Professional Documents
Culture Documents
குரு எங்கு நிற்கிறாரோ அந்த ராசியில் அவர் வாங்கிய சாரத்தை நீங்கள் எடுக்க வேண்டும்.
உங்கள் லக்னப்படி அந்த சாரம் எந்த வீடு அந்த வீடும் அந்த வீட்டு அதிபதி எங்கு நிற்கிறாரோ அந்த இடமும்
பிரச்சனைக்கு உள்ளாகிறது.
ஒரு இருபது புகழ்பெற்ற 20 பேர்களின் _ ஜாதகங்களைக் குறிப்பிட்டு அவருடைய குரு எங்கிருக்கிறது? அவருக்கு
இதனால் என்ன பிரச்சனை என்பதை பாருங்கள்
அடுத்து ஹேமாமாலினி
அவரும் கடக லக்கனம் குரு ஆறில் மூல நட்சத்திரத்தின் சாரத்தில்
அந்த சாரநாதன் கேதுவும் நான்கில்
நான்கு என்பது தாய்மை கற்பு ஒழுக்கம் படிப்புப் பற்றியது அவர் சினிமாவில் இருந்தவர் எனவே நாலு என்கிற
இடத்தை தாங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ எடுத்துக் கொள்ளுங்கள்
கவிஞர் கண்ணதாசன்
அவர் சிம்ம லக்னம் குரு மீனத்தில் உத்திரட்டாதி சனியின் சாரத்தில் அந்த சனியும் நான்கில்
சிம்ம லக்கினத்திற்கு ஏழாம் இடம் மனைவி அவருக்கு எத்தனை மனைவி என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்
4-ஆம் இடம் ஒழுக்கம் - தண்ணீர் இவைகள் பற்றியது நீங்களே அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்
ரஜினிகாந்த் அவர்கள்
அவருக்கு குரு ஏழில் ராகுவின் சாரத்தில்
அந்த ராகு எட்டில் எட்டு என்பது உயிர் கண்டத்தை தருவது அவர் மிகப்பெரிய உயிர் கண்டத்தில் இருந்து
தப்பியுள்ளார் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்
மேலும் அந்த குருவும் ராகுவும் சார பரிவர்த்தனை
அவர் இரண்டாவது குழந்தையினால் - எவ்வளவு மனவேதனை பட்டார் என்பது உங்களுக்கே தெரியும்
திரு அமிதாபச்சன் அவர்களுடைய ஜாதகத்தில் - கும்ப லக்னம் குரு நின்றது கடகத்தில் புனர்பூசம் நான்காம் பாதத்தில்
இங்கேயும் நீங்கள் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் நான் வம்ச பிரச்சினை வருகிறது என்று சொன்னேன்
இவருடைய மூத்த மகனான அபிஷேக் பச்சனுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான்
ஆண் வம்சம் இல்லை என்பதை பாருங்கள்
ஆப்பிரிக்க தலைவர் திரு நெல்சன்மண்டேலா ஐயா அவர்களின் ஜாதகத்தில் - தனுசு லக்னம் குரு ஏழில்
திருவாதிரையின் சாரத்தில் அந்த ராகு பன்னிரண்டில் விருச்சிகத்தில்
12-ஆம் இடம் அயன சயன போகம் இவைகளை எதையும் அனுபவிக்க முடியாமல் அவர் நீண்ட நாள் சிறையில்
இருந்ததை நீங்களே எண்ணிப்பாருங்கள்
மற்றொரு முக்கியச்செய்தி உங்களுக்கு சொல்லி விடுகிறேன் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம் நான்காம் பாதம்
விசாகம் நான்காம் பாதம் பூரட்டாதி 4ஆம் பாதம் இவைகளில் உங்கள் லக்ன அதிபதியே நின்றால் -புனர்பூசம்
நான்காம் பாதம் விசாகம் 4ஆம் பாதம் பூரட்டாதி 4ஆம் பாதம் இவைகளில் உங்கள் லக்னாதிபதி அல்லது எந்த
அதிபதி நின்றாலும் அது சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு வரும் என்பதை நான் எவ்வாறு இவ்வளவு
ஆணித்தரமாக கூறுகிறேன் என்றால் - பகவான் ராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகத்தில் சந்திரன் புனர்பூசம் நட்சத்திரத்தில்
கடக ராசியில் இருப்பதை பாருங்கள்👀
சந்திரன் அவருக்கு லக்னாதிபதி - எத்தனையோ கிரகங்கள் உச்சம் அடைந்து இருந்தபோதும் அவர் அடைந்த
துன்பத்திற்கு அளவு தான் என்ன?
இங்கு நான் வம்சம் சம்பந்தமான பிரச்சினை வரும் என கூறினேன் அவர் தனது குழந்தைகளை எத்தனை ஆண்டு
காலம் பிரிந்து வாழ்ந்தார் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும்
மாபெரும் அஸ்திர வித்தையும் - தக்க சமயத்தில் பயன் தராமல் போனது ஏன்?- குரு சாபம் - ஒரு துரதிஷ்டமான
ஆன சம்பவம் என்பதையும் பாருங்கள் அர்ஜினனை கொல்ல மார்பில் அம்பு விடாமல் அர்ஜூனனின்தலைக்குக் கு
குறி வைத்து தோற்றதை பாருங்கள்
எனவே நண்பர்களே -இந்த குரு நின்ற இடம் பாழ் என்பது அவர் நின்ற சாரநாதன் எங்கு இருக்கிறானோ அந்த வீடு
சம்பந்தமான அழிவு தான் வருகிறது என்பதுதான் எனது கருத்து
இந்தப் பதிவிற்கு குரு மட்டும் தனியாக - அனைத்து கிரகங்களுக்கும் வெளியில் அதாவது ராகு கேதுவிற்கு வெளியில்
- குரு ஒரு புறமும்மற்ற கிரகங்கள் அனைத்தும் ஒரு பக்கமும் இருந்தால் இதுதான் தனித்திருத்தல் என்று பொருள்
அந்தமாதிரியான - குரு அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் அந்த பாவக ரீதியாக அந்தகார ரீதியாக வருகிறது
சாதாரணமாக தனித்திருத்தல் என்றால் எங்கு நிற்கிறாரோ அது சம்பந்தமான ஒரு சில பிரச்சனைகளை தருவார்.
அவ்வளவே ஆனால் - அதற்கும் முழுக்க முழுக்க இங்கு தனித்திருத்தல் என்பது நான் கூறியபடி தான் இருக்க
வேண்டும் இந்தக் கருத்தின்படி உங்கள் ஜாதகத்தில் உங்கள் குரு இருக்கும் நட்சத்திர அதிபதி எங்கு இருக்கிறாரோ
அந்த பாவமும் அதில் நிற்கும் கிரகமும் பிரச்சனையைத் தரும்