Professional Documents
Culture Documents
ஊரில் குறைந்தது பத்தாயிரம் மக்கள் வாசித்தால் மட்டுமே வாஸ்து பார்க்க வேணடும். அல்லது தேவையில்லை.
இடம் வாங்குவதற்காக, இடம் பார்க்க போகும் முன் சகுனம் பார்க்க வேண்டும். சகுனம் சரியில்லையென்றால் இடம்
பார்க்க போகக்கூடாது.
வாங்கும் மனையின் உள் மண் நல்ல வாசனையுடன் இருக்க வேண்டும். கெட்ட வாசனை அல்லது வாசமில்லாமல்
இருந்தால் மனை வாங்க கூடாது.
பூமி பரிசோதனை அல்லது மண் பரிசோதனை செய்ய வேண்டும்
பரிகாரம்
அப்படி வசம் இல்லாத மனை வாங்கும் சூழல் வந்தால் வாசல் திசை பார்த்து அந்த திசைக்கு உரிய எந்திரம் வைத்து
வாஸ்து பூஜை செய்ய வேண்டும்.
சூரிய/சந்திர தோஷம்
பிளாட் கிழக்கு மேற்கு திசையில் நீளமாய் இருந்தால் சூரிய தோஷம்
வடக்கு தெற்கு திசையில் ஜீலமாய் இருந்தால் சந்திர தோஷம்
வைசாக தோஷம்
வீட்டில் பாம்பு பூரான் எறும்பு/கரையான் புற்றுக்கள் பூச்சிகள் கூடு கட்டுவது போன்றவை வீட்டில் தோஷம் உள்ளது
என்று காட்டும்.
மனை
நீரோட்டம், சாக்கடை சமாதி கோவில் இருக்கும் இடத்தில் இருந்தால் 100 அடி தள்ளி மனை இருக்க வேண்டும். 100
அடிக்குள் இருந்தால் தோஷம் வரும்.
சதுரம் நீள்சதுரம், கிழக்கில் சாய்வான மனைகள் நன்று
வட்டமாய் அல்லது கிழக்கு அல்லாமல் வேறு திசையில் சாய்வான மனைகள் தோஷம்
கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீடுகள் தோஷம் இல்லை.ஆனால் எதிர் உள்ள வீடுகள் கோவிலின் வாசலுக்கு 45
டிகிரி சாய்வாக நூறு அடி தள்ளி மட்டுமே இருக்க வேண்டும். 45 டிகிரி சாய்வாக 100 ஆடி தூரம் 3 வீடுகள் தோஷம்.
நல்ல விதமாய் இருக்க மாட்டார்கள். கோவிலுக்கு எதிர் இருக்கலாம் தோஷம் இல்லை. ஆனால் 45 டிகிரியில் உள்ள
வீடுகள் மட்டும் தோஷம். சின்ன கோவிலோ, பெரிய கோவிலோ, தோஷம் உண்டு.
சமாதியை பார்க்கும் விதமாக வீடு இருக்க கூடாது. அப்படி இருந்தால் உயரமான சுவர் கட்டி கொள்ளலாம்
சுற்று சுவர்
வீடு கட்டுமுன் முதலில் சுற்றுச்சுவர் அல்லது வேலி கட்டியபின் வீடு கட்ட வேண்டும். அல்லது அடுத்த மனையின்
தோஷம் நம் மனைக்குள் நுழைந்துவிடும்
அல்லது தென் மேற்கு மூலையில் 2 செங்கல் வைக்க வேண்டும். அடுத்து தென் கிழக்கில், அடுத்து வாடா மேற்கில்,
கடைசியாய் வடகிழக்கில் வைத்தது பின் வாஸ்து பூஜை செய்ய வேண்டும். வாஸ்து பூஜை செய்யும் முன் சுற்றுச்சுவர்
அல்லது வெளி அல்லது செங்கல் வைக்க வேண்டும்.
வாசல்
ஜாதகம் பார்த்து வைக்க கூடாது. வீடு காட்டும் காலத்தில் வீட்டில் உரிமையாளர் யாரோ அவர் பெயரின் முதல்
எழுத்து வைத்து வாசல் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.
அனைத்து கதவுகளும் இடது கையில் திறப்பது போல் வைக்க வேண்டும்
முன் வாசலும் பின் வாசலும் நேர் கோட்டில் வர கூடாது. விதவைகள் உருவாகுவார்கள்.
முன் வாசலுக்கு 45 டிகிரியில் பின் வாசல் அல்லது ஒரு ஜன்னல், ஒரு துவாரம் போன்று ஏதாவது இருக்க வேண்டும்.
வீட்டில் உள்ள கதவு ஜன்னல் வெண்டிலேட்டர் எஸ்ஹஸ்ட் பேன் அல்லது காற்றுக்காக உள்ள ஓட்டைகள் எல்லாம்
சேர்த்து மொத்தமாக இரட்டை படையில் இருக்க வேண்டும். தனித்தனியாக வாசல் இரட்டைப்படை ஜன்னல்
இரட்டைப்படை என்று அல்ல.
