Professional Documents
Culture Documents
காமன் ஐந்து வகையான மலர் அம்புகளை எய்யவும் , வானத்தில் உள்ள நிலவு வெயில் போலக்
காயவும், தென்றல் வந்து நெருப்புப் போல சுடவும் , பெண்கள் வசை மொழி பேசவும், குறவர்கள்
வாழும் குன்றில் உள்ள வள்ளியைப் போன்ற இந்தப் பேதைப் பெண் அடைந்த கொடிய துன்பம் தீர,
மாலைப் பொழுதில் நீ வந்து என் குறையைத் தீர அணுகமாட்டாயோ?
இள மானை ஏந்தும் சிவபெருமானே உபதேசம் பெற, உன்னை வழிபாடு செய்தார். ஏழு மலைகளும்,
சூரனாய் வந்த மாமரமும் சிந்தவும்,கடல் அஞ்சவும், கூரிய வேலைச் செலுத்திய தீரனே, அறிவால்
உன்னை அறிந்து, உனது இரு திருவடிகளையும் வணங்கும் உன் அடியார்களின் இடர்களைக்
களைவோனே, அழகிய மயில் மேல் அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே,
உன் கழுத்தில் உள்ள மாலையைத் தந்து இந்தப் பேதைப் பெண்ணின் காம மயக்கத்தைத்
தீர்ப்பாயாக.
ஓம் வெற்றி விநாயகா போற்றி
காம்போஜி
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாக பெருவுரு எடுத்து நின்றான்
ராம பாணம் போல் ராக்ஷசர் மனை நோக்கி
ராஜ கம்பீரத்துடன் ராம தூதன் சென்றார்
மாண்டு
அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரர்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் கூடி நின்று பூமாரி பொழிந்தனரே
தன்யாசி
மைனாக பருவதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைனாகனை திருப்தி செய்து
சுரஸையை வெற்றி கொண்டு சிம்ஹிதையை வதம் செய்து
சாஹசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றார்.
அடாணா
இடக்காய் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவள் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோக வனத்தை கண்டான்
வசந்தா
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதா பிராட்டியை கண்டு சித்தம் கலங்கினார்
ராவணன் வெருட்டிட ராக்ஷசியர் அரட்டிட
வைதேஹி கலங்கிட வந்தான் துயர் துடைக்க
கேதாரகௌளை
கணையாழியை கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக்கொண்டார் சுந்தர ஆஞ்சனேயன்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர்மேல் கோபம் கொண்டு
அசோக வனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்
சாவேரி
பிரும்மாஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சனேயன்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்
சஹானா
அரக்கரின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக்கொண்டான்
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சனேயர் தாவி வந்தார்
அன்னையை கண்டு விட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தார்
பாகேஸ்ரீ
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சனேயன் கை கூப்பி கண்டேன் சீதையை என்றார்
வைதேஹி வாய்மொழியை அடையாளமாகக்கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சனேயன் சூடாமணியைக் அளித்தான்
ரஞ்சனி
மனம் கனிந்து மாருதியை மார்போடணைத்த ராமன்
மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானார்
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன் வரப்புறப்பட்டார்
சிம்ஹேந்த்ர மத்யமம்
அழித்திட்டார் ராவணனை ஒழித்திட்டார் அதர்மத்தை
அன்னை சீதா தேவியை சிறைமீட்டு அடைந்திட்டார்
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவரைச் சரண் அடைந்தோர்க்கு அவர் அருள் என்றும் உண்டு
மத்யமாவதி
எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ,
அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து
மனமுருகி, நீர் சொரிந்து,
ஆனந்தத்தில் மூழ்கிக்கேட்கும்,
பரிபூர்ண பக்தனே
ஸ்ரீ ஆஞ்சனேயனே, உன்னைப் பணிகிறோம் பன்முறை.
2. புலமை ஏற்படும்
சொல்லு மறியேன்சுதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொள
இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.
