Professional Documents
Culture Documents
முன்னுரை
1. எழுத்தறிவித்தவன் இறைவனாவான்.
2. சுடர் விளக்காயினும் தூண்டுகோள் தேவை
நான் போற்றும் என் தாய் நாடு
முன்னுரை – வரவேற்புரை
கருத்து 1
கருத்து 2
கருத்து 3
முடிவுரை
மொழியணி
முன்னுரை – வரவேற்புரை
கருத்து 1
கருத்து 2
கருத்து 3
முடிவுரை
மொழியணி
முன்னுரை – வரவேற்புரை
அறிவியல் கண்டுபிடிப்பு
கணினி யுகம்
இன்றியமையாத ஒன்று
அவசியம்
வேலையை எளிதாக்குகின்றது
விரைவாக, சுலபமாக
நேரம் மிச்சப்படுகிறது
பாதுகாப்பானது
கல்வித்துறை
வங்கி
மருத்துவம்
தகவல்களைச் சேகரிக்கலாம்
இணையம்
உள்நாட்டு வெளிநாட்டுச் செய்தி
நண்பர்களுடனான உரையாடல்
கணினி விளையாட்டுகள்
மனமகிழ்வு ஏற்படுதல்
முடிவுரை
மொழியணி
1. ஒப்புர வொழுகு
2. வெள்ளம் வரும் முன் அணைப் போடு
3. எவ்வதுறைவது உலகம் உலத்தோடு அவ்வதுறைவது அழகு
4. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லாதார் அறிவிலாதார்.
1 பின்னூட்டம்
து றை சார் ந் த சொற் கள்
Posted on பிப்ரவரி 23, 2014
துறை சார்ந்த சொற்கள்
1. சாலை விபத்து
2. தீ விபத்து
3. மரங்களின் பயன் / காடுகளின் பயன்
தோல் * சுமை
நெகிழி * சக்கரம்
பள்ளி மாணவர்கள் * பகுதிகள்
இறக்குமதி * தொழிற்சாலை
ஏற்றுமதி * விலை
பாதுகாத்தல் * பேரங்காடி / கடை
காட்சிக்கு வைத்தல்
5. விளையாட்டு
6. சந்தை
இரவுச் சந்தை * பகல் சந்தை
பேரம் பேசுதல் * மலிவு
சத்தம் (இரைச்சல்) * பல்லின மக்கள்
வியாபாரி * வாடிக்கையாளர்
அங்காடி * வண்ண விளக்குகள்
நெரிசல் * கூக்குரல்
பலவகை பொருள்கள் * வீட்டின் அருகில் (வசிப்பிடம்)
சிறு தொழில் * பொருளாதாரம்
7. போட்டி விளையாட்டு
8. திருமணம்
மணமகன் * தோரணம்
மணமகள் * அர்ச்சதை
ஐயர் * தாலி
குத்துவிளக்கு * சடங்கு
கோலம் * மொய்ப்பணம்
அலங்கரிப்பு * மாலை மாற்றுதல்
பாத பூஜை * மிஞ்சி
நழுங்கு * மந்திரம்
மணவறை * ஆசீர்வாதம்
புகைப்படம் பிடித்தல் * பெற்றோர்
உற்றார் உறவினர் * உணவு
அறுசுவை * நாதஸ்வரம்
மேளதாளம் * கெட்டிமேளம்
9. பரிசளிப்பு விழா
12. பண்டிகை – தீபாவளி
ஐயா * மதிப்பிற்குரிய
நிறுவனம் * தொழிற்சாலை
நிர்வாகி * மறுபயனீடு
நெகிழி புட்டி * கண்ணாடி
காகிதங்கள் * செய்முறை
நேரடி அனுபவம் * செயலாளர்
வாழ்வியல் கல்வி * எதிர்ப்பார்க்கிறோம்
அனுமதி * சுற்றுலா
17. பழங்கள்
19. கணினி
வடிவம் * வண்ணம்
இறக்குமதி / ஏற்றுமதி * மென்பொருள்
அச்சுப்பபொரி * இணையம்
தகவல் தேடல் * குறுந்தட்டு
மின்னஞ்சல் * விரலி
நினைவாற்றல் அட்டை * தகவல் பரிமாற்றம்
திரை / எலியன் * விசைப்பலகை
நவீன தொழில் நுட்பம்
20. கைப்பேசி
பெயர் * வகை
வடிவம் * தொடர்புச்சாதனம்
குறுந்தகவல் * பதிவு சட்டை
நினைவாற்றல் அட்டை * அவசரக்கால தொடர்பு
நவீன தொழில் நுட்பம்
இணைப்பு
– வானொலி
– தொலைக்காட்சி
– இணையம்
– கணினி
1 பின்னூட்டம்
நட் பு
Posted on பிப்ரவரி 20, 2014
‘நட்பில்லா மனிதன் என்றால் அவனொரு மனிதன் இல்லை. நட்புக்கே உயிரைத் தந்தால் அவனைப்
போன்று புனிதன் இல்லை’. இதுவொரு பாடலின் வரியாகும். நட்பு என்பது ஒருவர் தெரியாத
வேறொருவரிடம் பழகி, அவரைப் புரிந்து கொண்டு இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு
கொள்வதோடு தக்க சமயத்தில் உதவி புரிவதாகும். மேலும், வழி தவறும் பொழுது அன்புடன்
இடித்துரைத்து ஒருவரை நல்வழிக்கு இட்டுச் செல்வதே நல்ல நட்புக்கு இலக்கணமாகும். நட்பு
என்னும் சொல் சினேகம் அல்லது தோழமை எனப் பொருள்படும்.
