You are on page 1of 511

வாக்கியம்

1. கட்டு
என் அம்மா பழைய புத்தகங்களைக் கயிற்றால் கட்டி நிலைபேழையின்
மேல் வைத்தார்.

2. காட்டு
மணி முதியவரிடம் தபால் நிலையத்திற்குச் செல்லும் வழியைக்
காட்டினான்.

3. கடி
அந்த நாய் தனக்கு உணவாக கொடுத்த எலும்பைக் கடித்துத் தின்றது.

4. காடி
என் அம்மா உணவு உண்ணும் போது காடித் தன்மை கொண்ட
ஊறுகாயை உணவில் சேர்த்துக் கொண்டார்.

5. கடை
தயிரை மத்தைக் கொண்டு நன்கு கடைந்தால் தரமான வெண்ணை
கிடைக்கும்.

6. காடை
காடையின் சிறுசிறு முட்டைகளை என் அம்மா உண்பதற்கு அவித்துக்
கொடுத்தார்.

7. கண்
முத்துவின் கண் பார்வை தெளிவில்லாததால் அவன் மூக்குக்
கண்ணாடி அணிந்தான்.

8. காண்
தேசிய தின கொண்டாட்டத்தைக் காண்பதற்கு மக்கள் அனைவரும்
“மெர்டேக்கா” சதுக்கத்தில் ஒன்று கூடினர்.

9. கணி
முத்து அப்புட்டியில் சுமார் இருபது மிட்டாய்கள்தான் இருக்கும் என
கணித்தான்.

10. காணி
அந்த விவசாயி காணியை ஏர் பூட்டி உழுதார்.

11. கதலி
கதலியின் இலையில் உணவு உண்பது தமிழர்களின் பண்பாடாகும்.

12. காதலி
என் அக்காள் காதலித்த அந்த இளைஞரையே திருமணம் செய்து
கொண்டார்.

13. கந்தம்
என் அம்மா பூசை அறையில் ஏற்றி வைத்த அகர்பத்தி மற்றும்
சாம்பிராணியின் கந்தம் வடு
ீ முழுதும் பரவியது.

14. காந்தம்
உலோக பொருட்களை காந்தம் தன் வசம் இழுத்துக் கொள்ளும்.
15. கந்தன்
தைப்பூச திருவிழாவின் போது பக்தர்கள் கந்தனுக்கு காவடியைக்
காணிக்கையாக செலுத்தினர்.

16. காந்தன்
காந்தனை மதித்து வாழத் தவறுவதால் இன்று பல மனைவிமார்கள்
இல்லற வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.

17. கப்பு
அந்த உயர்ந்த மரத்தின் கப்புகளில் குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து
வந்தன.

18. காப்பு
என் அம்மா தங்கத்தால் ஆன காப்புகளைத் தன் இரு கைகளிலும்
அணிந்திருந்தார்.
19. கட்டி
அதிக குளிரினால் தெந்துருவ பகுதிகளில் நீர் நிலைகள் கட்டி, பனி
பாறைகளாக காட்சியளிக்கின்றன.

20. காட்டி
அச்சிறுவன் நோயாளி ஒருவருக்கு மருத்துவமனை செல்லும்
வழியைக் காட்டினான்.

21. கம்பு
அவ்விவசாயி தம் பயிரை நாசம் செய்த ஆடு மாடுகளைக் கம்பால்
அடித்து விரட்டினார்.

22. காம்பு
ரோஜா மலரைப் பறிக்கும் போது அதன் காம்பில் இருந்த முட்கள் என்
கையைக் காயப் படுத்தின.

23. கயம்
அதிக வறட்சியின் காரணத்தால் கயத்தில் இருந்த நீர் வற்றிப்போனது.

24. காயம்
சாலை விபத்தில் பலத்தக் காயம் அடைந்த அச்சிறுவனை
மருத்துவமனையில் சேர்த்தனர்.

25. கரணம்
கேளிக்கை மையத்தில் கோமாளிகள் பல கரணங்களைப் போட்டு
மக்களின் மனதை கவர்ந்தனர்.

26. காரணம்
வட்டுப்பாடத்தைச்
ீ செய்யாமல் பல காரணங்களைக் கூறிய
மாணவனை ஆசிரியர்
தண்டித்தார்.

27. கரம்
நாம் இரு கரங்கள் கூப்பி இறைவனை மனமுருக வணங்க வேண்டும்.

28. காரம்
மிளகாய் சாந்து அதிகமாக சேர்க்கப்பட்ட குழம்பு மிகவும் காரமாக
இருந்தது.

