You are on page 1of 7

பள்ளிப்போட்டி விளையாட்டு அறிக்கை

முன்னுரை
 தலைப்பு
 இடம்
 தேதி
 எங்கு
 எப்பொழுது
 அதன் நோக்கம்
 சிறப்பு வருகையாளர்

கருத்து 1
 குழுக்களாகப் பிரித்தல்
 பயிற்சியளித்தல்
 அழைப்பிதல் தயாரித்தல்
 பிரமுகர்களை அழைத்தல்
 திடல் அலங்காரம் ( கொடி )
 கூடாரம் அமைத்தல்

கருத்து 2
 அணிவகுப்பு
 உரை ( தலைமையாசிரியர் )
 உறுதிமொழி
 அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தல்

கருத்து 3
 போட்டித் தொடங்குதல்
 நடைபெற்ற போட்டிகள்
 போட்டிகள் முடிந்த நேரம்
 பரிசளிப்பு
 வெற்றியாளர்கள்
 வெற்றி வாகை சூடிய குழு

முடிவு
 சிற்றுண்டி வழங்குதல்
 முடிந்த நேரம்
 தயாரித்தவர்
 கையொப்பம்
 முழுப்பெயர்
 பதவி
 பள்ளிப் பெயர்
 வலப்பக்கம் அறிக்கை தயாரித்த திகதி

மொழியணி
உச்சிக் குளிர்தல், உடலினை உறுதி செய், இலைமறைக் காய் போல
தமிழ்மொழி விழா அறிக்கை
முன்னுரை
 தலைப்பு
 இடம்
 தேதி

கருத்து 1
 எங்கு
 எப்பொழுது
 அதன் நோக்கம்
 சிறப்பு வருகையாளர்

கருத்து 2
 என்னென்ன போட்டிகள்
 யார் யாருக்கு
 கலந்து கொண்ட போட்டியாளர் எண்ணிக்கை
 நீதிபதிகள்

கருத்து 3
 போட்டியின் முடிவுகள்
 வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள்- வகுப்பு
 மாணவர்களின் மனநிலை

முடிவுரை
 சிற்றுண்டி உண்ணுதல்
 முடிந்த நேரம்
 தயாரித்தவர்
 கையொப்பம்
 முழுப்பெயர்
 பதவி
 பள்ளிப் பெயர்
 வலப்பக்கம் அறிக்கை தயாரித்த திகதி

மொழியணி
1. உச்சிக் குளிர்தல்
2. அருமை பெருமை
3. இலைமறைக் காய் போல
கல்விச் சுற்றுலா அறிக்கை
முன்னுரை
 தலைப்பு
 இடம்
 தேதி

கருத்து 1
 எங்கு
 எப்பொழுது
 எப்படி
 கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை

கருத்து 2
 முதல் நாள்
 சென்ற இடங்கள்
 பார்த்தவை, இரசித்தவை
 தங்குமிடம்

கருத்து 3
 மறுநாள்
 சென்ற இடங்கள்
 பார்த்தவை, இரசித்தவை
 நினைவுச் சின்னம் வாங்குதல்
 
முடிவு
 
 திரும்புதல்
 அடைந்த நன்மைகள்
 தயாரித்தவர்
 கையொப்பம்
 முழுப்பெயர்
 பதவி
 பள்ளிப்பெயர்
 வலப்பக்கம்- அறிக்கை தயாரித்த திகதி

மொழியணி
1. உச்சிக் குளிர்தல்
2. அருமை பெருமை
3. கிணற்றுத்தவளை
சீருடை இயக்க முகாம் அறிக்கை
பத்தி 1
-அறிக்கையின் அமைப்பு இருத்தல் அவசியம்
-கூடாரம் அமைத்தல்
-கொடியேற்றம்
-மாணவர்களின் உறுதிமொழி
-மாணவர்களின் அணிவகுப்பு

பத்தி 2
-கடவுள் வாழ்த்து-திரு.மாறன்
-வரவேற்புரை-சாரணர் தலைவர்
-திறப்புரை-மாநில புறப்பாட அமைப்பின் இயக்குநர்

பத்தி 3
-பணிக்குழு அமைத்தல்
-நீர்,விறகு கொண்டு வருதல்
-சமைத்தல்

பத்தி 4
-நடைப்பெற்ற நடவடிக்கைகள்/போட்டிகள்
-“கஜெட்” செய்வது
-சிறப்பான கூடாரம்/அலங்காரம்
-சமையல் போட்டி
-புதையல் தேடும் போட்டி

பத்தி 5
-நெருப்பு மூட்டி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
– உணவு உண்டு மகிழ்ந்தோம்.

