Professional Documents
Culture Documents
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் - தமிழ் விக்கிப்பீடியா
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் - தமிழ் விக்கிப்பீடியா
விடுதலைப்
போராட் டத் தில்
தமிழர் கள்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
இந்திய விடுதலைப்போராட்டத்தில்
தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு
வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய்
கலகம் முதல் இந்திய விடுதலைப்
போர் எனக் குறிப்பிடப்படுகிறது.
எனினும் தென்னிந்தியாவில்
அதற்கு முன்னரே பிரித்தானிய
கிழக்கிந்திய நிறுவனத்துக்கு
எதிராகப் பல போர்களும்
கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
அழகு முத்துக்கோன்
அழகு முத்துக்கோன்
அழகு முத்துக்கோன் (1728-1757)
கட்டாலங்குளம் சீமையின் அரசராக
இருந்தவர். ஜெகவீரராமபாண்டிய
எட்டப்பன் என்கிற எட்டயபுரம்
மன்னருக்கு சிறந்த நண்பராக
விளங்கினார். இந்தியாவின் முதல்
விடுதலை போர் 1857 என்று
அறியப்படுகிறது. ஆனால், அதற்கு
முன்பே இந்தியாவின் பல
இடங்களில் போர் நடந்துள்ளது.
அதில் முதன்மையானவர் மன்னர்
அழகு முத்துக்கோன் (1728-1757).
பூலித்தேவன்
பூலித்தேவன் சிலை
நெற்கட்டான் செவ்வலைத்
தலைமையிடமாகக் கொண்டு
ஆண்ட பூலித்தேவன் மற்றும்
பூலித்தேவரின் சுற்று வட்டார
பாளையங்களைச் சேர்ந்த
வாண்டாயத்தேவன் போன்றவர்கள்
பதினெட்டாம் நூற்றாண்டின்
நடுப்பகுதியில கிழக்கிந்திய
நிறுவனத்துக்கு எதிராகச்
செயல்பட்டனர்.
மதுரை பகுதிகள்
கிழக்கிந்திய கம்பெனியின் மதுரை
கவர்னராக இருந்த மருதநாயகம்,
1759 ஆம் ஆண்டு ஆண்டு சூலை
மாதம் ஆங்கிலேயருக்கு எதிராக
மதுரையில் போரிட்ட கள்ளர்
தலைவனையும், அவனோடு
போரிட்ட 500 கள்ளர்களையும்
திருப்பரங்குன்றத்தில் ஒரே நாளில்
தூக்கிலிட்டு கொன்றார்.[4]
சிவகங்கை இராமநாதபுரம்
பகுதிகள்
1752ல் மதுரையை ஆண்ட
விசயகுமார நாயக்கர் மீது பரங்கியர்
கேப்டன் கோப் தலைமையில் போர்
தொடுத்து கைப்பற்றினர்.
அதையறிந்த முத்துவடுகநாதர்
மதுரை மீது போர் தொடுத்து
அங்கிருந்த கேப்டன் கோப்பையும்
அவர் படைகளையும் விரட்டியடித்து
மீண்டும் விசயகுமார நாயக்கரையே
மதுரை மன்னராக பதவி
அமர்த்தினார். அவரின் இறப்புக்கு
பின்னர் அவரின் மனைவி
வேலுநாச்சியாரும்
படைத்தளபதிகளான மருது
சகோதரர்களும் போராட்டத்தை
தொடர்ந்தனர்.
