Professional Documents
Culture Documents
2.கோழி பண்ணை
2.கோழி பண்ணை
திட்ட
முன்மொழிவு
“POULTRY FARMING”
“நாட்டுக் கோழி
பண்ணை வளர்ப்பு”
Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 1
வளர்ப்பு
SELF INTRODUCTION | சுய அறிமுகம்
1. Project Name | திட்டத்தின் பெயர்:
INTRODUCTION | அறிமுகம்
Chicken: கோழி:
கோழி (chicken) என்பது காடுகளிலும், மனிதர்களால் வீடுகளிலும் அதற்கான கோழிப்
பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில்
பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது.
நாட்டு கோழியை தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே வலை
அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும். 15 அடி அகலம், 30 அடி
நீளம், 6 அடி உயரம் கொண்ட வலையினை அடிக்க வேண்டும். மேல் கூரை
போடத்தேவையில்லை. இந்த வலையை ஒட்டி, ஆடுகள் சாப்பிடக்கூடிய அகத்தி, சூபாபுல்,
முள்முருங்கை, கிளிரிசிடியா, சித்தகத்தி, வாகை, வாதார காய்ச்சி, வெவ்வேல் மரங்களை
நடவு செய்யலாம். அதனோடு வருமானம் தரக்கூடிய கருவேப்பிலை, பப்பாளி, மருதாணி
மரங்களையும் வைக்கலாம். வலைக்குள் 3 கொடாப்புகள் அமைக்க வேண்டும். அவற்றை
அமைக்கும் முறை மற்றும் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வலையடித்த இடத்தில் ஒரு மூலையில் 3 அடி அகலம், 3 அடி உயரம், 3 அடி நீளம்
கொண்ட கொடாப்பு போல் அந்த கூண்டு இருக்க வேண்டும். பழைய மரப்பலகைகளை
வாங்கி, கழிவு எண்ணெயில் ஊற வைத்து பயன்படுத்தலாம். அல்லது தார் ஷீட்டைக்
கொண்டு அப்படியே குச்சி மேல் போட்டாலும் போதும். அடிக்கடி மாற்ற நேரிடுவதால்
தென்னங்கீற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 6
வளர்ப்பு
நாட்டுக்கோழி இனங்கள்:
இந்தியாவில் பலவகை நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அசில் ரகங்கள்,
பெருவிடை, சிறுவிடை மற்றும் கடக்நாத் போன்ற கருங்கோழியினங்களும்
காணப்படுகின்றன.
கோழிகளுக்கான தீவனம்:
மேய்ச்சல் முறை கோழி வளர்ப்பு முறையில் கோழிகள் பகல் முழுவதும் தன்னுடைய
இரையை நிலங்களில் தேடிப் பெற்றுக் கொள்கின்றன. சுற்றி திரிவதால்மேய்ச்சலின் போது
இயற்கையாக கிடைக்கும் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட் கொண்டு . இரவு
நேரங்களில் பண்ணையில் அடைந்து கொள்கின்றன.
நாட்டுக்கோழிகளைப் பொறுத்த வரை தீவின தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. அத்துடன்
அதற்கான செலவும் குறைவு. குறைந்த எண்ணிக்கையில் வீட்டில் வளர்க்கும் போது
சமையலறைக் கழிவுகள், காய்கறி கழிவுகள்,புல் வகைகளை உணவாக கொடுத்து
வளர்க்கலாம்.
பெரியளவில் பண்ணைகளாக வளர்க்கும் போது தீவினத்தின் தேவை அதிகமாகவே
ஏற்படும். மேய்ச்சல் முறையில் கோழிகளை வளர்க்கும் போது இரவுப் பொழுதில் அவர்
தீவினமாக தவிடு போன்ற உணவை கட்டாயம் வைத்தே கோழிகளை கொட்டகையில்
அடைக்க வேண்டும். இல்லாது போனால் கோழிகளின் எடையில் வீழ்ச்சி ஏற்படும்.