பத்தி 6
– கூடாரத்தைச் சுத்தப்ப்டுத்துதல்
– சுத்தமான / அழகான கூடாரத்திற்குப் பரிசு
– நன்னடத்தை / எல்லா நடவடிக்கைகளிலும் ஆர்வமாக ஈடுபட்ட குழு – சிறந்த குழு தேர்வு
– பாராட்டும் பரிசும் வழங்குதல்
– மதிய உணவு
– விடைபெற்று செல்லுதல்

முடிவு
– தயாரித்தவர் கையொப்பம்
– திகதி
பரிசளிப்பு விழாஅறிக்கை
தேசிய வகை தமிழ்ப்பள்ளி பத்தாங் மலாக்கா

கடந்த 3.11.2012, திங்கள் கிழமையன்று, பள்ளியின் 15-ஆவது வருடாந்திர பரிசளிப்பு விழா


பள்ளி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு மாலை 6.00 மணியிலிருந்து இரவு
9.00 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வி பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தப் பரிசளிப்பு விழா ஆண்டு தோறும்நோக்கம் என்னவென்றால் கல்வியிலும் புறப்பாட


நடவடிக்கைகளிலும் மிகச் சிறப்பாக ஈடுபட்டு, உன்னத நிலையை அடையும் மாணவர்களுக்கு
ஊக்குவிப்பு வழங்குவதே ஆகும்.இவ்விழாவை முன்னிட்டு பல முன்னேற்பாடுகள்
செய்யப்பட்டது. மேலும், பரிசளிப்பு விழாவையொட்டி மாணவர்கள் படைப்புகள் செய்வதற்கு
ஆசிரியர்கள் பயிற்சிகள் வழங்கினர்.

இவ்விழாவில் அசகான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ திரு.ஆர்.பெருமாள் அவர்களும்,


மாவட்ட கல்வி அதிகாரி அவர்களும்,தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்
சங்கத் தலைவர் மற்றும் பெற்றோர்களும்சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டார் என்பது
குறிப்பிடத்தக்கது. பரிசு பெறும் மாணவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்பட்டிருந்தினர்.

முதல் அங்கமாக இறைவாழ்த்து பாடப்பட்டது. விழா தொடக்கத்தில் பள்ளியின்


தலைமையாசிரியர் திருமதி.சரோஜினி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் விழாவிற்கு
வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்து, அசகான் சட்டமன்ற
உறுப்பினரான டத்தோ இரா.பெருமாள் அவர்கள் சிறப்புரை ஆற்றி நிகழ்வை
அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

சிறப்புரையைத் தொடர்ந்து,மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. இதில்


பாடல்களுடன் பல்லின மக்களின் கண்கவர் பாரம்பரிய நடனங்களும் இடம் பெற்றன. மாநில
அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் படைப்புகளான பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள்
மனனப் போட்டியும் இடம்பெற்றன. மாணவர்களின் படைப்புகள் வந்திருந்தோரின் மனதைக்
கவர்ந்தன.

தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. கல்வியில் சிறப்பு தேர்ச்சிப்


பெற்றவர்களுக்கும் விளையாட்டுத் துறையில் வெற்றி வெற்றவர்களுக்கும் பரிசுகள்
வழங்கப்பட்டன. அத்துடன் கடந்தாண்டு தலைமை மாணவருக்கும்,யூ.பி.எஸ்.ஆர் தேர்வில்
சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டன.
இவ்வாண்டு வட்டார, மாநில, தேசிய அளவில் பள்ளியைப் பிரதிநிதித்து வெற்றி வாகை
சூடிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. எல்லா பரிசுகளையும் அசகான் சட்டமன்ற
உறுப்பினரும் சிறப்பு விருந்தினர்களும் வழங்கினர்.பரிசு பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியாய்
காணப்பட்டனர்.
இறுதியில்,  அனைவருக்கும் ஒரு சிறிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விருந்தில்
ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். ஏறக்குறைய இரவு9.00 அளவில் இப்பரிசளிப்பு விழா ஒரு
நிறைவை எய்தியது.விருந்திற்குப் பிறகு அனைவரும் மகிழ்சியுடன் வீடு திரும்பினர்.