8. மனம் சாந்தியுறும்
மன்னும் இளமை யாயிரம் ஆதவர்
மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர்
சித்தம் சாந்தி யுறும்.
9. புகலிடம் கிட்டும்
மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.
33. வாழ்த்து
எந்த மனிதன் பக்தி யுடன்
எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்
காசினி மீதில் நிச் சயமே.
இந்த மகா மந்திரத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. இந்த பதிவை பத்திரபடித்தி வைத்து
கொள்ளவும். தினமும் இருமுறை காலை மாலை பகத்தியுடன் பாராயணம் செய்யவும். அதிவேக
சூப்பர் பாஸ்ட் ரயில் என்பது போல் அதிவிரைவில் இந்த மந்திரம் பலன் அளிக்கும்.
2. புலமை ஏற்படும்
சொல்லு மறியேன்சுதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொள
இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.
8. மனம் சாந்தியுறும்
மன்னும் இளமை யாயிரம் ஆதவர்
மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர்
சித்தம் சாந்தி யுறும்.
9. புகலிடம் கிட்டும்
மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.
33. வாழ்த்து
எந்த மனிதன் பக்தி யுடன்
எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்
காசினி மீதில் நிச் சயமே.
அப்படி 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, அழகு தமிழில் பல துதிகளைப் பாடி மக்களுக்கு முருகக்
கடவுளின் அருள் கிடைக்க வழி செய்தவர் பாம்பன் சுவாமிகள். `இரை தேடுவதோடு, இறையையும்
தேடு’ என்று அறிவுறுத்திய பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமா னின் பெருமைகளை உலகுக்கு
உணர்த்துவதையே தம் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.
இது சித்திர கவி வகையைச் சார்ந்தது. சித்திரகவி என்பது எழுத்துகளைக் கொண்டு வரையப்படும்
சித்திரம். சஸ்திர பந்தத்தின் எழுத்துகள் கொண்டு முருகப்பெருமானின் வேலாயுதத்தைப் போல
வரைந்து எழுதப்பட்ட சித்திரகவி இது.
சஸ்திர பந்தம்
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.
பாடலாகப் பாடி அருள் பெறும் அதே வேளையில் இதை வேல் போல வரைந்து அதைக்கண்டு
தொழுதுகொள்ளும்போது, தமிழின் வடிவாக முருகனை வணங்கும் பேறும் பக்தர்களுக்குக்
கிடைக்கிறது. இதைப் பாராயணம் செய்வதன் மூலம், தொழிலில் சிறப்பு, செல்வச் செழிப்பு, நோய்கள்
தீர்தல், ஞானம் அடைதல் ஆகியன விரைவில் கைகூடும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.
வீட்டில் வைத்தும், முருகன் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பு வைத்து பாராயணம் செய்யலாம்.
வேலுக்குப் பூஜை செய்து தொடங்குவது விசேஷம். இவ்வாறு தொடர்ந்து பாராயணம் செய்துவர,
வலிமையான மந்திர சக்தி உருவாகும். எதிர்மறை சக்திகள் நீஙக ் ி நேர்மறை சக்தி பெருகும் என்பது
நம்பிக்கை.
3. ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
9.தநுஜவிஸ்தார கர்தத
் ந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
10.த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:
பஞ்சதசி மந்திரம்
லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் பதினைந்து பீஜங்களை கொண்ட பஞ்சதசி ம
ந்திரமாகும். பீஜம் என்பது தனியே ஒரு சமஸ்க்ருத எழுத்தினை மட்டும் கொண்டத
ல்ல. உதாரணமாக ஸ என்பது ஒரு சமஸ்க்ருத எழுத்தினைக்கொண்ட பீஜம், ஹ்ரீ
ம் என்பது பல எழுத்துக்களை கொண்ட பீஜம். சமஸ்க்ருதத்தில் உள்ள ஒவ்வொரு
எழுத்துக்கும் அர்த்தம் உண்டு.
