Professional Documents
Culture Documents
ஒரு கர்மாவுக்கு எட்டு மூலிகைகளை ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் அவர்கள் உபதேசிக்கின்றார். எட்டு
கர்மாக்களுக்கும் 8 x 8 = 64 மூலிகைகள் ஆகின்றன. அஷ்டகர்மாக்கள் என்றால் என்னென்ன என்பதை சென்ற
பகுதியில் கண்டோம் அதனை மீண்டும் உங்கள் நினைவிற்கு.....
1. வசியம் என்றால், ஆகர்ஷனம், மோகனம், வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும்.
ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில், தான்
சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது, மேலும் வசியம்
செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.
2. மோகனம் என்றால், மயக்குவது. தன்னிடம் மயங்கச் செய்வது, தான் சொல்வதை மற்றவர்களை கேட்க
செய்வது.
3. உச்சாடனம் என்றால், தனது மந்திர சக்தியால் தன்னுடைய நோய், கடன், பேய், பிசாசு, பூதம், எதிரிகள்
போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும்.
4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே
நிறுத்தலாம் என்கிறார். காற்றை, நீரை, ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம், நீர்த்தன்மை உடைய
பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம்.
5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள், மிருகங்கள், பொருட்கள் போன்ற
எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான
பொருள்களையும், அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.
6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது, பகைமை உண்டாக்குவது, எது தனக்கு
வேண்டாததோ அதனை, தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. (தன்னிடமுள்ள தீய எண்ணங்கள், தீய
பழக்கங்கள் போன்றவை).
7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது, பிரிப்பது. (நண்பர்கள், கணவன் மனைவி, தாய் குழந்தையைப் பிரிப்பது
போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும், மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை,
நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற
கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.
8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது. மனிதர்கள், தனக்குள்ளும், வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை
அழிப்பதற்காகவே ஏற்பட்டது.
ஒரு சில நன்மைகளை கருத்தில் கொண்டு அனைத்து மூலிகைகளின் வேறு பெயர்கள் இங்கே தரப்படவில்லை.
இந்த குறிப்பிட்ட மூலிகைகளுக்கும், அதன் தொடர்பான கர்மாக்களுக்கும் மிகுந்த இசைவு உள்ளதை அரும்பாடுபட்டு
கடுமையான விரத, அனுஷ்டானங்களை, பயிற்சியை செய்து மகரிஷிகளும், சித்தர்பெருமக்களும், ஞானிகளும்
கண்டறிந்து உலகிற்கு மனிதர்களின் நன்மையை கருதி அருள் செய்திருக்கின்றார்கள். இவைகளை அவர்களின்
நோக்கத்தினை ஒட்டியே அதாவது சக மனிதரை இம்சிக்காமல் எல்லோரையும் தன்னைப்போலவே எண்ணி
எல்லோருக்கும் நன்மைகளை செய்யும் பொருட்டு பயன்படுத்தினால் இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும் க்ஷேமமாக
வாழலாம்.
பிற உயிர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் சங்கடம் ஏற்படுத்தினாலும் மனிதரது இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும்
பிறந்து எல்லோராலும் இகழ்ந்து பேசப்படும் பிறப்பாகி அல்லல்பட நேரிடும் என்பதை மறக்க வேண்டாம். இப்பிறப்பின்
பேரிடர் நீக்க உருவான இந்த கலைதனை சக மனிதர்களின் வாழ்வின் நன்மைகளை கருதியே இங்கே விரிவாக
பதிவிடுகின்றோம். இதனை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி, இப்பிறவியையும் வரும் பிறவிகளையும் துக்க
சாகரத்தில் (துயர கடலில்) மூழ்கடித்துக் கொள்ள வேண்டாமென பரிவுடன், உரிமையாக, அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன். இந்த மூலிகைகளை நாம் கண்டவுடன் பறிக்கலாகாது, அதற்குரிய சாப நிவர்தத ் ி
மந்திரங்களை சொல்லிய பின்தான் எடுக்கவேண்டும். தவறான சிந்தையுள்ள மனிதர்களின் கையில் இவைகள்
கிடைத்தால் அவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புண்டு என்பதால் மகரிஷிகளும், சித்தர்களும்,
ஞானிகளும் இவை சம்பந்தமான அனைத்தையும் மறை பொருளாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.
நற்குணம், நல்லெண்ணம், பரோபகார சிந்தையும் உள்ளவர்கள், லோக க்ஷேமம் கருதி தேடினால் இந்த மூலிகைகள்
தன்னைத்தானே வெளிப்படுத்தும் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியபெருமான் அவர்கள். (இதனை படிக்க நேர்பவர்களில்
யாரேனும் அப்படி இருக்க மாட்டார்களா எனும் பேராவலில் (பேராசையில்) இதனை என்னுள் புதையாமல்
வெளிப்படுத்துகிறேன், அடியேனை நேரிலோ, தொலைபேசியிலோ தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம் என
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (ஓம் சத்குருவே தத் சத் ஓம்).
ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும், நட்சத்திரமும், மந்திரமும் உண்டு.
மூலிகை சாபம் நீகக
் வும், எடுக்கவும் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எப்படி செய்ய
வேண்டும் என்பதனை அடுத்த பதிவினில் விரிவாக பார்ப்போம்.