Professional Documents
Culture Documents
முன்னுரை – வரவேற்புரை
அறிவியல் கண்டுபிடிப்பு
கணினி யுகம்
இன்றியமையாத ஒன்று
அவசியம்
வேலையை எளிதாக்குகின்றது
விரைவாக, சுலபமாக
நேரம் மிச்சப்படுகிறது
பாதுகாப்பானது
பதிவு செய்து கொள்ளல்(save)
தேவைப்படும் போது பயன்படுத்துதல்
பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது
கல்வித்துறை
வங்கி
மருத்துவம்
தகவல்களைச் சேகரிக்கலாம்
இணையம்
உள்நாட்டு வெளிநாட்டுச் செய்தி
நண்பர்களுடனான உரையாடல்
பொழுதுப் போக்குச் சாதனம்
கணினி விளையாட்டுகள்
மனமகிழ்வு ஏற்படுதல்
முடிவுரை
தனிமனிதன் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்காற்றுகின்றது.
கணினியின் பயனை மட்டும் எடுத்துக்கொள்ளுதல்
நன்றி, வணக்கம்.
மொழியணி
1. ஒப்புர வொழுகு
2. வெள்ளம் வரும் முன் அணைப் போடு
3. எவ்வதுறைவது உலகம் உலத்தோடு அவ்வதுறைவது அழகு
4. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லாதார் அறிவிலாதார்.
என் எதிர்கால ஆசை
முன்னுரை
ஒவ்வொருவருக்கும் எதிர்கால ஆசை இருக்கும்
எ.கா:- ஆசிரியர், மருத்துவர், நீதிபதி
கருத்து 4
இந்த ஆசையை அடைய உன்னுடைய பங்கு.
ஆசிரியர் போதிக்கும் பாடங்களைச் செவிச்சாய்த்தல்/ கேட்டறிதல்
சுயமாக மீள்பார்வை செய்தல்.
அதிகளவில் பயிற்சிகள் செய்தல்.
முடிவுரை
இந்த ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிதல்
மொழியணி
1. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
1. எழுத்தறிவித்தவன் இறைவனாவான்.
2. சுடர் விளக்காயினும் தூண்டுகோள் தேவை
கணினியின் பயன்
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் என்னவெனில்
கணினி எனலாம். மனித வாழ்க்கையில் கணினி பரவாத இடம் ஏதுமில்லை. கணினி மனிதனுக்குப் பல
வகைகளில் பயனான ஒன்றாக விளங்குகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அன்றாட அலுவலகப்பணிகள்
மற்றும் ஏனையத் துறைகளிலும் கணினியின் கையே மேலோங்கி நிற்கிறது.
கல்வித்துறையில் கணினியின் பங்கை யாரும் மறுக்க முடியாது. தற்போது எல்லா பள்ளிகளிலும் கணினி
வழிக்கல்வி பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, அறிவியல் கணிதப் பாடங்களுக்காக பள்ளிகளில்
மடிக்ககணினிகள்,ஒளியிழை வட்டுகள், பாட செறிவட்டுகள், போன்றவை கல்வி அமைச்சால் பள்ளிகளுக்கு
வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களும் அறிவியல், கணிதப் பாடங்களை இவற்றின் மூலம் மாணவர்களுக்குப்
போதிக்கின்றனர். மேலும், கணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு அறிந்துள்ள
அரசாங்கம், பள்ளிகளில் கணினி மையங்களையும் அமைத்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும், பல கோடி
வெள்ளியை அரசாங்கம் செலவு செய்வது கணினியின் அவசியத்தை உணர்த்துகிறது.
கணினியின் பயனை வெறும் வார்ததை ் களால் மட்டுமே விவரிக்க முடியும் என்பது மலையை முடியால்
அளப்பது போன்றதாகும். எந்தத் துறையால் கணினி தன் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை என்று யாராலும் கூற
முடியாது. எனினும், நாணயத்திற்கு உள்ள இரு பக்கங்களைப் போல் கணினிக்கும் தீமை என்ற மறு பக்கம் உள்ளது
என்பதை மறுக்க முடியாது. எனவே, நன்மையை மட்டுமே நாடினால் எதுவுமே நன்மையாகத்தான் முடியும்.
வாசிப்பின் அவசியம்
இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர
வாழ்ககை
் யிலிருந்து மீண்டு மனமகிழ்வு பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. கடை, கட்டுரை,
கவிதை.,செய்யுள் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றின் சுவையை உணர்ந்து இரசிப்பது மனம்
மகிழ்கின்றது.
சொந்தமாகக் கதை, கட்டுரை, கவிதை எழுத விரும்புகிறவர்கள் முதலில் அவை தொடர்பான பல
நூல்களைப் படித்து அறிய வேண்டும். அப்போதுதான் சொந்தப் படைப்புகளைப் படைக்கும் போது அவை
தரமானவையாக இருக்கும். பல தகவல்களைத் தன்னுடைய படைப்புகளில் புகுத்த முடியும்.
எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய முடிகிறது. ”நூலளவே ஆகுமாம்
நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.
வாசிக்கும் பழக்கம்
‘ஓதாமல் ஒருநாலும் இருக்க வேண்டாம்’ என்பது தமிழ் மூதாட்டி ஒளவையின் அருள் மொழியாகும்.
நாம் நாள்தோறும் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதனால் நம் அறிவு வளரும்.
என்பது போல நாம் எந்த அளவுக்குத் தோண்டுகிறோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல
எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அள வுக்கு அறிவு பெருகும். ஆகவே, நாம் நேரத்தை விரையம்
செய்வதை விட வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளலாம். இதனால் நம் கல்வியறிவையும் பொது அறிவையும்
வளப்படுத்த முடியும்.
ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதில் பள்ளிப் புறப்பாட நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது.
நற்பண்புள்ளவனாகவும் , தன்னலம் கருதா மாந்தனாகவும் உருவாக பள்ளி புறபாட நடவடிக்கை முக்கிய பங்கு
வகிக்கின்றது.ஆகையால், ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் புறப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டு மேன்மை பெற
வேண்டும்.
நூலகத்தின்
பயன்
நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள்
நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில்
கிடைக்கும்.
நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும் நூலகங்களும்
இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில்
நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த
அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.
நீரின் பயன்
நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்புவியில் வாழ இயலாது.
நீரின் மூலங்கள் பல. நாம் நீரை ஆறு, ஏரி, குளம், நதி போன்றவற்றிலிருந்து பெறுகிறோம். இப்பூமியின் எழுபது
சதவீதம் நீரால் ஆனது என அறிவியல் கூறுகின்றது. மேலும், நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. நீர்
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிராணிகள், தாவரங்கள் உயிர் வாழவும் அடிப்படையாக அமைகின்றது.
நீர் மனித வாழ்வின் அன்றாடத் தேவைகளில் மிக அடிப்படையானது. மனிதர்களுக்குக் குளிக்க,
சமைக்க, பாத்திரங்கள் வாகனங்கள் போன்றவற்றைக் கழுவ நீர் இன்றியமையாததாக அமைகிறது. மேலும்,
மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தினமும் நீரை அதிகளவில் பருக வேண்டுமென்று மருத்துவம் கூறுகிறது.
தினசரி ஒரு குறிப்பட்ட அளவு நீரைப் பருகும் ஒருவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
எனவே, நீர் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து விட்டது என்று கூறினாலும் அது
மிகையாகாது. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்பூமியில் வாழ்வது என்பது இயலாத காரியம்.
கல்வி
இறைவன் படைப்பில் ஒரு சிறு அங்கமாக விளங்குவது மானிட இனம். இம்மானிட இனம் சிறப்புற
வாழக் கல்வி ஓர் அற்புத சாதனமாகத் திகழ்கிறது. கல்வித்தாகம் ஒவ்வொருவரின் உயிரோட்டத்திலும்
ஊற்றெடுக்க வேண்டிய ஒன்றாகும். இம்மாபெரும் கல்விச் செல்வமானது அனைவரது வாழ்விற்கும்
விடிவெள்ளியாக அமைந்து வருகின்றது என்றால் மிகையாகாது. கண்களுக்கு நிகராகப் போற்றப்படும் கல்வியைக்
கற்பதன்வழி, ஒரு மனிதன் தன் வாழ்வைச் சீர்படுத்திக் கொண்டு செம்மையாக வாழலாம்.
உயிர் உடலில் இருந்து பிரிந்தாலும் ஒரு மானிடன் வாழ்ந்த வாழ்வை இவ்வுலகம் தொடர்ந்து பேசிக்
கொண்டே இருக்கும். அப்பேச்சு, தூற்றும் வகையில் அமைவதும் போற்றும் வகையில் அமைவதும் ஒருவர்
கடைப்பிடித்த வாழ்க்கை நெறியைப் பொறுத்துள்ளது. இவ்வாழ்க்கை நெறி கல்வியின் மூலமே பெறப்படுகிறது.
கல்வியானது பண்பு நிறைந்த குமுகாயத்தை உருவாக்கும் வல்லமையைக் கொண்டது. கல்விவழி அன்பு, பணிவு,
கருணை போன்ற உயர்ந்த குணங்கள் ஒருவரது ஆழ்மனதில் கலந்துவிடும். அதோடு கல்வி கற்ற ஒரு மானிடனால்
நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து நடக்க இயலும். இதனால், கல்விமானாகத் திகழும் ஒவ்வொரு மனிதனும்
என்றும் மாசற்றவர்களாகத் திகழ்வர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
மேலும், கல்வித் தென்றலில் உலாவரும் ஒவ்வொரு மனிதனும், மதிப்பும் மரியாதையும் பெற்றுப், புகழின்
சிகரத்தை அடைவான் என்பது நாமறிந்த ஒன்றே. கல்வி ஞானம் பெற்ற ஒருவரின் பேச்சும் ஆலோசனையும்
மட்டுமே உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்வில் செயல்படுத்தப்படுகின்றது. ஏனெனில், கற்றவரின்
கருத்து என்றும் வளமானதாகவும் வலுவானதாகவும் இருக்கும். கற்றவர்கள் எவ்வித சிக்கல்களையும் தங்கள்
அறிவால் சுமூகமாக நிவர்த்திச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பர். அதோடு, கற்றவர்கள் எவ்வித
சூழ்நிலைகளிலும் தன்னடக்கத்துடன் செயல்படுவர். இதுபோன்ற சிறந்த தன்மைகளைக் கொண்டிருப்பதால்
கற்றவர்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பிக்கப்படுவர் என்பதைக் ‘கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’
என்னும் முதுமொழி விளக்குகின்றது.
கல்வி என்னும் அமுதச் சுரபியைப் பெறும் ஒவ்வொரு மானிடனும் தனது பொது அறிவை வளர்த்துக்
கொள்ள இயலும். கல்வி கற்கும் பொழுது நாம் அதன்வழி பல தகவல்களை அறிகின்றோம். இத்தரணி
தோன்றியது முதல் மனிதன் வளர்ச்சி அடைந்த காலம் வரை உள்ள தகவல்களை நாம் கல்வியின் வழி
கற்றறியலாம்.
கற்றனைத் தூறும்
அறிவு
என்னும் குறளுக்கேற்ப கல்வி கற்கக் கற்க நமது அறிவு முதிர்ச்சி அடைந்து நாம் ஒரு சிறந்த
அதுமட்டுமின்றி, கல்வி ஒரு மனிதனுக்கு நல்லதொரு வேலை வாய்பபை ் யும் உருவாக்கித் தருகிறது.
