Professional Documents
Culture Documents
ஆமணக்கு... வறண்ட நிலத்திலும் கூட நன்கு வளரும் தாவரம். பெரும்பாலும் விதைகளுக்காகத்தான் இது
பயிரிடப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவ அகராதி தந்த மாமேதை த.வி.சாம்பசிவம் பிள்ளை,
16 ஆமணக்கு வகைகளைக் குறிப்பிட்டிருந்தாலும் சிற்றாமணக்கு, பேராமணக்கு, செவ்வாமணக்கு,
காட்டாமணக்கு ஆகிய நான்கு ஆமணக்கு வகைகள்தான் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.
தவிர வயிறு, குடல், கர்ப்பப்பை முதலான அனைத்து நோய்களுக்கும் ஆரம்பக்கட்ட மருந்தாக இந்த
எண்ணெயைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த எண்ணெய் புகையின்றி எரியக்கூடியது.
பருப்பு வேகவைக்கும்போது அதில், இரண்டு துளிகள் ஊற்றின எண்ணெயை விட்டால், பருப்பில் உள்ள வாயு
நீங்கிவிடும். பிறந்த குழந்தை முதல் கர்ப்பிணி மற்றும் முதியோர் வரை அனைவருக்குமான சிறந்த குளியல்
எண்ணெய் இது. அனைத்து தரப்பினருக்குமான மலச்சிக்கலை நீக்குவதற்கு பாதுகாப்பான மருந்து இது. ஊற்றின
எண்ணெயில் 3 முதல் 5 துளிகள் வரை இரவு படுக்கப்போகும் முன் குடித்து வர, மலச்சிக்கல் நீங்கும். சிறு
குழந்தைகளுக்கு 2 துளிகள் போதுமானது. இது பக்கவிளைவற்ற பாதுகாப்பான மலமிளக்கி. ஊற்றின
எண்ணெயுடன் கால் பங்கு எடையில் கடுக்காய்பிஞ்சுப் பொடியைச் சேர்த்து நன்கு அரைத்து வாய்வு,
மூலக்கடுப்பு, ரத்தமூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கப்போகும் முன் 5 மில்லி வரை குடித்து வர,
அனைத்து மூலப்பிரச்சினைகளும் தீரும். இதற்கு ‘மூலகுடோரி தைலம்’ என்று பெயர். இது எல்லாச் சித்த
மருத்துவக் கடைகளிலும் கிடைக்கும்.
‘தேரையர் தைல வருக்கச் சுருக்கம்’ எனும் அரிய நூல், சுகப்பிரசவம் ஏற்படுவதற்குக் கூறும் ‘பாவனப்
பஞ்சாங்குலத் தைலம்’ எனும் அற்புதத் தைலம், சிற்றாமணக்கு விதைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
சுகப்பிரசவம், அரிய நிகழ்வாகிவிட்ட இக்காலங்களில், கர்ப்பிணிகளின் கருவுக்குப் பாதுகாப்பாகவும்,
சுகப்பிரசவத்தையும் ஏற்படுத்தும் அற்புத மருந்துதான் இந்தப் பாவன பஞ்சாங்குலத் தைலம். கர்ப்ப காலத்தின்
முதல் மாதம் தொடங்கி 10 மாதங்களும் தொடர்ந்து இத்தைலத்தைத் தினமும் சூரிய உதயத்துக்கு முன்னும்,
இரவு உணவுக்குப் பிறகும், 5 முதல் 10 துளிகளைக் காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடித்து வர கர்ப்பக் காலத்தில்
இடைஞ்சல் செய்யும் தொந்தரவுகள் எதுவும் வராது. கர்ப்பக் காலத்தின் கடைசி மாதத்தில் இத்தைலத்தை இரவு
மட்டும் 5 மில்லி அளவு உண்டு வர மிகுந்த நன்மையைத் தரும். கடைசி மூன்று நாட்களில் 10 மில்லி வரை இரவு
மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு உண்டு வருவதால் பிரசவ வலியின் தாக்கமும் பிரசவ காலமும்
குறைந்து நிச்சயமாக சுகப் பிரசவம் ஏற்படும்.
