Professional Documents
Culture Documents
TVA BOK 0012234 அரசகுலச் சான்றோர் நம்மாழ்வார்
TVA BOK 0012234 அரசகுலச் சான்றோர் நம்மாழ்வார்
நம்மாழ்வார்
நெல்லை நெடுமாறன்
வெளியீடு
தொல்லியல் அறிஞர் நல்லை நெடுமாறன்
ஆய்வு மற்றூம் நூகை மையம்
நூல் விவரக் குறிப்பு
பதிப்பாசிரியர் முூனைவர்.ஆ.தசரதன்
பதிப்பு முதற்பதிப்பு
பதிப்பு ஆண்டு 2016
அச்சுப்படிகளின்
எண்ணிக்கை 1000
முனைவர் ஆ.தசரதன்
சூசிரியர் பற்றி...
அணிந்துரை
பதிப்புரை
ஆசிரியர் பற்றி... 12
5. நம்மாழ்வார் வழித்தோன்றல்கள் 70
1% பிறகட்டுரைகள்
இராகு இரட்டைத்திருப்பதிஅரவிந்தலோசனன்| ,,
இத்தகைய நவக்கிரகம் பற்றிய இறைவணக்கப் பதிகளாக
அமைந்த இக்கோயில்கள் வைணவக் கோயில்களாகும்.
இவற்றுள், ஆழ்வார் திருநகரி என்ற திருத்தலமே நம்மாழ்வார்
தொடர்புடைய தலமாகும். இத்திருத்தலம் பல்வேறு
பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
நம்மாழ்வார் காலம்
நம்மாழ்வார் பிறந்த காலத்தை அறிஞர்களால் இன்றுவரை
23
ஒழுங்குபடுத்த முடியவில்லை. வைணவ ஈல்களில்
ஆழ்வார்களை வரிசைப்படுத்தவும் முடியவில்லை. இராம..னுஜ
நூற்றந்தாதி அருவிய வடமொழிச்சுலோகம் நம்மாழ்வாரை இறுதி
ஆழ்வாராகவே கூறுகிறது. நம்மாழ்வார் இடைப்பட்டவரோ
இறுதி ஆழ்வாரோ அதை விட அவர் ஆழ்வார்களிலே
தலைமையானவர் ஆவார். ஆனால் பொருமாள் சீயரின்
குருபரம்பரை வேதாந்த தேசிகரின் அதிகார சங்கிரம் பிரபந்தசாரம்
என்ற நூல் மற்றும் மணவாள மாமுனிகளின் நூல் போன்றவை
ஆழ்வார்களில் நம்மாழ்வாரைக் கடைப்பட்டவராகவே
உணர்த்துகின்றன. நாலாயிரத் திவ்வியப்பிரபந்தமும் கடைப்
பட்டவராகவே நம்மாழ்வார் காலத்தைக் கூறுகிறது. நம்மாழ்வார்
இடைப்பட்டவரோ கடைப்பட்டவரோ அதைவிட அவர்
ஆழ்வார்களில் தலைமையானவர்ஆவார்.
நம்மாழ்வார் குலம்
அஞ்சலென வடியவரை யாள வேண்டி
அரசர்கள் சிரோமணியாங் காரிராசன்
தஞ்சிறுவனென உலகில் வந்து தோன்றி
என்று நம்மாழ்வார் திருக்கோவக்கவி கூறுவதால் நம்மாழ்வார்
அரசர்கள் சரோமணியாம் காரிராசன் மரபில் வந்து தோன்றினார்
என்று திட்டவட்டமாக அறிகிறோம்.
திருவழுதி வளநாடனைத் தென்திருப்பேரைக் காவலனை
...ராமாவதாரதீர நாராயணன் வழுதிநாடன் நங்குலநாதன்
திருவுளம் கிளர்தர வழுதிநன் நாடா
தமிழ் தென்திருப்பேரைக் கோவே
என்று மகர நெடுங்குழைக் காதர் பிள்ளைத் தமிழ் கூறுவதைத்
தெளிகிறோம்.
ஆழ்வார் திருநகரில் இருந்த ௮.ம. மலையப்பப் பிள்ளை
கவிராயர் (வேளாளர்) மறன் அவதாரக் கவிதை என்ற நூலை எழுதி
யுள்ளார். இவரது காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டாகும்.
திங்க ளிரண்டுபுகுந் தெய்வத் தனிச்சுடரை
நங்கை திருவயிற்றில் வந்துதித்த நன்மணியை
யங்கண் வழுதிவள நாடர்குலத் தாரமுதா
யெங்கண் பெருமானை யெம்பெருமான் காக்கவே
நங்கை பிராட்டியாரின் திருவயிற்றில் உதித்த நம்மாழ்வார்
பெருமானை “வழுதி வளநாடர் குலத்து ஆரமுதே” என்று
வெள்ளாளர் குலத்தவரே சுட்டிக்காட்டுதல் நோக்கத்தக்கது. இத்
24
தகைய இலக்கியச் சான்றுகளை உற்றுதோக்குதல் ஆய்வாளர்களின்
கடமையாகும்.
மாறன் கலம். பகம் என்னும் நூல்
திருப்புளிக் உழ்விற்றிருக்கு
மாறன் பொருணை வளநாடான
என்கிறது. திருப்புளிக்கீழ் விற்றிருந்த நம்மாழ்வார் பெருமானை
“மாறன் பொருணை வளநாடான்” என்று இந்நூல் உணர்தீதுவது
அறியற்பாலதாம்.
தம்.மரழ்வார் ஊஞ்சல் கவிதை என்ற நூல்
சர்மேவு திருவழுதிக் குலத்தில் தோன்றுஞ்
செண்பகவண் சடகோப னாடி ரூஞ்சல்
என்று குறிப்பிடுகிறது. திருவழுதிக் குலம் என்றும் பாண்டிய
குலம் என்றும் கூறப்படுவதை எண்ணித் துணிவோமாக.
அத்திருவழுஇிக் குலத்தில் அவதரித்தவரே நம்மாழ்வார் ஆவார்.
ஆதிநாதன் வாகனமாலை என்ற நூல்
திருவழுதிவளநாடர் வார்த்தை
என்பதால் நம்மாழ்வார் அரச மரபினர் என்று அறிய முடிகிறது.
நம்மாழ்வார் ஊஞ்சற்கவிதை என்ற நூல் நம்மாழ்வாரை ஆழ்வார்
களுக்கெல்லாம் அரசன் (தம்பிரான்) என்று கூறுகிறது.
ஆற்றோடு வளைழுழங்குங் குருகை வாழும்
ஆழ்வார்கள் தம்பிரான்
என்பதால் ஆழ்வார்களில் நம்மாழ்வாரே மிக உயர்ந்தவராகக்
கருதப் பட்டார் என்று தெரியவருகிறது.