29. கரை
பாலன் கடலின் கரை ஓரத்தில் அமர்ந்து அழகான மணல் வடு

கட்டினான்.

30. காரை
கொத்தனர்கள் அவ்வட்டின்
ீ தூண் உறுதியாக இருப்பதற்குக் காரையைப்
பயன்படுத்தினர்.

31. கல்
அந்த சிறுவன் கல்லை கவணில் வைத்து அப்பறவையைக் குறி
வைத்து அடித்தான்.

32. கால்
அந்த நாட்டியமணி கால்களில் சலங்கைகளை அணிந்து நாட்டியம்
ஆடினாள்.

33. கலம்
கொதித்த தண்ண ீரை என் அம்மா கலத்தில் ஊற்றி ஆற வைத்தார்.

34. காலம்
அம்முதியவர் தமது இறுதி காலத்தை முதியோர் இல்லத்திலேயே
கழித்தார்.

35. கலை
அறுபத்து நான்கு கலைகளுள் பரதமும் ஒன்று.

36. காலை
காலையில் சூரியன் தோன்றியவுடன் பனி மெல்ல மறையத்
தொடங்கின.

37. கவி
பாரதியார் சமூகத்திற்குக் கருத்துள்ள பல கவிகளை இயற்றினார்.

38. காவி
முனிவர்களும் குருமார்களும் பெரும்பாலும் காவி உடையில்
காட்சியளிப்பர்.

39. களி
நாங்கள் கேளிக்கை மையத்தில் கோமாளிகள் செய்த வித்தைகளைக்
கண்டு களித்தோம்.

40. காளி
ஒவ்வொரு செவ்வாய்கிழமையன்றும் முத்து கோயிலுக்குச் சென்று
காளியை வணங்குவான்.

41. குகை
ஆதிகால மனிதர்கள் கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக வாழ
குகையைத் தங்களின் இருப்பிடமாக தேர்ந்தெடுத்தனர்.

42. கூகை
இரவு நேரத்தில் கூகைகள் அலறின.

43. கிரி
முருக பெருமானின் திருத்தலங்கள் பொதுவாக கிரியில்தான்
அமைந்திருக்கும்.

44. கீ ரி
கீ ரி பாம்பை சண்டையிட்டு வென்றது.

45. கனல்
என் அம்மா போகி பண்டிகையின் போது பழைய பொருட்களைக்
கனலில் இட்டு எறித்தார்.

46. கானல்
அச்சிறுவன் கானல் ஓரத்தில் மணல் வடு
ீ கட்டி விளையாடினான்.

47. கனம்
என் அப்பா கனமான இரும்பு பெட்டியைத் தூக்குவதற்குச் சிரமப்பட்டார்.

48. காணம்
அந்த பாடகர் இசை நிகழ்ச்சியில் பல இனிமையான காணங்களைப்
பாடி அனைவரின் மனதைக் கவர்ந்தார்.

49. கனகம்
அந்த பொற்கொள்ளர் கனகங்களைக் கொண்டு விலையுயர்ந்த
ஆபரணங்களைத் தயாரித்தார்.

50. கானகம்
அந்த குத்தகையாளர் நெடுஞ்சாலையை அமைப்பதற்காக
கானகத்தை அழித்தனர்.

51. கற்று
ஆசிரியர் கற்றுக் கொடுத்தப் பாடத்தை மாணவர்கள் கவனமாக
படித்தனர்.

52. காற்று
பலத்த காற்றால் வட்டின்
ீ மேல் சாய்ந்த தென்னை மரம் கூரையை
சேதப்படுத்தியது.

53. களை
பயிர்களுக்கிடையே வளர்ந்திருந்த களைகளை விவசாயி பிடுங்கினார்.

54. காளை
இருத ஊர்வலத்தின் போது காளைகள் வெள்ளி இரதத்தை இழுத்துச்
செல்லும்.

55. குட்டி
வெளவால் மட்டும்தான் பறவை இனத்திலேயே குட்டி போட்டும்
பாலூட்டும் பறவையாகும்.

56. கூட்டி
என் அம்மா காய்ந்த இலைகளைத் துடைப்பத்தால் கூட்டினார்.

57. குட்டு
நான் விநாயகரைத் தரிசனம் செய்யும் போது என் இரு கைகாளாலும்
தலையைக் குட்டிக் கொள்வேன்.

58. கூட்டு
நாங்கள் கூட்டாக சேர்ந்து அத்துப்புரவு பணியை மேற்கொண்டோம்.

ஆக்கம்.
கமூண்டிங் தமிழ்ப்பள்ளி

You might also like