You are on page 1of 11

உங்கள் பத்திரங்கள் பத்திரமா? சொத்துக்கள் பத்திரமா?

பத்திரங்களை பாதுகாப்பது எப்படி?

- கே. அழகுராமன், வழக்கறிஞர்

ஒருவரின் அந்தஸ்து… அது அளவிடப்படும் அளவுகோல்தான் அவர் பெயரில்


வாங்கப்படும் சொத்துக்கள். நீங்கள் வாங்கிய சொத்துக்கள் பத்திரமாக உங்கள்
வசம் வந்து சேருவது இவ்வாறான பத்திரங்கள் மூலமாகத்தான்.... உங்கள்
பத்திரங்கள் பத்திரமா? சொத்துக்கள் பத்திரமா? என்ன செய்ய வேண்டும் ?

சொத்துக்களை பத்திரப்படுத்தும் பத்திரங்களை பத்திரமாக வைக்க


வேண்டியதால்தான் “பத்திரங்கள்” எனப் பெயர் வந்தது. அக்காலத்திலேயே
சுவடிகள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமாக செய்யப்பட்ட அனைத்தும்கூட
ஒருவகையான பதிவுகளே. அதனையே இன்றைய காலத்திற்கேற்ப, முன்பு
கையால் எழுதப்பட்டும் தற்போது கம்ப்யூட்டர் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டு
பாதுகாப்பதே நமது பத்திரப்பதிவும் அது சார்ந்த நடைமுறையும்.
பதிவு:-

பத்திரங்கள் மூலமாக ஒருவரது விருப்பம், எண்ணம் போன்றவை செயலாக்கம்


பெறப்பட்டு உயிரூட்டும் விதமாக சட்டப்பூர்வமாக செல்லத்தக்க விதத்தில்,
ஆவணங்களாக ஏற்படுத்தப்பட்டு மோசடிகளை தவிர்க்கும் விதமாக ஒரு
நபருக்கு ஒரு சொத்து எந்த பிரச்னையுமின்றி , பிறர் உரிமை கோராதவாறு
அந்நபரை சென்றடைவதற்கு வழி வகை செய்து தருவதே "பதிவு" எனப்படும்.
உங்கள் சொத்துக்காக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் பத்திரமாக உள்ளதா?
என்ன செய்ய வேண்டும்? எவையெல்லாம் பத்திரப்படுத்த வேண்டிய
ஆவணங்கள்? எப்படி பத்திரப்படுத்த வேண்டும்?

ஒரு சொத்தை, கிரயத்தொகையான பிரதிபலனை (Sale Consideration) கொடுத்து,


விற்பவர் உங்கள் பெயருக்கு எழுதிக்கொடுத்து, உங்கள் பெயருக்கான உரிமை
மாற்றம் (Title Transfer) செய்து கொடுத்து, அந்தப் பதிவு முடிந்த பின் சில
வாரங்களில் சம்மந்தப்பட்ட பதிவு அலுவலகம் சென்று பதிவு செய்யப்பட்ட
கிரயப் பத்திரத்தினை (Sale Deed) திரும்பப் பெறுதல் வேண்டும். அந்தக் கிரய
பத்திரத்துடன் நகல் சேர்த்து பதிவு செய்யபட்டிருப்பின், அதனையும் மறக்காமல்
திரும்பப்பெறுதல் வேண்டும். இப்போது உங்கள் சொத்துக்கான ஒரிஜினல்
பத்திரங்கள் உங்கள் வசம் வந்துவிடும்.

சரி பார்த்தல் :-

பதிவான பத்திரத்தின் அனைத்து பக்கங்களிலும் விற்ற நபரின் கையொப்பம்,


அவரது அடையாள அட்டை விபரங்கள், பதிவாளர் கையொப்பம், ஸ்கேன் செய்து
கொண்ட விபரங்கள், குறைவான முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி இருந்தால்
அது குறித்த விபரங்கள், புகைப்படங்கள் களப்பணி மேற்க்கொள்ளப்பட்டிருப்பின்
சொத்தின் மதிப்பு சரி என்ற சான்றிதழ், உங்கள் ஆவணங்களுக்கு வழங்கப்பட்ட
எண் , ஆவணத்தின் மொத்தப் பக்கங்கள் என அனைத்தையும் சரிபார்த்தல்
அவசியம்.