உதரணமாக முதலாவது எழுத்தான் "அ" வினை எடுத்துக்கொண்டால் அது ஓம் எ
ன்ற பிரணவத்தினை தோற்றுவிப்பது, அது ஒருமைப்படுத்தலையும், அழிவற்ற த
ன்மையினையும் தரும்.
பீஜங்க்களின் அர்த்தம் அது பாவிக்கப்படும் இடத்தினை சார்ந்து பொருள் கொள்ளப்
படும்.
பஞ்சதச என்றால் பதினைந்து என்று பொருள். இந்த மந்திரம் பதினைந்து எழுத்துக்
களை கொண்டுள்ளது, அதனால் பஞ்சதசி எனப்படுகிறது. பஞ்சதசி மந்திரம் பீஜங்க
ளை முன்று பகுதிகளாக கொண்டுள்ளது. ஒவ்வொரு வரியும் கூடம் எனப்படும், இ
ந்த மூன்று கூடங்களும் முறையே வாக்ப கூடம், காமராஜ கூடம், சக்தி கூடம் என
ப்படும்.
வாக்ப கூடம் லலிதாம்பிகையின் முகத்தினையும், காமராஜ கூடம் கழுத்தி தொடக்
கம் இடை வரையிலான பகுதியையும், இடைக்கு கீ ழ்பகுதி சக்தி கூடத்தினையும்
குறிக்கும்.
இந்த மூன்று கூடங்களும் லலிதாம்பிகையின் முழுவடிவத்தினால் ஆக்கப்படிருக்
கின்றது. இந்தக்காரணத்தினால்தான் பஞ்சதசி மிக சக்தி வாய்ந்த மந்திரமாக கருத
ப்படுகிறது.
இந்த முன்று கூடங்களையும் முக்கோணமாக ஒழுங்குபடுத்த வரும் கீ ழ் நோக்கிய
கோணம் தேவியின் யோனியினை குறிக்கும். இதுவே பிரபஞ்சத்தின் அனைத்திற்
கும் மூலம். இதனால் இந்த மந்திரம் மிக இரகசியமானதாக பாதுகாக்கப்பட்டு வருக
ிறது. வாகப கூடம் முக்கோணத்தின் வலது புறம், காமராஜ கூடம் மேற்புறம், சக்தி
கூடம் முக்கோணத்தின் இடது புறம் காணப்படும்.
வாக்ப கூடம் ஐந்து பீஜங்களை கொண்டுள்ளது;
க - ஏ - ஈ - ல - ஹ்ரீம்
காமராஜ கூடம் ஆறு பீஜங்களை கொண்டுள்ளது;
ஹ - ஸ - க - ஹ - ல - ஹ்ரீம்
சக்தி கூடம் நான்கு பீஜங்களை கொண்டுள்ளது;
ஸ - க - ல - ஹ்ரீம்
இந்த பதினைந்து பீஜங்களும் பஞ்சதசி எனப்படும். இந்த மந்திரம் எந்த நூலிலும்
வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. கீ ழ்வரும் சமஸ்க்ருத ஸ்லோகம் மூல
ம் பரிபாஷையாக கூறப்பட்டுள்ளது.
அந்த ஸ்லோகம் வருமாறு,
காமோயோனி; கமலா வஜ்ரபானிர் குஹஹஸ மாதரிஷ்வ அப்ரம் இந்த்ரா/
புனர் குஹ ஸகலா மாயாய க புருசேச விஸ்வமாதாதி வித்யா//
இந்த ஸ்லோகத்தில் பஞ்சதசியின் பதினைந்து பீஜங்களும் மறைமுகமாக கூறப்ப
ட்டுள்ளது. இதன் மூலம் இந்த மந்திரத்தின் இரகசியத்தன்மை புலனாகிறது.
