You are on page 1of 1

பழமொழிகள் 10

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1-மகப்பேறும் பிள்ளைப்பேறும் மஹாதேவனுக்கே வெளிச்சம்.

2 -கத்திரிக்காய் முத்துனா கடைவீதிக்கு வந்துதானே ஆகணும்

3 - வாயப்பாருங்க,வங்காள அண்டாவுக்கு வளையம் போட்ட மாதிரி

4 - வாயில்லைன்னா நாய் தூக்கிட்டுப்போயி நச்சுனு போட்ரும்,பேய் தூக்கிட்டுப் போயி பொக்குனு


போட்டும்.

5 - வாழ்த்தில் வாழ்வாருமில்லை,திட்டில் சாவாருமில்லை

6 -அழ அழ சொல்றவுக அரசாளச்சொல்லுவாக சிரிக்க சிரிக்க சொல்றவுக சீரியழியச் சொல்லுவாக.

7-கூந்தலுள்ள சீமாட்டி அள்ளியும் முடியலாம் அவுத்தும் விடலாம்

8 -அடுப்படியே திருப்பதி,ஆமக்கனே குலதெய்வம்

9 -அம்மி நயமா,அரைச்சவ கை நயமா கோழி நயமா,கூட்டுனவ கை நயமா

10 - உடம்பு முழுக்க எண்ணயத்தடவிக்கிட்டு, மண்ணுல போய் உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்

You might also like