You are on page 1of 9

தோஷம் பரிகாரம்

 பரிகார மந்திரம் சொல்லும் முன் அல்லது பரிகாரம் செய்ய கோவிலுக்கு செல்லும் முன்மூன்று முறை “ஓம்
நமக ஓம் ஓம்” என்று சொல்லி பின் பரிகார மந்திரம் சொல்ல வேண்டும், கோவிலுக்கு செல்ல வேண்டும்.
 அதன் பின் இதை அடைவதற்கான மனோ பலம் கொடு என்றும் வேண்டிக்கொள்ள வேண்டும்
 மனோ பலம் உள்ளவர் மட்டுமே பரிகாரம் செய்ய முடியும், செய்வார், நம்பிக்கையும் வேண்டும்.
 திதி தோஷம் என்பது முகூர்த்த லக்கினம் பார்க்க மட்டுமே

1. குருவும் செவ்வாயும்:
a. செவ்வாயும் குருவும் அவர்களுக்குள் அமைந்த விதமும், லக்கினத்திற்கு அமைந்தவிதமும் தோஷம்
காட்டும். 6/8; 2/12 என்று அமைந்து இருந்தால் தோஷம்.
b. 45 நாட்களுக்கு தினமும் காலையில் குளித்து, புதிய மண் விளக்கில், மஞ்சள் பொடி கலந்த நெய்யில்,
மஞ்சள் துணியில் செய்த புதிய திரி போட்டு, விளக்கேற்றி, பத்மாசனத்தில் அமர்ந்து ஓம் ஸ்ரீ குருயாய
நமக; ஓம் ஸ்ரீ அங்காரயாய நமக, என்று 9 முறை சொல்லி வர வேண்டும். விளக்கு அதுவாக
அணையும் வரை விட்டுவிட வேண்டும்.

2. திக் பலம்:
a. திக் பலம் பெற்ற கிரகம் அந்த பாவத்தில் அமர்ந்தாலோ, அந்த பாவத்தை பார்த்தாலோ, அந்த பாவ
அதிபதியை பார்த்தாலோ, பலம் கிடையாது. ஆனால் சில லக்கினத்திற்கு மட்டும் பலம் தரும்.
b. 1 க்கு குருவும் புதனும். குருவும் புதனும் லக்கினாதிபதியின் சாரத்தில் இருந்தாலோ அல்லது
லக்கினாதிபதி குருவையே அல்லது புதனையோ பார்த்தாலோ, லக்ன பாவத்திற்கு பலம் உண்டு
c. 4 க்கு சந்திரனும் சுக்ரனும். சந்திரனும் சுக்ரனும் 4 ம் பாவாதிபதியின் சாரத்தில் இருந்தாலோ அல்லது
4 ம் அதிபதி சந்திரனையோ அல்லது சுக்ரனையோ பார்த்தாலோ 4 ம் பாவத்திற்கு பலம் உண்டு
d. 7 க்கு சனியும் ராகுவும். சனியும் ராகுவும் சப்தமாதிபதியின் சாரத்தில் இருந்தாலோ அல்லது 7 ம்
அதிபதி சனியையோ அல்லது ராகுவையோ பார்த்தாலோ 7 ம் பாவத்திற்குபலம் உண்டு
e. 10 க்கு சூரியன், செவ்வாய் கேது. சூரியன், செவ்வாய், கேது 10 ம் அதிபதியின் சாரத்தில் இருந்தாலோ
அல்லது 10 ம் அதிபதி சூரியனையே, செவ்வாய்யையோ அல்லது கேதுவையோ பார்த்தாலோ 10 ம்
பாவத்திற்கு பலம் உண்டு
f. அந்த பாவதிபதிகள் திக்பலம் பெற்ற கிரகங்களை பார்த்தல் பாவம் வலிமை பெரும்.
g. சனியோ ராகுவோ சுய சாரத்தில் இருந்தால் அது 7 ம் பாவத்திற்கு பலம் தரும்.
3. தத்துவம்: கிரகங்கள் தங்களுடைய தத்துவத்திற்கு மாறான தத்துவத்தில் இருந்தால் அது தோஷம்.
 லக்கினம்:- குரு; புதன்; கிழக்கு: அக்னி
 4 ம் பாவம்:- சந்திரன்; சுக்ரன்: வடக்கு; நீர்
 7 ம் பாவம்:- சனி, (ராகு): மேற்கு; நிலம்
 10 ம் பாவம்:- சூரியன், செவ்வாய், (கேது): தெற்கு; காற்று
 தத்துவ ரீதியாக கிரகங்கள் இணைந்தால் அந்த பாவம் நன்கு. உதாரணமாய் குரு/ புதன்/ சூரியன்/ செவ்வாய்
காற்று அல்லது அக்னியில் இருந்தால் நன்று.
 கிரகங்கள் தத்துவம் மாறி இருந்தால் அது தோஷமாக கருத வேண்டும்
 லக்கினம் எங்கு உதயமாகிறதோ அது அக்னி என்றும் கிழக்கு என்றும் கருத வேண்டும்.
 லக்கினம் என்பது பொதுவானது. எனவே லக்கினம் எந்த தத்துவமோ அந்த தத்துவத்திற்கு
அனுசரணையாக உள்ள தத்துவத்தில் இருக்கும் கிரகங்கள் லக்கினத்திற்கு நன்மை

