You are on page 1of 75

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதி

ஆனந்த கணபதி காப்பு

முருகனுக்கு மூத்தோனாய் முழுமுதற் சுழியாய் வைத்தென்றும்


பெருகிவளர் சோதியா யெங்கும்பரவி யருளென்னும்
அருகுபுல் சாத்திய ஆனந்த கணபதியருளால் அங்காளம்பிகை அந்தாதி
உருகி யாவருள்ளத்திலுள்ளே ஊடுருவக் கண்டு

நூல்

உதிக்கின்ற திங்கள் உணர்வூட்டும் முகமென் னினைவில்


பதிக்கின்ற நின்பார்வைப் பாலில் பழமும் வழ்ந்து

மதிக்கின்ற குவளைபோல் பராசக்தியென் பாவம் தீர்த்து
துதிக்கின்ற தூய்மையாக்கும் தூயவளே. 1

தூயவளே துன்பந் தகர்ப்பவளே துணையாயென்றும்


மாயவளே மாணிக்கமே மலைமன்னன் புதல்வியே
தாயவளே தமிழவளே தந்தையாயு மென்றும்
வாய்ப்பவளே வளம்பல வாய்த்திடுவாய். 2

வாய்த்திடுவாய் தாயாயெனக் கென்றும்


சாய்ந்திடுவாய் திருவருளமுதந்தா யெனக்கு
வாய்த்திடுவாய் கருணையுளந்தனைக் கண்ணகத்தே
பாய்த்திடுவாய் நின்திருவுளப் பேரொளியே. 3.

பேரொளியே மாயப்பாசத் தொடரெலாம்


தாரொளியே தகர்த்தங்கு தகுதியுடைய வனாய்ப்
போர்த்தங்கு புண்ணியப் புவியதில் பக்குவமாய்
வார்த்திங்கு விட்டினையே விந்தைமிகு நாயகியே. 4.

நாயகியே நான்முகனும் நாரணரும் நமசிவாயருக்குத்


தாயாகியே யொளிவிடும் தனிப்பெருஞ்சுடரே யெனைச்
சேயாக்கியே சித்தம் தெளிவுறச் செய்து செல்வியே
பேயனை யென்றும் பெருமைபட வைத்திட்டாயிங்கு. 5

இங்குளநாள் மட்டுமல்லா தினியான்


எங்குசெல்கினும் நின்னருளால் நின்புகழ்தான்
தங்குமென்று தாரணியில் பரப்பிடும்போது
அங்கெல்லாம் வந்தென்முன் நிற்கும் முக்கண்ணியே. 6
முக்கண்ணியே முனிவரும் தேவரும் மூவரும்
இக்கன்னியாய்த் தோன்றியிங்கு முத்தொழில் செய்திட்டு
தண்ணிலவாய் தன்பத்தியினைப் பரப்பியே பலரிடம்
விண்ணிலவமுதாய் வேழாம்படியில் வற்றிருப்பவளே
ீ .7

வற்றிருப்பவளே
ீ யீரேழுலகெங்கும் விந்தையாய்
தோற்றியிருப்புவளே தோற்றத்துள்ளிருந்து துலங்குபவளே
போற்றினா யென்னுள்ளத்திலிருந் துன்னேயே யென்மனம்
மாற்றினா யெங்கும்பரம் பொருளான சுந்தரியே. 8

சுந்தரி சுகந்தருஞ் சுயஞ்சோதி சுயம்பிரகாசினி


அந்தரி யகத்தினுள்ளிருந்து மந்திரம் விளக்குபவளே
தந்திரஞ் செய்பவளே தமிழாயெங்குந் தாவியே
இந்தத் தரணியிலாடிடும் அங்காளம்பிகையே. 9

அங்காளம்பிகையாய் அகமதிலாடு மருட்கடலே


செங்காளம்பிகையாய்ச் செகமதிலாடி யிங்கு
கங்கையம் மனாயானந்தக் கூத்திட்டு மாலுக்குத்
தங்கையம்மனாய்த் தரணியகத்தாடும் தாரணியே. 10

தாரணியே தன்தமிழ்ப் பாசாங்குசச்


சீரணியே சிதம்பரத்தாடும் நாயகனுக்குப்
பேரணியே பெருமாட்டியே பேச்சும்பாட்டு மீ யவல்ல
நாராயணி நம்பினவருக்கு நலம்பல ஈந்திடும் நாயகியே. 11

நாயகி நாயேனுனை நம்பவைத்திங் காட்டிடும்


தாயாகித் தன்மனத்தே யெனைவைத்து வித்துவளர்செடி பூவுமாக்கிக்
காயாகிக் கனிந்து கற்பகத் தருவாக்கிநின் சேயாக்கும்
மாயாவிளையாட்டினை விளம்பத்தா னியலுமோ. 12

இயலுமோ உன்பெருமைதனை யியம்ப விமயத்தரசி


கயலுமென் விழிகாட்டி விளக்கியிச் சிறியனுக்குப்
பயிலுவித்தாய் பக்திதனைப் பராசக்தி பாரெங்குமினித்
துயிலுருமோயிவ்வுள மோங்காரத் தெளிவே. 13

தெளிவே தென்னாட்டி னின்னமுதே ஞான


நெளிவே நெல்முத்தே நெல்லையப்பருக் கருட்
பொலிவே ஏகாந்தமே யெண்ணிலடங்காத யென்னம்மே
வலிவே ஈந்திடுவாயிப் பாடலென்று மீ ரேழுலக முலாவிடவே. 14

உலாவிட உன்னருள் பரப்பிடவே பிறந்திங்கு


குலாவிடவே குழந்தையாய் உன்னருட் புனலில்
கலாபமயிலே மயிலைவாழும் கற்பகாம்பிகையே யருட்
பலாபல ன ீந்திடுவாய் நின்பாதம் பற்றியே. 15

பற்றினேன் இவ்வாக்கை நினைவுதனை யென்றும்


கற்றிலேன் காலன்பற்றா கல்விதனை ஞான
நெற்றியிலே ஆடுகின்ற அங்காளம்பிகையே
வெற்றியே யாவருக்கு மீ ந்திட்ட யென்தாயே. 16

தாயே தரம்பெற்ற பத்தருக்கு ளெனையென்றும்


சேயாக்கிவிட்டு யெனைச் சிறப்புறச் செய்தாய்
மாயாப் பிறவியிட்டு மனமகிழ வைத்திங்கு நினை
வாயாரப் புகழவைப்பா யென்றென்று மிவ்வையகத்தே. 17

வையகத்தே வாய்திறந்து பாடவைத்தாயே யெனையுன்


கையகத்தே யென்றும் வைத்தாட வேண்டுகின்றேனென்
மெய்யகத்தே யென்று மேவிவிளையாடு மென்னம்மே
தையல்நாயகியே தரணியில் தான்தோன்றி. 18

தான்தோன்றி தரணியில் தந்திடும்நின் புகழ் முன்பே


வான்தோன்றி வருமுன்னை வந்தம்மா நின்புகழ்பாட
யான்தோன்றி யென்றும் நின்னருள் பரப்பியே நினைவில்
நானெனும்நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே. 19

பராசக்தியே மூவர்க்கும் முதலே யென்றும்


மாறாசக்தியே சத்தியஞான பீடமே யென்னுள்
தீராசக்தியே தீவினையகற்றும் தெளிவே
பாராயோ சக்தியே பாரில் யாவரையும் பத்தராக்கி. 20

பத்தராக்கி நின்நாமமே நான்கு வேதமாக்கி யென்றும்


சித்தருக்கு உபதேசித்த சிவசக்திரூபியே யெங்கும்
முத்தருக்கு மூலபீடமே முக்கண்ணியே யென்போன்றோருக்கு ஞானப்
பித்தமே உன்னருள் கூட்டி வந்ததே. 21

சிறந்தவளே சித்தந் தெளிவுறச் செய்பவளே எம்மயமாய்


பிறந்தவளே பிறவிப் பெருங்கடல் நீ ந்திடவே எம்மோடு
மறந்திடாமல் வந்தெம்மை யாட்கொள்ளுமகா சக்தியே
இறந்திடுதல் வந்தெம்மையாட்கொள்ளு முன்னேநீ வரல் வேண்டும். 22

வேண்டுமென நான்கேட்கு முன்னே நீ யறிந்து


வேண்டின வெலாந்தந்திடும் அங்காளம்பிகையே நின்னருளால்
தாண்டினேன் தரணிப்பொருளாசையை யென்போல் நின்பத்தருக்கும்
வேண்டியே தந்திட்டால் விந்தை மிகுவாழ்வை விளம்பத்தா னியலுமோ.
23

இயலுமோ உன்னருட் சக்தியைச் செப்புதற்கே யென்றும்


பயிலுகின்றேன் நின்னருளால் நீ லியுனைப் பாடவே யிவ்வுடல்
துயிலுருமுன்னே தூக்கியெம்மைக் காத்திடுவாய்
வயலூர்ப் பெருமானை யீன்றெடுத்த வடுவாம்பிகையே. 24

ஈன்றெடுத்த தாயினைக் காட்டினாய் நினைவி லென்றும்


மூன்றெழுத்தோங்காரங் காட்டியே முப்பத்து கோடியினரும்
சான்றதுன் பாதமே சாவாமருந்தளிக்கும் சாந்தியே
போன்றதுன் நாமம்போல் சாந்தமளிக்கு மொருநாம முன்டோ. 25

உண்டோ உனைப்போலுளமுருகி உவந்தளிக்கும் தெய்வமதைக்


கண்டிலனே இப்பாரெங்கும் பரந்துநிற்கும் பராசக்தியே
தொண்டே உனக்கென்றுஞ் செய்திடவே வைத்தாண்டு
கொண்டே யிருப்பா யினியெப் பொழுதுமே. 26

பொழுதென்னு மிரவுபகலா யென்று மேத்தியுன்னைத்


தொழுதென்றுந் துதித்திட்டென் நினைவிலாலம்
விழுதென யென்றும் பற்றியேஆனந்தக் கண்ண ீரால்
அழுதழுதுன்னைத் தொழுதிடக் குறையேது அங்காளம்பிகையே. 27

குறையேது குணக்குன்றே குளிர்மலை வாழுமெம்


பிறைசூடிய பெருமானென்று முன்னன்பெனு மருட்
கரையிலமர்ந்தங்கு மோனத்தவம்புரிய வைத்திட்டு
நிறையருளை நிறைந்தருளும் நீ ர்மல சுந்தரியே. 28

சுந்தரி சூக்குமச் சுடர்சோதியே மாயா


தந்திரி மனமகிழ்சித்திக்கு வித்துநீ சிந்தை தெளிவூட்டும்
மந்திரி மங்களநாயகி மாமறைதேடிடு மென்றும்
வந்தறிவாய் விளங்கவேண்டு மென்னுள்ளே. 29

என்னுற் சொல்லும் செயலும் நீ யேயாகி யெனை


உன்னுளுறைகின்ற உயிர்க் கதிரொளியாக்கித்
தன்னுளிருந்து தாருக்களிக்குந் தாரமுதமே யென்
கண்ணுள் நீயிருக்கு மதிசயத்தை யென்னென்பேன். 30

அதிசயமான வடிவில் வந்தாடும் வளர்சோதியே நினையுன்


பதியே பலகாலம் தவமிருந்து பார்த்திட்டா ரெனக்கு
கதியே நினையன்றி வேறுயாருளா ரெப்பிறப்பிலும் வருமென்
விதியை மாற்றிட மனங்கொண்டாடும் மகாசக்தியே. 31

குலங்கொண்ட கையொன்று சுற்றியெனைக் காக்க


ஆலமரன்பனுக் கருட்கூட்டு மங்களாம்பிகையே தமிழுக்கொரு
வேலனை யீந்திட்டவேம்புலி நாயகியே யென்மேல்
காலக் கயிறதுவிழுமுன்னே கண்முன்னே வரல்வேண்டும். 32

கண்ணாவோ நின்கருனைக் கெல்லையொன்றுண்டோ


அண்ணாவோ திருவண்ணாமலைக்கு நீயருள் அண்ணாவோ மாதுள
வண்ணாவோ வாய்திறந்து பாட்டியற்று மிவ்வேழைதனை நீ யென்றும்
எண்ணாவோ யிருந்திடலு மியலுமோ விமயத்தரசியே. 33

கனியே கனியின்ரசமே கற்கண்டே மலர்ப்


பனியே பணியும்பத்தருக்குப் பாலமுதே பணியாதவர்க்கு மாயத்
துணியே துணிகிழித்தெறியுந் தூயபொருளே யென்றும்
துணிந்துனைப் பணிந்தபின் பணியேன்நின் பக்தரல்லாதவருக்கே.   34

இல்லாதவரு முன்நாமங் கல்லாதாருண்டோ யிவ்வுலகில்


சொல்லாத நாளுண்டோ நின்தோத்திரமே யிப்புவியில்
நின்திருக்கோயில்
செல்லாத நாளென்னநாளோ நானறியேன் நாளெல்லாம்
நில்லாதது சென்றாலும் நீ யேயெனக்கு வந்தெதுவும் செய்தல் வேண்டும்.
35

அது வேண்டுமென நான்கேட்கு முன்னே வந்து


இது வேண்டுமா யெனக்கேட்கு மங்காளம்பிகையே யென்றும்
எது வெனக்கு நலந்தருமோ அதையேநினைத் தருளல் வேண்டும்
பதுமையாய்த் திருக்கோயிலகத்தே யிருக்கும் பராசக்தியே.  36

அகத்தே யொன்று வைத்தனைத்துயிர் வாழும்


செகத்தே யொன்றுசொல்லி சிறியோர் முன்னேசிரந் தாழ்த்தி
இகத்தே பிறக்கும் பொருள்நாடி யிறவாதென நம்பி
நகத்தே யெடுக்குமழுக்குபோல் யானுள்ளேனே. 37

அழுக்கது அகலவோர் மார்க்கம் கூறென்னன்னையே


முழுக்கது போட்டிடிவ்வுலகவாழ்விற்கு ஞானக்
கூழுக்கழுது வருமென்னைக் கூட்டிக்கொண்டிடு குலதேவி
ஊழுக்கழுதிடாம லென்னுளமதி லாடம்பிகையே. 38

ஆடனைத் தாட்டமும் நீ யேயாடு உள்ளக் காமக்


காடழிந்திடவே காளியென்றே யாடென்மனம்
நாடும் நாராயணி நலமிகுவிவ் வேழுலகும்
பாடும்பாடும் பராசக்தியென்றே பாடும். 39

பாடு பலகோடி ஜீவன்களில்பாடு நின்பக்தரோடு


கூடு யென்றுங் கூட்டினுள்ளோடுங் குகைநாயகியே
கேடொன்றுமில்லை நின்நாமங் கேட்டபோதே உன்னருளைத்
தேடு தேடென்றே தேடவைத்தாய் ஞானப் பித்தனாக்கி. 40

பித்தனெனப் பெயர்சூடினான் சுடலை நாயகன் பத்தியால்


கத்தாமலிருப்பேனோ நினைக்காணும் வரைகண்டபின்னென்றும்
சொத்தாய் நீ யெனக்கு வேண்டுமென்றே பித்தாயலைகின்றேன்
சித்தாய்ச் சிதம்பரமாய்ச் சின்மயமாய் வற்றிருப்பவளே
ீ . 41

சாதனையென் றொன்றுண்டெனிலது நீ யேகுளிர்மலை


நாதனும் நீயிட்டபடி செய்வதே சாதனை யென்றான்திரு
ஆதிமூலனுமாறு முகத்தோனும் மூத்தோனும் நின்நாமமே சாதனை
யென்றார்
நாதியுனையன்றி வேறறியாருக்குச் சாதனையும் சாந்தியும் நீ யே. 42

இவள் சோதனை செய்யமுனைந்திட்டால் சொல்லத்தானியலுமோ


பவள நிறத்தினள் பாரில்லோர்க்கெல்லாம் பக்திப் பாலூட்டினாள்
நின்னருள்
துவளாதென்று மெனையுமனைவரையுங் காக்குமிச்சக்தி
அவள் செய்வதத்தனையுந் திருவிளையாட லென்றியம்புவது நன்றே. 43

இயம்புவதுன் நாமத்தை நின்னடியாரிடையே யென்றும்


சுயம்பு சோதியாய்ச் சுற்றியாவரையுஞ் சுத்திசெய்தெங்கும்
மயங்க வைத்தாய் மகாசக்தியெனும் நாமக்கள்ளையூட்டி யாவரையும்
இயங்க வைத்தாயுன்னருட்சக்தியாலே பலவண்ணமாய். 44

மூவருந்தேட மற்ற முனிவருந்தேட ஆயிரங்கோடி யண்டந்தேட


யாவருந்தேட உடுக்கை சூலமுடனெம்முன் வந்திங்கெமைநீ
பாவலராக்கிப் பாட்டிசைத்துப் பாடியிங்கெமக் கென்றுங்
காவலாகிக் காட்சியாகி நின்றாயே. 45

நின்றா யெம்மனத்து ளென்றுமுனைப் பற்றியெங்கும்


கன்றா யுன்னடிமை கொண்டுநான் பிறமதத்தில்
நன்றாய்ச் சேருவேனோ கனவிலுமில்லையடி தாயே
இன்றா யிக்கணமாயிங் கென்முன் நிற்கவே. 46
என்முன் வாழவழிவகுத்து விட்டாய் வளம்பெரும்
பொன்வாழ்வொன்று காட்டினாய் ஞாலம் புகழ்
உன்வாழ்வொளியென்மீ து வசியே
ீ யென்றும்
நின்வாழ்வை யென்வாழ்வாக்கிய நாயகியே. 47

