You are on page 1of 2

ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரகம்

ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7 ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும்
கூறமுடியும் .மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம் .

1 எட்டாம் வட்டு
ீ அதிபதி கஷ்டமான பலன்களையே கொடுப்பார்.
2. மரணம், விபத்தில் அடிபடுதல், கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை, வறுமையான சூழல், அவமானங்கள், சிறுமை, மன அமைதியின்மை
ஆகியவற்றை ஏற்படுத்துபவர் அவரே!
3. அவர் (அதாவது எட்டாம் அதிபதி - 8th lord) வலிமையோடு, எந்த சுபக்கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இன்றி இருந்தால்,
மேற்கூறியவைகள் அதிகமாகும். இல்லையென்றால் குறைந்துவிடும்.

சூரியன்

8-ம் பாவத்தில் சூரியன் ஜாதகனுக்கு, சிக்கலான சூழ்நிலைகளில் கைகொடுப்பான். ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சூரியன்
வந்தமர்ந்திருந்தால், அதுவும் உச்சம் பெற்றிருந்தால், ஜாதகனுக்குப் பூரண ஆயுள் உண்டு. கவர்ச்சிகரமாக இருப்பான். சிலர்
சிறந்த மேடைப் பேச்சாளராக உருவெடுப்பார்கள். பெண்ணாக இருந்தால் தமண்னாவைப்போல கவர்ச்சியாக இருப்பாள்.
இந்த பாவத்தில் உள்ள சூரியன் 6, 8, 11-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெற்றால் போட்டி, பந்தயங்களில் வெற்றியும்,
சூதாட்டத்தில் ரேஸ், பரிசுச்சீட்டில் எதிர்பாராத லாபமும் தரும் அமைப்பாகும்

சந்திரன்

8-ம் பாவத்தில் சந்திரன் வந்தமர்ந்திருந்தால் மனப்போராட்டங்கள் மிகுந்த ஜாதகம் மன நிம்மதி இருக்காது. உளவியல்
பிரச்சினைகள் உண்டாகும். நிலையான பிடிப்புடையவனாக ஜாதகன் இருக்க மாட்டான். உடல் நலமில்லாதவனாகவும்
இருப்பான் சந்திரன் பலமற்று இருப்பது மூளைக் கோளாறு, சஞ்சலமுடைய குணம், இவற்றைத் தரும் உடல் நலமும்
பாதிக்கப்படும் இளமையில் தாயைவிட்டு பிரியவோ அல்லது இழக்கவோ நேரிடலாம் பாவிகளின் சம்பந்தம் இங்குள்ள
சந்திரனுக்கு ஏற்பட்டால், கண்நோய் எப்பொழுதும் நோயால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் சுபரின் பார்வை, சம்பந்தம்
ஏற்பட்டால் நன்மையான பலன்களைத் தரும். பூரண சந்திரன் அல்லது ஆட்சி உச்சம் பெற்ற சந்திரனாக இந்த பாவத்தில்
அமைந்தால் தொழில் மேன்மைதரும்.

செவ்வாய்

செவ்வாய் 8-ம் பாவத்தில் இருப்பது பொதுவாக நலம் தராது. பாவிகளின் சம்பந்தம் பெற்று, 7-ம் அதிபதியின் சம்பந்தமும்
ஏற்பட்டால் திருமணமானவுடன் கணவரை இழக்கும் நிலையோ, பிரிந்து வாழும் நிலையோ ஏற்படலாம். பின் தான்
விரும்பியவருடன் சேர்ந்து வாழும் யோகத்தையும் தரும். சொந்தம் என்னும் உறவும் கூட பாதிக்கப்படும். ஜாதகத்தில்
வேறு நல்ல அம்சங்கள் இல்லாமல், செவ்வாய் வந்து எட்டில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குறைந்த ஆயுள். குறைந்த
எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருக்கும் இரத்த சம்பந்தமான நோயால் அவதிப்பட நேரிடலாம். நிம்மதியில்லாத
மணவாழ்க்கையும் அமையலாம். சுபரின் சம்பந்தம் ஏற்படுமானால் தீயபலன்கள் குறைந்து காணப்படும்.

புதன்

8-ம் பாவத்தில் புதன் இருப்பது நல்ல பலன் தரும் என்பது பல ஜோதிட அறிஞர்களின் கருத்தாகும். ஜாதகனுக்குப் பல
விஷேச குணங்கள் இருக்கும்.எல்லோரையும் அனுசரித்துப்போகும் தன்மை இருக்கும். யாரையும் சமாளிக்கும் அல்லது
வளைத்துப்போடும் தன்மை இருக்கும். செல்வமும், புகழும் தரும் அமைப்பாகும். மேலும் சிறந்த கல்வியைத் தரும். நீண்ட
ஆயுளையும் தரும். ஆனால் உடல் எப்பொழுதும் மெலிந்த நிலையிலேயே இருப்பார்கள். மேலும் சூரியனுடன் 10 டிகிரிக்கு
மேல் இணைந்து புதன்-மிதுனம், கன்னியில் இருந்து அது 8-ம் பாவமாக அமைந்தால் புத ஆதித்ய யோகம் பெற்று, சிறந்த
கல்விமானாக, தான்கற்ற கல்வியாலே செல்வமும், புகழும் பெறும் அமைப்பாகும். ஆனால் சூரியன் புதன் 10 டிகிரிக்குள்
அமைந்தால் சிறந்த கல்வியைத் தராது. சூரியனுக்கு முன் புதன் 10 டிகிரிக்குள் அமைவது யோகத்தை தராது. ஆரம்ப
கல்வியைக் கூட தராத நிலையாகும்