4. கேந்திரத்தில் தீய கிரகம் இருக்க வேண்டும். சுப கிரகம் இருப்பது தோஷம். கேந்திரம் என்பது
லக்னத்திலுருந்தும், சூரியனிடமிருந்து, சந்திரனிடமிருந்தும் பார்க்க வேண்டும்.

5. நட்சத்திர தோஷத்திற்கு பரிகாரம் கிடையாது.


a. புதன் கிழமை ஆயில்ய நட்சத்திரம் தோஷம்
b. திங்கள் அல்லது வியாழன் கிழமையில் விசாகம் தோஷம்
c. செவ்வாய் கிழமையில் மூலம் கேட்டை தோஷம்

6. சுப வீட்டில் தீய கிரகம் அமர்ந்தாலோ அல்லது தீய வீட்டில் நல்ல கிரகம் அமர்ந்தாலோ தோஷம். இதற்கு
சௌந்தர்ய லஹரியில் 10, 48 ம் சுலோகங்கள் தினமும் சொல்ல வேண்டும். சுமார் 1 லட்சம் முறை சொன்னால்
தோஷம் நீங்கும்.

7. செவ்வாய் 2 4 7 8 12 ல் இருந்தால், 45 நாட்களுக்கு, தினமும் காலை 6 மணிக்கு படிகார நீர் கொண்டு வாய்
கொப்பளித்து, பின் பல் விளக்கி வந்தால் தோஷம் நீங்கி விடும்.

8. 3, 6 க்கு உரியவன் 9 ல் அமர்ந்தால் பிரம்மா கத்தி தோஷம் அல்லது பசுவை கொன்ற தோஷம்

9. கேந்திரங்கள், பணபரங்கள், ஆபோகிளிமங்கள் மாறி இருப்பது தோஷம்

10. பாவ பிணைப்பில் இரண்டு முறை 2/12 பிதுர் சாப தோஷம். 6/8 என்று வந்தால் அது பிரம்மகத்தி தோஷம்
பரிகாரங்கள்
5/9 பாவ பிணைப்பு பாதிக்கப்பட்டிருந்தால் திருக்கோஷ்டியூர் செல்ல வேண்டும்

நோய் வந்து நீண்ட நாள் படிக்கையில் யாரவது இருந்தால், தெற்கு பக்க சுவற்றில் அல்லது கதவில் உள் பக்கமோ
அல்லது வெளி பக்கமோ நீள்சதுர வெள்ளி தகடு புதிய ஆணி கொண்டு அடித்து வைத்தால் குணமடையும் அல்லது
அவரின் கடைசி காலம் வந்து விடும்.

