You are on page 1of 7

பனை சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்

1. பனையை வைத்து பனை சாக்லெட் (Palm Chocolate)


2. நுங்கு ஜூஸ் (Ice-apple juice)
3. பனை வொயின் (Palm Wine)
4. பனம்பழச்சாறு ( Palm Juice)
5. பனை மட்டை பர்னிச்சர் (Palm Rip Furniture)

தமிழ்நாட்டில் பனைமரம் அதிகமாக விளையும் மாவட்டங்களில்


ராமநாதபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. கடலாடி, திருப்புல்லாணி,
மண்டபம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அந்த பனைமர அடர்த்தியை
நம்மால் காண முடியும். ஆனால், இந்த பனை வளம் ராமநாதபுரம்
மாவட்ட மக்களால் இதுவரை மேம்பட்ட வழியில் பயன்படுத்திக்
கொள்ளப்படவில்லை. சில குறு விவசாயிகளும் பனைத்
தொழிலாளர்களும் மட்டும் பனைவெல்லத் தயாரிப்பில் ஈடுபட்டு
வருகின்றனர். ஆனால், அந்த பனைவெல்லம் என்பது பழைய தயாரிப்பு
பொருள்! இந்திய சுதந்திரத்துக்கு முன்னால் மகாத்மா காந்தியே,
“பனைவெல்ல தயாரிப்பை ஊரகப்பகுதிகளில் ஊக்குவிக்க வேண்டும்”
என்று குறிப்பிட்டு எழுதும் அளவுக்கு பழையது!

ஆகவே, இனிமேலேனும் பனை சார்ந்த புதியவகை மதிப்புக்கூட்டுப்


பொருட்களை நோக்கி ராமநாதபுரத்தை நாம் நகர்த்த வேண்டும். அதற்கு
முதன்மையாக, பனை மதிப்புக்கூட்டுப் பொருட்களை தயாரித்து
சந்தைப்படுத்துவதற்கு என்று ‘Palm Products Commercial Corporation (PPCC)’
என்ற அமைப்பை தமிழ்நாடு அளவில் ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே,
Tamilnadu Palm Products Development Board என்ற அமைப்பு இருக்கிறது.
ஆனால், பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்ற மரபுசார்ந்த பனை
பொருட்களை உருவாக்கி உள்ளூருக்குள் விற்பதையே அவர்கள்
தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் கள். எனவே, புதிய
குறிக்கோள்களும் இலக்குகளும் கொண்ட ஒரு நவன ீ அமைப்பு நம்
மாநில மரத்துக்கு தேவையாகிறது.

என் பரிந்துரை என்னவென்றால், Palm Products Commercial Corporation


அமைப்பு முற்றிலும் அரசின் பங்களிப்போடு மட்டும் இயங்காமல்,
தனியார்களின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாக இயங்குவது நல்ல
பயனளிக்கும். ஏனென்றால், தனியாருக்கு வாய்ப்பு அளிக்கும் போது
தான் புதிய சிந்தனைகளும் செயல்திட்டங்களும் உள்ளே வரும். அது
நமக்கு பல திசைகளிலும் வாசல்களை திறக்கும். சுருக்கமாக, TIDCO
(Tamilnadu Industrial Development Corporation) மாடலைப் போல
வடிவமைக்கலாம். அதென்ன TIDCO மாடல்?! அதாவது, TIDCO அரசு
நிறுவனம் என்றாலும், அது ஒரு Public Financial Institution. அப்படி
என்றால், தனியார்களும் உடன் இணைந்து நிறுவனங்களை தொடங்க
முடியும். உதாரணத்துக்கு, டாட்டா நிறுவனம் TIDCO-வுடன் இணைந்தே
டைட்டன் நிறுவனத்தை தமிழ்நாட்டின் ஒசூரில் தொடங்கியது.
இப்போது டைட்டன் நிறுவனத்தின் 27% பங்குகளை TIDCO-வும் 25%
பங்குகளை டாட்டாவும் வைத்திருக்கின்றன. இதே போலத் தான்
PPCC-யையும் நாம் அமைக்க வேண்டும்.