இந்த ஸ்லோகத்தில் உள்ள பதினைந்து பீஜங்களும் வரும் முறை வருமாறு;
காமோ (க) யோனி;
(ஏ) கமலா (ஈ) வஜ்ரபானிர் (ல) குஹ (ஹ்ரீம்) ஹ (ஹ) ஸ (ஸ) மாதரிஷ்வ (க) அப்ரம்
(ஹ) இந்த்ரா (ல)/
புனர் (மீ ண்டும் வருதலை குறிக்கும்) குஹ (ஹ்ரீம்) ஸகலா (ஸ , க, ல) மாயாய (ஹ்
ரீம்) க () புருசேச விஸ்வமாதாதி வித்யா.
முதலாவது கூடம் ஐந்து பீஜாட்சரங்களை கொண்டுள்ளது –
க - ஏ - ஈ - ல - ஹ்ரீம்.
மூன்று கூடங்களும் ஹ்ரீம் பீஜத்துடன் முடிவுறுகின்றன. இந்த ஹ்ரீம் பீஜம் ஹ்ரி
ல்லேகா எனப்படும். இந்த ஹ்ரில்லேகா பீஜம் பல முக்கியத்துவங்கள் உடையது, ம
ாயா பீஜம் எனவும் அழைக்கப்படும். வாக்ப கூடம் அக்னி கண்டம் எனவும் அழைக்
கப்படும். இது லலிதாம்பிகையின் ஞான சக்தியினை குறிக்கும். க என்பது பிரம்மா,
படைத்தலை செய்பவர், ஏ என்பது சரஸ்வதி ஞானத்தின் அதிபதி, ஈ என்பது லக்ஷ்
மி, ல இந்திரன், ஹ்ரீம் என்பது சிவ சக்தி ஐக்கியம். க என்ற பீஜம் காம பீஜ மந்திர
மான க்லீம் இற்கு மூலமானது.
அத்துடன் இந்த “க” பீஜ மந்திர சக்தி சாதகனுக்கு அமைதியினையும் செல்வத்தி
னையும் தரும் வல்லமை உள்ளது. அடுத்த பீஜமான "ஏ" என்பது சாதகனுடைய துர
திஷ்டங்களை விலக்கும். “ல” என்ற பீஜம் சாதகனுக்கு வெற்றியினை தரும். ஆக
முதல் நான்கு பீஜங்களும் சாதகனுக்கு அமைதி, செல்வம், துரதிஷ்டங்களை விரட்
டல், புனிதத்துவம், மற்றும் இந்திரனைப்போன்ற வல்லமையினை தரும்.
இதன் பொருள் சாதகன் தான் எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றியி
னை பெறுவான் என்பதாகும்.
(இந்திரன் அனைத்து தேவர்களதும் தலைவன், எல்லாக்காரியங்களிலும் வெற்றி
பெறுபவன்).
ஹ்ரீம் என்ற பீஜம் மொத்தம் பன்னிரெண்டு எழுத்துக்களால் ஆனது. ஹ+ர்+ஈ+ம் ஆ
கிய நான்கும் பிந்து வும் சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உருவாகின்றது. இந்த பிந்து என்பது க
டைசி எழுத்தான ம் இற்கு மேல் காணப்படுவது. இந்த பிந்துவில் மேலும் எட்டு பீஜ
ங்கள் அடங்கி இருக்கும். அவையாவன் அர்த்தசந்திர, ரோதினி, நாத, நாதாந்த, சக்தி,
வ்யாபிக, சமனா, உன்மானி இந்த எட்டையும் சேர்த்து பிந்து நாத என்று அழைக்கப்
படும்.
இந்த எட்டும் மற்றைய நான்கு பீஜங்களும் (ஹ+ர்+ஈ+ம்) சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உரு
வாகின்றது. இந்த பிந்து உச்சரிப்பில் முக்கியத்துவம் உடையது. ஒவ்வொரு பீஜத்தி
ற்கும் அதனை உச்சரிப்பதற்கான கால அளவு உள்ளது. இந்த முதலாவது வாக்ப கூ
டத்தின் உச்சரிப்பிற்கு பதினோரு மாத்திரை அளவு இருக்கவேண்டும் என்பது விதி (
மாத்திரை என்பது கண்ணிமைக்கும் அளவினைக் குறிக்கும், ஒரு செக்கனை விட
குறைவான காலம்).
