Professional Documents
Culture Documents
பண்டைத் தமிழரும் தொழில்நுட்பமும்
பண்டைத் தமிழரும் தொழில்நுட்பமும்
Course Instructor:
Dr.M.Ezhilarasi,AP/EEE No. of
Credits: 1
Nov 25, 2023 DEPT OF EEE, SREC 1
பண்டைத் தமிழரும் தொழில்நுட்பமும்
• மனித இனம் தோன்றிய ஆதி காலம் முதல் காடு,
மேடுகளிலும் நீர் நிலைகளிலும் உணவு தேடி
அலைந்தனர். அதன் பயனாய் காய்களையும்,
கனிகளையும், கிழங்குகளையும், மீன்
உள்ளிட்டவற்றையும் உணவாகப் பெற்று உண்டு,
உயிர் வாழ்ந்தனர். காலப்போக்கில்
பாதுகாப்புக்காகக் குழுமம் குழுமமாக வாழ
முற்பட்டனர். உணவின் தேவையை உணர்ந்து
வேளாண்மையில் ஈடுபடத்தொடங்கினர்.
2
Nov 25, 2023 DEPT OF EEE, SREC
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பட்டறிவின் மூலம் வேளாண்மையை
முறைப்படுத்திப் பல பயனையும் தெரிந்துவைத்திருந்தமையைச் சங்க
இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றித் தொல்காப்பியம்
குறிப்பிடுகின்றது. முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் வகுத்து வாழ்வாங்கு வாழ்ந்த நம்
மக்களின் அறிவுச் செழுமையைத் தொல்காப்பியம் பல
இடங்களில் பதிவுசெய்துள்ளது.
11/25/23 CEE 10
கல்லணை வடிவம்
ஐராவரேசுவரர் ஆலயம்
உலகப் பாரம்பரிய சின்னம்
11/25/23 CEE 13
கோயிலின் சிறப்புகள்
11/25/23 CEE 14
கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக்
கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன்
அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு
கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும். முதலில்
இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார்
என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என
பெயர் கொண்டது.
• தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான்
அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்தக் கோயிலில்
மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது
கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில்
இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும்
பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது.
11/25/23 CEE 15
A beautiful musical steps in Airavatesvara Temple
11/25/23 CEE 16
கல்லணை
• முதலாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட
கல்லணை தமிழர்களின் நீர்ப்பாசன அறிவுக்குச் சான்றாக
இன்றும் உள்ளதனைக் காண்கின்றோம். இந்த அணைமூலம்
பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. ஓடிவரும்
ஆற்றின் குறுக்கே அறிவியல் வளர்ந்திராத காலத்தில் எப்படி
இப்படியொரு பாரிய அணையைக் கரிகால் சோழன்
கட்டினான் என ஆங்கிலேயர் பார்த்து வியந்தனர்.
• ஓடும் ஆற்றில் குறுக்கே ஒரு பெருங்கல்லைப் போட்டால்
அது புதையுண்டு போகும். அதற்கும் மேலே மேலே பெரிய
பாறாங்கல்லை வரிசையாகப் போடப் போட அது
பெருங்கல்லணையாக உருவாகியது என்பதனை ஆய்வு
செய்து கண்டறிந்த ஆங்கிலப் பொறியியலாளர் ஆதர்
காட்டன் அவர்கள் அந்த பொறிமுறையை வியந்து உலகறியச்
செய்தார்.
• இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக
கருங்கற்களையும் களிமண்ணையும் கொண்டு கட்டப்பெற்ற
இக் கல்லணை பல இலட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு
இன்றுவரை சிறப்பாக நீர்ப்பாசனத்திற்கு உதவிவருகின்றது.
இவ்வணை பெரும் கற்களால் மட்டும் கட்டப்பெற்றதனால்
அதன் காரணப் பெயராக இன்றும் இது “கல்லணை” என்றே
அழைக்கப்படுகின்றது. இக் கல்லணை தஞ்சாவூர்
மாவட்டத்திலுள்ள பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் -
கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது.
• கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ்ச் சோழப்
பேரரசர் முதலாம் இராசராச சோழன் தஞ்சாவூர் பெரிய
கோவிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டுகளில்
தொடங்கபெற்று 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதற்காகப் பாவிக்கப்பட்ட கிறனைட் கற்களை எங்கிருந்து
கொண்டுவந்தார்கள்? ஐம்பது கிலோமீட்டர் சுற்றுவட்டரத்தில்
எந்தவித மலைகளும் இல்லாத புவியியல் சூழலில் இத்தனை
ஆயிரம் ஆயிரம் பெரும் கிறனைட் கற்களை, இயந்திர வாகன
வசதிகள் இல்லாத காலத்தில் எப்படிக் கொண்டுவந்து
சேர்த்திருப்பார்கள்? எவ்வளவு காலம், வேலையாட்கள்,
திட்டமிடல், நேர்த்தியான கல்வெட்டுகள், அதற்கான
கருவிகள், பொறிமுறைகள், இவையெல்லாம் எப்படிக்
கைகூடியது.
• இக்கோவிலின் கட்டுமானத்தில் எதுவித மரங்களோ சுடுசெங்கற்களோ,
பூராங்கற்களோ எதுவுமே இல்லாது முழு உயர்தர கிறனைட்
கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது வியப்பளிக்கின்றது. இக்
கோயிலின் உயரம் 216 அடியாகும். சிவலிங்கத்தின் உயரம் 12 ; அடி.
பீடத்தின் உயரம் 18 அடி; சிவனுக்கும் நந்திக்கும் இடைப்பட்ட தூரம் 247
அடி ஆகும். இவை அனைத்தும் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, உயிர்
மெய்யெழுத்து 216, தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 என்ற
கணக்கில் அமைந்து இருப்பது , இராஜராஜ சோழனின் தமிழ்ப்பற்றை
மேலும் எடுத்தியம்புகிறது.
• இந்த மாபெரும் கோயில் ஏழு ஆண்டுகளில்
கட்டிமுடிக்கப்பெற்றுள்ளது. இக்கோயிலின் தலைமைச் சிற்பி,
குஞ்சர மல்லன் இராஜராஜப் பெருந்தச்சன் எனக் கோவிலின்
கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளான்.
தொழில் நுட்பம்
• இதன் பொருள் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை
வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அவை போய்ச் சேரும்
இடம் தனுஷ்கோடியாகும். அது தமிழன் கண்டறிந்த தொழில்
நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தைப் பயன்படுத்தித்
தமிழன் செய்த சாதனைகள் ஏராளம். கடல் ஆமைகள் கடலில்
இருக்கும் நீரோட்டத்தைப் பயன்படுத்தி 150 கி.மீ வரை
மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன.
• நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தைப்
பயன்படுத்தி செலுத்தத் தொடங்கியதனால் 20,000 க்கும்
மேற்பட்ட கடல் தீவுகளைக் கண்டறிந்தான் என்று
ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த வகையில் புதிய பல
இடங்களையும் துறைமுகங்களையும் கண்டறிந்துள்ளான்
குறள் 496
• “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்,
நாவாயும் ஓடா நிலத்து” - குறள் 496
• சோழநாட்டில் காவிரி கடலோடு கலக்குமிடத்தில்
காவிரிப்பூம்பட்டினம் என்ற துறைமுகம் அக்காலத்தில் புகழ்
பெற்று விளங்கியது. இங்கு இறக்குமதி செய்யப்பட்ட
பண்டங்கள் பற்றிப் பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்
கண்ணனார் கூறுவதாவது:
பட்டினப்பாலை- 185-193
25/11/23 CEE 51
தமிழர்களின் பட்டறிவு
• தற்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாக்க மூன்று
அல்லது நான்கு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
• அதில் ஒன்று கார்பன் சார்ந்த ஏதேனும் ஒரு சேர்மத்தை
எடுத்து குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றி மிக
உயர் வெப்ப நிலையில், அதாவது 1,200 செல்சியஸ்
அளவுக்கு வெப்பப்படுத்தினால் கார்பன் நானோ குழாய்கள்
உருவாகும்.
