Professional Documents
Culture Documents
நெடுவினா
1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல், திராவிட மொழிகள்,
ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து வேறுபட்டவைஎனவும் இம்மொழிகள் சமஸ்கிருத
மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான முத்தி ஆகிய விடுதலை தரும்
கனியே! இயல், இசை, நாடகம் என, மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால்
உண்ணப்படும் தேனே! உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. அதைக்
கேட்பாயாக.
பாவின் திறம் அனைத்தும் கைவரப்பெற்று என்றுமே ‘சிந்தா மணியாய் இருக்கும் உன்னை ‘சிந்து’
என்று (அழைப்பது நின் பெருமைக்குத்தகுமோ? அவ்வாறு) கூறிய நா இற்று விழும் அன்றோ?
வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள்கூட சத்துவம், இராசசம், தாமசம் என்னும் மூன்று
குணங்களையே பெற்றுள்ளார்கள். ஆனால், நீயோ பத்துக் குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு,
1
சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும்
பத்துக் குணங்களையும் பெற்றுள்ளாய்.
நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ
செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். தமிழை அடையப் பெறாத
மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டோ? நீயோ நீங்காத
அம்மை முதலிய அழகுகள் எட்டினைப் பெறறுள்ளாய்.
,ay; 2
நெடுவினா
மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள்
நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன என்று மாங்குடி மருதனார் கூறியதைப்
புரிந்து கொள்ளவேண்டும்.
எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று
நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே
‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.
அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு
ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில்
உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள்
நுழைந்தாள்.
“எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோ” என அடக்க
முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே
ஓட ஆரம்பித்தாள்.
தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! தந்தை கேட்டார். பயபுள்ள, இத்தன மைலு இந்த
தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்த. இந்திரா சொன்னாள் பின்ன! நாளைக்கு வரைக்கும்
குடிக்க என்ன செய்ய.
4
இச்சிறுகதை “நீரின்றி அமையாது உலகு” என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. 21-ஆம்
நூற்றாண்டை எட்டிப்பிடித்துள்ள இன்றைய நிலையில், குடிநீர் நெருக்கடி உச்சத்தில் இருப்பதையும்,
சிற்றூர்களின் மக்களின் வாழ்க்கை ஒரு வாய் தண்ணீருக்குக் கூட வழியற்றதாய், சிக்கல்
நிறைந்ததாகவே இருக்கிறது என்பதை படிப்போர் நெஞ்சில் உணர்த்தும் வகையில் ‘கந்தர்வன்’
எழுதியுள்ளார்.
“உயிர் நீர்” எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம்
உணர்ந்த நாம்,
“நீர் மேலாண்மையை கட்டமைப்போம்
மழைநீர் சேகரிப்போம்.”
,ay; 3
நெடுவினா
ஏறு தழுவுதல், முல்லைநிலத்து மக்களின் அடையாளத் தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின்
தொழில் உற்பத்தியோடும் பாலைநிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும்
பிணைந்தது.
5
கருதப்படும். அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில்
காளையைஅரவணைத்து அடக்குபவரேவீரராகப் போற்றப்படுவர்.
,ay; 4
நெடுவினா
6
கையில் பணமே இல்லாமல் கடைக்குச் சென்று பொருள் வாங்கவும் மற்ற வணிகப்
பரிமாற்றங்களுக்கும் இந்த அட்டை தேய்ப்பி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
நம் நாட்டிற்குத் தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு
செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு. அதே நேரத்தில் அருகில் உள்ள நாடுகளின் செயற்கைக்
கோள்களையும் அனுப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய் இஸ்ரோவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு
உதவும்.
,ay; 5
நெடுவினா
7
மருத்துவர் முத்துலட்சுமி முதல்மலாலாவரை சாதனைப் பெண்கள் ஒவ்வொருவரின் வரலாற்றிலும்
ஒரு சோதனைக் காலமும் ஒரு வேதனை முகமும் இருக்கின்றது
மலாலா
பூகோள, சரித ஏடுகள் இருக்க வேண்டும். நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு
ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்க
வேண்டும்.
,ay; 6
நெடுவினா
அருவிகள் பறையாய் ஒலிக்கும்; பைங்கிளி தானறிந்த தமிழிசையைப் பாடும்; பன் போன்ற அழகிய
மயில் தன் அருமையான சிறகினை விரித்து ஆடும்; இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்
கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.
9
நாகணவாய்ப் பறவைகளும் குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்துப் பாடின. புகழ்
பெற்ற முல்லை நில மக்களான ஆயர், முக்கனியும் தேனும் சேகரித்துக் கொண்டு முக்குழல்
இசையால் மேயும் பசுக் கூட்டங்களை ஒன்று சேர்த்தனர்.
முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவாலி நெல் ஆகியவற்றை முல்லை நிலமக்கள்
அறுத்துக் கதிரடித்துக் களத்தில் குன்று போலக் குவித்து வைத்திருப்பர். கதிரடிக்கும் அதிர்வு
தரும் ஓசையைக் கேட்டு மான்கள் அஞ்சி ஓடும்.
மலையிடையே தோன்றும் ஆறும் கரையை மோதித் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலத்தின்
அழகிய காட்டாறும் மருத நிலத்தில் பாய்ந்தோடும்; அங்கு நெற்பயிரினைக் காக்கும் வகையில்
கரும்பு வளர்ந்து நிற்கும். பெருகி வரும் நீரினைக்கால் வாய்வழி வயலில் தேக்கி வளம் பெருக்கும்.
இத்தகு வளம் நிறைந்த மருத நிலவயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.
10
திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் உள்ள
கோவில்களில் காணலாம். கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலில்
அமைந்துள்ள சிற்பங்களும் பாண்டியர் காலச் சிற்பக் கலைக்குச் சான்றுகளாகும்.
இன்றைய சிற்பக்கலை
,ay; 7
நெடுவினா
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, 91 நாள்கள் நீர்
மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார். 1943 ஆம் ஆண்டு
சூலை மாதம் 9 ஆம் நாள் பதவியேற்றார். அவர் உரையாற்றிய மாபெரும் கூட்டத்தில் “டெல்லி
நோக்கிச் செல்லுங்கள்” (டெல்லி சலோ) எனப் போர்முழக்கம் செய்தார். இவரின் வேண்டுகோள்
அனைவரது மனத்திலும் பசுமரத்தாணிபோல் பதிந்தது.
நேதாஜி தலைமையில் இருந்த இந்திய தேசிய இராணுவப் படை பிரித்தானிய அரசை எதிர்த்தது.
அப்போது தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்
சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார். இந்திய தேசிய இராணுவப்
படைத்தலைவராக இருந்த தில்லான், ”இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும்
தமிழர்கள்தான்” என்றார்.
11
சிறந்த வீரர்களை உருவாக்க நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார். அவர்களில்
பெரும்பாலோர் தமிழர்கள். அதில் பயிற்சி பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் தாசன்
ஆவார்.
தென்னை மரத்திலிருந்து நன்றாக முற்றிய காய் விழுகிறது. அது விழுகின்ற வேகத்தில், பாக்கு
மரத்தின் உச்சியிலுள்ள சுவைமிக்க தேனடையைக் கிழித்து, பலாப்பழத்தினைப் பிளந்து,
மாங்கனியைச் சிதற வைத்து, வாழைப் பழத்தினை உதிர்க்கவும் செய்தது. இத்தகு வளம் நிறைந்த
ஏமாங்கத நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் பரவியிருந்தது.
12
13