You are on page 1of 5

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் எதை எதைப் பார்க்க வேண்டும்?

அதை வரிசைப்
படுத்திக் கொடுத்துள்ளேன். அதுதான் முதல் பாடம்!

1. லக்கினத்தைப் பற்றியும் அதனால் ஒரு ஜாதகன் அடையவிருக்கும் நன்மைகளையும்


தீமைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு லக்கினாதிபதி 11 ல், அதாவது லாப
ஸ்தானத்தில் இருந்தால், ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுக்கு எல்லாம் சுலபமாகக் கைகூடும்.
குறைந்த முயற்சியில், எல்லாம் கைகூடும். Minimum efforts and maximum benefits என்பது அதன்
பலன்.

அதே நேரத்தில், லக்கினாதிபதி, 6 அல்லது எட்டு அல்லது 12 ஆம் வீட்டில் போய் டென்ட் அடித்துப்
படுத்துக்கொண்டிருந்தால், ஜாதகன் போராடப் பிறந்தவன், கஷ்டப்படப் பிறந்தவன். எல்லாவற்றையும்
அவன் தேடிப் பிடிக்க வேண்டும். ஒன்றுக்குப் பலமுறை தேடினால்தான் கிடைக்கும். அதாவது
Maximum efforts and minimum benefits என்று கொள்ள வேண்டும். ஆனால் இது போன்ற
அமைப்புள்ள ஜாதகங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பெற்றிருக்கும். அதையும் பார்க்க வேண்டும்.
எல்லாப் பிறவிகளுமே சமமானவைதான். யாரும் உயர்ந்தவர்களில்லை. யாரும் தாழ்நத ் வர்கள்
இல்லை. இல்லை என்றால் எல்லோருக்கும் 337 பரல்கள் என்ற அமைப்பு எப்படி இருக்க முடியும்?

2. ஜாதகத்தில் தன யோகங்களைப் பார்க்க வேண்டும். அதாவது பண வரவிற்கான


அமைப்புக்களைப் பார்க்க வேண்டும். இரண்டாம் வீடுதான் ஒருவனுக்கு House of finance ஆகும்.
அந்த வீடு நன்றாக இருந்தால்தான், ஒருவனுக்குப் பண வரவு நன்றாக இருக்கும். தேவையான
அளவு பண வரவுஇருக்கும். அல்லது தேவைக்கு அதிகமாகவே வந்து கொட்டும். அதை எல்லாம்
பார்க்க வேண்டும். அதேபோல 11 ஆம் வீடும் முக்கியமானதாகும்.

3. உடன்பிறப்புக்களைப் பார்க்க வேண்டும். அதாவது சகோதரர்களின் மேன்மையைப் பார்க்க


வேண்டும். அதற்குரிய வீடு மூன்றாம் வீடு. ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அது போன்று நமக்கு அரணாக உள்ள உடன் பிறப்புக்கள்
அமைய வேண்டும். பல இல்லங்களில் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சகோதரர்களிடயே ஒற்றுமை
இல்லை. அதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

4. வாழ்க்கையில் ஜாதகனுக்குக் கிடைக்கவிருக்கும் சொத்து சுகங்களைப் பற்றியும், வீடு வாகன


வசதிகளையும் பார்க்க வேண்டும்.

5. குழந்தைகளைப் பார்க்க வேண்டும். ஜாதகனுக்குக் குழந்தைகள் உண்டா, உண்டு என்றால்


அவர்களால் ஜாதகன் பெருமையடைவானா என்பது போன்ற மேட்டர்களைப் பார்க்க வேண்டும்.

6. ஜாதகனுக்கு ஏற்பட உள்ள வியாதிகளை, நோய்களை, எதிரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள


வேண்டும். ஆறாம் வீட்டைவைத்து அவைகள் தெரியும். உதாரணத்திற்கு ஆறாம் வீட்டுக்காரன்,
அந்த வீட்டிற்கு 12 ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு மன அழுத்தம், மனப் பிரச்சினை, மனநோய்
உண்டாகலாம்.
7. ஜாதகனுக்கு இல்வாழ்க்கை எப்படி இருக்கும்? அது எப்போது அமையும் என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும். ஏழாம் வீடடை் வைத்து அது தெரியும். வரவிருப்பது தேவதையா அல்லது
பிசாசா என்பது தெரியும். பெண்ணின் ஜாதகமாக இருந்தால், வரவிருப்பது நாயகனா அல்லது
வில்லனா என்பது தெரியும்.