இருஞான முத்திரைக்கை மாறன் வீரன்
செண்பக வண்சட கோபன்
வீரக்குடியினர் அரசர் என்ற அடிப்படையிலேயே வீரன்
செண்பகவண் சடகோபன் என்று இங்குப் பாடலாசிரியர்
கூறியுள்ளார்.
ஆழ்வார்திருவனந்தல் என்ற ஏடு
திருவழுதி வளநாட னேதிரு வனந்தலோ
செண்பகச்சடகோப னேதிரு வனந்தலோ
சீரார்தமிழ்க்கரச னேதிரு வனந்தலோ
செண்பகச்சடகோப னேதிரு வனந்தலோ
என்கிறது. தமிழுக்கு அரசன் பாண்டியன் என்பது
இப்பாடலிலிருந்து நோக்கிடத்தக்கது. தமிழ் வளர்த்த சான்றோர்
25
அவரே; இதன் பொருட்டுத் தமிழ்நாடன் என்று
பெருமைப்படுத்தப்பட்டார்.
தம்மரழ்வார் பதம் என்ற நூல்
செண்பக மாறா நரவீரா
கூறு மறைத்தமிழ் நரவீரன்றடம்
பொருநை மாறன் நங்கையார் பெற்றபேர்
மாறன் மலிந்து வளமீளுங் குறுகையூரன்
வையம் புகழ் குருகை அய்யன் செண்பகமாறா
இப்பாடலாசிரியரின் கால அளவில் ஆட்சித்தலைவர்களை
“அய்யன்” என்று சிறப்பித்தது வழக்கமாயிற்று. எனவே
நம்மாழ்வாரையும் அய்யன் எனச் சிறப்பித்தார் எனலாம். மேலும்
வைணவத் தென் கலை அய்யங்கார்களில் தென்திருப்பேரை,
ஆழ்வார்திருநகரி போன்ற ஊர்களில் பாண்டியகுலச்சான்றோர்களே
அந்தணராக மாற்றம் பெற்றனர் என்ற பண்டைய வழ்க்கும்
உண்டு.
ஆதிதாதன் வாகன.மானை என்ற கவிதை நூல்
நாராயணன்வழுதிநாடாளன் சீராளன்
என்கிறது. ஆதிநாதரூசல் என்ற நூல் நாடாய்ச்சிமார் மூவர்
“திருவடிகள் வாழி” என்று கூறுவதில் தூத்துக்குடி, நெல்லை,
குமரி மாவட்டத்தில் “நாடாச்சி" என்ற வழக்கு எம்மக்களிடம்
உள்ளது எனத் தெளிவோமாக.
தீ£ம்.மாழ்வார்திருத்தலாட்டு என்ற நூல்
திருவழுதி நாடுமுற்றுஞ் செங்கோல் செலுத்துந்
இிருவழுதி நன்மரபிற் செல்வக் குமரன்
என்று கூறுகிறது.
நம்மாழ்வாரின் அன்னையார்
ஈர்பூத்த நீண் மதிளுஞ் செம்பொன்செய் கோபுரமும்
கார்பூத்த மாளிகையுங் கற்பகக்காவுஞ் செறிந்த
இருவண் பரிசாரத் தேவசனையே
மருவவர விந்தத்தில் வளர்திருவாழ் மார்பன்
கற்றெடுத்த கல்விக் கடலாளருந் தவத்தாற்
பெற்றெடுத்த பெண்கள் பெருமாளுடைய நங்கை
என்பதால் திருவழுதிநாடு முழுதும் செங்கோலாட்சி செய்யும்
வேந்தர் குடியில் தலைமகன் காரிமாறனைத் தந்தையாகவும் நீண்ட
மதில், செம்பொன்னாலான கோபுரம், மாளிகை, பனைமரங்கள்
26
நிறைந்த சோலையுடைய திருவண் பரிசாரத்தில் அமைந்த திரு
வாழ்மார்பன் பிரபுவின் மகள் நங்கையைத் தாயாகவும் அமையப்
பெற்றவர் நம்மாழ்வார் என்று உணர முடிகிறது. இவர்களுக்குக்
குழந்தைப் பேறு இல்லாத காலத்தில்
செங்கோலை விட்டுக் கொடுங்கோல் செலுத்தினமோ
வெங்கோப நீத்தார்க்கு வேதனைகள் செய்தோமோ
ஆறிலொன்று கொள்ளாதவனி புரந்தோமோ
ஊரிலன்பர் செய்த உதவி மறந்தோமோ
மகப்பேறு இல்லாத நிலையில் ஆட்சியில் தவறு செய்தோமோ
என்று வேதனைப்படுவது நோக்குக; செங்கோல் செய்வதும், ஆறி
லொன்று கடமை பெறுவதும் அரசகுலத்தவருக்கே
அமைந்ததாகும். ஆனால் சோழ மண்டல சதகம் என்ற நூல்
எட்டிலொரு கடமையை வேளாளர் பெற்றதாக (பிற்காலம்/
குறிப்பிடுகிறது. நம்மாழ்வார் (மரபினரைச்) சுட்டிக்காட்டும்
போழ்து,
ete eeeeeee துடரிமலைக் காவலனே
பொருநைத் துறையானே: பொதியமலைக் காவலனே
குருகைப் பெருமானே குமரித்துறையானே
என்று கூறுவதால் மிகத் தெளிவாகப் பாண்டிய குலமரபினரில் ஒரு
கிளை திருக்குருகூர் சிற்றரசர் என்று அறியக் கிடக்கின்றது. இருக்
குருகூர் நல்லாட்சியின் பொருட்டு,
தென்னர் புகழச்சகத்தோர் பணிகேட்ப
மன்னன் வணங்க மறையோர்புடைசூழப்
பேரரசர் ஆன பாண்டியன் இவரைப் புகழ்ந்து கூறினான். மக்கள்
இவர் ஆணையை மத்து நடந்திட்டனர். பிற மன்னர்கள் வணங்
கினர். அந்தணர் காரிமாறனைச் சுற்றி இருந்தனர். இந்த நிலையில்
உள்ள உயர் குடியினரே திருக்குருகூர் மன்னராவர். திருவழுதி
நாட்டுச் சிறப்புகளைக் கூறும் விடத்து அமைந்த தலைவனை
“திருவழுதி நாடன்" என்றும் “இருவழுதி நாடான்" என்றும் சுட்டிக்
காட்டுவது அறியற் பாலதாம்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர்த் திருக்குறுங்குடிப் பெரு
மாளைச் சேவித்து வணங்கித் தவமிருந்து பெற்ற பிள்ளையாக
நம்மாழ்வார் பிறந்தார்.