1. பனையை வைத்து பனை சாக்லெட் (Palm Chocolate)

PPCC-ன் முதல் முன்னெடுப்பாக சாயல்குடியில் பனை சாக்லெட் (Palm


Chocolate) தொழிற்சாலையை உருவாக்கலாம். பனை சாக்லெட் என்பது
வேறு எதுவும் இல்லை. டெய்ரி மில்க்கை போன்ற டார்க் சாக்லெட்.
Research and Markets அமைப்பின் தரவுகளின் படி, 2020ம் ஆண்டில் டார்க்
சாக்லெட்டின் உலக சந்தை மதிப்பு 48,000 கோடி ரூபாய். இது 2027ம்
ஆண்டுக்குள் 72000 கோடி ரூபாய் அளவுக்கு உயரும் வாய்ப்பு உள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி டெய்ரி மில்க் சாக்லெட்டின் தரம்
மற்றும் மாதிரியில் நாம் பனை சாக்லெட்களை தயாரித்து
சந்தைப்படுத்தலாம். முக்கியமாக, டெய்ரி மில்க் சாக்லெட்டில் 20%
தான் Dark Elements இருக்கிறது. ஆனால், பனை சாக்லெட்டில் 72% Dark
Elements இருக்கிறது. மருத்துவ ஆய்வுகளின் படி Dark Elements அதிகம்
இருக்கும் சாக்லெட்களே உடல்நலனுக்கு உகந்தவை. எனவே,
ராமநாதபுரத்தில் நாம் உருவாக்கும் பனை சாக்லெட்களை உலகம் முழு
நம்பிக்கையுடன் உட்கொள்ளும்.

2. நுங்கு ஜூஸ் (Ice-apple juice)

அடுத்த பனை சார்ந்த மதிப்புக் கூட்டுப்பொருள், நுங்கு ஜூஸ். இதற்கு,


லிச்சி ஜூஸ் (Lychee Juice) ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.
லிச்சி என்பது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் பீகார்
போன்ற மாநிலங்களிலும் விளையும் ஒரு பழம். சிவப்பாக Strawberry
போல இருக்கும். அதை நன்றாக ஜூஸ் செய்து கலர் பாட்டிலுக்குள்
அடைத்து சில கவர்ச்சிகர விளம்பர வாசகங்களை ஸ்டிக்கராக ஒட்டி
விற்பனை செய்கின்றன ஜூஸ் நிறுவனங்கள். அதில் முன்னணியில்
இருப்பது Paper Boat நிறுவனம். இந்த பேப்பர் போட் நிறுவனம் 150 மில்லி
லிட்டர் லிச்சி ஜூஸை 20 ரூபாய்க்கு சந்தையில் விற்கிறது. இதனால்,
ஆண்டு ஒன்றுக்கு 235 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறது.
இதே Paper Boat நிறுவனத்தின் வழிமுறையை பயன்படுத்தி அல்லது
Paper Boat நிறுவனத்துடன் ஒரு கூட்டணி ஒப்பந்தம் போட்டு நாம் நுங்கு
ஜூஸ் நிறுவனங்களை ராமநாதபுரத்தில் உருவாக்கலாம்.

3.பனை வொயின் (Palm Wine)

கடைசியாக, பனை வொயின் (Palm Wine). நன்றாக கவனிக்கவும். இது


கள்ளு இல்லை. ஆனால், கள்ளுடன் வொயின் நுரைமத்தை (Wine Yeast)
கலந்து நன்றாக கொதிக்கச் செய்து வொயினாக பரிமாற்றம் செய்வது.
இதற்கு எடுத்துக்காட்டாக Wilson Creek Sparkling Coconut Wine
நிறுவனத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த நிறுவனம்
கலிஃபோர்னியாவில் பெரிய வொயின் கிளப்பையே நடத்தி வருகிறது.
கூடவே, வொயினை பாட்டில்களில் அடைத்து உலகம் முழுக்க
விற்பனையும் செய்து கொண்டிருக்கிறது. இவர்கள் அதிகமாக
தென்னங்கள்ளில் இருந்து வொயினை உருவாக்குகிறார்கள். நாம்
அப்படியே பனங்கள்ளுக்கு அதை ‘மரம்' மாற்றிக்கொள்ளலாம்.