இந்த அசலுடன், சம்பந்தப்பட்ட இதர மூல ஆவணங்களின் ஒரிஜினல், அதன்


தாய்பத்திரங்களின் நகல்கள், வில்லங்கமில்லா சான்றிதழ்கள், பட்டா, சிட்டா,
போன்ற வருவாய் துறை ஆவணங்கள், வரி ரசீதுகள், லே அவுட் பிளான் மற்றும்
லீகல் ஒபீனியன் பெறப்பட்டிருந்தால் அதனையும் இணைத்துக் கொண்டால்
பின்னாளில், நாம் அந்த சொத்தினை அபிவிருத்தி செய்யும் போதோ, விற்பனை
செய்யும் போதோ, குழம்பி நிற்க வேண்டிய அவசியமில்லை.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கோப்புதான் நமது சொத்திற்கான


பத்திரப்படுத்த வேண்டிய பத்திரங்கள்.

எப்படி ?

பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக "லேமினேஷன்" செய்தல் கூடாது.


ஆவணங்களின் நம்பகத் தன்மை பின் வரும் நாட்களில் கேள்விக் குறியாகிவிடும்.

ஆவணங்களை தனித் தனியே பிரித்து, தைத்து வைத்தல் நல்லது. ரப்பர் பேண்ட்,


கிளிப்புகள் போன்றவைகளை பத்திரங்களை பத்திரப்படுத்தும் போது தவிர்த்தல்
நல்லது.

அடுத்து, ஆவணங்களை பாலித்தீன் கவரில் போட்டு, அதற்குள் அந்துருண்டை


போன்ற ரசாயன பொருட்களை போட்டு வைப்பதன் மூலம் ஆவணங்கள்
பாழ்படும் அபாயம் அதிகம்.

பத்திரங்களை சாதாரண ஃபைல்களில் வைத்து பத்திரப்படுத்துவதே நல்லது.


முடிந்தால் அனைத்து ஆவணங்களையும் தேதிப்படி வரிசைப்படுத்தி
பென்சிலால் பக்க எண்கள் கொடுத்து வைக்கலாம்.
பயணங்களின் போது, ஒரிஜினல் மற்றும் இதர பத்திரங்களை பத்திரமாக
கையாள்கிறோம் என சுமந்து செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

அடிக்கடி பத்திரங்களை எடுத்து, நல்ல சூரிய வெளிச்சத்தில் ஒவ்வொரு தாளாக,


தனித்து, பிரித்து, சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவ்வாறே பத்திரப்படுத்தி
வைத்தாலே போதுமானது.வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள
ஆவணங்களை, ஆண்டுக்கு இரண்டு முறையாவது இவ்வாறு, எடுத்து, வெளி
உலகை காட்டிய பின்பு மீண்டும் பெட்டகப்படுத்தலாம்.
2. பதிவிற்குப் பின் பத்திரம்.

ஐயா... இங்க இருந்த என் கெணத்த ஆட்டைய போட்டுட்டாய்ங்க ஐயா....


காமெடிக்காக எழுதப் பட்டு, படமாக்கப்பட்ட ஒரு காட்சி. தற்போது நிஜத்திலும்
அரங்கேற்றப்படுவது வேதனை. காரணம் - பதிவிற்குப்பின் பாதுகாத்தல் என்ற
ஒரு விஷயத்தையே நாம் கவனிக்கத் தவறுவது தான்.

