Professional Documents
Culture Documents
இயற்கை – இது நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் இயற்கைக்கு
மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு
தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான
அத்தனை மூலப்பொருட்களையும் நமக்கு வழங்கி நம்மை வாழ்விக்கிறது. இவ்வாறு நமக்கு உதவி
வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் இல்லை.
மாசு என்று கூறினாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காற்றில் கலக்கும் மாசு தான்.
ஏனெனேன்றால் நம் வாழ்வாதாரமே சுவாசத்தில்தான் அடங்கி உள்ளது. காற்றில் கலந்துள்ள
நச்சுக்களையும் அவற்றினால் ஏற்படும் தீமைகளும் பின்வருமாறு.
நீர் மாசுபாடு:
‘நீரின்றி அமையாது உலகு’ நம் வாழ்வாதாரம் நிலத்தடி நீர். இது பயன்பாட்டுக்கு ஏற்றதாக
இல்லாமல் மாசுபட்டு ஊறுவிளைவிக்கும் வகையில் இருக்கிறது. இதை நீர் மாசு என்கிறோம்.
மாசுபட்ட நீரை, அதன் வாசனை, சுவை, கலங்கல், நிறம் ஆகியவற்றின் மூலம் உணரலாம். நாம்
அனைவரும் நிலத்தடி நீரையே சார்ந்து வாழ்கிறோம். ஆனால் இந்நீர் கசிவுக் குழிகள்,
ஆழமில்லாத சாக்கடைக்குழிகள், தொழிற்சாலைகள், உரக்குவியல், உரம், பூச்சிக்கொல்லித்
தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்புகள், உருக்காலைகள், வேதியியல் தொழிலகங்கள்
போன்ற காரணிகளால் பாதிப்படைந்துள்ளன.
மண் மாசு:
‘மண்’ என்ற சொல்லுக்கு புவி மூலப்பொருள் என்பது பொருள். கழிவு நீர் வாயுக்கள், தனிமங்களின்
சிதைவு, வாகனக் கழிவுகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைக் கழிவுகள், மரத்தூள் போன்றவை
மண்ணை மாசுபடுத்துகின்றன. மண்ணில் படிந்த மாசுக்கள் நச்சுக்களாக மாறுகின்றன. இது உணவுச்
சங்கிலியால் பல்வேறு உயிரினங்களுக்கு உணவாக உட்கொள்ளப்படுவதால் நம்மால்
அறியமுடியாத பல அபாயங்களை சந்திக்க நேரிடுகிறது.
கடல் மாசு:
உயிரினங்களின் தோற்றம் கடல் தான் என்ற ஒரு கூற்று நிலவுகிறது. உலகின் முக்கால் பகுதி நீரால்
சூழப்பட்டது. இக்கடலால் நாம் பல வளங்களைப் பெற்று வந்தாலும் இதற்கு ஆபத்தை தொடர்ந்து
நாம் விளைவித்தே வருகிறோம். இந்தியாவில் வற்றாமல் ஓடக்கூடிய ஆறுகளான கங்கை, யமுனை,
சீலம், ரவி, காசி, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை, தபதி, காவிரி போன்ற முக்கிய ஆறுகளில் மாசு
ஏற்பட்டுள்ளது. பல மாசுகள் அடைந்த சூழலில் செல்லும் இந்த ஆறுகள் இறுதியில் கடலில்
கலக்கின்றன.
வீட்டு கழிவுகள், குப்பை கூலங்கள், வேளாண் கழிவுகள், தீங்குயிர் கொல்லிகள், பாதரசம் போன்ற
கன உலோகங்கள், பெட்ரோலியக் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகளின் குவிப்பு இவைகளின்
கலப்பால் கடல் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இதனால் கடல் வாழ்
உயிரினங்கள் ஆபத்திற்குள்ளாகின்றன. இதனை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வும்
கேள்விக்குறியாகிவிடுகிறது.
கதிர்வீச்சின் பாதிப்பு:
புறஊதாக்கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், நுண் அலை, கட்புலக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுகள்
சுற்றுச்சூழலைக் கெடுக்கும் முக்கிய காரணிகளாகும். இக்கதிர்கள் மனிதர்களின் மரபணுவையே
பாதிக்கும் அளவிற்குக் கொடியது. பொதுவாக காஸ்மிக் கதிர்வீச்சைக் காட்டிலும் ஓ
கதிர்களிலிருந்து வெளிப்படும் 95 மூ கதிர்வீச்சு பெரும் இடராக அமைகிறது. அணுகுண்டு,
நைட்ரஜன் குண்டு, அணுக்கரு ஆற்றல் தொழில் நுட்பங்களின் விளைவாகச் சுற்றுச் சூழலைக்
கதிர்வீச்சு மாசுபடுத்துகிறது.