முத்துராமலிங்க சேதுபதி
இருபது ஆண்டுகளுக்கு மேலாகக்
கப்பத் தொகையினை யாருக்கும்
கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி
வந்த இராமநாதபுரம் சேதுபதியை
ஆயுத வலிமை கொண்டு அடக்கிட
நவாப் விரும்பினார். 1772-இல்
நவாப் முகமது அலியின் மகனான
உம் தத்துல் உம்ரா, கம்பெனித்
தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோர்
தலைமையில் பெரும்படை ஒன்று
இராமநாதபுர கோட்டையைக்
கைப்பற்றினர். அங்கிருந்த ராணி,
அவரது இரு பெண்குழந்தைகள்
இளவல் முத்துராமலிங்க சேதுபதி
ஆகியோர் கைது செய்யப்பட்டுத்
திருச்சிக் கோட்டையில்
அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட
கிளர்ச்சி காரணமாக 1781-இல்
நவாப் சிறையிலிருந்த இளம்
சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு
செய்துகொண்டு இராமநாதபுரத்தில்
சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத்
தொடர வழி கோலினார். சேதுபதி
திருவிதாங்கூர் மன்னர் மற்றும்
திருநெல்வேலிப்
பாளையக்காரர்களுடன் நட்புக்
கொண்டார். மேலும் நவாபுக்கும்
கிழக்கிந்திய நிறுவனத்துக்கும்
எதிராக டச்சுக்காரர்களுடனும்
உடன்பாடு செய்து கொண்டார்.
ஆற்காடு நவாப்பின்
இறையாண்மைக்கு உட்பட்ட
நிலையில் அவரது சலுகைகளை
எதிர்பார்த்து தங்களது
வணிகத்தைத் தொடர்ந்து வந்த
ஆங்கிலேயர் சேது நாட்டின்
வணிகத்தில் தனது ஆதிக்கத்தை
நிலைநாட்ட முயன்றனர். ஆனால்
சேதுபதி மன்னர் மறுத்தார். எனவே
பலவகையில் முயன்று ஆற்காட்டு
நவாப்பிற்கும், ஆட்சியர் பவுனிக்கும்
முறையிட்ட கம்பெனியர் போர்
தொடுக்க இரகசியத் திட்டம் தீட்டினர்.
மன்னருக்கு மிகவும் நம்பிக்கையான
தளபதி மார்ட்டினிடம் கோட்டை
வாசல் கதவுகளுக்கான சாவிகள்
இருந்தன. எனவே 1795 பிப்ரவரி
எட்டாம் நாள் கம்பெனியாரது படை
இராமநாதபுரம் கோட்டை வாயிலைக்
கடந்து அரண்மனையைச் சூழ்ந்து
கொண்டது.
படை உதவிகள்
இப்புரட்சியாளர்கள் மைசூர் அரசு,
நிசாம் அரசு, குவாலியர் அரசு,
மொகலாயர், சீக்கியர் போன்ற வட
இந்திய ஆட்சிக்குடியினர்
ஆகியோரிடம் ஆதரவு தேடினர்.
இவர்களுள் மைசூரின் திப்புவும்,
குவாலியரின் சிந்தியாவும்
புரட்சியாளர்களின் நடவடிக்கைக்குத்
தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
1799-ல் திப்புசுல்தான், உரிய
வெகுமதிகளுடனும்
கடிதங்களுடனும் தம்முடைய பிரதி
நிதிகளைப் பழனிக்கு அனுப்பி
வைத்தார். ஆனால் மார்ச் 5, 1799-ல்
நடந்த ஆங்கிலேயர்களுக்கெதிரான
போரில் திப்பு கொல்லப்பட்டார்.
வெற்றிக்குப்பின் மதராஸ்
(இன்றைய சென்னை) ஆளுநர்
எட்வர்டு கிளைவ்
பாஞ்சாலங்குறிச்சியை வென்று
அடிமைப்படுத்த தமது
இராணுவத்தை அனுப்பினார்.
இப்படையினர் கோட்டையைத்
தாக்கிக் கைப்பற்றி
கட்டபொம்மனைத் தேடிக்
கண்டுபிடித்து தூக்கிலிட்டனர்.
கீழைப் பாளையக்காரர்களையும்
ஒடுக்கினார்கள்.
