You are on page 1of 9

எழுத்து வகை

1. கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க.

இ உ எ ஒ

A. உயிர் நெடில் எழுத்துகள்

B. வல்லின மெய் எழுத்துகள்

C. உயிர் குறில் எழுத்துகள்

D. இடையின மெய் எழுத்துகள்

2.உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் எண் எது?

A.
3
B.
0
C.
7
D.
4

3.கீழ்க்காணும் சொற்களில் கோடிடப்பட்டுள்ள எழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?

வண்டு தங்கை நாமம்

A. வல்லினம்

B. மெல்லினம்

C. இடையினம்

D. உயிரினம்

4. கீழ்க்காணும் படத்திற்கு பொருத்தமான சொல் யாது?


A. பட்ஷி

B. ஸர்ப்பம்

C. ஜலம்

D. புஷ்பம்

5. சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

A. வாலை மரம்

B. வாளை மரம்

C. வாழை மறம்

D. வாழை மரம்

6. பிழையான உயிர்மெய் எழுத்துத் தோற்றத்தை தெரிவு செய்க.

A. ந் + அ = ந

B. த் + இ = தீ

C. ச் + உ = சு

D. ர் + ஈ = ரீ

7. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களுள் எந்தப் படம் உயிர்மெய் எழுத்தை மட்டும்

கொண்டிராதது?

A. B.
C.

8. கீழ்க்காணும் சொற்களில் ஆயுத எழுத்தைச் சரியாகக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு


செய்க.

A. அஃது கீழே விழுந்தது.

B. இஃது ஆகாயத்தில் பறந்தது.

C. அஃது மழையில் நனைந்தது.


D. இஃது வெளியே ஓடியது.

9. இடையின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

A. நொ, ம, ஙி, ன

B. ரீ, யே, வோ, ளூ

C. கோ, வூ, றூ, தூ

D. தி, லி, னு, ம

10. கீழ்க்காணும் வாக்கியத்தில் கிரந்த எழுத்துகள் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

அர்ச்சகர் வருவதைக் கண்ட சரஸ்வதி தான் பறித்து வந்த ரோஜா


A B C
புஷ்பங்கள் அனைத்தையும் அவரிடம் தந்தாள்.
D

பால்

1. பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

A. மாணவர்கள்

B. மகிழுந்து

C. நெகிழிகள்

D. குழந்தைகள்

2. கீழ்க்காணும் வாக்கியத்தில் சரியானப் பாலைக் குறிக்கும் விடையைத் தேர்ந்தெடுக.


வனவிலங்கு அதிகாரியான நக்கீரன், ஊர் மக்களிடம் சிங்கம், புலி போன்ற
A B C
மிருகங்களை வேட்டையாடுவது சட்டத்திற்குப் புறம்பானதென்று
D
எச்சரித்தார்.

A. பெண்பால்

B ஒன்றன்பால்

C. பலர்பால்

D. பலவின்பால்

3.கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக.

குயவன் _________-திற்காக வீட்டில் நெடு நேரம் காத்திருந்தான்.

A. குரத்தி C. குயத்தி

B. குலத்தி D. குவத்தி

4. பின்வருவனவற்றுள் பலவின்பாலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

A. B.

C. D.

5. கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியான பலர்பால் பயன்பாட்டைக் கொண்ட வாக்கியத்தைக்


கண்டெடுக.

A. வானில் குருவிகள் பறந்தன.

B. சரவணன் வேகமாக ஓடினான்.

C. மலேசியா மக்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள்.

D. ஆற்றில் மீன்கள் அங்கும் இங்கும் நீந்துகின்றன.

6. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தரைமட்டத்தில்

இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது; ஆரம்பகாலத்தில் பக்தர்கள் மலை மீது


அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய படிப்பாதை

வழியாக சென்றனர்.

மேலே உள்ள உரைநடையிலுள்ள பலர்பாலை அடையாளம் காண்க.

A. பழநி B. சுவாமி

C. பக்தர் D. தண்டாயுதபாணி

7. கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.

அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும்
வழிகாட்டியாக இருந்தார்.

A. சிறுவன், பாடகன்

B. சிருவன், பாடகர்

C. சிறுவர், பாடகன்

D. சிறுவர்கள், பாடகன்

8. ஏற்ற பால் வகையைத் தெரிவு செய்க.

A. பெண்பால்

B. ஆண்பால்

C. பலர்பால்

D. பலவின்பால்

9.கீழ்க்காணும் வாக்கியங்களில் ஒன்றன்பால் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. சிறுவர்கள் உரக்க வாசித்தனர்.

B. இராமனின் கதையைக் கேட்ட சீடர்கள் மனமுருகி நின்றனர்.


C. மாணவ மணிகள் தேசிய கீதத்தைப் பாடி மகிழ்ந்தனர்.

D. காளை மாடு வயலை உழுதது.

10.சரியான ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைக் கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

A. தாத்தா தம்பியிடன் கடைக்குச் சென்றார்.

B. சிறுவர்கள் இரு குழுவாக திடலில் பந்து விளையாடினர்.

C. அப்பாவும் அம்மாவும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர்.

D. மானவர்கள் சிற்றுண்டியில் வரிசையாக நின்று உணவு வாங்கினர்.

மரபுத்தொடர்

1. ‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத்


தெரிவு செய்க.
A. மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.
B. பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.
C. குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.
D. முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம்
தாழ்த்தினான்.

2. கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக்


கொள்ள வேண்டும் என ___________________
A. கரி பூசினாள்.
B. கங்கணம் கட்டினாள்.
C. ஒற்றைக் காளில் நின்றாள்.
D. கை கொடுத்தாள்.

3. சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த


மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.
A. மனப்பால் குடித்தல்
B. செவி சாய்த்தல்
C. கம்பி நீட்டுதல்
D. குரங்குப் பிடி

4. ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

A. ஓட்டை வாய் நாக்கு நீளுதல்


B. தோள் கொடுத்தல் கை கொடுத்தல்
C. முழு மூச்சு முட்டுக்கட்டை
மனப்பால் குரங்குப் பிடி
D. குடித்தல்

5. இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?


A. மனப்பால் குடித்தல்
B. கங்கணம் கட்டுதல்
C. முழு மூச்சு
D. வெளுத்து வாங்குதல்

6.கீழ்க்காண்பனவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல?

A.கை கூடுதல் C.கை கழுவுதல்

B.கை தட்டுதல் D.கை கொடுத்தல்

7.சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

A.அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

B.அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்

C.வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.

D.அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்

8.கீழ்க்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?


A.ஆறப் போடுதல்

B.அள்ளி விடுதல்

C.அள்ளி இறைத்தல்

D.அரக்க பரக்க

9. கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணை எது?

A.
நாக்கு நீளுதல் வரம்புமீறி பேசுதல்
B.
தலை குனிதல் அவமானம் அடைதல்
C.
D. ஏட்டுச்சுரைக்காய் அனுபவத்தோடு ஒட்டாதக் கல்வி
எடுப்பார் கைப்பிள்ளை எளிதல் பிறருக்கு வசப்படாதவர்

10. கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.

A.தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனை திருவாளர் கண்ணன் தலை


எடுத்தார்.

B.கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும்


என்று கங்கணம் கட்டினாள்.

C.தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக


படித்தாள்.

D.அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.

You might also like