நிலைப்படி கடைசியில் சிமெண்ட் பூசும் முன் தான் வைக்க வேண்டும்.
முதலில் வீட்டுக்காரன் தாண்ட வேண்டும். மற்றவர் கூடாது.
வாசல் கதவு ஒன்றாவும் இருக்கலாம் இரண்டாகவும் இருக்கலாம். ஆனால் 2 பலகை சேர்தது ஒரு கதவாய் செய்ய
கூடாது.
வாசல் கதவு உரிமையாளரின் உயரத்தை விட ஒரு அடி மட்டுமே அதிகம் இருக்க வேண்டும்.
வாசல் கதவிற்கு மேல் கண்ணாடி டிசைன் ஜன்னல் வைக்க கூடாது.
சுவற்றில் இருந்து ஒரு செங்கல் தூரமாவாது தள்ளி இருக்க வேண்டும். சுவரை ஒட்டி இருக்க கூடாது.
நிலையுடன் சேர்ந்து உள்ள ஜன்னல் கூடாது. நிலை தனியாக இருக்க வேண்டும். ஜன்னல் குறைந்தது ஒரு செங்கல்
அளவிற்காவது தள்ளி இருக்க வேண்டும்.
முதலில் எல்லா வாசல் நிலையும் வைத்து விட்டு பின் கடைசியாக தான் மெயின் நிலை வைக்க வேண்டும். மெயின்
நிலை வைத்த பின் மற்ற நிலைகள் வைக்க கூடாது.
வாசல் வைக்கும் நாள் கோழி பலி வேண்டும்.
9 பாகமாக பிரித்து கிழக்கு வாசல் என்றால் கிழக்கில் இருந்து என்ன வேண்டும். வடக்கு பார்த்த வாசலென்றால்
கிழக்கில் இருந்து மேற்கு திசையில் என்ன வேண்டும். தெற்கு பார்த்த வாசலென்றால் கிழக்கில் இருந்து தெற்கு
திசையில் என்ன வேண்டும். மேற்கு வாசலென்றால் வடக்கில் இருந்து தெற்காக என்ன வேண்டும்.
பொது
தாத்தாவின் பெயரை வைப்பது பரம்பரை சொத்து போகாது என்பதால்
வடக்கில் தலை வைத்து படுப்பது விசேஷம்
ஒருவர் ஜாதகத்தில் சனி இருக்கும் திசைக்கு எதிர் திசை அமர்ந்து வேலை செய்ய வேண்டும். அதாவது
சனியை பார்க்க கூடாது.
o அக்கினி தத்துவம் கிழக்கு
o நில தத்துவம் மேற்கு
o காற்று தத்துவம் தெற்கு
o நீர் தத்துவம் வடக்கு
வீட்டை சுத்தம் செய்வது பழைய சாமான் தூக்கி போடுவது எல்லாம் சனி புதன் மட்டும் செய்ய வேண்டும்.
6 மாதத்திற்கு மேல் பயன்படாது பொருள்கள் எல்லாம் 6 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து வைக்க
வேண்டும். உபயோகம் இல்லையென்றால் யாருக்காவது கொடுத்துவிட வேண்டும். அல்லது தூர எறிந்துவிட
வேண்டும். வீட்டில் வைத்தால் தரித்திரம்
வாஸ்து பூஜை
வாஸ்து தேவன்: உரிமையாளரின் ஒரு சான் அளவு மட்டுமே லிங்க வடிவில் இருக்க வேண்டும். கோவில் அரண்மனை
கட்ட ஒன்னறையடி இருக்கலாம். வீட்டிற்கு ஒரு சான் மட்டுமே. அடிப்பக்கம் தஞ்சாவூர் பொம்மை போன்று லேசாக
வளைந்து இருக்க வேண்டும். அதில் மூன்று வட்ட கோடுகள் போட்டு மூன்று பாகங்களாக பிரித்து கொள்ள வேண்டும்.
வாஸ்து பூஜை செய்யும் முகூர்த்தம் அந்த வீடு எதனை ஆண்டுகள் சுபீட்சமாய் இருக்கும் என்று காட்டும்.
மனையின் மத்தியில் இருந்து வடக்கே 10 அடி தள்ளி வாஸ்து பூஜை செய்ய வேண்டும்.
பூஜை செய்வதர்க்கு முதல் நாள் உரிமையாளரின் கையில் ஒரு முழம் அளவிற்கு நீளம், அகலம் ஆழம் பள்ளம்
பறித்து, அதில் சல்லிய தோஷம் விலக 4 லிட்டர் பால் விட்டு மஞ்சள் குங்குமம் பூக்கள் போட்டு வைக்க வேண்டும்.
மிக முக்கியமாக ஊற்றிய பாலை பூமி உறிஞ்சிவிட வேண்டும். 2 லிட்டர் பாலுடன் 2 லிட்டர் தன்னீர் கலந்து விடலாம்.