குரு

குரு பகவான் 8-ம் பாவத்தில் இருந்தால் தயாள குணம் பெற்றிருப்பார்கள். நீண்ட ஆயுள் உண்டு. ஆனால் மனதில் மகிழ்ச்சி
இருக்காது. பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அறங்கள் செய்பவனாக இருப்பான். பேச்சுத்திறமை இருக்காது.
மறைமுகமாகப் பல தகாத செயல்களைச் செய்வான். ஆனால் அவைகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வான்.
சிலருக்கு விதவைப் பெண்களுடன் அல்லது தகாத பெண்களுடன் தொடர்பு இருக்கும். உடல் உபாதைகள், வயிற்றுக்
கோளாறுகள் இருக்கும். மரணம் ஏற்படும் சமயத்தில், வலியில்லாத மரணம் உடையவனாக இருப்பான்.. குரு உச்சமோ,
ஆட்சிபெறும் நிலை ஏற்பட்டால் அங்கிருந்து 12, 2-4 ம் பாவங்களைப் பார்க்கும் நிலை ஏற்படுவதால் சயன சுகத்தையும்,
நிம்மதியான தூக்கத்தையும், நல்ல குடும்பத்தையும், உலகியல் சுகங்களையும் தரும் நிலையாகும்
சுக்கிரன்

8-ம் பாவத்தில் சுக்கிரன் இருப்பது சிறப்பான அமைப்பு. பல வரங்களுடன் பிறந்த அமைப்பு. ஜாதகன் செல்வந்தனாக
இருப்பான். வசதியான வாழ்க்கை அமையும். சிலருக்கு, அவர்களுடைய சின்ன வயது வாழ்க்கை ஏமாற்றங்களும், உணர்ச்சிப்
போராட்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கும். அதன்காரணமாக வயதான காலத்தில் ஆன்மிகச் சிந்தனைகளும், தர்மச்
சிந்தனைகளும் உடையவர்களாக இருப்பார்கள். தங்கள் பெற்றோர்கள் மீ து அதீத அன்பையும் பாசத்தையும்
வைத்திருப்பார்கள். சுக்கிரன் பாவிகளின் சம்பந்தம் பெற்றிருந்தாலும் மற்றவரின் கீ ழ் பணியாற்றும் நிலையைத் தரும்.
இன்ப-துன்பம் இரண்டையும் அனுபவிக்கும் நிலையாகும்

சனி

சன ீஸ்வர பகவான் 8-ம் பாவத்தில் இருப்பது நீண்ட ஆயுளைத் தரும். ஜாதகனுக்குப் பல பொறுப்புக்கள் வந்து சேரும்.
அனைத்தையும் அவன் அசத்தலாகக் கையாள்வான். அதாவது சங்கடமின்றி முழுமனதுடன் செய்வான். இடையூறுகள்,
தடைகள் என்று எது வந்தாலும் அவற்றை உடைத்து செய்ல்புரிவான். சிலருக்குக் கண் பார்வைக்கோளாறுகள் ஏற்படும்.
குறைந்த எண்ணிக்கை யிலேயே குழந்தைகள் இருக்கும். பல பெண் நண்பர்கள் அமைவார்கள் உடல் உபாதைகள் மற்றும்
தீராத பிணிகள் இருக்கும். நோய் என்றால் திர்க்ககூடியது. பிணி என்றால் தீர்க்க முடியாதது. கர்மா பலன் நுரையீரல்
நோயினால் அதிகம் பாதிப்பு ஏற்படும். பெற்றெடுத்த பிள்ளைகளால் துன்பமும் நேரும். பாவிகளுடன் இணைந்ததோ,
பார்க்கப்படும் நிலையில் இருந்தால் நம்பத்தகாதவராகவும் இருப்பார்கள். பலம் பெற்று சனி இந்த பாவத்தில் இருப்பது
எண்ணெய் சம்பந்தமான தொழில், இரும்புப் பொருள், பழைய துணி, காகிதம், சுரங்கப் பொருள், வியாபாரம், பெட்ரோல் பங்க்
அமைந்தால் லாபம் பெருகும்

ராகு

8-ம் பாவத்தில் ராகு அமைவது சிறந்த அமைப்பில்லை ஜாதகனுக்குப் பலவிதமான நோய்கள் தேடிவந்து படுத்தி எடுக்கும்.
சமூகத்தில் உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்காது. அல்லது அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும். நல்லது எது கெட்டது
எது என்று ஆராயாமல் எதையும் எடுத்தேன், செய்தேன் என்று இருப்பான். தர்க்கம் செய்பவனாக இருப்பான். தகராறு
செய்பவனாக இருப்பான். எப்பொழுதும் சண்டைப் பிரியராகவோ, கோள் மூட்டுபவராகவோ இருப்பார்கள். தொல்லைகள்,
துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலையாகும். 8-ம் பாவம் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், மகரமாக அமைந்தால்
பாதிப்புகள் குறைவாகும் பாவிகளின் சம்பந்தம் மேலும் பாதிப்பைத் தரும். சந்திரன் பலமற்று, ராகுவுடன் 10 டிகிரிக்குள்
இணைந்திருந்தால் மனம் பேதலிக்கும். மூளைக்கோளாறு ஏற்படும்.

கேது

கேது 8-ம் பாவத்தில் இருந்து ஒரு சுபக்கிரகத்தின் பார்வையும் இருந்தால், ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான். பூரண
ஆயுள் உண்டு. அத்துடன் அதீத செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும். அதே கேது எட்டாம் வட்டில்

இருப்பதுடன் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன் அடுத்தவர்களின் சொத்தையும், சமயத்தில்
பெண்களையும் அபகரித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவான். பலவிதமான நோகளுக்கும் ஆளாவான்

You might also like