பல லட்சங்கள் கிரய தொகையாகவும், சில லட்சங்கள் பத்திர


வகையறாக்களுக்குமாக செலவு செய்து கிரயம் பெற்ற சொத்தை, அதன் பின்பு
என்ன செய்ய வேண்டும்? எப்படி பாதுகாத்து பராமரித்தல் வேண்டும்?
முதலில், பத்திரப் பதிவு முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட பதிவகம் சென்று பதிவு
செய்யப்பட்ட பத்திரத்தினை திரும்ப பெறுதல் வேண்டும்.

சில நாட்களுக்குப் பின் அதே பதிவகத்தில், உங்கள் பத்திரத்தின் பதிவு எண்ணை


குறிப்பிட்டு, ஒரு சான்றிட்ட நகல் (Certified Copy of Sale Deed) வேண்டி மனு கொடுத்து,
அதனை, அந்த அலுவலகத்திலிருந்து, 20 ரூபாய் பத்திரத்தில் சான்றிட்ட நகலாக
தருவதை பெற்று, ஏற்கெனவே பதிவு செய்து திரும்பப் பெற்றிருந்த ஒரிஜினல்
ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்தல் நல்லது.

தற்போது, உங்கள் சொத்திற்கான பத்திரங்களைப் பொறுத்த மட்டில் உங்களது


கிரயப் பத்திரம் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகி விட்டது.இப்போது, கிரயப் பத்திரத்தின்
ஜெராக்ஸ் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து,
உங்கள் சொத்திற்கான வரி விதிப்பினை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

காலி இடம் என்றாலும் சரி, கட்டப்பட்ட வீடு என்றாலும் சரி, அதன்


அளவிற்கேற்பவும், சொத்து அமைந்துள்ள கிராமம், அமைவிடம்,
போன்றவைகளுக்கேற்பவும் சொத்து வரி விதிப்பு செய்யப்படும். நீங்கள் வாங்கிய
சொத்திற்கான வரி விதிப்பு உங்கள் பெயருக்கு ஏற்படுத்துவதும் உங்கள்
உரிமையை நிலை நாட்டக்கூடிய ஒரு கூடுதல் ஆவணமே.

எனவே, நம் சொத்து தானே.. பதிவு செய்யப்பட்ட கிரயப்பத்திரம் தான் நம் வசம்
உள்ளதென பல காலம் பார்க்காமல் இருக்கும்பட்சத்தில், "கிணத்தை காணோம்"
கதையாகிவிடும் வாய்ப்புகள் அதிகம்.
பட்டா :-
கிரயப் பத்திரம், சொத்து வரி என உங்கள் பெயரிலுள்ள உரிமையை நன்கு
பரிசீலித்து வருவாய் துறையின் பதிவேடுகளில் ஏற்றி, உங்கள் பெயருக்கு
பட்டயமாக வழங்கப்படுவது தான் "பட்டா" எனப்படுவது.

சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அவர்களால் வழங்கப்பட்ட பட்டாவின்


அடிப்படையில் சிட்டா, அடங்கல், போன்ற அந்தந்த கிராம கணக்கினங்களில்
உங்கள் பெயரும், சொத்து விபரமும், பதிவேற்றம் செய்யப்படும்.
இப்போது வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரு முறை என உங்கள்
சொத்திற்கான வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) தாக்கல் செய்து தேவை
இல்லாத வில்லங்கம் எவையும் உள்ளனவா? அல்லது
உருவாக்கப்பட்டுள்ளனவா? என பார்த்து வருதல் அவசியம்.

இப்போது உங்கள் சொத்திற்கான பத்திரங்களும், பதிவக வேலைகள், ரெவின்யூ


இலாகா வேலைகள் என அனைத்தும் முடிந்த ஒரு நிம்மதியான நிலை.

சந்தேகமில்லை. உங்கள் பத்திரங்கள் இப்போது பத்திரம். சொத்துகள் பத்திரமா ?

…பார்ப்போம்... பத்திரப்படுத்துவோம்.