Wilson Creek நிறுவனம் 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட தென்னை


வொயினை இந்திய ரூபாய் மதிப்பில் 1,332 ரூபாய்க்கு விற்கிறது. நாம்
பனை வொயினை கூடுதலாக 500 ரூபாய் வைத்து விற்க முடியும்.
ஏனென்றால், பனை வொயின் துறையில் கொடிகட்டி பறக்கும்
கம்போடியா நிறுவனமான Confiral, 750 மில்லி லிட்டர் வொயினை
இந்திய ரூபாய் மதிப்பில் 1756 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால், இவை
எல்லாவற்றையும் செய்ய தமிழ்நாடு அரசு பனங்கள் இறக்குவதற்கு
விதித்திருக்கும் தடையை விலக்கிக்கொள்ள வேண்டும். கூடவே,
தமிழ்நாடெங்கும் வொயின் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதியும்
வழங்க வேண்டும். கண்டிப்பாக, உள்ளூரில் (Domestic) நாம் பனை
வொயினை விற்கப்போவதில்லை. வெளிநாடுகளுக்கும் அண்டை
மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

உணவுப் பொருட்களைத் தாண்டி, பனை நமக்கு அளிக்கும் முக்கியப்


பொருள் பனை ஓலை மற்றும் பனை மட்டை. இதை அழகான
கைவினைப் பொருட்களாக உருமாற்றி சந்தைப்படுத்தும் வாய்ப்பு
நமக்கு உள்ளது. இது இன்றைய ‘China Goods’ தமிழ்நாட்டில் சாத்தியமா
என்றால் சத்தியமாக சாத்தியம். ஏற்கனவே ‘பிளாஸ்டிக் தடை’
அமலான போது பனை ஓலைப்பைகளும், பனை மட்டை
கோப்பைகளும் நம்மூரில் பிரம்மாண்டமாக விற்று தீர்த்தன. ஆனால்,
நாம் தான் அதை சில வாரங்களுக்குள்ளேயே கைவிட்டு மீ ண்டும் சீன
பிளாஸ்டிக் பொருட்களுக்கே திரும்பி விட்டோம். ஆனால், சீனாவில்
பனை ஓலை மற்றும் பனை மட்டை கைவினைப் பொருட்களையே
விரும்பி பயன்படுத்துகிறார்கள். என்னிடம் உரையாடிய சில
ராமநாதபுரம் பனை ஆர்வலர்கள்,“இங்கிருந்து பனை ஓலையும், பனை
மட்டையும் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஏற்றுமதியாகிறது. அவர்கள்
அதை அங்கே அலங்காரப் பொருட்களாக மாற்றி வடுகளிலும்,

ஹோட்டல்களிலும் பயன்படுத்துகிறார்கள். மூலப்பொருளை
வைத்திருக்கும் நமக்கு மூளையே இல்லை...” என்று
வருத்தப்பட்டார்கள்.

ஆகவே, நாளை முதல் நாம் மூன்று முக்கியக் காரியங்களை செய்ய


வேண்டும். முதலாவது, PPCC-யில் பனை கைவினைப்
பொருட்களுக்கென்று தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
இரண்டாவது, அந்தப் பிரிவின் கீ ழ் ராமநாதபுரம் போன்ற தமிழ்நாட்டின்
அத்தனை மாவட்ட பனை கைவினைஞர்களையும் ஒன்று திரட்டி பனை
கைவினைப் பொருட்களை தரமானதாகவும் நவனமாகவும்ீ தயாரிக்க
வேண்டும். மூன்றாவதாக, ‘பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து
இயற்கையான மற்றும் சூழலுக்கு உகந்த பனை கைவினைப்
பொருட்களையே பயன்படுத்துவோம்' என்று நாம் ஒவ்வொருவரும்
உறுதியேற்க வேண்டும். இது மூன்றையும் சிறப்பாக செய்து முடித்தால்,
அடுத்த சில வருடங்களுக்குள் கோ - ஆப்டெக்ஸ் போன்று பனை
கைவினைப் பொருட்களுக்கும் தி.நகரிலும், ஒப்பணக்கார வதியிலும்,

மேலமாசி வதியிலும்
ீ கடைகள் உண்டாகும்.