வாழ்வில் தவறேது நின்னருளால் செய்யினும் நாயகியே


தாழ்வுறும் தவறேதும் வேண்டாதடுத்ததை நீதிருத்தி
வழ்வுறு
ீ மெண்ணம் வணுக்குந்தோன்றல்
ீ வேண்டா ஞானக்
கூழுற்றி யெனக்கூட்டும் குலப்பெரும் நாயகியே. 48

குறிப்பறிந் தளிக்குங் கூர்மதியுனக்கன்றி யாருக்குளதோநல்


நெறிப்பண்புதனை யென்றுமென்னுடலுதிரமாக்கி யென்மனப்
பரிதனையடக்கியே யெங்கும் நீ யேயாகி யென்னுளடங்கும்
கரியநீ லக் காரிகையே கற்பகாம்பிகையே. 49

கரிந்திவ்வுடல் சாம்பலாகிப் பயனற்றுப் போகுமுன் கற்பகத்தருவே


யெனை
பரிந்து நீயுமேற்று நின்பாதப் பணிவிடை செய்வித்துனைத்
தெரிந்த பின்னும் சாகும்காரியம் செய்வித்திடாம லென்றும்
சரிந்திவ்வுடல் வழுமுன்னே
ீ சமாதியெனக் கருளே. 50

அகங்காரங்களைந்திட நாமங்கொண்டா யங்காளம்பிகையெனச்


செகத்தேயென்றும் செகதாம்பிகையாய் நின்றவளே யென்றும்
இகபரவாழ்வில் வந்துதவுமினியபெரு நாயகியே உன்கை
நகத்தேயிருந் துதிர்ந்ததுதானே திருமாலுக்குத் தசாவதாரமே. 51

அவதாரம் பலவுருவிலெடுக்கும் நாயகியே யார்


அவதார மெடுத்தாலு முன்னருளால் வந்தவரே முத்தருக்குத்
தவத்தாரமளிக்கும் தமிழ்ப்பூங் பூங்கோதையே யனைத்
தவதாரமு முன்னவதாரமெனத்தெரியும் நாளென்றோ. 52

உன்னருளால் வந்தவரிங்கு பலகோடியே யாவரையும்


தன்னருளால் வந்ததெனக் கூறவைத்தாயே யெங்கும்
இன்னருளத்தனையு மெங்கிருந்தாலுமது
உன்னருளால் வந்ததென இயம்ப வைத்திடாயோ. 53

இவரு யர்ந்தவரென்று பலகூட்டங் கூற


அவரு யர்ந்தவரென்று மற்றேர்கூற அனைவருள்ளும்
எவரு யர்ந்தவரெனக் கேட்கவைத்தனையே யாவரையும்
கவர்ந்திழுக்குங் கருணைதான் உயர்ந்ததெனப் புகட்டிலையோ. 54
புகட்டாத பொருளொன்றுண்டோ யிப்புவிமீ தே உன்னருளால்
பகட்டான பொருளுக்கே பலகோடியினரையும் மயங்கவைத்தா யென்றும்
திகட்டாதுன் நாமம்திவ்வியத் திருவே யாவரையு முன்னருள்
நகட்டா திருக்குமோ ஞானவழி நோக்கியே. 55

ஞானவழி நடந்திட நலமிகுநாமம் மேல்


வானவழி பறந்திட சீலமிகுநாம மங்கு
கானவொலி கேட்டிட ஒலிமிகுநாம மவள்பணிக்கு
தானமென யீவதிவ்வுடல் பொருளாவிதானே. 56

உடலதுருவாக்கி யுயிரெனப்புகுந்துள்ளே யுனையடையுமாசைக்


கடலதுவைத்துநீ கப்பலாயாகி கரையதுசேர்க்கவே ஞானத்
திடலதமைத்தாயழியா மெய்ப்பீடத்துள்ளே உனையென்றும் பாடும்
மடலது ஈந்திட்டிட்டாய் மணப் பூங்குயிலே. 57

குயிலே நீ கூவியழைத்திடிற் குழந்தை நானாடியழகு


மயிலாய் வந்துநின் பாதம் பற்றியேயென்றும் ஞானப்பாடம்
பயிலவே யிங்குவந்துனை வேண்டவைத்தா யுன்னுடனெனை யழைத்து
கயிலை சென்றங்குவைத்துக் காட்சியாயுன்னோ டாக்கிடுவாய். 58

ஆவிநீ தானே என்னுடலென்னும் கட்டைக்குள்ளே


காவியணிந்திட வேண்டுமோ துறவியெனப் பிறரறிய
பாவியெனக்குப் பலநிறஆடைபூட்டினாய் பாசமுடன்நீ
தாவியே நிர்மல ஆடைவேண்டி வந்தெனக் களிக்கவே. 59

ஒன்றுனது நாமமே யென்றுமெனது நாட்டமே


இரண்டுனது அருள்பொருளிவ்வையத்தினையு மளித்தெனக்கு
மூன்றுனது கண்களால் மும்மலம் போக்கியே யுனை
நான்முகனும் நாரணனும் நமசிவாயனும் நலமுறவணங்கக் காண. 60

வணங்கவே வந்துவிட்டேன் வாழ்நாளெல்லாம் பிறர்சொல்லால்


சுணங்கி சோம்பித் திரிதலும்வேண்டா யிவ்வுலகச் சுற்றத்தாரெல்லாம்
பணிந்துனக்குப் பணிசெய்யும் நாள்தனைப்பார்த்தென் பாமாலையை
அணிந்துனக் கென்றும் பார்த்திடுவே னங்காளம்பிகையே. 61

வானமது நீ யேயானாய் வளர்சோதி உன்மீ தபி


மானமது நீ யேயளித்தாய் வளர்மா மதுரைவாழ்
மீ னாட்சியானாய் வந்தெனக் கென்றும்திரு
ஞானமது ஈந்தென்னை யுன்னோடு கூட்டினையே. 62

கூட்டியே சென்றென்னை மனங்குளிர வைத்தமுதப்பால்


ஊட்டினையே உளத்தென்று முன்னருட் பெருக்கை
நாட்டினையே நாட்டமுடன் நின்நாமமந்திரத்தை யென்றும்
நோட்டமே யெனக்கு வைத்தாண்டு கொள்ளே. 63

பொருள்தரும் போகந் தரும் மதிமயங்கிப் போகுமுன்னே


அருள்தரு மனைத்துந்தரும் அங்காளம்பிகைதானே
திருவருள்தருந் தினந்தரும் தன்பால் நீ ங்காநினைவூட்டி யானந்தக்
கருப்பொருளாய் வந்தெனைக் காக்கும் அம்பிகையே. 64

அன்பாலழுதானந்தக் கண்ண ீரா லர்ச்சித்தே யென்றும்


உன்பால் தொழுதுன்னைப் பக்தியால் பாட்டிசைத்தே யென்றும்
என்பால் பழுதுபட்டிருக்கும் உளமாசுதனைப் புதுப்பித்
தன்பால்வந்தெனை யணைத்துக் கொள்ளாயோ. 65

அசைவற்ற பொருளும் நீ யேயெனங்கமெலாம்


இசையாகி வந்தாடும் வனப்பும் நீ யேயெத்
திசையுமுன் நாமம் பரப்பியே உன்னன்புப்
பசையாகி படர்ந்துன்னுடன் வாழவேண்டுமம்மா. 66

குருவாகி யெனக்குநீ வரல்வேண்டு மென்முன்னே


உருவாய் வந்துநின்றருளல் வேண்டுமுன்னொளிக்
கருவாய் வந்திவ்வேழை பிறந்திடல் வேணடுமென்றுந்
திருவாய்வந்து நிற்குந் திருவெல்லை நாயகியே. 67

வல்லவள் நீ யே வியத்தகுயிவ்வுலகி லென்றும்


நல்லவள் நீ யேநம்பினோருக்கும் நம்பாதோருக்கும்
மெல்ல நினைவூட்டினையே நின்நாமம்
சொல்லசொல்லச் சுவைக்கொரு யெல்லையுண்டோ. 68

சத்தியம்நின் உடலாகும் சாந்தியே நின்கண்ணாகும் நின்நாமம்


நித்தியங் கூறினோருக்கு நீ டுபுகழ்நீ யே யுனைவணங்க மனதில்
பத்தியமேதும் வேண்டா பாரில்வளர் நாயகியேயென்று மெனக்கு நல்ல
புத்தியைத்தா புனித வணையேந்திய
ீ சக்தியே. 69

வழிபட வைத்தனையே நின்னை யென்றும் பிறர்மீ து


பழிபட யெனைநடத்திடல் வேண்டா வணாய்

அழிபடும் பொருள்மீ து பற்றெனக்கு வைத்தெக் காலத்தும்
இழிவுபட வைத்திடாதே இனியபெரு நாயகியே. 70

வாளுடன் வந்தவடிவழகு நாயகியென் வாக்கினில் நின்று


ஆளுடன் வந்தவருக்கெல்லா முன்நாமங் கூறியவர்
கோளது மாற்றியே குறைதீர்த்திடச் செய்து
நாளெல்லாம் நின்நாமங் கூறும்நிலைதனை யீந்திடாயோ 71

சோமன் நின்னருட்கொண்டான் சூக்குமச்சோதியே நின்


நாமமும்பெரிதெனக் கொண்டு நாரணனும் நலம்பெற்றுக்
காமனைத் தகனஞ் செய்து சிவனுமுயர்
வாமன அவதாரத்தான் தங்கையுனை மணந்தான்தானே. 72

சிவனும் சக்தியுஞ் சேர்ந்து வந்ததுன்னருளால்


அவனுமவளு மவதாரம் பெற்றது அங்காளம்பிகையால்
இவனுமிவளுஞ் சேர்ந்துனைப் பாடவைத்தனேயே யென்றும்
அவனுமுன்னைப் பணியாது சென்றதில்லையே செகப்பெருநாயகியே.
73

ஆசைதனை யிரண்டாக்கி யழியாஅழியுமெனக் கூறியுனைப்


பூசனைச் செய்ய வைத்தனையோ அழியாதுணையடைய வென்றுங்
காசைக் கொடுத்து மனமாசை வளர்த்தல் வேண்டா நின்னருளால்
ஈசனென்பது மீ சுவரியென்பது முன்நாமமே. 74

கரும்பு வில்லுங்கைக்கொண்டுகாரிகையே என்றுமுனை


விரும்பும் நினைவே நீ யளித்திடல் வேண்டுந் துட்டவெண்ணந்
துரும்பளவும் வந்திடல் வேண்டா யென்னுள்ளென்றும் வளர்
அரும்பாகி யனைத்துமாகி அண்டமாகி யென்னன்னை யாகினையே.  75

பூதநாதனுக்குப் புண்ணியப் பொறுப்பளித்தா யிவ்வேழைதனுக்கும்


பூதவுடலகத்தே உன்னினைவுப் பொறுப்பளிப்பா யென்னுள்ளே
நாதவொலி கேட்டுநாளெல்லாம் நின்நினைவு கூட்டவேண்டுந் தமிழ்
வேதவொலி போற்றும் வேதநாயகியே வேதவுமையே. 76

உமையே யாருக்கு மடியேனுன்னருளா லென்றும்


சுமையா யிருந்திடல் வேண்டா யைம்புலனடக்கும்
ஆமையா யிருக்கவைத்தென்னை யுன்னன்புள்ளத் தென்றும்
அமைத்திடுவா யம்பிகை சிலைபோல் அன்பே. 77

அன்பே யெனன்பினிற் புகுந்துமுக்கால முணர்த்தி


இன்பமுமினிமையும் நீயாகி யினிய பத்தருக்குள்
துன்பமேதுமின்றித் துடைத்து நீ தூயநிலை யளித்து
அன்பு மறனுமளித்தாளுகின்றனையே. 78

காதலாகிக் கனிந்திவ்வுளங் கதிநீ யேயென்று மிவ்வுலகத்தே


சாதலெனும் மாயவாழ்வில் வைத்தென்னை மயக்கிடாதே
பாதயாத்திரியாயென்று முன்கோவிலுக் கெனைவரவழைத்துக்
கீ தமா யென்று முலாவிடும் கீ தாம்பிகையே. 79

புண்ணியம் யாதுசெய்யவைத்தனை புலம்புகின்றே னுன்னருளால்


பண்ணிய பாவந்துலைத்திடாயோ தூயபெருநாயகியே யென்னுள்
எண்ணியதெலா முன்னருளால் நிறைவேற்றினாய் நீ யேயென்றும்
திண்ணிய நெஞ்சந்தந்தென்னைப் புண்ணியஞ் செய்வித்திடாயோ. 80

புண்ணியஞ் செய்துன்னருட் கொண்டு நின்புகழ்பரப்பிக் கடமை


கண்ணியங் கட்டுப்பாடென்பது நின்செயலே யென்வாழ்வில்
நன்னியுன்னை நலமுடன்நாடிவந்தே னுன்னருளால்
மண்ணில் வாழ்நாளெல்லாம் மனமகிழ் நாளாக்குவாய். 81

வந்தேனென் வாழ்நாளெல்லா முனைப்பாடி யென்றும்


தந்தே னெனக்கென் றொன்றுண்டென்றா லத்தனையும்
கந்தவேளே காக்கும்படித் தமிழுக்கீ ந்த கருணைபோல்
வந்தேன் நாளுமரிய பலசெயலைச் செய்திடும் நாயகியே. 82

மெல்லிய குழல்குரல் கொண்டே கூலியழைத்தேன் குருவாகி


சொல்லிய மந்திரமென்னுள் ஒலிக்கவே யென்றுந்தூய
மல்லிமணம் பரப்பித் தூயதீபமுள்ளே காட்டியென்றும்
அல்லி யங்காளம்பிகையா யாகிவந்தாய் ஞானமுதளிக்கவே. 83

நஞ்சுண்ட ஐயன் நஞ்சுதனைக் கண்டத்திலே நிறுத்தித் தேவருக்கெலாம்


அஞ்சேலெனக் கூறிநின்னன்ப ருய்யும் வண்ணமுயிரூட்டி யனைவருந்
தஞ்சமெனயுனை வைத்துத் தரம்பெருவாழ்வளிக்கும் நின்
மஞ்சளது குங்கும மகிமையை மனமகிழ்ந்து பாடவைத்தனையே. 84

குங்குமந் தந்திடுங் குறைவில்லா வாழ்வுதனை உலகுக்கு


எங்கும் பரப்பியே பாடிட வேண்டும் நின்னருளால்
தங்குமே யென்றும் நினக்குச்செய்யுந்தொண்டே யழியாமல்
இங்கினி வேறோருக்குப் புகழில்லையே உனைப்போலே. 85

திருநீற்றின் மகிமையைத் திருத்தமுடன் கூறயெனக்கியலுமோ


பெருங் காற்றென வந்திடுமெக்குறையும் மடக்கி யொழிக்கும்
வருகாற்றென வந்து வேண்டாதென ஓட்டித் தள்ளி ஞானமூட்டும்
அருட்தென்றலாகி யானந்தக் களிப்பூட்டுந் திருநீ றே. 86

பாதமலர் கண்டுநானும் பாசமுடன் பாடியுன்னை தமிழ்


வேதமலர் தூவியே துதித்துன் பாதயிடைப் பத்திச் சர்க்கரை
சாதம்வைத்து சாந்தமெனும் நின்னருட் பழம் படைத்தன்பு
கீ தம்பாடியே கீ ர்த்தனை புரிய வேண்டுமம்மா. 87

தாமரை மலர்ப் பொன்னடிதனைப் பொறுப்புடன் வணங்கி


யாவரையும் யாவையும் செய்யத் தூண்டியென்னை யுன்புனித
பூவறைத்தாள் மீ துபுண்ணியனாய் வைத்தென்றுமுன்
பாவறையும் செயலீந்தனையே ஈகைபெருமாட்டியே. 88

பூவடி பெருமைதனைப் புரிந்துகொள்ளும் நாளென்றோ ஞானக்


காவடிப் பாட்டிசைத்து நின்கணங்களெல்லா மாடக்கண்டு
பால்வடியும் நின்பாசப் புன்னகையுடனிங்கு நீ யெழுதும்
நாலடிப் பாடலுக்கு நலமிகு நின்பாதம் பட்டிடவே. 89

பாதநினைவே யெனக்கென்றும் வேண்டும் வேறெது நினைவும்


காததூரம் ஓடிடவேண்டும் நின்நினைவென்றும்
சேதமுறாது செம்மலர்ப் பாதநினைவே வேண்டும்நின்
பாதமேயென் பலபிறவி யழிக்க வந்ததே. 90

பார்வை யொளியால் பகலிரவு செய்துளமாயப்


போர்வை களைந்தெறிய வந்திடாயோ வணுக்குழைத்தென்

வேர்வை ஒழியப் பாடுகின்றேன் பண்ணிசையே யுன்மீ தென்றும்
ஆர்வம் வந்திடப் புனிதப் பார்வை பாய்ச்சுவாயே. 91

நின்புருவமசைந்திடில் நீ லகண்டனாடுவா னென்னுள்ளத்தே


அன்புருகொண்ட நாயகியே யாயிரங்கோடி யண்டங்களும்நின்
புன்முறுவலில் வந்ததே புண்ணியமூட்டும் நாயகியேயிங்கு
என்புருவாயிருக்கு மெனையேற்றுக் கொண்டருள்வாயே. 92

புவனங்களாடப் புவியெங்குமாட புலன்களாட யென்


கவனங்களாட வுன்னால் கண்டதத்தனையுமாட யிவனுன்
மவனென்று கொண்டாட மனமகிழ்ந்து நானும் மெத்த
தவமென்ன செய்தேனோ தவமருள் நாயகியே. 93