3. சொத்து - பத்திரம்.
- கே. அழகுராமன், வழக்கறிஞர்

உங்கள் சொத்திற்கான பத்திரங்கள் பாதுகாக்கப்பட்டுவிட்டது. உங்கள் சொத்து....?


“…செங்கல்பட்டு பக்கம் ஒரு மனை போன வருஷம் தான் வாங்கினேன். எங்கே
இருக்குன்னு கண்டு பிடிக்கவே முடியல..

.. நேரா கார்ல கூட்டி வந்து தான் காட்டினாங்க... அதுக்கப்புறம் இப்பத்தான் பார்க்க


வருகிறேன். அடையாளமே தெரியல்ல..

…லே அவுட் போர்டு கூட பெருசா இருந்துச்சு. இப்ப எங்கன்னு தெரியல்ல..”


அப்ரூவல் இல்லாத லே அவுட்டில் வாங்கும் மனைகளில் பல இடங்களை
இப்படித்தான் தேட வேண்டி வரும். காரணம், அருகருகே முளைத்துவரும் இதர
அங்கீகாரமில்லா மனைப் பிரிவுகளும், அதன் விற்பனைக்காக மாற்றப்படும்.
ஏற்கெனவே இருந்த மனைப்பிரிவின் கட்டமைப்புகள், அப்ரோச் ரோடுகள், இதர
வசதிகள் போன்றவை உங்கள் சொத்தை கபளீகரம் செய்யும் காரணிகள் .

இந்தக் குழப்படிகள் வராதிருக்க, வாங்கிய சொத்துக்கள் எதுவாக இருப்பினும்,


அதனை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சென்று பார்வையிடுதல்
அவசியம். பேப்பர் ஒர்க்ஸ் எனப்படும் பதிவு, பட்டா போன்ற ஏற்கெனவே
விவரித்த வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னர் கவனிக்க வேண்டிய
விஷயங்கள் இவை .

நீங்கள் வாங்கிய மனையானது அப்ரூவ்டு லே அவுட் - இல் உள்ளதெனில் பல


பிரச்னைகள் தவிர்க்கப்படும். அதுவே அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவெனில்,
பிரச்னை எந்த ரூபத்தில், எப்போது, எப்படி வரும் என்றே தெரியாத ஒரு நிலை.
இதனை தவிர்ப்பது தான் வலைப்படுத்தல் (Fencing) என உங்கள் சொத்தை
பாதுகாக்கும் ஒரு முக்கிய அம்சம் .

உங்கள் பத்திரத்தில், சொத்து விவரத்தில் கண்டுள்ள அளவுகளின் படியும்,


நான்குமால் எனப்படும், (boundaries) நான்கு புறமும் உள்ள எல்லைகளின்
விவரப்படியும் உங்கள் சொத்தினை அளவிட்டு, நான்கு எல்லைக்குமான கல்
ஊன்றி, உங்கள் சொத்தினை அருகருகே உள்ள மற்ற சொத்துக்களிலிருந்து
தனித்து, பிரித்து காட்டும்படியாக வேலி அமைத்து, அதனை
அடையாளப்படுத்தல் (Demarcation) மிகவும் அவசியம்.

அடையாளப்படுத்த வலைப்படுத்தல், காம்பௌண்டு சுவர் கட்டுதல், போன்ற


எதனையும் மேற்கொள்ளலாம். அதற்கான செலவிடல் நிச்சயம் உங்கள் சொத்து
மதிப்பினை உயர்த்தும்.
முடிந்தால் அந்த இடத்தில் கிணறு எடுத்தும், பயன் தரும் மரங்கள் வைத்து, ஒரு
மின்சார இணைப்பும் உங்கள் பெயரில் பெற்றுக் கொள்ளலாம். அது உங்களது
சொத்தின் சுவாதீனத்தை மேலும் உறுதிபடுத்தும்.
இப்போது உங்கள் சொத்து நன்கு பாதுகாக்கப்பட்டு நல்ல விலை போகும்
சொத்தாகிவிட்டது. நல்ல லாபத்திற்கு அதனை விற்கலாமா? அல்லது அதில்
கட்டலாமா ?

