You are on page 1of 9

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ


சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும்
பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு சுற்றுச்சூழல்
ஆகும்.
சுற்றுச்சூழல் மாசுபடுதல்
இயற்கையமைப்பில் அமைந்துள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பை
சிறப்பாக செலுத்துகின்றன. ஆறறிவு பெற்ற மனிதன் மட்டும், தன்னை தன் சுய
லாபத்திற்காக  இயற்கையாய் அமைந்துள்ள அனைத்தையும் வரைமுறை இல்லாமல்
அழிக்கத் தொடங்கிவிட்டான். அதன் விளைவாக மனித சமூகம் இன்று சுனாமி, புவி
வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என பல பிரச்சினைகளை சந்திக்க
வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுப்பொருள்களால்
சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. காற்று மாசு படுகிறது. காடுகளும் காடுகளில்
காணப்படும் மரங்களும் வியாபார நோக்கத்தில் அழிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக,
மழை பொய்த்து போயின. பருவநிலை மாறி உள்ளது. பருவநிலை மாற்றதின் காரணமாக
பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது  தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ
இயற்கை சூழல் பாழாகாமல் பாதுகாக்கும் செயலாகும். மக்கள்தொகை மற்றும்
தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த
அரசாங்கங்கள், அரசு சாரா பொதுநல அமைப்புகள், சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான
செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. பல்வேறு
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மனித
நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது என்பது
தெளிவாக அளவிடமுடியவில்லை. சுற்றுச்சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி
மூன்றும் பின்னிப்பிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல்கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும்
சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற படிப்புகள் தற்போது பல்வேறு நிலைகளில்
வழங்கப்படுகின்றன.கழிவு உற்பத்தி, காற்று மாசுபாடு மற்றும் பல்லுயிர் இழப்பு
(நுண்ணுயிரிகளின் மற்றும் உயிரினங்களின் அழிவு) முதலியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தொடர்பான பிரச்சனைகளாகும். இப்பிரச்சனைகளுக்கு மேற்கண்ட படிப்புகள் தீர்வுகளை
தர வேண்டிய கட்டாயத்திற்க்கு உள்ளாகியுள்ளது. மேலும், அரசு பல நடவடிக்கைகளை
இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. புதிய சிந்தனை மற்றும் தொலைநோக்கு பார்வையில்
அணுகவேண்டும்.
எங்கும் எதிலும் மாசுகள் கலந்துள்ள இன்றைய உலகில் ஒன்று இதனை எதிர்கொள்ள
வேண்டும். இல்லையேல் மாசற்ற உலகினை உருவாக்க வேண்டும். இதில் இரண்டாவது
வகை சாத்தியமல்ல. ஆனால், முதல் வகை நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதனால்
அதனைக் கடைபிடிப்பது சிரமமான காரியமல்ல.  கீழ் கண்டவற்றின் மூலம் சுற்றுச்சூழலை
பாதுகாக்கவோ அல்லது பாதிப்பை குறைக்கவோ முடியும்.
1. சுத்தப்படுத்துதல் பிரச்சாரம்
2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
3. காற்று மாசுபாடு தவிர்த்தல்
4. தண்ணீர் மாசுபாடு தவிர்த்தல்
5. மரம் நடுதல் ஆகியவற்றின் மூலம் சுற்றுப்ப்புறத்தை பாதுகாக்கலாம்
“ சுவாசிக்கும் மக்கள் அனைவரும் மரம் நட வேண்டும்”
"மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால்,
மரங்களை காப்பது அவசியம்''
மரங்கள் வெளிவிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம்; நாம் வெளிவிடும் காற்றை, மரங்கள்
சுவாசிக்கின்றன. அந்த வகையில், மரங்கள் தான் நம் நுரையீரலாக செயல்படுகின்றன.
நுரையீரலை பாதுகாப்பது நமது கடமை இல்லையா? அந்த வகையில், நம்மை நாம் காத்துக்
கொள்ள, மரங்களை காப்பாற்ற வேண்டும்.
உலகிலேயே தமிழகம் தான், 12 ஆயிரம் ஆண்டுகளாக விவசாயத்தை தொடர்ந்து
தொழிலாக செய்து வரும் ஒரே சமூகம். வேறு எங்கும் இதுபோல் இல்லை. இன்று
கிராமங்களில், மற்ற எல்லாம் இருக்கிறது; ஆரோக்கியம் இல்லை. இதற்கு காரணம், நமக்கு
தேவையான சத்தான உணவுகளை பயிர் செய்யவில்லை. எலும்பு வளர்ச்சி கூட முழுமை
பெறாத அரைகுறை மனிதனாக தான் பலரும் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.
மரங்களை வளர்ப்பது நம் அடிப்படை கடமைகளில் ஒன்று என்பதை நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும். யார் யார் எல்லாம் சுவாசிக்கின்றனரோ, அவர்கள் எல்லாம் மரங்கள்
நட வேண்டும். மூச்சு விடாதவர்கள், மரங்களை பேண வேண்டிய அவசியம் இல்லை.
அரசு சாரா அமைப்புகள்
சுற்றுசூழல்பாதுகாப்பில் குடியிருப்போர் மற்றும் அரசு சாரா பொதுநல அமைப்புகள் மற்றும்
சங்கங்கள் சுற்றுப்புறபாதுகாப்பில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவற்றுள் சில
1. தினமும் குப்பைகளை அகற்றி தெருகளையும், வீடுகளையும் தூய்மையாக
பராமரிக்க தொடர்ந்து நமக்கு உதவி வருகிறது
2. நமது நகரத்தில் சேர்ந்த குப்பை கூளங்கள் மற்றும் பாலிதின் பைகள் ஆகியவற்றை
அகற்ற சென்ற ஆண்டு சிறப்பு முகாம்களை நடத்துகின்றன.
3. சுத்தமான குடிநீர் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைபதற்க்கு நடவடிக்கை
எடுத்துவருகிறது.
4. சாலையோரங்களில் மரங்கன்றுகளை நட்டு சுற்றுபுறச்சூழலை பாதுகாத்து வருகிறது.
5. சில சங்கங்கள் உணவு சுழற்சியை காக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்
சுற்றுச்சூழல் அல்லது உயிரியற்பியல் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள்
தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும்,
அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்
திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய
அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது.
[1]
 உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை
வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப்
பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட
சூழல்களைக் காணலாம்.[2] ஒவ்வொரு தனி உயிரினமும், தனக்கான ஒரு சூழலைக்
கொண்டிருக்கின்றது எனக் கொண்டால், எண்ணிக்கையில்லா உயிரியற்பியல் சூழல்கள்
இருப்பதை அறியலாம்.
சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூகச் சூழல், பொருளாதார சூழல் என்ற சொற்
பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் சூழல் என்ற சொல்
இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை சூழ்மை என்றும் குறிப்பிடலாம்