நட்பு நிழலைப் போன்றது; எங்குச் சென்றாலும் நம்முடனே வரும். ஒரு மனிதனின் நட்பு எங்குத்
தொடங்குகிறது என்றால் அவன் வசிக்கும் அண்டை வீட்டிலிருந்தான் என்று கூறலாம். சிறுபிள்ளை
முதல் நட்பு அண்டை வீட்டிலிருந்துதான் தொடங்கிறது பிறகு, அச்சிறுவன் பள்ளிப் பருவம்
அடைந்தவுடன் அச்சிறுவனுடைய நட்பு விரிவடைகிறது. அச்சிறுவன் மேலோங்கி வளர வளர
பலதரப்பட்ட நட்பு அவனுக்குக் கிட்டுகிறது. நட்பு கிடைப்பது எளிது; ஆனால், அந்த நட்பை
விட்டுப் பிரிவது மிக மிக அரிது. ஒருவரிடம் நாம் நட்பு கொண்டு சந்தர்ப்பச் சூழ்நிலையால் பிரிந்து
விட்டாலும் அந்த நட்பு எக்காலத்திலும் அழியலாகாது அல்லது மறக்க முடியாது.
வெறும் சிரித்துப் பேசி மகிழ்வது நட்பாகாது. இருவருள் ஒருவர் நெறி கடந்து செல்லும்போது,
இன்னொருவர் முற்பட்டு இடித்துரைத்துத் திருத்துவதே ஆகும். முகம் மட்டும் மலர
நட்புகொள்வது நட்பாகாது. அன்பால் உள்ளமும் மலருமாறு நட்புகொள்வது உண்மையான
நட்பாகும். திருவள்ளுவர் நட்பைப் பற்றி என்ன கூறுகின்றார் என்றால்,
மனிதனுக்கு மனிதன் நட்புக் கொள்வது போல் நாட்டுக்கு நாடு நட்பு கொள்ளுதல் வேண்டும்.
நாட்டுக்கு நாடு கொள்ளும் நட்பு பல வகைகளில் நமக்கு நன்மையே கொண்டுவருகிறது.
நாட்டுக்கு நாடு நட்பு கொள்வதால் உதவி புரியும் மனப்பான்மை, புரிந்துணர்வு மற்றும்
விட்டுக்கொடுக்கும் போக்கையும் நம்மால் கடைப்பிடிக்க முடிகிறது. ஏதாவது ஒரு சிக்கல்
ஏற்பட்டால் நட்புறவின் வழி சிக்கலைத் தீர்க்க முடிகிறது. இதனால், நாட்டிக்கு நாடு போர்
நடப்பைத் தடுக்க வழி செய்கிறது. நாட்டுக்கு நாடு கொள்ளும் நட்பால் வாணிபத்துறையும் மேலும்
வளர்ச்சியடைய துணை புரிகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி கண்டு வருகிறது.
பின்னூட்டமொன்றை இடுக
வாசி க் கு ம் பழக் கம்
Posted on பிப்ரவரி 20, 2014
மலேசியர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஆராய 1982-இல் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வு காட்டிய புள்ளி விவரம் நம்மை வெட்கித் தலை குனிய வைத்துவிட்டது என்றே
சொல்ல வேண்டும். ஏனெனில், நாம் ஓராண்டில் சராசரி ஒரு பக்கமே வாசிக்கின்றோம். மேலும்
மலேசியாவில் குறைவான நூல்களே வெளியிடப்படுகின்றன. 1987-இல் கொரிய நாடு 44 288
நூல்களை வெளியீடு செய்த வேளையில் நம் நாட்டில் 3 000 நூல்களே வெளியீடு கண்டுள்ளன.
