You are on page 1of 6

ஒருவருடைய ஜாதகத்தில்...

1. லக்கினாதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?


2. பூர்வ புண்ணியாதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?
3. பாக்கியாதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?
4. லாபதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?

இந்த நான்கு கேள்விகளுக்குரிய பதில்களைச் ஆராய்ந்து பார்த்தால் ஒருவருடைய ஜாதகத்தின் சிறப்பு தெரிய
வரும்!

ஒருவருடைய சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே ஏற்றே நவகிரகங்கள் பலாபலன்களை வழங்குகிறது,
தனிப்பட்ட நன்மை தீமையை தர நவகிரகங்களுக்கு வல்லமை இல்லை..

ஒரு ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பதும், அவயோக பலன்களை அனுபவிப்பதும் லக்கினம் முதல்
பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே என்பதை கருத்தில் கொள்வது நல்லது,...

ஒருவரின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் சுய ஜாதக பாவக வலிமை நிர்ணயம் செய்யபடுகிறது, பனிரெண்டு
பாவகங்களுக்கு நவகிரகங்கள் வழங்கும் ஜீவ காந்த அலைகளின் அடிப்படையில் பலாபலன்கள் நடைமுறைக்கு
வருகிறது என்பதே உண்மை...

ஒரு ஜாதகத்தில் பலனை தெரிந்து கொள்வதற்கு ஜாதகங்களில் உள்ள பாவகங்களின் நிலை எப்படி உள்ளது
என்றும், தற்பொழுது நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம், ஆகியன எந்த பாவக பலனை நடத்துகிறது என்று
தெரிந்தாலே போதும்...

மேலும், அந்த பாவங்களுடன் தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் எவ்வித பலனை தருகின்றது என்பதை
கவனித்தால் மட்டுமே போதும் ஜாதக பலனை துல்லியமாக சொல்லிவிட முடியும்....

உதாரணமாக,
மிதுன லக்கினத்திற்கு 7 ம் வீடு பாதக ஸ்தானம்.. இதில் செவ்வாய் பகவான் இருந்து தசை நடத்தினால் என்ன
பலன் நடக்கும்...?

நாம் ஜாதக பலனை சொல்லும் பொழுது இந்த 7 ம் வீட்டுடன் தற்பொழுது கோட்சார ரீதியாக சமபந்தம் பெரும்
கிரகம் நன்மையை செய்கிறதா அல்லது தீமையை செய்கிறதா என்று கணிதம் செய்தால் மட்டும் போதும்....,

ஏனெனில் ஜாதகருக்கு அந்த 7ஆண்டு வரை நடக்கும் செவ்வாய் திசை 7 ம் வீட்டு பலனை மட்டுமே நடத்தும்.
மற்ற வீடுகளின் பலன் நடக்காது...

இதில் சம்பந்த பட்ட ராசி நெருப்பு தத்துவமாக இருப்பதால், ஜாதகர் முன் பின் யோசிக்காமல் தானே தனக்கு
கெடுதலை செய்து கொள்வார்..

சுய கட்டுப்பாடு இருக்காது..

சுய சிந்தனை வேலை செய்யாது.. இப்படியாக கணக்கிட வேண்டும்...

இதில் சந்திர ராசி ரீதியாக சனி பெயர்ச்சி என்றும், குரு பெயர்ச்சி என்றும் சொல்லி,தானும் குழம்பி, ஜாதகரையும்
பலர் குழப்பிவிடுகிறார்கள்..

மேலும்,

சிலருக்கு நடக்கும் செவ்வாய் திசை என்ன பலனை செய்கிறது என்று தெரியாமல், பழைய புத்தகங்களில் எழுதி
உள்ள பொது பலனை சொல்லி தப்பித்துகொள்ளும் நிலையில் இருக்கிறார்கள் ...

ஆக, சுய ஜாதகத்தில் நடக்கும் தசா புத்தியின் அடிப்படையில் கோச்சார பலனையும் சம்பந்த படுத்தி பலன்
பார்க்க வேண்டும்...
நட்சத்திரங்களின் எதிரிடை ,சாதக தன்மைகளை நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் பார்ப்பது
சூட்சும நிலை. பாதரீதியாக பார்ப்பது அதி சூட்சும நிலை.

எந்த ஒரு பாவாதிபதியானாலும் அந்த பாவாதிபதி பெற்ற நட்சத்திரத்தின் எதிரிடையான


நட்சத்திரத்தில் எந்த ஒரு பாவத்தின் அதிபதி நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி
எதிரிடையாக செயல்படுவார்.

இனிய காலை வணக்கம் நண்பர்களே..


சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப, தனது திசையில் குறிப்பிட்ட ஒரு பாவகத்தின்
பலனையோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாவகங்களின் பலனையோ ஏற்று நடத்துகிறது என்பதே உண்மை.

சுப கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு நன்மையை தரும், பாவக கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு
தீமையை தரும் என்று கணிப்பது தவறாக போய்விடும்..

சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் பலாபலன்களையே நவகிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம
காலங்களில் ஏற்று நடத்துகிறது என்பதே உண்மையாகும்...

எனவே சுய ஜாதகங்களில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் ஒன்று வலிமையாக இருப்பின், நடைபெறும்
பாவக கிரகத்தின் திசா புத்திகளும், தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நன்மையையும்
யோகத்தையும் வாரி வழங்கும்..

மாறாக, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் ஒன்று வலிமை அற்று இருப்பின், சுப கிரகங்களின்
திசாபுத்திகள் நடைபெற்றாலும், தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அவயோக பலன்களே
நடைமுறைக்கு வரும்...
ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை தருவதில்
பனிரெண்டு பாவகங்களுக்கும் உரிமை உண்டு..

நல்ல பாவகங்கள் அனைத்தும் நன்மை செய்யும் என்றும், தீமையான பாவகங்கள் அனைத்தும் தீமையை செய்யும்
என்பது முற்றிலும் தவறானது.

ஜாதகத்தை ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்..

ஒவ்வொரு பாவகத்திர்க்கும் இரண்டு விதகுணம் உண்டு..

ஒருவருக்கு நல்ல நிலையில் உள்ள 3 ,6 ,8 ,12 பாவகங்கள்,நடை பெரும் திசை, புத்திகளில் சம்பந்தபட்ட பாவக
வழியில் இருந்து நன்மையையும் செய்யும்.

கேந்திர, கோணம் எனும் பாவகங்கள் பாதிப்படைந்தால் ஜாதகருக்கு நடக்கும் திசை, புத்திகளில் சம்பந்தபட்ட
பாவக வழியில் இருந்து தீமையையும் செய்யும்..

ஒவ்வொரு ஜாதகமும் முற்றிலும் மாறுபட்டவை...


ஒருவரது ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் எனும் 6,8,12ம் வீடுகள் வலிமை இழந்து காணப்படுவது
சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் நன்மைகளை தராது.

துர் ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் 6,8,12 ம் வீடுகள் வலிமை இழப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரை
மேற்கண்ட பாவக வழியில் இருந்து தரும் இன்னல்களை அதிகரிக்கும் அமைப்பாகும்..

அடிப்படையில் மறைவு ஸ்தானங்களாக கருதப்படும், 6,8,12ம் வீடுகள் ஒருவருக்கு இன்னல்களை மட்டுமே தரும்
என்று கருதுவது தவறான அணுகுமுறையே..

மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தனது பாவக நிலையில் இருந்து நன்மைகளையும் தரும்...

உதாரணமாக;

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தமக்கு வரும் உடல் தொந்தரவுகளை எதிர்க்கும் வல்லமை, ஜாதகருக்கு
வரும் எதிர்ப்பு மற்றும் சவால்களை சரியான விதத்தில் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகம் என்ற வகையில்
நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பூர்ண ஆயுள் பலம், விபத்துகள் மற்றும் இழப்பு அற்ற வாழ்க்கை, உயில்
மூலம் லாபம், திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், இன்சூரன்ஜ், பங்கு வர்த்தகத்தில் லாபம், லாட்டரி மற்றும்
பரம்பரை சொத்துக்கள், பெண்கள் வழியில் லாபம் என்ற வகையில் நன்மைகளை பெற சுய ஜாதகத்தில் ஆயுள்
ஸ்தானமான 8ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக முதலீடுகள் செய்வதால் பெரும் தன்னிறைவான பொருளாதர
முன்னேற்றம், திருப்தியான யோக வாழ்க்கை, வெளிநாடுகள் மற்றும் வெளியூரில் பிரபல்யம் மற்றும் சொத்து
சேர்க்கை, மருத்துவம் மற்றும் மருந்துகள் மூலம் மிகுந்த லாபம் என்ற வகையில் நன்மைகளை பெற சுய
ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது.

ஆக,

ஒருவரது ஜாதகத்தில் இந்த மறைவு ஸ்தானங்கள் வலிமை இழப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த கடுமையான
பாதிப்புகளை தரும் என அறியலாம்..

அதே வேலையில் லக்கின திரிகோண ஸ்தானங்கள் பலம் குறைந்து, இந்த மறைவு ஸ்தானங்கள் பலம் பெறவும்
கூடாது....

You might also like