சகோதர மனஸ்தாபம் இருந்தால் அவருக்கு மிகவும் பிடித்த பொருள், சட்டைதுணி போன்றதை அவருக்கு தானமாய்
3/11 முகூர்த்த நேரத்தில் தர வேண்டும். அவர் வாங்க வில்லை என்றால் அதை நதியில் விட்டு விட வேண்டும்

ராகு கேது தோஷம்: ராகுவும் கேதுவும் தத்துவங்கள் மாறி இருப்பது ராகு/கேது தோஷம் ராகு கேது தோஷம்
நீங்க, புதிய மூடியுடன் கூடிய தாமிர கிண்ணத்தில் புதிய நீர் ஊற்றி தலையணை அருகில் வைத்துக்கொண்டு தூங்க
வேண்டும். காலையில் நீரை அரச மரத்தடியில் விட்டு விட வேண்டும். இப்படி 18 நாள் செய்ய வேண்டும். 27 ம் நாள்
அந்த கிண்ணத்தை தானம் தந்து விட வேண்டும்.

தனம் சேர
ஒரு பிடி வெந்தயம் எடுத்து வெள்ளை துணியில் முடிந்து, ஜனன ஜாதகத்தில் 10 பாவத்திற்கு 3/11 கிரகங்கள் இணையும்
நேரத்தில் (முகூர்த்தம்) எடுத்து சாமியிடம் வைத்து விட வேண்டும். 45 தினங்களுக்கு தினமும் குளித்து முடித்து
வெந்தய முடியை கையில் வைத்துக்கொண்டு “ஓம் ஸ்ரீ புதாய நமக” “ஓம் ஸ்ரீ சுதர்சனாய நாமக” “ஓம் ஸ்ரீ லட்சுமி
பதியே நமக” என்று 10 முறை சொல்லி விட்டு முடியை சாமியிடம் வைத்து விட வேண்டும். வைக்கும் போது எனக்கு
தனம் சேர வேண்டும். என் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று கூறி வைக்க வேண்டும். வைக்கும் போது
முடிந்தவரை ஒரு நோட்டு பணம் (நூறு ரூபாய் அல்லது இராண்டாயிரம் ரூபாய்) வைக்க வேண்டும். அந்த பணத்தை
புதன் கிழமை குரு ஹோரையில், நமது ஜனன ஜாதகத்திற்கு 10 க்கு 3/11 வரும் நேரத்தில், வங்கியில் கட்டிவிட
வேண்டும். முதல் ஒரு நாள் மட்டும் பணம் வைத்து அதை வங்கியில் கட்ட வேண்டும். மற்ற நாட்களில் பணம் வைக்க
வேண்டியதில்லை. 45 நாட்கள் கழிந்த பின் வெந்தய முடியை ஒரு டப்பாவில் போட்டு சாமியிடம் வைத்து விட
வேண்டும். எடுக்க கூடாது.

