You are on page 1of 10

வீடுகளும் கிரகங்களும் - முதலில் லக்கினம்

1. லக்கினத்தில் சூரியன் இருந்தால், ஜாதகன் உண்மையை உறுதியாகப் பேசுபவன். சிவந்த நிறமும், உஷ்ண தேகமும்
உடையவனாக இருப்பான். மெலிந்த உடல்வாகு இருக்கும். தன்னம்பிக்கை உடையவனாக இருப்பான்.
2. லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அழகான கண்கள், இளைத்த சரீரம், வட்ட முகம் உடையவனாக
3. ஜாதகன் இருப்பான். தூய்மையானவன்.புத்தியுள்ளவன்.பாக்கியவான். பெண் சகோதரிகள் இருப்பார்கள். நீர்
சம்பந்தமான நோய்கள் இருக்கும். அதாவது அடிக்கடி மூக்கில் நீர் வடிதல் போன்ற சிறு சிறு நோய்கள்
உடையவனாக இருப்பான்.
4. லக்கினத்தில் செவ்வாய் இருந்தால், முன்கோபம், சட்டென்று சண்டைக்குப் போகும் குணமுடையவனாக ஜாதகன்
இருப்பான். மெல்லிய ஆனால் உறுதியான உடல் அமைப்பு இருக்கும். பிறரை மீறிப் பேசுபவன். சஞ்சல மனதை
உடையவன். நகைச்சுவை மிகுந்தவன்.
5. லக்கினத்தில் புதன் இருந்தால், நகைச்சுவைப் பிரியர். ரோகமுள்ளவர்.குறைந்த நிறம். பிறரை
அளந்துவிடக்கூடியவர். சமயமறிந்து பேசக்கூடியவர். நல்ல குணமுடையவர். அறிவுரை வழங்குவதில் விருப்பம்
உடையவர். தலைமை தாங்கும் தகுதியை/அமைப்பை உடையவர்.
6. லக்கினத்தில் குரு இருந்தால், ஆசீர்வதிக்கப்பெற்றவர். எடுத்த செயல்களை முடிக்கக்கூடியவர். அறிவாற்றல்
மிக்கவர். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர். எல்லா நலன்களும் அவரைத் தேடிவரும் அமைப்பை
உடையவர்.
7. லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், அழகிய கண்கள், சுருள்முடி கொண்டவர். கலை ஆர்வம், இரசிப்புத் தன்மை
உடையவர். ஆடம்பரப் பொருள்களை விரும்பக்கூடியவர். அலங்காரத்தில் விருப்பம் உடையவர். சுகங்களை
உடையவர். பெண்களுடன் சரளமாகப் பழகக்கூடியவர்.
8. லக்கினத்தில் சனீஷ்வரன் இருந்தால், ஆயுள் பலம் உள்ளவர். மெலிந்த தேகம் உடையவர். பிடிவதம், மந்த
செய்கைகளை உடையவர். கபடம் மிக்கவர்.
9. லக்கினத்தில் ராகு இருந்தால், முரட்டுத் தனம், ஆக்கிரமிக்கும் குணம் உடையவர். நீச குணம் இருக்கும். சுயநலம்
மிக்கவர். விவாதம் செய்யும் சுபாவம் உடையவர். பலம் மிகுந்த உடல் அமைப்பு உடையவர்.
10. லக்கினத்தில் கேது இருந்தால், மெலிந்த உடல் அமைப்பு, பலக் குறைவு உடையவர். நம்பிக்கை இன்மை,
பகுத்தறியும் குணம் உடையவர். ஞானம் உடையவர். விஷ ரோகம் உடையவர்.
இரண்டாம் வீட்டில் இருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்:
1. இரண்டாம் வீட்டில் சூரியன் இருந்தால், வலக்கண் வியாதி, பல் வியாதி, வாய்ப்புண் உடையவர். அதிகார
வசனம், கொடிய வார்த்தைகளைப் பேசும் தன்மை உடையவர். கல்வித் தடை, குடும்பப் பிரச்சினைகளை எதிர்