பனைப்பொருள் சார்ந்த நிறுவனங்களை உருவாக்கும் அதே நேரம்,


பனைத்தொழிலை நவனப்படுத்துவதும்
ீ அவசியம்.
நவனமயப்படுத்துவது
ீ என்றால் கணினிமயப்படுத்துவது இல்லை. ஏன்
சொல்கிறேனென்றால், இரண்டு கணினிகளை வாங்கி வைத்துவிட்டு
“நவனமயப்படுத்தி
ீ விட்டோம்” என்று கணக்கு காட்டி விடுகிறார்கள்
அதிகாரிகள். ஆனால், அதன் பெயர் Digitalize. நான் சொல்வது Modernize.
‘Modernize’ என்றால், பழைய வழிமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு
முற்றிலும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது.
உதாரணத்திற்கு, அன்று அம்மியில் அரைத்தோம், இன்று மிக்ஸியில்
அரைக்கிறோம் அல்லவா? அது தான் Modernize. அதே போல, பனைமரத்
தொழிலிலும் பழைய வழிமுறைகளையெல்லாம் நீக்கிவிட்டு, புதிய
வழிமுறைகளை நாம் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்த
வேண்டும்.

இன்றளவும் தென்னம்பாலையை முதுகில் மாட்டிக் கொண்டு,


தலைநாரை காலில் கட்டிக்கொண்டு, பாலை வெட்ட ஒரு அரிவாள்,
மட்டை வெட்ட ஒரு அரிவாள் என்று உயிரை பணையம் வைத்தே
ஒவ்வொரு பனைமரத் தொழிலாளியும் மரமேறுகிறார். இதனை
எளிதாக ஒரு வாரத்திற்குள் நம்மால் மாற்ற முடியும். எப்படியென்றால்,
Amazon, Flipkart, Indiamart போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில்
அதிநவன ீ மரமேறும் கருவிகள் விற்பனைக்கு இருக்கின்றன. ‘Palm Tree
Climbing Machine’ என்று நான்கு வார்த்தையை போட்டு டைப் செய்தால்
போதும். நான்காயிரம் ரூபாயில் இருந்து பனைமரமேறும் கருவிகள் நம்
கண்முன் விரிகின்றன. அதில் எது நடைமுறை சாத்தியமாக இருக்கும்
என்பதை ஆராய்ந்து, அரசே நேரடியாக கொள்முதல் செய்து பனைமரத்
தொழிலாளர்களுக்கு வழங்கலாம். சிறிது முயன்றால், பனைமரம் ஏறி
பதநீர் பானை மாட்டுவதற்கும், மட்டை வெட்டுவதற்கும் ரோபோக்களை
கூட நம்மால் உருவாக்க முடியும். இதை ஒரு Project-ஆக நம் கல்லூரி
மாணவர்களுக்கு அளித்து செயல்படுத்திப் பார்க்கலாம்.