பில்லி சூன்யம்:
 10 ல் சூரியன், அல்லது 6 ல் செவ்வாய், அலல்து 12 ல் சனி, அல்லது 2 ல் ராகு இருந்தால் ஜாதகருக்கு பில்லி
சூன்யம் இருப்பதாக அர்த்தம். அதாவது தீய எண்ணங்கள் உடையவர்கள் அவருக்கு பக்கத்தில் இருப்பார்கள்.
 இவர்கள் செவ்வாய் கிழமை அய்யனார் அல்லது காளிக்கோவிலுக்கு சென்று, ஓம் ஸ்ரீ ராகுவே நமக ஓம் ஸ்ரீ
கேதுவே நமக என்று 9 முறை சொல்லி வணங்கி வர வேண்டும்.
 வருடத்திற்கு ஒரு முறை சூரியனார் கோவிலுக்கும் சென்று வணங்கி வர வேண்டும்.
சனி செவ்வாய்:
 சனி லக்கினத்திற்கு 5 10, 12 ல் இருந்தால், அல்லது செவ்வாய் 2, 12 ல் இருந்தால், அன்னதானம் செய்ய
வேண்டும்.
 இப்படி செய்ய முடியாதவர்கள் மாதம் ஒரு முறை, வாழ்நாள் முழுவதும், ஒரு பிடி அரிசி எறும்பு புற்றிற்கு
போட வேண்டும்.
 இதையும் செய்ய முடியாதவர்கள் இரவு மீந்து போன சாதத்தை மறுநாள் காலை கொஞ்சம் பால் சேர்த்து
காக்கைக்கு போட்டுவிட வேண்டும்.
 இதில் எதோ ஒன்றை செய்த கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.

சூரியன் சந்திரன்:
 சூரியனோ அல்லது சந்திரனோ 4, 5, 9 ல் இருந்தால் திங்களூர் சென்று முறைப்படி வழிபட்டு வர வேண்டும்.
 அப்படி செய்ய முடியாதவர்கள் எதோ ஒரு சிவன் கோவில் செண்டு ஓம் ஸ்ரீ சூர்யாய நமக, ஓம் ஸ்ரீ
சோம்யாய நமக என்று 10 முறை கூறி வாழ்க்கை நல்லபடியாய் வளமாய் இருக்க வேண்டும் என்று
பிரார்த்தனை செய்து வர வேண்டும். இதை 10 முதல் 25 வயது வரை அல்லது 30 முதல் 45 வயது வரை
மட்டுமே செய்ய வேண்டும். மார்த்தா வயதில் செய்ய கூடாது/தேவையில்லை.

மனதிருப்ப்தியுடன் வாழ
திருவாசகதில் அம்மையே அப்பா என்று ஆரம்பிக்கும் 17 வரிகள் கொண்ட பாடல் 17 முறை தினமும் படிக்க
வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

நவரத்ன மோதிரம்
 லக்கின உப கிரகம் 11 ம் வீட்டை குறிகாட்டினால் அந்த கல் அணியலாம் மிகவும் நன்று.
 11 ம் பாவ அதிபதி எந்த கிரகத்திற்கு உப கிரகமாய் இருக்கிறாரோ அந்த கிரகத்தின் கல் அணியலாம்.
அதாவது 11 ம் பாவ அதிபதி சூரியன் புதனுக்கு உப கிரகம். எனவே புதனுக்கு உரிய கல் அணியலாம்.
 எந்த கிரகத்திற்கும் உப கிரகமாய் வராவிட்டால் அணிய கூடாது.
 அந்த கிரகம் 8, 12 க்கும் உப கிரகமாய் வந்தால் கல் அணிய கூடாது.
 11 ம் அதிபதி 8 ல் இருந்தால் பிரச்சினை இல்லை. அதற்குரிய கல் அணியலாம்.
 சனி மோதிரம் இடது கையில் அணிய வேண்டும்.
 மற்ற மோதிரங்கள் வலது கையில் அணிய வேண்டும்.
 மோதிரங்கள் அணியும் முன் அந்த ஓரையில் காரியங்கள் செய்து பார்த்து காரியங்கள் வெற்றிகரமாய்
இருந்தால் பின் நவரத்தின மோதிரம் அணிய வேண்டும்.
 முத்துக்கு பதில் வெள்ளை கிரிஸ்டல் கல் அல்லது அமெரிக்கன் வைரம் போட வேண்டும்.
 பவளத்துக்கு பதில் சிவப்பு கல் அணியலாம்.
 மோதிரம் கீழே அடைத்து இருக்க வேண்டும். ஓட்டை கூடாது.
 மோதிரம் செய்து வந்த பின் பச்சை பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் கழுவி விபூதி சந்தனம்
குங்குமம் வைத்து அந்த குறிப்பிட்ட ஓரையில் அந்த கிரகத்தின் மந்திரம் உம்: புதனுக்கு ஓம் புதாய நமக
என்று சொல்லி அணிய வேண்டும். தினமும் காலை குளித்து கையில் அந்த மோதிரம் வைத்துக்கொண்டு அந்த
கிரகத்திற்கு உரிய மந்திரம் சொல்லி அணிந்துகொள்ள வேண்டும்.
 அதுபோன்று 21 நாட்கள் போட்டுகொண்டால் மோதிரத்திற்கு பலம் வரும்.
திருமண தடை நீங்க
மஞ்சளை மஞ்சள் துணியில் கட்டி தலையணை அடியில் வைத்து உறங்க வேண்டும். காலையில் குளித்து மங்கள் முடி
எடுத்து 3 முறை திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அத்துடன் ஓம் ஸ்ரீ குருப்யோ
நாமாக என்று சொல்ல வேண்டும். இப்படி 28 நாள் சொல்ல வேண்டும். 28 ம் நாள் அந்த மஞ்சள் முடியை ஓடும்
நதியில் போட்டுவிட வேண்டும்