இந்த வருந்ததக்க நிலையை உடனடியாகக் களைதல் அவசியமாகும். அதற்காகத்தான் அரசாங்கம்
வாசிப்புப் பழக்கத்தை ஒரு கட்டாயமாக மாற்றியுள்ளது. இதனால்தான் அரசாங்கம் பள்ளி
மாணவர்களிடம் “நீலாம்” என்ற ஒரு வாசிக்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்திவுள்ளது.
எதிர்காலத்தில் பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கூடங்களில் வாய்ப்புப் போன்ற
நடவடிக்கைகளுக்கு வாசிப்பை ஒரு கட்டாய விதியாக்கிவிடுவார்கள்.
நாம் வாசிப்பதற்கு நாளிதழ், கதைப் புத்தகம், வார மாத இதழ்கள், போன்றவை நிறைய உள்ளன.
இதைத் தவிர்த்துக் கணினியின் மூலமாகவும் நாம் வாசிக்கலாம். இணையத்திலிருந்து பல
தகவல்களை வாசிப்புத்திறனாலேயே தெரிந்து கொள்கிறோம். நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைச்
சிலர் முக்கியப் பணியாகக் கருதுகின்றனர். காலையில் எழுந்தவுடன் நாளிதழைப் படிக்கவில்லை
என்றால் அதைப் பேரிழப்பாகக் கருதுவர். இன்னும் சிலரைப் பார்த்தால் கதைப் புத்தகமே
கதியாய்க் கிடப்பர். இத்தகையோரிடம் அறிவு மேலோங்கி இருக்கும்.
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
என்பதைப் போல், மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அது போல்
மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த
அளவிற்குத்தான் நமக்கு அறிவும் வளரும். நமது அறிவு வளர்ந்தால் கிணற்றுத் தவளையைப் போல்
இல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாம். மேலும் நாம் வாசிப்பதால் நம்முடைய சொல்
உச்சரிப்பும் வளரும். காலத்தையும் பயனுள்ள வழியில் செலவழிக்கலாம்.
இறுதியாக, நாம் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொண்டால் நாம் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல்
மகிழ்ச்சியாக வாழலாம். டாக்டர் காதர் இப்ராகிம் போல் ஒரு நல்ல பேச்சாளராக ஆகலாம். மேலும்
நூலை நம்முடைய தோழனாக மாற்றியமைத்துக் கொள்ளலாம். வாசிப்புப் பழக்கம் நமது நல்ல
பண்பாக அமைகிறது. வாசிப்புப் பழக்கத்தின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள நூல்கள்
பெரும்பங்காற்றி வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, நாம் சிறு வயதிலிருந்து வாசிப்புப்
பழக்கத்தை வளர்த்துக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும்.
5 பின்னூட்டங்கள்
கணி னி
Posted on பிப்ரவரி 20, 2014
தற்பொழுது உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கருவி கணினி ஆகும். கணினியின்
பயன்பாடு உலக அரங்கில் பரவிக்கொண்டிருக்கிறது. நமது நாட்டிலும் கணினியின் பயன் ‘காட்டுத்
தீப்போல்’ பரவி வருகிறது என்பதை மறுக்க இயலாது. நமது முன்னாள் பிரதமர் விடுத்த “வீட்டிற்கு
ஒரு கணினி” என்னும் கோரிக்கையும் இதற்கு ஒரு காரணமாகும். மக்களின் அன்றாட
வாழ்க்கையில் கணினி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி, தொழிற்துறை, வியாபாரம் போன்ற
அனைத்துத் துறைகளிலும் கணினி வெற்றிநடை போடுகிறது.
கணினி மக்களின் நேரத்தை நல்ல வழியில் செலவிட வகை செய்கிறது. இணையத்தளம் மக்களின்
வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகிறது. கணினியில் உள்ள விளையாட்டுகள் வேலை முடிந்து
களைப்புடன் வீடு திரும்புவர்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்து மன அழுத்தத்தையும்
குறைக்கிறது. தொழிற்நுட்பம் சம்பந்தமான தகவல்களைப் பெறவும் மக்களின் அறிவை
வளர்க்கவும் கணினி முக்கியப் பங்காற்றுகிறது.தொடர்ந்து சிறுவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை
நல்வழியில் செலவிட இவ்வகையான விளையாட்டுகள் துணைபுரிகின்றன.