நன்கு பூமியில் உறிஞ்சும்.பள்ளம் பறிக்கும் மண்ணை பள்ளத்திற்கு வடக்கில் மட்டும் வைக்க வேண்டும்.
பரிகாரம் 1
இப்படி வாஸ்து பூஜை செய்யாமல் வீடு கட்டி விட்டால்
4 பிராமணாள் வரவேண்டும்
108 மண் கலசம் வாங்கி, அதில் சமுத்திர மண், மூன்று ஆற்றின் மண், கோவில் மண் எல்லாம் போட்டு, அதில் ஒரு
பெரிய பானையில் எல்லாம் போட்டு, அதில் நவதானியங்கள் போட்டு, நவரத்திரங்கள் போட்டு வாஸ்து பூஜை செய்து,
பிரச்சிர்த்த ஹோமமும் செய்து பின் அந்த பெரிய பானையை, வடகிழக்கில் உள்ள சுற்று சுவரில் ஒரு பிறை போன்று
செய்து அதில் வைத்து சிமெண்ட் கொண்டு மூடி விட வேண்டும். சுற்றுச்சுவர் அகலம் கம்மியாக இருந்தால்
அதிகப்படியாக ஒரு சுவர் கட்டி அதில் வைத்து மூடிவிடலாம்.
கிரகப்பிரவம் செய்யும் நாளுக்கு முதல் நாள் சூரிய அஸ்தமனம் முன் வீட்டை சுத்தம் செய்து கோலம் போட்டு,
சாமிபடம், விளக்கு திரி அடுப்பு வைத்து விட்டு வரவேண்டும். வாசலுக்கு மஞ்சள் பூ மாலை எல்லாம் போட்டு வைக்க
வேண்டும். எண்ணெய் தீப்பெட்டி வைக்க கூடாது. வேறு எந்த பொருளும் வைக்க கூடாது. கதவு ஜன்னல் எல்லாம்
மூடி வைக்க வேண்டும். ஓட்டைகள் எல்லாம் காதிகம் கொண்டு அடைத்து வைக்க வேண்டும். பேய் பிசாசுக்கள் உள்
நுழைந்துவிடும்.
எத்தணை மணிக்கு பிரவேசம் செய்ய வேண்டுமோ அத்தனை மணிக்கு 10 நிமிடம் முன் சென்று மந்திரம் சொல்லி
கற்பூரம் காட்டி கதவை திறந்து உள் செல்ல வேண்டும். 9 மந்திரங்கள் சொல்லி மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.
சென்ற உடன் சாமிக்கு விளக்கு ஏற்றி கும்பிட்டு பால் காச்சி. காச்சிய பாலை வந்தவர்களுக்கு இனிப்புடன்
கொஞ்சமாய் தர வேண்டும். நிறைய தர கூடாது. சாஸ்திரத்திற்கு தர வேண்டுமே தவிர நிறைய தந்தால் லஷ்மி விலகும்.
அதன் பின்தான் வாத்தியார் வைத்து ஹோமம் செய்ய வேண்டும். ஹோமம் செய்யும் முன் அடுப்பு ஏற்றி பால்
காச்சலாம். அடுப்பை பற்றவைத்து லக்ஷ்மியை வரவைத்து விடவேண்டும். பின் ஹோமம் செய்யவேண்டும்.
நடுராத்திரியில் எந்தவிதமான ஹோமமும் பூஜையும் செய்ய கூடாது.
நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், லட்சுமி கணபதி ஹோமம் செய்யவேண்டும். வீட்டில் குழந்தைகள் நிறைய
இருந்தால் 22 செய்ய வேண்டும். குழந்தை குறைவாய் இருந்தால் 9 உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
திகபந்தனம்: பூசணிக்காய் வெட்டி ஒவ்வொரு மூலையிலும் 8 திக்கும் ஒரு மந்திரம் சொல்லி வைக்க வேண்டும்.
ஹோமம் செய்யும் வாத்தியார் செய்வார்.
பணப்பிரசிச்சினைக்கு பரிகாரம்
மலேசியன் மூங்கில் செடியை தென்மேற்கு மூலையில் காம்பௌண்ட் உள்ளே வைக்க வேண்டும். அதை நான்கு
அடிக்கு மேல் வளரவிடாமல் நறுக்கி வைக்க வேண்டும்.
சரியாக 1 மாதம் கழிந்தபின் பானையை தனியாகவும் துணி கயிறை தனியாகவும் குளம் ஆறு கிணற்றில் போட்டு
விட்டு புதிய பானையில் புதிய தேன் ஊற்றி, புதிய வெள்ளை துணி கொண்டு மூடி, கருப்பு கயிற்றில் கட்டி
வடகிழக்கில் தொங்கவிடவேண்டும். இப்படி 5 மாதம், 5 பானை ஆன பின், ஆறாவது பானையை 1 வருடம் கட்டி
வைக்க வேண்டும். பின் ஏழாவது பானையை 3 வருடம் கட்டி வைக்க வேண்டும். பின் அதையும் நீரில் விட்டுவிட
வேண்டும். பின் எதுவும் தேவையில்லை