செவ்விய நல்லார்தமை நோக்கி
எங்கள் குடிக்கும் மிறையோன் பெருங்குடிக்கும்
உங்கள்குடிக்கு மொருமகவாய்த் தோன்றினான்
என்றும் அரசன் குடிக்கும் பாண்டியன் பெருங்குடிக்கும் தான்
பிறந்த திருவண் பரிசாரத்தில் உள்ள பிரபுவான திருவாழ்மார்பன்
27
குடிக்கும் நாட்டில் வாழும் குடிகளை ஆண்டு கொள்ள ஒருவனாக
அவதரித்துள்ளான் என ஆனந்தப் பெருக்கினால் கூறினாள்.
மிக வலுவான இறையோன் பெருங்குடி என்று கூறுவது
அரச குடியை என்பது தெளிவாக உணரப்படும். மேலும்,
வெண்சா மரையிரட்டப்
பூசக்கிர வாளப் புவியோர் புடைநிழற்ற
மாசக்கரவாள வண்ண வட்டக்குடை நிழற்ற
என்னும் பகுதியில் வெண்சாமரம் வீசுவதும் வெண்மை
(வண்ணம்) வட்டக் குடைகளைப் பிடித்துப்
பெருமைப்படுத்துவதும் சொல்லப் பட்டிருக்கின்றது.
வெள்ளைக்குடையும் வெண் சாமரமும் அரச குலத்தவருக்கே
அமைந்ததாகும். கி.பி.17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசராக
உருவாக்கப்பட்ட சேதுபதிகள்கூடச் செங்காவிக் குடை
உடையவராகவே ஆவணங்களிலும் செப்புப் பட்டயங்களி லும்
குறிப்பிடப்படுகின்றனர். ஆகவே நம்மாழ்வார் பாண்டிய அரச
மரபினரேயன்றி வேறு மரபினர்அல்லர் என்பது திட்டவட்டமாகத்
தெளிவுறும்.
திவ்விய சூரி சரித்திரம் என்ற நூல், “நம்மாழ்வார் அரசர்
மைந்தர்” என்று குறிப்பிடுகிறது. வேறு சமூகத்தில் அரசர் தோன்றி
இருப்பின் அச்சமூகத்தையும் இணைத்துக் கூறுவது தமிழ்நூல்கள்
மரபு. ஆனால் திவ்விய சூரி சரித்திரம் அரசர் மைந்தர் என மிகவும்
விரிவாகவே சுட்டிக் காட்டுகிறது. நம்மாழ்வார் திருக்குறுங்குடி
நம்பியின்அருளாலே பிறந்தவர் என நாம் அறிவோம். அதே ஊரில்
பிறந்த சுந்தரம் அய்யங்கார் நிறுவன (சாரிடீஸ்) வெளியீடு நம்மாழ்
வார் “தாயும் தந்தையும் அரச மரபினர்” என்று சுட்டிக் காட்டு கிறது.
கலைக்களஞ்சியம் “ஆண்ட சிற்றரசு குலத்துக் காரியார் என்
பாருக்கு உடைய நங்கையார்புத்திரராய் நம்மாழ்வார் அவதரித்தார்”
என்கிறது.
கி.பி.910-இல் அமைந்த சானூர்கல்வெட்டு புதூருடையான்
நம்மாழ்வாரடிகள் என்ற கிராம ஆட்சித் தலைவனை நமக்கு அடை
யாளம் காட்டுகிறது. இதனால் நம்மாழ்வார் இக்காலதீதிற்கும்
முற்பட்டவர் எனக் கல்வெட்டால் அறிய முடிகிறது.
வேளாளர்குலச் சிதம்பர கவிராயரால் கி. பி.16-ஆம் நூற்றாண்டில்
எழுதப்பட்ட சீவலமாறன் கதை, சீவலமாறன் தென்பாண்டி
நாட்டில் குடியேற்றப் பட்ட அந்தணர் மனைகள்ஆயிரத்தெட்டும்,
அரசகுலத்தவருக்கு இரண்டாயிரம் குடியிருப்பு மனைகளும்
28
வணிககுலத்தவருக்கு எண்ணாயிரம் மனைகளும் சூத்திரராகிய
வெள்ளாளருக்குப் பதினாயிரம் குடியிருப்பு மனைகளும்
பஞ்சமராகிய பலபட்டைகளுக்கு இருபத்தேழாயிரம் குடியிருப்பு
மனைகளும் வழங்கினார் என்பதால் அரசகுலத்தவர் என்போர்
தனிமரபினர்ஆவர். ஆட்சிப் பொறுப்பில் அமைந்தவன் மட்டுமே
அரசன் என்று அழைக்கப்பட்டான் என்ற சிலரின் கருத்தைச்
சவலமாறன் கதை எதிர்கொள்கிறது. ஐவர் ராசாக்கள் கதை
பாண்டியன் வள்ளியூர்ப் பகுதியில் பலருக்கு உதவிகள்
வழங்கினான்; “தாடாள்வான் தம்பிமார்களுக்கும் வழங்கினான்”
என்கிறது.
இருவாவடுதுறை ஆ$ீனத்துச் செப்பேடு சிவகாசியில் உள்ள
ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களை நாடாதி நாடாக்கள் என்றும் பிற
பிரிவினரைப் பலபட்டடைகள் என்று கூறுவதும் அறியற்பால
தாம். இச்செப்புப் பட்டயத்தில் இராமநாதபுரம் சீமையின் ஒரு பகு
இயில் வாழ்ந்த நாடார்கள் சேதுபதிகளையோ, அல்லது நாயக்கர்
களையோகுறிப்பிடாமல் "சேர சோழ பாண்டிய பூமியில்” என்று
கூறுவதால் இச்சமூக மக்கள் மூவேந்தர் தொடர்புடையோர் எனத்
துணியலாம். இது போன்று திருநெல்வேலிதூத்துக்குடி மாவட்டத்
தின் பல பகுதி ஊர்களையெல்லாம் சீவலமரன் கதை கூறுகிறது.
மேலப்பாட்டம், திருத்து போன்ற ஊர்கள் உழவராகிய வேளாளர்
வாழும் இராமங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால்
மணப்படை வீடு என்ற ஊரினை “வழுதியர் குலங்கள் வாழும்
வீடு தன்னில்” எனக் கூறி, பாண்டியர் குலத்தவரை நமக்கு
அடையாளம் காட்டுகிறது அந்த நூல்.
தாடாள்வான் குலமும் நம்மாழ்வாரும்
தாடாள்வான் ஆகிய திருவிக்கிரமனை அதாவது
விஷ்ணுவைத் தலைவனாகக் கொண்டதே வைணவ மதம்.