4.பனம்பழச்சாறு (Palm Juice)

கோடை காலங்களில் கிராமங்களில் எளிதாகக் கிடைக்கும் பனம்பழம்,


அதன் சுவைக்காக மட்டும் மட்டுமல்ல.. அதன் ஆரஞ்சு மற்றும் சிவந்த
மஞ்சள் நிறத்திற்காகவும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி
உண்ணக்கூடிய ஓர் சத்துமிக்க பழம். பெரும்பாலும் இதன் மகத்துவம்
தெரியாததால் சந்தையில் இந்தப் பழம் விற்பனைக்கு கிடைப்பதில்லை.
பனையிலிருந்து பெறப்படும் நுங்கு, வெல்லம் போன்றவற்றிக்கு
தரப்படும் முக்கியத்துவமும் இதற்கு தரப்படுவதில்லை. கொழுப்பு,
புரதம், பீட்டா கரோட்டீன் எனும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி
உள்ளிட்ட சத்துக்களை கொண்டது பனம்பழம். மாம்பழம், பப்பாளியை
விட அதிக வைட்டமின் சி யை கொண்ட இந்தப் பழம்,
இனிப்புச்சுவையுடையது. கல்லீரல், பித்தப்பை பாதிப்புகள், தோல்
நோய்கள் போன்றவற்றுக்கு தீர்வாக இந்தப் பழத்தை உட்கொள்ள சித்த
மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். தஞ்சையின் வளங்களில்
ஒன்றான பனையிலிருந்து பெறப்படும் பனம்பழத்தை பனம்பழச்சாறாக
மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பனை மரங்கள் உள்ளன.


பொதுவாக, ஒரு பனை மரத்திலிருந்து தோராயமாக 100 பனம்பழங்கள்
வதம்
ீ ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 4 கோடி பனம்பழங்கள்
கிடைக்கும். இதிலிருந்து சுமார் 20 சதவிகித பழங்களை மட்டும்
எடுத்துக்கொண்டால் தோராயமாக 80 லட்சம் பழங்கள் இருக்கும். ஒரு
பனம்பழத்திலிருந்து அரை லிட்டர் பழச்சாறு எடுக்க முடியும்.
அந்தவகையில் ஆண்டுக்கு ஏறக்குறைய 40 லட்சம் லிட்டர்
பனம்பழச்சாறு தயாரிக்கலாம். பனம்பழச்சாறுவை மக்கள் விரும்பி
குடிப்பதற்கு ஏற்றவாறு, அதனை பிராண்ட செய்து, பிரபலப்படுத்த
வேண்டும். சந்தையில் ஒரு லிட்டர் பழச்சாறை 50 ரூபாய் என
விலைநிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு
தோராயமாக 20 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற முடியும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மொத்த லட்சம்


பனைமரங்கள் 4 மரங்கள்
ஒரு பனைமரத்தில் இருந்து 100
பனம்பழங்கள் வதம்ீ 4 லட்சம் மரங்களில் கோடி
இருந்து கிடைக்கும் பனம்பழங்கள் 4 பனம்பழங்கள்
4 கோடி பழங்களில் இருந்து 20 சதவிதம் லட்சம்
எடுத்துக்கொண்டால் கிடைக்கும் அளவு 80 பனம்பழங்கள்
ஒரு பனம்பழத்தில் இருந்து அரை லிட்டர்
பழச்சாறு வதம்
ீ 80 லட்சம் பனம்பழத்தில்
இருந்து கிடைக்கும் பனம்பழச்சாறின்
அளவு 40 லட்சம் லிட்டர்
ஒரு லிட்டர் பனம்பழச்சாறை 50 ரூபாய்
என விலை நிர்ணயம் செய்து விற்பனை
செய்தால் கிடைக்கும் ஆண்டு
வருமானம் 20 கோடி ரூபாய்
* மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீ டுகள் அனைத்தும்
தோராயமானவை.