நுதலதில் அழகொரு பொட்டுங் கண்டேன் ஞானப்


பதிகங் கூறும் மூன்று திருநீ ற்றுப் பட்டை கண்டேனென்னால்
அதிக மியம்பத்தா னியலுமோ ஞானமுன்மூத்த
துதிக்கை நாதனாற்றான் நவில இயலுமே. 94

வேல்கொண்டளித்தாய் குமரனுக்கே ஞானத்தால்


மேல்கொண்டெழ வைத்தெனக் கமிர்தப் பாலளித்துநின்
கால்தனுக்குத் தொண்டுசெயுங் காலந்தந்துநின்
கோலமெல்லாம் நானாகித் திருநீ ராயமர் நாளென்றோ. 95
இடுகாட்டிற் சென்றுயெனை யிட்டிடல் வேண்டா ஞானச்
சுடுகாட்டிற் சென்றுசுட்டென்னைப் பசும்பொன்னாக்கு
வடுவாம்பிகையே வந்தென்னை வளர்த்திட்டுன்னருளாற் பாழும்
படுகுழிக்கழுத்தும் நின்பாசமற்றவருடன் சேர்த்திடாதே. 96

அறியாது நின்னருளால் யாதுபிழையும் செய்தல் வேண்டா மதிமயக்கித்


தெரியாமலெதுவுஞ் செய்வித்திடல் வேன்டயென்றும் நல்ல
நெறியது தவறாமல் நலம்பல நின்னன்பருக்கெலாம் செய்தென்
குறியது நின்திருப்பாதமே யென்றிருக்க வைப்பாயே. 97

அனத்து மழிந்தாலும் நின்னருளா லழியாநல


மனைத்து மளித்து நம்பிக்கையு மளித்துநின்புகழ் மாலையால்
வினையத்தனையுந் தீர்த்து வடுகொடுத்திடுவாய்
ீ யாருக்காவது
தினைத்துளி யளவேனும் நின்பத்தருக்குத் தீர்த்தமளித்தே. 98

ஓடுகின்ற நீ ருமுன் பெயர்கூறியே யோடியெங்கும்


வாடுகின்ற பயிர்வாழவழிசெய்து நீ யெமக்குநின்
வடுபுகழளித்து
ீ நினைவத்தனையும் நீ யேயாகி நினை
நாடுகின்றவருக்கு நாமமாம் பராசக்தியே. 99

கல்லையு முருக்கு முன்நாமங் கனிந்தழுதிடில்ஞான


எல்லையுந் தாண்டவைக்கும் நின்நினைவா லென்றுமிருப்போர்
புல்லையும் நெல்லாக்கும் புனிதநிலை பெறுவரே யனைவர்
தொல்லையும் போக்குந் தூயநிலை நின்போலாவாரே. 100

கண்கண்டு குருடராய் குணம்பிரண்டலைதல் வேண்டா


மண்கொடுக்குமாசையதை மனதிலும் வேண்டா அழியும்
பொன்பொருள் கொடுக்குமாசையதை யொழித்துநீ யென்றுமுயர்
பண்கொண்டநின் நாமயிசை யென்றுமென் நினைவில் நிற்கவே. 101

நூல்பயன்

அன்புடன் அண்டங்கோடி யனைத்துங் காக்குமங்காளம்பிகையை


இன்பமுடன்பாடி பணிந்தோருக் கெல்லாந் துன்பம்
என்பதில்லையே துயரெல்லாந் தீர்த்துத் தூய்மையாக்கி
இன்பமுண்டினிமை யுண்டென்று ளமாடுமே.

காலபைரவர் துதி :

விரித்த பல்கதிர் கொள்சூலம் வெடிபடு தமருகம் கை,


தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகிவேழம்,
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்,
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரை

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய சிவ பஞ்சாட்சார


ஸ்தோத்திரம் ..... ஓம் நமச்சிவாய

நாக உலகத்திற்கரசனாம் வாசுகியை நளினமுற அணிந்தவனும்


தேகமெலாம் வெண்ண ீறு உடையவனும்
திரினயணம் கொண்ட திகம்பரனும்
போகமுடி தேவர்க் கீ சனும், புனித மகேஸ்வரனும்,
நித்தியனும் ஆகவந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் அடிபணியும் முதல்
எழுத்தே 'ந' என்றாகும்.

மந்தாகினி நீ ரைச் சந்தனமாய் மார்புரம் தரித்தவனும்,


மந்தாரை மலர் பலவாய் வழிபட்ட மகேஸ்வரனும்,
நந்தி தேவ கணத்திற்கெல்லாம் நாயகனாய் வழி நடத்த வந்துதித் தோன்
ஐந்தெழுத்தில் வணங்கும் 'ம' வே இரண்டும் நிலையாகும்.

சிவனையும், உமையவள் கமலமுகம் செம்மையுற மலரவரும்


சூரியனுமாய்த் தவ ஞான வேள்வி செய்த தட்சனது யாகமதை
அழித்தவனும்,
யுவராஜ நீ லகண்டன் காலைக் கொடியுடைவனும் -
ஐந்தெழுத்தில் சிவ ராஜ யோகம் மிகும் 'சி' கரமாகும் சிரம் வணங்கும்
மூன்றாவதாகும்.

வரங்கொண்ட மாமுனிவர் வசிஷ்டர் - அகத்தியர் , கௌதமரும்,


தரங்கொண்ட வானுறையும் தேவரும் தலை வணங்கும் கங்கை தனை
சிரம் கொண்டும்,
ரவி - மதி - அக்கினியைச் சிவனுடைய
முக்கண்ணாய் ஒளிர விடும் அரண் கொண்ட ஐந்தெழுத்தில் அருள்
வடிவாம் 'வ' கரமே நான்காகும்.
யட்ச வடிவினாய், சடை முடி தரித்தவனாய்,
யாண்டும் அழியாத் தெய்வகப்
ீ பேரொளியாய்
மெச்சும் உயர் பிளகவில்லுடையோனாய்
மேவும் திக்கெல்லாம் மேனி நிறை உடை அணிவோனாய்ப்
பட்சமில்லா பரஞ்சோதி சொரூபனாய்ப் பாங்கு நிறை
ஐந்தெழுத்தில் பதிவாகும் அட்சரமாம் 'ய' கரணமய ஐந்தாகும்
அடிபணிவோம், நமச்சிவாய ஓம் .

பல சுருதி:

இவ்வைந்தெழுத்து துதியினை தவ நெறி முறையோடு எவரொருவர்


தவறாது சொல்வார் எனில் பவரோக வினை நீ ங்கிப் பாவமெல்லாம்
பறந்தோடச் சிவ போக சாம்ராஜ்யம் சிறப்புற பெற்றுய்வரே.

வட்வானல் என்றால் சமுத்திரத்தின் நடுவில் வசிக்கும் நெருப்பு.


வடவாக்கினி என்று தமிழில் கூறுவதுண்டு. அதன் உணவு சமுத்திரத்தின்
தண்ண ீர்.

ஓம் என்னும் பிரணவத்துடன் கூடிய அனுமான் மந்திர வட்வானல்


ஸ்தோத்ரத்தின் ரிஷி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, தேவதை - ஸ்ரீ வட்வானல்
ஹனுமான், சர்வ ரோக நிவாரணம், தீர்க்க ஆயுள், ஐஸ்வர்யம்,
ஆரோக்யம், சகல வித பாப நிவர்த்தி அனைத்தையும் அருளும், சீதா
ராமச்சந்திர மூர்த்திக்கு பிரியமான அனுமான் வட்வானல ஸ்தோத்ரத்தை
ஜபிக்கிறேன்..

ஓம் ஹ்ராம் ஹ்ரீம், ஓம் நமோ பகவதே என்னும் மந்திர உச்சாடனத்தால்


மஹா பராக்கிரமசாலியான, புகழ் அனைத்து திக்குகளிலும் பரவியுள்ள,
இவ்வுலகத்தின் ஹ்ருதயமாக விளங்கும் அனுமானை வணங்குகிறேன்.

வஜ்ர தேகம் பொருந்தியவர், ருத்ரனாகிய சிவபெருமானின்


அம்சாவதாரம், இலங்கையைத் தகனம் செய்தவர், உமா மகேஷ்வர
மந்திரக் கடலின் திறவுகோலாகத் திகழ்பவர், பத்து தலை இராவணனை
அழித்தவர், சீதையின் ப்ராணனை ரட்சித்து நம்பிக்கை ஸ்வாசத்தை
அளித்தவர், வாயுவின் புத்ரர், மாதா அஞ்சனையின் மைந்தன், ராம
லக்க்ஷமணர்களுக்கு மகிழ்ச்சியை கொணர்ந்தவர், வானர சேனைக்குத்
தலைவராக வழி நடத்திச் செல்பவர், சுக்ரீவனுக்கு சகாயம் செய்தவர்,
ரத்னங்களால் ஆன பர்வதத்திலிருந்து தோன்றியவர்.அத்தகைய சக்தி
வாய்ந்த வட்வானல அனுமானை வணங்குகிறேன்.

குமார பிரம்மச்சாரி (இள பிரம்மச்சாரி), கம்பீர நாத த்வனியை ஒத்த


குரலுடையவர், சர்வ பாபங்கள் மற்றும் க்ரஹ பீடைகளிலிருந்து நிவர்த்தி
அருளுபவர், அனைத்து ஜ்வர பீடைகளிலிருந்து நிவாரணம் தருபவர்,
சகல வித டாகினி துன்பங்களை அழிப்பவர், அத்தகைய சக்தி வாய்ந்த
வட்வானல அனுமானை வணங்குகிறேன்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் என்னும் மந்திர உச்சானடத்தால் ஹனுமானை


வணங்குகிறேன். வரீ தீர பராக்கிரமர், துன்பத்தால் ஏற்படும் வருத்தத்தை
நீ க்குபவர், நவக்ரஹங்கள், பூத, ப்ரேத தோஷங்களால் விளையும்
சங்கடங்களை நீக்குபவர், பூத ப்ரேத பயத்தால் விளையும் ஜ்வர தோஷம்,
கவலை, வருத்தம், சங்கடங்கள், மஹாவிஷ்ணு மற்றும் பரமேஸ்வரரின்
கோபத்தால் ஏற்படும் ஜ்வரங்களிலிருந்து நிவர்த்தி அழிப்பவர் ,
யக்ஷர்கள், ப்ரஹ்ம ராட்சஸர்கள், பூத, ப்ரேத, பைசாசம் ஆகியவைகளை
அழிப்பவர். அத்தகைய மந்த்ர சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை
வணங்குகிறேன்.

ஓம் ஹ்ராம் ஸ்ரீம் ஓம் என்னும் மந்தர உச்சாடனத்தால் மஹா


பலசாலியான ஹனுமானை வணங்குகிறேன். ஓம் ஹ்ராம், ஹ்ரீம்,
ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரோம், ஹ்ரா, ஆம் ஹாம் ஹாம் ஹாம் ஹாம் ஓம்
ஸௌம் ஏஹி ஏஹி ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் என்பது
வட்வானல ஹனுமானின் பீஜ மந்த்ரம்.

பூத பிசாசுகளின் கண்களையும், காதுகளையும் அழிப்பீர்!!!, சாகினி,


டாகினி, தீய மனிதர்கள், அனைத்து விஷங்களையும் அழிப்பீர்!!.

ஆகாயம், பூமி இவற்றை உடைப்பீர்!.

சகல மாயங்களையும் வெட்டுவர்ீ , பலமிழக்க செய்வர்ீ ,


மோஹிக்கச்செய்து எரித்து அழிப்பீர்!.

ஓம் ஹ்ராம், ஹ்ரீம் ஓம் என்னும் மந்த்ர உச்சாடனத்தால் தங்களை


வணங்குகிறேன். நவக்கிரகங்களால் விளையும் அனைத்து
கேடுகளையும் எதிர்த்து அழித்து என்னை காப்பீர்!!!.

சகல பந்த பாசங்களிலிருந்தும் எனக்கு முக்தி அளிப்பீர்!.

முடக்குவாதம், கணுக்காலில் ஏற்படும் வக்கம்


ீ , ஆகியவற்றிலிருந்து
பூரண நிவாரணத்தை அளிப்பீர்!.

கொடிய விஷ சர்ப்பங்களான அனந்தன், வாசுகி, தக்க்ஷன், கார்கோடகன்,


காளிங்கன், யக்ஷர், நீ ரில் வாழும் மிருகங்கள், குகையில் வாழும்
மிருகங்கள், இரவில் மட்டும் நடமாடும் மிருகங்கள், பகலில் மட்டும்
நடமாடும் மிருகங்கள் ஆகியவற்றால் ஏற்படும் விஷ பந்தங்களை
(தளைகள்), ஆபத்துக்களை முறியடித்து பெரும் துன்பத்திலிருந்து
காப்பீர்!!!.

ராஜ பயம், திருடர் பயம், தீய மந்த்ர, யந்தர, தந்த்ர ப்ரயோகங்களை


அழித்து என்னை காப்பீர்!.

தங்களின் பரிபூரண மந்த்ர, யந்தர, தந்த்ர ஞானத்தை எனக்கு


வெளிப்படுத்தி அருள்வர்ீ !.

சகல அரிஷ்டங்களையும்(குறைகளையும்) நாசம் செய்வர்ீ !.


அனைத்து எதிர்ப்புகளையும் அழித்து காப்பீர்!.
முடியாததை முடித்து காட்டுவர்ீ !.
ஹூம் ஃபட் ஸ்வாஹா

விபீஷணரால் இயற்றப்பட்ட ஹனுமான் வட்வானல ஸ்தோத்ரம்


முற்றிற்று.
...

மந்திர உச்சாடனத்துடன் கூடிய ஸ்தோத்ரங்களை பாராயணம்


செய்வதற்கு குரு உபதேசம் அல்லது வேதம் நன்கு கற்றறிந்த
பண்டிதர்கள் மூலம் கற்று பிறகு பாராயணம் செய்வது மிகுந்த நன்மை
பயக்கும். இல்லையெனில் தவறான மந்திர உச்சாடனம் பயன்
அளிக்காமல் போவதுடன், பிற வபரீத
ீ விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இதை கவனத்தில் கொள்ளவும்.
பீஜ மந்திரங்களுடன் கூடிய இந்த ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம்
மிகவும் சக்தி வாய்ந்தது.  ஆதலால் மிகவும் கவனத்துடன் குரு முகமாக
அல்லது வேதம் கற்றறிந்தவர் மூலம் நன்கு கற்றறிந்து, பிறகு
பாராயணம் செய்வது நல்லது.

பொதுவாக ஹனுமான் ஸ்தோத்ரத்தை எந்நாளும் செய்யலாம். இந்த


ஸ்தோத்ரத்தை வடநாட்டினர் புதன்கிழமை அன்று மட்டும் பாராயணம்
செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

வழிபடும் மார்க்கத்திற்கு ஏற்ப, பாராயண விதிகளும் இரு விதமாக


கடைப்பிடிக்கப்படுகிறது.

அவை:-

தந்திர விதி :
கடுகு எண்ணெய் விளக்கேற்றி தினம் 108 முறை ஆக 41 நாட்கள்
ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்ய, அனைத்து தடைகளும் விலகி
வேண்டியது கைக்கூடும்.

சாத்வகம்
ீ :
புதன் கிழமைகளில் சுத்த பசு நெய் அல்லது நல்லெண்ணெய்
விளக்கேற்றி அனுமானை தியானித்து 108 முறை ஸ்தோத்ர பாராயணம்
செய்ய தடைகள் விலகி, நல் ஆரோக்கியமும், செல்வமும் கைக்கூடும்
என்பது நம்பிக்கை.

மூன்று தினங்கள், மூன்று சந்தி வேளைகளிலும், (காலை 6 மணி,


மதியம் 12 மணி, மாலை 6 மணி) பக்தியுடன் பாராயணம் செய்ய,
நினைத்த காரியங்கள் நடப்பது உறுதி என நூற்பயன் கூறுகிறது.

பந்தம் அகற்றும் அநந்தகுணப்


பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலக முழுவதும் நீக்கமற


ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால்


எரிவழும்
ீ பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன்


செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய


விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வற்றிருக்கும்

நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி


வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவின்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசுஅறிவில்


பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.
நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை


யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்.
திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.