ஆதிசேடனின் மறு அவதாரமாகவே நம்மாழ்வாரை வைணவ
அடியார்கள் கொண்டுள்ளனர். நம்மாழ்வார் பாண்டியர் மரபினர்
என்பதில் யாருக்கும் வேறுபாடு தோன்றியதாகக் கருத
முடியவில்லை. ஆனால் நம்மாழ்வார் அரசகுலத்தவரா அன்றி
வேளாளரா என்ற கருத்து வேறுபாடு பலரிடையே நிலவி
வருகிறது. பிரபந்தத் திரட்டு எனும் நால் விஷ்ணுவின்
வழிவந்தவர்கள் அரசகுலத்தவர்கள் என்கிறது. எனவே
தாடாள்வான்குலம் அரசகுலத்தவரே. பல செப்புப்
பட்டயங்களும் ஓலைச்சுவடிகளும் ஆவணங்களும்
அரசகுலத்தவரைத் தாடாள்வான் குலத்தினர் எனச் சுட்டுகின்றன.
30
புரம் தாலுகா குளஞ்சாவடி இராமம் தெற்குப் பிரகார
சிவராம
அக்ரகாரம்ராமஸ்வாமி சாஸ்திரியர் பெளத்திரர்
சாமி சாஸ்திரியாரை குலகுருவாக நெகமுகம் செய்து
என்று சிருங்கேரி மடத்து ஜெகத்குருவால் வழங்கப்பட்ட செப்புப்
மடம்
பட்டயம் கூறுகிறது. அரசருக்கு முடிசூடும் உரிமையுள்ள
சிருங்கேரி என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
௮ூலத்திரட்டு அம்மானையும் வைணவமும்
சோழர்கள்தம் செப்பேடுகளில் திருமாலைத் தம் முதல்வனா
கவே கூறுகின்றனர். தாடாள்வானே அரச சமூகத்
தொடர்புடையவன் என்று சுட்டிக்காட்டப்படுதலை
அறிகின்றோம். இதுபோன்று கி.பி.19-ஆம் நூற்றாண்டின்
துவக்கத்தில் வாழ்ந்த முடிசூடும் பெருமாள் என்ற முத்துக்குட்டி
சுவாமிகள் சான்றோர் சமூகத்தைத் தாடாள்வானுடன்
தொடர்புபடுத்தித் தம் அகிலத்திரட்டு நூலில்
சுட்டிக்காட்டியுள்ளார். இ.பி.19-ஆம் நூற்றாண்டில்
வைணவத்தைத் தென்பகுதிகளில் வளர்த்த பெருமை இவருக்கு
உண்டு.
இனத்தான் கோயில் என்ற நாராயணசாமி கோயில்கள்
இனத்தான் கோயில் என்ற பெயர் கொண்ட வைணவ வழி
பாட்டுக் கோயில்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகமான
ஊர்களில் அமைந்துள்ளன. குறிப்பாகத் தண்டுபத்து, சீர்காழி,
கொட்டங்காடு, கச்சினாவிளை போன்ற சான்றோர்சமூகம் உள்ள
ஊர்களில் இவை இருப்பதை அறியலாம். வைணவக்
கோயில்களில் இன்றும் நாடாரே வணக்கம் கொள்ளும் நிலையை
இம்மாவட்டத்தில் பார்க்கிறோம். குறும்பூர் ஆதிநாராயணப்
பெருமாள் கோயில் நாலுமாவடி நாடாக்களின் வரலாற்று உரிமை
படைத்த கோயிலாகும். இதுபோன்று ஆழ்வார் தோப்பில்
விஷ்ணுகோயில் திருவிழாவை இன்றும் நாடார்களே நடத்தி
வருகின்றனர். மூதறிஞர் அருணாசலக் கவுண்டர்தாம் உரை செய்த
முத்திவழி ௮ம்மானையில் ஆழ்வார் தோப்பு என்ற அழகான
நன்னிலத்தில் வாழ் தமிழ் நாடனது வம்சத் திலே உதித்தோன் என்ற
பாடல் அடிக்கு நம்மாழ்வார் குலத்திலே பிறந்தவர் என்று
ஆழ்வார்தோப்பு நாடார் குலத்தவனான நூலாசிரியனைச்
சட்டிக்காட்டுகின்றார். இவனைப் பாண்டியன் வழிநாடான் எனக்
கருதி இருக்கலாம். ஆகவே இனத்தான் கோயில்கள் என்பன
வைணவ வணக்கம் கொள்ளும் மரபுவழிக் கோயில்களாகும்.
31
இனத்தான் கோயில் என்று நாராயணரை வழிபடும் சமூ
கமாகிய சான்றோரைக் கூறுவது எண்ணிடத் தக்கது. இனத்தான்
கோயிலைக் கிராம மக்கள் நாராயணசாமி கோயில் என்று அழைப்
பார்கள். இனத்தான் கோயிலோடு தொடர்புடைய மற்றொரு
கோயில் இராசாக்கள் கோயிலாகும். ஏறத்தாழ 40 க்கு மேற்பட்ட
ஊர்களில் இனத்தான் கோயில் அல்லது பள்ளிப்படைகளில்,
ஐவர்ராசா வணக்கம் அல்லது பாண்டியர் வணக்கம் உள்ளது.
தாதன் கூட்டத்து வைணவச் சான்றோர்
தூத்துக்குடி மாவட்டம் பேரிலோவன்பட்டி,
கோவில்பட்டி, சேமப்புதூர் வாழும் தாதன் கூட்டத்து நாடார்கள்
வைணவர்களின் சிறப்புடையவர்கள். இது போன்று விருதுநகர்
மாவட்டம் சிவகாசி, விளாம்பட்டி, தேனியிலும் வாளும்
நாடார்களில் சிறந்த வைண வர்கள் உண்டு. இன்று வரை திருமால்
வணக்கத்தைத் தொடர்ந்து நடத்துவதும் புரட்டாசி மாதம் விரத
நோன்பும் புலால் மறுத்து உண்டு வாழும் சீரிய பழக்க
வழக்கங்களையும் இவர்கள் கொள்வர். சான்றோர் குலமக்களைப்
போன்று வேளாளர் யாரும் இத்தகைய வைணவராக
இம்மாவட்டத்தில் உறுதியாக அமைந்திடவில்லை.
