கன்னி,மகரம், கும்பம்
அதிதேவதை லஷ்மி
பஞ்சபூதம் நீர்
குணம் சௌமிய குணம்
உலோகம் வெள்ளி
நிறம் வெண்மை
சுவை இனிப்பு
நவரத்தினம் வைரம்
தானியம் மொச்சை
தசை ஆண்டு 20 வருடம்
சஞ்சார காலம் 1 மாதம்
நாடி கபம்
உடல் உறுப்புகள் கன்னம், பால் உறுப்புகள்
வடிவம் சம் உயரம்
மலர் வெண் தாமரை
எண் 6
சமீத்து அத்தி மரம்
விலங்கு ஆண் யானை
வாகனம் கருடன்
வஸ்திரம் வெண்பட்டு
திசை தென் கிழக்கு
பருவ காலம் வசந்த காலம்
ஆலயம் ஸ்ரீரங்கம், கஞ்சனூர்
வாஸ்து சமையல் அறை
பொருட்கள் அலங்கார பொருள், கட்டில், மெத்தை,
இருக்கைகள், அலமாரி
பாராயணம் மஹாலஷ்மி அஷ்டகம்
பார்வை பலம் 7 ம் பார்வை
9
பின்னுரை
இந்த வாய்ப்பை தந்த என் குருநாதர் அய்யா பத்மநாபன் அவர்களுக்கு என் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரா. சுந்தர்ராஜன்
10