இயற்கை – இது நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் இயற்கைக்கு
மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு
தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான
அத்தனை மூலப்பொருட்களையும் நமக்கு வழங்கி நம்மை வாழ்விக்கிறது. இவ்வாறு நமக்கு உதவி
வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் இல்லை.

இந்த விசயத்தில் கல்வி நிறுவனங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கையின்


அவசியத்தை உணர்த்தும் சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறதா? இதனைச் சரியாகக்
கற்றுக் கொடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். தற்போது கணினியும், ஆடம்பரத்திற்குத்
தேவையான உபகரணங்களும் பெருகி உள்ளதால் இதனைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல்
பாதிக்கப்படுமே என்று எத்தனை பேர் அறிந்து செயல்படுகிறோம் என்று தெரியவில்லை.

இயற்கை அழிந்தும், சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்தும் வருவதால் பாதிக்கப்படுவது


நம்மைச் சார்ந்தவர்களும், எதிர்காலச் சந்ததியினருமே.
சுற்றுச்சூழல் கல்வி:
ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவை, உலகின் உயிர்கள்
நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கித் தருகிறது. 19 ம்
நூற்றாண்டிலும், இதற்குப் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, பொருளாதாரத்திலும்
இதன் வளர்ச்சியிலும் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற நிகழ்வுகள், உலக நாடுகளை மிகவும்
பாதிப்படையச் செய்தது. இதனால் அவர்கள் அனைவரும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம்,
காற்று என்று இயற்கை வளங்கள் ஒன்றையும் விடாமல் சுரண்டினர்.

இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. தற்போது அமில


மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம்,
உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன. மேற்சொன்ன
நிலையை மாற்றவும், ஆய்வுகள் நடத்தி தீர்வு காணவும் எண்ணிய ஐ.நா. சபை 1992-ல்
சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும்
கலந்து கொண்டது. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவர வேண்டும்’
என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு “அஜெண்டா-21” என்று பெயரிடப்பட்டது. இதன் மூலம்
கல்வி, பொது விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவை சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டிய
காரணிகளாகக் கொள்ள வேண்டும் என்று முடிவானது. மேலும் சுற்றுச்சூழல் கல்வி , கல்வி
நிறுவனங்களில் கட்டாயமாக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்:

நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை


அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை
வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம்
சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி தேவைப்படுகிறது. இக்கல்வியின் மூலம்
இருக்கும் வளங்களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச்
செயல்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி என இம்மூன்றையும் ஒரே கற்றல் செயலாக இணைப்பதன்
மூலம் கல்விப் பணியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இயலும். அன்றாட
வாழ்க்கையில் இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் பள்ளி, கல்லூரி,
பல்கலைக்கழகம் என அனைத்துத் தடத்திலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இம்முறை
உதவும் என சுற்றுச்சூழல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை நடைமுறைப்படுத்தும்
அம்சங்களையும் கல்வியில் புகுத்தியுள்ளனர். ஆகவேதான் சுற்றுச்சூழல் கல்வி மிகவும்
அவசியமாகிறது.
சுற்றுச்சூழல் மாசும் இதனால் ஏற்படும் பாதிப்புகளும்:

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன


அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின்
உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் முக்கிய
அங்கங்களாகிய இயற்கை வளங்கள் (நிலம்,நீர்,காற்று) பாதிக்கப்பட்டன. இப்பாதிப்பாதிப்புக்குப்
பெயர் தான் ‘சுற்றுச்சூழல் மாசு’ என்கிறோம். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல்
மாசிற்கு உள்ளாகியுள்ளனர்.

‘மாசு’ என்னும் சொல் இலத்தீன் மொழியில் ‘பொலுட்டோனியம்’ என்ற சொல்லை அடிப்படையாகக்


கொண்டு உருவானது. இச்சொல்லை முதலில் 1966-ம் ஆண்டு ‘ஹெனி’ என்பவரே கண்டறிந்து
அறிமுகம் செய்தார்.
காற்று மாசு:

மாசு என்று கூறினாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காற்றில் கலக்கும் மாசு தான்.
ஏனெனேன்றால் நம் வாழ்வாதாரமே சுவாசத்தில்தான் அடங்கி உள்ளது. காற்றில் கலந்துள்ள
நச்சுக்களையும் அவற்றினால் ஏற்படும் தீமைகளும் பின்வருமாறு.

நைட்ரஜன் ஆக்சைடு வாயு – சுவாசக் குழாய், நுரையீரல் பாதிப்பு


சல்பர் ஆக்சைடு வாயு -  இதய உபாதை, தலைவலி, வாந்தி

கார்பன் மோனாக்சைடு – ஆக்சிஜனை கெடுத்து ரத்தப் பண்பு குறைத்தல்

அம்மோனியா – மூச்சுக் குழாய் புண்

நைட்ரஜன் சல்பேட் – கண், தொண்டை எரிச்சல், மயக்கம்

நைட்ரோ பினால் – இரத்தப் புற்றுநோய்

இன்னும் இது போன்ற ஏராளமான நச்சுக்கள் காற்றில் கலந்து மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும்


பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

நீர் மாசுபாடு:
‘நீரின்றி அமையாது உலகு’ நம் வாழ்வாதாரம் நிலத்தடி நீர். இது பயன்பாட்டுக்கு ஏற்றதாக
இல்லாமல் மாசுபட்டு ஊறுவிளைவிக்கும் வகையில் இருக்கிறது. இதை நீர் மாசு என்கிறோம்.
மாசுபட்ட நீரை, அதன் வாசனை, சுவை, கலங்கல், நிறம் ஆகியவற்றின் மூலம் உணரலாம். நாம்
அனைவரும் நிலத்தடி நீரையே சார்ந்து வாழ்கிறோம். ஆனால் இந்நீர் கசிவுக் குழிகள்,
ஆழமில்லாத சாக்கடைக்குழிகள், தொழிற்சாலைகள், உரக்குவியல், உரம், பூச்சிக்கொல்லித்
தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்புகள், உருக்காலைகள், வேதியியல் தொழிலகங்கள்
போன்ற காரணிகளால் பாதிப்படைந்துள்ளன.
மண் மாசு:

‘மண்’ என்ற சொல்லுக்கு புவி மூலப்பொருள் என்பது பொருள். கழிவு நீர் வாயுக்கள், தனிமங்களின்
சிதைவு, வாகனக் கழிவுகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைக் கழிவுகள், மரத்தூள் போன்றவை
மண்ணை மாசுபடுத்துகின்றன. மண்ணில் படிந்த மாசுக்கள் நச்சுக்களாக மாறுகின்றன. இது உணவுச்
சங்கிலியால் பல்வேறு உயிரினங்களுக்கு உணவாக உட்கொள்ளப்படுவதால் நம்மால்
அறியமுடியாத பல அபாயங்களை சந்திக்க நேரிடுகிறது.
கடல் மாசு:

உயிரினங்களின் தோற்றம் கடல் தான் என்ற ஒரு கூற்று நிலவுகிறது. உலகின் முக்கால் பகுதி நீரால்
சூழப்பட்டது. இக்கடலால் நாம் பல வளங்களைப் பெற்று வந்தாலும் இதற்கு ஆபத்தை தொடர்ந்து
நாம் விளைவித்தே வருகிறோம். இந்தியாவில் வற்றாமல் ஓடக்கூடிய ஆறுகளான கங்கை, யமுனை,
சீலம், ரவி, காசி, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை, தபதி, காவிரி போன்ற முக்கிய ஆறுகளில் மாசு
ஏற்பட்டுள்ளது. பல மாசுகள் அடைந்த சூழலில் செல்லும் இந்த ஆறுகள் இறுதியில் கடலில்
கலக்கின்றன.

வீட்டு கழிவுகள், குப்பை கூலங்கள், வேளாண் கழிவுகள், தீங்குயிர் கொல்லிகள், பாதரசம் போன்ற
கன உலோகங்கள், பெட்ரோலியக் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகளின் குவிப்பு இவைகளின்
கலப்பால் கடல் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இதனால் கடல் வாழ்
உயிரினங்கள் ஆபத்திற்குள்ளாகின்றன. இதனை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வும்
கேள்விக்குறியாகிவிடுகிறது.
கதிர்வீச்சின் பாதிப்பு:
புறஊதாக்கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், நுண் அலை, கட்புலக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுகள்
சுற்றுச்சூழலைக் கெடுக்கும் முக்கிய காரணிகளாகும். இக்கதிர்கள் மனிதர்களின் மரபணுவையே
பாதிக்கும் அளவிற்குக் கொடியது. பொதுவாக காஸ்மிக் கதிர்வீச்சைக் காட்டிலும் ஓ
கதிர்களிலிருந்து வெளிப்படும் 95 மூ கதிர்வீச்சு பெரும் இடராக அமைகிறது. அணுகுண்டு,
நைட்ரஜன் குண்டு, அணுக்கரு ஆற்றல் தொழில் நுட்பங்களின் விளைவாகச் சுற்றுச் சூழலைக்
கதிர்வீச்சு மாசுபடுத்துகிறது.

கதிர்வீச்சினால் சுரங்கப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.