தொடக்கநிலை, இடைநிலைக் கல்வியில் சிறந்த தேர்ச்சி அடைந்தால், உபகாரச் சம்பளத்தோடு கூடிய வேலை
வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இவ்வரிய வாய்ப்பினை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு நமது
அரசாங்கமும் மற்றும் பல தனியார் நிறுவனங்களும் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நல்லாதரவு நல்கி
வருகின்றனர். இதன்வழி, பல்வேறு வேலை வாய்ப்புகளைச் சிக்கலின்றிப் பெற்று வெற்றியடைய இயலும்.
தொடர்ந்து நல்ல கல்வித்தகுதி உடைய ஒருவர் நிறைந்த வருமானத்துடன் சிறந்ததொரு வேலையை
எதிர்பப் ார்க்கலாம். இதுபோன்ற வேலை வாய்பப் ினால் நம் வாழ்வு சீரும் சிறப்புடனும் திகழும்.
பணம்
‘பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்’ என்னும் பழமொழி நாம் அறிந்த ஒன்றே. இந்தக் கலியுகக் காலத்தில்
பணம் இல்லாதவன் பிணமாகக் கருதப்படுவான். பணம் என்றால் என்ன? உங்கள் இமைக் கதவுகளை மூடி
சிந்தனை என்னும் சன்னலைத் திறந்து பார்த்தால் பதில் கிட்டும். பணம் என்றால் ஒரு மதிப்புள்ள நாணயம் என்று
பொருள்படும். பணம் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் முதல் இடத்தை வகிக்கிறது.
இவ்வுலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதன் தனி வரலாறு உண்டு. அது போல, பணம் எப்படித்
தோன்றியது என்ற வரலாறும் உண்டு. முற்காலத்தில் பணம் நாணய வடிவில் இருந்தது. இந்நாணயங்கள் செம்பு,
ஈயம், தங்கம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டன.. மேலும், நாணயங்கள் பல்வேறு வடிவங்களில்
செய்யப்பட்டன. அவை வட்டம், சதுரம், செவ்வகம், முதலை வடிவம் போன்ற வடிவங்களாகும். அன்றுமுதல்
இன்றுவரை பணம் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மனிதன் தனக்கு வேண்டிய சிறுபொருளை
வாங்குவதற்குக்கூடப் பணம் தேவைப்படுகிறது.
அடுத்து, நம் நாட்டில் பரவலாக நடைபெறும் வெட்டுமரத் தொழிலினாலும் இந்த ஆற்றுத் தூய்மைக்கேடு
ஏற்படுகின்றது. மலைப்பிரதேசங்களில் நடைபெறும் வெட்டுமரத் தொழிலினால் ஆற்றுத் தூய்மைக்கேடு மிகவும்
மோசமடைந்துள்ளது. இவ்விடங்களில் நடைபெறும் துரித வெட்டுமரத் தொழிலினால் மண்சரிவு ஏற்படுகின்றது.
குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த மண்சரிவு மிகவும் மோசமடைகின்றது. இந்த மண்சரிவு ஆற்றோடு
கலப்பதினால் ஆறு தூய்மைக்கேட்டை அடைகின்றது. ஆற்றில் போய்ச் சேரும் மண்ணால் ஆற்றின் ஆழம்
குறைந்து, தீடீர் வெள்ளம் ஏற்படுகிறது.
ஆகவே, சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு பாடுபட வேண்டும். ‘ஒன்று
பட்டால் உண்டு வாழ்வு’ என்பது போல நாம் வசிக்கும் இடத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டுப்பணி முறையில்
சுத்தப்படுத்தினால் நாம் சுகாதாரமாக நோய்நொடியின்றி வாழலாம். அதோடு அரசாங்கமும் இச்சிக்கலைக்
களைவதில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆற்றோரங்களில் காணப்படும்
குடியேறிகளை மாற்று இடங்களுக்கு மறுகுடியேற்றம் செய்ய ஆவனச் செய்ய வேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட
இடத்தில் மட்டுமே வெட்டுமரத்தொழில் நடைபெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்க வேண்டும். ‘நமது ஆற்றை
நேசிப்போம்’ என்னும் அரசாங்கத்தின் சுலோகத்தை நாடு தழுவிய நிலையில் செயல்படுத்தினால் ஆற்றின்
தூய்மையைப் பேணிக் காக்க இயலும்.
தாய்
தாய் என்பவள் ஒன்பது மாதங்கள் நம்மைக் கருவறையில் சுமந்து, நாம் உதைக்கும் வலியையும்
பொறுத்துக் கொண்டு அதைச் சுகமாகக் கருதும் ஒரே உயிராகும். குழந்தை பிறந்த பிறகு, தாய் தனது
இரத்தத்தையே பாலாக்கி, பாலூட்டித் தாலாட்டுவாள். தொப்புள் கொடி அறுக்கப்பட்டாலும் தாய்க்குத் தனது
குழந்தை மீது உள்ள அன்பும் அக்கறையும் குறையவே குறையாது. இரவு பகல் பாராது தாய் தனது குழந்தையைக்
‘கண்ணை இமை காப்பது போல’ வளர்ப்பாள்.
‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே’ என்னும் பாடல் வரி நமக்கு உணர்த்தும் கருத்து யாது? ஒரு குழந்தை வாழ்வில் ‘குன்றின்
மேலிட்ட விளக்கைப் போல்’ ஒளிவிடவும் அல்லது ‘குடத்திலிட்ட விளக்கைப் போல்’ மங்கிவிடவும் அச்சாணி
ஆகிறாள் தாயானாவள். தன் குழந்தைக்கு இவர்தான் தந்தை என்று அடையாளம் காட்டுகிறவளும் தாய்தான்.
இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று தன் பிள்ளைக்கு எடுத்துகாட்டாக, இருப்பவளும்
தாய்தான். இதற்குக் காரணம் ஒரு குழந்தை பிறந்தது முதல் தாயின் பேச்சு, செயல், வேலை, கவனிப்பு
ஆகியவற்றைத் தினமும் பார்ப்பதால் அந்நடவடிக்கைகளே அக்குழந்தையின் மனத்தில் ‘பசுமரத்தாணிபோல்’
பதிகின்றன. அவர்கள் பெரியவர்களானதும் அவற்றையே பின்பற்றுகின்றனர்.
மேலும், தாய் நமது முதல் தெய்வமாவார். இதை அறிந்துதான் நமது மூத்த கவிஞர்கள் ‘தாயிற் சிறந்த
கோயிலுமில்லை’ என்று பாடியுள்ளனர். தாயை மதிக்காமல் அவரது வார்த்தைகளைச் செவி சாய்க்காமல் அருகில்
வாழும் இத்தெய்வத்தைப் போற்றாமல், பல கோயில்களுக்கு நற்கதித் தேடிப் போனால் அது கிட்டாது. மாறாகப்
பாவங்களே வந்து சேரும். தாயின் வார்ததை
் களைக் கேட்டுப் பின்பற்றினால் நமது வாழ்வு வளம் பெறுவது உறுதி.
நம்மைச் சீரும் சிறப்புடனும் வளர்த்த தாயை, எப்பொழுதும் அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுதுதான் அத்தாயின் உள்ளம் மகிழ்சச ் ி அடையும். நாமும் மனநிம்மதியுடன் வாழ்வில் முன்னேற்றம்
காணலாம். உலகில் நமக்கெனப் பல உறவுகள் இருந்தாலும், நம் முன்னேற்றத்தைக் கண்டு பெருமிதம் அடையும்
ஒரே உள்ளம் நம் தாயுள்ளம்தான். எனவே, நம்மைச் சீராட்டிப், பாலூட்டி வளர்த்த தாயை நாம் எப்பொழுதும்
‘கண்ணை இமை காப்பது போலக் காத்துப் போற்றுவோம்.
நூலகம்
காலம் பொன் போன்றது என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும். நாம் பயனற்ற வழியில்
கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் மீண்டும் வரப்போவதில்லை. ஆகவே இன்றைய இளைஞர்கள் தங்களது
நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க நூலகம் பெரிதும் துணைபுரிகிறது. அதாவது அவர்கள் தங்களது ஓய்வு
நேரத்தை நூலகத்தில் செலவிடுவதால் சமூகச்சீர்கேடுகளிலில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்துக்கொள்ள முடிகிறது.
இதன்வழி நாம் நம் நாட்டில் பெருகிவரும் வன்முறை, குண்டர் கும்பல், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை
போன்ற சமூகச்சீரகே
் டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். இது நம் எதிர்காலத் தலைமுறையினர்
கற்றவர்களாகவும் ஒழுக்கத்தில் ஓங்கியவர்களாகவும் திகழ வழி வகுக்கும் என்பது திண்ணம்.
எனவே, நாம் வயது வரம்பின்றி நூலகத்திற்குச் சென்று அங்குள்ள பல எழுத்துப் படிவங்களை வாசித்துப்
பலனடைய வேண்டும். அரசாங்கம் பொது மக்களின் வசதிகளுக்காக நிறுவப்பட்ட நூலகங்களில் உறுப்பினர்களாகி
அங்குள்ள சலுகைகளை நல்வழியில் பயன்படுத்திக்கொள்வது நமது அனைவரின் கடமையாகும். ‘கற்றோருக்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதுபோல நாம் கற்றவர்களாக இருந்தால் எங்குச் சென்றாலும் மதிப்புப் பெற்றுச்
சிறப்புடன் வாழலாம்.
மழை
மழை கடவுளால் நமக்களிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகும். மனிதர்கள், பிராணிகள் மற்றும் தாவரங்கள்
செழிப்புடன் உயிர்வாழ மழைநீர் உற்ற தோழனாக இருந்து தோள் கொடுக்கிறது. நமது நாட்டில் இயற்கை வளங்கள்
அதிகம் இருப்பதற்கு மழை ஒரு முக்கியக் காரணமாக விளங்குகின்றது. அறிவியல்பூர்வமாகப் பார்த்தோமானால்
மழை, கடல் நீரில் இருந்துதான் உற்பத்தி ஆகிறது என்பதை நாம் அறிய முடியும். வெப்பமான சூழலில் கடல் நீர்
நீராவியாக மாறி வானத்திற்குச் சென்றுவிடுகிறது. வானத்தை அடைந்தவுடன் நீராவி மேகமாக மாறிவிடுகிறது.
மேகக்கூட்டங்களுக்கிடையே ஏற்படும் உரசல்களினால் மேகம் கலைந்து மழையாகப் பொழிகிறது. பூமியை
நனைக்கும் இம்மழைநீர் பல நன்மைகளைத் தாங்கி வருகிறது. நாம் மழையின் நன்மையை அறிந்து அதனை
அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.
ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலை மழையைச் சார்ந்துள்ளது. மழை பொழிவதால் பூமி குளிர்கிறது;
பெய்யாவிட்டால் பூமி வெப்பமாகிறது. அளவுக்கதிகமான வெப்பம் பயிர்களை வாடச் செய்கிறது; நிலத்தைப்
பிளக்கச் செய்கிறது; மனிதர்களுக்குப் பல கேடுகளை விளைவிக்கிறது. வெப்பமான சூழல் மனிதர்களுக்குப் பல
தோல் வியாதிகளைத் தருகிறது. இவ்வெப்பத்ததைத் தணிக்கும் சக்தி மழைக்கு உள்ளது. மழை பெய்வதால் பூமி
குளிர்சச
் ியாய் இருக்கும். குளிர்சச
் ியான நாடுகளுக்கு நிறைய சுற்றுப்பயணிகள் வருவார்கள். இதனால் நாட்டின்
வருமானமும் பெருகும். நாடு குளுமையாகவும் வளமுடனும் இருப்பதால் தாவரங்கள் செழிப்புடன் வளர்கின்றன.