• மற்ற முறைகள் அனைத்துக்கும் நவீன வேதியியல்
தொழில்நுட்ப முறைகள் தேவை. எனவே, மிக உயர் வெப்ப
நிலையில் சூடாக்குவதன் மூலம்தான் அந்தக் காலத்து மக்கள்
இதைச் சாத்தியப்படுத்தியிருக்க முடியும்.
Continued…
• அந்தக் காலத்தில் தாவரம், மரம், செடி கொடிகளிருந்து
வண்ணம் தயாரித்திருப்பார்கள். தாவரப் பொருட்களில்
கார்பன் சார்ந்த சேர்மங்கள் நிறைய இருக்கின்றன.
• இப்படி வண்ணம் பூசப்பட்ட பானைகள் உயர் வெப்ப
நிலையில் சுடப்படும்போது கார்பன் நானோ குழாய்கள்
உருவாகியிருக்க வேண்டும். குறிப்பிட்ட உயர் வெப்ப
நிலையில் பானை சுடப்பட்டால் அதில் பூசப்படும்
வண்ணப்பூச்சு சிதையாமல் இருக்கும் என்ற பட்டறிவு 2,400
ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது
என்பது உண்மையில் வியப்புக்குரிய விஷயம்தான்!
சங்ககாலத்தில் நெசவுத் தொழில்
• சங்க காலத்திலேயே மதுரையில் நுண்ணிய பருத்தி நூல்,
எலி மயிர் மற்றும் பட்டு நூலினாலும் ஆடைகள்
நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடலின் கீழ்கண்ட
வரிகள் மூலம் அறியலாம்.
• "நூலினும்,மயிரினும்,நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து
நறும்படி செறிந்த அறுவை வீதியும்"”
(சிலப்பதிகாரம் -205,207)
• "கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
25/11/23 CEE 54
• கொங்கு நாட்டில் பெரும்பாலான குலத்தாரிடம்
இன்றளவிலும் பெண்ணிற்கு சீதனாமாக நூல்
நூற்கும் தக்களியும், பஞ்சும் கொடுப்பது வழக்கம்.
அதேபோல் கணவனை இழந்த
கைம்பெண்களுக்கும் பிழைப்பிற்கு ஆதாரமாக
தக்களியைக் கொடுக்கும் வழக்கம் உள்ளதாக
புலவர் இராசு அவர்கள் குறிப்பிடுகிறார்.
25/11/23 CEE 55
கோடாலி கருப்பூர் புடவை
CEE
.
25/11/23 CEE 57
ஏலேல சிங்கன்
• “ஏலேலசிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்” – என்று
தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழிக்குப் பின்னால்
சுவையான ஒரு கதை உண்டு.
• தமிழ் வேதமாகிய திருக்குறளை நமக்குத் தந்த திருவள்ளுவரின் புரவலர்
ஏலேல சிங்கன். அவர் பெரும் கடல் வணிகர். ஏராளமான செல்வத்தைக்
குவித்தவர். ஆயினும் அந்தச் செல்வத்தை அறவழிகளில் செலவிட்டார்.
திருவள்ளுவரையும் ஆதரித்தார். இவரைப் பற்றி செவிவழியாக வந்த
பல செய்திகளைச் சுருக்கமாக தமிழ் என்சைக்ளோபீடியா ‘அபிதான
சிந்தாமணி’ தருகிறது.
CEE
திருவள்ளுவர் நெசவுத் தொழில் செய்து வந்தார். இவரிடம் நூல்
வாங்கப்போவது வழக்கம். ஒருநாள் ஏலேலசிங்கன் வீட்டுக்குப்
போனார். அவர் சிவபூஜையில் இருப்பதாச் சொல்லி
வள்ளுவரை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்.
வள்ளுவர் உடனே புன்சிரிப்புடன், அவர் குப்பத்தில் பூஜை
செய்கிறாரா அல்லது வீட்டு அறையில் பூஜை செய்கிறாரா?