புவனேஸ்வரி கவசம்
அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்
பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண்
பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்
பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி
கணபதியே சரணம் கணநாதா ரக்ஷிப்பாய்
கந்தனுக்கு மூத்தோனே கவசத்தைத் தந்திடுவாய்
மாதாவின் கவசத்தை மங்களம் பெருகிடவே
மங்கள கணபதியே மகிழ்ந்தெனக் கருள்வரே

பஞ்சமுக கணபதியே மனமாசறுத்துத் தேசருளி
வல்லபை கணபதியே வல்வினைகளைப் போக்கி

மஹத்தான உன்னருளை மாரிபோல் பொழிந்திட்டு


பூலோகம் உய்வுபெற புவனேசி கவசமீ வாய்
புவனேச்வரித் தாயே புவனமெல்லாம் உய்வுபெற
புண்ணியத்தால் உன்நாமம் போற்றுகிறேன் கேட்டிடம்மா
என் ஹ்ருதயத் துள்ளிருந்து என்னறிவாகியே நீ
சீர்மிக்க மாதாவே சீக்கிரமே வந்திடம்மா
பாக்கியம் பலவேண்டிப் பகர்கின்றேன் கவசத்தை
பாலாம்பிகைத் தாயே பரிவுடனே வந்திடம்மா
படைப்புக்கும் முன்புள்ள பராசக்தித்தாயே கேள்
பாலன் இவனையுமே பார்த்து நீ ரக்ஷிப்பாய்

மூவர்கள் போற்றி ஏத்தும் முதல்வியே புவனேசி


தேவாதி தேவர்களும் தேவியுன்னை வழிபட்டே
சாகாவரம் பெற்று சர்வசக்தி எனப் புகழும்
லலிதாம்பிகைத் தாயே சடுதியில் வந்திடம்மா
மார்க்கண்ட மாமுனிவர் மஹான் துர்வாஸரிஷி
அகஸ்தியரிஷி போன்றோர் அன்னையுன்னை வழிபட்டே
இன்றும் இருந்துகொண்டு இவ்வுலகிற் கருளுவதை
என்னவென்று நானுரைப்பேன் என்தாயே உன் மகிமை
வாராஹி தேவியே வந்திப்பேன் உன் அடியை
பாதம் நகம் விரலைப் பார்வையால் நீ காத்திடம்மா

முழங்கால் இரண்டையுமே மலைமகளே காத்திடம்மா


தொடைகள் இரண்டையுமே துர்க்கை நீ காத்திடம்மா
பின்புறத்தை நாரஸிம்மி பிறழாது காத்திடம்மா
வயிற்றைப் பைரவியே வலியவந்து காத்திடம்மா
மார்பை சிவதூதி மாண்புடனே காத்திடம்மா
வலதிடது தோளை வைஷ்ணவியே காத்திடம்மா
மனோன்மணித்தாயே என் மார்பையுமே ரக்ஷிப்பாய்
மஹாத்ரிபுர சுந்தரி நீ மனத்தையும் காத்திடம்மா
என் ஹ்ருதயத்தில் புவனேசி நீ இருந்து ரக்ஷிப்பாய்
கழுத்தை மாஹேந்திரியும் முகத்தை காத்யாயனியும்

தலையைத் தாக்ஷாயணியும் தலைக்குள் சிவ சக்தித்தாயும்


கண் காது வாய் மூக்கைக் காமாக்ஷியும் காத்திடம்மா
பற்கள் அனைத்தையுமே பத்மாக்ஷி காத்திடம்மா
நாக்கை வாக்தேவி நயமுடன் காத்திடம்மா
புருவங்களிரண்டையுமே பூதேவி காத்திடம்மா
புருவங்களின் நடுவில் ஸ்ரீதேவியிருந்து காப்பாய்
கண்ணொளி யாயிருந்து காப்பாய் காமேச்வரித்தாயே
கண்களின் மணிகளையே காலஹந்த்ரி காப்பாய் நீ
கண்ணிமையைக் காத்திடம்மா காத்யாயனித்தாயே
அங்கங்களனைத்தையுமே ஆதிசக்தி காத்திடம்மா

என்னை நீ ரக்ஷிப்பாய் என் தாயே ரக்ஷிப்பாய்


பூரணி பூமியிலும் மேலே பவானித்தாயும்
திக்குகள் தோறுமே திருபுராம்பா காத்தருள்வாய்
மேல்கீ ழ் குறுக்கெல்லாம் மூகாம்பா ரக்ஷிப்பாய்
காத்திடம்மா காயத்ரீ கண்ணிமைபோல் காத்திடம்மா
வாராஹி கௌமாரி நாரஸிம்மி ரக்ஷிப்பாய்
சண்டிகை சக்தி கௌரி சங்கடங்கள் தீர்த்திடுவாய்
அஷ்டலக்ஷ்மித் தாயே அமர்ந்திடம்மா என்னுடனே
பிரியா திருந்திடம்மா ப்ரத்யக்ஷம் ஆகிடம்மா
புவனேச்வரித்தாயே புவனமெல்லாம் நிறைந்தவளே

புவனேசி என்றாலே புண்ணியம் பெருகிடுமே


புண்ணிய புருஷர்கள் புவனேசித் திருநாமம்
போற்றிடுவர் போற்றியுமே புண்ணியத்தைப் பெருக்கிடுவர்
திருவடியும் பற்றிடுவர் திருநாமம் ஜெபித்திடுவர்
நாமத்தின் மஹிமையினால் நமனையும் வென்றிடுவர்
ஸகல ஸெளபாக்யமும் ஸாயுஜ்ய முக்தியுமே
தந்திடுவாள் புவனேசி தரித்திரத்தை ஓட்டிடுவாள்
சாந்தியின் வடிவுகொண்ட ஸர்வேசி நமஸ்காரம்
சிரத்தை வடிவான ஸ்ரீமாதா நமஸ்காரம்
காந்தியின் வடிவான காமாக்ஷி நமஸ்காரம்

லக்ஷ்மியின் வடிவான லலிதாம்பா நமஸ்காரம்


விருத்தியின் வடிவான வ்ருத்தாம்பா நமஸ்காரம்
ஸ்மிருதியின் வடிவான ஸ்கந்தமாதா நமஸ்காரம்
தயையின் வடிவான தர்மாம்பா நமஸ்காரம்
துஷ்டியின் வடிவான துக்கஹந்த்ரீ நமஸ்காரம்
மாத்ரு வடிவான மஹாதேவி நமஸ்காரம்
மயக்க மகற்றிடுவாய் மாஹேசி நமஸ்காரம்
தேவியே புவனேசி தினமுன்னை நமஸ்கரிப்பேன்
தீராத வியாதிகளைத் தீர்த்து நீ ரக்ஷிப்பாய்
அகந்தையை ஒழித்திடுவாய் அம்மா புவனேசி

பிறவிப்பிணி தீர்ப்பாய் பிரம்மசக்தித்தாயே கேள்


என் துன்பத்தைத் துடைத்திடவே தீப துர்க்கையாய் வந்திடம்மா
துர்காம்பிகைத் தாயே துரிதத்தை விலக்கிடம்மா
அஷ்டமா ஸித்திகளை அடியேனுக் கருளிடம்மா
மாகாளியாய் வந்து மனமாயையை ஒழித்திடம்மா
சாமுண்டீச்வரியே ஸம்சயத்தைப் போக்கிடம்மா
காளிகா தேவியே காத்திடம்மா என்னையும் நீ
வாராஹியாய் வந்து வழியில் காத்தருள்வாய்
இந்திராணித்தாயே இம்மையில் நீ ரக்ஷிப்பாய்
வைஷ்ணவி மாதாவாய் வந்து வரமருள்வாய்

கௌமாரித் தாயே நீ காத்திடம்மா உள்ளிருந்து


ப்ரஹதாம்பிகைத் தாயே பிரமையையும் போக்கிடுவாய்
துன்பம் துயரத்தைத் துடைத்துக் காப்பாற்றிடவே
காமக் குரோதத்தைக் கலக்கி விரட்டிடவே
சத்துருவாம் பகைவனையும் சம்சய அரக்கனையும்
துஷ்டர்களை விரட்டிடவே வனதுர்கா வந்திடம்மா
பத்துத் திக்கிலுமே பத்ரகாளி காத்திடம்மா
மாதா பாலாம்பிகையே மாயையைப் போக்கிடம்மா
சும்ப நிசும்பனைப் போல் அகந்தையை அழித்திடம்மா
ஸிம்ம வாஹனத்தில் ஜய துர்க்கே வந்திடம்மா

ஜகத் ஜனனி ஜகன்மாதா ஜய புவனேசித்தாயே


மமதையில் மயங்காமல் மாதங்கி காத்திடுவாய்
அனைத்தையும் கொடுக்கும் அன்னபூர்ணேச்வரியே
குறையற்ற கல்வியைக் கொடுத்திடுவாய் கலைவாணி
மஹிஷாசுரனையும் மற்றுமுள்ள தூம்ரனையும்
சண்டனையும் முண்டனையும் ரத்தபீஜாசுரனையும்
அகம்பாவ அசுரர்களை அழித்தவம்மே ஸ்கந்தமாதா
சாமுண்டீஸ்வரியே சந்தோஷமெனக்கருள
சக்தியாய் வந்திடம்மா புவனாம்பிகைத் தாயே
சத்துசித்தின் வடிவான சித்தேச்வரித் தாயே
ஜயந்தி மங்களா காளி ஜயஜய போற்றி போற்றி
பத்ரகாளி கபாலினியே பராபரே போற்றி போற்றி
பூரண புராதனியே புவனேசி போற்றி போற்றி
அகிலாண்டேச்வரியே அன்னையே போற்றி போற்றி
ஆதிபராசக்தியான ஆசோபனா போற்றி
கள்ளம் கபடம் நீ க்கும் காமாக்ஷியே போற்றி
கருணைக் கடலான வம்மே காத்யாயனியே போற்றி
ஆயிரம் நாமமுள்ள ஆதி புவனேசி போற்றி
சாந்தி சுகம் தருவாய் ஷண்முகன் தாயே போற்றி
ஹயக்ரீவர் போற்றி ஏத்தும் ஆதிலலிதா போற்றி

சிரத்தா பக்திதரும் சிவகாமி போற்றி போற்றி


கலிதோஷம் அகற்றுவிப்பாய் கல்யாணி போற்றி போற்றி
ஏகாக்ஷரம் தருவாய் வேதவேத்யா போற்றி போற்றி
ஈசனுள் குடியிருக்கும் புவனேசி போற்றி போற்றி
லக்ஷ்மி வாணி போற்றும் லலிதாம்பா போற்றி போற்றி
ஹ்ரீங்கார ரூபமான புவனமாதா போற்றி போற்றி
ஹரிப்ரம்மேந்திரர்கள் அகத்துள்ளோய் போற்றி போற்றி
ஸர்வேசி ஸாக்ஷிரூபே ஸர்வக்ஞே போற்றி போற்றி
ககாரார்த்தா கபாலினி காலஹந்த்ரி போற்றி போற்றி
ஹம்சமந்த்ர மயமான ஹம்ஸவதி போற்றி போற்றி

லகாராக்ய லதாபூஜ்யா ராஜேச்வரி போற்றி போற்றி


ஹ்ரீம் மத்யா ஓங்காரி ஜகன்மாதா போற்றி போற்றி
ஸநகாதி முநித்தேயே ஸச்சிதானந்தே போற்றி போற்றி
கல்யாண ீ காதிவித்யே கமலாக்ஷி போற்றி போற்றி
லகாரிண ீ லப்தரூபே லப்தசக்தே போற்றி போற்றி
ஹ்ரீங்கார மூர்த்தித் தாயே புவனேசி போற்றி போற்றி
பஞ்ச தசாக்ஷரித்தாயே பவநாசினி போற்றி போற்றி
ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ சீருடனே வந்திடம்மா
ஸிம்ஹாஸனேச்வரியே சீக்கிரமே வந்திடம்மா
சிதக்னிகுண்ட ஸம்பூதா சித்ரூபி வந்திடம்மா

ஸர்வாபரண பூஷிதையே ஸர்வேசி வந்திடம்மா


சிவாயெனப் பெயர்கொண்ட சிந்தாமணி வந்திடம்மா
மங்களத்தைச் செய்திடம்மா மாதா புவனேஸ்வரியே
ப்ரும்ம விஷ்ணு ருத்ரன் ஈசானன் நால்வருடன்
ஸதாசிவனையுமே பீடமாக்கிக் கொண்ட சிவே
ஐவரான மஞ்சத்தில் அமர்ந்து ஜோதியானவளே
கதம்பவனவாஸினியே காமகோடி வரமருள்வாய்
சாக்தப் பிரணவத்தை சடுதியில் தந்திட்டு
கல்மஷங்களைப் போக்கிக் கலிதோஷ மகற்றிடுவாய்
நகக்கண் வழியாக நாரணனைச் சிருஷ்டித்தோய்
ஹரிஹர ப்ரம்மாக்கள் அனன்யமாய்த் தொழுதேத்தும்
தேவர்களும் முக்தர்களும் தினமும் தொழுதேத்தும்
ஸித்தர்களும் பக்தர்களும் ஜன்மமெல்லாம் தொழுதேத்தும்
புவனேஸ்வரித்தாயே போதுமம்மா இப்பிறவி
மறுபிறவி இனிவேண்டாம் மாதா புவனேஸ்வரியே
பிறவிப்பயன் தந்த புவனேஸித் தாயே கேள்
பற்றினேன் திருவடியைப் பற்றறுப்பாய் புவனேசி
புவனேசி உன்நாமம் பிணியறுக்கும் திருநாமம்
என்றுணர்ந்தேன் உன்னருளால் என்தாயே புவனேசி
மூலமந்த்ராத்மிகையே முக்தியும் தந்திடம்மா

பக்தனுக்கு வசமாகும் பார்வதியே வந்திடம்மா


பயத்தைப் போக்கிவிடும் பரதெய்வமே வருவாய்
நிர்மலா நித்யா நிராகுலா வந்திடுவாய்
மோகநாசினித்தாயே மோகத்தைப் போக்கடிப்பாய்
பாபநாசினி தாயே பாபத்தைப் போக்கிடுவாய்
கோபத்தைப் போக்கடிக்கும் க்ரோத சமனித்தாயே
லோபித்தன மகற்றும் லோபநாசினியே கேள்
சந்தேகம் அகற்றுவிக்கும் ஸம்சயக்ன ீ கேட்டிடம்மா
பாபநாசினி மாயே பந்தத்தைப் போக்கிடம்மா
பேதபுத்தியை அகற்றும் பேதநாசினியே கேள்

மரணபய மகற்றிடுவாய் ம்ருத்யுமதனித் தாயே


சுகத்தைத் தந்தருள்வாய் சுகப்ரதா சுகமருள்வாய்
துராசாரத்தை யோட்டும் துராசாரசமன ீ கேள்
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வ மந்த்ரஸ்வரூபிணியே
மாஹேச்வரீ மஹாதேவி மஹாலக்ஷ்மீ சுந்தரியே
மஹாரூபே மஹாபூஜ்யே மஹாபாதக நாசினியே
பானுமண்டல மத்யஸ்தே பைரவி பகமாலினியே
பத்மாஸனே பகவதி பத்மநாப சகோதரியே
புருஷார்த்த ப்ரதே பூர்ணே போகினி புவவேஸ்வரியே
தத்வாஸனே தத்வமயீ தத்துவத்தை உணர்த்திடுவாய்

குமாரகணநாதாம்பா அஹங்காரம் அகற்றிடுவாய்


ராஜ ராஜேச்வரித் தாயே ராஜ்யலக்ஷ்மீ வரமருள்வாய்
ஸச்சிதாநந்தரூபிணியே ஸதாநந்தம் தந்திடுவாய்
ஸ்ரீசக்ர ராஜநிலயே ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரியே
ஸ்ரீலலிதாம்பிகைத் தாயே சீக்கிரமே வரமருள்வாய்
வரமருள்வாய் வரமருள்வாய் வந்திப்பேன் புவனேசி
புவனேசி திருவடியைப் புண்ணியத்தால் பற்றிவிட்டேன்
சிக்கெனப் பற்றிவிட்டேன் புவனேசி உன்னடியை
பற்றெல்லாம் அறுத்திடுவாய் பராசக்தி புவனேசி
பிறந்து பிறந்திளைத்தேன் பிறவாவரமருள்வாய்

துன்பமெல்லாம் விலக்கித் துரியத் திருத்திடுவாய்


ஞான வைராக்கியமும் நான்மறை ரகசியமும்
ஆகம புராணத்தின் அகத்துள்ள ரகசியமும்
வேதாந்த ரகசியமும் விளக்கிடுவாய் புவனேசி
பிறவிப்பிணி அகற்றிப் பிரம்மமய மாக்கிடம்மா
எல்லாம் சிவமெனவே எனக்கு நீ அருளிடுவாய்
நெஞ்சத்துள் நீ இருந்து நித்ய முக்தனாக்கிடம்மா
அல்லும் பகலும் அடியேன் இவன் உன்னையன்றி
மற்றோர் நினைவின்றி மஹராஜி போற்றுகிறேன்
போற்றுகிறேன் போற்றுகிறேன் புவனேசி பொன்னடியை

தலைமேலாம் தளத்தில் தந்திடம்மா தரிசனமும்


தரிசனம் தந்திட்டுத் தரித்திரத்தை ஒழித்திடம்மா
உள்ளத்துள்ளேயிருந்து உண்மையினை யுணர்த்திடம்மா
திரிபுர சுந்தரித்தாயே தீர்த்திடுவாய் வினைகளையும்
நான் உன்னைவிடமாட்டேன் நவின்றிடுவாய் உபதேசம்
ஹ்ரீங்காரம் தந்துதாயே என்னில் உனைக்காட்டி
உன்னில் எனைக்காட்டி உய்விப்பாய் என்னையும்நீ
ஆத்ம சக்தியாயிருந்து அன்புடன் ரக்ஷிப்பாய்
அறம் பொருள் இன்பத்தை அம்மே கொடுத்திடுவாய்
வட்டையும்
ீ தந்திட்டு விதியெல்லாம் விரட்டிடுவாய்

பேரின்ப விடருளிப் பிறவாவரம் தந்து


ப்ரம்மானந்தத்தோடு பிரியாதிருந்திடச் செய்
திடம்பெறவே உன்னை நானென்றுணர்ந்திடச் செய்
புவனத்தைப் பொய்யென்று புவனேசி காட்டிடம்மா
விருப்பு வெறுப்பற்று என்னை இருத்திடுவாய்
நிராசையான வட்டில்
ீ என்னையும் நீ நிறுத்திடம்மா
உள்ளும் புறமும் உன்னையே காட்டிடம்மா
காணும் காட்சியெல்லாம் காந்திமதி நீ என்றும்
ஓசை ஒளியெல்லாம் உமாதேவி தானென்றும்
ஸ்தாவர ஜங்கமமெலாம் ஜகத்தாத்ரீ நீ யென்றும்