நம்மாழ்வார் என்ற பெயரை நாடார்கள் வைத்துக் கொள்ளும்
வழக்கு இம்மக்களிடையே காணப்படுகிறது. ஆனால் வெள்ளாளர்
தம்மைச் சைவ பிள்ளைமார் என்று உரிமை பாராட்டிக்
கொள்வதிலும் வெள்ளாளர்களில் தம்மை உயர்ந்தோர் என்று
பெருமை கொள்வதிலும் இன்றும் சைவத் தொடர்பை வலுவாக்கி
வாழ்வதையும் இம்மாவட்டத்தில் காண முடிகிறது.
பூதாரில் வந்துதித்த புண்ணியனோ
பூங்கமழும் தாதார்மகன்தான் இவனோ
தூதுவந்த நெடுமாலோ இம்மூவரில்
மணவாள மாமுனிகளில் இவர் யார்?
என்பதில் தாதர் குறிப்பிடப்படுகின்றனர்.
நம்மாழ்வாரும் நாமும்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி
கோயிலின் அருகே அமைந்த திருவழுதிநாடான் விளை என்ற ஊர்
சான்றோர்கிராமமாகும். இவ்வூரில் பிறந்த இராசகோபால் நாடார்
நம்மாழ்வாரும் நாமும் என்ற நூல் எழுதியுள்ளார். இந்நூலில்
நம்மாழ்வார் என்ற ஆழ்வாரின் மரபினர் நாடார்களாகிய
தாமேயென இயற்கைச் சான்றுகளை எடுத்து விளக்கியுள்ளார்.
இவ்வூரில் நம்மாழ்வார் பெயரால் இவரது குடும்பத்தினர்
பாடசாலை நடத்துகின்றனர்.
32
மகர நெடுங்குழைக்காதர் வழிபாடு
நெடுங்
தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை மகர
நாடார்களுக்கு
குழைக்காதர் கோயில் திருவிழாவில் திருமலாபுரம்
முதல் மரியாதை இன்றும் செய்யப்படுகிறது. தென்திருப்பேரை,
அய்யங்
ஆழ்வார்திருநகரி போன்ற ஊர்களில் வாழும் தென்கலை
கார்கள் தம்மை அரச மரபினர்களிலிருந்து அந்தணராக மாறியோர்
எண்ணத்
என்றும் நாடார்களாக இருந்தவர் என்றும் கூறுவது
தகுந்தது. குழைக்காதர் என்று அழைத்துக் கொள்ளும் தென்கலை
அய்யங்காரையும் நாடார்களையும் இன்றும் பெயர் வழக்கில்
காணலாம்.
இதுவரைகூறப்பெற்ற கருத்துகளிலிருந்து, நம்்மாழ்வார்௮ரச
குலத்தவர் என்றும் பாண்டிய அரச மரபினர்என்றும் பிற அறிஞர்கள்
ஒத்துக்கொள்வதும் தூத்துக்குடி மாவட்ட நாடார்களுக்கு அரச
அந்தஸ்து இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும், அம்
மாவட்டத்தில் நாடார்களே வைணவ வழிப்பாட்டுடன்,
நம்மாழ்வாரின் நாமமும் பெற்று வருபவர்களாயிருப்பதற்கான
சான்றுகளும், சைவத்தைக் கடைப்பிடிக்கும் வெள்ளாளர்
தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வாறும் நம்மாழ்வாரோடு
தொடர்புபடார் என்றும் அறிந்து கொள்ளலாம்.
“குருகை நாட்டவர்கோவே"
ப்ரடல்-37- மேற்படி
தேனிவர்பைந்தார்வழுதி கழவன்மர
பினுக்கிவனோர்திலக மாமே”
- திருமுடிய/டைவச்சருச்சமம் (பார. 2777]
“திலகமாவது- யாவர்க்கும் மேலாம் தன்மை” - பரிமேலழகர்,
“சுருதிப் பனுவற் றொகையுணர்ந்த
தூயோன் மணஞ்செய் திருமனைக்கு”
- திரு. மணச்சருக்கம் 72(பார. 2975]
“வழுதியாற் புனிதர்திரு வழுதிவள நாடெனப்பேர்
மதிப்பதாமே
-2. தாடி வாழ்தீதுச்சருக்கம் , மேற்படி
37
“ஒருவழுதி யெனமுதலே யிந்துகுலத்
துதித்தவனென்றுலகம் போற்றப்
பெருவழுதி மரனிற்கூன் செழியனருந்
தவம்பெருக்கிப் பெற்ற கொற்றந்
தருவழுதி யொருவன்வழிப் பொருப்பின்மணி
விளக்கெனவேதகைசாலிந்தத்
திருவழுதி கிழவனருட் புதல்முத
லவர்தாமஞ் செப்ப லுற்றேன்”
- திருமுடியடைவுச்சருக்கம். 6.பார. 2762
தொடர்ந்து நம்மாழ்வாரின் குலத்தார் பட்டியல்
சொல்லப்படுகிறது.
“அறந்தாங்கியார், போர்க்கழியார்”
“மையார்கருங்கட் செங்களிவாய்
மடந்தை மரபிற் சிறந்தாருந்
துய்யானுயர்வண் புகழ்காரி
தொன்..... மரபிற் சிறந்தாரும்”
-பெண் பேசு சருக்கம், 470
“நுண்ணிய மறைகளுண்மை நுழைபுல வியர்தாஞ் சொன்ன
புண்ணிய புராணங் கற்ற புலமையிற் கணித நூல்கற்
றெண்ணிய சடங்கர்தாமு மிளங்கதிர்பொருவுஞ்
செம்பொன்
வண்ணவொண்்௫விகைமீதே மறைவர்குழாத்திற்
சென்றார்”
- 61 Up FF FGEBLD, 2IK3
“குருகை மன்னன்”
பா. 27
47
“வழுதி நன்நாடன்
திருவாய் மொழி”
47/7: 2
“மலையார முங்கடலாரமும் பன்மாமணி குயி
விலையாரமும் விரவுத் இருநாடன்”
- ச கோபரற்தாதி. பா. 22
“ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியான நம்மாழ்வார்
அருளிச் செய்த திருவாய்மொழி பாசுரங்கள் ஆயிரம்
- ச கோபரந்தாடிர7
அ.வே.வை.மு. கோபால கிருஷ்ண .மாச்சாரியார்
“வழுதி நாடன் வேறு செய்த மறைகள் ஆயிரத்தையும்
தொழுது பாடும் முனிவர் வாய்மை துளவவாசம்
நாறுமே”
- தன்லாப்பின்ளை.பாரதம்.229
“மூரசுகளுமடிக்க முடிமன்ன ரடிபோற்ற
அரசாளா மல்மகனே அய்யனே நீ யிங்குஇத்தாய் *
- புறாங்குசநடஃஅம், 77
இட்ட பாக்கியங்கள் பெற்றேன். இவ்வுலகை ஆண்டு
கொண்டிருந்தேன்.