1 பின்னூட்டம்
மழை
Posted on பிப்ரவரி 20, 2014
மழை கடவுளால் நமக்களிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகும். மனிதர்கள், பிராணிகள் மற்றும்
தாவரங்கள் செழிப்புடன் உயிர்வாழ மழைநீர் உற்ற தோழனாக இருந்து தோள் கொடுக்கிறது. நமது
நாட்டில் இயற்கை வளங்கள் அதிகம் இருப்பதற்கு மழை ஒரு முக்கியக் காரணமாக
விளங்குகின்றது. அறிவியல்பூர்வமாகப் பார்த்தோமானால் மழை, கடல் நீரில் இருந்துதான் உற்பத்தி
ஆகிறது என்பதை நாம் அறிய முடியும். வெப்பமான சூழலில் கடல் நீர் நீராவியாக மாறி
வானத்திற்குச் சென்றுவிடுகிறது. வானத்தை அடைந்தவுடன் நீராவி மேகமாக மாறிவிடுகிறது.
மேகக்கூட்டங்களுக்கிடையே ஏற்படும் உரசல்களினால் மேகம் கலைந்து மழையாகப் பொழிகிறது.
பூமியை நனைக்கும் இம்மழைநீர் பல நன்மைகளைத் தாங்கி வருகிறது. நாம் மழையின் நன்மையை
அறிந்து அதனை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.
மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் விவசாயத் துறைக்கு மழை பெரும் சேவையாற்றுகிறது. ஒரு
நாட்டின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் மழை பெரும் பங்காற்றுகிறது. விவசாயத்
துறையின் வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி புரிகிறது. மழைநீரின்
துணையுடன் செழிக்கும் பயிர்கள் மக்களுக்கு உணவாகி அவர்களை வாழ வைக்கின்றன. இதே
பயிர்கள் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித் தந்து அவர்களின் வயிற்றுப்பசியைப்
போக்குகின்றன. உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்வதால் நாட்டுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கின்றது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில்
பல இடங்களில் மழை பெய்யாததால் அங்குள்ள மக்கள் பசிக்கொடுமையில் மடிகின்றனர். மழை
ஒரு நாட்டின் வளப்பத்தை நிர்ணயிக்கின்றது.
ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலை மழையைச் சார்ந்துள்ளது. மழை பொழிவதால் பூமி குளிர்கிறது;
பெய்யாவிட்டால் பூமி வெப்பமாகிறது. அளவுக்கதிகமான வெப்பம் பயிர்களை வாடச் செய்கிறது;
நிலத்தைப் பிளக்கச் செய்கிறது; மனிதர்களுக்குப் பல கேடுகளை விளைவிக்கிறது. வெப்பமான
சூழல் மனிதர்களுக்குப் பல தோல் வியாதிகளைத் தருகிறது. இவ்வெப்பத்ததைத் தணிக்கும் சக்தி
மழைக்கு உள்ளது. மழை பெய்வதால் பூமி குளிர்ச்சியாய் இருக்கும். குளிர்ச்சியான நாடுகளுக்கு
நிறைய சுற்றுப்பயணிகள் வருவார்கள். இதனால் நாட்டின் வருமானமும் பெருகும். நாடு
குளுமையாகவும் வளமுடனும் இருப்பதால் தாவரங்கள் செழிப்புடன் வளர்கின்றன.
ஒரு மனிதன் புவியில் சிறப்புடன் வாழ்வதற்குக் கைகொடுப்பது நீர்தான். உலகில் நீரில்லாமல் வாழ
முடியாது. நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கு நீர் பயன்படுகிறது. இந்நீரை நாம்
மழையிலிருந்து பெறுகின்றோம். வாகனங்களைக் கழுவுதல், குளித்தல், குடித்தல் மற்றும்
துணிமணிகளைத் துவைத்தல் போன்ற தேவைகளுக்கு மழை நீர் தேவைப்படுகின்றது. மழை நீரைச்
சேகரித்துத் தாவரங்களுக்கும் பாய்ச்சலாம்.
2020 இலக்கை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த இலக்கை அடைய நம் நாடு
விவசாயத் துறையிலிருந்து தொழிற்துறைக்கு மாறி வருகிறது. இதனால், நாட்டில்
தொழிற்சாலைகள் நேற்று மழையில் முளைத்த காளான்கள் போல் பெருகிவருகின்றன.
இத்தொழிற்சாலைகளை இயக்குவதற்கு மின்சாரம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. நாட்டின்
பல ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த
அணைக்கட்டுகளும் மழையையே நம்பியுள்ளன. அணைக்கட்டுகளில் நீர் நிரம்பி இருந்தால்தான்
மின்சாரத்தை இலகுவாக உற்பத்திச் செய்ய முடியும். நம் அன்றாட வேலைகளைச் சரிவரச்
செய்வதற்கு ம¢ன்சாரம் தேவை. இதன் விளைவாக உற்பத்தி குறைந்துவிடும். நாட்டின்
பொருளாதாரமும் சரிவடையும். ஆகவே, மழை நீரை நம்பியுள்ள மின்சார உற்பத்தி நாட்டின்
வளர்ச்சிக்கு மிகமிக அவசியமாகும்.
