முதலாம் பராக்கிரமபாகு - தமிழ் விக்கிப்பீடியா

You might also like

You are on page 1of 13

முதலாம்

பராக் கிரமபாகு
இலங்கை அரசர்

முதலாம் பராக்கிரமபாகு
(சிங்களம்: මහා පරාක්‍රමබාහු) அல்லது
மகா பராக்கிரமபாகு [1][2] என்பவன்
இலங்கையின் பொலன்னறுவை
இராச்சியத்தை கி.பி 1153 முதல் 1186
வரை ஆட்சி புரிந்த மன்னர் ஆவார்.
அரசர் மானாபரணவுக்கும் அரசி
ரத்னாவலிக்கும் 1123 ஆம் ஆண்டு
தக்கிண தேசத்தின் கேகாலைப்
பகுதியில் புங்ககம எனும்
கிராமத்தில் பிறந்தார். இவரது
பாட்டனார் இலங்கையில் குடிபுகுந்த
பாண்டிய இளவரசன் ஆவார்.
இலங்கையின் முக்கிய மூன்று
இராச்சியங்களையும்
பராக்கிரமபாகு ஒன்றிணைத்தார்.
அக்காலத்திலே இவ்விராச்சியத்தின்
தலைநகரமாக விளங்கியது
பொலன்னறுவை ஆகும்.
தன்னுடைய தலைநகரை அழகாகப்
பேணல், மேற்பார்வை செய்தல்
போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இவரின் காலத்தில் நாட்டில்
விரிவாக நிர்மாணிக்கப்பட்ட
நீர்ப்பாசனத் தொகுதிகள்
காணப்பட்டன, நாட்டின் இராணுவப்
படைகள் மறுசீரமைக்கப்பட்டன,
பௌத்தம் வளர்க்கப்பட்டது,
கலைகளும் வளர்க்கப்பட்டன.
தென்னிந்தியாவுடனும்,
மியான்மாருடனும் பராக்கிரமபாகு
இராணுவ நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளார். இவரின் காலத்தில்
இலங்கை தெற்காசியாவின்
தானியக் களஞ்சியம் என
அழைக்கப்பட்டது. இவரே பராக்கிரம
சமுத்திரத்தையும் கட்டுவித்தார்.
"வானிலிருந்து விழும் ஒரு துளி
நீரையும் விவசாயத்திற்குப்
பயன்படுத்தாது வீணாகக் கடலைச்
சென்றடைய விடமாட்டேன்" என்பது
பராக்கிரமபாகுவின் புகழ்மிக்க
கூற்றுக்களில் ஒன்றாகும்.[3]

