You are on page 1of 6

உச்சம் நீசம் ஆட்சி நட்பு பகை

உச்சம்
எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம்
அல்லது இல்லாமல் போகலாம்.

1. ஜாதகத்தில் சூரியன் உச்ச வீடில் இருந்தால், ஜாதகன் செல்வந்தனாக இருப்பார். மேன்மையான குணம்
உடையவனாக இருப்பார். வீரம் மிக்கவனாக இருப்பார்.
2. சந்திரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகருக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் எப்போதும் கிடைக்கும்!
3. செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் பகட்டான மனிதராக இருப்பார். வீரம் மிக்கவராக இருப்பார்.
வேற்று ஊரில் வசிப்பவராக இருப்பார்.
4. புதன் உச்சம் பெற்று இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.
5. குரு உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.
6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் இயல், இசை, நாடகம், நடனம் ஆகியவற்றில் ஆர்வம்
உடையவராகவும், தேர்ச்சி உடையவராகவும் இருப்பார்.
7. சனி உச்சம் பெற்று இருந்தால் அரசியலில் தலைமை பதவியும், அல்லது அரசு கெளரவ பதவியும், தொழிலாளர்
தலைவராகவும் இருப்பார்

பல கிரகங்கள் உச்சம் பெற்றால் தரும் பலன்கள்!


சிலருக்கு ஜாதகத்தில் ஒரு கிரகம் உச்சம் பெற்றிருக்கும். அதுவும் லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தால் நல்லது.
அதுவும் உச்சம் பெற்ற லக்கினாதிபதி திரிகோண இடங்களில் இருந்தால் மிகவும் நல்லது. சிலருக்கு ஒன்றிற்கு
மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருக்கும். உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய மகா திசைகளில்
அல்லது புத்திகளில் உரிய பலன்களை வாரி வழங்கும். அப்போது கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்!
இப்போது கிரகங்கள் உச்சம் பெற்றதற்கான பலன்களைப் பார்ப்போம்!

1. இரண்டு கிரகங்கள் உச்சம் பெற்றால் புகழ் பெறுவார்


2. மூன்று கிரகங்கள் உச்சம் பெற்றால் நகரத்தின் தலைவராகவும், செல்வந்தராகவும் இருப்பார். பதவியில்
இருந்தால், உயர் பதவி பெறுவார்.
3. நான்கு கிரகம் உச்சம் பெற்றால், செல்வந்தராகவும், அரசாங்க கெளரவம் பெறுபவராகவும் இருப்பார்.
4. ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றால், அமைச்சராக, தர்மவானாக , புகழ் உடையவராக இருப்பார்.
பல வீடுகள், வாகனங்கள் உடையவராகவும் இருப்பார்.
5. ஏழு கிரகங்கள் உச்சம் பெற்றால், உலகாளூம் திறமை உடையவர்!
6. உங்களுக்கு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சமாக உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!


1. ஜாதகத்தில் சூரியன் உச்ச வீடில் இருந்தால், ஜாதகன் செல்வந்தனாக இருப்பார். மேன்மையான குணம்
உடையவனாக இருப்பார். வீரம் மிக்கவனாக இருப்பார்.
2. சந்திரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகருக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் எப்போதும் கிடைக்கும்!
3. செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் பகட்டான மனிதராக இருப்பார். வீரம் மிக்கவராக இருப்பார்.
வேற்று ஊரில் வசிப்பவராக இருப்பார்.
4. புதன் உச்சம் பெற்று இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.
5. குரு உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.
6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் இயல், இசை, நாடகம், நடனம் ஆகியவற்றில் ஆர்வம்
உடையவராகவும், தேர்ச்சி உடையவராகவும் இருப்பார்.
7. சனி உச்சம் பெற்று இருந்தால் அரசியலில் தலைமை பதவியும், அல்லது அரசு கெளரவ பதவியும், தொழிலாளர்
தலைவராகவும் இருப்பார்.