ஒரு மனிதன் புவியில் சிறப்புடன் வாழ்வதற்குக் கைகொடுப்பது நீர்தான். உலகில் நீரில்லாமல் வாழ
முடியாது. நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கு நீர் பயன்படுகிறது. இந்நீரை நாம்
மழையிலிருந்து பெறுகின்றோம். வாகனங்களைக் கழுவுதல், குளித்தல், குடித்தல் மற்றும் துணிமணிகளைத்
துவைத்தல் போன்ற தேவைகளுக்கு மழை நீர் தேவைப்படுகின்றது. மழை நீரைச் சேகரித்துத் தாவரங்களுக்கும்
பாய்ச்சலாம்.
2020 இலக்கை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த இலக்கை அடைய நம் நாடு விவசாயத்
துறையிலிருந்து தொழிற்துறைக்கு மாறி வருகிறது. இதனால், நாட்டில் தொழிற்சாலைகள் நேற்று
மழையில் முளைத்த காளான்கள் போல் பெருகிவருகின்றன. இத்தொழிற்சாலைகளை இயக்குவதற்கு
மின்சாரம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. நாட்டின் பல ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டு மின்சாரம்
உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைக்கட்டுகளும் மழையையே நம்பியுள்ளன. அணைக்கட்டுகளில்
நீர் நிரம்பி இருந்தால்தான் மின்சாரத்தை இலகுவாக உற்பத்திச் செய்ய முடியும். நம் அன்றாட
வேலைகளைச் சரிவரச் செய்வதற்கு ம¢ன்சாரம் தேவை. இதன் விளைவாக உற்பத்தி குறைந்துவிடும்.
நாட்டின் பொருளாதாரமும் சரிவடையும். ஆகவே, மழை நீரை நம்பியுள்ள மின்சார உற்பத்தி நாட்டின்
வளர்ச்சிக்கு மிகமிக அவசியமாகும்.
சுருங்கக்கூறின், மழை நீர் நமக்குப் பல நன்மைகளைத் தருகிறது. மழை நீர் நமக்கு உற்ற தோழனாக
விளங்குகிறது. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’, என்பது பெரியோர் வாக்கு. ஆகவே, மழைநீரை
நாம் ஒரு போதும் வீணாக்கக்கூடாது. மழைநீரை நாம் பல தேவைகளுக்குப் பயன்படுத்தினால் குடிநீர்
கட்டணத்தைக் குறைத்துப் பணத்தைச் சிக்கனப்படுத்தலாம். ஆண்டு முழுவதும் மழை பொழியும் இந்நாட்டில்
வாழும் நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். மழைநீரை நன்முறையில் பயன்படுத்தி நம் வாழ்ககை ் யை
மேலும் செழிக்கச் செய்வோம்.
கணினி
கணினி மக்களின் நேரத்தை நல்ல வழியில் செலவிட வகை செய்கிறது. இணையத்தளம் மக்களின்
வாழ்ககை் யில் பெரும் பங்காற்றுகிறது. கணினியில் உள்ள விளையாட்டுகள் வேலை முடிந்து களைப்புடன் வீடு
திரும்புவர்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்து மன அழுத்தத்தையும் குறைக்கிறது. தொழிற்நுட்பம் சம்பந்தமான
தகவல்களைப் பெறவும் மக்களின் அறிவை வளர்க்கவும் கணினி முக்கியப் பங்காற்றுகிறது.தொடர்ந்து சிறுவர்கள்
தங்கள் ஓய்வு நேரத்தை நல்வழியில் செலவிட இவ்வகையான விளையாட்டுகள் துணைபுரிகின்றன.
‘நட்பில்லா மனிதன் என்றால் அவனொரு மனிதன் இல்லை. நட்புக்கே உயிரைத் தந்தால் அவனைப்
போன்று புனிதன் இல்லை’. இதுவொரு பாடலின் வரியாகும். நட்பு என்பது ஒருவர் தெரியாத வேறொருவரிடம்
பழகி, அவரைப் புரிந்து கொண்டு இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வதோடு தக்க சமயத்தில் உதவி
புரிவதாகும். மேலும், வழி தவறும் பொழுது அன்புடன் இடித்துரைத்து ஒருவரை நல்வழிக்கு இட்டுச் செல்வதே
நல்ல நட்புக்கு இலக்கணமாகும். நட்பு என்னும் சொல் சினேகம் அல்லது தோழமை எனப் பொருள்படும்.
நட்பு நிழலைப் போன்றது; எங்குச் சென்றாலும் நம்முடனே வரும். ஒரு மனிதனின் நட்பு எங்குத்
தொடங்குகிறது என்றால் அவன் வசிக்கும் அண்டை வீட்டிலிருந்தான் என்று கூறலாம். சிறுபிள்ளை முதல் நட்பு
அண்டை வீட்டிலிருந்துதான் தொடங்கிறது பிறகு, அச்சிறுவன் பள்ளிப் பருவம் அடைந்தவுடன் அச்சிறுவனுடைய
நட்பு விரிவடைகிறது. அச்சிறுவன் மேலோங்கி வளர வளர பலதரப்பட்ட நட்பு அவனுக்குக் கிட்டுகிறது. நட்பு
கிடைப்பது எளிது; ஆனால், அந்த நட்பை விட்டுப் பிரிவது மிக மிக அரிது. ஒருவரிடம் நாம் நட்பு கொண்டு
சந்தர்ப்பச் சூழ்நிலையால் பிரிந்து விட்டாலும் அந்த நட்பு எக்காலத்திலும் அழியலாகாது அல்லது மறக்க முடியாது.
நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு நமக்கு நன்மையே தரும். தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நம்மைத் தீய
வழியில் கொண்டு சென்று நமது வாழ்ககை ் யே அழித்துவிடும். மேலும், தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நீண்ட
நாள் நிலத்திருக்காது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் பள்ளியில் நன்கு சிறந்து விளங்கும் மாணவனுடன் நட்பு
வைத்திருந்தால் அவனுக்குத் தெரியாத பாடங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். அம்மாணவன் தன்
நண்பனிடம் உள்ள நன்நெறிகளைக் கற்றுக் கொள்வான். தன் நண்பனைப் போல் தானும் சிறந்து விளங்க
வேண்டும் என எண்ணமும் மனத்தில் உருவாகும். அதனால் அம்மாணவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க
வாய்ப்புண்டு.
வெறும் சிரித்துப் பேசி மகிழ்வது நட்பாகாது. இருவருள் ஒருவர் நெறி கடந்து செல்லும்போது,
இன்னொருவர் முற்பட்டு இடித்துரைத்துத் திருத்துவதே ஆகும். முகம் மட்டும் மலர நட்புகொள்வது நட்பாகாது.
அன்பால் உள்ளமும் மலருமாறு நட்புகொள்வது உண்மையான நட்பாகும். திருவள்ளுவர் நட்பைப் பற்றி என்ன
கூறுகின்றார் என்றால்,
‘முகநக நட்பது நட்பன்று: நெஞ்சத்து
தற்போதைய காலகட்டத்தில், ஒருவரிடம் பணம் மற்றும் பேரும் புகழும் இருக்கும் வரைதான். அவனிடம்
கொள்ளும் நட்பு நிலைத்து இருக்கும். எப்பொழுது பணம் இல்லாமல் தவிக்கிறாரோ, அவரிடம் கொண்ட நட்பைத்
துண்டித்து விடுவார்கள். துன்பக் காலத்தில் கைவிட்டுவிடுவார்கள். இப்படிப்பட்ட செயல் நட்புக்குக் துரோகம்
செய்வதற்குச் சமமாகும். சிலர் ஒருவனிடம் நட்பு கொள்வது போல் இருந்து, இறுதியில் அவருக்கு ஏதாவது ஒரு
தீஙகு
் செய்து விடுவர். காரியம் இருக்கும்வரை காலைப்பிடித்துக் கொண்டு, காரியம் முடிந்தவுடன் கண்டும்
காணாமல் போகும் பொய்யான நட்பை உடனடியாக விட்டுவிட வேண்டும்.
மனிதனுக்கு மனிதன் நட்புக் கொள்வது போல் நாட்டுக்கு நாடு நட்பு கொள்ளுதல் வேண்டும். நாட்டுக்கு
நாடு கொள்ளும் நட்பு பல வகைகளில் நமக்கு நன்மையே கொண்டுவருகிறது. நாட்டுக்கு நாடு நட்பு கொள்வதால்
உதவி புரியும் மனப்பான்மை, புரிந்துணர்வு மற்றும் விட்டுக்கொடுக்கும் போக்கையும் நம்மால் கடைப்பிடிக்க
முடிகிறது. ஏதாவது ஒரு சிக்கல் ஏற்பட்டால் நட்புறவின் வழி சிக்கலைத் தீர்க்க முடிகிறது. இதனால், நாட்டிக்கு
நாடு போர் நடப்பைத் தடுக்க வழி செய்கிறது. நாட்டுக்கு நாடு கொள்ளும் நட்பால் வாணிபத்துறையும் மேலும்
வளர்ச்சியடைய துணை புரிகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி கண்டு வருகிறது.
முன்னுரை – வரவேற்புரை
தமிழ்ச் சான்றோர்கள் பலர்
அவர்களின் பெயர்கள்
எனக்குப் பிடித்தவர் பாரதிதாசன்
கருத்து 1
இயற்பெயர், பிறந்த திகதி, ஆண்டு, இடம்
தாயார் மற்றும் தந்தையின் பெயர்
இளமைக்கல்வி
கருத்து 2
தமிழின் இனிமையை உணர்ந்து தொண்டாற்றியவர்
பல பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழுக்காக, தேசத்துக்காக, வீரத்துக்காகப் பாடியுள்ளார்.
முன்னுரை – வரவேற்புரை
வந்திருந்தோருக்கு வணக்கம் கூறுதல்
தாய் நாட்டின் அர்த்தம்-நாட்டின் பெயர்
இங்குப் பிறந்ததற்கு நன்றிக் கூறுதல்
கருத்து 1
நீர் வளம், நில வளம் நிறைந்த நாடு
மிதமான சீதோஷ்ண நிலை
ஆண்டு தோறும் வெயில், மழை உண்டு
கருத்து 2
பல்லின மக்கள் வாழும் நாடு
பல கலாச்சாரம், பண்பாடு
பல பண்டிகைகளைக் கொண்டாடுதல்
பல மொழிகள் பேசப்படுதல்
கருத்து 3
நிலைத்தன்மையான அரசியலைக் கொண்டுள்ளது
சண்டை, சச்சரவு இல்லை
ஒற்றுமை மேலோங்கி உள்ளது. (ஒரே மலேசியா கொள்கைத்திட்டம்)
2020 தூர நோக்குச் சிந்தனை கொண்ட நாடு
முடிவுரை
பல சிறப்புகளைக் கொண்ட நாடு அதனால் போற்றுதல்
மென்மேலும் வளர்ச்சியடைய இறைவனை வேண்டுதல்.
நன்றி, நவிழ்தல்
மொழியணி
1. மன்னர்க்கழகு செங்கோன் முறைமை
2. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
3. ஒற்றுமையே வலிமையாம்
4. எண்ணுவது உயர்வு
5. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
நான் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு நீர்ப்புட்டி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னுடன் சேர்ந்து பல
ஆயிரக்கணக்கான நண்பர்களும் பிறந்தார்கள். நான் உருளை வடிவில் இருப்பேன். நான் வெள்ளை மற்றும் கருப்பு
நிறத்தில் இருப்பேன். என்னுள் இருக்கும் நீர் வெளியாகாமல் இருக்க என் தலைப் பகுதியில் வட்டமான மூடியைப்
பொருத்தியுள்ளனர்.
