You are on page 1of 13

சக்சஸ் கோச்சிங் சென்டர் - சித்தனி - 2022

( அரசுப்பணி நாடுவோரின் பயிற்சிப்பட்டறை )

தமிழ் ( ஏழாம் வகுப்பு - 2 )

கலங்கரை விளக்கம்

# வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இளங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை....

- கடியலூர் உருத்திரங்கண்ணனார்

# சொல்லும் பொருளும் :

மதலை - தூண் ; ஞெகிழி - தீச்சுடர் ; அழுவம் - கடல் ; சென்னி - உச்சி ; உரவுநீர்


- பெருநீர் பரப்பு ; கரையும் - அழைக்கும் :

# கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.

# இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.

# இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய


நூல்களை இயற்றியுள்ளார்.

# பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் - தொண்டைமான்


இளந்திரையன்

# வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த


வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாக பாடப்படுவது -
ஆற்றுப்படை இலக்கியம்

# வேயாமாடம் எனப்படுவது - சாந்தினால் பூசப்படுவது


பத்துப்பாட்டு நூல்கள் :

1. திருமுருகாற்றுப்படை

2. பொருநராற்றுப்படை

3. பெரும்பாணாற்றுப்படை

4. சிறுபாணாற்றுப்படை

5. முல்லைப்பாட்டு

6. மதுரைக்காஞ்சி

7. நெடுநல்வாடை

8. குறிஞ்சிப்பாட்டு

9. பட்டினப்பாலை

10. மலைபடுகடாம்

கவின்மிகு கப்பல்

- மருதன் இளநாகனார்

# சொல்லும் பொருளும் :

உரு - அழகு ; போழ - பிளக்க ; வங்கூழ் - காற்று ; நீகான் - நாவாய் ஓட்டுபவன் ;


வங்கம் - கப்பல் ; எல் - பகல் ; கோடு உயர் - கரை உயர்ந்த ; மாட ஒள்ளெரி -
கலங்கரை விளக்கம்

# மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.

# கலித்தொகையின் மருதத் திணையில் உள்ள 35 பாடல்களை பாடியுள்ளார்.

# மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என


அழைக்கப்படுகிறார்.

# அகநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.

# புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது.


# அகநானூற்றை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.

# புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது - கடல்

எட்டுத்தொகை நூல்கள் :

1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4. பதிற்றுப்பத்து

5. பரிபாடல்

6. கலித்தொகை

7. அகநானூறு

8. புறநானூறு

தமிழரின் கப்பற்கலை :

# நமக்கு கிடைத்துள்ள நூல்களில் மிகவும் பழமையானது - தொல்காப்பியம்

# தொல்காப்பிய நூல் 'முந்நீர் வழக்கம்' என்ற கடல் பயணத்தை குறிப்பிடுகிறது.

# பூம்புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும்


இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை பட்டினப்பாலை விளக்குகிறது.

# 'சேந்தன் திவாகரம்' எண்ணம் நிகண்டு நூலில் பல வகையான கப்பல்களின்


பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

# தமிழர்கள் தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவற்றை சிறிய


நீர் நிலைகளை கடக்க பயன்படுத்தினார்.

# கலம், வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை. இவற்றைக்கொண்டு


தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டனர்.

# நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்கால தமிழ்நாட்டு


கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
# கப்பல் கட்டும் கலைஞர்கள் 'கம்மியர்' என்றழைக்கப்பட்டனர்.

# " ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க


வேண்டும் ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது
பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர் - வாக்கர் என்னும்
ஆங்கிலேயர்.

# கப்பல் செலுத்துபவரை மாலுமி, மீ காமன், நீகான், கப்பலோட்டி முதலிய


பெயர்களால் அழைப்பர்.

# கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் கருவி - சுக்கான்

ஆழ்கடலின் அடியில்

# 'அறிவியல் புனைகதைகளில் தலைமகன்' என்று அழைக்கப்படுபவர் - ஜூல்ஸ்


வெர்ன்

# இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

# எண்பது நாளில் உலகத்தை சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்


உள்ளிட்ட பல புதினங்களை படைத்துள்ளார்.

# அவர் எழுதிய 'ஆழ்கடலின் அடியில்' என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று.

இன்பத்தமிழ் கல்வி

- பாரதிதாசன்

# சொல்லும் பொருளும் :

வெற்பு - மலை ; கழனி - வயல் ; நிகர் - சமம் ; பரிதி - கதிரவன் ; அன்னதோர் -


அப்படிஒரு ; கார்முகில் - மழைமேகம் ; துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார்.

# கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் என பன்முக ஆற்றல் கொண்டவர் -


பாரதிதாசன்

# பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வடு,


ீ குடும்ப விளக்கு,
கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
# இவர் எழுதிய 'பிசிராந்தையார்' என்ற நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது
அளிக்கப்பட்டது.

அழியாச் செல்வம்

# " வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை ... என்ற பாடல் வரியை


இயற்றியவர் - சமணமுனிவர்

# சொல்லும் பொருளும் :

மைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம் ; கோட்படா - ஒருவரால்


கொள்ளப்படாது ; விச்சை - கல்வி ; வவ்வார் - கவர முடியாது ; எச்சம் - செல்வம்.

# சமணமுனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் - நாலடியார்

# இந்நூல் பதினெண்கீ ழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

# இந்நூல் 400 வெண்பாக்களால் ஆனது.

# இந்நூலை 'நாலடி நானூறு' என்றும் 'வேளாண் வேதம்' என்றும் அழைப்பர்.

# திருக்குறள் போன்ற அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் பகுப்பு கொண்டது.

# இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்து போற்றப்படுவதை 'நாலும்


இரண்டும் சொல்லுக்குறுதி' என்னும் தொடர் மூலம் அறியலாம்.

வாழ்விக்கும் கல்வி

# திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும்


திருக்குறளை பரப்பும் பணி செய்தவர் - திருக்குறளார் வ.முனிசாமி

# நகைச்சுவை ததும்பும் தனது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர்.

# வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை


உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

# "உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்" என்னும் இவரது நூல்


பெரும்புகழ் பெற்றது.

# வாழ்விக்கும் கல்வி என்னும் கட்டுரை 'சிந்தனைக் களஞ்சியம்' என்னும் இவரது


நூலில் இருந்து தொகுத்து தரப்பட்டுள்ளது.
# காலத்தின் அருமையை கூறும் திருக்குறள் அதிகாரம் - காலமறிதல்

# 'பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர் - பாரதியார்

பள்ளி மறுதிறப்பு

# இக் கதையை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

# கனவு - என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.

# பின்னல், வேட்டை, தண்ணர்ீ யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட


பல நூல்களை எழுதியுள்ளார்.

# 'இளமையில் கல்' என்று கூறியவர் – ஔவையார்

ஒரு வேண்டுகோள்

- தேனரசன்

# சொல்லும் பொருளும் ;

பிரும்மாக்கள் - படைப்பாளர்கள் ; நெடி - நாற்றம் ; மழலை - குழந்தை ; வனப்பு -


அழகு ; பூரிப்பு - மகிழ்ச்சி ; மேனி - உடல்

# தேனரசன் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர்.

# இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள்


எழுதியுள்ளார்.

# மண்வாசல், வெள்ளைரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை


எழுதியுள்ளார்.

கீ ரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுறமொழிதல்)

# ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுரமொழிதலும்


அவற்றுள் ஒன்று. இதனை 'சிலேடை' என்று கூறுவர்.

# " கட்டி அடிக்கையால் கால்மாறி பாய்கையால்

மெட்டி மறிக்கின்ற மேன்மையால் - என்ற பாடல் வரியின் ஆசிரியர் -


காளமேகப்புலவர்
# சொல்லும் பொருளும் :

வண்கீ ரை - வளமான கீ ரை ; பரி, குதிரை ; முட்டப்போய் - முழுதாக சென்று.

# காளமேகப் புலவரின் இயற்பெயர் - வரதன்

# மேகம் மழை பொழிவது போல கவிதைகளை விரைந்து பாடியதால் இவர்


காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.

# திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல்


ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

# இவரது தனிப்பாடல்கள் 'தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலில் இடம்


பெற்றுள்ளது.

பேசும் ஓவியங்கள்

# ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு. அதில் ஒன்று ஓவியக்கலை.

# ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி, திரைசீலை, கிழி, படாம் என பல


பெயர்களில் அழைப்பர்.

# சீவகசிந்தாமணி காப்பியத்தின் குணமாலை எனும் தலைவி யானையைக் கண்டு


அஞ்சிய காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது.

# தற்காலத்தில் எங்களை "கலம்காரி ஓவியங்கள்" எனும் பெயரில் தமிழகத்திலும்,


ஆந்திராவிலும் ஓவியங்கள் வரைந்து வருகின்றனர்.

# ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற


செய்தி பரிபாடலில் இடம்பெற்றுள்ளது.

