You are on page 1of 8

இம் மூலிகையின் பெயர் சுக்கை என்கிற முசுமுசுக்கை. சித்தர்கள் இதனை ""ஆஞ்சநேயர் கை'' என்றழைத்தனர்.

இதன் இலை காசம்,


கோழை, சுவாசக் கோளாறுகள், புகைக்கம்மல், ஜலதோஷம் ஆகியவற்றை போக்கும் தன்மையுடையது. பித்தம் அதிகமாவதால் ஏற்படும்
இறைப்பு (வசிங்)
ீ கட்டுப்படும். இது செம்மண் பூமி மற்றும் கரும்புத் தோட்டங்களில் வளரும். பனிக் காலத்தில் ஏற்படும் சுவாசக்
கோளாறுகளையும் நீக்கும் தன்மை உடையது. தலை சுற்றலையும் போக்கும். வல்லாரை கீ ரையைப் போன்று ஞாபக சக்தியை அதிகரிக்கச்
செய்து மூளையை பலப்படுத்தும். இதன் இலையைப் பறித்து லேசாக இடித்து ரசம் வைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட பக்கவாதம்,
பித்த நோய்களைப் போக்கும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ரசப்பொடி போன்று பயன்படுத்தலாம் (புளி சேர்க்காமல்
ரசம் வைக்க வேண்டும்). இதில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகள் பலம் பெறும்.

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்!


***********************************************
வள்ளலார் உணவு மாறுபாட்டினாலும், கவனக்குறைவு மற்றும் ஊழ் வகையாலும் ஏற்படும் நோய்களிலிருந்து
விடுபட பல அரிய மூலிகைகளையும், மருத்துவ முறைகளையும் திருவருட்பாவில் எழுதியிருக்கிறார். அதில்
சில மூலிகையினால் கிடைக்கும் பயன்கள்:
கரிசலாங்கண்ணி – உடல் வசீகரம் அதிகரிப்பதுடன் உடல் வலுவடையும்.
பொற்றாலைக் கையாந்தகரை – உடல் வலுவாகும்.
தூதுவளை – சளித்தொல்லைகளைப் போக்கி புத்தி அதிகரிக்கச் செய்யும்.
வல்லாரை – காம உணர்வுகளை அகற்றி ஞான உணர்வு அளிக்கும். ஞாபகத்திறன் அதிகரிக்கும்.
புளியாரை – காயசித்தி, பித்தமர்த்தினி
பொன்னாங்கண்ணி – கண்ணொளி, வெப்பசமனி
அரைக்கீ ரை – சுரம் போக்கும்
அகத்தி – வேக்காடு போகும்
முசுமுசுக்கை – க்ஷயமர்த்தனி
கீ ழாநெல்லி – காமாலை போக்கி, பித்தம் போக்கி
மணத்தக்காளி – தணலாற்றி
துளசி – தோசம் போக்கி
முடக்கொத்தான் – வாதம் போக்கி
இருவாட்சி – ரத்த பித்தம் போக்கி
செண்பகம் – பருக்கள் போக்கி
குப்பைமேனி – உப்புக்கட்டு
பொடுதலை – வயிற்றுக் கடுப்பு, போக்கும், வெட்டை போக்கும், நீரொழுக்குப் போக்கும்
குமட்டி – வாதம் மாற்றும்
கண்டங்கத்தரி – சுவாச மர்த்தனி
சிறுவழுதலை – சுவாச காச மர்த்தனி
கொன்றை – கிருமி மர்த்தனி
விளா – பித்தம் போக்கி
பாகல் – பாஷான தோச மர்த்தனி
அத்தி – பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி
பூவரசு – சகல குஷ்டம் போக்கி
ஆடாதொடை – சுரம் போக்கி
வேம்பு – பித்தம் போக்கி
தாமரை – கண் குளிர்ச்சி
நந்தியாவட்டம் – கண்ணுக்குக் குளிர்ச்சி
எலுமிச்சை – பித்தம் போக்கி
முந்திரிப்பழம் – தோசம் போக்கி
திப்பிலி – தாது விருத்தி
வெற்றிலை – ஜீரணகாரி
சுண்டை – சுரம்போம்
பூசணி – ஊறல் போக்கும், வசீகரி
விலாமிச்சை – பித்தம் போக்கி
நன்னாரி – தேக சித்தி
சர்க்கரை – தாகம் போக்கி, மயக்கம் போக்கி
கரும்பு – கல்லுடைப்பு போக்கி
வெண்கரும்பு – க்ஷயம் போக்கி
முருங்கை – கண் ரணம் போக்கி
முருங்கைக் கீ ரை – மலம் போக்கி
பேயன் வாழை – காயசித்தி
பேயன் தண்டு – சர்வ விச நாசினி
பேயன் பழம் – ஜீரணகாரி, மலம் போக்கி
வாழைப்பூ – பெரும்பாடு போக்கி