அறிக்கை தயாரிப்பு, 7 நவம்பர் 2020


                                                                                 

……………………………………………
( கவிதன் த/பெ மணிவண்ணன் )
செயலர்,
தேசிய தினக் கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழு
தேசிய வகை தமிழ்ப்பள்ளி பத்தாங் மலாக்கா

தேசிய தினக்கொண்டாட்ட அறிக்கை


தேசிய வகை தமிழ்ப்பள்ளி பத்தாங் மலாக்கா

கடந்த 30.8.2010, திங்கள் கிழமையன்று, நாட்டின் 53 ஆவது தேசிய தினம் பள்ளி அளவில்
சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா பள்ளி வளாகத்தில் ஒரே மலேசியா எனும்
கருப்பொருளில் இவ்விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களிடையே நாட்டுப்பற்றை உருவாக்கும்
நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் பள்ளித் தலைமையாசிரியர்,
ஆசிரியர்களுடன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் சிறப்பு வருகையாளராக கலந்து
கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் அங்கமாக சிறப்புச் சபைகூடல் நடைபெற்றது. தேசியப் பண், மாநிலப் பண்ணுக்குப்


பிறகு மலேசிய பெர்ஜாயா, சத்து மலேசியா போன்ற பாடல்கள் பாடப்பட்டன. அதைத்
தொடர்ந்து, தலைமை ஆசிரியர் அவர்கள் உரை ஆற்றினார். தொடர்ந்து, கல்வி அமைச்சர் உரை,
கல்வி இயக்குனர் உரை, மாநிலக் கல்வி இயக்குநர் உரை போன்றவற்றை ஆசிரியர்கள்
வாசித்தனர். அதன் பின், நாட்டுப் பற்றை பறைசாற்றும் வகையில் மாணவர்களின் படைப்புகள்
இடம் பெற்றன. சில மாணவர்கள் நாட்டுத் தலைவர்கள் போன்று வேடமிட்டு அசத்தினர்.

அடுத்த அங்கமாக, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய தின மாதம்


தொடர்பாக பள்ளியில் நடத்தப்பட்ட பலவகை போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் பரிசுகளைத் தலைமையாசிரியர் அவர்கள் எடுத்து வழங்கினார். ஒருசில பரிசுகளைப்
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அவர்களும் எடுத்து வழங்கினார் என்பது
குறிப்பிடத்தக்கது. இவ்விழாவுக்காக தங்கள் மிதிவண்டிகளைத் தேசியப் பற்றுடன் அலங்கரித்த
மாணவர்களுக்காகவும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் உச்சங்கட்டமாக மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. மாணவர்கள்


தேசியக் கொடியுடன் பள்ளி வளாகத்தை வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாகும். இறுதியில்,
மாணவர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விருந்தில்
ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். ஏறக்குறைய மதியம் 1.00 அளவில் இத்தேசிய
தினக்கொண்டாட்டம் ஒரு நிறைவை எய்தியது. நன்றி.

அறிக்கை தயாரிப்பு, 7 ஆகஸ்டு 2020


…………………………………………..
( கவிதன் த/பெ மணிவண்ணன் )
செயலாளர்,
தேசிய தினக் கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழு
தேசிய வகை தமிழ்ப்பள்ளி பத்தாங் மலாக்கா

பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி


சிற்றுண்டி தினவிழா அறிக்கை

       கடந்த 30.7.2011 வெள்ளியன்று பத்தாங் மலாக்க தமிழ்ப்பள்ளியில் சிற்றுண்டி தினம்


சிறப்பாக நடைந்தேறியது.பள்ளியிலுள்ள எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றுமின்றி
பெற்றோர்களும் இச்சிற்றுண்டி  தினம் சிறப்பாக நடைப்பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கினர்.

       ஒருவாரத்திற்கு முன்பே ஆசிரியை கமலம் பற்றுச்சீட்டுகளைத் தயாரித்து எல்லோரிடமும்


விற்பனை செய்தார். அன்றைய தினம் அனைவரும் பணத்திற்குப் பதிலாகப் பற்றுச்சீட்டுகளையே
பயன்படுத்த வேண்டும். சிற்றுண்டி தினத்தன்று ஆசிரியர்களும், மாணவர்களும் நிறைய
உணவுகளைச் சமைத்து எடுத்து வந்திருந்தனர். எட்டு உணவு கூடாரமும் இரண்டு கேளிக்கை
விளையாட்டுக் கூடாரமும் அமைக்கப்பட்டிருந்தது.

You might also like