ஒரு நாள் என்னையும் என் நண்பர்களையும் பெட்டியில் அடுக்கி வைத்தனர். பிறகு, எங்களைக்
கனவுந்தில் ஏற்றினர். அப்போது ஓட்டுனர் ஒருவர் கோத்தா திங்கியில் உள்ள எக்கோன்சேவ் எனும் பேரங்காடிக்குக்
கொண்டு செல்வதாக உரையாடிக் கொண்டிருந்தது என் செவிக்கு எட்டியது. கனவுந்தும் நகர்ந்தது. நாங்கள்
இருட்டில் இருந்ததால் கிடுகிடுவென பயத்தால் நடுங்கினோம்.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எங்களை அப்பேரங்காடியில் இறக்கினர். அப்பேரங்காடியின் உரிமையாளர்
பணம் கொடுத்து வாங்கினார். அதன் பிறகு, அக்கடையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் என்னையும் என்
நண்பர்களையும் ஒரு நீண்ட கூடையில் அடுக்கி வைத்தார். எங்கள் மீது ரி.ம 25 ஒட்டப்பட்டது.
ஒவ்வொரு நாளும் அப்பேரங்காடிக்கு அதிகமானோர் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஆனால், இதுவரை நானும் சில நண்பர்களும் யாருடைய கண்களுக்கும் தென்படாமல் அங்கேயே உள்ளோம். ஒரு
நாள் சிறுவன் ஒருவன் தன் அம்மாவோடு அப்பேரங்காடிக்கு வந்தான். அவனுடைய நீர்ப்புட்டி உடைந்ததால்
புதியதாக ஒன்றை வாங்குவதற்கு அங்கு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்த அவன், இறுதியில் காந்தம் இரும்பைக்
கவர்வது போல நான் அவனுடைய மனதை ஈர்ததே ் ன். நான்தான் வேண்டும் என்று குரங்குப் பிடியாக அவனுடைய
அம்மாவிடம் பிடிவாதம் பிடித்தான். அவரும் வேறுவழியில்லாமல் என்னைப் பணம் கொடுத்து வாங்கினார்.
அச்சிறுவன் மிகவும் உச்சிக் குளிர்ந்தான்.
என் எஜமான் என்னைச் சுத்தமாகக் கழுவி காய வைத்தார். மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்லும்
போது என்னுள் நீரை நிரப்பி எடுத்துச் சென்றார். நான் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அவருடைய நண்பர்கள்
பலர் என் அழகை இரசித்தனர். என் எஜமான் தன் நண்பர்களிடம் என் அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார்.
ஒவ்வொரு நாளும் என் எஜமான் என்னை மறவாமல் பள்ளிக்குக் கொண்டு செல்வார். அவருக்குத் தாகம் எடுக்கும்
போது என்னுள் இருக்கும் நீரை அருந்திக் கொள்வார். மேலும், பிரத்தியேக வகுப்பிற்குச் சென்றாலும் என்னைக்
கையோடு கொண்டு செல்வார். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தோடு பயணம் மேற்கொண்டாலும் என்னுள் நீரை
நிரப்பிக் கொண்டு எடுத்துச் செல்வார். என் எஜமான் கண் இமை காப்பது போல் என்னை மிகவும் கண்ணும்
கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறார்.
‘அன்று வள்ளுவன் கையிலே நான் ஓர் எழுத்தோலை, இன்று மாணவன் கையிலே நான் ஒரு
பாடப்புத்தகம்” .ஆம், மாணவர்களே! நான்தான் ஒரு பாடப்புத்தகம். வானவில்லின் ஏழு வர்ணங்கள்தான் என்
முகப்பின் அடையாளங்கள்.
நான் நனிச்சிறந்த ஆசிரியர்களின் எழுத்து வண்ணத்தில் உதித்தேன். என்னுடன் பல உடன்பிறப்புக்கள் பிறந்தனர்.
மலேசியாவின் பிரபலமிக்க உமாபதிப்பகம் என்னை அச்சடித்தது. “தமிழ்மொழி ஆறாம் ஆண்டு” என்று தலைப்பிட்டு
என்னை வெளியிட்டனர். என் மேல் ரிம.12.00 விலை அச்சடிக்கப்பட்டிருந்தாலும் மலேசியக்கல்விஅமைச்சால்
மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவேன் என்பதை அறிந்தேன்.என் உடன்பிறப்புகள் புடைசூழ என்னை
கனவுந்தில் ஏற்றினர். கருவறையில் காத்திருக்கும் சிசுவைப்போல நாங்கள் கனவுந்தில் அடைக்கப்பட்டோம்.
ஒவ்வொரு மாணவரும் வரிசையில் நின்று பாடப்புத்தகங்களை வாங்கிச்சென்றனர். என் இளம்தேகத்தை ஒரு கரம்
பற்றி நிற்பதை உணர்ந்தேன். முத்துபற்கள் பளிச்சென சிரிக்க, கரங்கள் இரண்டும் என்னைத் தழுவிப்பார்ப்பது
ஆறாம் ஆண்டு மாணவியான தமையந்தி என்பதை உணர்ந்தேன். அவர்தான் என் எஜமான் என்றுபிறகுதான்
தெரியவந்தது. என் மேனிக்கு மேலாடையாக நெகிழி அட்டையை அணிவித்தாள் மாணவி தமையந்தி. தமிழ்மொழி
தருணத்தின்போது என்னை மறவாமல் பயன்படுத்துவாள். என்னுள் இருக்கும்
கதைகள்,கவிதைகள்,தகவல்களைப்படித்து இன்புறுவாள். என் மேனியின் ஏடுகளை வேகமாக புரட்டும்பொழுது
எனக்கு வலி ஏற்படும்.அதனை நான் அவளுக்காகப் பொறுத்துக்கொள்வேன்.
மொழியணிகள்
1. சூரியனைக் கண்ட பனி போல
2. குரங்குப்பிடி
3. உச்சிக்குளிர்தல்
எனக்கு வயது ஏறிக்கொண்டே போனது. வயதானதால் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதை
என் எஜமானியான அச்சிறுமி கவனித்தார். நான் இன்னும் பல நாட்களுக்கு உழைக்க மாட்டேன் என்று முடிவு
செய்து அருகில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் வீசினார். அவர் என்னை வீசிய வேகத்தில் என் தேகம் முழுவதும்
காயம்பட்டு, வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்கிறேன். பார்த்தீரக
் ளா என் பரிதாப நிலையை!
இன்று நானோ தனிமையில் தவிக்கிறேன். என்னிடம் அன்பு செலுத்தவோ, பரிவு காட்டவோ எவருமில்லை.
என் நினைவலைகள் கடந்த காலத்தை நோக்கிச் சென்றன. 30.7.2011 என் பிறந்த நாள்.நான் மல்லிகைப் போன்ற
வெள்ளை வண்ணத்தில் காட்சியளிப்பேன்.நான் ரப்பராலும், துணியாலும் தயாரிக்கப்பட்டேன். நான் குறிப்பாக
பள்ளிச் சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டவன். இப்பொழுது தெரிகிறதா நான் யார் என்று? ஆம் நான் தான்
பள்ளிக் காலணி. என் பெயர் “பாலாஸ்”. என்னுடன் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பிறந்தார்கள். ஒருநாள்
எங்களை ஜப்பான் தொழிற்சாலையிலிருந்து , மலேசியாவிற்க்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்தனர்.
இரண்டு மணி நேரப்பயணத்திற்குப் பிறகு, நாங்கள் அனைவரும் மலேசிய துறைமுகத்தை அடைந்தோம். அங்கு
எங்களைக் கனவுந்தில் ஏற்றி அங்குள்ள “ஜஸ்கோ” எனும் பேரங்காடிக்குக் கொண்டு சென்றனர். எங்களை
அங்குள்ள வேலையாட்கள் கண்ணாடிப் பேழைக்குள் அடுக்கி , என் மேல் ரிங்கேட் 60 என் ஒட்டப்பட்டது. பள்ளி
திறப்பதற்கு ஒரு மாதம் இருந்தது, எங்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்குப் புற்றிசல் போல் பேரங்காடிக்கு
வந்த வண்ணமாக இருந்தனர். ஒரு மாணவி தன் தாயாருடன் வந்து என்னைத் தன் கால்களில் அணிந்தால்,பின்
அவள் என்னை விலை கொடுத்து வாங்கி, அவள் வீட்டிற்குக் கொண்டு சென்றாள்.
காலை வெயில் என் கண்களை கூசின. யாரோ என்னைப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தனர். அவள் பெயர்
தமிழரசி. அவள் பள்ளிச் சீறுடையில் அவளின் பெயரை அறிந்து கொண்டேன். விரைவாக என்னைத் தன்
கால்களிள் அணிந்து கொண்டு பள்ளிக்கு விரைந்தாள். ஐயோ, அம்மா உடம்பெல்லாம் வலிக்கிறதே! நடக்கும்
பாதையெல்லாம் அசுத்தமாகவும் அறுவருப்பாகவும் உள்ளதே! இதில் எவ்வளவு நாள் என் பயணமோ! முதல் நாளே
வாழ்ககை் வெறுத்து விட்டது.
பள்ளி முடிந்து வீட்டை அடைந்த என் எஜமானி, என்னைக் குளியல் அறைக்குத் தூக்கிச் சென்று, ஷாம்புவால்
குளிப்பாட்டி, வெள்ளை பூசி, வெயிலில் உலர வைத்தார். நாட்கள் கடந்தன, அம்மாணவி என்னை மிகவும்
தூய்மையாக பராமரித்து வந்தாள். சக நண்பகளுடன் ஒப்பிடுகையில் நான் அதிர்ஷ்ட்டசாலி. ஏனெனில், முதல்
நாளே வாழ்ககை ் யை வெறுத்திருந்தாலும் , என் எஜமானியின் அளவிலா அன்பினாலும் , அரவணைப்பாலும் நான்
மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். இவ்வேளையில் என் குறல் என் எஜமானிக்குக் கேட்டிருந்தால் அவருக்கு என்
நன்றியைத் தெரிவிக்கிறேன்.
மகிழ்ச்சியான என் வாழ்ககை் ப் பயணத்தில் ஒருநாள்……. வருடங்கள் நகர என் எஜமானி பெரிய
மாணவியானால், நானோ அவருடைய கால்களுக்குப் பொருந்தவில்லை. அவள் புதியதாக ஒரு காலணியை
வாங்கினாள். பயன்படுத்த முடியாத நான் இன்று ஒரு இருண்ட பெட்டியில் அனாதையாக அடைப்பட்டுக்
கிடக்கிறேன்.
நான் ஒரு தொலைக்காட்சி
‘நான் தான் தொலைக்காட்சி.’ என்று கம்பீரமாக சொல்லும் நிலைமையில் நான் இப்போது இல்லை. நான்,
அழுது அழுது நொந்து போய்விட்டேன். அது மட்டும் இல்லாமல், நான் யாருமில்லாத அனாதை வேறு.
முன்பு, அந்தக் கறுப்பு நிற அலமாரி மீது கம்பீரமாக வீற்றிருந்தேன். இப்போது, சொல்லவே கவலையாக
இருக்கிறது. மிகவும் அசுத்தமாக, பயன்படாதப் பொருளாக ஆகிவிட்டேன். குப்பைத்தொட்டியில் கிடக்கிறேன்.