சுருங்கக்கூறின், மழை நீர் நமக்குப் பல நன்மைகளைத் தருகிறது. மழை நீர் நமக்கு உற்ற தோழனாக
விளங்குகிறது. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’, என்பது பெரியோர் வாக்கு.
ஆகவே, மழைநீரை நாம் ஒரு போதும் வீணாக்கக்கூடாது. மழைநீரை நாம் பல தேவைகளுக்குப்
பயன்படுத்தினால் குடிநீர் கட்டணத்தைக் குறைத்துப் பணத்தைச் சிக்கனப்படுத்தலாம். ஆண்டு
முழுவதும் மழை பொழியும் இந்நாட்டில் வாழும் நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.
மழைநீரை நன்முறையில் பயன்படுத்தி நம் வாழ்க்கையை மேலும் செழிக்கச் செய்வோம்.
1 பின்னூட்டம்
நூ லகம்
Posted on பிப்ரவரி 20, 2014
‘கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்’ என்பது நம் மூதாதையர்கள் கூறிய அருங்கருத்துகளில்
ஒன்றாகும். அவர்களின் அருள்வாக்கு நூற்றுக்கு நூறு உண்மையே. நாம் பலதரப்பட்ட நூல்களைக்
கற்பதன் மூலம் சிறந்த அறிஞர்களாகலாம். ஆனால், இன்றைய காலத்தில் சந்தையில் விற்கப்படும்
அனைத்து வகையான நூல்களையும் ஒருவரே வாங்கக் கூடியதென்பது சாத்தியமாகக்கூடிய
காரியமா? ஆகவே, இவ்வாறான சிக்கல்களைக் களைவதற்குச் சிறந்த வழி நூலகம்
அமைக்கப்படுவதே ஆகும். இந்த நூலகங்களுக்குச் சென்று பலதரப்பட்ட எழுத்துப் படிவங்களை
வாசிப்பதால் நிறைய பலன்கள் நம்மை வந்து சாறும் என்பது வெள்ளிடைமலையாகும்.
காலம் பொன் போன்றது என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும். நாம் பயனற்ற வழியில்
கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் மீண்டும் வரப்போவதில்லை. ஆகவே இன்றைய இளைஞர்கள்
தங்களது நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க நூலகம் பெரிதும் துணைபுரிகிறது. அதாவது அவர்கள்
தங்களது ஓய்வு நேரத்தை நூலகத்தில் செலவிடுவதால் சமூகச்சீர்கேடுகளிலில் ஈடுபடுவதிலிருந்து
தவிர்த்துக்கொள்ள முடிகிறது. இதன்வழி நாம் நம் நாட்டில் பெருகிவரும் வன்முறை, குண்டர்
கும்பல், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூகச்சீர்கேடுகளின்
எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். இது நம் எதிர்காலத் தலைமுறையினர் கற்றவர்களாகவும்
ஒழுக்கத்தில் ஓங்கியவர்களாகவும் திகழ வழி வகுக்கும் என்பது திண்ணம்.
பின்னூட்டமொன்றை இடுக
தாய்
Posted on பிப்ரவரி 20, 2014
மண்ணில் குழந்தையாய்த் தவழ்ந்து, சிறுமியாய் ஓடி விளையாடி மங்கையாய் வாழ்க்கையை
இரசிக்க ஆரம்பிக்கும் ஒரு பெண் தாய் என்னும் அந்த உயர்ந்த நிலையை அடையும்போதுதான்
முழுமையான ஒரு பெண்ணாக ஆகிறாள். தாய்மை என்பது அந்த இறைவனால் பெண்களுக்கே
வழங்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும்.
தாய் என்பவள் ஒன்பது மாதங்கள் நம்மைக் கருவறையில் சுமந்து, நாம் உதைக்கும் வலியையும்
பொறுத்துக் கொண்டு அதைச் சுகமாகக் கருதும் ஒரே உயிராகும். குழந்தை பிறந்த பிறகு, தாய் தனது
இரத்தத்தையே பாலாக்கி, பாலூட்டித் தாலாட்டுவாள். தொப்புள் கொடி அறுக்கப்பட்டாலும்
தாய்க்குத் தனது குழந்தை மீது உள்ள அன்பும் அக்கறையும் குறையவே குறையாது. இரவு பகல்
பாராது தாய் தனது குழந்தையைக் ‘கண்ணை இமை காப்பது போல’ வளர்ப்பாள்.
