Professional Documents
Culture Documents
‘பிறக்கும் வரை தாயின் கருவறை, இறக்கும் வரை பூமி எனும் கருவறை, இரண்டையும்
காத்தால்தான் நம் வாழ்க்கையே நடைமுறை’ என்ற கூற்றின் படி பூமியைக் காக்கும் ஒரு
முயற்சிதான் சர்வேதேச புவி தினம். அவ்வகையில், இளைய தலைமுறையினருக்கும் இப்பொறுப்பும்,
விழிப்புணர்வும் ஏற்படும் வகையில் தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில்
கடந்த 15 பிப்ரவரி 2019 ஆம் நாள் புவி தின கொண்டாட்டம் நடந்தேறியது. இந்நிகழ்ச்சி காலை
8.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைப்பெற்றது. இந்நிகழ்வை இயற்கையைப் போற்றும்
இயக்கமான தெமெங்கொங் இப்ராஹிம் தன்னார்வ சுற்று சூழல் இயக்கமும், 5 அறிவியல், 5
தகவாண்மை மற்றும் 5 தமிழ் மொழி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து சீரும் சிறப்புமாக
ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களும்,
விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் மெருக்கூட்டினர்.
காலை மணி 8.30 அளவில் மாணவர்களின் படைப்பு நடந்தேறியது. திரு ஈசா பின் அம்ரி
அவர்களின் தலைமையிலான தன்னார்வ சுற்று சூழல் இசைக்குழு இயற்கையைப் பற்றி இரண்டு
பாடல்களை மிகவும் சிறப்பாக படைத்தனர். அதன் பிறகு, செல்வன் கார்த்திக் அவர்கள் பூமி
தாயைப் பற்றி ஒரு கவிதையைப் பாராயணம் செய்தார். படைப்புகள் முடிந்தவுடன் அனைவருக்கும்
காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
____________________________
பங்கேற்பாளர்,
பின்னிணைப்பு
வரவேற்புரை,சிறப்புரை,அதிகாரப்பூர்வமான தொடக்கம்
படைப்புகள்
பின்னிணைப்பு
பின்னிணைப்பு
மேற்கோள்
அச்சு ஆவணங்கள்
மைந்தன், ப. (2009). சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல். பொதுக் கட்டுரைகள் (பக். 38-40). இல்
சென்னை: சாரதா பதிப்பகம். பிப்ரவரி 15, 2019 மீட்டெடுக்கப்பட்டது
ஆய்வடங்கள்
மனாப், ல. அ. (2011). Aplikasi sistem pintar dalam pengurusan sisa pepejal. கோலாலம்பூர்: டேவான்
பஹாசா & புஸ்தாகா (Dewan Bahasa dan Pustaka). Retrieved பிப்ரவரி 12, 2019, from
http://www.ibctamil.com/
மைந்தன், ப. (2009). சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல். பொதுக் கட்டுரைகள் (பக். 38-40). இல்
சென்னை: சாரதா பதிப்பகம். பிப்ரவரி 15, 2019 மீட்டெடுக்கப்பட்டது
வினவு. (2014, அக்டோபர் 29). இலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல். Retrieved from
https://www.vinavu.com/2014/10/29/nature-in-tamil-literary-tradition/