சுதந்திரக் தினம் கொண்டாட்ட நிறைவு விழா 2022 அறிக்கை
கடந்த 19.09.2022, திங்கள் கிழமையன்று மலேசியாவின் 65 -வது
சுதந்திரத் தினக் கொண்டாட்ட நிறைவு விழா 2022 பள்ளி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு காலை 9.00 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வு மணி மண்டபத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு கிள்ளான் மாவட்ட இலாகம் மாணவர் நல
மேம்பாட்டுத் துறை அதிகாரி திரு.களிபி பின் அமாட், பள்ளி வாரிய தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், செயலவை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.காலை 8.30 மணியளவில் எல்லோரும் பள்ளிச் சபைக் கூடும் இடத்தில் ஒன்று கூடினர்.
ஒரு மாதத்திற்கு முன்பாகவே பள்ளியின் ஆசிரியர்களும்
மாணவர்களும், சுதந்திரத் தினக் கொண்டாட்ட நிறைவு விழா நாளுக்காக ஆயத்த வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர். காலை மணி 9.00 க்கு இவ்விழா தொடங்கியது.முதல் அங்கமாக இறைவாழ்த்து, தேசிய பண், மாநில பண் மற்றும் பள்ளி பாடல் பாடபட்டது. விழா தொடக்கத்தின், பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்து, கிள்ளான் மாவாட்ட கல்வி இலாகா, மாணவர் தல மேம்பாட்டுத் துறை அதிகாறி. திரு.கரிபி பின் அமாட் அவர்கள் சிறப்புரை ஆற்றி நிகழ்வை. அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
சிறப்புரையைர் தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்
பெற்றது. இதில் பாடல்களுடன் பல்லின மக்களின் பாரம்பரிய நடனங்களும் இடம் பெற்றன. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர் படைப்புகளைன இசைக்கல்வி பணித்தியத்தின் ஏற்பாட்டில் நடந்த தனிப்பாடல் போட்டி மற்றும் நன்னெறிகல்வி பணித்தியத்தின் ஏற்பாட்டில் நடந்த இல்லிருப்பு சுதந்திர தின கொண்டாட்ட கானொலி போட்டி இடம்பெற்றன. மாணவர்களின் படைப்புகள் வந்திருத்தோரின் மனதைக் கவர்ந்ன.
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. சதந்திர
கருப்பொருள் தையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் . வரலாற்கு மாதிரி உருவாக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், 'டூடல்' வரையும் போட்டி மாற்றும் ஆடை அலங்கார போட்டியில் யெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவர்கள் மகிழச்சியுன் காணப்பட்டனர்.
மதியம் 12:30 மணி அளவில் சுதந்திரக் தினக் கொண்டாட் நினைவு
விழா ஒரு நிறைவை எய்தியது. மாணவர்கள் நாட்டு பற்றை அதிகரிக்கவும் மற்ற இனத்தோடு ஒற்றுமை வளர்த்து கொள்ளயும் இவ்விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இறுதியாக, அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
அறிக்கை தயாரித்தவர், 24 செப்டம்பர் 2022
திவ்யா (திவ்யா த/பெ மேகனராஜா) சுதந்திரக் தினம் கொண்டாட்ட நிறைவு விழா 2023 செயலாளர்