மேலும், தாய் நமது முதல் தெய்வமாவார். இதை அறிந்துதான் நமது மூத்த கவிஞர்கள் ‘தாயிற்
சிறந்த கோயிலுமில்லை’ என்று பாடியுள்ளனர். தாயை மதிக்காமல் அவரது வார்த்தைகளைச் செவி
சாய்க்காமல் அருகில் வாழும் இத்தெய்வத்தைப் போற்றாமல், பல கோயில்களுக்கு நற்கதித் தேடிப்
போனால் அது கிட்டாது. மாறாகப் பாவங்களே வந்து சேரும். தாயின் வார்த்தைகளைக் கேட்டுப்
பின்பற்றினால் நமது வாழ்வு வளம் பெறுவது உறுதி.
பின்னூட்டமொன்றை இடுக
ஆற் று த் தூ ய் மை க் கே டு
Posted on பிப்ரவரி 20, 2014
இறைவனின் உன்னத படைப்புகளில் ஒன்றான ஆறு மனிதர்களுக்குப் பல வகையில் உதவியாக
இருக்கிறது. ஆற்று நீரைக்கொண்டு சிலர் தங்களது அன்றாட வேலைகளைப் பூர்த்திச் செய்கின்றனர்.
எடுத்துக்காட்டாகத் துணி துவைத்தல், குளித்தல், குடித்தல் போன்றவையாகும். இவ்வாறாகப்
பலனளிக்கக்கூடிய ஆறுகள் இன்று பலவகையில் தூய்மைக்கேட்டை எதிர்நோக்கி வருகின்றன.
இவையாவும் மனிதனின் செயலால் விளைகின்றன என்பதை நாம் மறுக்க இயலாது. ஆற்றுத்
தூய்மைக்கேடு பல காரணங்களால் விளைகின்றது.
பின்னூட்டமொன்றை இடுக
நோயற் ற வாழ் வு
Posted on பிப்ரவரி 20, 2014
ஆண்டவனின் படைப்பில் நோயற்ற வாழ்வு வாழும் மானிடனே இல்லையென்று அறுதியிட்டுக்
கூறலாம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப நாம் என்னதான் கல்வி,
செல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது
முக்கியமாகும். உடல்நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானது
எனக் கூறுவர். கல்வி, செல்வத்தை மட்டும் சேர்த்து வைத்திருந்தால் போதாது; அதற்கேற்ற உடல்
நலமும் இருந்தால்தான் அவையனைத்தையும் அனுபவிக்க முடியும்.
ஆகவே, ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, கூன், குருடு செவிடு நீங்கிப் பிறத்தல்
அதைவிட அரிது’ என்று அவ்வையார் பாடியது போல, நாம் எக்குறையும் இல்லாமல்
பிறந்திருக்கிறோம். அதனால், நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நமது
கடமையாகும்.
பின்னூட்டமொன்றை இடுக
பணம்
Posted on பிப்ரவரி 20, 2014
‘பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்’ என்னும் பழமொழி நாம் அறிந்த ஒன்றே. இந்தக்
கலியுகக் காலத்தில் பணம் இல்லாதவன் பிணமாகக் கருதப்படுவான். பணம் என்றால் என்ன?
உங்கள் இமைக் கதவுகளை மூடி சிந்தனை என்னும் சன்னலைத் திறந்து பார்த்தால் பதில் கிட்டும்.
பணம் என்றால் ஒரு மதிப்புள்ள நாணயம் என்று பொருள்படும். பணம் மனிதனின் அத்தியாவசியத்
தேவைகளுள் முதல் இடத்தை வகிக்கிறது.
இவ்வுலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதன் தனி வரலாறு உண்டு. அது போல, பணம்
எப்படித் தோன்றியது என்ற வரலாறும் உண்டு. முற்காலத்தில் பணம் நாணய வடிவில் இருந்தது.
இந்நாணயங்கள் செம்பு, ஈயம், தங்கம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டன.. மேலும்,
நாணயங்கள் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டன. அவை வட்டம், சதுரம், செவ்வகம், முதலை
வடிவம் போன்ற வடிவங்களாகும். அன்றுமுதல் இன்றுவரை பணம் வியாபாரத்திற்கு
உபயோகப்படுத்தப்படுகிறது. மனிதன் தனக்கு வேண்டிய சிறுபொருளை வாங்குவதற்குக்கூடப்
பணம் தேவைப்படுகிறது.