கொள்ள நேரிடும்.
2. இரண்டாம் வீட்டில் சந்திரன் இருந்தால், இடக்கண் வியாதி ஏற்படும். கல்வியில் ஆர்வம் உடையவர்.
அனுசரணையான பேச்சை உடையவர்.வார்த்தைகளை யோசித்து தாமதமாகத்தான் பேசுவார்.
3. இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், பல் வியாதிகள் உண்டாகும். அதிரடியான பேச்சு, வாக்குப் பலிதம்
உடையவர். முன் கோபம், குடும்பச் சிக்கல்களை உடையவர். களத்திர தோஷம் உடையவர்.
4. இரண்டாம் வீட்டில் புதன் இருந்தால், கணிதத்திறமை உடையவர். சோதிட ஆர்வமும், ஞானமும் உடையவர்.
சமயமறிந்து பேசக்கூடியவர். வாக்கினால் செல்வத்தை உண்டாக்கக்கூடியவர். நக்கல் பேச்சும் உடையவர்.
5. இரண்டாம் வீட்டில் குரு இருந்தால், அழகிய கண்கள், சாதுர்யமான பேச்சை உடையவர். தமிழ்ப் புலமை
அல்லது தாய் மொழியில் புலமை உடையவர். வாய்ஜாலம் மிக்கவர். வாலிபத்தில் திருமணம் ஆகும். தன
விருத்தி உடையவர்.
6. இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், அழகிய கண்கள், அழகிய பற்களை உடையவர். சமர்த்தான பேச்சு,
பெண்களால் தன விருத்தி உடையவர். குடும்ப மேன்மை, வாக்கு வன்மை உடையவர். சிலருக்கு ராட்சத குணம்
இருக்கும்
7. இரண்டாம் வீட்டில் சனி இருந்தால், வாக்கினால் துன்பம் உண்டாகும். வலக்கண்நோய், கல்வி முடக்கம், மந்த
புத்தி உடையவர். குடும்ப விருத்தி இல்லாமல் போய்விடும்.
8. இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், நயமாக பொய் பேசும் தன்மை உடையவர். இடக்கான வார்த்தைகளைப்
பேசக்கூடியவர். சுயநலப் பேச்சு, மாட்டிவிடும் குணம் மிக்கவர். பல் நோய், கண் நோய் உடையவர்
9. இரண்டாம் வீட்டில் கேது இருந்தால், குடும்ப நலக்குறைவு உண்டாகும் பல் நோய், தனச்சேதம் உடையவர்.
விகடப் பேச்சு, ஞானம் உடையவர்
மூன்றாம் வீட்டில் இருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்
1. மூன்றாம் வீட்டில் சூரியன் இருந்தால் தைரியம் மிக்கவர். மிரட்டும் மனப் பான்மை, கீழானவர்களிடம் பகைமை
உடையவர். வீரிய நாசம், பெண் வியாதி உடையவர்.
2. மூன்றாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அன்புடைமை, சுயகட்டுப்பாடுகள் உடையவர். பெண் சகோதரம், வஸ்திர
விருப்பம், ஆபரணப் பிரியம் உடையவர். வீரியக் கட்டுப்பாடு உடையவர்.
3. மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், சகோதர தோஷம் உடையவர்.கீழானவர்களிடம் பகைமை உடையவர்.
வீரிய நாசம் உடையவர். யாரையும் உதாசீனப் படுத்தும் குணம் உடையவர்.
4. மூன்றாம் வீட்டில் புதன் இருந்தால், சகோதர தோஷம் உடையவர். சாஸ்திரம், இதிகாச ஞானம் உடையவர்.
தைரியக் குறைவு உடையவர். சுமூகமான உறவு உடையவர்.
