Professional Documents
Culture Documents
1.காமம்:
2.குரோதம்:
3.மோகம்:
4.லோபம்:
5.மதம்:
1.சஞ்சிதம்:
2. பிராரப்தம்:
3. ஆகாமியம்:
தரை எது? தண்ண ீர் எது என்று தெரியாமல் துரியோதனன் கால் வைத்து
விழுகிறான். அதை பார்த்து பாஞ்சாலி கைகொட்டி சிரிக்கிறாள். அதை
பார்த்த பாண்டவர்கள் அவளை கண்டிக்கவும் இல்லை. மன்னிப்பு கேட்க
சொல்லவும் இல்லை. வெறும் வேடிக்கை பார்க்கின்றனர். பாஞ்சாலி
துரியோதனை அஸ்தினாபுரத்தின் யுவராஜன் என்று கூட பார்க்காமல், நம்
இடத்திற்கு விருந்தாளியாக வந்திருக்கிறான் என்றும் யோசிக்காமல் மற்ற
நாட்டு மன்னர்களும் கூடி இருக்கும் சபையில் அவமானப்படுத்துகிறாள்.
இதில் பாஞ்சாலி செய்யும் கர்மாவானது(ஆகாமியம்) அவளாக செய்வது.
நான் ஒரு ஜோதிடன். என்னை நம்பி வரும் மக்களுக்கு, நான் கற்ற ஜோதிட
ஞானத்தை பயன்படுத்தி, அவர்களது எதிர்காலத்திற்கு சிறந்த ஆலோசனை
அளிப்பேன் என்ற ஆக்கத்தினை நோக்கி எனது கர்மாவானது இருந்தால்,
மக்கள் மத்தியில் எனக்கு மரியாதையும், கீ ர்த்தியும் கிடைக்கும்.
அதைவிடுத்து ஒருவனுக்கு ஜோதிடம் சொன்னால், எனக்கு எவ்வளவு
கிடைக்கும் கர்மபலனை நோக்கி எனது கர்மா இருந்தால், நான்கு
நாட்களுக்கு அதிகமான மக்கள் என்னைத் தேடி மக்கள் வந்தால், நிறைய
பணம் கிடைத்திருக்கிறது என்ற சுகம் கிடைக்கும். பிறகு 7 நாட்களுக்கு
மக்கள் எதிர்பார்த்தபடி வரவில்லையென்றால், ஒன்னுமே கிடைக்கலையே
என்ற துக்கம் கிடைக்கும். ஆக மாறி மாறி உணர்ச்சிகளுக்கு
அடிமைப்பட்டவனாய், மன நிம்மதியை இழந்தவனாய் என் வாழ்க்கையை
கழிப்பேன்.