என்று கேட்டார். இதைக் கேட்ட ஏலேலசிங்கன் அவரிடம் ஓடி
வந்து வெட்கத்துடன் நின்றார். அதாவது த்ரிகால முனிவரான
வள்ளுவருக்கு ஏலேலசிங்கன் மனம் அலைபாய்வதும்,
அலைகடலில் வரும் கப்பல் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதும்
தெரிந்துவிட்டது. உடல் பூஜை அறையில் இருந்தாலும் உள்ளம்
கப்பல் வணிகத்தில் உலா வந்தது. அன்று முதல் வள்ளுவரை
அவர் ஆன்மீக குருவாக ஏற்றார்.
CEE
’ஏலேல ஐலசார்
ஒரு முறை ஏலேலசிங்கனின் பொருட்களை ஏற்றி வந்த கப்பல்
தரை தட்டியது. வள்ளுவரிடம் ஓடோடி வந்து வழி ஏதும்
உண்டா என்று கேட்டு விழி பிதுங்க நின்றார். அறவழியில்
சேர்த்த பொருள் ‘போ’ என்றாலும் போகாது என்பது
வள்ளுவருக்குத் தெரியும். ஆகவே ஏலேலசிங்கன் பெயரைச்
சொல்லி கப்பலை கயிறு கட்டி இழுக்கச் சொன்னார். கப்பல் கரை
சேர்ந்தது. அதிலிருந்துதான் கடலில் செல்லுவோர்
பாதுகாப்பாகச் சென்று திரும்ப ‘’ஏலேல ஐலசார்’’ என்று
கோஷம் இடும் வழக்கம் வந்ததோ என்று எண்ண வேண்டி
இருக்கிறது!!
CEE
திரும்பி வந்த தங்கம்
ஏலேல சிங்கனிடம் ஏராளமான பொருட் செல்வம் குவியவே
அதைத் தங்க கட்டிகளாக மாற்றி வைத்திருந்தார். அற வழிகளில்
செலவிட்டது போக எஞ்சியதைக் கடலில் கொண்டு போட்டு
விட்டார். சில காலம் கழித்து மீனவர்கள் பலர் அவர் வீட்டை
நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் பிடித்த சுறாமீனின் வயிற்றில்
தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் அதில் ஏலேல சிங்கனின்
பெயர் பொறிக்கப் பட்டிருப்பதால் திருப்பிக் கொடுக்க ஓடிவந்த
தாகவும் சொன்னார்கள். வள்ளுவர் வாய்மொழிப்படி வாழ்க்கை
நடத்தினால் செல்வத்தை ‘’போ, போ’’ என்று விரட்டினாலும்
போகாது!!
இதை ஒட்டித்தான் வள்ளுவனும் பாடினான்:
CEE
அழக்கொண்ட எல்லாம் அழப் போம், இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை (குறள் 659)
25/11/23 CEE 62
சரஸ்வதி மகால் நூலகம்
25/11/23 CEE 63
சரஸ்வதி மகால் நூலகம்
CEE
யாழ் நூலகம்
CEE
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை
இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஒரு இனத்தை
அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு
இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் சிங்களக்
காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில்
பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்து
போயின.
CEE
Meenakshi Temple
CEE
• East Tower (Nine Storeys) - 1011 sudhai figures.
• South Tower (Nine Storeys) - 1511 sudhai figures.
• West Tower (Nine Storeys) - 1124 sudhai figures.
• North Tower (Nine Storeys) - It has lesser figures than other
outer towers.
• The Thousand Pillar Mandapam
• Actually the number of pillars counts 985 beautifully
decorated columns and there are the wonder of the palace.
Each pillar is sculptured and is a monument of the Dravidan
sculpture. There is a Temple Art Museum in this 1000 pillars
hall where you can see icons, photographs, drawings exhibiting
the 1200 years old history.
CEE
செட்டிநாட்டு வீடுகள்
• செட்டிநாட்டு வீடுகள் என்பவை தமிழ்நாட்டில்,
சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியைச் சுற்றியுள்ள
மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளி உள்ள
செட்டிநாடு பகுதியில் உள்ள பாரம்பரியமான வீடுகள் ஆகும்.
[1]
மா.எழிலரசி
25/11/23 MC&RP 86