நுரையீரல் சுத்தி :-
உங்க நுரையீரலை நீங்களே சுத்த‍ம் செய்வதற்கு அதிக நாட்கள் ஆகாது !!!
மூன்றே மூன்று நாட்கள்தான் ஆகும்.‌.....
இந்த மூன்று நாட்களில் கண்டிப்பாக உங்கள் நுரையீரல் சுத்த‍மடை யும் என்று
நம்பலாம்.
புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களு க்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை,
தூசுகளி னால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு......
அதே சமயம் 45 வருடமாக புகைபிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல்
நன்றாக இயங்குபவர்களும் உண்டு.....
இது ஆளாளுக்கு வித்தி யாசப்படலாம்.
எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம்
செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள்
சாப்பிடுவ தை நிறுத்தி விட வேண்டும்.
உதாரணத்திற க்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை....
உடலிருந்து நச்சுகளை நீக்கவேண்டியது அவசியம்.
எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.
சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை
குடிக்கவும்.
இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.
சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை.
எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.
முதல் நாள்:
இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ண ீரில் கலந்து காலை
உணவுக்கு முன்பு குடிக்கவும்....
ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான திராட்சைப் பழச்
சாற்றை குடிக்கவும்..
இதன் சுவை பிடிக்காவிட்டால் திராட்சை பழச்சாற்றுக்குபதிலாக அன்னாசிபழச்
சாற்றை குடிக்கலாம்....
எல்லாம் சுத்த மான தண்ண ீர், சர்க்கரை கலக்காத சாறாகஇருக்கட்டும்....
இந்த சாறுகளில் இயற்கை யான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ்
நிறைந்துள்ள தால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.
மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும்.....
இதில் தண்ண ீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது.....
கேரட்சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட் களும் இரத்தத்தை அமில
நிலையிலிருந்து காரத் தன்மை க்கு மாற்றுகிறது.
இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன் பெரி
போன்ற சாற்றை குடிக்க வேண்டும்.
பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒருடானிக்காக உதவுகிறது.
இதுஉடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக
சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை
நீக்குகின்றது.
கிரேன் பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள்
அல்லது ஆரஞ்சு சாற்றை கலப்படம் இல்லாமல்
குடிக்கலாம்.
இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய
உணவுகளை சாப்பிடவேண்டும்.
குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சிசெய்து வேர்வையைவெளி யேற்றவும்....
அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ண ீரி ல் குளிக்கலாம்.
வியர்வை வெளியேறும் போது நச்சுகளும் வெளி யேறும்.
இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும்.
5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து
தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக
உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும்.
இவ்வாறு கொதி நீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.
மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி,
சைனஸ் தொல்லை இருக்காது ்
அதன் பிறகு ........
முசுமுசுக்கை
முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல்
மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி,
ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது.
மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும்
சக்தி உடையது.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக....
முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல்
உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல்
மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும்.
இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.
கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீ ரை, சுவர்களிலும், தரைகளிலும்
தானாக வளர்ந்திருக்கும்.
இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது.
சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி,
ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது.
மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும்
சக்தி உடையது.
அமைதியின்மை போக்கும்
இக்கீ ரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து
தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம்.
இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து
போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும்
சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீ ரை.
உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.
சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக்
கட்டும்.
ஆஸ்துமா குணமாகும்
முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி,
ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை
குணமடையும்.
முசுமுசுக்கை தைலம்
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல்
மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை
மாற்றும்.
வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.
மூச்சிரைப்பு குறைய
பரட்டைக் கீ ரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து
உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால்
ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.
இருமல் குணமாக
முசுமுசுக்கை பொடியை தண்ண ீர் கலந்து தினமும் காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணம் ஆகும்
தகவல்:- வைத்தியர் மாலிக்
8220320197

