You are on page 1of 2

குரங்கு அறிஞர்

ஓர் அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக்


கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத்
் டுத்தார். கோபமடைந்த ஓர் அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.
தேர்நதெ

“யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஓர் அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக்
கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“நீ அனுமதியின்றி இவ்விடத்தினுள் நுழைந்து விட்டாய். அதனால் நான் உன்னைக் குரங்காக


மாற்றப் போகிறேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு
மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல்
பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது.
அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.


கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான்


பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. சிறிது நேரத்தில் கப்பல்
பாக்தாத் நகரை அடைந்தது. அப்போது அவ்விடத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது.
அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த
் டுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார்.
நபரைத் தேர்நதெ இப்பதவியை விரும்புவோர்
ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும்
நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்நதெ
் டுக்கப்படுவார் என்றும்
அறிவிக்கப்பட்டது.
அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும்
நகைத்தனர். “இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப்
போகிறதாம்!” என்று கேலி செய்தனர். எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச்
செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக
இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக
உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச்
சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக்
கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமாகச் சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு மிகவும்
பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?”
என்றனர்.

அரசர் தன் முடிவில் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக


நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று.
ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள்.
அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த
மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை
அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு


அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

You might also like