நவதான்யத்தில் ஒவ்வொன்றிலும் 27 எண்ணிக்கை எடுத்து மஞ்சள் துணியில் கட்டி சாமியிடம் வைக்க வேண்டும். 90
நாட்களுக்கு தினமும் குளித்து நவதானிய முடியை கையில் வைத்துக்கொண்டு திருமண தடை நீங்க வேண்டும். என்று
சொல்லி பின் ஓம் ஸ்ரீ புதாய நமக ஓம் ஓம் ஸ்ரீ கேதுவாய நாமாக ஸ்ரீ குருவே நமக என்று 27 முறை சொல்லி
வைத்துவிட வேண்டும்.

பெண்ணிற்கு திருமணம் நடக்க


தினமும் நல்லெண்ணெய் விளக்கேற்றி சுமங்கலி பார்வதி திருமண மந்திரம் சொல்லி வர வேண்டும்

ஆணிற்கு திருமணம் நடக்க


தினமும் நல்லெண்ணெய் விளக்கேற்றி குறைந்தது 45 நாட்களுக்கு சொல்ல வேண்டும்
நமோ விஸ்வத்தே பிரம்மன்; வாய்வதே விஸ்ணு கேதஸே;
ஜகத் பிரசவித்தாரே சூர்யாவே; சூர்யாயே நமக நிதம் அஃயம்

குழந்தை இல்லாதவர்கள்
 சந்தான கோபால மந்திரம் தினமும் 18 முறைக்கு குறையாமல் சொல்லி வர வேண்டும்.
 நாச்சியார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கையில் குழந்தையுடன்
இருப்பார் செல்ல வேண்டும்

சுகப்பிரசவம் ஏற்பட
ஞான சம்பந்தர் வழங்கிய பதிகத்தில் ஏதேனும் ஒன்றை தினமும் 10 முறை சொல்லி வர வேண்டும்.

திருமணம் (பொருத்தம் முகூர்த்தம் இல்லாமல்)


பொருத்தம் பார்க்காமல் முகூர்த்தம் பார்க்காமல் திருமணம் செய்தால் திருப்பரங்குன்றம் செண்டு முருகனுக்கு
அபிஷேகம் அர்ச்சனை செய்து கோவிலை 3 முறை வளம் வந்து கொடிமரத்தில் நமஸ்காரம் செய்து வாழ்க்கையில்
உள்ள பிரச்சினைகள் நீங்கி வளமாய் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு வந்தால் வாழ்வு வளம்
பெறும்

