அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது. அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது தொழில் எனப்படுகிறது. இறைவனார் மாரணத்திற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள். 1. நச்சுப்புல், 2. நீர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மான் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. காஞ்செறிவேர் , 8. நாவி ஆகும். இதில் பலவகையான மாரணங்கள் உண்டு மனிதர்களை மாரணம் செய்ய – நச்சுப்புல், நீர்விஷமும், வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், காஞ்செறிவேரும், கண்ணாடிகளை உடைக்க – அம்மான் பச்சரிசியும், மிருகங்களை மாரணம் செய்ய – மருதோன்றி, கார்த்திகை கிழங்கும் . இந்த குறிப்பிட்ட மூலிகைகளுக்கும் , அதன் தொடர்பான கர்மாக்களுக்கும் மிகுந்த இசைவு உள்ளதை அரும்பாடுபட்டு கடுமையான விரத அனுஷ்டானங்களை , பயிற்சியை செய்து மகரிஷிகளும் , சித்தர்பெருமக்களும் ,ஞானிகளும் கண்டறிந்து உலகிற்கு மனிதர்களின் நன்மையை கருதி அருள் செய்திருக்கின்றார்கள் .
இவைகளை அவர்களின் நோக்கத்தினை ஒட்டியே அதாவது சக மனிதரை இம்சிக்காமல் எல்லோரையும்
தன்னைப்போலவே எண்ணி எல்லோருக்கும் நன்மைகளை செய்யும் பொருட்டு பயன்படுத்தினால் இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும் விசேசமாக வாழலாம் .
பிற உயிர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் சங்கடம் ஏற்படுத்தினாலும் மனிதரது இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும் பிறந்து எல்லோராலும் இகழ்ந்து பேசப்படும் பிறப்பாகி அல்லல்பட நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்