பராக்கிரமபாகு தனது இளம் வயதை


தனது மாமன்மாரான கீர்த்தி சிறீ
மேகன், ஸ்ரீ வல்லப போன்றோரின்
அரண்மனைகளில் கழித்தார்.
இவர்கள் முறையே தக்கிண தேசம்
மற்றும் உருகுணை இராச்சியத்தின்
மன்னர்கள். அத்துடன்
இராசரட்டையின் இரண்டாம்
கஜபாகுவுடனும் இளமையில்
நட்புறவு வைத்துள்ளார். சீனா
மற்றும் மத்திய கிழக்கு
நாடுகளுடனும்
முதலாம்
வணிகத்
தொடர்புகளைக்
பராக்கிரமபா
கொண்டிருந்தார். கு
[4] பொலன்னறுவை
யின் அரசர்
பின் னணி
12ஆம்
நூற்றாண்டுக்
கு முன்
இலங்கைத்
தீவானது
ஒருகாலத்தில்
சோழர்களின்
ஆதிக்கத்தில்
இருந்தது. கி.பி. ஆட்சி 1153–
993 இல் 1186
இலங்கையில் முன்னிருந்தவர்
முதலாம்
இராஜராஜ சோழ இரண்டாம்
மன்னன் விஜயபாகு
படையெடுப்பு அரசி அரசி
நடாத்தினான். லீலாவதி
முதலாம் மரபு பொலன்னறு
விஜயபாகு அரசகுடும்பம்
(1055–1100)
தந்தை அரசர்
மன்னனின் மானாபரண
ஆட்சிக்கு முன்
தாய் அரசி
சோழர்களே ரத்னாவலி
இலங்கையை
ஆதிக்கம்
செய்துவந்தனர். பிறப்பு 1123
தன்னுடைய புங்ககம
சிறந்த இறப்பு 1186
ஆட்சியினாலும் பொலன்ன
படையெடுப்பாலு
ம் சோழர்களை இலங்கையிலிருந்து
விரட்டி புராதன தலைநநகரமான
அனுராதபுரத்தை கைவிட்டு
திட்டமிடப்பட்ட புதிய நகரமான
பொலன்னறுவைக்கு (புலத்தி நகர்)
தலைநகரை மாற்றிக்கொண்டான்.
முதலாம் விக்கிரமபாகு மன்னன்
(1111–1132) இலங்கையை மூன்று
பிரிவுகளாகப் பிரித்தான்.
அவையாவன: இராசரட்டை,
உருகுணை, தக்கிண தேசம்
என்பவையாகும். இருப்பினும்
இம்மூன்றிலும் விக்கிரமபாகு
ஆண்டுவந்த இராசரட்டையே சமய
ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும்
முக்கியமான பிரதேசமாகக்
கருத்தப்பட்டது. தக்கிண தேசத்து
மன்னர்களான மானாபரண மன்னன்
அவரது தம்பிமாரான ஸ்ரீ வல்லப
மன்னன் மற்றும் கீர்த்தி ஸ்ரீ மேகன்
போன்றோர்களுக்கும் மற்றும்
உருகுணை மன்னர்களுக்கும்
இராசரட்டையின் அரியணையைப்
பிடிப்பதில் போட்டியிருந்தது.

மேற் கோள் கள்


1. Paranavitana, History of Ceylon, p. 199
2. Encyclopædia Britannica,
Parakramabahu I (http://www.britannic
a.com/eb/article-9058393/Parakrama
bahu-I#161133.hook)

3. Culavamsa, LXVIII, 8
4. Kenneth Hall, "Economic History of
Early South Asia", in Nicholas Tarling
(ed), The Cambridge History of South
East Asia, Vol. I, Cambridge 1994

உசாத் துணைகள்
Senarath Paranavithana; Nicholas, Cyril
Wace (1961). A Concise History of
Ceylon. Colombo: Ceylon University
Press. இணையக் கணினி நூலக
மையம்:465385 (http://www.worldcat.o
rg/oclc/465385) .
Muller, E.B., Ancient Inscriptions in
Ceylon, Trubner & Co., London 1883

Parker, H., Ancient Ceylon: An Account of


the Aborigines and of Part of the Early
Civilisation (http://lakdiva.org/parker/par
ker.html) பரணிடப்பட்டது (https://we
b.archive.org/web/20060927090918/htt
p://lakdiva.org/parker/parker.html)
2006-09-27 at the வந்தவழி
இயந்திரம், Luzac, London 1909.
Retrieved 7 December 2006.
de Silva, K. M. (1981). A History of Sri
Lanka (https://archive.org/details/bub_g
b_dByI_qil26YC) . Colombo: University
of California Press. பன்னாட்டுத்
தரப்புத்தக எண்:0-520-04320-0.
https://archive.org/details/bub_gb_dByI
_qil26YC .

மேலும் வாசிக் க
Mitton, G.E., The Lost Cities of Ceylon,
J.Murray, London 1916
Perera, L.H.H., Additional chapters to
H.W. Codringto

n’s A short history of Ceylon, Macmillan,


London 1952.
வெளி இணைப் புகள்
விவசாயத்துறையில்
பராக்கிரமபாகுவின் பங்களிப்பு (htt
p://riyasdreams.blogspot.com/2012/0
1/great-king-of-srilanka.html)
பராக்கிரம சமுத்திரம் (http://www.irri
gationmin.gov.lk/web/index.php?option
=com_content&view=article&id=119%3A
parakrama-samudhraya&catid=85%3Aw
onder-of-a-tank&Itemid=88&lang=ta)

"https://ta.wikipedia.org/w/index.php?
title=முதலாம்_பராக்கிரமபாகு&oldid=3823151"
இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2023,
13:26 மணிக்குத் திருத்தினோம். •
வேறுவகையாகக்
குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி
இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ்
கிடைக்கும்.

You might also like