# புனையா ஓவியங்கள் பற்றி நம் இலக்கியங்கள் கூறும் செய்திகள் :

* புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் - நெடுநல்வாடை

* புனையா ஓவியம் புறம் போந்தன்ன - மணிமேகலை

# ஓவியம் - ஓவு, ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி

# ஓவியம் வரைபவர் - கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி


வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்.
# ஓவியக்கூடம் - எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர
அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம் சித்திரசபை.

# மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி


வரைவதையே கேலிசித்திரம் என்பர்.

# ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் - ராஜா ரவிவர்மா

# நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராக


கருதப்படுபவர் - கொண்டைய ராஜு

# நாட்காட்டி ஓவியங்களை "பசார் பெயிண்டிங்" என்றும் அழைப்பர்.

தமிழ் ஒளிர் இடங்கள்

# இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களில் தஞ்சை சரஸ்வதி மகால்


நூலகமும் ஒன்று.

# தமிழ் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் தமிழக அரசால் கி.பி 1981 இல்


தோற்றுவிக்கப்பட்டது.

# இதை வானத்தில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாடு என தெரியும் வகையில்


இதன் கட்டிட அமைப்பும் உள்ளது.

# உ .வே .சா நூலகம் சென்னையில் கி.பி 1942 இல் தொடங்கப்பட்டது.

# கீ ழ்த்திசை நூலகம் சென்னையில் கி.பி 1869 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

# இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏழாம் தளத்தில் இயங்கி


வருகிறது.

# கி.பி 1896 ஆம் ஆண்டு கன்னிமாரா நூலகம் சென்னையில் தொடங்கப்பட்டது.

# இது தமிழ் நாட்டின் மைய நூலகம் ஆகும். இது இந்திய நாட்டின் களஞ்சிய
நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

# திருவள்ளுவரின் புகழை உலகறிய செய்யும் வகையில் சென்னை


கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம்
அமைக்கப்பட்டுள்ளது.
# தேரின் மொத்த உயரம் 128 அடி.

# வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரி

# திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்காக 2000 ஆம் ஆண்டு சனவரி


திங்கள் முதல் நாள் அன்று திறந்து வைக்கப்பட்டது.

# பாறையிலிருந்து சிலையின் உயரம் மொத்தம் 133 அடி. இது திருக்குறளின்


மொத்த அதிகாரங்கள் குறிக்கிறது.

# அறத்துப்பாலில் அதிகாரங்களை உணர்த்துவது போல் பீடம் 38 அடி உயரம்


கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

# பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களை குறிக்கும்


வகையில் சிலை 95 அடி உயரமும் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.

# திருவள்ளுவர் சிலை மொத்தம் 7,000 டன் எடை கொண்டது.

உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை

# மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியகம் அருகில்


உலகத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டுள்ளது.

# கி.பி 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்


மதுரையில் உலகத் தமிழ் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

# அதன்படி இக்கட்டடம் கட்டப்பட்டு கி.பி 2016 ஆம் ஆண்டு திறந்து


வைக்கப்பட்டது.

சிற்பக் கலைக்கூடம் - பூம்புகார்

# 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும், துறைமுக நகரமாக


விளங்கியது - பூம்புகார்

# இந்நகரை பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும், பட்டினப்பாலைலும்


இடம்பெற்றுள்ளன.
# இங்கே மருவூர்ப்பாக்கம் எனும் கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்னும் நகரப்
பகுதியில் அமைந்திருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

# பூம்புகார் நகரத்தின் பெருமையை உலகறிய செய்ய கி.பி 1973 ஆம் ஆண்டு


பூம்புகார் கடல் கரையில் சிற்பக் கலைக் கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

# இக்கூட்டம் ஏழு நிலை மாடங்களைக் கொண்டது.

# கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தி ஒன்பது சிற்பத் தொகுதிகள்


இதில் இடம்பெற்றுள்ளன.

உயிர் குணங்கள்

- இறையரசன்

# சொல்லும் பொருளும் :

நிறை - மேன்மை ; பொறை - பொறுமை; பொச்சாப்பு - சோர்வு; மையல் - விருப்பம்;


ஓர்ப்பு - ஆராய்ந்து தெளிதல்; அழுக்காறு - பொறாமை; இகல் - பகை ; மன்னும் -
நிலைபெற்ற.

# ஆண்டாள் பாடிய நூல் - திருப்பாவை

# சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக


பாடப்பட்ட நூல் - திருவெம்பாவை.

# இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

# இறையரசன் இயற்பெயர் சே. சேசுராஜா.

# ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி "கன்னிப்பாவை" என்னும் நூலை


எழுதியுள்ளார்.

இளைய தோழனுக்கு

- மு. மேத்தா

# வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் - மு. மேத்தா

# புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவராக இவரை போற்றுவர்.


# கண்ணர்ீ பூக்கள், ஊர்வலம், சோழ நிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களை
திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

# இவர் எழுதிய "ஆகாயத்துக்கு அடுத்த வடு"


ீ என்னும் புது கவிதை நூலுக்கு
சாகித்ய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

சட்டமேதை அம்பேத்கர்

# விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய


அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் - பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்

# அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் ராம்ஜி சக்பால் -
பீமாபாய் இணையருக்கு 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

# இவரது ஊர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்தனகிரி மாவட்டத்தை சேர்ந்த


அம்பவாதே என்பதாகும்.

# இவரது தந்தை ராணுவ பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

# அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியை தொடங்கினார்.

# இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப் பருவத்திலேயே பல


அவமதிப்புக்கு ஆளானார்.

# மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர்மீ து அன்பும் அக்கறையும்


கொண்டவராக விளங்கினார்.

# இதனால் பீமாராவ் சக்பால் அம்பவதேகர் எனும் தம் பெயரை பீமாராவ் ராம்ஜி


அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

# 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

# பிறகு பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் படித்து


1912 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்.

# பரோடா மன்னர் சாயாஜி ராவ் உதவியுடன் உயர்கல்விகற்க அமெரிக்கா


சென்றார்.

# 1915 இல் பண்டைய கால இந்திய வணிகம் என்ற அறிவியல் முதுகலைப் பட்டம்
பெற்றார்.
# 'இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் தலைப்பில்
ஆய்வுக்கட்டுரை ஒன்றை படைத்தார்.அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல்
நூல் இதுவே.

# பின்னர் இந்தியாவின் தேசிய பங்கு வதம்


ீ என்ற ஆய்வுக்காக கொலம்பியா
பல்கலைக் கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

# 1920 ஆம் ஆண்டு பொருளாதார படிப்பிற்காக லண்டன் சென்றார்.

# 1921 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டமும், 1923 ஆம் ஆண்டு ரூபாய்
பற்றிய பிரச்சினை என்னும் ஆராய்ச்சி கட்டுரைக்காக முனைவர் பட்டமும்
பெற்றார். அதே ஆண்டில் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

# படிப்பை முடித்து இந்தியா திரும்பினார் அம்பேத்கர்.

# 1924 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர்


நல்வாழ்வு பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.

# 1930 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து


கொள்வதற்காக புறப்படும் முன் "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க
வேண்டுமோ அதற்காகப் போராடுவேன், அதே சமயத்தில் சுயராஜ்யக்
கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்" என்று கூறினார்.

# சுதந்திரத் தொழிலாளர் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.

# ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927 ஆம் ஆண்டு தொடங்கினார்.

# சமத்துவ சமுதாயம் அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் எனும்


அமைப்பை உருவாக்கினார்.

# 1930 ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெற்றி


கண்டார்.

# 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது.

# ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட


அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும்
பொறுப்பேற்றுக் கொண்டார்.
# அரசமைப்பு சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட 7 பேர்
கொண்ட அமைப்பு சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.

# 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் நாக்பூரில் லட்சக்கணக்கான


மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

# அம்பேத்கர் எழுதிய "புத்தரும் அவரின் தம்மமும்" என்னும் புத்தகம் அவரது


மறைவுக்குப்பின் 1957 ஆம் ஆண்டு வெளியானது.

# அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் காலமானார்.

# அவருடைய மறைவிற்கு பிறகு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா


விருது 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

# அம்பேத்கரின் பொன்மொழி :

" நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு. இரண்டாவது


தெய்வம் சுயமரியாதை. மூன்றாவது தெய்வம் நன்னடத்தை".

பால் மனம் :

# கோமகளின் இயற்பெயர் ராஜலட்சுமி.

# இவரது 'அன்னை பூமி' என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றது.

# தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருதையும் பெற்றுள்ளார்.

# உயிர் அமுதாய், நிலா கால நட்சத்திரங்கள், அன்பில் சிதறல் உள்ளிட்ட பல


நூல்களை எழுதியுள்ளார்.

# பால் மனம் எனும் இக்கதை வெண்ணிலா தொகுத்த மீ தமிருக்கும் சொற்கள்


எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

You might also like