அப்பாஜிகவுண்டர் மற்றும் 42
புரட்சியாளர்களுக்கு உடனடியாக
மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கலகம் நிகழ்ந்த இடங்களான
கோயம்புத்தூர், தாராபுரம்,
சத்தியமங்கலம் முதலிய இடங்களில்
தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மக்கள் முன் அச்ச உணர்வைப்
பரப்புவதற்காக அரங்கேறிய
இக்காட்டுமிராண்டித்தனம்
நேர்மாறான விளைவை
ஏற்படுத்தியது.
இக்கொடுமையறிந்த பிற
பகுதிகளிலிருந்த புரட்சியாளர்களும்
உடனடியாக போரிலிறங்கக் களம்
புகுந்தனர்.
கிளர் ச் சி பரவுதல்
புரட்சியாளர்கள் ஒன்றுபட்டு
தக்காணத்தில் குந்தா,
கன்னடப்பகுதி, பெல்காம், மைசூர்
இராச்சியத்தின் மேற்குப்பகுதி
ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
ஜமலாபாத், வனவாசி, கோண்டா
ஆகிய ஊர்களில் இருந்த
பிரித்தானிய இராணுவ
நிலைகளைத் தாக்கி, அவற்றையும்
கைக்கொண்டனர். மலபாரின் கேரள
வர்மாவும், பழனியின் கோபால
நாயக்கரும்
மலைக்கோட்டைகளிலிருந்த
பிரித்தானிய சிப்பாய்களை
விரட்டிவிட்டு இராணுவப்
பண்டகசாலைகளைக்
கொள்ளையடித்துச் சென்றனர்.
மருது பாண்டியன்
பாளையங்கோட்டையில் இருந்த
புரட்சியாளர்களை
விடுவிப்பதற்கான நடவடிக்கையில்
இறங்கினார். 1799-ல் கட்டபொம்மன்
உள்ளிட்ட பாளையக்காரரை
அடக்கிய பின் பிரித்தானியர் அவரது
தம்பிகளான செவத்தையா,
ஊமைத்துரை உட்பட 17 புரட்சித்
தலைவர்களை
பாளையங்கோட்டையில் சிறை
வைத்திருந்ததனர். 1801- ஆம்
ஜனவரி மாதம் 200 புரட்சியாளர்கள்,
திருச்செந்தூருக்குத்
திருத்தலப்பயணம் மேற்கொள்ளும்
பரதேசிகள் போல வேடமிட்டு
கோட்டைக்குள் நுழைந்து
கைதிகளை விடுவித்துக் கொண்டு
தப்பினர். துணிச்சலான இந்தச்
செயல் தென்கோடிவரை புரட்சி
பரவியதற்கு அடையாளமாக
விளங்கியது.
கைப்பற்றிய பகுதிகள்
பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து
தூத்துக்குடி கடற்கரைப் பகுதிவரை
புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1801-ஆம் ஆண்டு மே மாதத்தில்
கலகக்காரர்கள்
இராமநாதபுரத்தையும் தஞ்சையின்
சில பகுதிகளிலும் ஊடுருவினர்.
இதனிடையில் திண்டுக்கல்லிலும்
பழனியிலும் புரட்சியணியின்
அதிகாரத்தைக் கோபால நாயக்கர்
நிலைநாட்டினார். மதுரை
இராச்சியத்தின் மேற்குப்பகுதியைக்
கள்ளர் குலத்தவர் கைப்பற்றினர்.
கடற்கரைப் பகுதியைத் தனது
கட்டுப்பாட்டில் கொணர்ந்த
தேசப்பற்றாளர்கள் பெரிய
தோணிகள் மூலமாகப்
பண்டங்களையும் மளிகைப்
பொருட்களையும்
போர்த்தளவாடங்களையும்
கொண்டுவந்து சேர்த்தனர்.