பணத்தைச் சேமிக்கும் வழிகள் பல உள்ளன. ‘ஒரு காசு பேணின் இரு காசு தேரும்’ என்பது போல
சிறுகச் சிறுகச் சேமித்தால் அது நாளடைவில் பெருந்தொகையாக மாறிவிடும். நாம் பணத்தை
உண்டியலில், கூட்டு முறையில், காப்புறுதியில் சேமிக்கலாம். சேமிப்பு, குடும்ப மேம்பாட்டிற்கும்
நாட்டின் வளர்ச்சிக்கும் உதவி புரியும்.
ஆகவே, ‘அருள் இல்லாதவருக்கு அவ்வுலகமில்லை, பொருள் இல்லாதவருக்கு
இவ்வுலகமில்லை’ என்னும் திருவள்ளுவரின் வாக்கு முக்காலத்திற்கும் பொருந்தும். இருப்பினும்,
பணத்திற்கு அடிமையாகாமல், அதனை முறையாகப் பயன்படுத்தி நன்மைகள் அடைவோமாக!
பின்னூட்டமொன்றை இடுக
கல் வி
Posted on பிப்ரவரி 20, 2014
இறைவன் படைப்பில் ஒரு சிறு அங்கமாக விளங்குவது மானிட இனம். இம்மானிட இனம்
சிறப்புற வாழக் கல்வி ஓர் அற்புத சாதனமாகத் திகழ்கிறது. கல்வித்தாகம் ஒவ்வொருவரின்
உயிரோட்டத்திலும் ஊற்றெடுக்க வேண்டிய ஒன்றாகும். இம்மாபெரும் கல்விச் செல்வமானது
அனைவரது வாழ்விற்கும் விடிவெள்ளியாக அமைந்து வருகின்றது என்றால் மிகையாகாது.
கண்களுக்கு நிகராகப் போற்றப்படும் கல்வியைக் கற்பதன்வழி, ஒரு மனிதன் தன் வாழ்வைச்
சீர்படுத்திக் கொண்டு செம்மையாக வாழலாம்.
உயிர் உடலில் இருந்து பிரிந்தாலும் ஒரு மானிடன் வாழ்ந்த வாழ்வை இவ்வுலகம் தொடர்ந்து
பேசிக் கொண்டே இருக்கும். அப்பேச்சு, தூற்றும் வகையில் அமைவதும் போற்றும் வகையில்
அமைவதும் ஒருவர் கடைப்பிடித்த வாழ்க்கை நெறியைப் பொறுத்துள்ளது. இவ்வாழ்க்கை நெறி
கல்வியின் மூலமே பெறப்படுகிறது. கல்வியானது பண்பு நிறைந்த குமுகாயத்தை உருவாக்கும்
வல்லமையைக் கொண்டது. கல்விவழி அன்பு, பணிவு, கருணை போன்ற உயர்ந்த குணங்கள்
ஒருவரது ஆழ்மனதில் கலந்துவிடும். அதோடு கல்வி கற்ற ஒரு மானிடனால் நன்மை தீமைகளைப்
பகுத்தறிந்து நடக்க இயலும். இதனால், கல்விமானாகத் திகழும் ஒவ்வொரு மனிதனும் என்றும்
மாசற்றவர்களாகத் திகழ்வர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
கல்வி என்னும் அமுதச் சுரபியைப் பெறும் ஒவ்வொரு மானிடனும் தனது பொது அறிவை
வளர்த்துக் கொள்ள இயலும். கல்வி கற்கும் பொழுது நாம் அதன்வழி பல தகவல்களை
அறிகின்றோம். இத்தரணி தோன்றியது முதல் மனிதன் வளர்ச்சி அடைந்த காலம் வரை உள்ள
தகவல்களை நாம் கல்வியின் வழி கற்றறியலாம்.
கல்வி ஒரு சமுத்திரத்தைக் காட்டிலும் பெரியதாகும். வாழ்க்கை என்ற சிகரத்தை அடைய கல்வி
என்ற தூண்டுகோள் அவசியமாகும். கல்வி கற்காதவன் உலக மக்களால் தற்குறி என்று
கூறப்படுவான். ஆகவே, முழுமையான கல்வி கற்றுச் சிறப்பான வாழ்வின் உன்னத நிலையை
அடைவோம்.
1 பின்னூட்டம்
நீ ரி ன் பயன்
Posted on ஜூலை 10, 2013
நீரின் பயன்
நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்புவியில்
வாழ இயலாது. நீரின் மூலங்கள் பல. நாம் நீரை ஆறு, ஏரி, குளம், நதி போன்றவற்றிலிருந்து
பெறுகிறோம். இப்பூமியின் எழுபது சதவீதம் நீரால் ஆனது என அறிவியல் கூறுகின்றது. மேலும்,
நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. நீர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிராணிகள்,
தாவரங்கள் உயிர் வாழவும் அடிப்படையாக அமைகின்றது.
நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும்
நூலகங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப்
பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
10 பின்னூட்டங்கள்
பு றப் பாட நடவடி க் கை யி னால் ஏற் படு ம் நன் மை கள்
Posted on செப்ரெம்பர் 4, 2011
புறப்பாட நடவடிக்கை மாணவர் பருவத்தில் இன்றியமையாததாக விளங்குகின்றது. வகுப்பில்
கல்வியைப் பயிலும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே மற்ற திறன்களைக் கைவரப்
பெறுவதற்குப் பள்ளிப் புறப்பாட நடவடிக்கை பெரிதும் துணைபுரிகிறது.
என்பது போல நாம் எந்த அளவுக்குத் தோண்டுகிறோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில்
ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அள வுக்கு அறிவு பெருகும்.
ஆகவே, நாம் நேரத்தை விரையம் செய்வதை விட வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.
இதனால் நம் கல்வியறிவையும் பொது அறிவையும் வளப்படுத்த முடியும்.
கணினியின் அவசியம்
கணினிப் பொறியினால் மனிதன் மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாகச் செய்ய
முடிகிறது. ஓரே இடத்தில் இருந்து கொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்பு
கொள்ள முடிகிறது; உடனுக்குடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இதனால் கடிதம்
மூலம் தொடர்பு கொள்ளும் முறை குறைந்து வருகிறது.
வங்கிகளில் கணினியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வங்கியில் பணம்
போடுவதும் எடுப்பதும்கூட கணினி மூலம் நடைபெறுகிறது. இந்தச் சேவையை அலுவலக
நேரத்திற்குப் பிறகும் பெற முடியும். அதனால் வங்கியில் முன்போல் வரிசைப்பிடித்து அதிக நேரம்
காத்திருக்க வேண்டியதில்லை.
விமான நிலையங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் கணினியின் மூலம் பயணச்
சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வீட்டிலிருந்து கொண்டே கணினி மூலம் பயணச் சீட்டுகளை
வாங்கிக் கொள்ளலாம். இதனால் மனிதர்களுடைய நேரமும், சிரமமும் குறைகின்றன.
வாசிப்பின் அவசியம்
மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம்
வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப்
பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. இடன் மூலன் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக
மாற, வாசிப்பு துணைபுரிகிறது.
சொந்தமாகக் கதை, கட்டுரை, கவிதை எழுத விரும்புகிறவர்கள் முதலில் அவை தொடர்பான
பல நூல்களைப் படித்து அறிய வேண்டும். அப்போதுதான் சொந்தப் படைப்புகளைப் படைக்கும்
போது அவை தரமானவையாக இருக்கும். பல தகவல்களைத் தன்னுடைய படைப்புகளில் புகுத்த
முடியும்.
எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய முடிகிறது. ”நூலளவே
ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப் பெருக்கிக்
கொள்வோம்.
i) இணையத்தின் பயன்பாடு
பத்தி 1
முன்னுரை
– அன்றாட வாழ்க்கையில் – கணினி முக்கிய பங்கு
– அறிவியல் – தொழில்நுட்பம் – வளர்ச்சி
– இணையத்தின் பயன்பாடு – முதன்மை
– தொடர்புச் சாதனம்
பத்தி 2
– கல்வி – புதிய விஷயங்கள் – சேகரித்தல்
– இணையத்தில் தேடல்
– தலைப்புக்கு ஏற்ற விபரங்கள் திரட்டுதல் / தேடுதல்
– நேரடித் தொடர்பு வழி கற்றல், கற்பித்தல்
– பயிற்சிகள் – சுயவளர்ச்சி துணைபுரிகிறது.
பத்தி 3
– தொழிற்துறையில் அதன் பங்கு
– ஒவ்வொரு வேலையும் – எளிதில் செய்ய முடிகிறது.
– நேரத்தை மிச்சப்படுத்தப்படுகிறது
– உலக நாடுகளுடன் நேரடி வியாபாரத் தொடர்பு
பத்தி 4
– மருத்துவதுறையில் / விவசாயத்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ள
– கருத்து பறிமாற்றம் செய்து கொள்ள
– விண்வெளிதுறையில் ஆய்வுக்கு
– பொழுது போக்கு சாதனம்
–
பத்தி 5 – முடிவுரை
– வாழ்க்கை தேவைகளில் ஒன்றாகிவிட்டது
– அதனைப் பயன்படுத்தி நன்மைபெறுவோம்.