நீசம்
1. சூரியன் நீசம் அடைந்திருந்தால் ஜாதகர் தன்னைச் சார்ந்தவர்களாலேயே தாழ்ந்த நிலை பெறுவார்.
2. சந்திரன் நீசம் அடைந்திருந்தால் உடல் நலம் பாதிக்கும். ரோகம் உடையவராக இருப்பார்.
3. செவ்வாய் நீசம் அடைந்திருந்தால், மனம் பாதிக்கப்படும். மற்றும் பல தொல்லைகளை சமாளிக்க
வேண்டியதிருக்கும்.
4. புதன் நீசம் பெற்றிருந்தால், உறவினரால் பகை ஏற்படும்.
5. குரு நீசமடைந்திருந்தால், புகழ் இல்லாதவராக இருப்பார். ஏழ்மை உடையவராக இருப்பார்.
6. சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால், கெட்ட எண்ணங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை
ஏற்படும். மனைவியிடமிருந்து பிரிந்து இருக்கும் நிலை ஏற்படும்.
7.சனி நீசமடைந்திருந்தால் ஒழுக்கக்குறைபாடு ஏற்படும். தாழ்நிலை ஏற்படும். வறுமையால் வாடும் நிலையும்
ஏற்படும்.

நீசம் பெற்ற கிரகங்களால் என்ன பயன்?

1. இரண்டு கிரகம் நீசம் பெற்றால் ஏழ்மை உடையவர்.


2. மூன்று கிரகங்கள் நீசம் பெற , முட்டாளாக, கீழ்த்தரமான வேலை செய்பவராக இருப்பார்.
3. நான்கு கிரகங்கள் நீசம் பெற நஷ்ட செய்கைகளைச் செய்பவராக இருப்பார்.
4. ஐந்து கிரகங்கள் நீசம் பெற , வீடு, மனைவி, குழந்தைகள் இல்லாதவராக இருப்பார்
ஆட்சி
1. சூரியன் தனது ஆட்சி வீட்டில் இருந்தால், ஜாதகர் அறிவாற்றலும், அழகான, கவர்ச்சியான தோற்றம்
உடையவராகவும் இருப்பார்.
2. சந்திரன் சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் தெளிவான மனநிலை உடையவராக இருப்பார்.
3. செவ்வாய் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் செயல் வீரராக இருப்பார். கொள்கைவாதியாக
இருப்பார்.
4. புதன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் பல கலைகளை அறிந்தவராக இருப்பார். பேச்சற்றல்
உடையவராக இருப்பார்.
5. குரு தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் கல்வியாளராக இருப்பார். வேதங்களை, புராணங்களை
அறிந்தவராக இருப்பார்.
6. சுக்கிரன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் செல்வந்தரகவும், நல்ல செயல்களைச் செய்பவராகவும்
இருப்பார்.
7. சனி தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சி உடையவராகவும், புகழ் உடையவராகவும் இருப்பார்.

பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்

சிலருக்கு ஜாதகத்தில் ஒரு கிரகம் ஆட்சி பெற்றிருக்கும். அதுவும் லக்கினாதிபதி ஆட்சி பெற்றிருந்தால் நல்லது.
அதுவும் ஆட்சி பெற்ற லக்கினாதிபதி திரிகோண இடங்களில் இருந்தால் மிகவும் நல்லது. சிலருக்கு ஒன்றிற்கு
மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் ஆட்சி பெற்று இருக்கும். ஆட்சி பெற்ற கிரகங்கள் தங்களுடைய மகா திசைகளில்
அல்லது புத்திகளில் உரிய பலன்களை வாரி வழங்கும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.! இப்போது கிரகங்கள்
ஆட்சி பெற்றதற்கான பலன்களைப் பார்ப்போம்! பல கிரகங்கள் ஆட்சி பெற்றால் தரும் பலன்கள்

1. இரண்டு கிரகம் ஆட்சி பெற்றால், உறவினர்களால் பாராட்டப்படுவார். புகழ் உடையவராவார்.