என்னை முதன் முதலில் ‘பூச்சோங்கில்’ உள்ள ஒரு தொழிற்சாலையில் செய்தார்கள். அதுதான் என் பிறந்த
இடமும் கூட. பிறகு நான் விற்பனைக்கு வந்தேன். வந்த சில வாரத்தில் ஒருவர் என்னை வாங்கிச் சென்றார்.
என்னை அவர் அழைத்துச் செல்லும்போது அவரின் அன்பான தொடு உணர்வு எனக்குப் பேரின்பத்தை அளித்தது.
அவர் வீட்டில் என்னை ஒரு பெரிய அலமாரி மீது வைத்தார்.
அவரும், அவர் குடும்பத்தாரும் என்னை விரும்பிப் பார்ப்பார்கள். ஆடல், பாடல், நாடகம், திரைப்படம், என
என்னைத் துருவித் துருவி பார்ப்பார்கள். நான் அனைத்திற்கும் ‘ஆமாம் சாமி’ போட்டு அவர்களுக்கு உழைத்தேன்.
மாதம் முடிந்த பின்பு மின்சார கட்டணம் ‘கிடு கிடு’ என ஏறி இருப்பதைப் பார்த்தும் அவர்கள் கவலைப் பட்டதாக
தெரியவில்லை. நானும், விசுவாசமாக உழைத்தேன். அதற்கு வேட்டு வைக்க ஒரு சம்பவம் நடந்தது.
அவனுக்குக் கோபம் வந்து விட்டது. என்னைத் தூக்கிக் கீழே போட்டான். நான், ‘படார்’ என விழுந்தேன்.
எனக்குச் செம்ம அடி. என் உறுப்புகள் சில கிழே விழுந்து சிதறின, சிறிது நேரத்தில் நான் மயங்கி விழுந்தேன்.
என்னை யாரோ எழுப்புவது போல் உணர்ந்தேன். சற்று கண்விழித்தேன். என் முதலாளிதான் என்னைத் தொட்டு
தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு மட்டும் வாயிருந்தால் அவர் மகன் செய்த சேட்டைகளை ஒன்று
விடாமல் சொல்லிருப்பேன். எனக்கு மட்டும் கை இருந்தால் அவனை ஓங்கி அடித்திருப்பேன். முடிந்தால்
போலிஸ்காரரைக் கூப்பிட்டு அவனைச் சிறைக்கு அனுப்பி இருப்பேன். ஆனால், ஆ…ஆ… என் கண்கள் மீண்டும்
சொருகுதே! அவனை அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்கிறேன். கடவுளிடம் சென்று வருகிறேன். பாய்,,,பாயி…
சிறுவர் முதல் முதியவர் வரை என்னை எழுதப் பயன்படுத்துகிறார்கள். என் பெயர் 2B. என்னைப் பொதுவாக
பென்சில் என்று குறிப்பிட்டாலும் எனக்குச் சிறப்பாகப் பல பெயர்கள் இருக்கின்றன. அவை ஸ்தெட்லர், பைலெட்
போன்றவையாகும்.
நான் ஜெர்மனி நாட்டுத் தொழிற்சாலை ஒன்றில் பிறந்தேன். என்னைப் போலவே அயிரக்கணக்கானாவர்கள்
அங்கே தயாராகி உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் அங்கிருந்து கப்பல் வழியாக
பினாங்குத் துறைமுகத்தை வந்தடைந்தேன்.
ஒரு வியாபாரி என்னையும் என் உடன் பிறப்புகளையும் வரவழைத்திருந்தார். எங்களை அவரது கடைக்கே
கொண்டு வந்து வாடிக்கையாளார்களிடம் பேரம் பேசி விற்று விட்டார்.மலாக்காவிலுள்ள ஒரு கடையில் பல
நண்பர்களுடன் சேர்த்து விற்பனைக்கு வைத்துவிட்டார். பல இனத்தவர்கள் அன்றாடம் எங்களைப் பார்த்துப்
பூரிப்படைவர்.
ஒரு நாள் திரு.சுரேஷ் என்னை வாங்கி தன் மகன் பாலாவிற்குப் பரிசாகக் கொடுத்தார். பாலா என்னை மிகவும்
மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.ஒவ்வொரு நாளும் என்னைப் பயன்படுத்துவார். என் பசிக்கு உணவாக
அவ்வப்போது மை கொடுப்பார். ஒரு நாள் சிவா கவனக் குறைவாக என்னைத் தன் மேசை மீது வைத்து விட்டு
வெளியே சென்று விட்டார். அவ்வமையம் தற்செயலாக அங்கு வந்த பாலாவின் தம்பி மேசை மீதிருந்த புத்தகத்தை
எடுக்க முயன்ற போது நானும் அதோடு உருண்டு வந்து கீழே விழுந்தேன். அவ்வளவுதான் என் உடம்பில் பல
காயங்கள் ஏற்பட்டு நான் விகாரமாகக் காட்சியளித்தேன். பாலா என்னைப் பார்த்து முகம் சுழித்தான். பெருமூச்சு
விட்டான். இன்னும் அங்கேயே கேட்பாரற்றுக் கிடக்கின்றேன்
அந்த மாணவியின் கைகளில் நான் தவழ்ந்து கொண்டிருந்தேன். அவள் ஒவ்வொரு பக்கமாக என்னைப்
புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னைக் கடையிலிருந்து வாங்கிய நாள் முதல் அவளுக்கு ஓய்வு
நேரங்களில் துணையாக நான் மட்டுமே இருந்தேன்.
மலேசியாவின் தலை சிறந்த எழுத்தாளரான திரு அருணன் அவர்களின் கற்பனையில் நான் மலர்ந்தேன். நான்
சிறுவர்களுக்கான நீதிக் கதைகள் எனப் பெயரிடப்பட்டேன்.என்னுடலில் மொத்தம் 81 பக்கங்கள்
பதிக்கப்பட்டிருந்தன.
ஒரு நாள் அக்கடைக்கு ஒரு மாணவி தன் தாத்தாவுடன் வந்திருந்தாள். அவள் அங்குள்ள புத்தகங்களை
எல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் இவளாவது என்னை வாங்குவாளா என்ற ஏக்கப் பெருமூச்சுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்திற்குப் பின் என்னை எடுத்துச் சென்று அவள் தாத்தாவிடம் என்னை வாங்கித் தருமாறு கேட்டாள்.
அவள் தாத்தாவும் அதனை வாங்கித் தந்தார்.
அன்று முதல் அவள் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள். எனக்கு நெகிழி அட்டையைப் போட்டு என்
அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருந்தாள். ஒரு நாள் அவள் என்னைப் படித்துக் கொண்டிருக்கும் போது அவள்
தாயார் அவளை அழைக்கும் ஓசை கேட்டு சமையலறைக்கு ஓடினாள். அவ்வேளையில் அங்கு விளையாடிக்
கொண்டிருந்த அவளது இளைய தங்கை என்னை நோக்கி வந்தாள்.
என்னைக் கையில் எடுத்து அவள் முன்னும் பின்னும் திருப்பி பார்த்தாள். அவள் என்னை என்ன செய்யப்
போகிறாளோ என்று என் உள்ளம் படபடத்தது. நான் என் கண்களை இறுக மூடிக் கொண்டேன். அப்பொழுது யாரோ
என்னைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். “கடவுளே! கடவுளே!” என்று முணுமுணுத்தேன். அப்பொழுது
அம்மாணவியின் குரல் கேட்க மெல்ல கண் திறந்து பார்த்தேன். நல்ல வேலை! எந்த அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு
முன் அவள் என்னைத் தன் தங்கையிடமிருந்து காப்பாற்றிவிட்டாள். அன்று முதல் அவள் என்னை எங்கும் தவறவே
விடுவதில்லை. என்னைப் படித்து முடித்ததுமே மறவாமல் கண்ணாடி பேழைக்குள் வைத்துக் கண்ணை இமை
காப்பது போல் காத்து வருகிறாள்.
என் பெயர் மைனா. நான் பறவை இனத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு காட்டில் தம்பி தங்கைகளுடன் சுகமாக
வாழ்ந்து வந்தேன். நான் கருப்பு நிறமாக இருந்தாலும் பார்க்க அழகாக இருப்பேன். அழகுள்ள இடதில்தான்
ஆபத்துண்டு என்று பலர் கூறக் கேட்டிருக்கின்றேன்.
அதற்கேற்ப ஒரு நாள் நான் இரை தேடிக் கொண்டிருக்குபோது வேடன் ஒருவன் போட்ட வலையில் மாட்டிக்
கொண்டேன். அந்த வேடன் என்னை ஒரு இறைச்சிக் கடையில் விற்று விட்டான். கடை முதலாளி என்னை
கூண்டில் அடைத்து வைத்திருந்தார். என்னை மிகவும் பாசமாகப் பார்த்துக் கொண்டார். தினமும் பழமும்
தண்ணீரும் தருவார்.
கடைக்கு இறைச்சி வாங்கப் பலர் வந்து போவார்கள். அவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்பேன். நாளடைவில்
நானும் பேச ஆரம்பித்தேன். அவர்கள் கூறுவதை அப்படியே திரும்பக் கூறுவேன். எல்லோரும் என்னை
ஆச்சரியமாகப் பார்ப்பார்.சில வேளைகளில் என் முதலாளி என்னை அதட்டுவார். நான் ஏதோ தவறுதலாக
வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றேன் என்று அப்போதுதான் உணர்வேன்.
ஒரு நாள் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. என் முதலாளிக்கு என் தொல்லை தாங்க முடியவில்லை என்று
நினைக்கின்றேன். அவர் முருகப் பெருமானுக்கு காணிக்கையாக என்னை விடுவித்தார். நான் சுதந்திரமாக என்
தம்பி தங்கைகள் இருப்பிடம் தேடிச் சென்றேன். என் தம்பி “இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தாய்?” என்று
கேட்டான். நான் நடந்ததைக் கூறினேன்.அன்று முதல் நான் என் தம்பி தங்கைளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து
வருகிறேன்.
நான் ஒரு சவர்க்காரம்
‘மணமும் மனமும் மணமணக்கும் மேனி பள பளக்கும் ஆஹா என்ன அற்புதம் ! ஆஹா என்ன ஆச்சரியம்’
அனைவரின் வாயில் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் பாடலை கேட்டதும் அனைவரின் எண்ணமும் என்னை ஒரு
கணமாவது யாரென்று நினைக்கத் தோன்றும்! ..வழ வழப்பான மேனியைக் கொண்ட நான் பல ரசாயனக்
கலவைகளால் உருப்பெற்றேன். அழுக்கைப் போக்கி சுத்தத்தைப் பேணுவதில் எனக்கு நிகர் எவரும் இல்லை.
இவ்வளவு சிறப்புக் கொண்ட நான் கோலசிலாங்கூரில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தை பூர்வீகமாகக்
கொண்டவன். செம்பனை எண்ணெயிலிருந்து தயாரிக்கப் பட்ட நான் பல வடிவங்களிலும் பல பெயர்களிலும்
வெளிக்கொணரப் பட்டேன். என்னுடன் பல நண்பர்களும் உருவாக்கப்பட்டனர். கோலாசிலாங்கூரில் தயாரிக்கப் பட்ட
நான் வானூர்தி மூலம் பினாங்கு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டேன். வானூர்தியில் முதல் முறையாக ஏறியதால்
உல்லாச வானில் சிறக்கடித்துப் பறந்தது போல் இருந்தது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, நாங்கள் முத்துத் தீவில் கால் பதித்தோம். பிறகு எங்களை பல விற்பனை
மையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டோம்.நாட்கள் வாரமாகின, வாரம் மாதமாகின, அதற்கிடையில் ஒரு
பெண்மனி என்னை ரிங்கிட் மலேசியா ஐந்துக்கு விலை கொடுத்து வாங்கினார். என்னுடைய பயன்பாட்டிற்கு
எதிர்மாறாக, என்னுடைய எஜமானி என்னைப் பயன்படுத்தப் போவதாக தன் தங்கையிடம் கூறினாள். அதனைக்
கேட்ட என் மனம் பட்டாம்பூச்சிபொல்ல் படபடத்தது.