உங்கள் சொத்தினை விற்பனை செய்கின்றீர்களா ? - லாபம் பத்திரம்


பத்து வருஷம் முன்னாடி வாங்கிய சொத்து. நல்ல விலை போகுது. மகளின்
திருமணத்தை அடுத்த வருடம் பிரச்சினை ஏதுமின்றி நடத்திவிடலாம்.... ஆறு
மாத அக்ரிமென்ட் பீரீயட்தானே கேக்குறாங்கன்னு நெனச்சு அட்வான்ஸ்
வாங்குனதுதான் பிரச்னையாப் போச்சு... ரொம்ப சாதாரணமாகிவிட்ட டயலாக்
இது .

உங்கள் எதிர்கால பாதுகாப்புக்காக வாங்கிய சொத்து, உங்களுக்கே பிரச்னையாகி


போவதற்கு வாய்ப்புகள் அதிகம். காரணம், சொத்தின் அபரிமிதமான விலை
ஏற்றம், உங்களின் அவசரத் தேவை, தரகர்களின் தயவு, தாட்சன்யமற்ற வியாபார
பாங்கு. உங்கள் சொத்திற்கான லாபம் உங்களை சரியாக வந்தடைய என்ன செய்ய
வேண்டும்.?

முதலில் உங்கள் சொத்தினை விற்பனை செய்வதென தீர்மானித்து விட்டால்,


அதற்கென வாங்கும் தகுதியுடைய நபர்கள் உள்ளனரா? என்பதை பார்த்தல்
வேண்டும். இதற்கென விளம்பரம் கொடுத்தும் கிரயம் செய்ய முயற்சிக்கலாம்.
அதிக விலை போகும் என ஆசை வார்த்தைகள் கூறி அதற்கு சொத்தின் அனைத்து
ஆவணங்களையும் தரும்படி கட்டாயப்படுத்தும் தரகர்களின் மதி மயக்கும்
வார்த்தைக்கு மயங்காதிருத்தல் முற்றிலும் நல்லது. நீங்கள் பார்த்து விற்பனை
செய்வதில் சில ஆயிரங்களே குறைந்தாலும் கூட, பல பிரச்னைகளை அது
தவிர்த்துவிடும்.

சரி. சொத்தினை வாங்குவதற்கு நபர் கிடைத்தாயிற்று. அடுத்து என்ன செய்ய


வேண்டும்.?
சொத்து விற்பனைக்கு உங்களால் நிர்ணயம் செய்யப்படும் விலைக்கு கிரய
ஆவணம் தயாரிப்பது வாங்குவோரின் வேலை. அவரின் வருமானவரி நிரந்தர
கணக்கு எண்ணை கிரயப்பத்திரத்தில் குறிப்பிட்டு , உங்களுக்கு கொடுக்கப்படும்
கிரயத்தொகை செலுத்தப்பட்ட விதத்தையும், காசோலை/ரொக்கம்/ ஆர் டி ஜி எஸ்/
விவரங்களை கிரயபத்திரத்தில் குறிப்பிட்டு கிரயம் செய்து கொடுத்தல் மிகவும்
நல்லது. பிற்பாடு, வருமானவரி கணக்கு தாக்கலின் போது, அந்த வருமானத்தைக்
காட்ட கிரயப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பணப்பற்று விவரங்களை அப்படியே
எடுத்துக் கொள்ளலாம். வருமான வரித்துறையும் அதனை அப்படியே
ஏற்றுக்கொள்ளும்.