5. மூன்றாம் வீட்டில் குரு இருந்தால், ஆள் அடிமைகளை உடையவர். சகோதர விருத்தி இருக்கும். அதாவது
சகோதர நட்பு இருக்கும். ஆராய்ச்சிகளில் விருப்பம் உடையவர். தைரியம், வீரியம் மிக்கவர். ஆடைகள் மேல்
விருப்பம் உடையவர்.
6. மூன்றாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால்,ஆள் அடிமைகளை உடையவர். சங்கீதத்தில் ஆர்வம் உடையவர். பெண்
வசியம், போகம், தடையில்லா காமம் ஆகியவற்றை உடையவர். ஆடை, அபரணங்களை உடையவர்
7. மூன்றாம் வீட்டில் சனி இருந்தால், வெற்றி குறைவு உடையவர். சகோதர தோஷம் மிக்கவர், எளிய உடை
உடுத்தக்கூடியவர். தைரிய நாசம், வீரிய நாசம் மிக்கவர். ஆபரண நஷ்டங்கள் உண்டாகும்.
8. மூன்றாம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால், சனிக்குரிய பலன்களே இதற்கும் உண்டாகும்.
நான்காம் வீட்டில் இருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்
1. நான்காம் வீட்டில் சூரியன் இருந்தால், கல்வித்தடை, வாகன முடக்கம், நெருப்பினால் பயம், ரோகமுள்ள
பெண்களுடன் போகம் ஆகியவை உடையவனாக ஜாதகன் இருப்பான். மொத்தத்தில் சுகம் இன்மை
உடையவன்.
2. நான்காம் வீட்டில் சந்திரன் இருந்தால், வாசனாதி திரவியங்கள் மேல் பிரியம் உடையவன்.பெண்கள் சிநேகம்,
ஆடைகள், ஆபரணங்கள் உடையவன். தாய்க்குப் பீடை.
3. நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால், உக்கிர குணம். சாகச விருப்பம், மிகைப் படுத்திப் பேசும் தன்மை
உடையவனாக ஜாதகன் இருப்பான். பூமியினால் லாபம் உண்டாகும். மிருக, அக்னி பயம் உண்டகும். அகால
போஜனம் உடையவன்.
4. நான்காம் வீட்டில் புதன் இருந்தால், கல்வி, புத்திக் கூர்மை, ஞானம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
சாஸ்திர ஞானம் உடையவனாக இருப்பான். சுகம் உடையவன். வாயாபார லாபம் உடையவன்.
5. நான்காம் வீட்டில் குரு இருந்தால், பூமி லாபம் உடையவன். வீடு, வாகனம் யோகம் உடையவன். ராஜ வாழ்வு
உடையவன். காரிய சித்தி உடையவன்.
6. எல்லா நன்மைகளையும் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
7. நான்காம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், சுகந்தப் பிரியம், அழகு மங்கையரின் நேசம் உடையவன். சுகவான்.
மாளிகை வாசம், வாகன யோகம் உடையவன்.
8. நான்காம் வீட்டில் சனி இருந்தால், பூமி முடக்கம், வாகன இழப்பு, மாதுர் பீடை உடையவன்.தீய பழக்கங்கள்,
நீசப் பெண்களின் நேசம் உடையவன். கல்வித்தடை இருக்கும். சுகமில்லாதவன்.
9. நான்காம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால்,பூமி, வாகன முடக்கம் உண்டாகும். சுகம் இல்லாதவன். அகால
போஜனம் உடையவன். வீடு, மனை தங்காது.
ஐந்தாம் வீடு