மறுநாள், என் எஜமானி என்னை அனைவரும் வியக்கும் வகையில் ஓர் அழகான கைவினைப் பொருளாக
மாற்றினாள். நான் எழில் கொஞ்சும் மெழுகுவர்த்தி வடிவிற்கு மாற்றப்பட்டேன். அப்பொழுது என்னைப் பார்க்க
இரண்டு கண்கள் போதாது என்றே தோன்றியது. என் அழகு என்னையே பிரமிக்க வைத்தது.
என் எஜமானி என்னை தனது மகனின் பிறந்த நாள் பரிசாக வழங்கினார். எஜமானின் மகளும் அந்த நொடி
முதல் என்னை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். அன்று முதல் இன்று வரை நான் அவளது
படிப்பறையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன்.அவள் தினமும் என்னைக் கவனித்துக் கொண்டே
வேலைகளைச் செய்வாள். என் நிலைமை என்ன ஆகுமோ என்று கவலைப்பட்ட நான் இன்று உயிரோடு உலாவுவதை
எண்ணி உச்சிக்குளிர்கிறேன்.
தலைப்பையொட்டி கருத்துத் துணையுடன் கட்டுரை எழுதுக.
o உருவாக்கம் / பாகங்கள்
> உருவாக்கப்பட்ட இடம், எப்பொழுது
o உரிமையாளர்
> வாங்கிச் செல்பவர் யார் ? அவரைப் பற்றியும் அவரின் குடும்பத்தைப்
o பயன்கள்
> எவ்வாறெல்லாம் பயன்படுகிறது ?
o சிறப்புச் சம்பவம்
> மறக்க முடியாத / சிறப்புச் சம்பவம்
இரும்பாலும் கண்ணாடியாலும் செய்யப்பட்ட நான் மிகவும் விலையுயர்ந்தவன். என்னைச் செய்தவுடன் ஒரு
கண்ணாடிப் பேழையில் வைத்தனர். ஒரு நாள் காலை பொழுது, தடி ஊன்றிய ஒரு வயதானவர் என்
இருப்பிடத்திற்கு வந்தார். அவரைப் பார்த்து கடை முதலாளி “ நமஸ்தே” என்று கூறினார். அவர் என்னை
அணிந்ததும் அவர் பார்வை தெளிவானது. அவர் முதலாளியிடம் பணத்தைச் செலுத்தி விட்டு வீட்டிற்குத்
திருப்பினார். எப்பொழுதும் அவரைச் சுற்றி நறைய பேர் இருந்தனர். அவரைக் காண மக்கள் வந்த வண்ணம்
இருந்தனர். காலையில் இருந்து நள்ளிரவு வரை மக்களுக்குச் சேவை ஆற்றும் இந்த மனிதர் யாராக இருக்கும்
என்று என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.
அன்று இரவு அவர் உறங்கச் செல்லும் முன், என்னைக் கழற்றி மேசையின் மேல் வைத்துவிட்டு உறங்கினார்.
நானும் களைப்பில் கண்ணயர்ந்தேன்.
என்ற பாடலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். என் எஜமான் பக்தர்களுடன் பூஜை செய்து கொண்டிருந்தார்.
அதன் பிறகு, கோயிலுக்குப் புறப்பட்டார். அவர் கோயிலை அடைந்ததும் மக்கள் “சக்குடே காந்தி!” “சக்குடே
காந்தி!” “சக்குடே காந்தி!” என்று ஆரவாரம் செய்தனர். அவர் கைகளை அசைத்த வண்ணம் நடந்தார்.
அப்பொழுதுதான் அவர் இந்திய தேசத்தின் சுதந்திர தந்தை மகாத்மா காந்தி என்று எனக்கு தெரிய வந்தது. என்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனந்தத ் ில் நான் துள்ளி குதித்தேன். என் சந்தோசம், மகிழ்சச
் ி, பூரிப்பு அதிக
நேரம் நீடிக்கவில்லை.
நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் ‘டுமீர்…!’ என்ற சத்தம் அவ்விடத்தையே அதிர செய்தது. என் எஜமான்
கீழே விழுந்தார். ‘கோட்சா’ என்ற இளைஞன் அவரைச் சுட்டு விட்டான். உலகமே அவரின் மறைவைக் கண்டு
கண்ணீர் வடித்தது. நானும் மனம் கலங்கினேன்.
இந்திய மக்களுக்கு மகாத்மா சேவையாற்றினார் என்றால் நான் அவருக்குச் சேவையாற்றினேன் என்ற
பெருமிதத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறேன்.
கருத்து 1
தேர்ந்தெடுத்தற்கான காரணம்
– நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ
கருத்து 2
தன் சமூகம் முன்னேறப் பாடுபடுதல்
– கருத்தரங்கு
கருத்து 3
ஊனமுற்றோருக்கு உதவுதல்
மகிழ்ச்சியூட்ட நிகழ்சச
் ி நடத்துதல்
அவர்களின் வாழ்ககை ் வளம் பெற உதவுதல்
முடிவுரை
இது சுலபமான காரியமல்ல
தியாக உணர்வோடு செய்ய வேண்டும்
பாரபட்சமின்றி பழகுதல்; உதவுதல்
மொழியணி
1. சோம்பித்திரியேல்
2. எண்ணுவது உயர்வு
3. இளைத்தல் இகழ்ச்சி
4. முயற்சியுடையார் இகழ்ச்சிடையார்
5. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
6. ஊருடன் கூடி வாழ்
மருத்துவரானால்
கருத்து 1
தரமான,சமமான சிகிச்சையளித்தல்
ஏழை, எளியோரிடம் பணம் வசூலிப்பதில்லை.
கருத்து 2
நோய்களைத் தடுக்கும் வழிமுறைகளையும் மருந்துகளையும் கண்டுபிடிக்க ஆராச்சிகளை
மேற்கொள்ளுதல்.
கருத்து 3
பள்ளிக்கூடங்களுக்குச் சென்று இல்வசமாகச் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்.
தன்முனைப்பு சொற்பொழிவாற்றல்
– இலட்சியத்தை உயர்வாக எண்ணுதல்.
முடிவுரை
புனிதமானது
ஒப்பற்ற பணி
இறைபக்தியுடனும் கருணையுடனும் மேற்கொள்ளுதல்.
மொழியணி
1. சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
2. உடலினை உறுதி செய்
3. ஊண்மிக விரும்பு
4. முயற்சியுடையார் இகழ்ச்சிடையார்
5. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
கோடீஸ்வரரானால்
கருத்து 1
தன் தேவையை நிறைவேற்றுதல்
விலையுயர்ந்த ஆடை அணிகள்
சிறந்த கல்வியை மேற்கொள்ளுதல்
வசதியான வாழ்க்கை வாழுதல்.
கருத்து 2
பெற்றோருக்குத் தேவையானதைச் செய்தல்.
வசதியான வீடு
பணிவிடை செய்ய ஆள் நியமித்தல்
வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்
கருத்து 3
ஏழை, எளியோருக்கான சிறுத்தொழில் திட்டம் ஏற்படுத்துதல்.
குடிசைகள் இல்லாமல் வசதியான வீடுகள் கட்டித் தருதல்.
ஏழைப் பிள்ளைகளின் கல்விச் செலவைத் தாமே ஏற்றுக் கொள்ளுதல்.
நாடு முன்னேறத் தோள் கொடுத்தல்.
வருங்காலச் சந்ததியினருக்குச் சேர்த்து வைத்தல்.
முடிவுரை
அனைத்தும் செய்தல்
இறைவன் துணை புரிதல்
முயற்சியோடு உழைத்தல்.
மொழியணி
1. மாதா, பிதா, குரு, தெய்வம்
2. எழுத்தறிவித்தவன் இறைவனாவான்.
3. பேரும் புகழும்
4. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
இனிய சொற்றொடர்
1. ஒளிமயமான எதிர்காலம்
2. மெழுகுவர்த்திப் போல் தன்னை வருத்திப் பிறருக்கு ஒளி கொடுத்தல்.
உருவத்தை மறைக்கும் ஆற்றல் கிடைப்பது அரிதாகும்.அவ்வாறு கிடைத்தால் அரிய பல காரியங்களைச் செய்ய
முடியும். உருவத்தை மறைக்கும் ஆற்றலைக் நற்காரியங்களுக்குப் பயன்படுத்துவதே சிறப்பாகும். .தீமையான
செயலுக்கு அவ்வாறான ஆற்றலைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறாகும்.எனக்கு அப்படியோர் ஆற்றல்
கிடைத்தால் சொல்லாலான மகிழ்ச்சியடைவேன்.
இவ்வுலகில் இன்று பல குற்றச்செயல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.பெரியவர் முதல் சிறியோர் வரை பல
தீமை தரும் செயல்களைச் செய்து வருகின்றனர்.இதனால் பொது மக்களுக்கும் நாட்டுக்கும் பல இடையூறுகள்
ஏற்படுகின்றன.எனக்கு உருவத்தை மறைக்கும் ஆற்றல் கிடைத்தால் இவற்றைத் தடுக்க முயற்சி செய்வேன்.
உருவத்தை மறைக்கும் ஆற்றல் கிடைப்பது அரிதாகும்.அவ்வாறு கிடைத்தால் அரிய பல காரியங்களைச் செய்ய
முடியும். உருவத்தை மறைக்கும் ஆற்றலைக் நற்காரியங்களுக்குப் பயன்படுத்துவதே சிறப்பாகும். .தீமையான
செயலுக்கு அவ்வாறான ஆற்றலைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறாகும்.எனக்கு அப்படியோர் ஆற்றல்
கிடைத்தால் சொல்லாலான மகிழ்ச்சியடைவேன்.
இவ்வுலகில் இன்று பல குற்றச்செயல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.பெரியவர் முதல் சிறியோர் வரை பல
தீமை தரும் செயல்களைச் செய்து வருகின்றனர்.இதனால் பொது மக்களுக்கும் நாட்டுக்கும் பல இடையூறுகள்
ஏற்படுகின்றன.எனக்கு உருவத்தை மறைக்கும் ஆற்றல் கிடைத்தால் இவற்றைத் தடுக்க முயற்சி செய்வேன்.
உலகில் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு தொழிலைத் தங்கள் வாழ்ககை
்
இலட்சியமாக கொண்டிருப்பர். அத்தகைய கனவுகளில், அவர்கள் பலவாறாக மிதந்திருப்பர். அத்தகைய கனவு
நனவாகும் போது, வாழ்வே அவர்களுக்கு வெளிச்சமாகிறது. அப்படிப்பட்ட ஒரு கனவு எனக்கும் உண்டு. நான் ஒரு
மருத்துவரானால்……….
எனக்கு இத்தகைய கனவு தோன்றுவதற்கு முக்கியக் காரணமாய் இருப்பவரே என் மாமா டாக்டர் மதியழகன்
தான். மிகப் பெரிய வீடு, அழகான நவீன வாகனம், சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு
போன்றவற்றைக் காணும் போது, நானும் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்ற வைராக்கியம் என்னும் உறுதி
பெற்றுக் கொண்டே வருகிறது.
