Professional Documents
Culture Documents
நீதிக்கதை - குரங்கு அறிஞர்
நீதிக்கதை - குரங்கு அறிஞர்
“தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஓர் அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக்
கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.
அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு
மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல்
பழங்களைத் தின்று வந்தார்.
அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது.
அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. சிறிது நேரத்தில் கப்பல்
பாக்தாத் நகரை அடைந்தது. அப்போது அவ்விடத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது.
அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த
் டுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார்.
நபரைத் தேர்நதெ இப்பதவியை விரும்புவோர்
ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும்
நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்நதெ
் டுக்கப்படுவார் என்றும்
அறிவிக்கப்பட்டது.
அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும்
நகைத்தனர். “இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப்
போகிறதாம்!” என்று கேலி செய்தனர். எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச்
செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக
இருந்தது.
அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக
உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச்
சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக்
கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமாகச் சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு மிகவும்
பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.
“எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?”
என்றனர்.