பீஜங்களை உச்சரிப்பதற்கு விதிகள் உள்ளன. வாக்ப கூடத்தினை உச்சரிக்கும் போ
து மூலாதார சக்கரத்திலிருந்து அனாகத சக்கரம் வரை அந்த மந்திர சக்தியினை அ
க்னி சொருபமாக உருவகித்து உச்சரிக்க வேண்டும்.
இரண்டாவது கூடமான காமராஜ கூடம் அல்லது மத்திய கூடம் லலிதாம்பிகையி
ன் கழுத்து தொடக்கம் நாபி வரையிலான பகுதியினை தியானிக்க வேண்டும். இந்த
க்கூடமே அதிகளவு பீஜங்களை உடையது, மொத்தம் ஆறு பீஜங்கள். அவை ஹ -
ஸ - க - ஹ - ல - ஹ்ரீம். இவற்றில் க, ல, ஹ்ரீம் ஆகிய மூன்றும் ஏற்கனவே விபரிக்
கப்பட்டுவிட்டது. புதிதாக இரண்டு பீஜங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஹ
இரண்டு தடவை வருகிறது.
முதலாவது ஹ சிவனையும், இரண்டாவது ஹ ஆகாய தத்துவத்தினையும் (சௌந்
தர்ய லஹரி 32 ஸ்லோகம் இந்த இரணடாவது ஹ சூரியனை குறிக்கின்றது எனக்
கூறும்) இடையில் உள்ள ஸ விஷ்ணுவினையும் குறிக்கும்.
பஞ்ச பூதங்களில் ஸ என்பது வாயு பூதத்தினை குறிக்கும். ஹ என்ற பீஜம் அலி பீஜ
ம் எனவும் குறிப்பிடப்படும். இதனாலேயே ஹ்ரீம் பீஜம் சிவ சக்தி ஐக்கியம் எனக்கூ
றப்படுகிறது. முதலாவது கூடத்தில் பிரம்மா குறிப்பிடப்பட்டது, ஆதலால் அது ப
டைத்தலுடன் தொடர்புடையது. இந்த கூடத்தில் விஷ்ணு குறிப்பிடப்படுவதுடன் இ
ந்தக்கூடம் காத்தலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தக்கூடம் 11.50 மாத்தி
ரை அளவில் உச்சரிக்கப்பட வேண்டியது.
இதனை உச்சசிக்கும் போது அனாகதத்திலிருந்து ஆஞ்சா வரையில் கோடி சூரிய பி
ரகாச ஒளி பயணிப்பதாக தியானிக்க வேண்டும். இந்த கூடம் சூரிய கண்டம் எனவு
ம் குறிப்பிடப்படுகிறது. பிரம்மத்தினுடைய இரண்டாவது தொழிலான காத்தல் தொ
ழிலிற்கான சக்தியினை வழங்குவது. இது காத்தலுடன் தொடர்புடையதால் இச்சை
இணைந்தே இருக்கும்.
மூன்றாவதும் கடைசியுமான கூடம் சக்தி கூடம் எனப்படும். இதில் நான்கு பீஜங்க
ள் உள்ளன. இது லலிதாம்பிகையின் நாபி தொடக்கம் பாதம் வரையிலான பகுதியா
க தியானிக்க வேண்டும். இதிலுள்ள பீஜங்கள் ஸ - க - ல - ஹ்ரீம் ஆகும். முதலாவ
து கூடம் ஐந்து பீஜங்கள், இரண்டாவது ஆறு பீஜங்கள், முன்றாவது நான்கு பீஜங்கள்
உடையது.