புரட் சியரசு ஆட் சி முறை
ஆங்கிலேயரிடமிருந்து
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும்
மக்களை நல்ல முறையில்
நிர்வகிக்கவும், அதிகாரம் தவறாகப்
பயன்படுத்தப்படாமலிருக்க,
விழிப்புடன் கண்காணிக்கவும்
புரட்சியணித்தலைவர்கள்
முயன்றனர். நிலவருவாய் நிர்ணயம்
செய்து, வரிவசூல் செய்வதற்கு
அமுல்தார்கள் எனப்படும்
அதிகாரிகளை நியமித்தனர்.
தாணியமோ, விறகோ,
வைக்கோலாகவோ புரட்சி
நடவடிக்கையை ஊக்குவிக்க
தம்மால் முடிந்தட ஏதாவது ஒரு
பொருளை கொடுத்தால் போதும்
என்பது மட்டும் குடிமக்களிடம்
எதிர்பார்க்கப்பட்டது. புரட்சியரசிடம்
பணிபுரியும் பொதுத்துறை
ஊழியர்கள், மக்களுக்கு எதிராக
முறையற்ற செயலில் ஈடுபட்டால்
அதுபற்றியோ, ஐயத்துக்கிடமான
நபர்களின் தவறான நடவடிக்கை
பற்றியோ புரட்சியரசுக்குத்
தெரிவிக்க அரிக்காரர்கள்
நியமிக்கப்பட்டனர். புரட்சியின்
அவசியத்தை அனைவரும்
உணரவும், புரட்சியின்
குறிக்கோள்கள் ஈடேறச்செய்யவும்
அரசாங்க அலுவலர்கள்
நியமிக்கப்பட்டனர். கிராம சமுதாயம்
மீண்டும் தனது பணியினைத்
தொடங்கிச் செயல்பட உதவிக்கரம்
நீட்டப்பட்டது. அதே வேளையில்
படைக்கலன்கள் உருவாக்குவதற்கும்
அவற்றை மாற்றார்க்குக் கிட்டாத
இடங்களில் சேகரித்து
வைப்பதற்கும் அதிக முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது.
பிரித் தானியருக் கு
சாதகமான சூழல் கள்
புரட்சியாளர்களுடைய போர்
நடவடிக்கைகளால் எளிதில்
இராணுவத்தின் கைகளில்
பிடிபடாமல் தப்பினர். எனினும்,
பிரித்தானியருக்கு பல விதங்களில்
நிலைமை சாதகமானதாக இருந்தது.
பிரித்தானியர் தம்முடைய
அனுபவமிக்க படைத்தளபதிகள்
மற்றும் தேர்ந்த பயிற்சியும்
போர்க்கருவிகளும்
உபகரணங்களும் பெற்றிருந்த
படைகளைக் கொண்டு
ஆங்கிலேயர் மைசூர், மராட்டியப்
படைகளின் புரட்சிப்படையை
முறியடித்தனர்.
கடற்படை வல்லமையால்,
புரட்சியணியினர்க்குரிய
கடல்வழித் தகவல்
தொடர்புகளைத் துண்டித்து
விடவும், வங்காளம், மலேசியா,
இலங்கை முதலிய
இடங்களிலிருந்து படைகளைக்
கொண்டுவந்து குவிக்கவும்
இயன்றது.
இந்தியாவில் உள்ள அரசுகளான
கர்நாடக அரசு, மைசூர் அரசு,
தஞ்சாவூர் அரசு, திருவிதாங்கூர்
அரசு, புனே அரசு, ஹைதராபாத்
நிசாம் அரசுகள் ஆங்கிலேயருக்கு
ஆதரவாக படைகளை அனுப்பியும்,
மளிகைச் சரக்குகள் முதலிய
பண்டங்களை அனுப்பியும், உளவு
செய்திகள் சொல்லியும் உதவின.
ஆங்கிலேயர் இராணுவத்
தளங்களைத் தமது கட்டுப்பாட்டில்
உறுதியாக வைத்துக்
காத்துவந்தனர்.