8. ஜாதகனின் ஆயுள் பாவத்தைப் பார்க்க வேண்டும் அதற்கு உரிய வீடு எட்டாம் வீடு.9.
கிடைக்கவுள்ள பாக்கியங்களைப் பார்க்க வேண்டும் அதற்கு உரிய வீடு ஒன்பதாம் வீடு. பாக்கியம்
என்றால் என்ன? ஜாதகனின் முயற்சி இல்லாமல் அதுவாகக் கிடைப்பது எல்லாமுமே பாக்கியம்தான்.
உதாரணம் பூர்வீகச் சொத்துக்கள். ஒரு பரபலத்தின் மகனாகப் பிறப்பதும் பாக்கியம்தான்.

10. ஜாதகத்தில் உள்ள ராஜ யோகங்கள், கிரகமாலிகா போன்ற நன்மை செய்யும் யோகங்கள், மற்றும்
உள்ள அவயோகங்களையும் பார்க்க வேண்டும்.

11. தசாபுத்திப் பலன்கள். சுப கிரகங்களின் திசைகளையும், பாவ கிரகங்களின் திசைகளையும்


பார்த்து அவைகள் ஜாதகனின் எந்த வயதில் வருகின்றன என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

12. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் ஆட்சி, உச்ச மேன்மைகளையும். நீச, மறைவிடத் தீமைகளையும்
பார்க்க வேண்டும் இவற்றில் தாய், தந்தைக்கான அமைப்பு ஜாதகத்தில் இருக்கின்ற போதும்.
அவற்றை முக்கியமாகப் பார்க்கும்படி குறிப்பிடப்படவில்லை பார்தத
் ீர்களா? தாய், தந்தை எல்லாம்
பிறவியிலேயே முடிவாகிவிட்ட சமாச்சாரம். பார்த்து என்ன ஆகப் போகிறது என்று
விட்டுவிட்டார்களோ என்னவோ?:-))))

ஆனால் தாய், தந்தைக்கு உரிய 4 ஆம் விட்டையும், 9 ஆம் வீட்டையும் பார்க்க வேண்டும்.
ஜாதகனுக்கு அவனுடைய தாய், தந்தையால் என்னென்ன மேன்மை கிடைக்கும் என்பது தெரியும்.
நல்ல தாயால் மனம் நெறிப்படும். நல்ல தந்தையால் வாழ்க்கை வளப்படும். உங்களுக்குப்
புரியும்படியாக உங்கள் மொழியிலேயே சொல்கிறேன். “அன்னையோடு அறுசுவை போம் (போகும்)
தந்தையோடு கல்வி போம்(போகும்)” இது என்னுடைய மொழி அல்ல! காலம் காலமாக
அனுபவஸ்தர்கள் சொல்லிவிட்டுப் போன வாசகம்.
002 எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

ராகுவும், கேதுவும் சொந்த வீடில்லாத கிரகங்கள். சாயா கிரகங்கள்.அவைகளுக்கு சில


வினோதமான குணம் உண்டு. ஜாதகனின் வாழ்க்கையில் பெரும்பாலும் கேடு (தீங்கு)
விளைவிக்கக்கூடிய கிரகங்கள் அவைகள். சாபக் கேடான கிரகங்கள். இயற்கையான
தீய கிரகங்கள் (Natural malefic planets) ஜாதகத்தில் இரண்டு விதமான தீய யோகங்களை 
(Harmful yogas) கொடுக்கக்கூடியவைகள் அவைகள்.

1, காலசர்ப்ப யோகம்.
2. சண்டாள யோகம்.
சண்டாளன் என்பது சமூகத்தில் மதிப்பில்லாத மனிதனைக் குறிக்கும் சொல்லாகும்.

ராகு அல்லது கேதுவுடன் வேறு ஒரு கிரகம் சேரும்போது, அந்தக் கிரகம் இருக்கும் வீட்டின்
பலாபலன்கள் கெட்டுப்போகும். உடன் சேரும் கிரகம்  தன்னுடைய உண்மையான தன்மையை இழந்து
விடும். அதுபோல ராகுவும், கேதுவும் தாங்கள் குடியிருக்கும் வீட்டின்
தன்மையையும் கெடுத்துவிடக்கூடிய வல்லமை பெற்றவை. ஆகவே அவர்களின் இருப்பு (presence) 
வரவேற்கக்கூடியதல்ல. அது எந்த வீடாக இருந்தாலும் சரி! அதுதான் பலன். மேலும் அவைகள்
தங்கள் சேர்க்கையாலும், பார்வையாலும் அழிவை ஏற்படுத்தக் கூடியவை. அதுபோல தாங்கள்
குடியிருக்கும் வீடடை
் யும், தாக்கி அழிக்கக்கூடியவை.