1. ஐந்தாம் வீட்டில் சூரியன் இருந்தால், சிவபக்தன், சிவாலய தரிசனங்கள் உடையவர். ஆத்ம ஞானம், யோக
அப்பியாசங்கள் உடையவர்.
2. ஐந்தாம் வீட்டில் சந்திரன் இருந்தால், பெண் தெய்வ வழிபாடு உடையவர். பெண் குழந்தைகளை உடையவர்.
தாமத புத்தி உடையவர்.
3. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், புத்திர தோஷம் உடையவர். முருகன் வழிபாடு உடையவர். மந்திர சக்தி
உடையவர். பிரபுக்கள் விரோதம் உடையவர்.
4. ஐந்தாம் வீட்டில் புதன் இருந்தால், புத்திர தோஷம் உடையவர். விஷ்ணு வழிபாடு செய்பவர். புராண அறிவு
உடையவர். ஆத்ம ஞானம், கல்வி விருத்தி உடையவர்.
5. ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால், ஜாதகர் தன் நிலைமையை உணர்ந்து புத்திசாலித்தனமாக நடக்கக்கூடியவர்.
அதனால் வாழ்க்கையில் முன்னுக்கு வரக்கூடியவர். பல பெண்களின் நட்புக் கிடைக்கும். ஆனால் எவரிடமும்
சிக்கிக் கொள்ளாமல் இருப்பார். பெரிய குடும்ப அமைப்பு உறவினர்களை உடையவர். பெருந்தன்மை மிக்கவர்.
எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு போகக்கூடியவர்
6. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், சுவையான எல்லாவற்றையும் ஜாதகர் அனுபவிக்கக்கூடியவர். இசைமேல்
அதிக விருப்பம் உடையவர். குழந்தைகளிடம் அன்பாக நடக்கக்கூடியவர். விடுமுறைகளைக் கழிக்க
ஊர்களுக்கும், நகரங்களுக்கும் செல்லக்கூடியவர். செலவைப் பற்றிக் கவலைப் படமல் எல்லாவற்ரையும்
இரசிக்கக்கூடியவர்
7. ஐந்தாம் வீட்டில் சனி இருந்தால், புத்திர தோஷம், ராஜ விரோதம் உடையவர். புத்தியில் தடுமாற்றம், பூர்வீகம்
நாசம் அடையும் தன்மை உடையவர்
8. ஐந்தாம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால், புத்திர தோஷம், ராஜ விரோதம் உடையவர். புத்தி தடுமாற்றம்,
கலகம் உடையவர். தெய்வ வழி பாட்டுத்தடைகள் உடையவர்.
வீடுகளும் கிரகங்களும் - ஆறாம் வீடு
1. ஆறாம் வீட்டில் சூரியன் இருந்தால், ஜாதகன் கடன், சத்ரு, அதாவது எதிரிகள் இல்லாதவன். அதி நோய், கண்
நோய், சிர நோய், வெப்ப நோய், சுர பீடை போன்ற நோய்களை உடையவன்.
2. ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், பெண் கலகம், கண் நோய், நீர் சம்பந்தமான ரோகங்களை உடையவன்.
தெளிவற்ற மனநிலையை உடையவன்.
3. ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், ஜாதகன் துஷ்டனாக இருப்பான். சத்ரு ஜெயம் உடையவன். ராஜ
விரோதம், கலகப் ப்ரியம், பித்த ரோகம் உடையவன்.
4. ஆறாம் வீட்டில் புதன் இருந்தால், கல்வி குறைவு, மந்த புத்தி உடையவன். வித்தைக் குறைவு உடையவன். வாத
ரோகம், வாயு பீடை உடையவன்.
5. ஆறாம் வீட்டில் குரு இருந்தால், சத்ரு ஜெயம், குரு நிந்தனை, தெய்வ மறுப்பு உடையவனாக ஜாதகன்
இருப்பான். மேக வியாதி உண்டாகும்
6. ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், மனைவிக்குப் பீடை. திருட்டுக் குணம் உள்ள பெண்னுடன் சிநேகம்
உண்டகும். பெண்களால் நஷ்டம் உண்டாகும். வாகன பீடை, வாத ரோகம் உடையவன்.
7. ஆறாம் வீட்டில் சனி இருந்தால், கீர்த்தி உடைய்வன். சத்ரு ஜெயம் உடையவன். பித்த ரோகம் உடையவன்.
8. அறாம் வீட்டில் ராகு இருந்தால், கீர்த்தி உடையவன்.சத்ரு ஜெயம் உடையவன். விஷக்கடி நீக்கம்,
ராஜதண்டனை நீக்கம் உடையவன். பித்த ரோகம் உடையவன்.
9. ஆறாம் வீட்டில் கேது இருந்தால், சத்ரு ஜெயம் உடையவன். விஷ பயம், பித்த ரோகம் உடையவன்