நான் ஒரு மருத்துவரானால், முதலில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவேன். பல்வேறு தரப்பட்ட
நோயாளிகளுடன் பழகி, அவர்களின் பிரச்சினையைக் கண்டறிவேன். அவர்களை அன்பாக விசாரித்து,
நோய்க்கேற்ற மருந்து கொடுப்பேன். அவர்களிடம் நல்ல பெயரைச் சம்பாதிப்பேன். கைராசிக்கார மருத்தவர் என
அனைவரும் போற்றும் வண்ணம் நடந்து கொள்வேன்.
அடுத்து, நான் சொந்தமாக ஒரு மருத்துவ மையம் திறப்பேன். அது ஒரு நிபுணத்துவ மையமாக இருக்கும்.
அங்குப் பலவித நோய்களுக்கும் நிபுணர்கள் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்வேன். ஏழைகளுக்கு அங்குச்
சிறப்புக் கழிவில் மருத்தவ வசதிகள் கிடைக்கச் செய்வேன். மிக ஏழைகளாக இருப்பின், இலவச மருத்தவ
வசதிகள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்வேன். என் மருத்துவ நிபுணத்துவ மையத்தில், பல சிறந்த
மருத்துவர்களை வேலைக்கு அமர்த்துவேன்.
நான் ஒரு மருத்துவரானால் பள்ளிகளுக்கு இலவச மருத்தவ பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வேன். கண்,
பல், தோல் இன்னும் ஏனைய பிரச்சினைகள் உள்ள மாணவர்களுக்கு இலவச மருத்தவ வசதிகள் வழங்குவேன்.
நான் சொந்தமாக அறவாரியம் ஒன்றை நிறுவி, இத்தகைய மாணவர்கள் இலவச மருத்தவ வசதிகள் பெறுவதை
உறுதி செய்வேன்.
நான் ஒரு மருத்துவரானால், என்னை உயர்த்திய சமுதாயத்தையும் மறக்க மாட்டேன். என் அறவாரியத்தின் வழி,
பள்ளிக்கூடம், கோயில் போன்றவற்றிற்கு என்னால் ஆன உதவிகளைச் செய்வேன். மேற்படிப்பை மேற்கொள்ள
முடியாத ஏழை மாணவர்களுக்கு, என் அறவாரியத்தின் வழி கல்வி உபகாரச் சம்பளம் வழங்குவேன். அவர்களும்
என் போல் மருத்துவர்களாகி, என் வாழ்ககை
் யில் உயர உதவி புரிவேன்.
நான் ஒரு மருத்துவரானால் என் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வேன். என்னுடைய கனவு
நிறைவேற கடுமையாக படிப்பேன். என் கனவுக்கான பாதை கல்வியே என நான் உணர்வேன். எனவே, கல்வியில் என்
முழுக்கவனத்தையும் கல்வியில் செலுத்தி வருகிறேன்
எனக்கு மந்திரக்கோல் கிடைத்தால், முதலில் என் தாயாரின் நோயைப் போக்குவேன். சில காலமாகவே என்
தாயார் ஏதோ ஒரு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
என்னைப் பெற்று வளர்த்த பேசும் தெய்வம் பழைய நிலையை அடைந்து, மீண்டும் எங்களிடம் கலகலப்பாகப் பழக
இம்மந்திரக்கோலைப் பயன்படுத்திக் கொள்வேன்.
அடுத்து, ஓர் அழகான பெட்டியை வாங்குவேன். அப்பெட்டியில் எப்பொழுதும் பணம் நிறைந்திருக்குமாறு
பார்த்துக் கொள்வேன். பணம் குறையும் போதெல்லாம் மந்திரக்கோலைக் கொண்டு பணத்தை நிரப்புவேன்.
அதனால் என் குடும்பம் வறுமைப் பிடியின் கோரத்திலிருந்து மீளும். மிகப்பெரிய வீடு, அழகான கார் போன்றவற்றை
வாங்கிக் கொள்வோம். ஏழைகளாக உள்ள எங்கள் உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்களுக்கும் பண உதவி
செய்வேன்.
தற்போது நம் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் போன்ற தீயச்செயல்கள் தலைவிரித்து
ஆடுகின்றன. எனக்கு மந்திரக்கோல் கிடைத்தால் இத்தகைய குற்றங்கள் புரியும் பாதகர்களை நானே
தண்டிப்பேன். என் மந்திரக்கோலை அனுப்பி, அவர்களை ஆசை தீர அடிக்குமாறு சொல்வேன். அவர்கள் தவறு
செய்யும் போதெல்லாம், என் மந்திரக்கோல் அவர்களைத் தண்டிக்குமாறு சொல்வேன். இதன் மூலம், நாட்டில்
நடக்கும் தவறான செயல்களைக் களைவதில் நானும் பங்காற்ற முடியும்.
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஓர் ஆசை இருக்கும். அதே போல் எனக்கும் ஓர் சிறிய ஆசை உண்டு. அது
என்னவென்றால் நான் விரும்பும் ஓர் அதிசய மிதிவண்டியை உருவாக்குவதுதான்.மிதிவண்டியை அனைவருக்கும்
பிடிக்கும். ஆனால், நான் ஒரு விநோத மிதிவண்டியை உருவாக்க விரும்புகிறேன். அம்மிதிவண்டியைப் பற்றி
அனைவரும் பேசுவர். அம்மிதிவண்டிக்கு பல விநோதத் தன்மைகள் இருக்கும்.
நம் நாடு துரித வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நாடு. பிற நாடுகளுக்கு ஈடாக நமது நாடும் தகவல் யுகத்திற்கு
ஏற்ப மாற்றங்கண்டு வருகிறது. எல்லாத்துறையிலும் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி கண்டு
வருகிறது. இவ்வேளையில் எனக்குப் பேசும் ஆற்றல் கொண்ட மடிக் கணினி ஒன்று கிடைத்தால் எப்படி இருக்கும்?
முதலில் அக்கணினி ஒரு தானியங்கியாகச் செயல்படும். நான் கல்வி தொடர்பாகப் பெற விரும்பும்
தகவல்களைக் கேட்டவுடனேயே, அது ஒப்புவிக்கும். போதுமான ஆதாரங்களுடன் விளக்கமளிக்கும். எழுத்து
வடிவில் பெறும் தகவலை விட அதன் பேசும் சக்தியால் கேட்கப்பெறும் தகவல் எனக்கு மட்டும் அல்ல என்னைச்
சார்ந்தவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், அக்கணினியை எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க நான் பயன்படுத்துவேன். தினசரி நான் கற்கும்
பாடங்களை அது ஒப்புவிக்கும். பாடத்தில் எழும் சந்தேகங்களைக் கணினி திரை காட்சியில் எனக்கு மேலும்
விளக்கப்படுத்தும். இதன் வழி எனது கல்வித் திறனை நான் மேம்படுத்திக் கொள்வேன். தொடர்ந்து
அக்கணினியின் வழி நமது சான்றோர்களான திருவள்ளுவர், ஔவையார், பாரதியார் போன்றோர் இயற்றிய
செய்யுள்களையும் கவிதைகளையும் முறையாக உச்சரிக்க வைத்து நானும் முறையாகக் கூறிப் பழகுவேன்.
அத்தோடல்லாமல் பிற மாணவர்களும் அதன் பயன் பெற்று இன்புற வழி வகுப்போம்.
பள்ளி மாணவர்களும் என் பேசும் ஆற்றல் கொண்ட மடிக் கணினியால் மகிழ வேண்டும் அல்லவா? அதனால்
என் மடிக் கணினியைக் கொண்டு விடுகதைகள், குறுக்கெழுத்துப் போட்டி, புதிர்போட்டி போன்ற
மொழிவிளையாட்டுகளை நடத்துவேன். என் மடிக் கணினி கேள்விகள் கேட்க மாணவர்கள் பதில் அளிப்பார்கள்
அல்லது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என் மடிக் கணினியும் பதில் அளிக்கும். இதன் மூலம் மாணவர்கள்
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தும் தரும். இத்தகையப் பயன் மிக்க மடிக் கணினி
கிடைக்குமென நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி கிடைத்தால் …
இப்பூவுலகில் மனிதன் இறப்பதும் பிறப்பதும் இயற்கையே! இருந்த போதும் இறப்பை ஏற்க மனம்
விரும்புவதில்லையே என்று எண்ணுகையில் எனக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கிடைத்தால்
எப்படியிருக்கும் என்று தோன்றியது.
ஒருகால் எனக்கு இச்சக்தி கிடைத்தால் இறப்பைத் தடுத்து நிறுத்துவேன். இதனால் அன்பான பல உள்ளங்கள்
மனம் வருந்தி வாழ்வதை என்னால் மாற்றி அமைக்கும் சந்தர்ப்பம் கிட்டும். குடும்பத்தினர், உற்றார் உறவினர்,
நண்பர்கள், பொது மக்கள் அனைவரையும் இறவாமல் உயிர்ப்பித்துக் கொடுப்பேன். இதன் வழி தனித்து வாழும்
தாய்மார்கள் இல்லாமல் செய்வேன்.
இந்தச் சக்தியைக் கொண்டு நான் நமது தெய்வப் புலவரான திருவள்ளுவரை உயிர்ப்பிப்பேன். தமிழ் கூறும்
நல்லுகுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கே பொதுவான திருக்குறளை எழுதிய இவரை அனைவரும் பார்க்கும்
பாக்கியத்தைப் பெற்றுத்தருவேன். அவரைப் பல கருத்தரங்குகளில் உரையாற்றி மக்கள் மனதில் வன்மம்,
முறையற்ற சிந்தனை போன்றவற்றை வேருடன் அழிப்பேன்.
மொழி, இனம் என்று மட்டும் இல்லாமல் மனித நேயத்தையும் மனதில் கொண்டு அன்னை திரேசா
அவர்களையும் உயிர்ப்பிப்பேன். ‘உயிர்களிடத்தில் அன்பை வை’ எனும் தத்துவத்தை உணர்த்தியதோடல்லாமல் மனித
நேயத்திற்குத் தாயாக விளங்கிய அந்த அன்னைக்கு இறப்பே இல்லை என்பதனை மக்களுக்கு உணர வைப்பேன்.
அன்னை திரேசா அவர்களை உலகின் அனைத்துப் பகுதிக்கும் அழைத்துச் சென்று மக்கள் மனதில் மனித
நேயத்தை விதைப்பேன். இவ்வளவும் செய்யும் அந்த அன்னைக்கு நான் சேவை செய்பவனாகவும் விளங்குவேன்.
இப்படி ஒரு சக்தி கிடைக்கும் என்று நானும் காத்திருக்கிறேன்.
முடிவு
திரும்புதல்
அடைந்த நன்மைகள்
தயாரித்தவர்
கையொப்பம்
முழுப்பெயர்
பதவி
பள்ளிப்பெயர்
வலப்பக்கம்- அறிக்கை தயாரித்த திகதி
மொழியணி
1. உச்சிக் குளிர்தல்
2. அருமை பெருமை
3. கிணற்றுத்தவளை
பரிசளிப்பு விழாஅறிக்கை
தேசிய வகை தமிழ்பப் ள்ளி பத்தாங் மலாக்கா
இவ்விழாவில் அசகான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ திரு.ஆர்.பெருமாள் அவர்களும், மாவட்ட கல்வி அதிகாரி
அவர்களும்,தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் பெற்றோர்களும்சிறப்பு
வருகையாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பரிசு பெறும் மாணவர்களின் பெற்றோர்களும்
அழைக்கப்பட்டிருந்தினர்.