2. மூன்று கிரகம் ஆட்சி பெற்றால், கல்வி, செல்வம், குழந்தைகள் புகழ் உடையவர்.
3. நான்கு கிரகம் ஆட்சி பெற்றால், நகரத்தின் தலைவராக, நல்ல செயல்கள் உடையவராக, புகழ் உடையவராக
இருப்பார்.
4. ஐந்து கிரகம் ஆட்சி பெற்றால், அரசனைப் போல வாழ்வு பெறுவார்.
5. ஆறு கிரகம் கிரகம் ஆட்சி பெற்றால், சிறந்த அரசாளும் யோகம் உடையவர்.
6. ஏழு கிரகம் ஆட்சி பெற்றால், அரசராக இருப்பார். நாட்டை ஆள்பவராக இருப்பார்.
நட்பு
1.சூரியன் நட்பு வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல நண்பர்களைக் கொடுப்பார். ஜாதகர் தர்ம குணம்
உடையவராக இருப்பார்.
2. சந்திரன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சியானவராகவும், புகழ் பெறுபவராகவும் இருப்பார்.
3. செவ்வாய் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் தனக்கு விருப்பமான நபர்களை ஆதரிப்பவராக இருப்பார்.
4. புதன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர், நகைச்சுவை உணர்வு உடையவராக, செயல் வீரராக, செல்வந்தராக
இருப்பார்.
5. குரு நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் பல நல்ல காரியங்களை செய்பவராக இருப்பார்.
6. சுக்கிரன் நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் நல்ல நண்பர்களை உடையவராக இருப்பார். செல்வம் உடையவராக
இருப்பார்.
7. சனி நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களை நம்பி வாழ்வார்.

பல கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்.


1. இரண்டு கிரகம் நட்பு வீட்டில் இருந்தால், நல்ல ஒழுக்கமும், நல்ல நண்பர்களையும் உடையவர்.
1. மூன்று கிரகங்கள்  நட்பு வீட்டில் இருந்தால், நல்ல குணமும், உறவினர்களைக் காப்பாற்றும் குணமும் உடையவர்
2. நான்கு கிரகங்கள்  நட்பு ஆனால், புகழும், இறையுணர்வும் உடையவர்.
3. ஐந்து கிரகங்கள்  நட்பு  ஆனால், அரசு உயர் பதவியும், செல்வமும், தலைவராகவும் இருப்பார்.
4. ஆறு கிரகங்கள்  நட்பு ஆனால், கல்வி, செல்வம், வாகனம், புகழ் மற்றும் அரசபோக வாழ்வு உடையவர்.
5.  ஏழு கிரகங்கள்  நட்பு ஆனால், வாகனங்கள், வேலையாட்கள், அரசனுக்கு நிகரான வாழ்வு உடையவர்.
6. உங்களுக்கு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் நட்பு வீடுகளில் உள்ளன என்பதைப் பார்த்துக் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள்

கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்

1. சூரியன் நட்பு வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல நண்பர்களைக் கொடுப்பார். ஜாதகர் தர்ம குணம்
உடையவராக இருப்பார்.
2. சந்திரன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சியானவராகவும், புகழ் பெறுபவராகவும் இருப்பார்.
3. செவ்வாய் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் தனக்கு விருப்பமான நபர்களை ஆதரிப்பவராக இருப்பார்.
4. புதன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர், நகைச்சுவை உணர்வு உடையவராக, செயல் வீரராக, செல்வந்தராக
இருப்பார்.
5. குரு நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் பல நல்ல காரியங்களை செய்பவராக இருப்பார்.
6. சுக்கிரன் நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் நல்ல நண்பர்களை உடையவராக இருப்பார். செல்வம்
உடையவராக இருப்பார்.
7. சனி நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களை நம்பி வாழ்வார்.
பகை
1. சூரியன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மை நிலையிலும், பெண் ஆசை உடையவராகவும் இருக்க
நேரிடும்.
2. சந்திரன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் அழகற்றவராகவும், இருதய நோய் உடையவராகவும் இருப்பார்.
3. செவ்வாய் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மையில் வாழ நேரிடும். பகைவர்களால் துன்பமும்,
அதிர்ஷ்டமற்ற நிலையும் உண்டாகும்.
4. புதன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர், அறிவாற்றல் இல்லாதவராக, பகைவரால் தொல்லை அடைபவராக
இருப்பார்.
5. குரு பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் நியாயம் இல்லாதவராக, ஏழ்மை உடையவராக, அரக்க குணம்
கொண்டவராக இருப்பார்.
6. சுக்கிரன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் துன்பம் அனுபவிப்பவராக, கீழான பணி செய்பவராக, பல
கெடுதலான காரியங்களைச் செய்பவராக இருப்பார்.
7. சனி பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் தூய்மையற்றவராக, தொல்லைகள் உடையவராக, பல வியாதிகளால்
துன்பம் அடைபவராக இருப்பார்.