இதன் மூலம் காத்தலுக்குரிய சக்தியில் அதிக பீஜங்களும் அழித்தலுக்குரிய கூடத்
தில் குறைந்தளவு பீஜங்களும் காணப்படுவதன் மூலம் காத்தலுக்கு அதிக சக்தியும்
அழித்தலுக்கு குறைந்த சக்தியும் தேவை என்பதை உணரலாம். வாக்ப கூடம் சூஷ்
ம புத்தியினை குறிக்கும். காமராஜ கூடம் உயர்ந்த வரத்தினையும், செல்வம், புகழ்
ீ
ஆகியவற்றை தரும், மூன்றாவது சக்தி கூடம், முதலிரண்டு கூடங்களில் உள்ளவ
ற்றை விரித்து ஆற்றலை கொடுக்கும்.
மத்திய கூடத்தில் உள்ள இரண்டு "ஹ" பீஜம் நீக்கப்பட்டு மூன்றாவது சக்தி கூடம்
உருவாகின்றது. இந்த மூன்றவது கூடம் எட்டு அரை மாத்திரை அளவில் உச்சரிக்க
வேண்டியது. முழு பஞ்சதசி மந்திரமும் முப்பத்தியொரு மாத்திரை அளவில் உச்ச
ரிக்க வேண்டியது. தொடர்ச்சியான ஜெபத்தில் ஒவ்வொரு கூடத்திற்கும் இடையி
ல் நேர இடைவெளி இன்றி இருபத்தியொன்பது மாத்திரை அளவில் ஜெபிக்க வே
ண்டும்.
இந்த மாத்திரை அளவுகள் மானசீக ஜெபத்திற்கு கணக்கில் கொள்ளத்தேவை இல்
லை. இந்தக்கூடத்தினை அனாகதத்தில் இருந்து நெற்றி வரை கோடி சந்திர பிரகாச
மாக தியானிக்க வேண்டும். அனாகதத்தில் இருந்து நெற்றியினை அடைவதற்கு ஒ
ன்பது நிலைகள் உள்ளன. இந்த ஒன்பது நிலைகளும் முன்னர் விளக்கிய ஹ்ரீம் பீ
ஜத்தில் உள்ள நாதத்தின் பகுதிகள்.
இந்தக்கூடம் சந்திர கண்டம் எனப்படும், இது பிரம்மத்தின் மூன்றாவது செய்கையா
ன அழித்தலை குறிக்கும். அழித்தல் "ல" என்ற பீஜத்தால் குறிப்பிடப்படும். பொதுவ
ாக "ல" ஆயுதங்களான சக்கரம், வஜ்ரம், திரிசூலம் ஆகியவற்றை குறிக்கும். பஞ்ச
தசியில் உள்ள மூன்று ஹ்ரீம் பீஜங்களும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய
முத்தொழில்களையும் குறிக்கும்.
ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹரியின் 32 ஸ்லோகத்தில் பஞ்ச்சதசியின் பீஜங்
கள் பற்றி மறைவாக பேசுகிறார். இரண்டாவது கூடத்தில் உள்ள இரண்டாவது "ஹ"
பீஜம் ஆகாய பூதம் இன்றி சூரியனை குறிப்பதாக கூறுகிறார். ஒவ்வொரு பீஜத்திற்
குமான விளக்கங்கள் ஒவ்வொரு அறிஞருக்கு ஏற்ப வேறுபடும்.
ஒரு மாலை (108) பஞ்சதசி ஜெபம் செய்வது முன்று மாலை பூர்ண காயத்ரி ஜெபிப்ப
தற்கு சமம் எனக் கூறப்பட்டுள்ளது. பூர்ண காயத்ரி என்பது காயத்ரி மந்திரத்தின் இ
றுதியில் " பரோ ராஜஸே ஸாவதோம்" என்ற வரியினை சேர்த்து ஜெபிப்பதாகும்.
கிருஷ்ணாஷ்டகம்
பசுபதி சிவாக்யம்...உணர்வோனே
பழநிமலை வீற்று...அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி...மிகவாழ
அமரர் சிறை மீட்ட...பெருமாளே!!.
......... சொல் விளக்கம் .........
உணர்வோனே ... அறிந்தவனே