புவனேசி உணர்த்திடுவாய் புனிதனாக மாற்றிடுவாய்


என்னையுமே காத்திடுவாய் என்னம்மே புவனேசி
நின்றும் இருந்துமே நின்நாமம் ஏத்திடுவேன்
நடந்தும் கிடந்துமே நானுன்னைப் போற்றிடுவேன்
இமைப்பொழுதும் உன்நாமம் மறந்திடமாட்டேன் நான்
என்நினைவெல்லாம் நீ யாக நின்றிடுவாய் புவனேசி
என் உணவெல்லாம் உனக்கேற்ற நைவேத்யமாகுமம்மா
நான் நடப்பதே பிரதக்ஷிணமாய் நம்பிவிட்டேன் தாயே கேள்
என் உடலாட்டமெல்லாம் உனக்கருளும் முத்திரையாம்
என் உயிருக்கும் உயிரான ஆத்மசக்தி நீ யன்றோ

அங்கிங்கெனாதபடி எங்கும் சக்தி மயம்


அழகிலும் அன்பிலும் அறிவிலும் சக்திமயம்
அனைத்தும் பராசக்தி அணுக்களெல்லாம் சக்திமயம்
சக்தியில்லாத தெய்வம் சவமென் றுணர்ந்திடடா
தெய்வங்களுக்குள்ளே தேவி யிருப்பதாலே
சக்தியுள்ள தெய்வமென்று சடுதியில் சொல்லுகிறார்
ஹரிஹர ப்ரம்மாவும் அன்புள்ள தேவர்களும்
ரிஷிகளும் ஞானிகளும் ஸித்தர்களும் பக்தர்களும்
சக்தியைத் தொழுவதாலே சர்வசக்தியும் பெற்றார்
புவனேசி மாதாவை முழுமனத்தோடு நீயும்

அகத்துள் துதித்தேத்தி அன்புடன் சரணடைந்து


இடைவிடாது உனதகத்துள் இக்கணமே இருத்தி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் என்று உறுதியாக ஏத்தியும் நீ
மலைபோல் இருந்திட்டால் மஹத்துவம் புலப்பட்டு
தன்னில் புவனசக்தி தரிசனம் காணலாமே
உன்னில் புவனசக்தி ஒன்றையே கண்டிடலாம்
புவனமெல்லாம் புவனசக்தி புலப்படுமுன்னுள்ளே
அகமும் புறமும் ஆதிசக்தி காண்பதற்கு
அன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருந்திடடா
அன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருத்துவோர்க்கு

அழகெலாம் சக்தியாகும் அன்பெலாம் சக்தியாகும்


அறிவெலாம் சக்தியாகும் அனைத்துமே சக்தியாகும்
சத்தியம் சக்தியாகும் ஞானமும் சக்தியாகும்
சாந்தம் ஆனந்தம் சக்தியாய்த் தோன்றிவிடும்
ஆனந்தம் வேண்டிநீ யும் ஆதிசக்தி புவனையையும்
அன்புடன் பற்றிடடா அன்னை அருள் கிட்டிடுமே
பகுத்தறிவுள்ள நீயும் பற்றிடடா புவனையையும்
அனைவருள்ளிருக்கும் ஆன்மா புவனேசி
அதுவே நானென்று அகத்துள் உணர்ந்திடலாம்
அழிவிலாச் சக்தி ஆன்ம சக்தியாய்

அகத்துள்ளே உண்மையாய் ஆன்மாவாய் இருப்பதை


இம்மையில் உணர்ந்து நான் இன்புற்றிருப்பதற்கு
அமைதியாய் வாழ்வதற்கு அருள்வாய் வரமெல்லாம்
அருட்குலத் தாயே ஆன்ம சக்தியே
அற்புதமாய் நான் வாழ அடியனுக்கருள்வதுடன்
அம்மையே ஆன்மா அதுவே நானும்
அதுவே நீ யும் அனைத்தும் அதுவென்று நீ உணர்த்து
மனமே! அம்மையின் உருவம் அன்பெர்பர் ஞானிகள்
ஸித்தர்கள் அன்பையே எனதம்மை யென்பர்
அன்பின்றி உலகில் வளமில்லை மறவாதே

பார்க்குமிடமெல்லாம் அன்பினைக் கண்டிட


பராசக்தியாம் அன்பைப் பற்றிடு இக்கணமே
பாவனையுடன் நீயும் அடைக்கலமாகி விடு
பார்க்கலாம் உனக்குள் அற்புதக் கடவுளை
அன்பே தானாய் அகத்துள் ஆன்மாவாய்
அம்மையே உணரச் சரண மடைந்திடப்பா
உனதறிவான உனது ஆன்மாவை
உனக்குள் நீ உணர உடனடியாக
இம்மையில் இக்கணமே உண்மையாகச் சரணடைவாய்
மாதாவின் அருளால் மாசற்ற உனதான்மா

சுயம் ஜோதியாய் சுத்தப் பிரம்மமாய்


அகத்துள் உணரலாம் நம்பிடுவாய் மனமே
இச் ஜகத்தையெல்லாம் அருட்குல மாக்கிடவும்
நல்லறிவாற்றலும் நலந்தரு ஞானமுடன்
பூரண மனிதனாய்ப் புவனை நீ எனை ஆக்கி
பாக்கியத்தோடு பாரெல்லாம் புகழ்பெறப்
புனிதனாக்கி என்னைப் பொலிவுறச் செய்குவாய்
வேதவேதாந்த வாழ்வும் வரத்தோடறமும்
ீ ஈந்து
நல்ல நீதியோடருளும் தந்து
நன்நெறியில் எனை இருத்தி வைத்து

புத்தியில் அமைதியோடு அன்பெனும் அழகும் தந்து


அருட்குலமோங்கும் தொண்டை இடைவிடா தருளித்தாயே
ஈதலில் இன்பம்தந்து இன்பத்தில் இறையருள் காட்டிச்
சாதலும் பிறப்புமில்லா வரத்தையும் தந்திட்டென்னை
பூரண ப்ரம்மஞானம் பொருந்திய வாழ்வையருளி
தான்தானாய் நிலைத்திடவே நீ தந்திடம்மா
மனமேகவசத்தை தினமுமோதி காயத்தைசுத்திசெய்து
கவசத்தைப் பொருள் உணர்ந்து கருத்தோடு ஓதிவிட்டால்
கள்ளம் கபடறுக்கும் காமக் கசடறுக்கும்
வினைப்பயனையும் விரட்டும் புவனேசி கவசம் நம்பு
பகுத்தறிவுள்ள சீடா பற்றிடடா கவசத்தை
கவசத்தை ஓதியும் நீ கலிதோஷ மகற்றிடடா
கவச பாராயணத்தால் கள்ளமில்லா வுள்ளமாகும்
கள்ளமில்லா வுள்ளத்தில் காணலாமே புவனையையும்
மனக்கோட்டை கட்டாமல் புதுக்கோட்டை வந்திடடா
புதுக்கோட்டையுள் நீயும் புவனேசி கண்டிடடா
பற்றிடடா புவனேசி பாதமதைப் பற்றிடடா
பற்றிவிட்டால் பற்றற்ற பரசுகமும் கிட்டிவிடும்
ஆனந்தமாகவே நீ அகத்துள் மாறிடுவாய்
அன்னையின் கவசத்தை அன்புடனே நெக்குருக

ஆசாரநிஷ்டையுடன் அனுதினமும் ஓதுவரேல்



அறம் பொருள் இன்பம் வடு
ீ அனுக்ரஹித்தாட் கொண்டிடுவள்
அதிசுலபமாகவேதான் அன்னையுமே முன்னிற்பள்
மாதாவின் கவசமிதை மனமுருகி ஓதுவரேல்

அஷ்ட லக்ஷ்மியும் அகலாதிருந்திடுவள்
மறவாது ஓதிட்டால் மஹராஜி அருளுண்டாம்
பொருளுண்டாம் மாதாவின் புண்ணிய லோகமுண்டு
ஆசார ஒழுக்கமுடன் அன்பு நேமநிஷ்டையுடன்
சிரத்தா பக்தியுடன் ஜகன்மாதா கவசமிதை
ஒருமனத்தோ டோதுவரேல்
ீ மாபாவம் மறைவதுடன்

அன்புருவாம் அம்மையை அகத்துள் உணர்ந்திடலாம்


மாதாவும் முன்வந்து மஹத்தான வரமருள
சொன்னபடி செய்து நீ சுகமடைவாய் மனமே கேள்.

ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி

- Courtesy: http://www.adiyaar.com/Bhuvaneswari.aspx
POSTED BY  SRINIVASAN  AT  11/12/2013 11:30:00 PM 

EMAIL THISBLOGTHIS!SHARE TO TWITTERSHARE TO FACEBOOKSHARE TO PINTEREST

SRINIVASAN
ச ி வ ன ா ல் ச ி வ னை த் தே டி ச ி வ ச க் த ி ஐ க் ய ம ா க ச ி வ ன ரு ளை ந ா டி அ லை யு ம்
ச ி வ ப க் க ி ரி

NO COMMENTS:

POST A COMMENT

Newer PostOlder PostHome

Subscribe to: Post Comments (Atom)

WHY BLOG?

வேத  உபநிஷத்  மற்றும்  பெரியோர்களால்  கண்டுகொண்ட  ஆழமான  வி


ஷயங்களை,  அருளாளர்களின்  கூற்றுகளை  சொல்லக்கேட்டும்,  பார்த்தும்
,  படித்தும்,  உணர்ந்தும்,  அந்த  உணர்விலிருந்து
என்  நினைவுக்கு  வந்தவை .....
(  என்  அனுபவங்கள்  இல்லை )

BLOG ARCHIVE

 ►  2019  (1)
 ►  2018  (27)
 ►  2017  (41)
 ►  2015  (56)
 ►  2014  (33)
 ▼  2013  (219)
o ►  December  (20)
o ▼  November  (15)
 பவானித்வம்
 அம்பாளின் அநுக்கிரஹம்
 திருவிளக்கு பூஜை
 மஹா ப்ரத்யங்கரா மந்திரம்
 ஸ்ரீவைபவ லக்ஷ்மீ
 “ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்”
 மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்
 குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை
 தேவி மூகாம்பிகை
 ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்
 ஸ்ரீ குரு கீ தை ...
 ஆதி சங்கரரும் அபிராமி பட்டரும் ...
 ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்
 புவனேஸ்வரி கவசம்
 ராமன், ராமபத்ரன், ராமசந்திரன்

o ►  October  (7)
o ►  September  (13)
o ►  August  (69)
o ►  July  (30)
o ►  June  (14)
o ►  May  (26)
o ►  April  (25)
 ►  2012  (45)
 ►  2010  (3)
 

கோர ரூபே மஹா ப்ரத்யங்கரா, ஸர்வ ஷத்ரு பயங்கரீ |


பக்த்யேப்யோ வரதே தேவ ீ த்ராஹிமாம் சரணாகதம் ||
இம்மந்திரத்தை முவ்வேளையும் 3 முதல் 12 முறை ஜெபிக்க
ஷத்ருஜெயம் நல்கும்.
அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,

துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்

தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த

மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க

எல்லாவற்றிற்கும் தலைவனாகியும் ஞானனந்த

வடிவினராகியும் துகளாகிய அணுதன்மையாகியும்

மலைபோலப் பெரியதாகியும் பூமியுமாகியும்

தகுதியுடன் ஆன்ம கோடிகளைத் தாங்குகின்ற கடவுள் இந்த

உலகத்திற்குத் தீங்கு நேரிடாவண்னம் அருள் செய்து என்னைக் காக்கக்கடவர்

குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித்

தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன்

நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய

விரைபுனல் அதனுள் வழ்ந்து


ீ விளிந்திடாது எம்மைக் காக்க.

ஒலிக்கா நின்ற நீ ருருவம்கொண்டு பயிர்கள்தோறும் பயன்

கொடுத்து இவ்வுலகில் இருக்கும் உயிர்களெல்லாம் தளர்வடையாவண்ணம்

காப்பவனாகிய கடவுள் வரிசை வரிசையாய் வருகின்ற மேகங்கள் சேர்ந்து பெரிய

மலைகளில் மழை பொழியப் பெருக்கெடுத்தோடும் தண்ண ீரில் வழ்ந்து


ீ இறவாத

வண்ணம் எங்களைக் காக்கக் கடவர்.

கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீயால்

அடலைசெய்து அமலை தாளம் அறைதர நடிக்கும் ஈசன்

இடைநெறி வளைதாபத்தில் எறிதரு சூறைக் காற்றில்

தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க

யுகத்தின் இறுதியில் எல்லா உலகத்தையும் தெய்வத்

தன்மையுள்ள தீயினால் சாம்பராகச் செய்து, பார்வதி தேவியார்

தாளம் போட நடனமாடும் பரமசிவன் வழியின் நடுவில் வளைந்து

கொள்ளும் தீ வெப்பத்துடன்

வசுகின்ற
ீ சூரைக் காற்றினால் தடைபடாமல் பெரிய கடல் சூழ்ந்த
இவ்வுலகத்தில் எம்மைக்காக்கக் கடவர்.

தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்

பாயுமான் மழுவினோடும் பகர் வரத அபயங்கள்

மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின்னனைய தேசும்

ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்க

பரிசுத்தமுள்ள முக்கண்களும் ஒளிவிடாநின்ற பொன்னிறமுள்ள நான்கு

திருமுகங்களும் பாய்கின்ற மான்

மழுவினுடன் சொல்லுகின்ற வரதமும் அபயமும்

பொருந்திய திண்ணிய நான்கு புயங்களும் விளங்குகின்ற

மின்னலை யொத்த திருமேனி ஒளியுமுள்ள தற்புருட மூர்த்தியானவர்

கிழக்கு திசையில் எம்மைக் காக்கக் கடவர்.

மான்மழு சூலம் தோட்டி வனைதரு நயன மாலை

கூன்மலி அங்குசம் தீத் தமருகம் கொண்ட செங்கை

நான்முகம் முக்கண் நீ லநள் இருள் வருணம் கொண்டே

ஆன்வரு மகோர மூர்த்தி தென்திசை யதனில் காக்க

மான், மழு, சூலம், கோடரி புனையப்பட்ட உருத்திராக்க மாலை,

வளைவான அங்குசம், தீ, தமருகம் என்னும் இவைகளைத் தாங்கிய

செங்கைகளும், நான்கு திருமுகங்களும், முக்கண்களும்,

நீ லம் போலச் செறிந்த இருள் நிறமும் கொண்டு இடபத்திலேறி

வருகின்ற அகோரமூர்த்தியானவர் தெற்குத் திசையில் எம்மைக் காக்கக் கடவர்.

திவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க

அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தொடு அபயம் தாங்கக்

கவின் நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்

தவளமா மேனிச் சத்தியோ சாதன் மேல் திசையில் காக்க

தாவுகின்ற மானையும் உருத்திராக்க மாலையினையும் இரண்டு கைகள் தாங்கவும்

ஒளிவிடாநின்ற இரண்டு திருக்கைகள் அபய வரதம் தாங்கவும், அழகு நிறைந்த நான்கு

முகங்களும் மூன்று கண்களும் விளங்குகின்ற சத்தியோசாத மூர்த்தியானவர் மேற்குத்

திசையில் எம்மைக் காக்கக் கடவர்.

கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்

அறைதரும் தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப்


பொறைகொள் நான்முகத்து முக்கண் பொன்னிற மேனியோடும்

மறைபுகழ் வாமதேவன் வடதிசையதனில் காக்க

உதிரம் தோயும்படியான மழுவாயுதத்தையும்,

மானையும், அபய வரதங்களையும் உருத்திராக்க மாலையினையும் சிவந்த நான்கு

திருக்கைகளிலும் தாங்கிச் சாந்தமுடைய நான்கு திருமுகங்களிலும் மும்மூன்று

திருக்கண்களும் பொன்னிற மேனியுமுள்ள வேதங்களால் புகழத் தக்க வாம தேவ மூர்த்தி

வடக்குத் திசையில் காக்கக் கடவர்.

அங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள்

சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்

திங்களின் தவள மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற

எங்கள் ஈசான தேவன் இருவிசும்பு எங்கும் காக்க

அங்குசம், கபாலம், சூலம், அழகிய வரதாபயங்கள், சங்கம்,

மான், பாசம், உருத்திராக்கம், தமருகம் என்னும் இவைகளைப்

பத்துக் கைகளிலும் ஏந்திச் சந்திரனைப் பொல வெண்மை நிறங்கொண்ட

திருமேனியும் ஐந்து திருமுகங்களும் பெற்றுள்ள எங்கள் ஈசான

மூர்த்தியானவர் பெரிய ஆகாயமெங்கும் காக்கக் கடவர்.

சந்திர மவுலி சென்னி தனிநுதல் கண்ணன் நெற்றி

மைந்துறு பகன்கண் தொட்டோன் வரிவிழி அகில நாதன்

கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி

அந்தில் செங்கபோலம் தூய ஐம்முகன் வதனம் முற்றும்

சந்திர சேகர மூர்த்தியானவர் எங்கள் தலையினையும்,

ஒப்பற்ற நெற்றிக் கண்ணையுடையவரான பாலலோசன மூர்த்தியானவர் நெற்றியினையும்,

வலிமிக்க பகன் என்னும் சூரியனுடைய கண்ணைப் பறித்த மூர்தியானவர் நீ ண்ட கண்களையும்,

விசுவநாதரானவர் பூங்கொத்தின் மணத்தை அறியதக்க மூக்கினையும்,

வேதமருளிச் செய்த மூர்த்தியானவர் காதுகளையும், கபாலியென்பவர் செவ்விதாகிய

கபோலத்தையும், பரிசுத்தமுள்ள பஞ்சானன மூர்தியானவர் முகத்தையும் காக்கக் கடவர்.