இக்கதிரியக்க மாசுபாட்டால் குறைப்பிரசவம், செத்துப் பிறத்தல், பிள்ளைப்பேறு குறைதல்,
கண்புரை, வாய்ப்புண், இரத்தக் குழாய் பாதிப்பு, சருமத்தில் செம்புள்ளிகள், இரைப்பைக் குடல்
பாதிப்பு, ரத்தப் போக்கு, எலும்பு மஜ்ஜை பாதிப்பு வயதுக்குப் பொருந்தாத மூப்பு, ஆயுள் குறைப்பு
போன்ற எண்ணற்ற குறைபாடுகளும் அவதிகளும் ஏற்படுகின்றன.
தமிழ் இலக்கியங்களில் சுற்றுச்சூழல் வலியுறுத்தல்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நெடுங்காலத்திற்கு முன்பே நம் பண்டைத் தமிழர்கள் சிறந்த
முன்னோடிகளாக திகழ்ந்திருந்தனர். தொன்மையான தமிழ்க்குடியினரின் வாழ்வுமுறைகள்
பெரும்பாலும் அவரவர் வாழ்விடத்தில் உள்ள நிலங்களையும், செழித்தோங்கிய மரஞ்செடி
கொடிகளையும், பிற வனங்களையும் கொண்டே அமைந்திருந்தன.

“இடுமுள் வேலி எடுப்படு வரைப்பின்” (பெரும் -154) – என்ற பாடல் தனியிடங்கள் குப்பைகளை
வெளியே போடக்கூடாது. அவற்றுக்கென தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததையும், குப்பைகள்
கொட்டப்படும் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு இருந்ததையும் அழகாக
பெரும் பாணாற்றுப்படையில் கூறியுள்ளனர்.

மக்களின் வாழ்வும், தாழ்வும் ஐம்பூதமான இயற்கையை மையமாகக் கொண்டே அமைந்துள்ளதை


நம் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்ததை பின்வரும் புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது.

“மண்டினிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்

தீ முரணிய நீருமென்றாங்கு (புறநானூறு: 2=1.6)


ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
கேடு வராமலும் கேடு வந்தால் அதனைச் சரிசெய்து இயற்கை வளம் குன்றாமல் காத்துக்கொண்டு
இருக்கின்ற நாடே நாடுகளுக்கெல்லாம் தலைமையானது  என்கிறார் வள்ளுவர்.

“கேடு அறியாக்கெட்ட இடத்தும் வளம்குன்றா

நாடு என்ப நாட்டின் தலை” – (குறள் – 736) –மேலும் மழை நீர், ஆற்று நீர் போன்றவையும் அலை,
அரண் போன்றவையும் நாட்டிற்கு மிக முக்கிய உறுப்புகளாகத் திகழக் கூடியது. ஆகவே
இயற்கைப் பாதுகாத்தல் அவசியம் என்கிறார்.
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு – (குறள் – 737)

-அதே போல எலி, மயில், காளை, யானை, ஆடு, அன்னம், பாம்பு, காகம், கருடன், கிளி, எருமை,
கழுதை போன்ற உயிரினங்களை இறைவனோடு தொடர்புபடுத்தி, வாகனங்களாகவும் கருதி
வழிபடச் செய்தனர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக 1986 ல் இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்திய அரசால்


செயல்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை சார்ந்த அனைத்தும் குறிப்பாக நிலம், நீர், காற்று ஆகிய
காரணிகளுடன் தொடர்புடைய அனைத்துக்கும் இச்சட்டம் பொருந்தும். பொருட்களைத்
தயாரித்தல், செயல்படுத்துதல், கையாளுதல், பாதுகாத்தல், பயன்படுத்துதல் போன்ற
எல்லாவற்றிற்கும் இச்சட்டம் ஏற்புடையதாகும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயற்கையைப் பேணிக் காப்பதோடு கற்பித்தல்- கற்றல் இந்த இரண்டு
முறைகளிலும் தொலைநோக்கும் பார்வையுடன் செயல்பட்டால் தான் முழுமை பெற முடியும்.
வருங்காலத் தலைமுறையினர் ஆற்றலோடும், ஆளுமையோடும், உயர்வோடும், உரிமைபோகும்,
தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாயின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம். இதனை
நடைமுறைப்படுத்தும் கல்வி மிக மிக அவசியம். வருங்காலத் தலைமுறைக்கு கல்வியின் வழிச்
சுற்றுச் சூழலை போற்றிப் பேணுவோம்

