Professional Documents
Culture Documents
வணக்கம் வாசகர்களே.
உத்திரட்டாதி நட்சத்திரம் பற்றி பார்த்து வருகிறோம். மேலும் சில விஷயங்களை தொடர்ந்து பார்ப்போம்.
உத்திரட்டாதி காமதேனுவின் நட்சத்திரம் என்று சொன்னது நினைவிருக்கும். எனவே இவர்கள் செல்வ
வளத்திற்கு குறைவே இல்லாதவர்கள். இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தத் தொழில்
செய்தாலும் மிகச் சிறப்பான முன்னேற்றத்தையும், லாபத்தையும் காண்பார்கள். தொழிலில் சறுக்கல்
ஏற்பட்டாலும் சட்டென்று அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், விரும்பிய திருமணத்தை செய்பவர்கள் என்று பார்த்தோம்.கணவன்
மனைவி பிரிவு என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் இரண்டாவது திருமணத்திற்கும்
காரணமாக இருப்பது இந்த உத்தரட்டாதி, இதற்கு என்ன காரணம் என்பதையும் இப்போது பார்ப்போம்.
உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு எந்தவொரு விஷயமாக இருந்தாலும் விரைவில் அதன் மீதான பற்று
குறைந்து விடும். ஒரு வித சலிப்புத் தன்மை உண்டாகும். இதன் காரணமாகவே திருமணபந்தம் போன்ற
விஷயங்களில் ஒரு வித சலிப்பையும், ஆயாசத்தையும் தந்து பிரிவை நோக்கிக் கொண் டு செல்லும்.
வேறொரு துணையை நாட வைக்கும். மேலும் உத்திரட்டாதியில் பிறந்தவர்கள், அதீத போகம்
கொண்டவர்கள். எனவேதான் மலர் விட்டு மலர் தாவும் வண்டு போன்ற குணத்திற்கு உரியவர்களாக
இவர்கள் இருக்கிறார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், எந்தத் தொழில் செய்தாலும் அதில் விரைவில் முன்னேற்றத்தையும்,
வளர்ச்சியையும் காண்பார்கள், குறிப்பாக உணவுத் தொழில் மிகுந்த பக்கபலமாக இருக்கும். மிகச் சிறந்த
வளர்ச்சியைத் தரும். எனவே உணவுத் தொழில் செய்வதும், பயணங்கள் தொடர்பான தொழில்
செய்வதும், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட்
போன்ற தொழில்கள், வழக்கறிஞர், ஆசிரியர், பேச்சைத் தொழிலாக செய்தல், உபந்யாசம்,
கதாகாலட்சேபம், ஜோதிடம், நீதிபதி, மருத்துவர், மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்கள்,
மூலிகை வைத்தியம்/ தகவல் தொழில்நுட்பம், பத்திரிகைத் துறை, ஊடகத் துறை, கலை இலக்கிய
ஆர்வம், கலைத்துறை சார்ந்த நடிப்பு, பாட்டு, இசை போன்ற துறைகளிலும் வெற்றி பெறுவார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், உணவு விருப்பம் கொண்டவர்கள். சுவையான உணவுகளில் மட்டுமே
நாட்டம் காட்டுவார்கள். சுவையான உணவு வகைகளும் ஆரோக்கியமான உணவு வகைகளை மட்டுமே
உண்பார்கள். அதேசமயம் உடல் நலக்கோளாறு எனப் பார்த்தால், நரம்புத் தளர்ச்சி, தோல் பிரச்சினைகள்,
மருந்துகளால் ஏற்படும் அலர்ஜி, சர்க்கரை நோய், அதேபோல அதீத போகத்தால் ஏற்படக் கூடிய
ஆண்மைக் கோளாறு முதலான பிரச்சினைகளும் இருக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திர தேவதை - காமதேனு
அதிதேவதை - மகா காலேஸ்வரர்
மிருகம் - பசு
பறவை - கோட்டான்
விருட்சம் - வேப்பமரம்
நண்பர்களாக இருக்க கூடியவர்கள் யார்? விலக்க வேண்டிய நபர்கள் யார்? என்பதை இப்போது
பார்ப்போம்.