பாலகிரக தோஷம்
 ஏட்டுக் குணம்
    முன்பொரு காலத்தில் இப்படி ஒரு சிகிச்சை முறை இருந்தது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று
நினைக்கிறேன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
  குழந்தைகளுக்கு பாலகிரக தோஷம் ஏற்பட்டால், அதற்கு ஏடு எழுதிக் கட்டினால் உடனே
குணமாகுமாம்!?!?!? குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், கண் சொருகி விடுதல், உதடு வறண்டு
காணப்படுதல், மேற்பார்வை பார்ப்பது, சுணக்கம், சிணுங்கிக் கொண்டே இருத்தல் போன்றவை இதற்கு
அறிகுறிகளாகும். இதனால் ஒருசில குழந்தைகள் வாந்தியெடுக்கும். இவை ஏற்பட்டால் பால கிரகத்
தோஷம் என அறிந்து ஏடு எழுதிக் கட்ட வேண்டுமாம்! ஏடு எழுதும்போதே குழந்தைக்கு நோய்
குணமாவதை உணரலாமாம்!!!
பாலகிரக தோஷத்தினை சில இடங்களில் ஏட்டுக் குணம் என்று சொல்வார்கள். இந்நோய் பதினாறு
வயதுவரை ஏற்படும் ஏடு எழுதுவதில் சிறிய ஏடு என்றும், பெரிய ஏடு என்றும் இருவகையுண்டு சிறிய
ஏடு எழுதுதலானது, பனை ஓலை ஒன்றில் எழுதிச்சுருட்டிக் கட்டப்படுவதாகும். பெரிய ஏடானது
தனித்தனி மடல்களாக பதினாறு மடல்களில் எழுதப்படுவதாகும்.

சிறிய ஏடு எழுதும் முறை


பனை ஒலையில் இறை சக்கரம் வரைந்து வடமொழி எழுத்தினை(சமஸ்கிருதம்) எழுதி, ஒலையை
நன்கு சுருட்டி இறைவனை வனங்கி மஞ்சள் தடவிய நூலினால் கட்டி அதற்கு சாம்பிராணி புகை காட்டி
குழந்தையின் கையில் கட்டிவிட வேண்டுமாம்.

சிறிய ஏடு எழுதுவதற்கான மந்திரம்

ஸர்வ மங்கள மங்கல்யே சிவே சர்வார்த்த சாரதே சரண்யே த்ரியம்பகே


கெளரி நாராயணி நமோ ஸ்துதே ஷயகாரக
சிறிய ஏடு எழுதுவதற்கான எந்திரம் (படம்)

பெரிய ஏடு எழுதும் முறை

பெரிய ஏடு எழுதுதலானது பதினாறு பனை ஓலைகளால் எழுதப்படுவதாகும். குழந்தைக்கு ஒரு மாதம்
ஒர் ஆண்டு முடியும்போது இந்நோய் ஏற்படும். அப்போது அந்த மாதத்திற்குரிய அல்லது ஆண்டிற்குரிய
ஏட்டை மாற்றிக் கட்டினால் போதுமானது. இவ்வேட்டைத் தொட்டிலில் கட்டி வைக்கவேண்டும். ஆண்
குழந்தையாக இருந்தால் தொட்டிலின் வலது பக்கமும் பெண் குழந்தையாக இருந்தால் இடது பக்கமும்
கட்ட வேண்டுமாம்.பிறகு காலை, மாலை இரு வேளையும் புகைபோட வேண்டுமாம்.

பெரிய ஏடு எழுதுவதற்கான மந்திரம்

தசத்ரவ்ய ஸ்மாயுக்தம் ஸஸுகந்தஞ்ச ஸுமனோஹரம்


தூபம் தஸ்யாமி தேவேசி லங்க்ருஹான தயாநிதே
தூபாரா ஜாய நம தூபம் ஆக்ராபயமி
தூபா நந்தரம் ஆசமன ீயம் ஸமர்ப யாமே
ஸாஜ்யந்திரி வர்த்தி ஸம்யுக் தம் வஹ்நினா
யோஜிதம் மயா க்ருஹான மங்களம்
தீபம் தீரைலோக்ய தீமீராபஹம்

 பெரிய ஏடு எழுதுவதற்கான எந்திரம் (படம்)


 புகைபோட வேண்டிய வஸ்துக்கள்.
 
ஆண்டு மாதம் நாள் புகை போடும்
பொருட்கள்
1 1 1 எருமைக் கொம்பு
தலை முடி
2 2 2 மாட்டுக்கொம்பு
பாம்புச் சட்டை
3 3 3 கோழிஇறகு
மயில்இறகு
4 4 4 சின்னி இலை
வசம்பு
5 5 5 ஊர்சுத்தி, ஓமம்
தலை முடி
6 6 6 ஊர்சுத்தி, வசம்பு
வெற்றிலை காம்பு
7 7 7 வேப்பிலை, துளசி
8 8 8 நண்டு ஓடு
ஆமை ஓடு
9 9 9 கழுகு இறகு
கோழி இறகு
10 10 10 கம்பளி மயிர்
11 11 11 நாய் வால்,தலை
முடி
பழைய செருப்புவார்
12 12 12 மாட்டுக்கொம்பு
பாம்புச் சட்டை
13 13 13 கழுகு இறகு
ஊர்சுத்தி

14 14 14 முள்ளி விதை
நண்டு ஓடு
15 15 15 வேப்பிலை
வில்வ இலை
16 16 16 ஆமை ஓடு
தூதுவலை

You might also like