“இடுமுள் வேலி எடுப்படு வரைப்பின்” (பெரும் -154) – என்ற பாடல் தனியிடங்கள் குப்பைகளை
வெளியே போடக்கூடாது. அவற்றுக்கென தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததையும், குப்பைகள்
கொட்டப்படும் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு இருந்ததையும் அழகாக
பெரும் பாணாற்றுப்படையில் கூறியுள்ளனர்.
“மண்டினிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
நாடு என்ப நாட்டின் தலை” – (குறள் – 736) –மேலும் மழை நீர், ஆற்று நீர் போன்றவையும் அலை,
அரண் போன்றவையும் நாட்டிற்கு மிக முக்கிய உறுப்புகளாகத் திகழக் கூடியது. ஆகவே
இயற்கைப் பாதுகாத்தல் அவசியம் என்கிறார்.
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
-அதே போல எலி, மயில், காளை, யானை, ஆடு, அன்னம், பாம்பு, காகம், கருடன், கிளி, எருமை,
கழுதை போன்ற உயிரினங்களை இறைவனோடு தொடர்புபடுத்தி, வாகனங்களாகவும் கருதி
வழிபடச் செய்தனர்.
முன்னுரை
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை என்று மாறியதோ, அன்றே துவங்கிவிட்டது
சுற்றுச்சூழல் மாசுபடுதல். இந்தியாவின் சந்தை வளர்ச்சி படிப்படியாக (1930 களில் துவங்க
சுய தேவை பூர்த்தி, பண்டமாற்று முறை, உற்பத்தி சார்ந்த வளர்ச்சி, விற்பனை சார்ந்த
வளர்ச்சி, சந்தை சார்ந்த வளர்ச்சி என்று தற்போது நுகர்வோர் சார்ந்த உற்பத்தி என்று
இப்போது (2012 களில்) பரிணாமம் பூதாகரமாக மாறிவிட்டது. அறிவியல் வளர்ச்சிதான்
இதற்கு முக்கிய காரணி என்றால் இந்த சமுதாயம் இன்று இந்த அசுரகதி வளர்ச்சி
அடைந்திருக்காது. அதே சமயத்தில் அடிப்படைத் தேவைகளாக நிலம், நீர், காற்று,
ஆகாயம் அதன் தன்னிலையை இழக்கும்போது பல்வேறு இன்னல்களை உயிரினங்கள்
அனுபவிக்க வேண்டி உள்ளது. இந்நிலை நீடித்தால் அடுத்த தலைமுறை, வரலாற்றில் தான்
முன்னோர்களையும், அரிய வகை விலங்குகளையும், தாவரங்களையும் தெரிந்து கொள்ளும்
சூழ்நிலை வரும். மனிதன் தற்பெருமைக்காகவும், சுய தேவைகளுக்காகவும் வனங்களை
அழித்ததோடு வனவிலங்குகளையும் வேட்டையாடினான். சமுதாயமும் மக்களும்
ஒன்றையொன்று சார்ந்தவை. இயற்கையுடன் இணைந்த அறிவியல் வளர்ச்சி ஒன்றே
இச்சமுதாயத்தை பல நூற்றாண்டுகளுக்கு கொண்டு செல்லும் வலிமை மிக்க ஆயுதம்,
சுற்றுச்சூழல்
நம்மைச் சுற்றியுள்ள, நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள்,
பறவைகள் இவற்றின் இயக்கம், தன்மை இதன் ஒட்டுமொத்தம் தான் சுற்றுபுறச்சூழல். இவை
அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குபவை. புறக்கண்ணுக்கு புலப்படாததும்
அகக்கண்ணால் உணரக் கூடியதுமான ஒரு பண்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
உயிரற்றவையும், உயிருள்ளவையும் சமமான அளவில் இருந்தால் சுற்றுச்சூழல் சமநிலை
என (Eco balance) உணரலாம்.
இந்த விகிதாசாரம் மாறிக்கொண்டிருக்கும் சூழல்தான் சுற்றுப்புறத்தை
ஆக்கப்பாதையிலிருந்து அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறது.
சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணிகள் மனிதர்களின் பேராசை மற்றும் அறியாமை,
தொழிற்சாலை, வாகனங்கள் வெளிப்படுத்தும் புகை, காடுகளின் பரப்பளவு குறைதல்,
சுற்றுலாத் தளங்களின் மாசு, அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளால் ஏற்படும் மாசு
இரசாயன உரங்கள், ஒரு முறை பயன்படுத்தி வீசும் பொருட்கள்
முன்னுரை
காற்று, நிலம், மண், நீர், மரம் தாவரங்கள், உயிரினங்கள் போன்ற உயிருள்ள, உயிரற்ற
பொருட்களைப் பற்றி எடுத்துக் கூறுவது சுற்றுச்சூழல் எனப்படும்.
“நாம் நிலத்தை, நம்முடைய பயன்படு பொருளாக நினைத்து தவறாகப் பயன்படுத்தி
வருகின்றோம். நிலத்தை நம் சமூகமாகவும், நாம் ஜிவிக்கும் உடல், உயிர் போன்ற
பொருளாகவும், கருதினால், அதன் மீது அன்பும், மரியாதையும் செலுத்தத்
தொடங்குவோம்’ என்று அல்டோலியோ “பருப்பொருளை அல்லது புலன்களால்
உணரப்படும் பொருளை உடனடியாகச் சுற்றியுள்ளவை மற்றும் அதன் மீது நேரடியான
விளைவை ஏற்படுத்தும் எதுவும்” சுற்றுச் சூழல் எனப்படும் என்று- பி.கிஸ்பெர்ட் (P.Gisbert)
விவரித்துள்ளார்.
சுற்றுச் சூழல் கோட்பாடு, விலங்குகள், செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நிலங்கள்,
நினைவுச் சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதையும், அவற்றைச் சீர்கேடு செய்யும்
காரணிகளையும், அவற்றிலிருந்து பாதுகாப்பதையையும், உள்ளடக்கியதாகும்.
சுற்றுச் சூழல் உட்கூறுகள் இயற்கை அமைப்புக் கூறுகள் –
1. நிலம், நீர், காற்று.
2. உயிரியல் கூறுகள் - தாவரங்கள், விலங்குகள்.
3. சமூகக் கூறுகள் - மக்கட் தொகை, சமூக முறை, சமூக மாற்றம், நகரமயமாதல்.
4. பண்பாட்டுக் கூறுகள் - அரசியல், பொருளாதாரம், நீதி, மதிப்புக்கள் (Value) சமயம்
போன்றவை.
5. உளவியல் கூறுகள் - உண்மைகள், தன்கோட்பாடு.
6. ஆற்றல் கூறுகள் - சூரிய சக்தி, வெப்பசக்தி, அலைசக்தி
சுற்றுச்சூழல் கல்வி
கல்வியின் வழியாக, "சுற்றுச்சூழல் பற்றி, சுற்றுச் சூழலுக்காக வழங்கப்படும் கல்வி சுற்றுச்
சூழல் கல்வி’ எனப்படும்.
“மனிதன், இயற்கையோடும், மனிதனால் உருவாக்கப்பட்ட சூழலோடும் கொண்டுள்ள
தொடர்பையும் மக்கட்தொகை, சுற்றுச் சூழல் சீர்கேடு, வளங்கள் ஒதுக்கீடு, பாதுகாத்தல்,
தொழில் நுட்பம், போன்றவற்றோடு மனிதன் கொள்ளும் முழுமையான தொடர்பையும்
உள்ளடக்கிய கல்வி முறையே’ - சுற்றுச் சூழல் கல்வி என்று 1970-ல் ஐக்கிய நாட்டில்
இயற்றப்பட்ட சுற்றுச் சூழல் கல்விச் சட்டம் எடுத்துரைத்துள்ளது.
"நிலம், நீர், காற்று ஆகியவற்றை சீரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும்
உறுதிப்பாடும், ஈடுபாடும், முயற்சிகளும் சுற்றுச்சூழல்கல்வி ஆகும் என்று” இங்கிலாந்து
சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழுவின் முதல் அறிக்கை 1971 கூறியுள்ளது.
“இயற்கையான, மனிதன் பண்பாடு மற்றும் ஆன்மீக வளங்களால் உருவாக்கிய சமூக
மற்றும் பருப்பொருள் சார்ந்த சுற்றுச் சூழலைப் பற்றிப் புரிந்துக் கொள்ளுதலையும்,
விழிப்புணர்வு ஏற்படுத்தலையும் மட்டுமின்றி, இவ்வளங்களை பாதுகாப்பதையும், அறிவு
பூர்வமாக சிந்தித்துப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியதே” சுற்றுச்சூழல்கல்வி என
ஆப்ரிக்கக் கல்வியாளர்களின் மாநாட்டு அறிக்கை (1968) கூறியுள்ளது.