You are on page 1of 4

 

   கடல் என்பது நீர் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இருக்கும் ஓர் அழகிய இடமாகும். கடலுக்கு
உரவுநீர், உவரி, இரைநீர், சலகாங்கம், ஊர்மிமாலி, வாரீசம் என இருநூறு பெயர்கள் உள்ளன.
கடல் உலகைச் சுற்றிப் பல இடங்களில் உள்ளன. மீன், நண்டு, இறால் கனவாய் எனப் பல
வகையான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. கடல் மிகவும் பெரிய பரப்பளவு கொண்ட
இடமாகும். அதோடு மட்டும் இல்லாமல், கடல் மிகவும் ஆழமான இடமாகும்.
     கடலினால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. மனிதர்களாகிய நாம் உயிருடன் வாழ
உண்ண உணவு தேவைப்படுகின்றது. நாம் உண்ணும் கால் பகுதியானது இறைச்சி மற்றும் மீன்
வகைகள் ஆகும். மீன், நண்டு, சுறா, இறால், கணவாய், சிப்பி எனப் பல வகையிலான நீர்வாழ்
உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. நாமும் சந்தையில் விற்கும் நீர்வாழ் உயிரினங்களை வாங்கி,
சமைத்து உட்கொள்கிறோம். கடல் இருப்பதனால்தான் நம்மால் நீர்வாழ் உயிரினங்களை உண்ண
இயல்கிறது.

     அடுத்ததாக, நம் அன்றாட வாழ்வில் மின்சாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நாம்


மின்சாரத்தை சூரிய ஒளி, நீர், இடி என பல மூலங்களிலிருந்து பெருகிறோம். அதே போல்,
கடல் அலையிலிருந்து நமக்கு மின்சாரம் கிடைக்கின்றன. மின்சாரத்தை நாம் உபயோகம்
செய்வதனால் இரவில் எந்தவித தங்குதடையுமின்றி சுலபமாகவும் வேகமாகவும் லேலையைச்
செய்து முடிக்க இயல்கின்றது. உலகைச் சுற்றிப் பல இடங்களில் கடல் இருப்பதனால், எந்தவொரு
நாட்டிலும் மின்சாரம் இல்லாமல் இருக்காது என்பதில் நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது.
கடலினால் ஏற்படும் நன்மைகளில், நமக்கு மின்சாரம் கிடைக்கப் பெறுவதும் அடங்கும்.

     நாம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு கடல் முக்கிய பங்கை


வகிக்கின்றது. வணிகம் செல்வதற்காக மனிதர்கள் கப்பல் மூலம் கடலில் பயணித்ததாக வரலாறு
கூறுகின்றது. நாம், விமானம், இரயில், மகிழுந்து போன்ற போக்குவரத்துகளைச் செலுத்த வானம்,
தண்டவாளம், சாலை போன்ற பாதையைப் பயன்படுத்துகின்றோம். அதே போல், கப்பல், ஓடம்
போன்ற போக்குவரத்துகளைப் பயன்படுத்த கடல் எனும் பயணப் பாதை முக்கியமானது. அது
மட்டும் இல்லாமல், கடலில் பயணம் செய்பவர்களுக்குக் கடலில் வாழும் சுறா, திமிங்கிலம்
போன்ற உயிரினங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெருகின்றனர். வணிகம் செய்வதற்கும், ஓர்
இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கும், மீன் பிடிப்பதற்கும் கடல் வழிப் பயணம்
உறுதுணையாக இருக்கின்றது என்பதில் நமக்கு சிறிதளவும் ஐயமில்லை.