5. பனை மட்டை பர்னிச்சர்

பனை மரத்தை பயன்படுத்தி வடுகளின்


ீ மேற்கூரைக்குத் தேவையான
ரீப்பர்களை உருவாக்கலாம். அதுபோல, அதன் மட்டை, ஓலைகளைப்
பயன்படுத்தி பர்னிச்சர்களை தயாரிக்க முடியும். உலகம் முழுவதிலும்
பர்னிச்சர் உள்ளிட்ட தேவைகளுக்காக காடுகளை அழிப்பது தொடர்ந்து
நடந்து வருகிறது. உலகின் மாபெரும் காடுகளைக் கொண்டிருக்கும்
அமேசானில் 15 சதவிகித நிலபரப்பிலிருந்த மரங்கள்
அழிக்கப்பட்டுவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால்,
வளிமண்டலப் பாதிப்பு, துருவ பனிமலைகள் உருகி சுற்றுச்சூழல்
பிரச்சினைகளை அதிகரித்துள்ளன. இவற்றை ஓரளவுக்கு
கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக நெல், கம்பு, கேழ்வரகு
போன்றவற்றிலிருந்து பர்னிச்சர்களை உருவாக்கும்
தொழிற்சாலைகளை அதிகரித்து வருகின்றன. அந்தப் பட்டியலில் இனி
பனை மட்டையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எகிப்து நாடானது மர இறக்குமதியை குறைத்து பனை


மட்டையிலிருந்து பர்னிச்சர்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி
கண்டுள்ளது. பனையில் தயாரிக்கப்படும் பர்னிச்சர்கள்
உறுதியானதாகவும் அதிக அழுத்தத்தை தாங்கக்கூடியதாகவும்
இருக்கின்றன என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு
வரவேற்பு அதிகரிக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தஞ்சாவூர்
மாவட்டத்தின் பனைமட்டை பர்னிச்சர் தொழிற்சாலை ஒன்றை
நிறுவுவது அவசியம். வழக்கமாக, பனை மட்டைகள் எளிதில் மக்காது
என்பதால் அவற்றை பெரும்பாலும் எரிப்பதே தொடர்ந்து நடக்கிறது.
இதை தவிர்க்கும் வகையிலும் பர்னிச்சர் தயாரிப்பு அமைவதோடு,
சுற்றுப்புறச்சூழலுக்கும் நன்மை பயக்கும் வகையிலும் அமையும்!

தமிழ்நாடு முழுக்க சுமார் 4 கோடி மரங்களும் இருக்கின்றன. ஒரு பனை


மரத்திலிருந்து தோராயமாக 25 மட்டைகள் கிடைக்கும்.
தமிழ்நாட்டிலுள்ள மொத்த பனை மரங்களையும் சேர்த்து கணக்கில்
எடுத்துக்கொள்ளும்போது தோராயமாக 100 கோடி மட்டைகள்
கிடைக்கும். சந்தையில், 1 கிலோ ஸ்ட்ராபோர்டின் விலையை 22 (8X4
உள்ள போர்டின் அளவு) ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பனை
மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்ட்ராபோர்டின் விலையை 30 (8X4
உள்ள போர்டின் அளவு) ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை
செய்தால் ஆண்டுக்கு தோராயமாக 30 கோடி ரூபாய் அளவுக்கு
வருமானம் பெற முடியும். இதனால் நேரடியாகவும்
மறைகமுகமாகவும் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு,
தஞ்சாவூர் மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்த முடியும்.
தமிழ்நாடு முழுக்க உள்ள பனை மரங்களின் கோடி
எண்ணிக்கை 4 மரங்கள்
ஒரு பனை மரத்திலிருந்து கிடைக்கும்
மட்டைகளின் எண்ணிக்கை 25 மட்டைகள்
தமிழ்நாட்டிலுள்ள மொத்த பனை கோடி
மட்டைகளின் எண்ணிக்கை 100 மட்டைகள்
சந்தையில் 1 கிலோ ஸ்ட்ராபோர்டு விலை
(Board size 8X4) ரூ.22 என விலையுடன்
ஒப்பிட்டு,1 கிலோ பாம் ரிப் போர்டை (Board
size 8X4) விலை 30 ரூபாய்
ஸ்ட்ராபோர்டு தயாரிப்பின் வழியே ஆண்டு
வருமானம் சுமார் 300 கோடி பெற முடியும்
எனில் அதில் 10% கைப்பற்றினால்
கிடைக்கும் வருமானம் 30 கோடி ரூபாய்
* மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீ டுகள் அனைத்தும்
தோராயமானவை.

You might also like