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரை வகைகள், அசோலா, கினியா புல், கோ-4, குதிரை
மசால்,காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம்.
இயற்கைத் தீவனங்கள்:
1. கறையான் உற்பத்தி
2. புழு உற்பத்தி
3. சோளன் மற்றும் பயறு செய்கை
4. புல்லினங்களை வளர்த்தல்
5. ஆடு மாடு போன்றவற்றின் இரத்தம்.
அ. வெள்ளைக் கழிச்சல்:
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளைக் கழிச்சல் நோய்,
கோடை மற்றும் குளிர் காலப் பருவ மாற்றத்தின் போது தாக்கக்கூடியதாகும்.
நோய் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம், சளி, காற்று மூலமாகவும், பண்ணையாள்கள்,
தீவனம் மற்றும் தண்ணீர் மூலமாகவும் பரவுக்கூடியது. இதைக் கொக்கு நோய் என்றும்
கூறுவார்கள்.
பப்பாளி இலை, வேப்ப இலை மற்றும் சிறு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து
விளக்கெண்ணெயில் குழைத்து வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.
அல்லது
துளசி இலை
தூது வலை இலை
கற்பூரவள்ளி இலை
முல் முருங்கை இலை
பப்பாளி இலை
கொய்யா இலை
வேப்ப இலை
ஆ. அம்மை நோய்:
கோழிகளின் இறகு அற்ற பகுதிகள், உறுப்புகளைப் பாதிக்கும் நச்சுயிரி நோயே அம்மை
நோயாகும். முதலில் பரு உண்டாகி, பிறகு அதில் சீல் கட்டி நீர் கோர்த்த
கொப்பளங்களாகி உடைந்து விடும்.
இ. இரத்தக் கழிச்சல்:
மூன்று வார வயதுக்கு மேலான குஞ்சுகள், கோழிகளை ஈரமான இடத்தில் அடைத்து
வைக்கும்போது ரத்தக் கழிச்சல் அதிகளவில் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளின்
குடல் வீங்கி ரத்தக் கசிவு ஏற்படுவதால் எச்சத்தில் ரத்தக் கசிவு காணப்படும். இதைத்
தடுக்க கொட்டகையைச் சுத்தமாகவும், ஈரமின்றியும் பாதுகாக்க வேண்டும்.
ஈ. ஒட்டுண்ணி நோய்கள்:
ஒட்டுண்ணி நோய்கள் அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என இரு வகைப்படும். திறந்த
வெளியில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளை அதிகளவில் அக ஒட்டுண்ணிகள்
தாக்குகின்றன.
உ. பற்றாக்குறை நோய்கள்:
தோல் முட்டையிடுதல், கால்வாதம் மற்றும் கோழிகள் ஒன்றையொன்று கொத்துதல்
ஆகியவை பற்றாக்குறை நோய்களாகும்.
விற்பனை:
குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம். இயற்கையாக
வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல
ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு
விற்காமல் நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை விற்பனை
செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
1.
2.
3.
4.
5.
3. மின்சாரத்தின் தேவை:
5. நீர்ப்பாசனம்:
இலக்கு:
ஒருவர் தன் வாழ்வாதார தேவைக்கு தானும் தன் குடும்பமும், சமூகமும் தற்சார்பு
பொருளாதார வாழ்க்கையில் நிறைவு பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும்
அபிவிருத்தி அடைகின்றது. வாழ்வாதார தேவைகளுக்கான இறக்குமதி குறைகின்றது.
அதன் மூலம் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகின்றது.
இலங்கை போன்ற நிலம், நீர் வளம் கொண்ட நாட்டில் வாழும் நாங்கள் எங்கள்
வளங்களை பயன் படுத்தி முன்னேற முடியும்.
3. அதை தேர்ந்து எடுக்க காரணம் என்ன? அதன் தேவை அல்லது அவசியம் என்ன?
அதன் முக்கியத்துவம் என்ன?