அறிக்கை தயாரிப்பு,
7 நவம்பர் 2012
…………………………
( கவிதன் த/பெ மணிவண்ணன் )
செயலாளர்,
தேசிய தினக் கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழு
தேசிய வகை தமிழ்பப் ள்ளி பத்தாங் மலாக்கா
பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி
கடந்த 30.7.2011 வெள்ளியன்று பத்தாங் மலாக்க தமிழ்பப் ள்ளியில் சிற்றுண்டி தினம் சிறப்பாக
நடைந்தேறியது.பள்ளியிலுள்ள எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றுமின்றி பெற்றோர்களும் இச்சிற்றுண்டி
தினம் சிறப்பாக நடைப்பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கினர்.
ஒருவாரத்திற்கு முன்பே ஆசிரியை கமலம் கூப்பன்களைத் தயாரித்து எல்லோரிடமும் விற்பனைச் செய்தார்.
அன்றைய தினம் அனைவரும் பணத்திற்குப் பதிலாகக் கூப்பன்களையே பயன்படுத்த வேண்டும். சிற்றுண்டி
தினத்தன்று ஆசிரியர்களும், மாணவர்களும் நிறைய உணவுகளைச் சமைத்து எடுத்து வந்திருந்தனர். எட்டு உணவு
கூடாரமும் இரண்டு கேளிக்கை விளையாட்டுக் கூடாரமும் அமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கூடாரத்திற்கும் இரண்டு பொறுப்பாசிரியர்களும் பத்து மாணவர்களும் நியமிக்கப்பட்டனர்.
உணவுகள் ஒவ்வொரு கூடாரத்திற்கு ஏற்ப தனித் தனியே வகைப்படுத்தப்பட்டன. அவை கோழி சம்பல்,’நாசி
ஆயாம்’,’நாசி லேமாக்’, தோசை, இட்டிலி, விரைவு உணவான ‘பெகர்’, ‘நாகெட்’, ’ஹொட் டோக்’, குளிர் பானங்கள்,
மற்றும் பழங்களும் உள்ளடங்கும். உணவுகள் மிக சுத்தமாகவும் மற்றவை ஈர்க்கும் வண்ணமுமாய் இருந்தது. விலை
பட்டியலும் ஒட்டப்பட்டியிருந்தது.
பல மாணவர்கள் விரைவு உணவுகளை அதிகமாக வாங்கி உண்டனர். ஏனென்றால், அவ்வுணவு சுடசுட
பொரித்துத் தரப்பட்டது. இருப்பினும், ‘நாசி ஆயாம்’, ‘நாசி லேமாக்’ போன்றவற்றை அதிகமானோர் விரும்பி
வாங்கினர். குளிர் பானங்கள் பல வர்ணங்களில் மாணவர்களை ஈர்ககு ் ம் வண்ணம் இருந்ததால், மாணவர்கள்
விரும்பி வாங்கினர்.
கையொப்பம்
செயலாளர்,
ஆசீர்வாதம் பெறுதல்.
முடிவுரை
ஆசிரியர்கள் மென்மேலும் சிறப்பாகப் பணியாற்றிட இறைவனைப் பிரார்தத
் ித்தல்
விடைபெறுதல்.
மொழியணி
1. மாதா, பிதா, குரு, தெய்வம்
2. எழுத்தறிவித்தவன் இறைவனாவான்.
3. பேரும் புகழும்
4. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
இனிய சொற்றொடர்
1. ஒளிமயமான எதிர்காலம்
2. மெழுகுவர்த்திப் போல் தன்னை வருத்திப் பிறருக்கு ஒளி கொடுத்தல்.
செந்தமிழே வாழ்க!
எந்தமிழர் வாழ்க !
மாணவர்களே,
இன்று மே 16. நமக்குக் கல்விக் கண்களைத் திறந்து வைக்கும் ஆசிரியத் திலகங்களைக்கு நாம் நன்றிக்
கடன் செலுத்தும் இனிய ஆசிரியர் தினநாள். முதலில் இத்தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை நாம்
சிந்தித்துப் பார்கக
் வேண்டும். ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நம்மை, ஒரு புத்தகமாய்
வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி, நம் பாதையில்
வெளிச்சங்களைப் பாய்ச்சும் தெய்வங்கள் அவர்கள். அப்படிப்பட்ட தெய்வங்களை நாம் பூஜிக்கும் நாளே இந்த
ஆசிரியர் தினம்.
என்றார் திருவள்ளுவப் பெருகமனார். அப்படிப்பட்ட சிறந்த மனிதராக, மனித நெறிப்படி வாழ வழிகாட்டுபவர்கள்
ஆசிரியர்கள். அவர்களுக்கான, இத்தினத்தைத் கொண்டாடுவது நமக்கல்லவோ பெருமை.
இறுதியாக, நான் விடைபெறும் முன் மீண்டும் உங்கள் அனைவருக்கும் மாணவர்கள் சார்பில் என் அன்பான
ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
அவையோர்களே,
நாளைய தலைவர்களே,
அறிவுக்களஞ்சியங்களே,
“ ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா ” என அன்றே பாரதியார் பாடியுள்ளார். உடல்
நலத்தைப் பேண விளையாட்டு ஒரு முக்கியமானதாக விளங்குகிறது. புறப்பாட நடவடிக்கையில் விளையாட்டில்
கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் உடலை உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஆரோக்கியமாக வாழ
உடற்பயிற்சி முக்கியம் என சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி,
மாணவர்கள் நேரத்தை நல்வழியில் செலவிடவும், அவர்கள் விளையாட்டில் தங்களின் திறனை வெளிப்படுத்தவும்
முடிகிறது. உதாரணமாக, நமது நாட்டு பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சொங் வே ஒரு நேர்காணலில் தனது
இந்த வெற்றிக்குக் காரணம் தனது சிறுவயதிலிருந்தே புறப்பாட நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டதுதான் எனக் கூறினார்.
அன்பார்ந்த மாணவர்களே,
நன்மைகள் தீமைகள்
மனத்திற்கு மகிழ்சச
் ியைத் தருகின்றன
பல விவரங்களை அறிய முடிகிறது.
– எ.கா:- மக்கள் தொலைக்காட்சி
முடிவு
கரையானை அடையாளங்கண்டு அழித்தால்தான் வீட்டையாவது விட்டு வைக்கும்.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அன்னப்பறவைப்போல் நல்லதை மட்டும் பார்த்து, தீயவற்றை ஒதுக்குதல்.
மொழியணிகள்
1. வருமுன்னர்க் காவாதான் வாழ்ககை
் எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (435)
மகிழ்சச
் ி / பெருமை
ஓடி வந்த நாய்க்குட்டியை அணைத்து முத்தமிட்டான். தன் நாயிடம் விளையாடிக் கொண்டே இரண்டு வாரத்திற்கு
முன்பு நடந்ததை நினைக்கலானான்.
இரவு நிலாவின் வெளிச்சம் கிராமத்துக்கே ஒளி தந்தது. ரவியும் மாலனும் ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிக்
கொண்டிருந்தனர்.
எழுந்து காலைக் கடன்களை முடிந்த ரவியும் மாலனும் முதல் வேளையாக அத்தெருவில் இருந்த நாய்க்குட்டிக்கு
உணவை கிராமத்திலுள்ள கிணறுவரை போட்டுக் கொண்டே சென்றனர்.
இதுதான் சமயம் என்று எண்ணிய இருவரும் ‘லபக்’ என்று பிடித்தனர். தங்களின் வலையின் மாட்டிய
நாய்க்குட்டியைப் பார்த்துச் சிரித்தனர்.
‘தொப்’ என்ற ஓசை. நாய்க்குட்டி நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவர்களோ, “ இன்றோடு
தொல்லை ஒழிந்தது,” என்றனர்.
“ என்ன சத்தம் ” என்று மெல்ல சிந்தித்துக் கொண்டே சத்தம் நோக்கிய இடத்திற்கு நடை போட்டான்.
“குளிருதா! இரு உன்னை வெளியே எடுக்கிறேன்.” என்று கூறியவன் வாலியை எடுத்து அக்கிணற்றுக்குள்
நுழைத்துக் காப்பாற்றினான்.
காலை மணி 7.00 க்கு பேருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு ‘குனோங் லேடங்கை’ நோக்கி சிட்டாய்
பறந்தது. “டேய் ராமு, எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்குடா. இந்த வாய்ப்புக்காக நான் ரொம்ப நாளா
காத்திருந்தேன்,” என்று முகம் மலர பாலன் ராமுவிடம் கூறினான்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு குனோங் லேடாங்கின் பசுமையான காட்சி மாணவர்களின் மனதை
ஈர்த்ததோடு கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. மாணவர்களின் மனதில் மகிழ்சச ் ி பொங்கியது. சற்றும்
நேரத்தை ஆறப் போடாமல் பேருந்திலிருந்து கீழே இறங்கினர். ஆசிரியர் திரு மோகன் சாரணர் முகாமிற்கான
விதிமுறைகளைத் தெள்ள தெளிவாக விளக்கினார். மாணவர்கள் அனைவரும் பொறுமையாகச் செவிமடுத்தனர்.
குனோங் லேடாங் மலையை ஏறுவதற்கு அனைவரும் தயார் நிலையில் இருந்தனர். ஆசிரியர், “மாணவர்கள்
அனைவரும் வரிசையாக என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். கவனம் தேவை. வழி தவறினால் மிகவும்
கஷ்டமாக இருக்கும்,” என்று அறிவுரை கூறினார். மாணவர்கள் எறும்பைப் போல் வரிசையாக ஆசிரியரைப் பின்
தொடர்ந்தனர். செல்லும் வழியில் மாணவர்கள் வண்டுகளின் ரீஙக
் ாரமிடும் ஓசைகளையும் பறவைகளின் கீசச
் ிடும்
ஓசைகளையும் கேட்டு மெய் மறந்தனர்.
ஓர் அழகிய பறவையைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராமு, சோமு, பாலன் ஆகிய மூவரும்
தங்கள் குழுவிலிருந்து பிரிந்து வழியைத் தவறிவிட்டனர். நடுக்காட்டில் என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்தனர். “ஐயோ! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! ” என்று மூவரும் கூச்சலிட்டனர். உடனே, பாலனுக்கு ஒரு
யோசனை வந்தது. தன் கால் சட்டை பையிலிருந்து தான் கொண்டு வந்த கைத்தொலைபேசியை வெளியே
எடுத்தான். சோமுவும் ராமுவும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தனர். “டேய், யாரோட டெலிபோன் இது? எப்படி நீ
எடுத்துட்டு வந்தே?” என்று பாலனை நோக்கி ராமு வினவினான். “சும்மாதான் எடுத்துட்டு வந்தேன். இது
என்னோடதான்,” என்றான். உடனே பாலன் கைத்தொலைபேசியின் மூலம் ஆசிரியரைத் தொடர்புக் கொண்டான்.
நடந்தவற்றைக் கூறினான். ஆசிரியரின் வழிக்காட்டலின் படி அம்மூவரும் வழியைத் தேடிச் சென்றனர்.
சிறிது நேரத்தில் தங்களின் சக நண்பர்களையும் ஆசிரியரையும் கண்டனர். அம்மூவரும் உச்சிக் குளிர்ந்தனர்.
ஆசிரியர் அறிவுரை கூறினார். அம்மூவரும் ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டனர். பிறகு மீண்டும் அவர்களின்
பயணம் தொடர்ந்தது. மலை உச்சியை அடைந்து முகாமை மேற்கொண்டனர். பிறகு, இரண்டு நாட்கள் கழித்து
குனோங் லேடாங்கிற்கு விடை கொடுத்துவிட்டு இல்லம் திரும்பினர்.