புத்திர தோஷம்
 புதிய மண் பானையில் நாட்டு சர்க்கரை மண் அல்லது தட்டு கொண்ட மூடி, சுடுகாட்டில் அல்லது கல்லறையில்
வைத்து யாருக்காவது தானம் தர வேண்டும். அல்லது தோஷம் உள்ளவர் ஓடும் நதிக்கு நடுவில் நின்று
கொண்டு புத்திர தோஷம் நீங்க வேண்டும் என்று 3 முறை கொண்டு நதியில் விட்டு விட வேண்டும். பின்
வீட்டுக்கு வந்து ஏதாவது 4 குழந்தைக்கு வெள்ளி கிண்ணத்தில் பால் தானம் தர வேண்டும்.
படிப்பு
தினமும் கையில் ஹயகிரிவ முத்திரை வைத்துக்கொண்டு, ஹயகிரிவர் மந்திரம் முதல் 4 வரிகள் சொல்லி வரவேண்டும்

வாழ்க்கையில் or தொழில் தடை நீங்க


 நவகிரகங்களை மாதம் ஒரு முறை சுற்ற வேண்டும்.
 ஆண்டுக்கு ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.
 குலதெய்வ வழிபாடு முடிந்த பின் 3 மாதங்களுக்கு பின் முதியோர் இல்லம் சென்று அன்னதானம் செய்ய
வேண்டும்.

வியாபாரம்
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் புதன் கேந்ர/கோணத்தில் இருந்தால் வியாபார தடை வரும்.
இவர்கள் அனுமன் சாலிசா சொல்ல வேண்டும்.
சனிக்கிழமை அனுமன் கோவில் செல்ல வேண்டும்
6 மாதத்திற்கு ஒரு முறை மிளகு வடை மாலை சார்த்தி வழிபட வேண்டும்

அலுவலகத்தில் மன நிம்மதி இருக்க


வெள்ளி டம்ளரில் நீர் வைத்து 2 சொட்டு எலுமிச்சை சாறு விட்டு அதை சாமியிடம் வைக்க வேண்டும். 45 நாட்களுக்கு
தினமும் குளித்து சாமியிடம் அமர்ந்து 3 முறை ஓம் ஸ்ரீ ஓம் ஓம் என்று மூன்று முறை சொல்லி எனக்கு மனோபலம்
வேண்டும். தைரியம் தர வேண்டும் காரியங்கள் நடக்க வேண்டும் என்று 3 முறை சொல்ல வேண்டும். பின் ஓம்
அங்காரகாயாக நமக ஓம் ஸ்ரீ புதாய நமக ஓம் ஸ்ரீ குருவே நமக ஓம் சார் கேதுவே நமக என்று 9 முறை சொல்லி
அலுவல் பிரச்சினை போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். 45 நாட்களுக்கு பின் அந்த தண்ணீரை
ஓடும் நதி அல்லது கிணற்றில் விட்டுவிட வேண்டும். 45 நாட்களும் அந்த தண்ணீர் மாற்ற கூடாது அப்படியே இருக்க
வேண்டும். முதல் நாள் மட்டும் சங்கல்பம் செய்ய வேண்டும். மற்ற நாட்கள் வெறும் மந்திரம் மட்டும் கூறினால்
போதும்.
வீட்டின் வாசல் திசையும் தோஷமும்
 அக்னி கிழக்கு, நிலம்-மேற்கு; காற்று-தெற்கு; நீர்-வடக்கு
 4 ம் பாவம் திக் பலம் படி என்ன தத்துவமோ அந்த தத்துவப்படி வீட்டு வாசல் இருக்க வேண்டும்.
 4 ம் வீட்டு அதிபதியின் திசை, ஏறிய நட்சத்திரத்தின் திசை, அவர்கள் அமர்ந்த திசை அனைத்தும் ஒரே
விதமாய் ஒத்து வந்தால் அந்த திசையில் வாசல் கதவு இருப்பது நன்று.
 மாறி அமைந்து இருந்தால் 4 ம் பாவம் எந்த திசையை காட்டுகிறதோ வீட்டின் வாசல் அந்த திசையை
நோக்கி இருக்க வேண்டும்.
 அப்படியும் இல்லாவிட்டால் அவரின் பெயரின் முதல் எழுத்தும், 4 ம் வீட்டின் அதிபதி இருவரும் எப்படி
இருக்கின்றாரோ அதன் படி இருக்க வேண்டும்.
 சில கிரகங்கள் 2 திசை காட்டும் அப்போது அந்த 2 திசைக்கு உரிய வாசல் நன்று.