பட்டங்கட்ட யாரை வைப்பேன் பாலனே நான் என்ன
செய்வேன்.
- மேற்படி 02
“மனுதீதி கீர்த்தி வளர் மன்னர் மன்னன்”
-மேற். புடி, 29
“மாசில்லா முடிதரித்த மன்னவன் காரிராசன்”
- பறரங்குசநாடக£ம்20
சிவலமாறன் கதை
“மணிமாடத் திருக்குருகூர் மகிழ் மாறன் பிறந்தலம்
அணையா, முன்னவன்தாதை காரியார் அடிவணங்கி ”
- நதர்புகுபடலம், 28
“தென்னவர் பிரான் மகிழ்மாறன் பதம் பணிந்து"
- மேற்படி, 7.818
பருப்பத்துக் கயல் பொறித்த பாண்டிய குலபதி யென்று
பெரியாழ்வார் புகழ்கிறார். இ.பி 78இல் முடிசூடிய பாண்டியன்
நெடுஞ் சடையன் பராந்தகனாகிய முதலாம் வரகுணன் குருசரிதை
கொண்டாடியவன் அறியப்பட்டுள்ளது.
-சேதுறாமன், பாண்டியர், பம்கம்.2
“பொருணைகுூழ் குருகை மூதார்ப்
புரவலன் காரி என்பான்
அருமக வின்றி வாடி
யத்தலத் தடைந்து போற்றத்
திருமகள் கொழுந னல்கச்
செந்தமிழ்ச்சுருதி பாடும்
குருமணித் தப மன்ன
குழவியைப் பெற்றானன்றே”
- சீவல.மாறன்
கதை 183
சிதம். ரகாச கவிமயிலேறும்
பெருமான் மரபில் வத்த வேளை.
“குலவுமந்த நகரை யாதி வழுதி நாடன்
நம்மாழ்வார் வைபவம் நம்மாழ்வார்
- திவ்யசரித்திறம்
“நலமுறந்த நரபதிக்கு மைந்தன்சக் ர பாணியே”
- மேற்படி, பா. 2
49
“அரையன் மகற்கு மணஞ் செய்”
- மேற்படி, பா, 18
திருவாய் மொழி:
“எங்கள் குல நாயகன்
சேசவன்தமர்”
சடகோபன் சரித்திரம்
“பொதியமலை காவலான்”
“பொருணை நஇயுடைய வீரன்"
"வழுதி நாடன்”
- Groping. பாடல் (பதிகம்
“மானிலத்திலுயர்சடகோபனாய் வந்தவதரித்தோர்
கணத்தண்ணல்”
பாடல்.78
உற்றமன்னவன் வண்பிரிசாரம் திருவாழ் மார்பருக்குப்
போர்க்கழியார்என்ற திருகுருகூர் மன்னர்தூது அனுப்பித் தன் மகன்
காரி யென்பானுக்கு உடைய நங்கையை மணம் பேசினான்.
“மன்னனின்கன்னி”
- மேற்பழு, L17.80
நம்மாழ்வார் அரச குலச் சான்றோரே
திருவாய்மொழி நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட்டது
என்பதை அறிந்திருந்த நாதமூனிகளுக்குத்
தென்பாண்டிநாட்டிலிருந்து வந்த இரு ஸ்ரீவைஷ்ணவர்கள்
திருவாய்மொழி ஆயிரத்துள் சில பாடல்களைப் பாடிக்காட்டினர்.
அவற்றைக் கேட்ட பின்னர், வேதமும் இலக்கிய நயமும் கலந்த
பக்திச்சுவை மிகுந்த திருவாய்மொழிப் பாடல்கள் அனைத்தையும்
அறிய வேண்டும் என்ற பேராவல் கொண்டு தென்பாண்டி நாட்டுத்
திருக்குருகூர்க்கு நாதமுனிகள் சென்றார். அங்கே நம்மாழ்வார்
பெருமானின் திருநாமத்தைப் பெற்ற பராங்குசதாசர் என்ற
ஸ்ரீவைஷ்ணவரிடமிருந்து நம்மாழ்வாரைப் போற்றிப்
புகழ்ந்துரைத்த மதுரகவியாழ்வாரின் கண்ணி நுண் ிறுத்தாம்பு
பாடம் செய்து நாதமுனிகள் ம௫ழ்ந்து வந்தார். அதன் பின்னர்த்
திருவிக்கிரமன் அருளால் திருவாய்மொழிப் பாசுரங்களும்
பாடல்களும் இடைத்தன என்று நூல்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ரீவைஷ்ணவரான நாதமுனிகள் திருவாய்மொழிப்
பாசுரங்களில் வேதம் கலந்த இசைத்தமிழ் இருப்பதை அறிந்து
உணர்நீது, வைணவக் கோயில்களில் அதாவது திரு
விண்ணகரங்களில் இன்னிசையோடு திருவாழ்மொழிப்
பாக்களைப் பாடும் நிலையை உருவாக்கினாராம். வேதம் அறிந்த
மரபிலே வந்த நாதமுனிகள் தமிழ் வேதமாகிய
திருவாய்மொழியின் உண்மையை உணர்ந்து எடுத்தோதியதின்
பொருட்டே திருவிண்ணகரங்களில் அப்பாசுரங்கள் இசையுடன்
மட்டும் பாடப்படாமல் வேதமாகவே ஸ்ரீவைஷ்ணவர்களால்
இன்றும் ஓதப்படுகின்றன.
திருக்குருகூரில் பராங்குசதாசர் என்ற ஸ்ரீவைஷ்ணவப்
பெரியாரைச்சந்தித்த பின்னரே திருவாய்மொழியின் பெருமையை
நாதமுனிகள் அறிந்தார் என்று கண்டோம். நம்மாழ்வாரின்
திருநாமங்களில் ஒன்று பராங்குசன் என்பதாம். வேதம் ஓதியருளிய
51
பராங்குசனின் திருநாமத்தை அந்தணரான பராங்குசதாசர் என்பார்
பெற்றிருந்தார் என்பதால் திருவாய்மொழியின் பாட்டும்
பாசுரங்கஞம் தென் திசையில் பாடப்பட்டும் ஒதப்பட்டும்
வந்திருக்க வேண்டும். மதுரகவியார் நம்மாழ்வார் அருளிய
திருப்பாட்டுகளை எழுதிய திருமந்திர ஒலை நாயகமாவார்.
வேந்தர்களிடம் இருமந்திர ஓலை நாயகமாகப் பணிபுரிந்த
பிரம்மாதிராயர்கள் பற்றிக் கல்வெட்டுகளால் தெரிய வருகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் பதினொரு ஆழ்வார்களும்
இறைவனைப் பாடி ஆழ்வார்கள் அங்கீகாரம் பெற்றிருந்தனர்.