விலை நிர்ணயம்:
நீங்கள் சில ஆயிரங்கள் கொடுத்து இன்று, பல லட்சங்களுக்கு விற்பனையாகும்
என்பதில் சந்தேகமில்லை. இதற்கென விக்கிரயத் தொகையை நிர்ணயிக்க "அரசு
வழிகாட்டு மதிப்பை " ஒரு வழிகாட்டியாக வைத்து நீங்கள் மதிப்பிடலாம்.
அரசு குறிப்பிட்டுள்ள மதிப்பானது, காலி மனைக்கே. அதில் உங்களால்
அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பின் அதன் செலவுகளையும் கணக்கில் எடுத்துக்
கொள்ளலாம். மின் இணைப்பு, காம்பௌண்டு சுவர் போன்ற இதர செலவுகள்
இருந்தால் அதனையும் கணக்கிடலாம்.

கிரயம் (Sale) :-

விலை நிர்ணயிக்கப்பட்ட பின்பு கிரயம். ஒரு கிரயம் என்பது தக்க பிரதி பலன்
கொடுத்து வாங்குபவரால் வாங்கப்படுவது. அது அசையாச் சொத்தாக
இருக்கும்பட்சத்தில் பதிவு அவசியம். இது தான் அடிப்படை. இந்த அடிப்படை
விஷயத்தில்தான் பிரச்னையே ஒளிந்திருக்கும். அதிக விலை தர நான் ரெடி.
ஆனால் ஆறு மாத கால அவகாசம் வேண்டும். அதுவரை ரூபாய் 10,008/-
அட்வான்ஸ் கொடுத்து, வெறும் 20 ரூபாய் தாளிலேயே கிரய உடன்படிக்கை
செய்து கொள்வோம் என மிக சாதாரண வார்த்தைகளில் நிகழும் கிரயம்
பிரச்னைகளிலேயே முடிய வாய்ப்புகள் அதிகம்.

தற்போது, சட்டப்படி எல்லா வகை ஆவணங்களையும் பதிவு செய்தல் அவசியம்.


கிரய உடன்படிக்கை உட்பட. எனவே பதிவு செய்யாத ஆவணங்களால்
ஏற்படுத்தப்படும் கிரய உடன்படிக்கை செல்லாதென வாதிட்டு, அட்வான்ஸ்
கொடுத்திருந்த நபர் பொய்யான தகவல்களை கூறி, நீங்கள் உங்கள் சொத்தினை
வேறு எவருக்கும் விற்க இயலாதவாறு தடை கோரி, வழக்கு தாக்கல் செய்ய
அதிக வாய்ப்புள்ளது.

பல சொத்துக்களை, சில காலம், இது போல் தாமதப்படுத்துவதன்மூலம்,


வாங்குவதாக வந்த நபருக்கு, மேலும் சில ஆண்டு கால அவகாசம் கிடைப்பதன்
மூலம், Money Rotation எனப்படும் பணச்சுழற்சி செய்வதற்கு அதிக அவகாசம் பெற்று
விடுவர். அதன் பின்பும் , அந்த நபர், தான் குறிப்பிடும் நபருக்கு பொது அதிகாரம்
மட்டும் கொடுத்து விடும்படி மன்றாடுவார் . அதனை முற்றிலும் மறுத்தல்
நல்லது. பவர் கொடுத்தால் அதன் மூலம், பவர் பெற்ற நபர் உங்கள் முகவராக
செயல்பட அதிகாரம் பெற்றவராகிறார். எனவே, பிற்காலத்தில் அவரது
செயல்பாடுகள் என்னவென உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பே இல்லாமல்
போய்விடும். உங்கள் சொத்து அந்த சுழலில் சிக்கி, உங்களது "எதிர்கால
பாதுகாப்பு" என்ற கோட்பாட்டில் கிரயம் பெறப்பட்ட உங்கள் சொத்து உங்களை
பாதுகாப்பதில் கோட்டைவிட்டுவிடும்.
நம் சொத்து நம்மை பாதுகாக்க வேண்டும். நாம் அதனை பாதுகாக்க நீதிமன்றம்,
போலீஸ் என செல்வது நமக்கு மன உளைச்சலே. இந்த சொத்தே வேண்டாம்,
நிம்மதியே போதும் என்ற மன நிலைக்கு தள்ளப்படுவோம்.