பரிகாரம்
 4 ம் வீட்டு அதிபதி. அவர் ஏறிய சாரம். 4 ம் அதிபதி ஏறிய சார கிரகத்திற்கு உரிய பாவம். (அதாவது 4 ம்
வீட்டு அதிபதி ஏறிய சாரதிபதி கிரகம் எந்த பாவத்திற்கு திக் பலம் பெற்றுள்ளதோ அந்த பாவத்தின்
வேலையை தான் செய்வார்). 4 ம் வீட்டில் அமர்ந்து இருப்பவர்கள். திக் பலம் படி 4 ம் வீட்டிற்கு உரிய கிரகம்
சுக்ரன் ஏறிய சாரம்.
 அஷ்டவர்க்க பரலில் எந்த கிரகம் 4 ம் வீட்டிற்கு அதிக பரல் தருகிறதோ அந்த கிரகத்திற்கு உரிய மந்திரம்
அந்த வீட்டில் ஒலித்துக்கொண்டு இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 10 முறையாவது கேட்ட வேண்டும்.

வாகனம் வாங்க
 2, 8 க்கு உரிய கிரகங்கள் 4, 5, 11 வீடுகளோடு இணைந்தால் வாகனம் வாங்கலாம்.

வீட்டில் கற்பூர ஆரத்தி


 விஷ்ணு சகஸ்ரநாமம் ஏகாதசி மட்டும் மத்தியானம் 3-5 மணிக்கு சொல்ல வேண்டும். மற்ற நேரம் கூடாது.
 வீட்டில் கிருஷ்ணன் படம் பொம்மை வைத்து கும்பிடக்கூடாது. பகவத் கீதை படிக்க கூடாது. புக்கை வைத்து
பூஜை செய்யலாம்.
 அம்பாளை மட்டுமே நினைத்து காட்ட வேண்டும். அது சிவன் சன்னிதானம் என்றாலும் அம்பாளை மட்டுமே
நினைத்து காட்ட வேண்டும். அப்பொழுது
கர்நாடக தேசே காஞ்ஜ நாத் புரே
ஏக்காத்ர பத்ரே சாம்ராஜ்ய மா ராஜ்ய சுமங்கலம்
வாசா நாதியுதே தாம்பூல புரிதாய சுமங்கலம்
ராஜேஸ்வரி ஜகன் மாத்து மங்களம் படதாம கிரகோ
மங்களானி பிரவர்தன்தே
 பின் சுதர்சன மந்திரம் 4 முறை சொல்ல வேண்டும்
பொது
 வீட்டில் சாமி படம் கிழக்கு மேற்கு மட்டுமே வைக்க வேண்டும்.
 விக்ரம் 1 சான் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் கோவிலுக்கு கொடுத்துவிட வேண்டும்.
 விநாயகர் லஷ்மி சரஸ்வதி படங்கள் மட்டுமே வீட்டில் வைக்கலாம்.
 ராமர் பட்டாபிஷேக படம் அனைவரும் பார்க்கும் விதமாய் வைக்க கூடாது
 கோதண்ட ராமர் (ஒரு ராமர் மட்டும் இருக்கும்) படம் எல்லோரும் பார்க்கும் விதமாய் மாட்டி வைக்கலாம்.
 முருகனை தெற்கு நோக்கி வைக்கலாம். சாதாரணமாய் பூஜை செய்வது இல்லை.

You might also like