சமயங்களில் அவைகள் சேரும் கிரகங்களின் இயற்கைத் தன்மையைப் பொறுத்து அது


நன்மையாகவும் அல்லது தீமையாகவும் முடியலாம். மாறுபடலாம். வேறு படலாம். எப்படி
வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள். In short, these 2 planets (nodes) exhibit their own
qualities modified  for good or bad depending upon the planets which they associate.

இந்த இரண்டு கிரகங்களும், ஜாதகத்தில் 6 ம் வீடு, 8 ம் வீடு அல்லது 12 ம் வீடு போன்ற தீய
இடங்களில் (மறைவு ஸ்தானங்களில்) இருக்கும் என்றால் தீய பலன்கள் அதிகரித்தே காணப்படும்.

1. சூரிய சண்டாள யோகம்.


சூரியனோடு ராகு அல்லது கேது சேரும்போது, ஜாதகனின் தந்தைக்கு உடல் உபாதைகள் மற்றும்
உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். ஜாதகனை முன் கோபக்காரனாக்கும். மகிழ்ச்சியில்லாத
வாழ்க்கை அமையும்.

2. சந்திர சண்டாள யோகம்


சந்திரனோடு, ராகு அல்லது கேது சேரும்போது, அவர்களுடைய சந்திர ஆதிக்கம் கேடானது
ஆகும். எப்போதுமே விரும்பத்தகாதது ஆகும். 

ஜாதகனின் தாயாரின் உடல் நலத்திற்து கேடானது ஆகும். அத்துடன் ஜாதகனின் உடல் நலத்திற்கும்,
மன நலத்திற்கும்  கேடானது ஆகும். ”உடலும் உள்ளமும் நலம்தானா?” என்று கேட்கும் நிலையில்
ஜாதகன் இருப்பான். ஜாதகனை ஏழையாக்கும். மற்றவர்களுக்கு கீழே ஜாதகன் வேலை செய்ய
வேண்டிய நிலை ஏற்படும் (அடிமைத் தொழில்) தகாத காரியங்களை ஜாதகன் செய்வான்.
அவைகள் செய்ய வைக்கும்.

இவைகள் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம்


குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.
003 உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்?

கிழே உள்ள அனைத்தும் பொதுப் பலன்கள். அதை மனதில் கொள்க. உங்கள் ஜாதகத்தோடு
இணைத்துப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.

1. ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால் செல்வந்தர். மேன்மையான குணம் உடையவர்.


வீரம் மிக்கவர்.
2.சந்திரன் உச்சம் பெற்று இருந்தால் நல்ல உணவு, உடை, ஆபர்ணங்களை உடையவராக இருப்பார்.
3.செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், பகட்டானவராக, வீரம் மிக்கவராக, வேறு ஊரில் வசிப்பவராக
இருப்பார்.
4. புதன் உச்சம் பெற்று இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.
5.குரு உச்சம் பெற்ரு இருந்தால், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.
6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளில் ஆர்வமும்,
தேர்ச்சியும் உடையவராக இருப்பார்
7. சனி உச்சம் பெற்று இருந்தால், அரசியலில் தலைமை பதவியும், அரசு கெளரவ பதவியும்,
தொழிலாளர்கள் தலைவராகவும் இருப்பார். மேலும் நாட்டில் விளையும் பொருட்கள் மற்றும்
தொழிலாளர்களால் நன்மை பெறுபவராகவும் இருப்பார்

நீசம் பெற்ற கிரகங்களால் என்ன நேரும்?


1. சூரியன் நீசம் பெற்றிருந்தால் தன்னைச் சேர்ந்தவர்களாலேயே தாழ்மை நிலையை அடைவார்.
2. சந்திரன் நீசம் அடைந்தால் உடல் நலம் பாதிக்கும். மேலும் ரோகம் உடையவராக இருப்பார்.
3. செவ்வாய் நீசமடைந்தால் மனம் பாதிக்கப்படும். மற்றும் பல தொல்லைகளை சமாளிக்க
வேண்டியது வரும்.
4. புதன் நீசமடைந்தால் உறவினரால் பகை ஏற்படும்.
5.குரு நீசமடைந்தால் புகழ் செல்வாக்கு இல்லாமல் இருப்பதோடு, ஏழ்மை, உடையவராகவும்
இருப்பார்.
6. சுக்கிரன் நீசமடைந்திருந்தால் கெட்ட எண்ணங்கள் உடையவராக இருப்பார். மற்றவர்களிடம்
பணியாற்றும் நிலைமை உண்டாகும்.
7. சனி நீசமடைந்திருந்தால், ஒழுக்கக்குறைவும், வறுமையால் வாடும் நிலையும் உண்டாகும்!

You might also like