இதனை தவிர்க்க, கிரய உடன்படிக்கையே இல்லாத, தரகரில்லா, மூன்றாம்


நபரில்லா, பொது அதிகாரம் எனப்படும் power of attorney இல்லா, நேரடி, உடனடி,
கிரயமே(Direct Immediate Sale) சிறந்தது. உங்கள் லாபம் குறைவென்றாலும்
உங்களை உடனடியாக வந்தடையும் .

என் சொத்தை விற்க வேண்டாம். கட்டலாம் என்ற எண்ணத்தில் உள்ளவரா


நீங்கள். ?

பாதுகாப்பாக கட்டுவோம்.

உங்கள் சொத்தை விற்கப்போறீங்களா.. கட்டப்போறீங்களா?

எனது அந்தஸ்து உயர காரணமே பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி


போட்டிருந்த சொத்துக்களின் விலையேற்றம்தான். அதனை இப்போது விற்றால்
பின்பு இந்த சமூகம், என்னை தூக்கி வைத்திருந்த அதே உயரத்தில் வைத்துப்
பார்க்குமா? அதனால் அந்த சொத்தை நான் விற்க மாட்டேன், கட்டப்போகிறேன்.
ஆனால் கையில் கட்டுவதற்கான பணம் இல்லை. என்ன செய்யலாம்? சேமிப்பை
காலி மனையாக (Vacant Land) வாங்கி போட்டிருந்த பலரின் மனக்கேள்வியும்
இதுதான்.

சொத்தில் நான் இருக்க வேண்டும். ஆனால் கையில் பணம் புரள வேண்டும்.


அப்போது நம் முன்னே தெரிவது கூட்டு கட்டுமானப்பணி எனப்படும் “Joint Venture”
புராஜெக்ட்.நகரங்களில் இடப்பற்றாக்குறை, மக்களின் தேவைகள், அபரிமிதமான
தொழில்நுட்ப வளர்ச்சி, இதனை கவனத்தில் கொண்டு, தற்போது கட்டுமான
நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டுமான தொழில் புரிவோர் என பலரின்
பார்வையும் இந்த JV எனப்படும் கூட்டு கட்டுமான முறை மீது தான்.

சொத்து உங்கள் சொத்து. கட்டுமானம் அவர்களது. கட்டிய பின்பு உங்களுக்கு


வசிக்க ஒரு வீட்டினை கொடுத்து, இதர வீடுகளை விற்று அதில் வரும் பணத்தில்
கட்டுமானச் செலவுகள் போக உள்ள லாபத்தில் உங்களுக்கும் பில்டருக்கும் 50-50.
இது தான் அடிப்படை.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

முதலில் உங்கள் சொத்தினை தகுந்த முறையில் அபிவிருத்தி செய்ய தகுந்த


பில்டரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு, அந்த பில்டர் தகுதியான
நபர்தானா? பில்டிங் கட்டுவதற்கு ஏற்ற கட்டமைப்பு (infrastructure) கொண்ட
நிறுவனமா? அவர்களின் முந்தைய புராஜெக்ட் எப்படி முடிக்கப்பட்டது?

அந்த இடத்தின் உரிமையாளருக்கு அந்த JV புராஜெக்ட் லாபகரமாக இருந்ததா?


கட்டப்பட்ட கட்டடத்தின் ஸ்திரத்தன்மை எப்படி இருந்தது? பில்டரின் பேப்பர்
ஒர்க்ஸ், அரசு வழி ஆவணங்களான பிளான், அப்ரூவல் போன்றவை அவரால்
முறைப்படி பெறப்பட்டு சொத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டுவிட்டதா
போன்ற எல்லா விஷயங்களையும் நுணுக்கமாகக் கேட்டு அறிந்த பின்னர் அந்த
பில்டருடன் தக்க ஆவணங்கள் மூலமாக உடன்படிக்கை (Agreement for Joint Venture)
எற்படுத்துவது முதல்படி.

நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கையானது, அனைத்து


அம்சங்களையும் உள்ளடக்கி உங்களையும், உங்கள் சொத்தினையும்
முழுமையாகப் பாதுகாப்பதாக இருத்தல் முக்கியம். சொத்தினை முதலீடு
செய்யும் நீங்கள் தான் முழு கவனத்துடன் இருத்தல் வேண்டும்.எக்காரணம்
கொண்டும் உங்கள் சொத்தின் மூல ஆவணங்களை பில்டர் வசம் சமர்ப்பித்தல்
கூடாது. அது போல பில்டருக்கு நீங்கள் கொடுக்கும் பவர் ஆப் அட்டார்னியும்
மிக கவனமாக கொடுத்தல் வேண்டும். அந்த பவர் அதிகாரத்தின் மூலம், பில்டர்,
புராஜெக்ட் லோன் எதுவும் வாங்கிவிடாதவாறு கவனமாக இருத்தல் மிக மிக
அவசியம்.

என்னென்ன விஷயங்களுக்கு பவர் கொடுக்கலாம் என்பதை தெளிவாக பேசி,


அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டுக்கொள்ளுதல் நல்லது. பிளான், அதன் அப்ரூவல்,
கார்ப்பரேசன் மற்றும் பெரு நகர வளர்ச்சி குழுமம் போன்ற அரசு
அலுவலகங்களில் உங்களுக்காக ஆஜராகி அனுமதி பெறவும், கட்டுமானம் கட்ட,
மின் இணைப்பு பெற, மற்றும் கட்டி முடித்தவுடன் அவர் பகுதியை மட்டும் விற்க
என மிக தெளிவாக அதில் குறிப்பிட்டுக் கொண்டால் பிற்கால பிரச்னைகளை
தவிர்க்கலாம்.

அது போல, கட்டடம் கட்டும்போது, என்னென்ன கட்டுமானப் பொருட்கள்


உபயோகித்தல் வேண்டும்? செங்கல், மணல், மரம், இரும்பு போன்றவை
எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதையும் குறிப்பிடலாம். இதர மின் ஒயர்கள்,
மின் சாதனங்கள், குளியலறை தேவைகள் என அனைத்தையும் தெளிவு
படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. தேவைப்படும் பெயின்ட் கலர்
முதற்கொண்டு குறிப்பிடலாம் .

கட்டுமானத்திற்கான கால அவகாசம் மிகவும் முக்கியம். தவிர்க்க முடியாத


தாமதம் தவிர, இதர தாமதங்களுக்கு, பில்டர் பொறுப்பேற்று உங்களுக்கு தர
ஒப்புக்கொண்டுள்ள மொத்த பரப்பளவுக்கு, சதுரடிக்கு, மாதம் ஒன்றுக்கு
இவ்வளவு என, கால தாமத அபராத தொகையும் குறிப்பிட்டு, கட்டுமானத்தை,
விரைந்து முடிக்க வழிவகை செய்யலாம் .பில்டர் கட்டிக் கொடுத்துள்ள பகுதிக்கு
ஈடாக நீங்கள் அவருக்கு வழங்கும் பிரிபடாத பாக நிலத்திற்கான தகுந்த
ஆவணங்கள் என்ன தரப்போகிறீர்கள்? எப்பொழுது? எனவும் அதில் குறிப்பிட்டுக்
கொள்ளலாம்.

கட்டுமானம் முடித்து, கம்ப்லீசன் சர்டிபிகேட்டுடன், உங்களுக்கென ஒதுக்கப்படும்


வீட்டின் சுவாதீனத்தை பில்டரிடம் இருந்து சுவாதீன ஒப்படைப்பு கடிதத்துடன்
பெறுவது அவசியம். இப்போது உங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி, உங்கள்
வசம். இப்போது பணமும் உங்கள் கைவசமாகும். வசிக்க ஒரு வீடும் புதிதாக
உங்கள் வசம் வந்திருக்கும் .

You might also like