2015-ம் ஆண்டு முதல், தமிழக அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வரும், கர்ப்பிணிக்களுக்கான இலவச மருத்துவப்
பெட்டகத்தில், பாவன பஞ்சாங்குலத் தைலமும் இடம்பெற்றுள்ளது. வாந்தி, பேதி மற்றும் வியர்வை
உண்டாக்கும் மருந்துகளை வழங்கி, உடலை இயக்கும் உயிர்ச் சக்தியான நாடியில் உணரப்படும் குற்றங்களை
நீக்கி, நமது பாரம்பர்ய சித்த மருத்துவம் முற்றிலுமாக குணமாக்கி விடுகிறது. எளிதான முறையில்
செய்யப்படும் வாந்தி, பேதி மருந்துகள் சித்த மருத்துவத்தில் நிறைய உள்ளன. அவற்றில் முதன்மையானது
‘சித்தாதி எண்ணெய்’. இது ஊற்றின எண்ணெய் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. குணமாகாது என்று
கைவிடப்பட்ட பல நோய்களில் இம்மருந்தைத் தொடர்ந்து வழங்கி வர நல்ல முன்னேற்றங்களைக் காணலாம்.
மற்ற தைலங்களுக்கெல்லாம் காய்ச்சும்போது, அடியில் படியும் வண்டல், மெழுகு பதமாக இருக்க வேண்டும்
என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால், சித்தாதி தைலத்துக்குச் சூடான எண்ணெயில் கைவிட்டால் கை
கொப்பளிக்காத அளவுக்குத்தான் சூடு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கொடிய வாத நோயான ‘ரொமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ என்று சொல்லப்படும் கை, கால், மூட்டு வலிகளால்
அவதிப்படுபவர்கள் பலர் உண்டு. சித்த மருத்துவத்தில் ‘உதிரவாத சுரோணிதம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்த வாத வலிகளுக்கு, ஆமணக்கு விதை கொண்டு ஒற்றடம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கிறது.
ஆமணக்கு விதைகளைத் தட்டி, ஓடு நீக்கி உள்ளிருக்கும் வெண்மை நிற பருப்புகளைச் சேகரித்துக் கொள்ள
வேண்டும். இவற்றை மண் அகலில் வறுத்து சூடாக்கி பருத்தித் துணியில் முடிந்து ஒற்றடமிட வேண்டும். வாத
வலி, வக்கமுள்ள
ீ இடங்களில் ஆமணக்கெண்ணெய் அல்லது பிற தைலங்களைத் தடவி 30 நிமிடங்கள் கழித்து,
ஒற்றடம் கொடுக்கும்போது நல்ல பலன் கிடைக்கும். 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இப்படி ஒற்றடம்
கொடுக்கலாம்.
ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படி ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கு இலைகளில் பசு நெய் தடவி,
அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வந்தால் இளம் தாய்மார்்களுக்குப் பால் சுரப்பு அதிகரிக்கும்.
ஆமணக்கு இலையை இடித்துச் சாறு பிழிந்து, தினமும் 15 மில்லி அளவு குடித்து வந்தாலும் பால் சுரப்பு
அதிகரிக்கும்.
மார்பகக் காம்புகளில் ஏற்படும் புண்கள் மற்றும் வெடிப்புகளில் ஆமணக்கு எண்ணெய் பூசி வந்தால், விரைவில்
குணமாகும். இதைப் பசுமாடுகளுக்கும் பயன்படுத்தலாம். ஆசன வாயில் ஏற்படும் கடுப்பு, புண், புழுக்கடி
போன்றவற்றையும் ஆமணக்கு எண்ணெய் பூசி குணப்படுத்தலாம். கண்வலி மற்றும் கண்ணில் தூசி, மண்
போன்றவற்றால் ஏற்படும் கண் சிவப்புக்கு கண்ணில் ஒரு துளி ஆமணக்கெண்ணெய் விட்டால், சரியாகிவிடும்.