ஆனால் மறைக்குல மதுரகவிராயர் மட்டும் திருவாய்மொழிப்
பாசுரங்களையும் பாடல்களையும் ஓதி ஓதி, நம்மாழ்வரை
இறைவனாக எண்ணிப் பாடினார். இதனாலேயே வேதம்
அறிந்திருந்த மதுரகவிராயரை வைணவர்கள் ஆழ்வாராக
அழைத்துப் பெருமைப்படுத்தினர். ஆழ்வார்கள் பன்னிருவராவர்.
தமிழ் வேதம் தந்த வேந்தனை உணர்ந்து, ஸ்ரீவைஷ்ணவர்கள் அதன்
சுருதியின் மகிமையை உணர்ந்து தமிழ் வேதத்தைப் போற்றிப்
புகழ்ந்தனர். அனைத்துக் கோயில்களிலும் நம்மாழ்வார் அருளிய
பாசுரங்கள் பாடப்பட்டு வந்துள்ளன என்பதை மறந்துவிடக்
கூடாது.
சி.பி. 11 ஆம் நூற்றாண்டினரான நாதமுனியாரின் வைணவச்
சேவைகளுக்கு முற்பட்டே சோழவேநீதர் இராசராசன் காலத்திய
கோயில்களில் திருவாய்மொழி ஓதப்பட்டுள்ளது
எண்ணுதற்குரியது. நாதமுனிகள ின் காலத்தில ேயே நம்மாழ்வார்
சுவாமிகள் ஆழ்வார்களில் முதலிடம் பெற்றவராகத்
திகழ்ந்துள்ளார். நாதமுனிகளும் ஸ்ரீவைஷ்ணவரிடத்திலே
நம்மாழ்வாரின் சிறப்பியல்புகளை எடுத்தோதி அவரை
முதன்மைப் படுத்தினார் . இதனாலே யே நம்பெருமா ன்.
பெருமானின் திருவவதாரம ் என்று வைணவ நூல்கள் பெருமை
உரைத்துப் புகழாரம் சூட்டுகின்றன. நம்மாழ்வார் பிறந்த காலத்தில்
வேதம் ஓதும் நிலை அந்தணர் அரசர் வணிகர்களுக்கு மட்டுமே
இருந்தது. வேதம், வேள்வி இவைகளின் பலன் அரசர்க்கே
என்பதற்கு இலக்கியங்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
வேதம் ஓதும் அந்தணரின் பாசுரங்களை அரசர்களும் தங்கள்
52
பட்டத்தரசிகளுடனும் அரசகுலத்தவரும் கேட்டு மகிழ்ந்தார்கள்
என்று கல்வெட்டுகளில் பாடங்கள் உள்ளன.
இ.பி. 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டிலேயே
திருவாய்மொழிப் பாசுரங்கள் கோயிலில் ஓத அரசர்கள்
ஏற்பாடுகளைச் செய்திருந் தனர் என்று கல்வெட்டு களில்
செய்திகள் காணப்பெறுகின்றன. இதனை நாம் வேறு பகுதியில்
ஆராயலாம். நம்மாழ்வார்௮ருளிய திருவாய்மொழி அல்லாத பிற
ஆழ்வார்கள் பாசுரங்கள் வேதமாகப் பெருமாள் சன்னதிகளில்
ஓதப்பட்டாலும் மிக உயர்ந்த இடம் நம்மாழ்வாரின்
திருவாய்மொழிக்கே வழங்கப்பட்டிருந்தது தெரியவருகிறது.
இத்தகைய நிலை நாதமுனிகளால் வளர்ச்சி பெற்றிருத்தல்
வேண்டும். எல்லா ஆழ்வார்களின் பாடல்களைப் படித்துணர்ந்த
நாதமுனிகள் நம்மாழ்வாரின் பாடல்களைத் த.மிழ்வேதக்கடல்
என்று புகழ்ந்துரைத்து ஓதி ஓதி மகிழ்ந்தார். நான்மறைகளை ஓதும்
ஸ்ரீவைஷ்ணவர்கள் தமிழ் வேதத்தை அதாவது
திருவாய்மொழியை இறைவன் மொழியாகவே கருஇனர்.
இயல்பாகவே நம்மாழ்வார் திருக்குருகூர் இறைவன்
திருக்குலத்தாராவார் என்பது இலக்கியங்கள் சொல்லும்
திருப்பாடமாகும்.
இ.பி. 18ஆம் நூற்றாண்டினரான கவிச்சக்கரவர்த்தி கம்பரால்
எழுதப்பெற்ற சடகோபரந்தாதி மிகத் தெளிவாக நம்மாழ்வாரின்
தூய்மையான குலம், அரச வாழ்வு, திருவாய்மொழியின்
பெருமை இவற்றைப் பேசுகிறது. அரசனை நேரில் சென்று
புகழ்ந்து பாடிப் பரிசிலைப் பெறும் புலவர்களைப் போன்று
வாழாமல் இருந்த கவியரசர் தமக்குச் சல நூற்றாண்டுகளுக்கு
முற்பட்டு வாழ்ந்த நம்மாழ்வாரை உணர்ந்து இருவாய்மொழியின்
பெருமைகளை எடுத்தெழுதியுள்ளார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் உபநிடதங்கள் ஆயிரம்
கிளைகளுடன் இருப்பதாக அறிந்துள்ளனர். ஸ்ரீவைஷ்ணவர்கள்
மற்றும் நாதமுனிகளின் அயராத சேவைகளாலேயே வைணவம்
மேலும் பெருமை பெற்றது. ஸ்ரீஇராமானுஜர் என்ற வேதம்
உணர்ந்த பெருமகன் வேதத்திற்கும் தைக்கும் உரை அருளியவர்
என்று பெருமைப்படுத்தப்பட்டவர். வைணவ சமயக்
53
கோட்பாடுகளைப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையில்
இன்னல்களை ஏற்றுப் பரப்பி வந்தவர் ஆவார். திருவாய்மொழி
வேதத்தின் தன்மைகளை உணர்ந்து போற்றிப் புகழ்ந்துள்ளார்.
கீதையை அருளிய கண்ணனாகிய திருவிக்கிரமனைப்போன்று
திருவாய்மொழி அருளிய அண்ணல் நம்மாழ்வாரையும் அவர்
இறைவனாக்கினர். நம்மாழ்வாரின் திருநாமம்
திருநாடுடையபிரான் என்பதாம். திருநாடுடையபிரான் என்ற
பட்டம் அரச குலத்தவர்க்குரியதாகும். கல்வெட்டுகளில்
திருநாடுடைய பிரான் கோயில்கள் பற்றியகுறிப்புகள் உண்டு.
