You are on page 1of 8

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், உணவு விருப்பம் கொண்டவர்கள்.

சுவையான உணவுகளில் மட்டுமே


நாட்டம் காட்டுவார்கள். சுவையான உணவு வகைகளும் ஆரோக்கியமான உணவு வகைகளை மட்டுமே
உண்பார்கள். அதேசமயம் உடல் நலக்கோளாறு எனப் பார்த்தால், நரம்புத் தளர்ச்சி, தோல் பிரச்சினைகள்,
மருந்துகளால் ஏற்படும் அலர்ஜி, சர்க்கரை நோய், அதேபோல அதீத போகத்தால் ஏற்படக் கூடிய ஆண்மைக்
கோளாறு முதலான பிரச்சினைகளும் இருக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திர தேவதை - காமதேனு
அதிதேவதை - மகா காலேஸ்வரர்
மிருகம் - பசு
பறவை - கோட்டான்
விருட்சம் - வேப்பமரம்

உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்ய பொருந்தக் கூடிய நட்சத்திரங்கள் -

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 81


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
உத்திரட்டாதி நட்சத்திரம் பற்றி பார்த்து வருகிறோம். மேலும் சில விஷயங்களை தொடர்ந்து பார்ப்போம்.
உத்திரட்டாதி காமதேனுவின் நட்சத்திரம் என்று சொன்னது நினைவிருக்கும். எனவே இவர்கள் செல்வ
வளத்திற்கு குறைவே இல்லாதவர்கள். இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தத் தொழில்
செய்தாலும் மிகச் சிறப்பான முன்னேற்றத்தையும், லாபத்தையும் காண்பார்கள். தொழிலில் சறுக்கல்
ஏற்பட்டாலும் சட்டென்று அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், விரும்பிய திருமணத்தை செய்பவர்கள் என்று பார்த்தோம்.கணவன்
மனைவி பிரிவு என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் இரண்டாவது திருமணத்திற்கும்
காரணமாக இருப்பது இந்த உத்தரட்டாதி, இதற்கு என்ன காரணம் என்பதையும் இப்போது பார்ப்போம்.
உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு எந்தவொரு விஷயமாக இருந்தாலும் விரைவில் அதன் மீதான பற்று
குறைந்து விடும். ஒரு வித சலிப்புத் தன்மை உண்டாகும். இதன் காரணமாகவே திருமணபந்தம் போன்ற
விஷயங்களில் ஒரு வித சலிப்பையும், ஆயாசத்தையும் தந்து பிரிவை நோக்கிக் கொண் டு செல்லும்.
வேறொரு துணையை நாட வைக்கும். மேலும் உத்திரட்டாதியில் பிறந்தவர்கள், அதீத போகம்
கொண்டவர்கள். எனவேதான் மலர் விட்டு மலர் தாவும் வண்டு போன்ற குணத்திற்கு உரியவர்களாக
இவர்கள் இருக்கிறார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், எந்தத் தொழில் செய்தாலும் அதில் விரைவில் முன்னேற்றத்தையும்,
வளர்ச்சியையும் காண்பார்கள், குறிப்பாக உணவுத் தொழில் மிகுந்த பக்கபலமாக இருக்கும். மிகச் சிறந்த
வளர்ச்சியைத் தரும். எனவே உணவுத் தொழில் செய்வதும், பயணங்கள் தொடர்பான தொழில்
செய்வதும், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட்
போன்ற தொழில்கள், வழக்கறிஞர், ஆசிரியர், பேச்சைத் தொழிலாக செய்தல், உபந்யாசம்,
கதாகாலட்சேபம், ஜோதிடம், நீதிபதி, மருத்துவர், மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்கள்,
மூலிகை வைத்தியம்/ தகவல் தொழில்நுட்பம், பத்திரிகைத் துறை, ஊடகத் துறை, கலை இலக்கிய
ஆர்வம், கலைத்துறை சார்ந்த நடிப்பு, பாட்டு, இசை போன்ற துறைகளிலும் வெற்றி பெறுவார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், உணவு விருப்பம் கொண்டவர்கள். சுவையான உணவுகளில் மட்டுமே
நாட்டம் காட்டுவார்கள். சுவையான உணவு வகைகளும் ஆரோக்கியமான உணவு வகைகளை மட்டுமே
உண்பார்கள். அதேசமயம் உடல் நலக்கோளாறு எனப் பார்த்தால், நரம்புத் தளர்ச்சி, தோல் பிரச்சினைகள்,
மருந்துகளால் ஏற்படும் அலர்ஜி, சர்க்கரை நோய், அதேபோல அதீத போகத்தால் ஏற்படக் கூடிய
ஆண்மைக் கோளாறு முதலான பிரச்சினைகளும் இருக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திர தேவதை - காமதேனு
அதிதேவதை - மகா காலேஸ்வரர்
மிருகம் - பசு
பறவை - கோட்டான்
விருட்சம் - வேப்பமரம்

உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்ய பொருந்தக் கூடிய நட்சத்திரங்கள் -

ஆயில்யம் - கேட்டை - ரேவதி -


இந்த நட்சத்திரத்தைக் கொண்டவரை வாழ்க்கை துணையாக அமைத்துக்கொண்டால், அதை இறைவனால்
போடப்பட்ட பந்தம் என்றே சொல்லவேண்டும்.
இன்னும் சிறப்பான முறையில் சொல்ல வேண்டுமென்றால் இப்படியான நட்சத்திரங்கள் திருமணப்
பொருத்தம் பார்க்க வந்தால், பொருத்தமே பார்க்கத் தேவையில்லை. ஜாதகத்தில் உள்ள தோஷங்களைக்
கூட பார்க்க வேண்டிய அவசியமில்லை என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது, முழுக்க முழுக்க நூறு
சதவிகிதம் பொருந்தக்கூடிய முழுமையான நன்மைகளை ஏற்படுத்தி தரக்கூடிய நட்சத்திர பொருத்தம்
இது. 99%
ரோகிணி - அஸ்தம் - திருவோணம் -
இந்த நட்சத்திர வாழ்க்கைத் துணை அமைவது நல்ல வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
சிறப்பான நன்மைகளை வழங்கும். வாழ்வை மிக உன்னதமாக உயர்த்தி விடுவதாக இருக்கும். மன
நிம்மதி மற்றும் மன நிறைவான வாழ்க்கை அமையும். 90%
திருவாதிரை - சுவாதி - சதயம் -
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த நட்சத்திர வாழ்க்கைத் துணை அமைவது சிறப்பான
நன்மைகளை ஏற்படுத்தி தருவதுடன், சுகபோக வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான, நிம்மதியான
வாழ்க்கையையும் தரக்கூடியது. பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் நிறைவான வாழ்க்கையை வாழ
வைக்கும். 90%
புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி -
இந்த நட்சத்திர வாழ்க்கைத் துணை அமைவது நன்மைகளைத் தருவதுடன், நிறைவான வாழ்க்கையையும்
தரும். சோர்ந்து போகும் நேரங்களில் உற்சாகத்தைத் தரக்கூடியதாகவும், மன அழுத்தத்திலிருந்து விடுதலை
தர கூடியவர்களாகவும் இருப்பார்கள். பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் மிகச்சரியாக
உதவிக்கரம் நீட்டுவார்கள். நன்கு புரிதல் உள்ளவர்களாக இருப்பார்கள். 85%
பொருந்தாத நட்சத்திரங்கள் அல்லது விலக்க வேண்டிய நட்சத்திரங்கள் -
பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி - பரணி - பூரம் - பூராடம் :-
இந்த நட்சத்திரங்களை ஒருபோதும் இணைக்கக்கூடாது. முற்றிலுமாக இந்த நட்சத்திரக்காரர்களை
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.
அஸ்வினி - மகம் - மூலம் :-
இந்த நட்சத்திரங்களைக் கொண்டவர்களை தவிர்ப்பது நல்லது. உத்திரட்டாதியில் பிறந்த உங்களால்
அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். ஆனால் அவர்களால் எந்த நன்மையும் உங்களுக்குக் கிடைக்காது.
இந்த நட்சத்திரக்காரர்களுடன் உறவாடினால், வாழ்க்கை கடுமையானதாக இருக்கும். சண்டை சச்சரவுகள்
ஓயாது. மன நிம்மதி பறிபோகும்.
கார்த்திகை - உத்திரம்- உத்திராடம் :-
இந்த நட்சத்திரக்காரர்களுடனான உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கையானது அவ்வளவாக
நன்மைகளைத் தராது. உங்களை வைத்து அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் வாழ்வார்களே தவிர,
உங்களுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்கமாட்டார்கள். உங்கள் சுகங்களில் பங்கு போட்டுக்
கொள்ளும் இவர்கள், உங்களுடைய சோகங்களை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். எனவே தவிர்ப்பது
நல்லது.
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் :-
இந்த நட்சத்திரக்காரர்களும் எந்த வகையிலும் உங்களுக்கு நன்மைகளையும், உதவிகளையும் செய்து தர
மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் மிகுந்த வேதனையோடு கழிக்க
வேண்டியது வரும். உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும். எனவே தவிர்ப்பதே நல்லது.