     இன்றைய இருபத்து ஓன்றாம் நூற்றாண்டில் மன உளைச்சலுக்கு ஆளாகாத ஒருவரும்


கிடையாது. சிறு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் “எனக்கு மன
உளைச்சலாக உள்ளது!” எனும் வசன வரியை அடிக்கடி பயன்பாட்டில் கொள்கின்றனர். எனவே,
கடலுக்குச் சென்றால் மன உளைச்சலுக்கு ஒரு முடிவைப் பெறலாம். சாந்தமான அலைகள்,
உடலைக் கூசச் செய்யும் தென்றல் காற்று, அலைகளின் சத்தம், குழந்தையைக் கொஞ்சும் தாயின்
அன்பு, தவறைக் கண்டிக்கும் அப்பாவின் அக்கரை, சூடான வெயிலில் குளிர்ந்த பனிக்கூழ் என
இவை அனைத்தும் நமது மன உளைச்சலுக்கு அணிச்சல் வெட்டி அனுப்பிவிடும். கோவிலுக்குச்
சென்று வீடு திரும்பினால் எப்படி மன நிம்மதி கிடைக்கின்றதோ, அதே போல கடலுக்குச்
சென்றால் மன நிம்மதியைப் பெறலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கடலில் வீசும் தென்றல்
காற்றில் அதிகமான அளவில் உயிர்வளி உள்ளதால் நன்றாகத் தூங்கலாம். இந்த ஆழ்ந்த
உறக்கத்தினால் மன நிம்மதி கிடைக்கப் பெறுகிறது. கடலுக்குச் சென்று வீடு திரும்பும் பொழுது,
நாம் கவலை, கோபம், மன கஷ்டம், மன உளைச்சல், சோகம், கண்ணீர் போன்ற உணர்வுகளை
மூட்டைக் கட்டி அங்கேயே தூக்கி எறிந்து விட்டு வருவது ஆழ்ந்த நிம்மதியைத் தரும்.

     ஆகவே, கடலினால் ஏற்படும் நன்மைகள் பல உள்ளன. நிறைய நன்மையைக் கொடுக்கும்


கடலுக்கு எந்த விதத்திலிருந்தும் ஆபத்து வராமல் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கடலில் குப்பையை வீசி பல நீர்வாழ் உயிரினங்களை உயிரிழக்கச் செய்பவர்களுக்குச் சட்டம்
பாடம் போதிக்க வேண்டும். நடுக் கடலில் எண்ணெயை ஊற்றி நீரை மாசு அடைய
செய்பவர்களுக்குத் தக்க தண்டனையை விதிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல், கடல் வழிப்
பயணப் போக்குவரத்தான கப்பல்களைப் பல உருவாக்கம் செய்து கடல் போக்குவரத்துகளை
விரிவடையச் செய்ய வேண்டும். ஆகவே, இயற்கை வளங்களில் ஒன்றான கடலை நம் கண்களில்
ஒன்றாகப் பாதுகாத்தல் அவசியம் என்பதனை ஆணித் தரமாக மனதில் பதிவு செய்து கொள்ள
வேண்டும்.

C
கடல் – அழகின் சிரிப்பு
கடல் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து
விட்டுப் பாருங்கள், கடல் இன்னும் அழகு கூடிக் காட்சியளிக்கும்.

மணல், அலைகள்
ஊருக்குக் கிழக்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,

கீரியின் உடல் வண் ணம் போல்


மணல் மெத்தை; அம்மெத் தைமேல்

நேரிடும் அலையோ கல்வி


நிலையத்தின் இளைஞர் போலஎ

பூரிப்பால் ஏறும் வீழும்;


புரண்டிடும்; பாராய் தம்பி.

மணற்கரையில் நண்டுகள்
வெள்ளிய அன்னக் கூட்டம்
விளையாடி வீழ்வ தைப்போல

துள்ளியே அலைகள் மேன்மேல்


கரையினிற் சுழன்று வீழும்!

வெள்ளலை, கரையைத் தொட்டு


மீண்டபின் சிறுகால் நண்டுப்

பிள்ளகள் ஓடி ஆடிப்


பெரியதோர் வியப்பைச் செய்யும்.

புரட்சிக்கப் பால் அ மைதி


பொலியுமாம். அதுபோல், ஓரக்

கரையினில் அலைகள் மோதிக்


கலகங்கள் விளைக்கும்; ஆனால்

அருகுள்ள அலைகட் கப்பால்


கடலிடை அமைதி அன்றோ!

பெருநீரை வான்மு கக்கும்;


வான்நிறம் பெருநீர் வாங்கும்!

கடலின் கண்கொள்ளாக் காட்சி


பெரும்புனல் நிலையும், வானிற்
பிணந்த அக் கரையும், இப்பால்

ஒருங்காக வடக்கும் தெற்கும்


ஓடு நீர்ப் பரப்பும் காண

இருவிழிச் சிறகால் நெஞ்சம்


எழுந்திடும்; முழுதும் காண

ஒருகோடிச் சிறகு வேண்டும்


ஓகோகோ எனப்பின் வாங்கும்!

கடலும் வானும்
அக்கரை சோலை போலத்
தோன்றிடும்! அந்தச் சோலை,

திக்கெலாம் தெரியக் காட்டும்


இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்

கைக்கொள்ள அம்மு கில்கள்


போராடும்! கருவா னத்தை

மொய்த்துமே செவ்வா னாக்கி


முடித்திடும்! பாராய் தம்பி!

You might also like