Professional Documents
Culture Documents
----------------------
கிரக யுத்தமானது முக்கியமாக முந்தை(Muntane Astrology) என்று சொல்லக் கூடிய இயற்கை சோதிடம்,
பிரச்சனம்,ஆரூடம் மற்றும் வருடபல ஜாதக முறைகளுக்கு முக்கியமாகப் பயன்படக் கூடியதாகும். மனித
ஜாதகங்களுக்கும் இதனைக் கணித்துப் பயன்படுத்திப் பலன் சொல்ல வேண்டியதாகவும் உள்ளது. மேலும்
இதுபோன்ற கிரக யுத்தம் ஏற்பட்ட காலம் மனிதர்களுக்குத் தோஷம் தருவதாகும். எனவே அதற்குக்
காம்ய சிராத்தம் செய்ய வேண்டும் என விஷ்ணு புராணம் எடுத்துரைக்கிறது. ‘நக்ஷத்ரக்ரஹபீடாஸு
துஷ்டஸ்வப் நவலோகநே, இச்சாச்ராத்தா நிகுர்வீத நவஸஸ்யாகமேதத‘. என்பதால் இதனை அறியலாம்.
1. செவ்வாய் முதல் சனி வரையிலான ஐந்து கிரகங்களில் ஏதேனும் இரு கிரகங்கள் ஒரே பாகை ஒரே
கலையில் இருக்க வேண்டும்.
2. இதில் ஒரு கலை மாறுபட்டிருந்தாலும் கிரக யுத்தம் நேரிடாது.
3. அவ்விரு கிரகங்களின் விக்ஷேபமும் (Latitude) ஒரே திக்கில் இருக்க வேண்டும்.
4. விக்ஷேபங்கள் (Latitude) மாறுபட்டிருந்தால் அதற்குக் கிரகச் சேர்க்கை (Conjunction) என்று
பெயரேயன்றி யுத்தம் அல்ல. கிரகச் சேர்க்கை என்பது அடிக்கடி ஏற்படக் கூடியதாகும். ஆனால் கிரகச்
சேர்க்கை ஏற்படும் ஒவ்வொரு முறையும் யுத்தம் நிகழ வேண்டுமென்பதில்லை. யுத்தம் அவ்விரு
கிரகங்களின் விக்ஷேபமும் ஒரே திக்கில் இருந்தால் மட்டுமே நிகழும்.
5. விக்ஷேபம் ஒரே திக்கில் இருக்கும் போது வடக்கு கிராந்தி (Declination) உடைய கிரகம் யுத்தத்தில்
வெற்றி பெறும். தெற்கு கிராந்தி உடைய கிரகம் யுத்தத்தில் தோல்வியைச் சந்திக்கும். ‘உதகஸ்தோ
தீப்திமாந் ஸ்தூலோ ஜயீயாம்யே பியோபலீ‘. (சூரிய சித்தாந்தம்). அதாவது : வடக்கு திசையில் இருந்தும்,
பார்வைக்குப் பிரகாசமாகக் காணப்பட்டும், பிம்ப கலையில் அதிகமாகவும் இருக்கும் கிரகம் யுத்தத்தில்
வெற்றியடைகிறது. தெற்குத் திசையில் இருந்தும், பிரகாசம் இல்லாமலும், பிம்பகலை குறைவாகவும் உள்ள
கிரகம் தோல்வியடைகிறது. ஆனால் சுக்கிரன் எந்த திக்கில் இருந்தாலும் வெற்றி பெறும். ‘உதகஸ்தோ
தக்ஷிணஸ்தோவா பார்கவ : ப்ராயசோஜயீ‘. (சூரிய சித்தாந்தம்).
யுத்தத்தின் வகைகள் :
கிரக யுத்தம் நான்கு வகைப்படும். அவையாவன : 1. உல்லேக யுத்தம் 2. பேத யுத்தம் 3. அம்ஸுமர்த்தன
யுத்தம் 4. அபசவ்ய யுத்தம் ஆகியவையாகும். இதுவன்றி ஐந்தாவதாக மேலும் ஒரு யுத்தமும் உண்டு.
அதற்கு கூட யுத்தம் என்பது பெயர். இந்த ஐந்து வகை யுத்தமும் எவ்வாறு ஏற்படுகின்றன ? அவற்றைக்
கணிப்பது எவ்வாறு ? அதனால் ஏற்படும் பலன்கள் என்ன ? என்பதைப் பற்றி இனி வரும் பதிவுகளில்
விரிவாகக் காண்போம்.
1. உல்லேக யுத்தம் :
யுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடிய இரண்டு கிரகங்களின் பிம்பங்களைக் கூட்டி இரண்டால் வகுத்துக் கொள்ள
வேண்டும். அதுபோன்றே அவ்விரண்டு கிரகங்களின் பிம்பங்களில் பெரியதில் இருந்து சிறியதைக்
கழித்துக் கொள்ள வேண்டும். இவ்விரண்டும் வித்தியாசம் ஏதுமின்றிச் சமமாக இருக்குமானால் அதற்கு
உல்லேக யுத்தம் என்று பெயர்.
2. பேத யுத்தம் :
ஆங்கில நூல்களில் பேதயுத்தம் பற்றிப் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது. “When two planets appear to
have a same direction of movement on account of overlapping they fight in Bheda. In this case the planet
nearer to us on earth completely obstructs the farther one”.
யுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடிய இரண்டு கிரகங்களின் பிம்பத்தைக் கூட்டி இரண்டால் வகுத்து வைத்துக்
கொள்ள வேண்டும். மேலும் அவ்விரண்டு கிரகங்களின் பிம்பங்களில் பெரியதில் இருந்து சிறியதைக்
கழித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கழித்த தொகையானது மேலே சொல்லியபடி பிம்பங்களைக்
கூட்டி இரண்டால் வகுத்த தொகையை விட சிறிதளவு அதிகமாக இருக்குமானால் அதற்கு அம்சுமர்த்தன
யுத்தம் என்று பெயராகும்.
5.கூட யுத்தம் :
யுத்தத்தின் வகைகள் :
டைகோ பிரே என்னும் வானியல் அறிஞர் செவ்வாய் 25, சனி 27'30", புதன் 32'30", குரு 41'15",
சுக்கிரன் 48'45" ஆகியவையே அவற்றின் பிம்பகலைகளாகக் குறிப்பிடுகின்றார். அதாவது
இவற்றின் பரிமாணங்களாக இவர் குறிப்பிடுவதாவது : செவ்வாய் 1’40", சனி 1’50", புதன்
2’10", குரு 2’45", சுக்கிரன் 3’15".
பிம்பகலை = 2 arctan ( ½ d / D )