மஞ்சள் காமாலை நோயையும் ஆமணக்கு இலை குணப்படுத்தும். ஒரு கைப்பிடி ஆமணக்கு கொழுந்து இலை,
அரைத் தேக்கரண்டி சீரகம், 2 கிராம் பச்சைகற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து ஒரு
நெல்லிக்காயளவு எடுத்து காலை ஓர் உருண்டை, மாலை ஓர் உருண்டை எனத் தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டு
வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
இந்நோய் கண்ட சமயத்தில் உப்பு, புளிப்பு, கொழுப்பு நீங்கிய உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும்.
ஆமணக்கு இலைகளை, ஆமணக்கெண்ணெயில் வதக்கி பொறுக்கக்கூடிய சூட்டில் அடிவயிற்றில் வைத்து, ஒரு
பட்டைத்துணியால் தளர்வாகக் கட்டி வைத்தால், கடுமையான சூதக வலியும் (மாதவிடாயினால் வரும்
வயிற்றுவலி) 15 நிமிடங்களில் குறைந்துவிடும்.
- வளரும்
ஊற்றின எண்ணெய்
ஆரம்பத்தில் அடுப்பை சிறு தீயில் வைத்து பிறகு அதிகமாக எரிக்க வேண்டும். இப்படி 4 மணிநேரம் காய்ச்சினால்,
பொன்னிறத்தில் எண்ணெய்ப் பிரியத் தொடங்கும். இந்நிலையில், தீயைக் குறைத்து எண்ணெய்த் துளிகளைக்
கரண்டியில் எடுத்து, வேறு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இப்படி சேகரித்த வண்டல் கலந்த எண்ணெயை
தனியே காய்ச்சினால், நீர் வற்றி எண்ணெய் மேலே திரளும். அதை வடிகட்டி எடுப்பதுதான் ஊற்றின எண்ணெய்.
காட்டாமணக்கு
சிற்றாமணக்கு விதைகளை 1-ம் நாள் நீராகாரத்தில் ஊற வைக்க வேண்டும். 2-ம் நாள் வெயிலில் உலர்த்த
வேண்டும். 3-ம் நாள், கற்றாழைச் சாற்றில் ஊற வைக்க வேண்டும். 4-ம் நாள், கற்றாழைச் சாற்றுடன்
அடுப்பிலேற்றி வேக வைக்க வேண்டும். 5-ம் நாள், வேக வைத்த கொட்டைகளை நீரில் கழுவி வெயிலில்
உலர்த்த வேண்டும். 6-ம் நாள், விதைகளை இடித்து 4 பங்கு இளநீர் சேர்த்து, அடுப்பில் ஏற்றி, சிறு தீயில் கொதிக்க
வைத்து கிடைக்கும் எண்ணெயை சேகரித்தால் அதுதான், பாவன பஞ்சாங்குலத் தைலம்.
வட்டில்
ீ காய்ச்சினால் நஞ்சு இல்லை
இவ்வளவு மருத்துவக் குணம் வாய்ந்த ஆமணக்கு எண்ணெயில், ‘ரிசின்’ எனப்படும் மிகக்கொடிய நஞ்சு
இருக்கிறது; அதனால், அதைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லி வருகிறது, ஆங்கில மருத்துவம். ஆனால்,
ஆட்டிப்பிழிந்து எடுக்கப்படும் ஆமணக்கு எண்ணெயில்தான் இந்த நஞ்சு இருக்கும். வட்டில்
ீ காய்ச்சிய ஊற்றின
எண்ணெயில் இந்த நஞ்சு இல்லை. நமது மூதாதையர்கள், அதைச் சாப்பிட்டு நூறாண்டு காலம் நோயில்லாமல்
வாழ்ந்து வந்துள்ளனர்.