புரட்சியாளர்கள் வசதி குறைந்த
கிராமப்புறப்பகுதிகளை மட்டுமே
ஆங்கிலேய அதிகாரத்திலிருந்து
மீட்டனர். அங்கிருந்து
எதிர்த்தாக்குதல் தொடுப்பதற்கு
மட்டுமே அவர்களால் இயன்றது.
தமிழகத் தில்
அடக் குமுறைப் போர்
தமிழகப் புரட்சியாளர்களுக்கு
எதிராக புனித ஜார்ஜ் கோட்டை,
புனித தாமஸ் மலை (பரங்கிமலை),
ஆற்காடு, மலபார் ஆகிய
இடங்களில் இருந்து துருப்புகள்
கொணர்ந்து இறக்கப்பட்டது.
அக்னியூ என்பவரின் தலைமையில்
புறப்பட்ட இப்படை 1801, மே 24 ஆம்
நாள் பாஞ்சாலங்குறிச்சியைத்
தாக்கி 1050 பேரைக் கொன்றது.
செவத்தையா, ஊமைத்துரை உட்பட
உயிர்பிழைத்தவர்கள் மருது
சகோதரர்களின் உதவியை நாடினர்.
பிரித்தானியப் படை மானாமதுரை,
பார்த்திபனூர் வழியாகப்
பரமக்குடியைக் கைப்பற்றி
மதுரையையும் புரட்சியாளர்கள்
பிடியிலிருந்து விடுவித்தது.
தொண்டி துறைமுகத்தை அடைந்த
ஆங்கிலேயப் போர்க்கப்பல் ஒன்று
புரட்சியாளர்களுக்கு சரக்குகள்
இறக்குமதி செய்வதற்காக வந்த
பெரிய தோணிகளைத் தாக்கி
அழித்தது.
இறுதித் தோல் வி
1801, செப்டம்பரில் மருது
பாண்டியர்களின் வலிமையான
தளமாக விளங்கிய காளையார்
கோவில் நடை ஆங்கிலேயப்
படையின் மூன்று பிரிவுகள் ஒரே
நேரத்தில் அதிரடியாகத் தாக்கிக்
கைப்பற்றினர். ஆயினும் மருது
சகோதரர்கள் தப்பித்து
சிங்கம்புணரிக் காடுகளுக்குள்
புகுந்து கொண்டனர். தப்பியோடிய
பிற புரட்சியாளர்கள்
ஊமைத்துரையின் தலைமையில்
கோபால நாயக்கரின்
அணியினருக்குப் பக்க பலமாகச்
சென்று சேர்ந்தனர். 4000 பேருடன்
பழனிமலைத் தொடரைப்
பிடித்துகொண்ட ஊமைத்துரை எதிரி
முன்னேறி வருவதைத் தடுக்க
தடுப்புச் சுவர் எழுப்பினர்.
இருப்பினும் இன்னஸ் தலைமையில்
வந்த படைகள் அதனைக் கைப்பற்றி,
பிரித்தானியரின் அதிகாரத்தை
நிலைநாட்டி புரட்சியாளர்களை
விரட்டிச் சென்றது. திண்டுக்கல்லில்
இருந்து வெற்றிலைக் குண்டு
(வத்தலகுண்டு) வரை 51 மைல்
தொலைவுக்கு மூன்று நாட்கள்
உணவோ தண்ணீரோ இன்றிப்
புரட்சியாளர்கள்
போரிட்டுக்கொண்டே
பின்வாங்கினர். தம் சக்தியை
இழந்து சோர்ந்து போன
புரட்சியாளர்கள் இறுதியில்
முறியடிக்கப்பட்டனர்.
தண் டனைகள்
தூக்கிலிடுதல்
துரோகிகள் சிலரின் உதவியோடு
1801 ஆம் ஆண்டு இறுதிக்குள்
காடுகளில் ஒளிந்திருந்த மற்ற
புரட்சியணித் தலைவர்களையும்
ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்து
சிறை செய்தனர். உடனடியாக
விசாரணை மேற்கொள்ளப்பட்டு
அவர்களுக்கு மரணதண்டனை
விதிக்கப்பட்டது.