முன்னுரை
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை என்று மாறியதோ, அன்றே துவங்கிவிட்டது
சுற்றுச்சூழல் மாசுபடுதல். இந்தியாவின் சந்தை வளர்ச்சி படிப்படியாக (1930 களில் துவங்க
சுய தேவை பூர்த்தி, பண்டமாற்று முறை, உற்பத்தி சார்ந்த வளர்ச்சி, விற்பனை சார்ந்த
வளர்ச்சி, சந்தை சார்ந்த வளர்ச்சி என்று தற்போது நுகர்வோர் சார்ந்த உற்பத்தி என்று
இப்போது (2012 களில்) பரிணாமம் பூதாகரமாக மாறிவிட்டது. அறிவியல் வளர்ச்சிதான்
இதற்கு முக்கிய காரணி என்றால் இந்த சமுதாயம் இன்று இந்த அசுரகதி வளர்ச்சி
அடைந்திருக்காது. அதே சமயத்தில் அடிப்படைத் தேவைகளாக நிலம், நீர், காற்று,
ஆகாயம் அதன் தன்னிலையை இழக்கும்போது பல்வேறு இன்னல்களை உயிரினங்கள்
அனுபவிக்க வேண்டி உள்ளது. இந்நிலை நீடித்தால் அடுத்த தலைமுறை, வரலாற்றில் தான்
முன்னோர்களையும், அரிய வகை விலங்குகளையும், தாவரங்களையும் தெரிந்து கொள்ளும்
சூழ்நிலை வரும். மனிதன் தற்பெருமைக்காகவும், சுய தேவைகளுக்காகவும் வனங்களை
அழித்ததோடு வனவிலங்குகளையும் வேட்டையாடினான். சமுதாயமும் மக்களும்
ஒன்றையொன்று சார்ந்தவை. இயற்கையுடன் இணைந்த அறிவியல் வளர்ச்சி ஒன்றே
இச்சமுதாயத்தை பல நூற்றாண்டுகளுக்கு கொண்டு செல்லும் வலிமை மிக்க ஆயுதம்,

சுற்றுச்சூழல்
நம்மைச் சுற்றியுள்ள, நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள்,
பறவைகள் இவற்றின் இயக்கம், தன்மை இதன் ஒட்டுமொத்தம் தான் சுற்றுபுறச்சூழல். இவை
அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குபவை. புறக்கண்ணுக்கு புலப்படாததும்
அகக்கண்ணால் உணரக் கூடியதுமான ஒரு பண்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
உயிரற்றவையும், உயிருள்ளவையும் சமமான அளவில் இருந்தால் சுற்றுச்சூழல் சமநிலை
என (Eco balance) உணரலாம்.
இந்த விகிதாசாரம் மாறிக்கொண்டிருக்கும் சூழல்தான் சுற்றுப்புறத்தை
ஆக்கப்பாதையிலிருந்து அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறது.
சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணிகள் மனிதர்களின் பேராசை மற்றும் அறியாமை,
தொழிற்சாலை, வாகனங்கள் வெளிப்படுத்தும் புகை, காடுகளின் பரப்பளவு குறைதல்,
சுற்றுலாத் தளங்களின் மாசு, அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளால் ஏற்படும் மாசு
இரசாயன உரங்கள், ஒரு முறை பயன்படுத்தி வீசும் பொருட்கள்