வளமறை பயிலும் நாவன்நா, மணி நீ ல கண்டன்

களம் அடு பினிகபான கையினை தரும வாகு

கிளர்புயம் தக்கன் யாகம் கொடுத்தவன் மார்பு தூய

ஒளிதரு மேருவில்ல உதரம் மன்மதனைக் காய்ந்தோன்


வளப்பமுள்ள வேதங்களைப் பயில்கின்ற நாவுள்ள மூர்த்தியானவர்

நாவினையும், நீ லகண்ட மூர்த்தியானவர் கழுத்தினையும்,

போர்செய்யத் தக்க பினாகம் என்னும் வில்லேந்திய பினாகபாணியானவர் கைகளையும்,

தர்மவாகு என்பவர் விளங்குகின்ற புயங்களையும், தக்கன் யாகத்தை அழித்த

மூர்த்தியானவர் மார்பினையும், நல்ல ஒளியைத் தருகின்ற மேருவில்ல என்னும்

மூர்த்தியானவர் வயிற்றினையும் காமதகன மூர்த்தியானவர் காக்கக் கடவர்.

இடைஇப முகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும்

புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம்

படர் சக தீசன் சானு பாய்தரும் இடப கேது

விடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம் காக்க

(காமதகன மூர்த்தி) இடையினையும், கணபதி பிதாவாகிய மூர்த்தியானவர் நாவினையும்,

நம்முடைய ஈசுவரனானவர் புடை பரந்த அரையினையும், குபேரன் தோழனாகிய

மூர்த்தியானவர் ஒப்பில்லாத தொடையினையும், பரந்த சகதீசன் முழங்கால்களையும்,

பாய்கின்ற ரிஷபகேதுவான மூர்த்தி கணைக்காலையும், பொருந்திய விமல மூர்த்தியானவர்


செவ்விய

பாதத்தையும் தனித்தனி காக்கக் கடவர்.

வருபவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம்

பொருவரு வாம தேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்

செருமலி மழுவாள் அங்கைத் திரியம்பகன் நாலாம் யாமம்

பெருவலி இடப ஊர்தி பிணியற இனிது காக்க

வேதங்களில் வழங்கப்படுகின்ற பவன் என்னும் திருப்பெயருள்ள

மூர்த்தியானவர் முதற் சாமத்திலும், மகேசுவரன் பின்

இரண்டாஞ் சாமத்தும். ஒப்பிலாத வாமதேவர் மூன்றாம்

சாமத்தும், போருக்கேற்ற மழுவாயுத மேந்திய திருக்கரத்தையுடைய

திரியம்பகர் நாலாம் சாமத்தும், மிக்க சரீரவன்மையைப் பிணியால் சோர்வுறாதபடி

இடபவாகன மூர்த்தியுமாகத் தனித்தனி காக்கக் கடவர்.

கங்குலின் முதல் யாமத்துக் கலைமதி முடித்தோன் காக்க

தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க

பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க

பங்கமில் நாலாம் யாமம் கவுர்¢தன் பதியே காக்க


இரவின் முதற் சாமத்தில் பிறைசூடிய மூர்த்தி காக்கக் கடவர்.

இரண்டாம் சாமத்தில் கங்காதர மூர்த்தி காக்கக் கடவர்.

மூன்றாம் சாமத்தில் சடாமகுட மூர்த்தியானவர் காக்கக் கடவர்.

கெடுதலில்லாத நாலாஞ்சாமத்தில் உமாபதி காக்கக் கடவர்.

அனைத்துள காலம் எல்லாம் அந்தகன் கடிந்தோன் உள்ளும்

தனிப்பெரு முதலாய் உள்ள சங்கரன் புரமும் தாணு

வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும்

நினைத்திடற் கரிய நோன்மை சதாசிவ நிமலன் காக்க

எல்லாக் காலங்களிலும் கால சங்கார மூர்த்தியும் உட்புறத்தில்

ஒப்பற்ற முதற்காரண கர்த்தாவாகிய சங்கர மூர்தியும்,

வெளிப் புறத்துத் தாணு மூர்த்தியும். நடுப்புறத்துத் தூய பசுபதியும்,

மற்றவிடம் எங்கும் நினைப்பதற்கரிய சதாசிவ முர்த்தியுமாகத்

தனித்தனி காக்கக் கடவர்.

நிற்புழி புவனநாதன், ஏகுழி நிமலன், மேனி

பொற்புறும் ஆதி நாதன், இருப்புழி பொருவி லாத

அற்புத வேத வேத்தியனும், துயில்கொள்ளும் ஆங்கண்

தற்பர சிவன், விழிக்கின் சாமள ருத்திரன் காக்க

நிற்குமிடத்துப் புவன நாதரும், நடக்குமிடத்து நிர்மல மூர்தியும்,

உடலழகினை ஆதி மூர்த்தியும், இருக்குமிடத்து ஒப்பிலாத அற்புதமூர்த்தியாகிய

வேத வேத்தியனும், நித்திரை செய்யுமிடத்துத் தற்பர சிவனும்,

விழிக்கும் போது சாமள ருத்திரனுமாகத் தனித்தனி காக்கக் கடவர்.

மலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும்

சிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க

கொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப்

பலபட நடிக்கம் வரீ பத்திரன் முழுதும் காக்க

மலை முதலாகிய துருக்கங்களில் புராரி காக்கக் கடவர்,

காட்டினில் வில்லேந்திய வேட வடிவ மூர்த்தி யானவர் நீ ங்காமலிருந்து

காக்கக் கடவர். சர்வசங்காரம் உண்டாகும் பிரளயகாலத்தில் அண்டகோடிகள்

எல்லாம் நடுங்கும்படி நடனஞ் செய்கின்ற வரபத்திரரானவர்


ீ முழுவதுங் காக்கக் கடவர்.

பல்உளைப் புரவித் திண்தேர் படுமதக் களிறு பாய்மா


வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்தியும் எண்ணில்கோடி

கொல்லியல் மாலை வைவேல் குறுகலர் குறுகும் காலை

வல்லியோர் பாகன் செங்கை மழுப்படை துணித்து மாய்க்க

கழுத்து மயிரினையுடைய குதிரைகள் கட்டிய பல தேர்கள், மத நீர் ஒழுகும் யானைகள்,

தாவிச் செல்லுங் குதிரைகள், வில்லேந்திய பதாதியர் யென்னு மிவைகள்

சேர்ந்து நெருங்கிய அளவில்லாதவர்களாய்ப் போரில்

வெற்றிமாலை யணிந்த கூர்மையான கொலை வேலுள்ள பகைவர்களைப்

பார்வதிபாகன் திருக்கரத்தில் இருக்கும் மழுவாயுதம் துணித்துக் காக்கக் கடவர்.

தத்துநீ ர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப்

பைத்தலை நெடிய பாந்தள் பல்தலை அனைத்தும் தேய்ந்து

முத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம்

பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க

படமாகிய தலைகளையுடைய ஆதிசேடன் தாவுகின்ற நீரையுடைய கடலாகிய

ஆடை உடுத்த பூமியைத் தாங்கிய பல தலைகள் தேய்ந்து மூன்று தலைகளைப் படைத்ததை

யொக்கும் பலமும் வெவ்விய தீயையுங்

கொண்ட சூலமானது பொய்த்தொழிலையுடைய கள்வர்களைப்

போர்புரிந்து அழித்து இனிதாகக் காக்கக் கடவர்.

முடங்குளை முதலாய் நின்ற முழுவலிக் கொடிய மாக்கள்

அடங்கலும் பினாகம் கொல்க என்று இவை அனைத்தும் உள்ளம்

திடம்பட நினைந்து பாவம் தெறும் சிவகவசம் தன்னை

உடம்படத் தரிப்பை யானால் உலம்பொரு குலவுத் தோளாய்

திரண்ட கல்லையொத்துக் குவிந்த தோளையுடையவனே!

சிங்கம் ஆதியான மிக்கப் பலமுள்ள கொடிய மிருகங்களையெல்லாம்

பினாகம் என்கிற வில்லானது கொல்லக் கடவது என்றிவ்வாறு எல்லாவற்றையும்

இருதயத்தில் உறுதிகொள்ளத் தியானித்துப் பாவங்களை வெல்லும் சிவ கவசத்தை

அணிந்து கொள்வாயானால்.

பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்

அஞ்சலில் மறலியும் அசூசி ஆட்செயும்

வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்

தஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால்


பஞ்சமா பாதகங்கள் நீ ங்கும், பகைகள் கெட்டுப்போம்,

ஒருவருக்கும் பயங்கொள்ளாத இயமனும் உனக்குப் பயந்து

பணிவிடை செய்குவன், கொடிய வியாதிகளுந் தீர்ந்துவிடும்,

தரித்திரம் தொலையும். ஆதலால் இதுவே நமக்கு ஆதாரம் என்று

நீ அணிந்துகொள்ள வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

  நன்றி: தமிழ்மறை/முக நூல்

POSTED BY  SRINIVASAN  AT  10/15/2013 09:12:00 PM   NO COMMENTS: 

EMAIL THISBLOGTHIS!SHARE TO TWITTERSHARE TO FACEBOOKSHARE TO PINTEREST

SRINIVASAN

ச ி வ ன ா ல் ச ி வ னை த் தே டி ச ி வ ச க் த ி ஐ க் ய ம ா க ச ி வ ன ரு ளை ந ா டி அ லை யு ம்
ச ி வ ப க் க ி ரி

TUESDAY, OCTOBER 1, 2013


சிவராத்திரி விரதம் .. சிவதாண்டவம்

1. சிவராத்திரி விரதத்திற்கும், பூஜைக்கும் சௌரமானம், சாந்திரமானம்


என்ற பாகுபாடே தேவையில்லை.

2. மாக க்ருஷ்ண சதுர்தசி என்பது பல ஆண்டுகளாக மாசி மாதத்தில்


வந்துள்ளபடியால், எப்பொழுதும் மாசி மாதத்தில் தான் சிவராத்திரி
ஏற்படும் என்று மக்களிடையே பொதுவான கருத்து ஏற்பட்டு விட்டது

3. ஆதித்யாஸ்தமயே காலே அஸ்தி சேத் யா சதுர்தசி |

தத்ராத்ரி: சிவராத்ரிஸ்யாத் ஸா பவேத் உத்தமோத்தமா ||

பொருள்: சூரியன் அஸ்தமன நேரத்தில் சதுர்தசி இருக்கக்கூடிய நாளின்


இரவே உத்தமமான சிவராத்திரி என காமிக ஆகமம் கூறுகிறது.

4. ப்ரதோஷ வ்யாபிநி க்ராஹ்யா சிராத்ரி சதுர்தசி |

பொருள்: ப்ரதோஷ காலத்தில் த்ரயோதசியும் - சதுர்தசியும் இணைந்தால்


அன்றைய இராத்திரி சிவராத்திரியாக ஏற்கத் தக்கது என்பது காமிக
ஆகமம்.
5. சிவராத்திரி தோன்றிய காலத்தை ஹஸ்யாத்ரி கண்டம் என்னும் நூல்
கீ ழ்வருமாறு தெரிவிக்கிறது.

மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம் ஆதிதேவோ மஹாநிஸி |


சிவலிங்க மபூத் தத்ர கோடி ஸூர்ய சமப்ரபம் ||

பொருள்: சாந்திரமான மாக மாதத்தில் தேய்பிறை சதுர்தசி நடு இரவில்


கோடி சூரிய பிராகசத்துடன் சிவலிங்க வடிவில் இறைவன் தோன்றினார்.

6. சிவராத்திரி விரத பலனைக் கூறியுள்ள ஸ்காந்த மஹா புராணத்தில்


கீ ழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அர்த்த ராத்ரயுதா யத்ர மாக க்ருஷ்ண சதுர்தசி |


சிவராத்திரி வ்ரதம் தத்ர வாஜிமேத பலம் லபேத் ||

பொருள்: சாந்திரமான மாக மாதத்தில் க்ருஷ்ண சதுர்தசியில் மஹா


சிவராத்திரி வ்ரதம் அனுஷ்டித்தால் அஸ்வமேத பலன் கிட்டும்
என்பதாகும்.

மாக மாத க்ருஷ்ண சதுர்தசியில் தான் நடுஇரவில் லிங்கோத்பவம்


ஏற்பட்டது. பால்குணத்தில் அல்ல. இதுகுறித்து சிவாகமம் கூறுவதைப்
பார்ப்போம்.

7. காரணாகமம்: ரவி கும்ப கதாத் பூர்வா மகராந்தே ப்ரபூஜயேத் |

ஸந்தான ஆகமம்: ரவி கும்ப கதாத் பூர்வா மகராந்தே ஸுபூஜனம் |

பொருள்: மேற்கூறிய ஆகம வாக்கியங்களின் பொருள், சூரியனானவர்


கும்பராசிக்குள் பிரவேசிப்பதற்குள் சௌரமான மகர மாதமான தை
மாதத்தில் மஹா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படலாம் என்பதாகும்.
8. தத்திதௌ சிவராத்ரம் ஸ்யாத் மாக மாசே சதுர்தசி |
மாக பால்குணயோர் மத்யே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசி || காரண ஆகமம்

இங்கு சற்று கவனிக்கவும்:

“மாக பால்குனயோர் மத்யே” என்ற வாக்கியத்திற்கு விளக்கம்


கூறும்போது காசியில் வசிக்கும் ப்ரும்மஸ்ரீ கணேஸ்வர திராவிட்
சாஸ்திரிகள் பல சிவாகம நூல்களை ஆராய்ந்து கூறுவதாவது:

அமாவாசையில் முடியும் சாந்திரமான மாக மாத க்ருஷ்ணபக்ஷ


சதுர்தசியிலும், பௌர்ணமியில் முடியும் பால்குண மாத க்ருஷ்ண பக்ஷ
சதுர்தசியிலும் மஹா சிவராத்திரி ஏற்படலாம்.

9. கோகுலாஷ்டமியிலிருந்து 185 ஆவது நாள் என்று ஒரு கணக்கு


சொல்கிறார்கள்.

10. மேலும் திதியானது முன் பின் இருப்பினும் திருவோண


நட்சத்திரத்துடன் கூடிய சதுர்தசி மஹா சிவராத்திரி என்பது சாஸ்திர
சம்மதம்.

ஆகவே பக்தர்கள் இனிவரும் காலங்களில் மாசி கிருஷ்ண சதுர்தசி வரும்


காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்தியில் விரதம் இருந்து
அனுஷ்டித்து வரும்படி கோருகிறோம்.

சுபம்
சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ
லோகங்களும் நடுங்குகின்றன. பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள்
என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும்
நடுங்குகின்றன.

கடைசியில் சிவனின் வாகனமான நதிகேஸ்வரர் போய் சிவனிடம்


கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டி சிவனின் பயங்கர
தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லுகிறார்.

அப்போது சிவன், ‘நான் எங்கே போய் ஆடுவது?’ என்று கேட்க, ‘என்


தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்’ என்று நந்தி
சொல்கிறார். விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு
இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார்.

சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின்


கோபத்தைத் தணிக்க உதவியதால் அந்த நேரத்தில், அதாவது அந்தத்
‘த்ரயோதசி’ தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என்று இன்னமும்
எல்லா சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது,

அதனால் அந்த நேரத்தில் நந்திக்கு பூஜை செய்தால்


சிவபதத்தையடையலாம்.
சிவபிரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி
வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீ ங்கும். ஒரு மாதம்
நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ள
எல்லோரும் சிவபதத்தை யடைவர்.
கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால்
சிவபதத்தையடையலாம்.
பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத
பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும்.
தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீ ங்கி முடிவில் சிவபதங்
கிடைக்கும்.
தேன் அபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீ ங்குவதுடன்
அக்கினிலோகத்தையடைதலும் ஏற்படும்.
கருப்பஞ்சாரபிஷேகஞ் செய்தால் வித்தியாதரருடைய
உலகத்தையடையலாம்.
பச்சைக்கற்பூரம் அகிலென்னுமிவற்றுடன் கூடின நீ ரை அபிஷேகஞ்
செய்தால் சிவபதத்தை அடையலாம்.
வாசனையுடன் கூடின சந்தனாபிஷேகஞ் செய்தால் கந்தர்வலோகத்தை
அடையலாம்.
புஷ்பத்தோடு கூடிய நீ ரால் அபிஷேகஞ் செய்தால் சூரிய
லோகத்தையடையலாம்.
சுவர்ணத்தோடு கூடிய நீ ரின் அபிஷேத்தால் குபேரலோகத்தையும்,
இரத்தினத்தோடு கூடிய நீ ரின் அபிஷேகத்தால் இந்திரலோகத்தையும்,
தருப்பையோடு கூடிய நீ ரின் அபிஷேகத்தால் பிரம்மலோகத்தையும்
அடையலாம்.

குறிக்கப்பட்ட திரவியங்கள் கிடையாவிடில் ஆடையால் பரிசுத்தமான


சுத்த ஜலத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும். இவ்வாறு செய்தாலும்
எல்லா விருப்பங்களும் நிறைவேறக்கூடிய வருணலோகத்தை அடைதல்
கூடும்.

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி.

ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில்


நீ ங்கள் தெரிந்து செய்த பாவங்கள், தெரியாமல் செய்த பாவங்கள்,
அறிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள், வாயால் பேசிய
பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு, சனிக்கிழமையன்று பச்சரிசியை
ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,
விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை
விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை
நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை
எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.
எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீ து பட்டதும் அதன் கெடும் தன்மை நீ ங்கி
விடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை
வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை
முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும்,
அதன் வலு இழந்துபோய்விடும்.
இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு
உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள்
சாப்பிட்டதற்குச் சமம். இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட
நம்மைத் தாக்காது .(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி,
அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷமும் இதில் அடங்கும்)

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.


வலைப்பதிவர் "ஹைந்தவ திருவலம்"  தகவல்களுக்கு மிக்க நன்றி.

POSTED BY  SRINIVASAN  AT  10/01/2013 05:13:00 PM   5 COMMENTS: 

EMAIL THISBLOGTHIS!SHARE TO TWITTERSHARE TO FACEBOOKSHARE TO PINTEREST

SRINIVASAN

ச ி வ ன ா ல் ச ி வ னை த் தே டி ச ி வ ச க் த ி ஐ க் ய ம ா க ச ி வ ன ரு ளை ந ா டி அ லை யு ம்
ச ி வ ப க் க ி ரி
பாலாம்பிகா ஸ்லோகம்

வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது


முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள்
நிச்சயம் கிட்டும்

வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே


லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த


ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ


வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா


ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே


மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே


நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே


ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

மௌக்தாவன ீ விலஸதூர்மித கம்பு கண்டே


மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே


காணாந்த தீர்கநவ நீ ரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே


மல்லீ நவன
ீ களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||

பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |


பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||
...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.


வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

POSTED BY  SRINIVASAN  AT  10/01/2013 11:44:00 AM  NO COMMENTS: 

EMAIL THISBLOGTHIS!SHARE TO TWITTERSHARE TO FACEBOOKSHARE TO PINTEREST

SRINIVASAN

ச ி வ ன ா ல் ச ி வ னை த் தே டி ச ி வ ச க் த ி ஐ க் ய ம ா க ச ி வ ன ரு ளை ந ா டி அ லை யு ம்
ச ி வ ப க் க ி ரி

வாலை வணக்கம்

" வாலை வணக்கம் " எனும் பாலாம்பிகையின் தமிழ் செய்யுளில் முதல்


பகுதியிலேயே, 'ஐம் க்லீம் சௌ' என்ற பாலா பீஜம் உள்ளது, அதன்
ந்யாசமும் உள்ளது.
இதயத்தில் "ஐம்" என்றும், புருவ மத்தியில் "க்லீம்" என்றும், சிரஸில்
"சௌ" எனவும் குறிப்பிட்டுள்ளதை காண்க.

“ஐந்”தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்

உந்தனித யத்திலுயர

இந்திரவில் சிந்துமொளி இத”கிலீங்” காரமென

இருபுருவ நடுவில்வளர

சந்திரனின் பாலொளிச் “சௌ”மியத் தண்சுடர்

சுந்தரிநின் சிரசில்விரிய

வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு

வாலைதிரி புரையழகியே!

இரண்டாவதில் அம்மையின் யந்திரம் விளக்கப்பட்டுள்ளது.

அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை

ஆதிபரைகோணமொன்றின்

நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக

நங்கைசிவ மங்கைபரையே

மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்
மங்கலை சிவானந்தியே

இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு

வாலைதிரி புரையழகியே!

இந்த வாலை வணக்கப்பாடலின் பல ஸ்ருதி என்னவெனில்,

ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்

அருளொளிருமழகுமுகமும்

தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்

தெளிவொடுன்னுபவர்வாழ்வில்

நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி

ஞானமும்நலமும்வளரும்

ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு

வாலைதிரிபுரையழகியே!

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.


வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

POSTED BY  SRINIVASAN  AT  10/01/2013 11:22:00 AM  NO COMMENTS: 

EMAIL THISBLOGTHIS!SHARE TO TWITTERSHARE TO FACEBOOKSHARE TO PINTEREST


SRINIVASAN

ச ி வ ன ா ல் ச ி வ னை த் தே டி ச ி வ ச க் த ி ஐ க் ய ம ா க ச ி வ ன ரு ளை ந ா டி அ லை யு ம்
ச ி வ ப க் க ி ரி

அம்பாளின் மகிமை

உலகனைத்துக்கும் தாயாக இருப்பவள் ஸ்ரீகாமாக்ஷி, அவளுடைய


குழந்தைகள் தாம் மக்கள் அனைவரும்.
குழைந்தைகளாகிய நாம் அறியாமையால் மற்ற தேவர்களை
வழிபட்டாலும் கூட நாம் அவர்களுக்குச் சொந்தமானவர்களாக ஆக
முடியுமா? ஒரு குழந்தை அல்லது பசு மற்றவர் வட்டில்
ீ நுழைந்து
விட்டதால் அது அவர்களுடையதாகவோ, அரசுடைமையுடையதாகவோ
ஆகுமா? அது தன் தாயைத்தானே சேரும்.
இதுபோல நாம் எந்த நிலையிலும் ஸ்ரீகாமக்ஷியின் குழந்தைகள்தாம்
என்று அம்பாளின் பெருமையை ஸ்ரீ நீ லகண்ட தீக்ஷிதர் இவ்விதம் இந்த
ச்லோகத்தில் கூறுகிறார்.

மௌட்யாதஹம் சரணயாமி ஸுராந்தரம் சேத்


கிம் தாவதா ஸ்வமபி தஸ்ய பவாமி மாத : |
அக்ஞானத : பரக்ருஹம் ப்ரவிசந் பரஸ்ய
ஸ்வத்வம் ப்ரயாஸ்யதி பசு: கிமு ராஜகீ ய : ||

ஸ்ரீ லலிதா பரமேச்வரியாக விளங்கும் இவளது கருணை ஏற்பட்டு


விட்டால் நமக்கு எல்லாவிதமான ஸௌக்யங்களும் கிட்டும். அந்த
நற்பயனைப் பற்றி வர்ணிக்கவே முடியாது. எந்தவிதமான
ஸாதனங்களும் இல்லாமலேயே உலகை வென்றுவிட முடியும். இதற்கு
உதாரணம் மன்மதன். இவனுக்கு உடலே கிடையாது. இவனது வில்
பூவால் ஆனது. வண்டுகள்தான் நாண்கயிறு. பானங்கள் மொத்தம்
ஐந்துதான். படைபலம் கிடையாது. வஸந்தகாலம் ஒன்றுதான்
துணைவன். மலயமலையின் காற்று இவனது தேர். இவ்வாறு இருப்பினும்
இந்த மன்மதன் உலகனைத்திலும் வெற்றி கொள்கிறான்.
பரமசிவனையும் மயக்குகிறான்.
இதற்குக் காரணம் அம்பாளின் கடைக்கண் அருள்தான் என்று
ஆதிசங்கரர் ஸௌந்தர்ய லஹரியில் கூறுகிறார்.

தனு: பௌஷ்பம் மௌர்வி மதுகரமயீ பஞ்ச விசிகா :


வஸந்த: ஸாமந்தோ மலயமருதாயோதனரத : |
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத தே லப்த்வா ஜகதிதம் அனங்கோ விஜயதே ||

பரமேச்வரரின் பெருமையும், சிரஞ்ஜீவித் தன்மையும் கூட அம்பாளின்


ஸௌபாக்யத்தினால்தான் ஏற்படுகிறது. தேவர்கள் அமிருதத்தை
அருந்தியும் கூட விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் மிகவும்
கொடிய விஷமாகிய ஹாலாஹலத்தைப் பருகிக்கூட நீ லகண்டரான
சிவனுக்குக் காலம் முடிந்தது என்ற பேச்சே இல்லை.
இதுவும் அம்பாளின் தாடங்கத்தின் மகிமைதான் என்று
ஸௌந்தர்யலஹரி கூறுகிறது.

ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யுஹரிண ீம்


விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத : |
கராளம் யத் க்ஷ்வேளம் கபளிதவத: காலகலனா
ந சம்போஸ்தன்மன்யே தவ ஜநநி தாடங்கமஹிமா ||
அம்பாள் இவ்வாறு தன் பதிக்குப் பெருமையை வாங்கித்தந்தாலும் கூட
அந்தச் சிறப்பு தனக்கே வேண்டும் என்று எண்ணுவதுமில்லை.
பெருமையால் வரும் பட்டத்தை சிவனுக்கே சூட்டினாலும் பேசாமல்
இருக்கிறாள். மன்மதனை இரண்டு பேருக்கும் பொதுவான
(அர்த்தநாரீச்வரரின் நெற்றிக் கண்ணில் அம்பாளுக்கும் பாதி உரிமை
உண்டானதால்) நெற்றிக்கண்தானே எரித்தது? சிவன் தான் மட்டுமே
“ஸ்மரரிபு:” என்று பெயர் பெறுவது எப்படி ஸரியாகும்? இதுவாவது
போகட்டும்! இடது கால் தானே உதைத்து யமனை ஜயித்தது? அதில்
அம்பாளுக்குத் தானே முழுபங்கும் உள்ளது. இதிலும் புகழை ஈச்வரன்
அடைவது பொருந்தவே பொருந்தாது. அதில் அவருக்கு என்ன பங்கு
உள்ளது? என்று வேடிக்கையாக அம்பாளின் பாதிவ்ரத்யத்தை
வர்ணிக்கிறார் ஸ்ரீ நீ லகண்ட தீக்ஷிதர்:

ஸாதாரணே ஸ்மரஜயே நிடிலாக்ஷிஸாத்யே


பாகீ சிவோ பஜது நாம யச: ஸமக்ரம்|
வாமாங்க்ரி மாத்ரகலிதே ஜனனி த்வதீயே
கா வா ப்ரஸக்திரிஹ காலஜயே புராரே: ||

கஷ்டகாலங்களில் ஜகன்மாதாவான அம்பாளைத்தான் நாம் பிரார்த்திக்க


வேண்டும். கஷ்டகாலத்திலும் தாய்தான் அழைத்தவுடனே கருணை
புரிவாள். நல்ல காலத்தில் நினைக்காமல் கஷ்டத்தில் மட்டும்
அழைத்தால் மற்றோர் வஞ்சனையாக எண்ணி விடுவர். தாய் அவ்வாறு
இல்லாமல் கருணை புரிவாள் என்கிறார் ஒரு பக்தர்:

ஆபத்ஸூமக்ன: ஸ்மரணம் த்வதீயம் கரோமி துர்கே கருணாணவேசி |


நைதச்சடத்வம் மம பாவயேதா: க்ஷுதாத்ருஷார்த்தா: ஜனன ீம் ஸ்மரந்தி||
ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.
வலைப்பதிவர் ' ஹைந்தவ திருவலம் '  தகவல்களுக்கு மிக்க நன்றி.

POSTED BY  SRINIVASAN  AT  10/01/2013 11:13:00 AM  NO COMMENTS: 

EMAIL THISBLOGTHIS!SHARE TO TWITTERSHARE TO FACEBOOKSHARE TO PINTEREST

SRINIVASAN

ச ி வ ன ா ல் ச ி வ னை த் தே டி ச ி வ ச க் த ி ஐ க் ய ம ா க ச ி வ ன ரு ளை ந ா டி அ லை யு ம்
ச ி வ ப க் க ி ரி
“லகு ஷோடசோபசார பூஜை”

இந்த “லகு ஷோடசோபசார பூஜை” யானது நமது மானஸ பூஜா


விதானத்திற்கு மிகவும் உகந்தது என்று எனது குருநாதர்
அருளியிருக்கிறார். அவரின் அனுமதியோடு, உங்களிடம்
பகிர்ந்துகொள்கிறேன்.

1. த்யானம்

ஹிரண்ய வர்ணாம் ஹரிண ீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம்|


சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீ ம் ஜாதவேதோ ம ஆவஹ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் த்யாயயாமி நம:

2. ஆவாஹனம்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ ர் மனபகாமின ீம் |


யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமேஷ்வம் புருஷானஹம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆவாஹயாமி நம:


3. ஆசனம்.

அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத-ப்ரபோதின ீம் |


ச்ரியம் தேவமுபஹ்வயே
ீ ஸ்ரீர்மாதேவி ஜுஷதாம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்யரத்னமய


ஸிம்ஹாஸனாரோஹணம் கல்பயாமி நம:

4. பாத்யம்.

காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா-மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம்


தர்பயந்தீம் |
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோ பஹ்வயே ச்ரியம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் பாத்யம் கல்பயாமி


நம:

5. அர்க்யம்.

சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம் ச்ரியம் லோகே தேவஜுஷ்டா-


முதாராம் |
தாம் பத்மினிமீ ம் சரண-மஹம் ப்ரபத்யே அலக்ஷ்மீ ர் மே நஸ்யதாம் த்வாம்
வ்ருணே ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷாம்ருதம்


கல்பயாமி நம:

6. ஆசமனம்.

ஆதித்யவர்ணே தபஸோ அதிஜாதோ வனஸ்பதிஸ்த்வ வ்ருக்ஷோத


பில்வ: |
தஸ்யபலானி தபஸா நுதந்து மாயாந்த்ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ : ||
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆசமனம் கல்பயாமி
நம:

7. ஸ்நானம்.

உபைதுமாம் தேவ ஸஹ: கீ ர்த்திஸ்ச மணிநா ஸஹ |


ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீ ர்த்திம் ருத்திம் ததாது மே ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் நானாவித அபிஷேக


வைபவம் கல்பயாமி நம:

8. அலங்காரம்

க்ஷூத்பிபாஸா மலாம் ஜேஷ்டாமலக்ஷ்மீ ர் நாஸயாம்யஹம் |


அபூதிமஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்ய மஹோன்னத


அலங்கார வைபவம் கல்பயாமி நம:

9. ஆராதனம்.

கந்த த்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிண ீம் |


ஈஸ்வரீம் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷ ஆராதனம்


கல்பயாமி நம:

(இங்கு பாராயணம் அல்லது மந்த்ர ஜெபம் அல்லது அர்ச்சனை)

10. ஸமர்ப்பணம்
குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணா அஸ்மத்க்ருதம் ஜபம் |
ஸித்திர்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திர ||

11. தூபம்.

மநஸ: காம மா ஹுதிம் வாச: ஸத்யமஸீமஹீ |


பசூநாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யச: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தூபமாக்ராபயாமி,


தூபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:

12. தீபம்.

சுர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம |


ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலின ீம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தீபம் தர்ஷயாமி


தீபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:

13. நைவேத்யம்.

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே | நி சதேவம்



மாதரம் ச்ரியம் வாஸய மே குலே ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம்

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம பர்கோ தேவஸ்ய தீமஹீ


த்யோயோன: ப்ரசோதயாத்

தேவஸவித: ப்ரஸூவ: ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி


அம்ருதோபஸ்தரணமஸி,
ப்ராணய ஸ்வாஹ: அபானாய ஸ்வாஹ: உதானாய ஸ்வாஹ:
ஸமானாய ஸ்வாஹ: ப்ரம்ஹணே ஸ்வாஹ:
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஷட் ரஸோபேத
திவ்ய நைவேத்யம் கல்பயாமி நம:
மத்ய மத்யே அம்ருத பான ீயம் கல்பயாமி நம:
அம்ருதா அபிதானமஸி நைவேத்யானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:

14. தாம்பூலம்.

ஆர்த்ராம் புஷ்கரிண ீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலன ீம் |


ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீ ம் ஜாதவேதோ ம ஆவஹ: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர தாம்பூலம்


கல்பயாமி நம:

15. கர்ப்பூரஹாரத்தி.

ஆர்த்ராம் ய: கரிண ீம் யஷ்டிம் பிங்களாம் பத்மமாலின ீம் |


சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீ ம் ஜாத வேதோ ம ஆவஹ: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர நீ ராஜனம்


கல்பயாமி நம:
கர்ப்பூர நீ ராஜானானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம: ரக்ஷாம் தாரயாமி

16. புஷ்பாஞ்ஜலி

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ ம் மனபகாமின ீம் |


யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோச்வாந் விந்தேயம்
புருஷானஹம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம்


யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
சந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவத
வேதோக்த மந்த்ர புஷ்பாஞ்சலீம் ஸமர்ப்பயாமி
17. ப்ரதக்ஷிண நமஸ்காரம்.

யா லக்ஷ்மீ ஸிந்து ஸம்பவா பூதிர்தேனு புரோவஸு: |


பத்மாவிஸ்வா வஸுர்தேவி ஸ்தானோ ஜுஷதாம் க்ருஹம் ||

மஹாலக்ஷ்ம்யைச்ச வித்மஹே, விஷ்ணு பத்னைய்ஸ்ச தீமஹி, தன்னோ


லக்ஷ்மீ : ப்ரச்சோதயாத்.

ஐம் க்லீம் ஸௌ: பரிவார தேவதா சமேத ஸ்ரீமத் காமேஷ்வர


காமேஷ்வரீம் நம:
அன்ந்தானந்த சதஸஹஸ்ர ஸஹஸ்ரகோடி ப்ரதிக்ஷண நமஸ்காரான்
கல்பயாமி நம:

18. அபராத க்ஷமாபணம்.

அபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம் மயா தாஸோயமிதி மாம்


மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ ||

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் மஹேஷ்வரீ | யத்பூஜிதம் மயா


தேவி பரிபூர்ணம் ததஸ்து மே ||

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ ஸரணம் மம: | தஸ்மாத் காருண்ய


பாவேன லோக க்ஷேமம் சதா குரு ||

19. பலி

ஸர்வ விக்ன க்ருத்ப்யோ ஓம் ஹ்ரீம் ஹூம் ஃபட் ஸ்வாஹ:

20. ப்ரார்த்தனை

காமேஷ்வரீ ஜனனி, காமேஷ்வரோ ஜனக:, தவசரணௌ மமசரணம் |


காமேஷ்வரீ ஜனன ீ தவ சரணௌ மம சரணம். ||

காமேஷ்வர ஜனக காமேஷ்வரீ ஜனனி, குரு லோகே க்ஷேமம் |


காமேஷ்வரீ ஜனன ீ குரு லோகே ஸாந்திம் ||

சுபம்

...

ஒரு வலைப்பூ (http://blaufraustein.wordpress.com)  பதிவு படித்ததில்


பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க
நன்றி.

POSTED BY  SRINIVASAN  AT  10/01/2013 10:30:00 AM  NO COMMENTS: 

EMAIL THISBLOGTHIS!SHARE TO TWITTERSHARE TO FACEBOOKSHARE TO PINTEREST

SRINIVASAN

ச ி வ ன ா ல் ச ி வ னை த் தே டி ச ி வ ச க் த ி ஐ க் ய ம ா க ச ி வ ன ரு ளை ந ா டி அ லை யு ம்
ச ி வ ப க் க ி ரி
லலிதோபாக்யானம்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:


க எ இ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்

லலிதோபாக்யானம் ப்ரம்மாண்டபுராணத்தின் கடைசி 40


அத்தியாயங்களைக் கொண்டது ஆகும்.
ஸ்ரீ திரிபுரசுந்தரியான ஸ்ரீ லலிதா பரமேஷ்வரி தேவியின் சரிதையை
ஹயக்ரீவருக்கும் அகத்தியருக்கும் நடக்கும் சம்பாஷணையாக
கூறுகிறது. இதில் அம்பிகையின் அவதார மகிமையும், பண்டாஸுரனுடன்
நடந்த போரும், பண்டாஸுர வதமும், விவரிக்கப்பட்டுள்ளது. அதனுடன்,
ஸ்ரீநகர வர்ணனையும், அம்பிகையின் மந்திர ஜெப தப முறைகளும், ஸ்ரீ
சக்ர வழிபாட்டு முறையும், தீக்ஷை விபரமும் காணக்கிடைக்கின்றன.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவருக்கும், ஸ்ரீ தேவி


உபாஸகருக்கும் இது ஒரு மிகவும் இன்றியமையாத நூலாகும்.

இந்த லலிதோபாக்யானத்திலிருந்து பெறப்பட்ட கீ ழ்க்கண்ட


புஷ்பாஞ்ஜலியானது, அம்பிகைக்கு மிகவும் பிரியமானது. அம்பிகையின்
திரு வாக்கினாலேயே இந்த ஸ்லொகத்தின் பலன்
ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

இது கட்கமாலாவை ஒத்தது ஆயினும் இதற்கு தீக்ஷை ஒரு


கட்டாயமானதன்று. சுத்தமான உடலும், மனமும், குருவருளும், பக்தியும்
நிஷ்டையும் இதை பாராயணம் செய்ய போதுமானது.

முதலில் குருவந்தனம் ...

எங்கே, எப்படி யார் பூஜை செய்தாலும், அந்த பூஜை முறைகளை நமக்கு


உபதேசித்த குருவை ஸாதகன் நினைவு கூர்தல் வேண்டும். பூஜைக்கு
முக்கியம் குரு பாதம், மந்திரத்திற்கு முக்கியம் குரு வார்த்தை,
த்யானத்திற்கு முக்கியம் குரு வடிவம், மோக்ஷத்திற்கு முக்கியம்
குருவின் தயை என்று கரண ஆகமத்தில் சொல்லப்பட்டிருப்பதை நினைவு
கூர்க.

குருவை துதித்த பின்னரே பகவானை அல்லது பகவதியை துதிக்க


வேண்டும். பகவான் அல்லது பகவதி அபசாரங்களுக்கு கூட விமோசனம்
உண்டு, ஆயின் குரு அபசாரத்திற்கு எந்த விமோசனமும் இல்லை என்று
ஸகலாகம ஸங்க்ரஹ ஸ்லோகம் 1027 மூலம் அறியலாம்.
அதிகாண் கீ ழ்க்கண்ட ஸ்லோகங்களை சொல்லியே பூஜைகளை
தொடங்கவேண்டும்

குரூர் ப்ரம்மா, குரூர் விஷ்ணு, குரூர் தேவோ மஹேஷ்வர: |


குரு ஸாக்ஷாத் பரப்ரம்ம, தஸ்மை ஸ்ரீ குருவே நம: ||

குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம் |


நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தையே நம: ||

சதாசிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் |


அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||

குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம: ||


கணநாத வந்தனம் ...

ஓம்கணானாம்த்வாகணபதிஹூம்ஹவாமஹே
கவிம்கவனாம்உபமச்ரவஸ்தமம்
ீ |
ஜ்யேஷ்டராஜம்பிருஹ்மனாம்பிருஹ்மணஸ்பத
ஆன: ச்ருண்வன்னூதிபி: ஸீதஸாதனம் ||

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

த்யானம்:

சிந்தூராருணவிக்ரஹாம்த்ரிநயனாம்மாணிக்யமௌலீஸ்புரத்
தாராநாயகசேகராம்ஸ்மிதமுகீ ம்ஆபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யாம்அளிபூர்ணரத்நசஷகம்ரக்தோத்பலம்பிப்ரதீம்
ஸௌம்யாம்ரத்னகடஸ்தரக்தசரணாம்த்யாயேத்பராமம்பிகாம் ||

அருணாம்கருணாதரங்கிதாக்ஷீம்த்ருதபாசாங்குசபுஷ்பபாணசாபாம் |
அணிமாதிபிரவ்ருதாம்மயூகைரஹமித்யேவவிபாவயேபவான ீம் ||

இப்படியாக அம்பிகையின் ரூபத்தை சகல பூஷணங்களோடு நம்


மனக்கண் முன் நிற்கவைத்து, அம்பிகையே இவ்வெழியோன் அளிக்கும்
தன் சக்திக்கு உட்பட்ட, மற்றும் தனக்கு கிடைத்த பொருள்களைக்
கொண்டு செய்யும் பூஜை தனை பேரன்புடன் பரிபூரணம் என
ஏற்றுக்கொண்டு, கருணையுடன் அருள் மழை பொழிவாயாக என்று
வேண்டிக்கொண்டு, ஆதி சங்கரர் இயற்றிய மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா
ஸ்தவ பாராயணம் ஒரு முறை ஒரு சந்த்யயில் செய்து, கீ ழ்
கொடுக்கப்பட்டுள்ள புஷ்பாஞ்சலியை சமர்ப்பித்தால், ஒவ்வொரு
நாமாவிற்கும் ஓர் ஆயிரம் செந்தாமரை மலர்களை அம்பிகையின்
பாதத்தில் சொரிந்த பலன் கிட்டும்.

இங்கு MULTIPLIER ஆக புஷ்பாஞ்சலியும், பூஜையாக மந்த்ர மாத்ருகா


புஷ்பமாலா ஸ்தவமும் இருக்கின்றன. இப்படி செய்யும்போது, ஒரு
ஸ்தவம், பல்லாயிரக் கணாக்கான ஸ்தவாஞ்சலியாகிறது அன்றோ! பூஜா
பலனும் அதுபோலவே பல ஆயிரக் கணக்கானதாகும்.
ஆயின் ஒரு விஷயம் கவனிக்க, தவறு செய்யின், அதன் பலனும்
அப்படியே பல மடங்காகும் என்பதாம்

ஓம் ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், ஐம், க்லீம், ஸெள: ஓம் நம:


த்ரிபுரஸுந்தரி, ஹ்ருதயதேவி, சிரோதேவி, சிகாதேவி, கவசதேவி,
நேத்ரதேவி, அஸ்த்ரதேவி,
காமேச்வரி, பகமாலிநி, நித்யக்லிந்நே, பேருண்டே, வந்ஹிவாஸிநி,
மஹாவஜ்ரேஸ்வரி, வித்யேஸ்வரி,
பரசிவதூதி, த்வரிதே, குலஸுந்தரி, நித்யே, நீ லபதாகே, விஜயே,
ஸர்வமங்களே, ஜ்வாலாமாலிநி,
சித்ரே, மஹாநித்யே, பரமேஸ்வரி,
மித்ரேசமயி, ஷஷ்டீசமயி, ஓட்யாணமயி, சர்யாநாதமயி,
லோபாமுத்ராமயி, அகஸ்த்யமயி, காலதாபனமயி,
தர்மாசார்யமயி, முக்தகேசீஸ்வரமயி, தீபகலாநாதமயி,
விஷ்ணுதேவமயி, ப்ராபகரதேவமயி,
தேஜோதேவமயி, மநோஜதேவமயி,
அணிமாஸித்தே, மஹிமாஸித்தே, கரிமாஸித்தே, லகிமாஸித்தே,
ஈசித்வஸித்தே, வசித்வஸித்தே,
ப்ராப்திஸித்தே, ப்ராகாம்யஸித்தே, ரஸஸித்தே, மோக்ஷஸித்தே,
ப்ராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணி,
சாமுண்டே, மஹாலக்ஷ்மி,
ஸர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி,
ஸர்வவசங்கரி, ஸர்வோந்மாதிநி,
ஸர்வமஹாங்குசே, ஸர்வகேசரி, ஸர்வபீஜேஸர்வயோநே,
ஸர்வத்ரிகண்டே,
த்ரைலோக்யமோஹநசக்ரஸ்வாமிநி, ப்ரகடயோகிநி, பௌத்ததர்சநாங்கி,
காமாகர்ஷிணி, புத்யாகர்ஷிணி, அஹங்காராகர்ஷிணி, சப்தாகர்ஷிணி,
ஸ்பர்சாகர்ஷிணி, ரூபாகர்ஷிணி,
ரஸாகர்ஷிணி, கந்தாகர்ஷிணி, சித்தாகர்ஷிணி, தைர்யாகர்ஷிணி,
ஸ்ம்ருத்யாகர்ஷிணி, நாமாகர்ஷிணி,
பீஜாகர்ஷிணி, ஆத்மாகர்ஷிணி, அம்ருதாகர்ஷிணி, சரீராகர்ஷிணி,
குப்தயோகிநி, ஸர்வாசா பரிபூரக சக்ரஸ்வாமிநி, அநங்ககுஸுமே,
அநங்கமேகலே, அநங்கமதனே,
அநங்கமதநாதுரே, அநங்கரேகே, அநங்கவேகிநி, அநங்காங்குசே,
அநங்கமாலிநி, குப்ததரயோகிநி,
வைதிகதர்சநாங்கி, ஸர்வஸம்க்ஷோபகாரகசக்ரஸ்வாமினி,
பூர்வாம்நாயாதிதேவதே, ஸ்ருஷ்டிரூபே,
ஸ்ர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி,
ஸர்வாஹ்லாதிநி, ஸர்வஸம்மோஹிநி,
ஸர்வஸ்தம்பிநி, ஸர்வஜ்ரும்பிணி, ஸர்வவசங்கரி, ஸர்வரஞ்ஜனி,
ஸர்வோந்மாதினி, ஸர்வார்த்தஸாதிகே,
ஸர்வஸம்பத்ப்ரபூரணி, ஸர்வமந்த்ரமயி, ஸர்வத்வந்த்வக்ஷயங்கரி,
ஸம்ப்ரதாயயோகிநி, ஸெளரதர்சநாங்கி,
ஸர்வஸெளபாக்யதாயகசக்ரே, ஸர்வஸித்தி ப்ரேதஸர்வஸம்பத்ப்ரதே,
ஸர்வப்ரியங்கரி, ஸர்வமங்களாகாரிணி,
ஸர்வகாமப்ரதே, ஸர்வதுக்கவிமோசநி, ஸர்வம்ருத்யுப்ரசமநி,
ஸர்வவிக்நநிவாரிணி, ஸர்வாங்கஸுந்தரி,
ஸர்வஸெளபாக்யதாயிநி,
குலோத்தீர்ணயோகிநி,ஸர்வார்த்தஸாதகசக்ரே, ஸர்வக்ஞே,
ஸர்வசக்தே,
ஸர்வைச்வர்யபலப்ரதே, ஸர்வக்ஞானமயி, ஸர்வவ்யாதிநிவாரணி,
ஸர்வாதாரஸ்வரூபே, ஸர்வபாபஹரே,
ஸர்வாநந்தமயி, ஸர்வரக்ஷாஸ்வரூபிணி, ஸர்வேப்ஸிதப்ரதே,
நிகர்ப்பயோகிநி, வைஷ்ணவதர்சநாங்கி, ஸர்வரக்ஷாகரசக்ரேசி,
தக்ஷிணாம்நாயேசி, ஸ்திதிரூபே,
வசிநி, காமேசி, மோதிநி, விமலே, அருணே, ஜயநி, ஸர்வேச்வரி,
கௌலிநி, ரஹஸ்யயோகிநி,
சாக்ததர்சநாங்கி, ஸர்வரோகஹரசக்ரேசி, பச்சிமாம்நாயேசி,
தநுர்பாணபாசாங்குசதேவதே,
காமேசி, வஜ்ரேசி, பகமாலிநி, அதிரஹஸ்யயோகிநி, சைவதர்சநாங்கி,
ஸர்வஸித்திப்ரதசக்ரேசி,
உத்தராம்நாயேசி, ஸம்ஹாரரூபே, சுத்தபரே, பிந்துபீடகதே,
மஹாத்ரிபுரஸுந்தரி, பராபராதிரஹஸ்யயோகிநி, சாம்பவதர்சநாங்கி,
ஸர்வானந்தமயசக்ரேசி,
த்ரிபுரே, த்ரிபுரேசி, த்ரிபுரஸுந்தரி, த்ரிபுரவாஸிநி, த்ரிபுராஸ்ரீ:
த்ரிபுரமாலிநி, த்ரிபுராஸித்தே, த்ரிபுராம்ப,
ஸர்வசக்ரஸ்தே,அநுத்தராம்நாயாக்யஸ்வரூபே, மஹாத்ரிபுரபைரவி,
சதுர்விதகுணரூபே, குலே, அகுலே, குலாகுலே, மஹாகௌலிநி,
ஸர்வோத்தரே, ஸர்வதர்சநாங்கி, நவாஸநஸ்திதேநவாக்ஷரி,
நவமிதுநாக்ருதே, மஹேசமாதவவிதாத்ரு, மந்மத, ஸ்கந்த, நந்தி, இந்த்ர,
மநு, சந்த்ர, குபேராகஸ்த்யே,
துர்வாஸ: க்ரோதபட்டாரகவித்யாத்மிகே, கல்யாணதத்வத்ரயரூபே, சிவ
சிவாத்மிகே,
பூர்ணப்ரம்ஹசக்தே-மஹாபரமேச்வரி, மஹா த்ரிபுரஸுந்தரி, தவஸ்ரீ
பாதுகாம் பூஜயாமி நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்!

சுபம்

“நமந்த்ரம்நோயந்த்ரம்ததபிசநஜானிஸ்துதிமஹோ;
நச்சஆவாஹனம்த்யானம்ததபிச்சநஜானேஸ்துதி-கதா: |
நஜானேமுத்ரிஸ்தேததபிச்சநஜானேவிலபனம்;
பரம்ஜானேமாதாஸ்தவதனுசரணம்க்லேஷஹரணம்” ||

...

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.


வலைப்பதிவர் ' ஹைந்தவ திருவலம் '  தகவல்களுக்கு மிக்க நன்றி.

POSTED BY  SRINIVASAN  AT  10/01/2013 09:44:00 AM  NO COMMENTS: 

EMAIL THISBLOGTHIS!SHARE TO TWITTERSHARE TO FACEBOOKSHARE TO PINTEREST

SRINIVASAN

ச ி வ ன ா ல் ச ி வ னை த் தே டி ச ி வ ச க் த ி ஐ க் ய ம ா க ச ி வ ன ரு ளை ந ா டி அ லை யு ம்
ச ி வ ப க் க ி ரி

Newer PostsOlder PostsHome

Subscribe to: Posts (Atom)

WHY BLOG?

வேத  உபநிஷத்  மற்றும்  பெரியோர்களால்  கண்டுகொண்ட  ஆழமான  வி


ஷயங்களை,  அருளாளர்களின்  கூற்றுகளை  சொல்லக்கேட்டும்,  பார்த்தும்
,  படித்தும்,  உணர்ந்தும்,  அந்த  உணர்விலிருந்து
என்  நினைவுக்கு  வந்தவை .....
(  என்  அனுபவங்கள்  இல்லை )

BLOG ARCHIVE

 ►  2019  (1)
 ►  2018  (27)
 ►  2017  (41)
 ►  2015  (56)
 ►  2014  (33)
 ▼  2013  (219)
o ►  December  (20)
o ►  November  (15)
o ▼  October  (7)
 சிவ கவசம்
 சிவராத்திரி விரதம் .. சிவதாண்டவம்
 பாலாம்பிகா ஸ்லோகம்
 வாலை வணக்கம்
 அம்பாளின் மகிமை
 “லகு ஷோடசோபசார பூஜை”
 லலிதோபாக்யானம்

o ►  September  (13)
o ►  August  (69)
o ►  July  (30)
o ►  June  (14)
o ►  May  (26)
o ►  April  (25)
 ►  2012  (45)
 ►  2010  (3)
 

You might also like