வீடுகளும் கிரகங்களும் - ஏழாம் வீடு


1. ஏழாம் வீட்டில் சூரியன் இருந்தால், களத்திர தோஷம், பீடை. நோயுள்ள பெண்னின் சிநேகம் உடையவன்
2. ஏழாம் வீட்டில் சந்திரன் இருந்தால், காதல் உண்டாகும். பல பெண்களின் சிநேகம் உண்டாகும். சுக ஜீவனம்
உடையவன்.
3. ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், களத்திர தோஷம். விதவைப் பெண் நேசம். துஷ்ட குணமுள்ள களத்திரம்
உடையவன்.
4. ஏழாம் வீட்டில் புதன் இருந்தால்,கல்விமான். செப்புச் சிலை போன்ற பெண்ணுடன் களத்திரம் உடையவன்.
விந்து நாசம் உடையவன்
5. ஏழாம் வீட்டில் குரு இருந்தால், உத்தமமான களத்திரம். இளம் வயதில் திருமணம். மனைவியினால் தொழில்
மேன்மை உடையவன். வருமானம் உடையவன்
6. ஏழாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், களத்திர லாபம் உடையவன். பிறபெண் நேசம் உடையவன்.
யோகமுடையவன். சங்கீத ஞானமுடையவன். இரசனை உடையவன்
7. ஏழாம் வீட்டில் சனி இருந்தால், களத்திர தோஷம். முதிர்ந்த தோற்றம் உடைய களத்திரம் உடையவன்.
கீழ்த்தரமான பெண்ணின் சிநேகம் உடையவன்
8. ஏழாம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால், களத்திர பீடை. ஜாதகன் அதிகக் காமம் உடையவன். விதவைப்
பெண்னின் சிநேகம் உடையவன். திருமணத்தடை உடையவன்
வீடுகளும் கிரகங்களும் - எட்டாம் வீடு
1. எட்டாம் வீட்டில் சூரியன் இருந்தால், மத்திம ஆயுள் உடையவன். கண் நோய் உடையவன். மனஸ்தாபம்
உடையவன்
2. எட்டாம் வீட்டில் சந்திரன் இருந்தால், சுபயோகம் உடையவன். கண்னில் நோய் உடையவன். தன நாசமாகும்
அமைப்பு இருக்கும். ஜலகண்டம் உடையவன்
3. எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், களத்திர தோஷம் உடையவன். ஆயுளுக்கு பங்கம் உடையவன். சத்ரு
கெடுதல் உடையவன்
4. எட்டாம் வீட்டில் புதன் இருந்தால், வேத ஞானம், மந்திர சாஸ்திரம் அறிந்தவன். தீர்க்காயுள் உடையவன். தனம்,
செல்வம் உடையவன்
5. எட்டாம் வீட்டில் குரு இருந்தால், தீர்க்க ஆயுள் உடைய ஜாதகன். புத்திரர்களுக்கு கெடுதல் உண்டாகும்
6. எட்டாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், தனம், செல்வம், தீர்க்காயுள் உடையவன். சாஸ்திர ஞானம் உடையவன்
7. எட்டாம் வீட்டில் சனி இருந்தால், தீர்க்காயுள் உடைய ஜாதகன். தரித்திரம், தனவிரயம் உடையவன். தொழிலில்
நிலையில்லா நிலை உடையவன்
8. எட்டாம் வீட்டில் ராகு இருந்தால், விஷ கண்டம் உடையவன்
9. எட்டாம் வீட்டில் கேது இருந்தால், மனைவிக்கு அதிர்ஷ்டம் உடையவன். அவளால் இவனுக்கும் அதிர்ஷ்டம்
உண்டகும்
பத்தாம் வீட்டு அதிபதி மற்ற இடங்களில் சென்று அமர்வதால் ஏற்படும் பொதுப் பலன்கள்

பத்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் தொலில் வெற்றிமேல் வெற்றியைக் காண்பான்.
பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலோ அல்லது தீய
வீடுகளில் (6,8,12 ஆம் வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ சிரமப்படுவான். போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். மூன்றடி
ஏறினால் நான்கடி சறுக்கும்!

லக்கினத்தில் அமர்ந்திருந்தால்:
தீவிரமாக தொழில் செய்வான். கடின உழைப்பாளி. தன் முயற்சியால் மேன்மை அடைவான். சுய தொழில் செய்வான்.
தன்னிச்சையாகச் செய்யக்கூடிய வேலையில் இருப்பான். தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வான்.
மற்றவர்களால் போற்றப்படுவான். மெதுவாக, நிதானமாக, தன்முனைப்புடன் முன்னேற்றம் காண்பான்.இது அரசியலுக்கு
ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில்
வெற்றி பெற்றுச் சிறப்பான்.

இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:


ஜாதகன் அவனுடைய வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானவன். இரண்டாம் வீடு என்பது 10 ஆம்
வீட்டிற்கு ஐந்தாம் வீடு. தொட்டதெல்லாம் துலங்கும் கை நிறையப் பொருள் ஈட்டுவான். தன்னுடைய குடும்பத்
தொழிலையே பெரிய அளவில் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில்

ஏறி ஒரு உச்ச நிலையை ஜாதகன் அடைவான். உணவு விடுதி, பெரிய ரெஸ்டாரண்ட் போன்றவற்றை நடத்தும்
தொழிலும் சிலர் ஈடுபடுவார்கள். பத்தாம் வீடு கெட்டிருந்து, பத்தாம்
அதிபதி மட்டும் இங்கே வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் பெரும் நஷ்டங்களைச் சந்திப்பதோடு, தனது குடும்பத்
தொழிலையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு ஆளாகித்
தவிப்பான்.

மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:


ஜாதகனின் பகுதி நேர வாழ்க்கை பயணங்களில் கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும். பேச்சாளனாகவோ,
எழுத்தாளனாகவோ இருந்தால் அந்தத்துறையில் பிரகாசிப்பார்கள். புகழடைவார்கள். தொழிலில் உடன்பிறப்புக்களின்
பங்கும் இருக்கும் அதாவது அவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். எல்லோராலும்விரும்பப்படும் நிலை
கிடைக்கும். அதனால் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல் மதிப்பு இருக்கும். 3 ஆம் வீடு பத்தாம் வீட்டிலிருந்து
ஆறாவது வீடாக அமைவதால் இந்த அமைப்பினருக்கு இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும்
அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்

நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்:


ஜாதகர் ஒரு உதாரண மனிதராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் அறிவுடையவராக இருப்பார்.(person with
knowledge in various subjects) இந்த அறிவாற்றலால் பலராலும் மதிக்கப்படுபவராக இருப்பார். இடம் வாங்கி விற்கும்
அல்லது கட்டடங்களைக் கட்டிவிற்கும் தொழிலை மேற்கொண்டால் அதில் முதன்மை நிலைக்கு உயர்வார். அரசியல்
அதிகாரமுடையவர்களுடன் தொடர்புடையவராக இருப்பார்.தூதுவராக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும். வசதியான
வீட்டையும், வாகனங்களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாக இந்த
அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர்களும் கிடைப்பார்கள். பொது
வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

ஐந்தாம் வீட்டில் இருந்தால்


வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்பை ஆசீர்வதிக்கப்பெற்ற
அமைப்பு எனச் சொல்லலாம். தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பங்கு வணிகத்தில் ஈடுபட்டால்
பணம் கொழிக்கும். இறைவழிபாடு, தியானம் என்று எளிமையாகவும் இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள பலர்
இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள்.அதோடு ஐந்தாம் வீடு, பத்தாம் வீட்டிற்கு எட்டாம் வீடாக இருப்பதனால்,
இவர்களுக்கு மறைமுக எதிரிகளும் இருப்பார்கள். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தடைகள் ஏற்படுத்த
முயல்வார்கள்.

ஆறாம் வீட்டில் இருந்தால்:


நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகள் சார்ந்த வேலையில் இருந்தால், அதில் பிரகாசிப்பார்கள்.
அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று மேன்மை அடைவர்கள். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். நடுநிலையாளர்
என்று பெயர் பெறுவதுடன், பலரின் மதிப்பையும் பெறுவார்கள். அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள்

ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். ஆறாம்வீடு பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு ஆகையால், அதிர்ஷ்டம் இவர்கள்
செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வரும்.இவர்கள்
வேலையில் உயர்வதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

ஏழாம் வீட்டில் இருந்தால்:


பத்தாம் அதிபதி இந்த இடத்தில் இருந்தால் ஜாதகரின் தொழில் அல்லது வேலை மிகவும் சக்தி வாய்ந்ததாக
அமையும். அவர்களுடைய அறிவு சராசரிக்கும் அதிகமானதாக இருக்கும். பலவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து
கொண்டதை அற்புதமாக வெளிப்படுத்தும் திறமையுடன் இருப்பார்கள். தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது
கூட்டாளி கிடைப்பார்.அதுவே அவருடைய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும். தொழில் நிமித்தமாக
அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கும்.

