Professional Documents
Culture Documents
சிந்தனை சிற்பிகளே,
திருவள்ளுவர் நம் வாழ்க்கைக்கு விட்டுச் சென்ற கருவூலம் திருக்குறள். அந்த ஒழுக்க நெறி
நூலிலிருந்து ஒரு குறளை நான் உரைத்ததன் காரணம் அறிவீர்களா? தோழர்களே, நான் எதற்காக
ஒழுக்கத்திற்கு இவ்வளவு அழுத்தம் தருகிறேன்? இதற்கு காரணம், மனிதனாகிய நாம் மனிதனாக
வாழ ஒழுக்கம் தேவை. ஒழுக்கம் நம் உயிருக்கு ஒப்பாகும்.
நேர்மை, ஒழுக்கம், பண்பு, பரிவு போன்ற நற்குணங்கள் என்றும் மாறாது; மறையாது. இதற்கு
காரணம், தமிழர் மரபில் அதன் வேர்கள் ஆழமாக உள்ளது. அதன் ஆழத்தை நாம் உணர
வேண்டும். அதை நாம் ஆசிரியராகிவிட்டப் பின் நம் மாணவர்களுக்கும் உணர்த்த வேண்டும்.
1
அன்பு சகோதரர்களே,
“சுய கட்டுபாடு” இது தான் ஒழுக்கத்தின் அஸ்திவாரம். ஒரு தவறைப் பலரும் இருக்கும்
இடத்தில் செய்யாமல் இருப்பது ஒழுக்கமாகாது. யாரும் இல்லாத தனிமையில் கூட தீயவைச்
செய்யாது இருப்பதே ஒழுக்கம். சுய கட்டுப்பாடு எதில் இருக்க வேண்டும்? பேசுவது மட்டுமின்றி
நடப்பது, உணவு உண்பது, சிரிப்பது என்று அனைத்திலும் இருப்பது அவசியம். நம் வாழ்வில் நாம்
செயல்படுத்தும் அனைத்து நடவடிக்கையிலும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று, ஒழுக்கம்.
சிரிப்பதில் ஏன் ஒழுக்கம் அவசியம்? நாம் மனது விட்டு சிரிக்க வேண்டும். ஆனால், பிறர் மனதில்
2
மரண பயத்தை உண்டு செய்வதுப் போல் பயங்கரமாக சிரிக்கக் கூடாது. மேலும், பிறர் மனதைப்
புண்படுத்துவதுப்போல் சிரிப்பது கூடவே கூடாது. அவ்வகையில், சிறு விடயம் தானே என்று
எண்ணாமல் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். அதுதான்
மகிழ்ச்சியான நல்வாழ்க்கையாக அமையும் திறவுக்கோள். இதற்கு தக்க சான்றாக, உலகப்பொதுமறை
அருளிய பேராசன் உரைத்துள்ளார்,
குணமணிகளே,
3
என்று மிக அழகாக பகர்கிறார். வருங்கால ஆசிரியர்களாகிய நாம் பேச்சில் ஒழுக்கத்தைக்
கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால், ஒரு தலைமுறையின் வளர்ச்சியும்
வாழ்க்கையும் நாம் சொல்லும் வார்த்தைகளில்தான் உள்ளது.
மொத்ததில், மானம் இழப்பதா அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலை
ஏற்பட்டாலும், அந்நிலையிலும், பொய்யாமொழி புலவரின் வாக்குப்படி மானத்தை இழக்காமல்
உயிரை இழந்துவிடுவதே மேல். அவ்வகையில், உயிரைவிட மேன்மையானது ஒழுக்க நெறி. அதை
இந்நாட்டின் சுடர்களான மாணவர்களின், தூண்டுக்கோளாகிய ஆசிரியர்கள் நாம், அவர்களின்
மனதில் பசுமரத்தாணிப்போல பதிய வைக்க வேண்டும். ஒழுக்கத்தை பின்பற்றி ஒழுகினால்
வாழ்க்கையில் மேன்மையடைவதோடு நல்வாழ்க்கை வாழ்ந்து புகழடைவது உறுதி. ஆக, ஒழுக்கம்
என்பது வழுக்கு மரம், ஒரு விரல்பிடி நழுவினும் வாழ்க்கை விழும் எனக் கூறி
விடைப்பெறுகிறேன். நன்றி, வணக்கம்.
4
மேற்கோள்
8. ராஜ்குமார். (2017, நவம்பர் 30). எழுத்து. Retrieved மார்ச் 06, 2019, from
https://eluthu.com/kavithai/340807.html
9. விக்கிப்பீடியா. (2017, ஜூலை 05). https://ta.wikipedia.org/wiki/ -இல் இருந்து, மார்ச் 05, 2019
எடுக்கப்பட்டது