நண்பர்களாக இருக்க கூடியவர்கள் யார்? விலக்க வேண்டிய நபர்கள் யார்? என்பதை இப்போது
பார்ப்போம்.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி :-


இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் உங்களுக்கு நண்பர்களாக அமைந்தால் பல வகையிலும் உங்களுக்கு
உதவிகரமாக இருப்பார்கள். உங்களை நன்கு புரிந்துகொண்ட நண்பர்களாகவும், உங்களுடைய
தேவைகளை நிறைவேற்றித் தரக் கூடிய நபராகவும் இருப்பார்கள். உங்கள் சுக துக்கங்களில் உங்கள்
உறவுகளை விட அதிகமாக பங்கெடுப்பார்கள். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் உங்களை கை
விடாதவர்களாக இருப்பார்கள். நல்ல நட்புக்கு அடையாளமாகவும் இருப்பார்கள்.

பரணி - பூரம் - பூராடம் :-


இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் உங்களுக்கு பல வகையிலும் நன்மை தரக்கூடியவர்களாக
இருப்பார்கள். பொருளாதார சிக்கல்களைத் தீர்த்து தரக்கூடியவர்களாக இருப்பார்கள். உங்களுடைய
எண்ணங்களை செயல்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆபத்து சமயத்தில் காப்பாற்றும்
ஆபத்பாந்தவனாகவும் இருப்பார்கள்.
ரோகிணி - அஸ்தம் - திருவோணம் :-
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் பல வகையிலும் உங்களுக்கு உதவிகளைச் செய்யக் கூடியவர்களாக
இருப்பார்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தரக் கூடியவர்களாக இருப்பார்கள். பலவிதத்திலும்
உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உற்ற நண்பர்களாகவும் இருப்பார்கள்.
திருவாதிரை - சுவாதி - சதயம் :-
இவர்களும் உங்களுக்கு பல வகையிலும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். தேவையான நேரத்தில்
தேவையான உதவிகளைச் செய்து தர கூடியவர்களாக இருப்பார்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில்
உங்களுக்கு பல வகையிலும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு
எதிர்பார்ப்பில்லாத நண்பர்களாக இருப்பார்கள். அதேசமயம் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து
தர கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி :-
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவி செய்பவர்களாகவும்,
உங்கள் முன்னேற்றத்திற்கு பலவகையில் பக்கபலமாகவும் இருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் விலக்க வேண்டிய... விலகி இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் -

அஸ்வினி - மகம் - மூலம் :-


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு எந்தவகையிலும் சிறு உதவி கூட
செய்ய மாட்டார்கள், இன்னும் சொல்லப்போனால் கடுமையான பிரச்சினைகளில் உங்களை சிக்க வைத்து
விடுவார்கள். உங்கள் நிம்மதியைக் கெடுத்து விடுவார்கள். எனவே இந்த நட்சத்திரக்காரர்களை,
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் விலக்க வேண்டியது மட்டுமல்லாமல், விலகி இருக்க வேண்டியதும்
அவசியம்.

கார்த்திகை- உத்திரம்- உத்திராடம் :-


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் உங்களுக்கு எந்த உதவியும், நன்மையும் கிடைக்காது. இன்னும்
சொல்லப்போனால் அவர்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது வரும். உங்களுக்கு வரும்
ஆதாயங்களில் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பங்கு தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ஒரு வரியில்
சொல்ல வேண்டுமானால் இவர்கள் உங்களுக்கு கூடுதல் சுமையாகவே இருப்பார்கள்.
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் :-
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்குக் கடுமையான பிரச்சினைகளைத் தருவார்கள்.
தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கி வைத்துவிடுவார்கள். மனநிம்மதியைக் கெடுப்பவர்களாக
இருப்பார்கள். பிரச்சினையை உண்டுபண்ணிவிட்டு எந்தத் தடயமும் இல்லாமல் அவர்கள்
விலகிவிடுவார்கள். சிக்கலில் சிக்கித் தவிப்பது நீங்களாக இருப்பீர்கள். எனவே விலக்க வேண்டிய
நட்சத்திரக்காரர்கள் இவர்கள்.

அடுத்த பதிவில் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்குமான குணநலன்களையும் அவர்களின்


கேரக்டர்களையும் பலன்களையும் தனித்தனியாகப் பார்ப்போம்.

You might also like