ஸ்ரீஇராமானுஜரின் காலத்தில் வாழ்ந்தவராகக் கருடவாகன
பண்டிதரைக் கருதுகிறார்கள். இவர் சமஸ்கிருத மொழியில்
எழுதிய நூல் திவ்ய சூரிசரிதம் ஆகும். இந்நாலிலும் நம்மாழ்வார்
பெருமைப் படுத்தப்பட்டுள்ளார். இ.பி. 12 , 139 ஆம்
நூற்றாண்டுகளில் வைணவத் திருத்தொண்டுள்ளத்தோடு
அரும்பணி ஆற்றிய ஸ்ரீராமானுஜர் காலத்திலேயே
இருக்குருகைப்பிரான் பிள்ளான் என்ற அந்தணர் திருவாய்
மொழிக்குப் பல பேருரைகளை வியாக்கியானங்களாக
இயற்றினார். இவர் நம்மாழ்வாரின் திருவிடமான திருக்குருகூர்
பெயரால் நம்மாழ்வாரின் தெய்வத்தன்மைகளை உணர்ந்தும், மரபு
வழி அறிந்தும் வியாக்கியானங்களாக இயற்றினார் என்று நாம்
கருதலாம். இவருக்குச் சம காலத்தவரான நம்பிள்ளை என்ற
ஸ்ரீவைஷ்ணவரால் “முப்பத்தாராயிரப்படி” என்ற ஈடு
இயற்றப்பட்டுள்ளது. இந்த ஈடு உரைக்குப் பகவத் விஷயம் என்று
பெயரிட்டு அழைத்துள்ளார்கள். திருவாய்மொழி என்பது
பகவானைப் பொருளாகக் கொண்டு வேதமாக
அருள்ப்பட்டதாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின்
திருக்குறள் “ஆதிபகவன்” என்று இறைவனை அடையாளமிடும்.
தென் திசையில் நிலை நின்றுவிட்ட பெண் தெய்வம் பகவதி
என்று அடையாளம் காட்டப்பெறுகிறார்.
இ.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவரான
மணவாள மாமுனிகளுக்குத் இருவாய்மொழியிலும்
வேதங்களிலும் இருந்த ஈடுபாடுகளால் இருவாய்மொழியின்
ஒவ்வொரு பத்துக்கும் பொருளுரையினை வெண்பாவாக நூறு
54
வெண்பாக்கள் கொண்ட திருவாய்மொழி திருநூற்றந்தாதியாக
இயற்றியுள்ளார். அவர் நம்மாழ்வாரின் வேத வாக்கியங்களைத்
தொகுத்து இருப்பதோடு அவர் யார் என்று அடையாளம் காட்டித்
தருகின்றார். இதுமட்டுமன்று, சாதிகளில் இருந்த உயர்வு தாழ்வு
பற்றிஅவர் தெளிவாகத் தம் நூல்களில் விளக்கியுள்ளார்.
இ.பி. 14ஆம் நூற்றாண்டினரான ஸ்ரீவைஷ்ணவர் பிள்ளை
லோகாசார்யாரின் வசன பூஷணனம் என்ற நூலில் சடகோபரை
வணங்கி வாழ்த்துகிறார். பிறப்பில் அந்தணரான பிள்ளை
லோகாசார்யார் இந்நூலில் சஉடகோபரான பராங்குச மூனியை
இறைவனாகக்கருதினார் என்று தோன்றுகிறது. விஜயநகர ஆட்சிக்
காலத்தில் வாழ்ந்த ரீவைஷ்ணவரான வேதாந்த தேூிகர்
திருவாய்மொழி தமிழ் வேதம் என்று கருத வடமொழியில்
இிரிமிடோப நிஷத் சாரம் மற்றும் திரமிடோப நிஷத் தாத்பர்ய
ரத்னாவளி என்ற இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவர்
எழுதிய பிரபந்த சாரம் என்ற நூலில் ஆழ்வார்களில் இரு
ஆழ்வார்களை அரசன் என்ற பொருளில் கோன் என்று
அழைக்கிறார். அவர்கள் நம்மாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும்
ஆவர்.
இக்கால அளவில் வடமொழியார் தமிழ் மொழியைத்
திரமிட மொழி என்று முடிவுகாட்டிய காலம் ஆகும். இரமிட
மொழி என்பது மொழி திரிந்த தேசத்தில் பேசப்பட்ட
கொடுந்தமிழ், கன்னடம், வடுகு, ஆந்திர மொழிகளாகும்.
தமிழர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் பலர்தங்களைத் தமிழன் என்றே
அடையாளப்படுத்துகின்றனர் பல்லவ தேசத்தில் சிறந்து வாழ்ந்த
பூதத்தாழ்வார் தம்மைப் பெருந்தமிழன் என்றார்.
மதுரகவியாழ்வார் ச௪டகோப ஆழ்வாரைத் “தமிழ்ச் சடகோபன்”
என்று அழைக்கிறார். தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழியாகும்.
இலக்கண, இலக்கியங்களையும் உலகில் எந்த மொழிக்கும்
இல்லாத சிறப்புகளையும் கொண்டு மிளிர்ந்த சொல் வளம்மிக்க
செந்தமிழ் மொழியும் திரமிட மொழியும் ஒன்றல்ல. ஒன்றோடு
ஒன்று தொடர்புடையது. இதுபற்றி விரிவாக வேறு இடத்தில் நாம்
அறியலாம். திராவிடம் என்ற சொல் தமிழர் மீது
புகுத்தப்பட்டதாகக் கருத இடமுண்டு.
55
பின்பழகிய பெருமாள் என்பவர் வடமொழியும்
தென்மொழியும் கலந்து குருபரம்பராப்ரபாவம் என்ட லை
எழுதினார். இதில் சடகோபரின் திருவாய்மொழிப் பெருமைகள்
பேசப்படுகின்றன. நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்றினை
எடுத்தோதும் நூல்களில் பிரம்மதந்திர ஸ்வந்தர
அனந்தாசார்யாவின் பிரபந்த நாம்மிருதம் புகந்தாடையப்பனின்
பெரிய திருவடி அடைவு போன்ற பல நூல்கள் உள்ளன. ஸரீ
அழகிய பெருமாள் என்ற ஸ்ரீவைஷ்ணவரின் ஆசார்ய இருதயம்
திருவாய்மொழி பற்றி உயர்ந்த மதிப்புரைகளைத் தருகிறது.
இதற்குப் பொருளுரைத்தவர் தேவையில்லாமல் குழப்பமான,
தவறான உரைகளைப் பொருள் தெரியாமல் வழங்கியுள்ளனர்.