நிர்வாகத்திறமைகள் உடையவராக இருப்பார். தங்களுடன் வேலைப்பார்ப்பவர்களை நம்புவார்கள், அதோடு


நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள்
கையில் எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே வெற்றி பெறும். பலனைத்தரும். இந்த இடம் 10 ஆம் வீட்டிற்குப்
பத்தாம் இடமாகும். அதனால் அவர்களுடைய
வெற்றி எல்லைகளைக் கடந்து நிற்கும். கடந்து செல்லும்.

எட்டாம் வீட்டில் இருந்தால்:


இந்த வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும்,
இடமாற்றங்களும் உண்டாகும். திறமைசாலிகளாக இருந்தாலும் பலரால்
புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். தங்கள் வழியில்தான் செல்வார்கள். நீண்ட ஆயுளை உடையவராக
இருப்பார்கள். பெருந்தன்மை உடையவர்களாகவும், உயர்ந்த
கொள்கைகளை உடையவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடன் வேலை செய்பவர்களால் பாராட்டப்
படுபவர்களாகவும், விரும்பப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த 8 ஆம்
இடம் பத்தாம் வீட்டிற்குப் 11 ஆம் இடம் ஆதலால், நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அல்லது நல்ல சம்பளம்
கிடைக்கும் வேலைகள் அமையும்.

ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:


துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக ஜாதகர் இருப்பார். பரம்பரைத் தொழிலில் நாட்டம்
உடையவராக இருப்பார். போதகர். ஆசிரியர் என்பது போன்ற வேலைகளை விரும்பிச் செய்வார்.ஆன்மீக வாழ்வில்
ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடையவராகவும் இருப்பார்.
இவர்களுக்கு
இவர்களது தந்தையின் உதவியும் வழிகாட்டுதலும் நிறைந்திருக்கும். தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.
மனவள மேம்பாட்டுத்துறையில் (psychological counseling)
நுழைந்தால் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்து மேன்மை பெறுவார்கள். தங்களுடைய திறமையால் பலரது
போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள்

பத்தம் வீட்டு அதிபதி 10 ல் இருந்தால்


தங்கள் தொழிலில் அல்லது வேலையில் பிரகாசிப்பார்கள். இந்த அமைப்பு கெட்டிக்காரத்தனத்தை, புத்திசாலித்தனத்தை
வெளிபடுத்தும் அமைப்பாகும். தங்களுக்கு மேலாளர்களை மதிக்கும் மனப்பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள்.
அதனால் மதிப்பும் பெறுவார்கள்.மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அரசியல் தொடர்பும்,
அரசுத் தொடர்பும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த வீடு நல்ல கிரகங்களின் சேர்க்கை, பார்வைகளைப்
பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவார்கள்

பத்தாம் அதிபதி 11 ல் இருந்தால், ஜாதகருக்குப் பணத்துடன், மதிப்பும், மரியாதையும் சேரும். மகிழ்வுடன் இருப்பார்கள்.
பெரு நோக்குடையவர்களாக இருப்பார்கள். பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வேலை
கொடுக்கும் வாய்ப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலமும் இவர்களுக்குப் பல தொடர்புகள் உண்டாகும்.
பலராலும் விரும்பப்படுவார்கள். இந்த வீடு பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடமாகும். இதனால், இவர்களுக்கு
செல்வத்துடன், புகழும், மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். தொழில் மேன்மை உடையவர்களாக இருப்பார்கள்.

பத்தாம் அதிபதி 12 ல் இருந்தால்.


வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். சிலர் வெளி நாட்டிற்குச்
சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வருமானவரி, விற்பனை வரி போன்ற செயல்பாடுகளில் முறையற்று
நடந்தால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்த விஷயங்களில் இந்த அமைப்பினர் எச்சரிக்கையாக
நடந்து கொள்ள வேண்டும். அரசியலிலோ அல்லது அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பெரும் நஷ்டத்தை
மட்டுமே சந்திக்க நேரிடும். எதிரிகள் பலர் ஏற்படக்கூடும் அவற்றிற்கெல்லாம் அப்போதப்போதைக்குத் தீர்வுகளை
இவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

You might also like