முன்னுரை
காற்று, நிலம், மண், நீர், மரம் தாவரங்கள், உயிரினங்கள் போன்ற உயிருள்ள, உயிரற்ற
பொருட்களைப் பற்றி எடுத்துக் கூறுவது சுற்றுச்சூழல் எனப்படும்.
“நாம் நிலத்தை, நம்முடைய பயன்படு பொருளாக நினைத்து தவறாகப் பயன்படுத்தி
வருகின்றோம். நிலத்தை நம் சமூகமாகவும், நாம் ஜிவிக்கும் உடல், உயிர் போன்ற
பொருளாகவும், கருதினால், அதன் மீது அன்பும், மரியாதையும் செலுத்தத்
தொடங்குவோம்’ என்று அல்டோலியோ “பருப்பொருளை அல்லது புலன்களால்
உணரப்படும் பொருளை உடனடியாகச் சுற்றியுள்ளவை மற்றும் அதன் மீது நேரடியான
விளைவை ஏற்படுத்தும் எதுவும்” சுற்றுச் சூழல் எனப்படும் என்று- பி.கிஸ்பெர்ட் (P.Gisbert)
விவரித்துள்ளார்.
சுற்றுச் சூழல் கோட்பாடு, விலங்குகள், செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நிலங்கள்,
நினைவுச் சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதையும், அவற்றைச் சீர்கேடு செய்யும்
காரணிகளையும், அவற்றிலிருந்து பாதுகாப்பதையையும், உள்ளடக்கியதாகும்.
சுற்றுச் சூழல் உட்கூறுகள் இயற்கை அமைப்புக் கூறுகள் –
1. நிலம், நீர், காற்று.
2. உயிரியல் கூறுகள் - தாவரங்கள், விலங்குகள்.
3. சமூகக் கூறுகள் - மக்கட் தொகை, சமூக முறை, சமூக மாற்றம், நகரமயமாதல்.
4. பண்பாட்டுக் கூறுகள் - அரசியல், பொருளாதாரம், நீதி, மதிப்புக்கள் (Value) சமயம்
போன்றவை.
5. உளவியல் கூறுகள் - உண்மைகள், தன்கோட்பாடு.
6. ஆற்றல் கூறுகள் - சூரிய சக்தி, வெப்பசக்தி, அலைசக்தி

உலகச் சுற்றுச் சூழல் நாள்


ஒவ்வொர் ஆண்டும், ஜின் 5 ஆம் நாள் அன்று உலகச் சுற்றுச் சூழல் நாளாக
அனுசரிக்கப்படுகின்றது. 1972-ல் ஸ்டாக்ஹோமில் (Stockholm) நடைபெற்ற மனிதச் சூழல்
மாநாட்டில் இதற்கான தீர்மானம் இயற்றப்பட்டது.

சுற்றுச்சூழல் கல்வி
கல்வியின் வழியாக, "சுற்றுச்சூழல் பற்றி, சுற்றுச் சூழலுக்காக வழங்கப்படும் கல்வி சுற்றுச்
சூழல் கல்வி’ எனப்படும்.
“மனிதன், இயற்கையோடும், மனிதனால் உருவாக்கப்பட்ட சூழலோடும் கொண்டுள்ள
தொடர்பையும் மக்கட்தொகை, சுற்றுச் சூழல் சீர்கேடு, வளங்கள் ஒதுக்கீடு, பாதுகாத்தல்,
தொழில் நுட்பம், போன்றவற்றோடு மனிதன் கொள்ளும் முழுமையான தொடர்பையும்
உள்ளடக்கிய கல்வி முறையே’ - சுற்றுச் சூழல் கல்வி என்று 1970-ல் ஐக்கிய நாட்டில்
இயற்றப்பட்ட சுற்றுச் சூழல் கல்விச் சட்டம் எடுத்துரைத்துள்ளது.
"நிலம், நீர், காற்று ஆகியவற்றை சீரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும்
உறுதிப்பாடும், ஈடுபாடும், முயற்சிகளும் சுற்றுச்சூழல்கல்வி ஆகும் என்று” இங்கிலாந்து
சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழுவின் முதல் அறிக்கை 1971 கூறியுள்ளது.
“இயற்கையான, மனிதன் பண்பாடு மற்றும் ஆன்மீக வளங்களால் உருவாக்கிய சமூக
மற்றும் பருப்பொருள் சார்ந்த சுற்றுச் சூழலைப் பற்றிப் புரிந்துக் கொள்ளுதலையும்,
விழிப்புணர்வு ஏற்படுத்தலையும் மட்டுமின்றி, இவ்வளங்களை பாதுகாப்பதையும், அறிவு
பூர்வமாக சிந்தித்துப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியதே” சுற்றுச்சூழல்கல்வி என
ஆப்ரிக்கக் கல்வியாளர்களின் மாநாட்டு அறிக்கை (1968) கூறியுள்ளது.

You might also like