Professional Documents
Culture Documents
ஜாதக அலசல் சுப்பையா வாத்தியார்
ஜாதக அலசல் சுப்பையா வாத்தியார்
அதை வரிசைப்
படுத்திக் கொடுத்துள்ளேன். அதுதான் முதல் பாடம்!
அதே நேரத்தில், லக்கினாதிபதி, 6 அல்லது எட்டு அல்லது 12 ஆம் வீட்டில் போய் டென்ட் அடித்துப்
படுத்துக்கொண்டிருந்தால், ஜாதகன் போராடப் பிறந்தவன், கஷ்டப்படப் பிறந்தவன். எல்லாவற்றையும்
அவன் தேடிப் பிடிக்க வேண்டும். ஒன்றுக்குப் பலமுறை தேடினால்தான் கிடைக்கும். அதாவது
Maximum efforts and minimum benefits என்று கொள்ள வேண்டும். ஆனால் இது போன்ற
அமைப்புள்ள ஜாதகங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பெற்றிருக்கும். அதையும் பார்க்க வேண்டும்.
எல்லாப் பிறவிகளுமே சமமானவைதான். யாரும் உயர்ந்தவர்களில்லை. யாரும் தாழ்நத ் வர்கள்
இல்லை. இல்லை என்றால் எல்லோருக்கும் 337 பரல்கள் என்ற அமைப்பு எப்படி இருக்க முடியும்?
8. ஜாதகனின் ஆயுள் பாவத்தைப் பார்க்க வேண்டும் அதற்கு உரிய வீடு எட்டாம் வீடு.9.
கிடைக்கவுள்ள பாக்கியங்களைப் பார்க்க வேண்டும் அதற்கு உரிய வீடு ஒன்பதாம் வீடு. பாக்கியம்
என்றால் என்ன? ஜாதகனின் முயற்சி இல்லாமல் அதுவாகக் கிடைப்பது எல்லாமுமே பாக்கியம்தான்.
உதாரணம் பூர்வீகச் சொத்துக்கள். ஒரு பரபலத்தின் மகனாகப் பிறப்பதும் பாக்கியம்தான்.
10. ஜாதகத்தில் உள்ள ராஜ யோகங்கள், கிரகமாலிகா போன்ற நன்மை செய்யும் யோகங்கள், மற்றும்
உள்ள அவயோகங்களையும் பார்க்க வேண்டும்.
12. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் ஆட்சி, உச்ச மேன்மைகளையும். நீச, மறைவிடத் தீமைகளையும்
பார்க்க வேண்டும் இவற்றில் தாய், தந்தைக்கான அமைப்பு ஜாதகத்தில் இருக்கின்ற போதும்.
அவற்றை முக்கியமாகப் பார்க்கும்படி குறிப்பிடப்படவில்லை பார்தத
் ீர்களா? தாய், தந்தை எல்லாம்
பிறவியிலேயே முடிவாகிவிட்ட சமாச்சாரம். பார்த்து என்ன ஆகப் போகிறது என்று
விட்டுவிட்டார்களோ என்னவோ?:-))))
ஆனால் தாய், தந்தைக்கு உரிய 4 ஆம் விட்டையும், 9 ஆம் வீட்டையும் பார்க்க வேண்டும்.
ஜாதகனுக்கு அவனுடைய தாய், தந்தையால் என்னென்ன மேன்மை கிடைக்கும் என்பது தெரியும்.
நல்ல தாயால் மனம் நெறிப்படும். நல்ல தந்தையால் வாழ்க்கை வளப்படும். உங்களுக்குப்
புரியும்படியாக உங்கள் மொழியிலேயே சொல்கிறேன். “அன்னையோடு அறுசுவை போம் (போகும்)
தந்தையோடு கல்வி போம்(போகும்)” இது என்னுடைய மொழி அல்ல! காலம் காலமாக
அனுபவஸ்தர்கள் சொல்லிவிட்டுப் போன வாசகம்.
002 எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
1, காலசர்ப்ப யோகம்.
2. சண்டாள யோகம்.
சண்டாளன் என்பது சமூகத்தில் மதிப்பில்லாத மனிதனைக் குறிக்கும் சொல்லாகும்.
ராகு அல்லது கேதுவுடன் வேறு ஒரு கிரகம் சேரும்போது, அந்தக் கிரகம் இருக்கும் வீட்டின்
பலாபலன்கள் கெட்டுப்போகும். உடன் சேரும் கிரகம் தன்னுடைய உண்மையான தன்மையை இழந்து
விடும். அதுபோல ராகுவும், கேதுவும் தாங்கள் குடியிருக்கும் வீட்டின்
தன்மையையும் கெடுத்துவிடக்கூடிய வல்லமை பெற்றவை. ஆகவே அவர்களின் இருப்பு (presence)
வரவேற்கக்கூடியதல்ல. அது எந்த வீடாக இருந்தாலும் சரி! அதுதான் பலன். மேலும் அவைகள்
தங்கள் சேர்க்கையாலும், பார்வையாலும் அழிவை ஏற்படுத்தக் கூடியவை. அதுபோல தாங்கள்
குடியிருக்கும் வீடடை
் யும், தாக்கி அழிக்கக்கூடியவை.
இந்த இரண்டு கிரகங்களும், ஜாதகத்தில் 6 ம் வீடு, 8 ம் வீடு அல்லது 12 ம் வீடு போன்ற தீய
இடங்களில் (மறைவு ஸ்தானங்களில்) இருக்கும் என்றால் தீய பலன்கள் அதிகரித்தே காணப்படும்.
ஜாதகனின் தாயாரின் உடல் நலத்திற்து கேடானது ஆகும். அத்துடன் ஜாதகனின் உடல் நலத்திற்கும்,
மன நலத்திற்கும் கேடானது ஆகும். ”உடலும் உள்ளமும் நலம்தானா?” என்று கேட்கும் நிலையில்
ஜாதகன் இருப்பான். ஜாதகனை ஏழையாக்கும். மற்றவர்களுக்கு கீழே ஜாதகன் வேலை செய்ய
வேண்டிய நிலை ஏற்படும் (அடிமைத் தொழில்) தகாத காரியங்களை ஜாதகன் செய்வான்.
அவைகள் செய்ய வைக்கும்.
கிழே உள்ள அனைத்தும் பொதுப் பலன்கள். அதை மனதில் கொள்க. உங்கள் ஜாதகத்தோடு
இணைத்துப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.