செவத்தையாவும் ஊமைத்துரையும்
அவர்களுடைய நெருங்கிய
சகாக்களும் பாஞ்சாலங்குறிச்சிக்குக்
கொண்டு செல்லப்பட்டனர். அங்கு
அவர்களுக்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டது. ஒரே மரத்தில்
அனைவரும் ஒன்றாகத்
தூக்கிலிடப்பட்டனர்.[11]
நாடு கடத்துதல்
புரட்சியணித்தலைவர்கள் 73
பேருக்கு நாடு கடத்தப்படும்
தண்டனை(தீவாந்தர சிட்சை)
வழங்கப்பட்டது. இவர்கள்
அனைவரும் 1802 ஆம் ஆண்டு
பிப்ரவரி 11 ஆம் நாள் அட்மிரல்
நெல்சன் என்ற கப்பலில் ஏற்றப்பட்டு
பினாங்கைச் சேர்ந்த பிரின்ஸ் ஆப்
வேல்ஸ் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
இருவர் இருவராகச் சேர்த்துக்
கைவிலங்கிடப்பட்டிருந்த இவர்கள்
எழுபத்தாறு நாள்கள் நீடித்த
இக்கடற்பயணத்த்தின் போது
அடைந்த துயர் அவலமானது.
இவர்களுள் ஒருவர் வழியிலேயே
கடலில் விழுந்து இறந்தார். ஒருவர்
நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
பினாங்கைச் சென்றடைந்த பின்னர்
தண்டனைக் காலம் ஐந்து மாதங்கல்
கழிவதற்குள் 24 பேர் இறந்து
போயினர்.
வேலூர் கலகம்
வேலூர் கோட்டை
புரட்சியணியில் எஞ்சியிருந்த
வீரர்களை, அவர்களது
பின்னணியைப் பற்றிச் சரியாகத்
தெரிந்து கொள்ளாமலேயே
ஆங்கிலேயர்கள்
வேலூர்க்கோட்டையில்
பணியமர்த்தினர். ஐரோப்பியத்
துருப்புகள் தவிர, 23-ஆம்
படைவகுப்பின் இரன்டவது
பட்டாளப்பிரிவும் வேலூர்
கோட்டையில் இருந்தது. இந்த
இரண்டாவது பட்டாளப்பிரிவு
முழுவதும், புரட்சி ஒடுக்கப்பட்ட
பின்னர், திருநெல்வேலியிலிருந்து
தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட்ட
வீரர்களைக் கொண்டதாகும். மேலும்
வேலூர்க்கோட்டையில் திப்பு
சுலதான்களின் மகன்கள் குறிப்பாக
மூத்த மகன் பத்தே ஹைதர்
இருப்பதை அவர்கள் கண்டனர்.
பத்தே ஹைதர் சிறையிருந்த
போதும் பல்வேறு குறுநிலத்
தலைவர்களுடன் கடிதத் தொடர்பு
கொன்டு புரட்சியை மீண்டும்
வடிவமைக்கும் துடிப்புடன்
செயல்பட்டார். மேலும்
புரட்சியாளர்களுக்கு
மரணதண்டனை விதித்து அதனைத்
தாமே தலைதாங்கி நடத்திய
அக்னியூ வேலூர்க்கோட்டைத்
தலைமையதிகாரி. எனவே
புரட்சியாளர்கள் வேலூரை தமது
நடவடிக்கைக்கான ஒரு மையமாக
மாற்றினர்.
"https://ta.wikipedia.org/w/index.php?
title=இந்திய_விடுதலைப்_போராட்டத்தில்_த
மிழர்கள்&oldid=3615265" இருந்து
மீள்விக்கப்பட்டது