பகை வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள்


1. இரண்டு கிரகங்கள் பகை பெற்றால் எப்போதும் சண்டை இடுபவராக இருப்பார்.
2. மூன்று கிரகங்கள் பகை பெற கடின உழைப்பும், ஏழ்மையும் உடையவர்.
3. நான்கு கிரகங்கள் பகை பெற உறவுகளையும், செல்வத்தையும் இழந்து நிற்பார்.
4. ஐந்து கிரகங்கள் பகை பெற துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்


1. சூரியன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மை நிலையிலும், பெண் ஆசை உடையவராகவும் இருக்க
நேரிடும்.
2. சந்திரன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் அழகற்றவராகவும், இருதய நோய் உடையவராகவும் இருப்பார்.
3. செவ்வாய் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மையில் வாழ நேரிடும். பகைவர்களால் துன்பமும்,
அதிர்ஷ்டமற்ற நிலையும் உண்டாகும்.
4. புதன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர், அறிவாற்றல் இல்லாதவராக, பகைவரால் தொல்லை அடைபவராக
இருப்பார்.
5. குரு பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் நியாயம் இல்லாதவராக, ஏழ்மை உடையவராக, அரக்க குணம்
கொண்டவராக இருப்பார்.
6. சுக்கிரன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் துன்பம் அனுபவிப்பவராக, கீழான பணி செய்பவராக, பல
கெடுதலான காரியங்களைச் செய்பவராக இருப்பார்.
7. சனி பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் தூய்மையற்றவராக, தொல்லைகள் உடையவராக, பல வியாதிகளால்
துன்பம் அடைபவராக இருப்பார்.
கிரகங்களின் வக்கிர நிலைமை! (வக்கிரகதி)

வக்கிரம் என்பது ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி முதலியவை சமூகத்தால்


அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை அல்லது மாறுப்பட்ட
அல்லது வேறுபட்ட நிலை!

அதேபோல ஒரு கிரகத்தின் வக்கிர நிலை என்பது மாறுபட்ட நிலை.

சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் எப்போதும் 90 பாகைக்குள்ளாகவே (90 degrees) இருக்கும். இதை
நீங்கள் உங்கள் ஜாதகத்தில் பார்த்தால் தெரியும். ஒன்றை ஒன்று இந்த அளவை விட்டுத் தாண்டிச் செல்லாது.
தாண்டிச் செல்லும் நிலையில் இந்த வக்கிரகதியைப் பயன்படுத்திக் கொள்ளும். யாராக இருந்தாலும் இந்த
மூன்று கிரகங்களும் அடுத்தடுத்த கட்டங்களில், அதாவது 90 பாகைக்குள் மட்டுமே இருக்கும்.
அப்படியில்லையென்றால் ஜாதகம் தவறு!

வக்கிரகதி கிரக அமைப்பு உள்ள ஜாதகனுக்குச் சிரமங்கள் அதிகம். சுபக்கிரகம் வக்கிரகதியில் இருந்தால்
பலன்கள் கிடைப்பது தாமதமாகும்.

7 ற்கு உரிய கிரகம் (அதிபதி) வக்கிரகதியில் இருந்தால் திருமணம் தாமதமாகும். 10 ற்குரிய கிரகம் (அதிபதி)
வக்கிரகதியில் இருந்தால் வேலை கிடைப்பது அல்லது கிடைத்த வேலையில் உயர்வு எல்லாம் தாமதப்படும்.

செவ்வாய், குரு, மற்றும் சனி ஆகிய கோள்கள் சிலசமயங்களில் சில காலங்களுக்கு வக்கிரகதியில் இருக்கும்.
பஞ்சாங்கத்தில் அதைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதைப் பார்த்துத் ந்தெரிந்து கொள்ளலாம்.

You might also like